விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
வேலூரில் பிறந்து நியூசிலாந்து அணியில் விளையாடும் ஆதித்யா அஷோக் - யார் இவர்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2002-ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் ஆதித்யா அஷோக். 3 மணி நேரங்களுக்கு முன்னர் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதன் முதல் போட்டி இன்று (ஜனவரி 11) வதோதராவில் நடந்துவருகிறது. வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் சேர்த்தது. டேரல் மிட்ஷெல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். ஹென்ரி நிகோலஸ் மற்றும் டெவன் கான்வே முறையே 62 மற்றும் 56 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சி…
-
- 8 replies
- 559 views
- 1 follower
-
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே வீல்சேர் பயன்படுத்துவோருக்கான டி-20 கிரிக்கெட் தொடர்: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி இந்தியா - பாகிஸ்தான் இடையே, மாற்றுத்திறனாளர்களுக்கான வீல்சேர் டி-20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் வியாழக்கிழமை துவங்கியது. இரு அணி வீரர்களும் உற்சாக அறிமுகம் முதல் ஆட்டத்தில், 148 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. மலேசியாவில் முதல் முறையாக நடைபெறும் மாற்றத்திறனாளர்களுக்கான, வீல் சேர் கிரிக்கெட் போட்டி, மலேசிய கிரிக்கெட் சங்க ஒத்துழைப்புடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீல்சேர் கிரிக்கெட் சங்கங்களால் இணைந்து நடத்தப்படுகின்றன. சர்வதேச அளவில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப…
-
- 0 replies
- 264 views
-
-
நேற்று எனக்கு ஒரு அதிர்ஷ்டவசமான நாள். இங்கு நல்ல வெயில் நிலவுகிறது. மழை பொழிவதற்கான வாய்ப்பும் இல்லை. கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்தும் வாய்ந்த இருவரை நான் பேட்டி கண்டேன். ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக்; இன்னொருவர் 'லிட்டில் மாஸ்டர்' சுனில் கவாஸ்கர். காலை 7.30 மணிக்கு பேட்டிக்கு அவர்கள் ஒப்புக்கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. மான்செஸ்டரில் உள்ள கதேட்ரல் கார்டன்சின் ரசிகர்கள் கூடுமிடத்துக்கு சென்றோம். போட்டி நடக்க ஒரு நாள் இருந்தது என்றாலும் சுனில் கவாஸ்கர் மற்றும் இன்சமாம் உல்-ஹக் ஆகியோர் வரும் தகவல் தெரிந்ததால் ஏராளமான இந்திய பாகிஸ்தான் ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணி இன்று …
-
- 0 replies
- 783 views
-
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி சந்தேகத்தில் உலக இருபதுக்கு-20 தொடரில், இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையில், தர்மசாலாவில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள போட்டி, அங்கு இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்துக்கு, ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் எழுதியுள்ளதாகக் கூறப்படும் கடிதத்தாலேயே இச்சந்தேகம் எழுந்துள்ளது. பதன்கொட் விமானத் தரிப்புப் பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களெனக் கருதப்படும் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து, தர்மசாலாவில் அப்போட்டி இடம்பெறக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். பதன்கொட் தாக்குதல் போல பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந…
-
- 0 replies
- 381 views
-
-
இந்தியா - பாகிஸ்தான்: கிரிக்கெட்டில் படுதோல்வி; ஹாக்கியில் அமோக வெற்றி படத்தின் காப்புரிமைTHEHOCKEYINDIA லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அமோகவெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியை சேர்ந்த ஹர்மன்ப்ரீத் சிங், டல்விந்தர் சிங் மற்றும் ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் தலா இரு கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். போட்டி தொடங்கிய பிறகு இந்திய அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் சிங் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, இந்திய அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை கோலாக அடித்து போட்டியில் அணிக்கு முன்னிலையை கொடுத்தார். போட்…
-
- 1 reply
- 696 views
-
-
இந்தியா - மே.தீவுகள்: 5ஆவது போட்டி இன்று மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டி, இன்று இடம்பெறவுள்ளது. கிங்ஸ்டனில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு ஆரம்பிக்கவுள்ளது. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும், இந்திய அணி வெற்றிபெற்றது. ஆனால், 4ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற வெற்றி, இந்தத் தொடருக்கு உயிர்ப்பை வழங்கியுள்ளது. எனவே, இன்று இடம்பெறும் போட்டியில் வென்றால் மாத்திரமே, தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நில…
-
- 1 reply
- 557 views
-
-
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையான ஒரு நாள் துடுப்பாட்ட போட்டிகள் இந்தியாவில் ஆரம்பம். இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையேயான நான்கு ஒரு நாள் துடுப்பாட்ட போட்டிகளை உள்ளடக்கிய போட்டித் தொடர் இன்று இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது. இன்று Nagpur துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. முதலில் துடுப்பாடிய இந்தியா அணி மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெற்றுக்களை மாத்திரம் இழந்து 338 ஓட்டங்களை எடுத்திருந்தனர். Sourav Ganguly 98 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்தார், Gautam Gambhir 69 ஓட்டங்களையும், Dhoni 62 ஓட்டங்களையும், Rahul Dravid 54 ஓட்டங்களையும் பெற்றன…
-
- 1 reply
- 892 views
-
-
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்: கெயில் புயலை இந்தியா சமாளிக்குமா? மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி யில் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது. இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக கிறிஸ் கெயில் உட்பட முன் னணி வீரர்கள் பலரும் களம் இறங்க உள்ளதால் இந்திய அணிக்கு அது சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி தற் போது மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இன்று களம் இறங்குகிறது. ஒருநாள் போட்…
-
- 2 replies
- 511 views
-
-
இந்தியா - வங்கதேச தொடரில் டிஆர்எஸ் கிடையாது! டாக்கா: இந்தியா, வங்கதேசம் இடையே, வங்கதேசத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் டிஆர்எஸ் முறை அமல்படுத்தப்படாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். ஜூன் 10ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் தொடங்கவுல்ளது. இதில் ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகள் இடம் பெறுகின்றன. ஜூன் 10ம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தத் தொடரின்போது நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய உதவும் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்பட மாட்டாது என்று வங்கதேச கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. Read more at: http://tamil.one…
-
- 0 replies
- 464 views
-
-
சென்னை டெஸ்ட்: இந்திய அணி எப்படித் தயாராகிறது? வங்கதேசத்தின் 24 ஆண்டு தாகம் நிறைவேறுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்தி ராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் முதல் போட்டி வரும் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் 27-ஆம் தேதி உத்தரப்பிரசேதம் மாநிலம் கான்பூரில் நடக்கிறது. 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க இரு அ…
-
-
- 19 replies
- 944 views
- 1 follower
-
-
இந்தியா – பாகிஸ்தான் தொடர் ஐ.அரபு இராச்சியத்தில் இந்தியா – -பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் சகார்யார்கான், பி.சி.சி.ஐ. தலைவர் ஜக்மோகன் டால்மியாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின், பி.சி.சி.ஐ. தலைவர் ஜக்மோகன் டால்மியா முன்னிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் சகார்யார்கான் கூறுகையில், "எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியா-–பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடரை பொதுநாட்டில் வைத்து நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த தொடர் நடைபெறவுள்ளது. 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 இருபது ஓவர் போட்டிகள…
-
- 0 replies
- 336 views
-
-
இந்தியா – மே.தீவுகள் T20 : இந்தியா 5 விக்கட்டுகளால் வெற்றி! இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற 20 க்கு 20 போட்டியில் இந்திய அணி 13 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கட்டுகளால் வெற்றிப்பெற்றது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைச் தெரிவு செய்தது. இதன்படி, துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 109 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஃபெப்பியன் எல்லன் 27 ஓட்டங்களையும், கே.எம்.ஏ.போல் ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களையும் பெற்றனர். அத்துடன், கே.ஏ.பொல்லாட் மற்றும் எஸ்.டி.ஹோப் ஆகியோர் தலா 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் குல்தீப் யாதவ்…
-
- 0 replies
- 712 views
-
-
இந்தியா – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று October 21, 2018 1 Min Read இந்தியா மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் பொட்டி இன்று ; கவுகாத்தியில் இன்று நடைபெறவுள்ளது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியதீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்ற நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டி கவுகாத்தியில் இன்று ஆரம்பமாகின்றது. http://globaltamilnews.net/2018/100071/
-
- 3 replies
- 399 views
-
-
இந்தியா 35 ஓட்டங்களால் தோல்வி – சொந்த மண்ணில் ஒருநாள் தொடரையும் இழந்தது! இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ஓட்டங்களால் தோல்வியடைந்து, ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரரில் முதல் நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில், 5-வதும் இறுதியுமான போட்டி டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி 9 விக்கெட்களை இழந்து 272 ஓட்டங்களை பெற்றது. அவ்வணி சார்பாக உஷ்மான் கவாஜா 100 …
-
- 0 replies
- 447 views
-
-
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு :20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களினால் இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு :20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு இந்தூரில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை குவித்தது. 143 ஓட்டம் என்ற இலகுவான வெற்றியை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்…
-
- 0 replies
- 738 views
-
-
இந்தியா Vs ஆஸ்திரேலியா: இந்தியாவின் டெஸ்ட் தொடர் வரலாற்றை மாற்றி எழுதுமா ஆஸ்திரேலியா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது, ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை வெல்வதைக் காட்டிலும் பெரிய விஷயமாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. ஐசிசியின் பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது ஆனால் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா 2012ஆம் ஆண…
-
- 93 replies
- 4.4k views
- 1 follower
-
-
இந்தியா vs இங்கிலாந்து அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று இறுதிப்போட்டி 46 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்திய அண்டர் 19 அணி இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு 19 வயதுக்கும் குறைவானவர்களுக்கான அண்டர்-19 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. மேற்கிந்திய தீவுகளின் ஓர் அங்கமான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிலுள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது. 1988ஆம் ஆண்டு முதல் முறையாக அண்டர்-19 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
இந்தியா vs பாகிஸ்தான் - தொடரும் வரலாறு! சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்தே இந்தியா-பாகிஸ்தான் எதிரும் புதிருமாகவே இருக்கிறது. உடன்பாட்டை மீறி நம் நாட்டின் எல்லைக்குள் நுழைவது, மக்களைத் துன்புறுத்துவது போன்ற கொடூர செயல்களைக் காலம்காலமாக செய்து வருவதோடு, தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கிறது பாகிஸ்தான். என்னதான் இந்தியாவைத் தோற்கடிக்க பலமுறை முயற்சித்தாலும், இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஆட்டத்தில், 1992 முதல் வெற்றியை இந்தியா மட்டுமே உரித்தாக்குகிறது. இந்த ஆண்டும் அவ்வாறு நடந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. மேலும், ஈடன் கார்டனில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த 4 ஆட்டத்திலும், தொடர்ந்து வெற்றியைத் தனதாக்கியிருந்தது பாகிஸ்தான். அந்த சாதனையும் தற…
-
- 0 replies
- 376 views
-
-
இந்தியா Vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை: 'இது சாதாரண ஆட்டமல்ல' - இரு நாடுகளிலும் உணர்ச்சிப் பெருக்கு 20 அக்டோபர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "எங்களுக்கு இது மற்ற போட்டிகளைப் போன்றதே.", என்று விராட் கோலி பதிலளித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து கேப்டன் விராட் கோலி கூறிய இந்த கருத்தை 'விதிவிலக்காக' எடுத்துக் கொள்ளலாம். சுமார் 28 மாதங்களுக்குப் பிறகு, இரு நாடுகளின் அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கும்…
-
- 2 replies
- 669 views
- 1 follower
-
-
இந்திய அவுஸ்திரேலிய அணிகளுகிடையில் நாக்பூரில் நடைபெற்ற நான்காவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலிய அணியை 172 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. இதன் மூலம் 2-0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. http://www.virakesari.lk/vira/sports/head_view.asp?key_c=131 இனி பாருங்கோ இந்தியன் காறங்கள் தங்களை தாங்கள் பொருமையா கதைபாங்கள்.. தங்கட அணி தான் உலகத்திலையே முதலாவது அணி என்று
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
இந்தியா அணி போராடி தோற்றது – தொடர் நியூசிலாந்து வசம்! மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டியில் கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 4 ஓட்டங்களால் போராடி தோற்றுள்ளது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட T-20 தொடரை நியூசிலாந்து அணி 2-1 என கைப்பற்றியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹெமில்டனில் ஆரம்பமான இறுதி T-20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியை வெளிக்காட்ட, அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பில் கோலின் முன்ரோ 72 ஓட்டங்களையும், டிம் சீஃபெர்ட் 43 ஓட்டங…
-
- 0 replies
- 725 views
-
-
இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆஸி 277 ஓட்டங்கள் சேர்ப்பு அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம், நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்ரேலியா அணி, ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்போது ஆட்டநேர முடிவில் அணித்தலைவர் டிம் பெய்ன் 16 ஓட்டங்களுடனும், பெட் கம்மிண்ஸ் 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். பெர்த் மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஆரோன் பின்ஞ்…
-
- 0 replies
- 412 views
-
-
இந்தியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி! இந்தியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், நியூசிலாந்து அணி 80 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. வெலிங்டனில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டிம் செய்பர்ட், 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், காலீல் அஹமட், குர்ணல் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். இதனைதொடர…
-
- 0 replies
- 738 views
-
-
மொகாலி: மொகாலி டெஸ்டில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் துல்லியமாக பந்துவீச, ஆஸ்திரேலிய "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய வாட்சன் சதமடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 224 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மொகாலியில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், பேட்டிங் தேர்வு செய்தார். பாண்டிங் அரைசதம்: முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சைமன் காடிச் (6), ஜாகிர் வேகத்தில் வெளியேறி மோசமான துவக்கம் கொடுத்தார். பின்னர் இணைந்த ஷேன் வாட்சன், ரிக்கி பாண்டிங் ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக…
-
- 8 replies
- 982 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மேத்யூ ஹென்றி பதவி, பிபிசி விளையாட்டுப் பிரிவு செய்தியாளர் 10 மார்ச் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கிய இடத்திலிருந்து 1,000 கி.மீ தள்ளியும், முடிந்திருக்க வேண்டிய இடத்திலிருந்து 2,000 கி.மீ அப்பாலும் நிறைவடைந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றி உலகின் முன்னணி 'வெள்ளை பந்து' அணியாக அதன் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. 16 மாதங்களுக்கு முன்பு ஆமதாபாத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் இந்திய அணி அனுபவித்த வேதன…
-
- 1 reply
- 328 views
- 1 follower
-