விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
எடுடா வண்டிய போடுடா விசில - இம்ரான் தாகீர் ஐ.பி.எல். 2019 தொடருக்கான முதல் 2 வாரத்திற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியான நிலையிலேயே அவர் இந்த பதிவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, "என் இனிய தமிழ் மக்களே நலமா? மார்ச் 23 ஆம் திகதி நமது கோட்டையில் களம் இறங்குகிறோம். வந்தோம் வென்றோம் சென்றோம். வருவோம் வெல்வோம் செல்வோம். இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க. கொல காண்டுல வாரோம். செண்டிமெண்ட் இருக்குறவன் குறுக்க வராதீங்க. எடுடா வண்டிய போடுடா விசில" என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், …
-
- 1 reply
- 713 views
-
-
விராட் கோலி செய்கையால் நெகிழ்ந்து போன மொகாலி பிட்ச் பராமரிப்பாளர்! இந்தியா தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி 5ஆம் தேதி மொகாலி நகரில் தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் தற்போது மொகாலி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நேற்று மொகாலி பிட்சை பார்வையிட்டார். மொகாலி மைதானத்திற்குள் வந்த விராட் கோலி, முதல் வேலையாக அந்த மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் 73 வயது தல்ஜித் சிங்கின் பாதங்களை தொட்டு வணங்கினார். கடந்த 20 வருடங்களாக தல்ஜித் சிங் இந்த பிட்ச்சின் பராமரிப்பாளராக இருந்து வருகிறார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அவரது காலை தொட்டு வணங்கியது. தல்ஜித் சிங்கை மிகுந்த உணர்ச்சிவசப்பட வைத்தது. வி…
-
- 1 reply
- 198 views
-
-
'சிறந்த உப தலைவராக இருக்கவில்லை' அவுஸ்திரேலிய அணியின் தலைவராக றிக்கி பொன்டிங் இருந்த போது, அவருக்குப் பொருத்தமான உப தலைவராக தான் இருந்திருக்கவில்லை என, மைக்கல் கிளார்க் ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது புதிய சுயசரிதைப் புத்தகத்திலேயே, அவர் இதை ஏற்றுக் கொண்டுள்ளார். 2013ஆம் ஆண்டு, தனது சுயசரியை வெளியிட்ட றிக்கி பொன்டிங், தனது உப தலைவராக இருந்த மைக்கல் கிளார்க்குடன் காணப்பட்ட தடுமாற்ற உறவை விவரித்திருந்தார். இந்நிலையிலேயே, தனது சுயசரிதைப் புத்தகத்திலும் அது குறித்து, மைக்கல் கிளார்க் எழுதியுள்ளார். "உப தலைவராக என் மீது, சில விடயங்களில் ஏமாற்றமடைந்ததாக, அவரது சுயசரிதைப் புத்தகத்தில் றிக்கி எழுதியுள்ளார்.…
-
- 1 reply
- 516 views
-
-
தோற்ற பிறகு மான்செஸ்டர் சிட்டி அணி வீரரிடம் நிதானம் இழந்த ‘லயன்’ மெஸ்ஸி தோல்வி அதிர்ச்சியில் பார்சிலோனாவின் ஜேவியர் மஸ்சரானோ, லயோனல் மெஸ்ஸி, நெய்மர். | படம்: ஏ.எஃப்.பி. மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவிய பிறகு மெஸ்ஸி மான்செஸ்டர் சிட்டி வீரர் ஒருவருடன் மோதல் மேற்கொண்டதாக ஸ்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெஸ்ஸி, பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ஆகியோர் இருந்தும் மான்செஸ்டர் சிட்டி அணியிடம் பார்சிலோனா தோல்வி தழுவியது குறிப்பிடத்தக்கது. ஸ்பானிய செய்தித் தாள்களான ‘முண்டோ டிபோர்டிவோ’ மற்றும் மார்கா ஆகியவை தனது செய்தியில் பார்சிலோனா அணிக்…
-
- 1 reply
- 345 views
-
-
இந்திய கிரிக்கெட்டிலும் நிற பேதமா? தமிழக வீரர் அபினவ் முகுந்த் வேதனை விளையாட்டு உலகில் நிற பேதம் மற்றும் இன பாகுபாடு என்பது அதிகளவில் இல்லாவிட்டாலும், ஒரு சில நாடுகளிலும் குறிப்பிட்ட சில போட்டிகளில் அதன் தாக்கமும் நடைமுறைப்படுத்தலும் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது. குறிப்பாக சுமார் 175 வருடகால வரலாற்றைக் கொண்ட கிரிக்கெட் விளையாட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. கிரிக்கெட்டின் தாயகமாக இங்கிலாந்தில் ஆரம்ப காலத்தில் இதன் தாக்கம் அதிகளவில் காணப்பட்டாலும், தற்போது அது தலைகீழாக மாறியுள்ளதை அனைவராலும் அவதானிக்க முடியும். ஆனால் தென்னாபிரிக்காவில் நிலவிய நிற பேதம் காரணமாக ஒரு காலத்தில் அந்நாட்டு அணிக்கு சர்வதேச கிரிக்கெட் ப…
-
- 1 reply
- 372 views
-
-
உலகின் சிறந்த வீரர்களில் நானும் ஒருவர் 10-வது நிலையில் (பொசிஷன்) ஆடக்கூடிய உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் நானும் ஒருவர் என ஆர்செனல் கால்பந்து அணியின் ஸ்டிரைக்கர் மெசூத் ஒஸில் (Mesut Özil) தெரிவித்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த மெசூத், கடந்த ஆண்டு ஆர்செனல் அணிக்கு தாவினார். ஆனால் கடந்த சீசனில் அவ்வப்போது மட்டுமே களமிறக்கப்பட்ட அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளானார். அதற்குப் பதிலளித்துள்ள மெசூத் மேலும் கூறியதாவது: வலது புறத்தில் விளையாடக்கூடிய என்னை இடதுபுறத்தில் விளையாட வைப்பதால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. நான் கோலடிப்பதோடு மட்டுமின்றி, கோல் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொட…
-
- 1 reply
- 662 views
-
-
ஐசிசி தரவரிசை: முதல் இடத்தில் இந்தியா இலங்கை அணியை 5-0 என்று ஒருநாள் தொடரில் தோற்கடித்த இந்திய அணி, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒருநாள் தொடர் ஆரம்பிக்கும் முன்பு 113 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் இருந்த இந்திய அணி, தொடரின் முடிவில், 117 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியை விடவும் 2 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது. ஒருநாள் தொடரில் தோற்ற இலங்கை அணி, 4ம் இடத்தில் உள்ளது. இப்போது நடந்துவரும் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரில், எந்த அணி 4-1 என்று ஜெயிக்கிறதோ அந்த அணி ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் இந்தி…
-
- 1 reply
- 375 views
-
-
Hobart Hurricanes அணியில் விளையாடும் சங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள பிக் பாஷ் லீக் (Big Bash League) கிரிக்கெட் போட்டியில் ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணியில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குமார் சங்கக்கார ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணியில் இரண்டு வருடங்கள் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/06/hobart-hurricanes-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%A…
-
- 1 reply
- 302 views
-
-
RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு! ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான ‘யாஷ் தயாள்‘ மீது உ.பி மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது புகாரில் கூறியிருப்பதாவது: யாஷ் தயாள் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து என்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார். ஊட்டிக்கு அழைத்து சென்று என்மீது பாலியல் அத்துமீறல் புரிந்தார். நான்கரை ஆண்டுகளாக நாங்கள் தொடர்பில் இருந்துள்ளோம். யாஷ் தயாள் வீட்டில் நான் 15 நாட்கள் தங்கி இருந்தேன். அவருடைய குடும்பத்தினருடனும் நெருங்கி பழகி வந்தேன். ஆனால், என்னை திருமணம் செய்யாமல் அவர் ஏமாற்றி விட்டார். அவருக…
-
- 1 reply
- 199 views
-
-
மைலோ இறுதி மோதலில் புனித பத்திரிசியார், மணற்காடு, புனித ஹென்றியரசர் அணிகள் தற்பொழுது நடைபெற்று வரும் 5ஆவது மைலோ கிண்ண கால்பந்து போட்டிகளின் ஓர் அங்கமாக 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான மோதலின் இறுதி ஆட்டங்களுக்கு புனித பத்திரிசியார், மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, புனித ஹென்றியரசர் அணிகள் தெரிவாகியுள்ளன. யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான குறித்த சுற்றுத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்றையதினம் (01) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன. 14 வயதிற்குட்பட்டோர் பிரிவு தெரிவுச்சுற்று மற்றும் காலிறுதிப் போட்டிகள் …
-
- 1 reply
- 717 views
-
-
18 SEP, 2023 | 11:57 AM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவின் இயூஜின், ஒரிகொன் ஹேவோட் பீல்ட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற வொண்டா டயமண்ட் லீக் இறுதிச்சுற்றின் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 6.23 மீற்றர் உயரம் தாவி சுவீடன் வீரர் ஆர்மண்ட் டுப்லான்டிஸ் உலக சாதனை நிலைநாட்டினார். ஒரு வருடத்திற்கு முன்னர் இதே மைதானத்தில் தனது முதலாவது சிரேஷ்ட உலக வெற்றியை மொண்டோ என அழைக்கப்படும் டுப்லான்டிஸ் ஈட்டியிருந்தார். 6.23 மீற்றர் உயரத்தை ஒரே தடவையில் தாவிய டுப்லான்டிஸ், தனது சொந்த உலக சாதனையை 7ஆவது தடவையாக புதுப்பித்து வரலாறு படைத்தார். இந்தப் போட்டியில் முதலாவது…
-
- 1 reply
- 480 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித் தலைவரும் சிறந்த பந்து வீச்சாளரும் புகழ்பெற்ற வர்ணனையாளருமான ரிச்சி பெனட் தனது 84 ஆவது வயதில் சிட்னியில் காலமானார். சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெனாட், 2013-ம் ஆண்டு கார் விபத்துக்குள்ளனார். இதில் அவருடைய இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. சிறந்த பந்து வீச்சாளரும்; அதிரடி துடுப்பாட்ட வீரருமான பெனட், டெஸ்ட் போட்டிகளில் 248 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர் அணித் தலைவராக இருந்தபோது ஆஸி. அணி ஒரு டெஸ்ட் தொடரிலும் தோற்றதில்லை. அவர் மொத்தம் 63 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 1964-ல் ஓய்வு பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த கெர்ரி பேக்கர் தொடரை கொண்டு வந்ததில் பெனடின் பங்கு அதிகம். கிரிக்கெட்…
-
- 1 reply
- 916 views
-
-
பாராலிம்பிக்: குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் வெள்ளி பதக்கம் ரியோ டி ஜெனிரோ: ரியோவில் நடந்து வரும் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து பல்வேறு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் உட்பட இந்தியாவை சேர்ந்த 2 பேர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வெற்ற நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனை தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வெற்றுள்ளார். http://www.dinamalar.com/news_detail.as…
-
- 1 reply
- 440 views
-
-
மும்பை இண்டியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுநராக மஹேல ஜயவர்தன நியமனம் 2016-11-18 20:31:34 எதிர்வரும் இண்டியன் பிறீமியர் லீக் 2017 சுற்றுப்போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கான தலைமைப் பயிற்றுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இண்டியன்ஸ் நிர்வாகம் இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இதற்குமுன் முன் மும்பை இண்டியன்ஸ் பயிற்றுநராக பதவி வகித்த, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங்குக்குப் பதிலாக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20756#sthash.PFbkh…
-
- 1 reply
- 346 views
-
-
2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா நியூஸிலாந்து - வில்லியம்சனுக்கு 100-வது ஆட்டம் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கான்பராவில் இன்று நடைபெறுகிறது. வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியா வில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி கான்பராவில் இந்திய நேரப்படி இன்று காலை 8.50 மணிக்கு நடைபெறுகிறது. இந…
-
- 1 reply
- 286 views
-
-
ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெறுவதில் மகிழ்ச்சியே' 2016-ஆம் ஆண்டுக்கான ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) சிறந்த கிரிக்கெட் வீரராக, இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிக்கப்பட்டுள்ளார். 2016 ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக அஸ்வின் அறிவிப்பு அதே போல், 2016 ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருதும் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. மேலும், ஐசிசி டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன. ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஸ்வின் ஆவார். முன்னதாக, சச்சின் டெண்ட…
-
- 1 reply
- 417 views
-
-
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் லிவர்பூலை 2-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட் மார்கஸ் ரஷ்போர்டின் சிறப்பான ஆட்டத்தால் லிபர்பூல் அணியை 2-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட். #EPL #MUFC #LFC இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் முன்னணி அணிகளான மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் அணிகள் மோதின. சுமார் 75 ஆயிர்கள் கூடியிருந்த ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் லூகாக்கு கொடுத்த பாஸை கோலாக மாற்றினார் மார்கஸ் ரஷ்போர்ட். …
-
- 1 reply
- 355 views
-
-
சிஎஸ்கே-வை எப்படி மறக்க முடியும்? - தோனி உணர்ச்சிகரம் ஆர்.பி. சஞ்சய் கோயெங்கா குழும தலைவர் சஞ்ஜீவ் கோயெங்கா, ரைசிங் புனே ஜெயண்ட் கேப்டன் தோனி. புதிய சீருடை அறிமுக விழாவில். | படம்: சந்தீப் சக்சேனா. எப்போதும் அமைதியாகவும், நிதானமாகவும் பேசும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய கேள்வி எழுப்பப்பட்டவுடன் சற்றே உணர்ச்சிவயப்பட்டார். புதுடெல்லியில் புதிதாக தலைமை தாங்கவுள்ள ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஐபிஎல் சீருடை அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி கேட்டவுடன் சற்றே உணர்ச்சிவசப்பட்டார். “நான் (சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து) நகர்ந்து சென்று விட்டேன் என்று நான் கூறினால் அது பொய்யாகவே இரு…
-
- 1 reply
- 664 views
-
-
கையிலிருந்து நழுவியது கோப்பை தோல்வி அதிர்ச்சியில் இந்திய அணி வீரர்கள். லெண்டில் சிம்மன்ஸ் இந்தியா வுக்கு வந்து இறங்கி இரண்டு நாட்கள்தான் ஆகின்றன. பெரிய அளவில் பயிற்சியோ முன்தயாரிப்போ இல்லாமல் அவர் களம் இறங்கி னார். அவர் இறங்கிய களம் ஒரு விதத்தில் அவரது ‘சொந்த’ஊர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் அவருக்கு மும்பையின் ஆடுகளம் மிகவும் பரிச்சயமானது. அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்லும் மார்லன் சாமுவேல்ஸும் விரைவிலேயே ஆட்டமிழந்த பிறகு அணியின் நம்பிக்கையை ஜான்சன் சார்லஸுடன் இணைந்து புதுப்பித்தார் சிம்மன்ஸ். தான் ஆடிய முதல் ஆட்டத்திலேயே அணியை வெற்றிபெறச்செய்து இறுதி ஆட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அஜிங்க…
-
- 1 reply
- 650 views
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் செனுரன் முத்துசாமி கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 11 ஆகஸ்ட் 2025 இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் பல்வேறு வெளிநாட்டு அணிகளுக்காக கடந்த காலங்களில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர், தற்போதும் சிலர் விளையாடி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தை வேராகக் கொண்டு வெளிநாட்டு அணிகளுக்காக கிரிக்கெட் விளையாடியது மிகச் சிலர்தான். கடந்த காலங்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக ஆல்வின் ஐசக் காளிச்சரண், மகிந்திரா நாகமுத்து, சிவ்நரேன் சந்தர்பால் உள்ளிட்ட சில வீரர்கள் விளையாடியுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியில் தமிழர் தென் ஆப்ரிக்க அணியில் இதற்கு முன் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஹசிம் ஆம்லா, க…
-
- 1 reply
- 245 views
- 1 follower
-
-
நினைவுப் பொருட்களை ஏலமிடுகிறார் பீலே பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவனான பீலே, தனது விளையாட்டுக் காலத்தில் கிடைக்கப்பெற்ற நினைவுப் பொருட்களை ஏலத்தில் விடுவதற்கு முடிவுசெய்துள்ளார். இந்த ஏலம், இலண்டனில் இம்மாதம் இடம்பெறவுள்ளதோடு, மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது. 15 வயதில் சான்டோஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டதிலிருந்து, தற்போது வரை அவருக்குக் கிடைத்த பொருட்களையே அவர் ஏலமிடவுள்ளார். இதன்படி, 6 தசாப்தங்களாக அவரிடம் சேர்ந்த பொருட்களே, ஏலமிடப்படவுள்ளன. மூன்று தடவைகள் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்ற ஒரேயொரு வீரரான பீலே, தனக்குக் கிடைத்தவற்றைப் பேணிப் பாதுகாப்பது கடினமானது எனவும், அதை விட அவற்றை உலகத்துடன் பகிர்வதுடன், தன…
-
- 1 reply
- 433 views
-
-
நான் பார்க்காத கஷ்டங்களா..? கண்டிப்பாக றி-20 உலக கோப்பை அணியில் இடம்பிடிப்பேன்.. சீனியர் வீரர் நம்பிக்கை. 2004ம் ஆண்டே இந்திய அணியில் அறிமுகமாகிவிட்ட தினேஷ் கார்த்திக்கால், தோனி விக்கெட் கீப்பராக உருவெடுத்ததால் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடிக்க முடியவில்லை. அணியில் எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாகவே இருந்தார் தினேஷ் கார்த்திக். இந்திய கிரிக்கெட்டில் அவரும் ஒரு வீரராக இருந்தாரே தவிர, அவரால் இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், நிதாஹஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் கடைசி 2 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. அந்த போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு த்ர…
-
- 1 reply
- 819 views
- 1 follower
-
-
‘பீல்டிங்’ விதிமுறையில் மாற்றம்: ஐ.சி.சி., புது முடிவு பெங்களூரு: ஒருநாள் போட்டிக்கான ‘பீல்டிங்’ கட்டுப்பாடு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. பெங்களூருவில், கும்ளே தலைமையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) கிரிக்கெட் கமிட்டி கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில், ஒருநாள் போட்டிகளில் ‘பீல்டிங்’ கட்டுப்பாடு விதிமுறையில் மாற்றம் கொண்டு வர விவாதிக்கப்பட்டது. கடந்த 2012ல் ஒருநாள் போட்டிகளில் ‘பீல்டிங்’ கட்டுப்பாடு விதிமுறை அறிமுகமானது. இதன்படி முதல் 10 ஓவரில் உள்வட்டத்துக்கு வெளியே 2 பீல்டர்கள் தான் நிற்க வேண்டும், ‘பேட்டிங் பவர் பிளே’ ஓவரில் உள்வட்டத்துக்கு வெளியே 3 ‘பீல்டர்கள்’ நிறுத்தலாம். ‘பவர் பிளே’ இல்லாத நேரங்க…
-
- 1 reply
- 499 views
-
-
162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா Published by J Anojan on 2019-10- இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது. இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணித் லைவர் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளே செய்தார். இந்தியா சார்பில் ரோகித் சர…
-
- 1 reply
- 401 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையை அயர்லாந்து அணி படைத்துள்ளது. அயர்லாந்து அணி 10 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள நிலையில் குறித்த சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 14 போட்டிகளில் விளையாடி தென்னாப்பிரிக்க அணி ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. தென்னாப்பிரிக்கா வசமிருந்த சாதனையை தற்போது அயர்லாந்து அணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/315203
-
- 1 reply
- 287 views
- 1 follower
-