எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
கொழும்புமிரருக்காக ஜெரா இலங்கையில் தமிழ்க் கிராமங்களின் தொடக்க இடம் எது? பட்டெனப் பதில் வரும் அம்பாறை எல்லைக் கிராமங்கள் என்று.அப்படியாயின், எந்த வரைபடத்திலாவது அந்தக் கிராமங்களை ஆழ நுணுகிப் பார்த்திருக்கிறோமா? அவற்றின் பெயர்களையாவதுதேடிப் பிடித்திருக்கிறோமா? அங்கு வாழ்பவர்கள் யார்? ஏன்ன தொழில் செய்கிறார்கள்? எப்போதிலிருந்து அங்கு வாழ்கிறார்கள்?இப்போது எப்படி அங்கு வாழ்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கும் பதில்கள் உண்டு என்பதைக் கற்பனையாவது செய்துபார்த்திருக்கிறோமா? ஆனால் எனக்கு இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிய வேண்டும்போலிருந்தது. கடந்த மாதம் வருமானத்தில் சிக்கெனப்பிடித்தசிறுதொகைப் பணத்துடன் தமிழர்களின் தொடக்கக் கிராமத்தைப் பார்ப்பதற்கான இனிய பயணத்தைத் தொடங்கினேன். எப்பவ…
-
- 2 replies
- 1.5k views
-
-
அண்ணா தொழிலகத்தின் தொழிலதிபர் பொ.நடராஜா அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி இதயத்தை நெருட வைக்கிறது. மிக உயர்ந்த பண்பாளன் என்பதற்கப்பால்; தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய்வருத்தக் கூலி தரும் என்ற குறளுக்கு உதாரண புருராக விளங்கியவர் அவர்.தனது சொந்த முயற்சியால் சிறுதொழில் முயற்சியை ஆரம்பித்து படிப்படியாக உயர்வடைந்து உச்சமான தொழிலதிபராக உயர்ந்தவர் என்ற பெருமை நடராஜா அவர்களுக்கு உரியது. பணபலம்; பொருட்பலம்; செல்வாக்குப் பலம் அனைத்தும் இருந்தபோதிலும் பணியுமாம் பெருமை என்பதில் இம்மியும் பிசகாமல் வாழ்ந்த ஒரு அற்புத மனிதரை தமிழ்மண் இழந்துவிட்டது. எங்கள் முற்றத்தின் மல்லிகை அவர். சிரித்த முகம்; எவரையும் மதிக்கும் உயர்ந்த பண்பு; நடந்து வந்த பாதையை நினைக்கின்ற உயர்ந்த …
-
- 0 replies
- 259 views
-
-
அதுவொரு கனாக்காலம். Thamilini Jayakumaran 1978 தொடக்கம் 1991 வரையான காலம் எனது பாடசாலையின் மடி இன்னொரு தாயாக என்னையும் அரவணைத்திருந்த காலம். வைர விழாக்காணும் அதன் சேவையில், உலகமெலாம் சிதறிக்கிடக்கும் எத்தனையோ ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான தனது மாணவர்களுக்கு அறிவு தீபம் ஏற்றி வைத்த பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது எனது பாடசாலை. முத்துக்கள் கோர்த்திருந்த ஒரு சிலேட்டுப்பலகையும் கையுமாக, அம்மாவுக்கு பின்னால் பதுங்கியபடி எனது பாடசாலை வளாகத்தில் காலடி எடுத்த வைத்த முதல் நாளின் மங்கலான நினைவுகள் மனதில் விரிகிறது. அம்மாவின் கையிலிருந்த எனது கரங்களை வாஞ்சையுடன் வாங்கிக் கொண்ட செல்லையா ரீச்சரையும் அவருடைய பெரிய கொண்டையும் முகத்தின் மச்சத்தையும் மறக்கவே முடியாது. முதலாம…
-
- 0 replies
- 363 views
-
-
பருத்தித்துறை தொன்மையின் எச்சம்… பருத்தித்துறை பிரதானவீதியின் கிழக்குப்பக்கமாக தும்பளை வீதியில் உள்ளது தெருமூடிமடம். பருத்தித்துறைக்கென நீண்ட பாரம்பரியங்கள் உள்ளன. அவற்றின் எச்சங்களிலொன்றாக உள்ளது இந்த தெருமூடிமடம். வீதியின் இரண்டு பக்கங்களும் திண்ணை அமைக்கப்பட்டு, அவற்றின் பக்கமாக உயர்ந்த சுவர்கள் எழுப்பப்பட்டு, அதற்கு கூரை அமைக்கப்பட்டுள்ளது. இது சுமார் 160 வருடங்களின் முன்னர் கட்டப்பட்டுள்ளது. வீதியால் பயணிப்பவர்கள் பொருட்களை இறக்கி வைத்து இளைப்பாறி செல்வதற்காக அமைக்கப்பட்டது. இந்த பகுதியில் இன்னும் இரண்டு தெருமூடிய மடங்கள் இருந்தபோதும், அது பற்றிக அக்கறையின்றி அது கடந்த காலங்களில் இடித்தழிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது பொக்கிசமாக இதுமட்டுமேயுள்ளது. http://…
-
- 0 replies
- 397 views
-
-
தமிழர்கள் வாழும் ‘சாமகம்மான’ எனும் கிராமம்… படம் | கட்டுரையாளர் “ஓகொல்லங்கே லமய்ன்ட மொனவத்ம தன்னே நெஹ. இகென கன்னேம நெஹ, நம விதரக் லியன்ன இகென கத்தனம் எதி. ஏக தியாகன ஹம்பகரன்ன புலுவன்னே” என சிங்களத்தில் அந்த ஆசிரியர் சொல்ல பெற்றோர் விளங்கியும் விளங்காமலும் ஒவ்வொருவரின் முகங்களையும் பார்க்கின்றனர். சிங்களம் ஓரளவு தெரிந்த ஒருவர் அங்கிருந்த பெற்றோர்களுக்கு விளங்கப்படுத்தினார், “உங்க பிள்ளைகளுக்கு ஒன்டும் தெரியல்ல, படிக்குறாங்களே இல்ல, அவங்களுக்கு பேர் எழுத தெறிஞ்சா போதும், அத வச்சிகிட்டு சம்பாச்சிக்கலாம்” என்டு டீச்சர் சொல்றாங்க, அவர் மொழிபெயர்த்து கூறினார். கொஞ்சம் சிங்களத்திலும், இடையில் தமிழும் சொறுகிக் கொள்ள, கை பாஷையிலும் ஆசிரியருக்கு பதில் அளித்துவிட்டு, பிள்ளைகளின…
-
- 0 replies
- 415 views
-
-
அறிக்கை விடுவதும் கருத்துக் கூறுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது அதை கேட்பாரும் இல்லை கேட்டாலும் செயல் வடிவம் கொடுப்பாரும் இல்லை இருந்தாலும் என் போன்றவர்கள் எதிர் நோக்கும் துன்பங்களை அறியத்தர விளைகின்றேன் ஏதாவது மாற்றம் வராதா என்ற எதிர்பார்ப்புடன். யுத்தத்தாலும் விபத்துக்களாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாட்கலியின் உதவியுடன் வாழும் என்னைபோன்றோர் எதிர் நோக்குகின்ர பல பிரச்சினைகள் இருந்தாலும் முக்கிய வேண்டுகோள் என்ன வென்றால் நாங்கள் எங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அரச அரச சார்பற்ற காரியாலயங்களுக்கு செல்லவேண்டி இருக்கிறது மிகுந்த சிமரத்தின் மத்தியில் எங்களது பயணத்தை மேட்கொன்டாலும் குறிப்பிட்ட அலுவலகத்துக்குள் செல்ல முடியாத நிலையில் பலதரப்பட்ட மன …
-
- 2 replies
- 493 views
-
-
யாருமற்ற வெளி அருணன் நிமலேந்திரா - அம்ரித் பெர்ணான்டோ முள்ளிவாய்க்கால் இப்போதும் பத்திரிகை யாளருக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசம். ஊருக்குப் புதியவர் ஒருவர் முள்ளிவாய்க்கால் வீதியில் நடந்து சென்றால் அரைகுறைத் தமிழ் பேசும் சிவில் உடையணிந்த புலனாய்வாளர்கள் விசாரிக்கத் தொடங்கிவிடுவர். முகாமுக்கும் அழைத்துச் சென்றுவிடுவர். அவர்கள் அடையாள மற்றவர்களெனின் காணாமற் போய்விடுவர். கமராவுடன் தெருவில் நடமாட முடியாது. 2015 மே மாதம் முள்ளிவாய்க்கால், வலைஞர் மடம் முதலான பகுதிகளுக்குச் சென்றபோது பொதுமக்களுடன் உரையாடிப் பதிவு செய்தவற்றில் சிலவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 2009 மே மாதத்தை நினைவுகூர்ந்த மக்களின் கதைகளே இவை. பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. ச…
-
- 0 replies
- 342 views
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
கூளைக்கடா 780adad1beb27f0c54647e4de568fd26 நான் பூநகரி நாச்சிக்குடா பகுதிக்கு மக்கள் சந்திப்பிற்காக சென்ற பொழுது அங்கிருந்த சிறு கடல் பகுதியில் காணப்பட்ட அழகிய பறவைகள் இவை இதில் காணப்படும் பெரிய பறவைகளை எமது மக்கள் கூளைக்கடா என்று அழைக்கிறார்கள் நன்றி சுரேஸ் பிறேமசந்திரன் (முகப்புத்தகத்தில் இருந்து)
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கையின் யுத்தத்தில் உடல் அங்கங்களை இழந்துள்ள பலர் மாற்றுத் திறனாளிகளாக வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களில் வெற்றிச்செல்வியும் ஒருவர். தன்னம்பிக்கையும் முயற்சியும் மிக்கவராகத் திகழ்கின்றார் . மன்னார் மாவட்டம் அடம்பனைச் சேர்ந்த வெற்றிச்செல்வி இப்போது நாடறிந்த எழுத்தாளர்களில் ஒருவர். வெற்றிச்செல்வி முன்னாள் போராளியான வெற்றிச்செல்வி 19 வயதில் வெடிவிபத்தொன்றில் வலது கையையும் வலது கண்ணையும் இழந்துள்ளார். தனது இடது கையைக் கொண்டு பல்வேறு பணிகளையும் செய்யும் இவர் முன்னர் வலது கைப்பழக்கத்தைக் கொண்டிருந்தவர். கடுமையான பயிற்சியின் மூலம் இடது கையினால் அழகாக எழுதவும் கணணியில் வேகமாகத் தட்டச்சு செய்யவும், மோட்டார் சைக்கிள் ஓடவும் கூடியவராகவும் இருக்கி…
-
- 0 replies
- 698 views
-
-
“தமிழீழம் கேட்கல்ல, தனி மனிதனுக்கு உள்ள உரிமையதான் கேட்கிறோம்” – முன்னாள் போராளி by Selvaraja Rajasegar - on June 9, 2015 படம் | AP Photo, ASIAN CORRESPONDENT தீபன், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான இவருக்கு நான் வைத்த பெயர். புலிகளின் நிதிப்பிரிவில் உயர் பொறுப்பில் இருந்தவர். இதனால் 2 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டு 7 தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் வாழ்ந்துவருகிறார். இருந்தும், தடுப்பில் தான் இராணுவத்தால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் குமார், அதனால், முள்ளந்தண்டில் இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார். அத்தோடு, சிறுநீரகத்திலும் கோளாறு உள்ளதாகவும் கூறுகிறார்.…
-
- 0 replies
- 515 views
-
-
அடுத்த நூற்றாண்டின் யுத்தங்கள் நீர் தொடர்பாகவே இருக்கும் - இஸ்மாயில் செரகேல்டின், உலக வங்கியின் உப தலைவர் 1995 (1) விவசாயம், அதிகரிக்கும் குடித்தொகை, சக்தி உற்பத்தி, காலநிலை மாற்றம் ஆகியவற்றினால் ஏற்படும் அதிகரித்த தேவைகளினால் தண்ணீர் பற்றக்குறையானது உலகளாவிய ரீதியில் அதிகரித்துவரும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது (2). 2007 ம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் மக்கள் அல்லது பூமியில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் வசிப்பதாக கணிப்பிடப்பட்டிருந்தது (3). மேலும் 2025 அளவில் 1.8 பில்லியன் மக்கள் முழுமையான நீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகளில் அல்லது பிராந்தியங்களில் வசிப்பார்கள் என்றும் உலக குடித்தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் தண்ணீர் தட்…
-
- 0 replies
- 473 views
-
-
இன்று வவுனியா பஸ்நிலைய பகுதியில் நடந்த விடயம். ஐரோப்பிய நாடுகளில் விலங்குகளுக்கு இருக்கும் பெறுமதி கூட எமது நாட்டில் மனிதர்களுக்கு இல்லை. வவுனியா பஸ்நிலைய மேல் மாடியில் உள்ள ஆகாஷ் கிராபிக்ஸ்க்கு சென்று சடுதியாக கீழே பார்த்த போது ஒருவர் குப்பை தொட்டியை கிளரி கொண்டு இருந்தவர் திடீரென்று அந்த பழுதடைந்த உணவுகளை சாப்பிட தொடங்கி விட்டார் உடன் கண்ணன் அண்ணா கீழே சென்று அதை எறியும் படி கூறி சாப்பாடும், தண்ணீரும் வாங்கி கொடுத்துள்ளார். இது தான் அவரது வாழ்க்கை என பல பேர் அதில் கருத்து கூறினர்,மன நிலையும் பாதிக்கபட்டவராம், அவரின் இந்த அவல வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைக்க அனைவரும் முயற்சிப்போம். இது ஒரு முக நூல் பதிவு
-
- 0 replies
- 754 views
-
-
.வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தின் பொங்கல் விழா இன்றாகும் பொங்கல் விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் நலன்கருதி அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை, பொங்கல் விழாவில் தேவையேற்படும் படசத்தில் கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். அத்துடன் பொங்கல் நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களின் நலன்கருதி தண்ணீரப் பந்தல்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்தியத்திலுள்ள யாழ்…
-
- 2 replies
- 638 views
-
-
கொழும்பு மிரருக்காக ஜெரா 2012 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 3 ஆம் திகதி. யேசுதாஸன் குடும்பத்தில் பேரிழப்பு நடந்த நாள். விடுப்புப் பார்க்கும் தீவான நெடுந்தீவை திரும்பிப் பார்க்க வைத்த நாளும் அதுதான். யேசுதாஸன் ஒரு வண்டில்காரன். நெடுந்தீவின் 8 ஆம் வட்டாரத்தில் வசிக்கிறார். நெடுந்தீவு படகுத் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்படும் பொருள்களை உரியவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுப்பதுதான் அவரின் தொழில். அந்தத் தொழில் கிடைக்காத நேரங்களில் (கடலடி காலங்கள் மற்றும் வண்டில் பழுதடைந்த நேரங்கள்) கிடைக்கின்ற கூலிவேலைக்கும் போவார். இந்தத் தொழில்களில் கிடைக்கும் வருமானத்தில்தான் குடும்பம் ஓடுகிறது. மனைவி பிறிடா கிலாறா யேசுதாஸன் வீட்டுப் பணிதான் செய்கிறார். அவர்களுக்கு மொத்தம் 7 பிள்ளைக…
-
- 0 replies
- 931 views
-
-
இலங்கைக்கான சுற்றுலாத்துறை துரிதமாக வளர்ச்சி கண்டு வருகின்றது. இவ்வாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 02 மில்லியனாக எதிர்பார்க்கப்படுகின்றது. இது இலங்கையின் வருமானமீட்டும் துறைகளில் நான்காவது இடத்தையும் வகித்து வருகின்றது. கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் காரணமாக வடக்கு, கிழக்கில் காணப்பட்ட அசதாரண சூழ்நிலைகள் இல்லாமல் செய்யப்பட்டு இன்று சுமூகமான நிலை தோன்றியுள்ளது. சுற்றுலாத்துறையில் பிரசித்தி பெற்ற இடங்களில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் அறுகம்பைப் பிரதேசமும் ஒன்றாகும். இது சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாகத் திகழ்கின்றது. இங்கு இயற்கையாகவே அமைந்த குடா மற்றும் கடல் அலை சறுக்கல் சாகச விளையாட்டுக்கு மிகவும் பெயர் போன …
-
- 0 replies
- 1.2k views
-
-
கணவனையும் தனது மூன்று மகன்களுள் இரண்டு மகன்களையும் இழந்து விட்டு பரிதவிக்கும் லலிதா எனும் பெண்ணின் வாழ்க்கை சோகமயமானது. திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரத்தில் சாதாரண வீடொன்றில் வாழ்ந்து வருகின்றார் லலிதா என்பவர். கணவனும் மகன்மார்களும் இல்லாத ஏக்கத்தில் தன்னுடைய வாயிற்றுப்பிழைப்புக்காக இடியப்பம், இட்லி அவித்து விற்பதும், கூலி வேலை செய்வதையும் அன்றாடத் தொழிலாகக் கொண்டு தனது 51ஆவது வயதிலும், பிறருடைய உதவியை எதிர்பாராமல் நாட்களை கழிக்கின்றார். 2 008.02.04 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணியளவில் லிலிதாவின் வீட்டு வாசலுக்கு முன்னால் நிறுத்தப்பட்ட வெள்ளை வானிலிருந்து இறங்கிவந்த 17 பேர், விசாரணை ஒன்று இருப்பதாகக் கூறி, வீட்டி…
-
- 5 replies
- 820 views
-
-
“பிரபாகரன் இருந்தா கேட்பியலோ?” by Selvaraja Rajasegar - on May 27, 2015 செல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19 ஏக்கர் காணியில் செல்லம்மாவுக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் காணி உள்ளது. அந்தக் காணியில் 4 வீடுகளும் கடை ஒன்றும் உள்ளன. 2011ஆம் ஆண்டு சொந்த இடத்தில் குடியேற்றுவதாக அறிவித்ததால், இறுதிக் காலத்தில் சொந்த பூமியில் வாழலாம் என்ற கனவுடன் வந்தவருக்கு இலங்கை இராணுவத்தினர் வீடுதர மறுத்தனர். செல்லம்மா உட்பட மக்களின் காணியில் அமைக்கப்பட்டிருக்கும் 682 படையணி. “எங்கட இடம் விடுறதா சொன்னதாலதான் இங்க நாங்க வந்தனாங்கள். வந்து பதிவு செய்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
“அவையல் கிளாஸ்ல சந்தோசமா படிக்க மாட்டினம்” Selvaraja Rajasegar - on May 26, 2015 “ஒன்டு அப்பா இல்ல, ஒன்டு அம்மா இல்ல, ஒன்று ரெண்டு பேருமே இல்ல. கிட்டத்தட்ட 90 பிள்ளைகள் தாயை அல்லது தந்தைய இழந்திருக்காங்க. அவர்களின்ர படிப்பு பொறுத்த வரையில சரியான பிரச்சின” என்கிறார் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை. முதலாம் தரத்திலிருந்து 5ஆவது வரை இந்தப் பாடசாலையில் 540 பிள்ளைகளைகள் படித்துவருகிறார்கள். இங்கு படிக்கின்ற அனைவரும் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது அதை நேரடியாக அனுபவித்தவர்களாகவும் கருவில் இருந்து உணர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். சிரித்து, பேசி அவர்கள் விளையாடுவதை என்னால் பார்க்கமுடிந்தாலும் அவர்களிடம் உளரீதியான பிரச்சினைகள் இருப்பதாக ஆசிரியர் கூறுகிறார். …
-
- 0 replies
- 746 views
-
-
முல்லையில் கொந்தளிக்கும் மீனவர் பிரச்சினை கொழும்பு மிரருக்காக ஜெரா முல்லைத்தீவும் கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது. கடவுளாக மதிக்கும் கடல், காலணியோடு கால் தடம் பதிக்காத மரியாதையுக்கும் – புனிதத்துக்குமுரிய கடவுள், தம்மிடமிருந்து பறிக்கப்படுவதை எதிர்க்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். வடக்கில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள், இந்தப் போராட்டம் தொடங்கியும் ஆறு ஆண்டுகள்தான். இலங்கையில் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளைக் கடந்த விழா தெற்கே மிடுக்குடன் கொண்டாடப்பட்டுக்கொண்டு இருக்கையில் முல்லைத்தீவு மீனவர்கள் தம் கடல் வளத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அடிக்கடி அத்துமீறும் இந்திய மீனவர்களின் அட்டகாசங்கள…
-
- 0 replies
- 728 views
-
-
-
வித்தியாவிற்காக களத்தில் கிருனிக்கா. பிரியமானவர்களே இது சிறிய விஷயம் இல்லை இறந்தது ஒரு சிங்களம் பெண் அல்லது ஒரு தமிழ்ப் பெண் .. நாம் வல்லுறவுக்கு எதிராக குரல் உயர்த்த வேண்டும் என்றால் அடுத்து பாதிக்கப்பட்ட உள்ள சகோதரி காதலி அல்லது மனைவி கூட பெரும் ஆபத்து வரலாம். பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை மீண்டும் கொண்டு வர எங்கள் facebook இல் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும். அன் நேரம் எங்கள் குரல் உயர்த்தி நீதித்துறை அமைப்பு ஒரு மாற்றம் செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட வித்தியா படங்களை பார்த்தால் இந்த வலி தெரியும். என தனது முக நூலில் பதிவேற்றியுள்ளார். - See more at: http://www.jvpnews.com/srilanka/109980.html#sthash.syQb4FUy.dpuf
-
- 6 replies
- 3.4k views
-
-
கொழும்பு மிரருக்காக பிரான்சிஸ் ஹாரிசன் அந்த அறைக்கதவுகள் திறக்கப்பட்ட வேளை அவர் மிகவும் பரிதாபமான நிலையில் அங்கிருந்து ஓடிவந்தார், வெளியே நின்றிருந்த இலங்கைப் படையினர் அவரை பார்த்து கேலி செய்தனர், ஏளனம் செய்தனர், அவரது உடைகளில் இரத்தம் கறை படிந்து காணப்பட்டது, அவரது உடலில் சிகரெட்டினால் சுட்ட காயங்கள் உட்பட பல காணப்பட்டன – பாலியல் வன்முறைக்கு அப்பால் அவர் முகாமிற்கு வெட்கத்துடன் நடந்துகொண்டிருந்தார். அவரை அந்த நிலையில் பார்த்த அங்கிருந்த ஏனைய தமிழர்களுக்கு அவரிற்கு என்ன நடந்தது என்பது உடனடியாக விளங்கியது. அந்தத் தாய் பழைய நிலைக்கு மீண்டு, தனது குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை அந்த குழந்தைக்கு குடிப்பதற்கு நீரை வழங்குவதை மாத்திரமே அவர்களால் செய்ய முடிந்தது. படையினர்…
-
- 0 replies
- 772 views
-
-
நடமாடும் அவமானம் கொழும்பு மிரருக்காக பிரான்சிஸ் ஹாரிசன் அந்த அறைக்கதவுகள் திறக்கப்பட்ட வேளை அவர் மிகவும் பரிதாபமான நிலையில் அங்கிருந்து ஓடிவந்தார், வெளியே நின்றிருந்த இலங்கைப் படையினர் அவரை பார்த்து கேலி செய்தனர், ஏளனம் செய்தனர், அவரது உடைகளில் இரத்தம் கறை படிந்து காணப்பட்டது, அவரது உடலில் சிகரெட்டினால் சுட்ட காயங்கள் உட்பட பல காணப்பட்டன – பாலியல் வன்முறைக்கு அப்பால் அவர் முகாமிற்கு வெட்கத்துடன் நடந்துகொண்டிருந்தார். அவரை அந்த நிலையில் பார்த்த அங்கிருந்த ஏனைய தமிழர்களுக்கு அவரிற்கு என்ன நடந்தது என்பது உடனடியாக விளங்கியது. அந்தத் தாய் பழைய நிலைக்கு மீண்டு, தனது குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை அந்த குழந்தைக்கு குடிப்பதற்கு நீரை வழங்குவதை மாத்திரமே அவர்களால் செய்ய…
-
- 0 replies
- 904 views
-
-
புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச் செல்வியுடன் குளோபல் தமிழ்ச் செய்திகளின் நேர்காணல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் இயகத்தில் பன்முக ஆளுமையாகச் செயற்பட்ட வெற்றிச்செல்வி முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதிதருணம்வரை களத்தில் போராளியாக நின்றவர். யுத்தகாலத்தில் வெடிகுண்டு விபத்தொன்றில் தனது கையொன்றையும் கண்ணையும் இழந்த இவர் மிகவும் தன் நம்பிக்கை மிக்க போராளியாக விளங்குபவர். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஆறு ஆண்டுகளைக் கடக்கும் இத் தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை உட்பட பல்வேறு விடயங்களைக் குறித்து பேசுகிறார். முள்ளிவாய…
-
- 0 replies
- 562 views
-