Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சிறப்புக் கட்டுரை: நாத்திகமும், அரசியலும் மின்னம்பலம் ராஜன் குறை அரசியல் கட்சித் தலைவர்கள் இறை நம்பிக்கையுடன் இருக்கலாமா? அவர்களுக்குத் தனிப்பட்ட நம்பிக்கை இல்லாவிட்டாலும் பிறர் நம்பிக்கையை முன்னிட்டு பண்டிகை தினங்களில் வாழ்த்து சொல்வது, வழிபாட்டு செயல்பாடுகளில் பங்கேற்பது ஆகியவற்றை செய்யலாமா? தனிப்பட்ட முறையில் ஒருவர் கோயிலுக்குச் செல்வதும், ஒரு கோயில் கட்டும் பணியை ஒரு பாலம் கட்டுவது போல, அணைகளைக் கட்டுவது போல ஒரு நாட்டின் பிரதமர் தொடங்கி வைப்பதும் ஒன்றா? அரசுக்கும், மத அமைப்புகளுக்கும் இருக்க வேண்டிய இடைவெளி என்ன? இது போன்ற கேள்விகளை கவனமாக நாம் பரிசீலிக்க கற்க வேண்டும். சிலர் முற்போக்கு சிந்தனை என்பது கடவுள் மறுப்புடன் பிணைக்கப்பட்டது என நம…

  2. காணாமல்போனவர்களின் தகவல்களை சேகரித்தவர்கள் கூட சிறீலங்காவில் துன்புறுத்தப்பட்டனர் – ஜஸ்மின் சூக்கா காணாமல்போனவர்களின் பெயர்களை சேகரித்தவர்கள் கூட பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்ப்ட்டு துன்புறுத்தப்பட்டதாகவும், இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஏறத்தாள 15 பேருக்கு 2015 ஆம் ஆண்டு பிரித்தானியா அகதித் தஞ்சம் வழங்கியுள்ளது எனவும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்ட அமைப்பு இன்று (30) அனைத்துலக காணாமல்போனவர்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா மேலும் தெரிவித்துள்ளதாவது: போர் நிறைவடைந்து ஒரு தசாப்தம் நிறைவடைந்தபோதும், போரில் காணாமல்போன தமது உறவுகள் தொடர்பில் உண்மையை தேடிய தமிழ் இளைஞர…

  3. புதிய அரசமைப்பும் சிறுபான்மையினரின் எதிர்காலமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஓகஸ்ட் 30 புதிய அரசமைப்பாக்க முயற்சிகள் இலங்கைக்குப் புதியனவல்ல. 1994ஆம் ஆண்டு தொட்டு, இதற்கான பலமுயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், இன்றுவரை முழுமையாகச் சாத்தியமாகவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளைச் சாத்தியமாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளன. அரசாங்கம், நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதும் வலுவற்ற எதிர்க்கட்சி ஆகிய இரண்டு காரணிகளும் இங்கு பிரதானமானவை. புதிய அரசமைப்பு எவ்வாறு அமையப்போகிறது என்பதைக் கூறுவது கடினம். அதில், சிறுபான்மையினரின் குரல்கள் எடுபடப்போவதில்லை என்பதை மட்டும்…

  4. காணாமல் ஆக்கபட்டவர்களுக்குக் கிடைக்காத நீதி – நிலாந்தன் August 30, 2020 நிலாந்தன் இன்று அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம். இந்நாளை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த 11 ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி கேட்டுப் போராடி வருகிறார்கள். இன்றோடு இப்போராட்டங்கள் 1,290 ஆவது நாளை அடைகின்றன.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடமும் உலக சமூகத்திடமும் குறிப்பாக ஐநா விடமும் இரண்டு விடையங்களை கேட்கிறார்கள். முதலாவது நீதி. இரண்டாவது இழப்பீடு. நீதி வேண்டும் என்றால் அதற்கு விசாரணை செய…

  5. இந்தி மொழி பற்றி அறியாத விடயங்கள்

  6. ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி இது. இலங்கை தீவில் தமிழர்கள் எப்படி வஞ்சகத்தால் காலம்காலமாக அன்றுதொட்டு இன்று வரை ஏமாத்தப்பட்டோம் இறுதியில் விடுதலைப் போராட்ட காலத்தில் 2009 வரை தமிழர்கள் நாம் உச்ச பலமடைந்த போதும் தமிழர்களின் ஒற்றுமையீனத்தால் வஞ்சகமாக வீழ்த்தப்பட்டோம். 2008 ஆம் ஆண்டின் இறுதியில் நவம் அறிவுக்கூடப் பொறுப்பாளர் கலைக்கோன் அவர்கள் வழங்கிய இலங்கைத்தீவின் வரலாற்று ஆய்வுரை. கடல் கேங்கைகள்🚣‍♂️🏊‍♂️.

  7. தமிழரசுக் கட்சியின் சீரழிவும் தோல்வியும் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஓகஸ்ட் 27 தேர்தல் அரசியல் என்பது ‘பரமபத’ (ஏணியும் பாம்பும்) விளையாட்டுப் போன்றது. வெற்றிகளை நினைத்த மாத்திரத்தில் அடைந்துவிட முடியாது. எதிர்க்கட்சிகளும் எதிர்த்தரப்புகளும் தோல்விகளைப் பரிசளிப்பதற்காகப் ‘பாம்பு’களாகக் காத்துக் கொண்டிருக்கும். இப்படியான அச்சுறுத்தலுள்ள தேர்தல் அரசியல் களத்தில் இம்முறை, சொந்தக் கட்சிக்குள்ளேயே ‘பரமபதம்’ ஆடி, தமிழரசுக் கட்சி தோற்றுப் போயிருக்கின்றது. கட்சியின் தலைவர், செயலாளர் தொடங்கி, கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த பலரும், இந்தப் பொதுத் தேர்தலில் படுமோசமாகத் தோற்றிருக்கிறார்கள். இந்த நிலையில்தான், தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூ…

  8. தமிழ் தேசியத்தை கொல்லும் குழு வாதமும் கொள்ளையடி வாதமும் -மு.திருநாவுக்கரசு August 28, 2020 தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசியத்தின் ஒரு நூற்றாண்டுகால தோல்வியின் உச்சத்தை பறைசாற்றி நிற்கின்றது. இதனை “முள்ளிவாய்க்கால் – 2” என அழைக்கலாம். தமிழ் மக்கள் முன் எப்போதும் கண்டிராத பாரிய இராணுவ தோல்வியாக 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அமைந்தது. அது நிகழ்ந்து 11 ஆண்டுகளின் பின்பு , அந்த இராணுவ தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாரிய அரசியல் தோல்வியாக 2020ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் காட்சி அளிக்கிறது. அளவாற் சிறிய தமிழினம் மேலும் மேலும் சிறிதுசிறிதாயாத் துண்டாடப்படுகிறது. ஆனால் அளவாற் பெரிய சி…

  9. இலங்கையின் புதிய வெளியுறவுக் கொள்கை; சீனாவை சார தயாராகிறதா.? இலங்கையின் வெளியுறவுக கொள்கை தனித்துவமான பக்கத்தினை நோக்கி செயல்பட ஆரம்பித்துள்ளது என்பதை கடந்த வாரங்களில் இதே பகுதியில் தேடியுள்ளோம். இவ்வாரம் அதன் இன்னோர் பக்கத்தினையும் அதனால் ஏற்படவுள்ள அரசியல் களத்தையும் நோக்குவது பொருத்தமானதாக அமையும் என எதிர்பார்த்து இக்கட்டுரை தயார்செய்யப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்திற்கு பதிலாக வங்காளவிரிகுடாவிலுள்ள நிக்கேபார் தீவிலுள்ள (Great Nicobar Island) துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு இந்திய மத்தியரசு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இப்புதிய இடமாற்றத் துறைமுகத்தை (Transit Point) அமைப்பதற்கான மூலோபாய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத…

  10. மூன்றாவது குடியரசு அரசியல் யாப்பும் ராஜபக்சக்களின் ஒரேநாடு ஒரு சட்டமும் August 27, 2020 அ.நிக்ஸன் ஒரேநாடு ஒரு சட்டம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற முதல் அமர்வில் நிகழ்த்திய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையில் கூறியுள்ளமை ஆச்சரியப்படக் கூடியதல்ல. ஏனெனில் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து இறைமையும் தன்னாதிக்கமும் உள்ள நாடாக மாறியபோதே இலங்கை ஒற்றையாட்சி அரசு நிறுவப்பட்டுள்ளது. 1972ஆம் உருவாக்கப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பு ஒரே நாடு ஒரு சட்டம் என்பதையே மறைமுகமாகவும் நேரடியாகவும் பிரகடணப்படுத்தியது. சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் முன்னணி அரசாங்கம் கொண்டுவந்த முதலாம் குடியரச…

  11. அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா? இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது பலராலும் வலியுறுத்தப்படுகின்ற விசயம்தான். ஆனால் அது ‘புதிதாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் நிறைவேறாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது இருப்பிற்கும் ஆட்சிக்கும் உகந்த வகையில் அரசியலமைப்பை திருத்தி வருகின்றன. ஆனாலும் பௌத்த சிங்கள பேரினவாத கருத்துருவாக்கம் மாத்திரம் இலங்கை அரசியலமைப்பில் எப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களுக்கான சமத்துவ உரிமையும் மறுக்கப்பட்டே வருகின்றது. அரசியலமைப்பு என்பது உண்மையில் ஆட்சிக்கான ஒரு சட்டமாகவும் எழுத்து ஆவணமாகவும் கருதப்படுகின்றது. உலகில் தான்தோன்றித் தனமான ஆட்சிகள் …

    • 0 replies
    • 418 views
  12. ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்க வேண்டும்?

    • 0 replies
    • 406 views
  13. தமிழ்த் தலைமைகள் இந்தியத் தலையீட்டை கோர வேண்டிய தருணம் - யதீந்திரா தமிழர் அரசியல் மிகவும் தீர்க்கமானதொரு கட்டத்திற்குள் பிரவேசத்திருக்கின்றது. 1977இல், ஜே.ஆர். ஐயவர்த்தன பெரும்பாண்மை பலத்துடன் ஆட்சியமைத்த போது எவ்வாறானதொரு நிலைமையிருந்ததோ அவ்வாறானதொரு நிலைமையே தற்போதும் காணப்படுகின்றது. 77இல் வெற்றிபெற்ற ஜே.ஆர் தனது அரசியல் இருப்பையும், ஜக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தையும் கேள்விகளுக்கு அப்பாற்றபட்டவகையில் உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை முற்றிலும் புறம்தள்ளி, சிங்கள பெரும்பாண்மைவாத அரசியல் யாப்பொன்றை கொண்டுவந்தார். அவ்வாறானதொரு நிலைமை மீளவும் ஏற்படுவதற்கானதொரு சூழல் தென்னிலங்கை அரசியலில் காணப்படுகின்றது. இதற்கான ஒத்திகையாகவே …

  14. அ.நிக்ஸன் மூத்த பத்திரிகையாளர் (இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர். ) இலங்கையில் பண்டாரநாயகாவின் தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவுகளையும் முப்பது வருடப் போரையும் இறுதியாக 2009இல் முள்ளிவாய்க்கால் அவலங்களையும் எதிர்கொண்ட தமிழ் மக்களுக்குக் கோட்டாபயவின் ஒரேநாடு ஒரு சட்டம் என்ற வாசகம் அச்சத்தை ஏற்படுத்துமென்றில்லை. ஆனால் இந்த விவகாரத்தை வடக்குக் கிழக்கு, மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்? ஒரேநாடு ஒரு சட்டம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற முதல் அமர்வில் நிகழ…

  15. அரசமைப்பில் மக்கள் மய்யத் ‘திருத்தம்’ அவசியம் மொஹமட் பாதுஷா / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:00 அரசமைப்பில் இன்னுமொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில், அரசாங்கம் துரிதகதியில் களமிறங்கி இருக்கின்றது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி நிறுவப்பட்டு, நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறுவதற்கு முன்னரே, 19ஆவது திருத்தத்தை நீக்கும் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திருத்தச் சட்டமூலம், அடுத்த மாதம் சபைக்கு வரும் என எதிர்பார்க்கப…

    • 0 replies
    • 472 views
  16. மக்களுக்குச் சேவை செய்ய இத்தனை சண்டைகளா...? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:22 இம்மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சில சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகள், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிட்டன. ஐக்கிய மக்கள் சக்திக்கு தேசியபட்டியல் மூலம் 7 ஆசனங்கள் கிடைத்த போதிலும், அச்சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு, அவற்றில் ஓர் ஆசனமேனும் கொடுக்கப்படவில்லை. அக்கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போ…

    • 0 replies
    • 386 views
  17. தேர்தல் கொள்கை விளக்க உரை 1988- அமிர்

    • 0 replies
    • 528 views
  18. மாற்று அணியின் முன்னாலுள்ள பணி – நிலாந்தன்… August 23, 2020 இம்முறை தமிழ் மக்கள் கூட்டமைப்பின் ஏகபோகத்தை நிராகரித்து இரண்டு மாற்று அணிகளுக்கு மூன்று இடங்களை வழங்கியிருக்கிறார்கள். கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழ் அரசியலில் கூட்டமைப்பு ஏக பிரதிநிதிகளாக வீற்றிருந்தது. கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றவர்கள் வெல்ல முடியாது என்றும் மார் தட்டியது. ஒரு தும்புத்தடியை மக்கள் முன்வைத்து அதற்கு வாக்களியுங்கள் என்று கேட்டாலும் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று இறுமாப்போடு இருந்தது. ஆனால் அந்த இறுமாப்பு இந்த முறை சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. மாற்று அணியை சேர்ந்த மூவர் இம்முறை நாடாளுமன்றத்துக்கு செல்கின்றார்கள்.மாற்று அணியை பொறுத்தவரை இது வெற்றியின் தொடக்கம்.…

    • 5 replies
    • 1.2k views
  19. ‘கஜேந்திரன்களின்’ எதேச்சதிகாரம்; முட்டுச்சந்துக்குள் முன்னணி புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஓகஸ்ட் 23 “நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி” இப்படி ஆரம்பிக்கும் நாட்டார் பாடலொன்று தமிழில் மிகவும் பிரபலமானது. கடுவெளிச் சித்தர் எழுதியது. “...நீ விரும்பி, காத்திருந்து பெற்ற ஒரு விடயத்தை, தவறான வகையில் பயன்படுத்தி, வீணாக்கிக் கொள்கிறாய்...” என்பதுதான் இந்தப் பாடலின் எளிமையான பொருள். இந்தப் பாடல், யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ் அரசியல் சூழலுக்கு எப்போதுமே பொருந்தும். மக்கள் ஆணையைப் பெற்ற தரப்புகளாக, தமிழ்த் தேசிய அரசியலில் மேலெழுந்…

    • 10 replies
    • 1.1k views
  20. பன்மைத்தேசியமும் இலங்கையும் என்.கே. அஷோக்பரன் / 2020 ஓகஸ்ட் 24 புதிய நாடாளுமன்றத்தில், தமிழ்ப் பிரதிநிதிகளின் ஆரம்பமே பரபரப்பாக அமைந்திருந்தது. சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மொழியை இலங்கையின் சுதேச மொழி என்று விளித்தது, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழர்களின் நாடாளுமன்ற அரசியல் போக்கில், இது கொஞ்சம் மாறுபட்ட நிலைதான். இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, கடந்த ஒரு தசாப்த காலமளவில் இதுபோன்ற, “விரோதப்போக்குடைய பேச்சு” (antogonising speech) என்று, சிலர் விளிக்கக்கூடிய, பேச்சுகளைத் தவிர்த்திருந்தனர். ஏறத்தாழ 2,500 வருடங்கள் பழைமையான, இலங்கைத் தீவிலும் பல புலவர்களைச் சங்ககாலத்திலேயே கொண்டிருந்த ஒரு மொழ…

  21. பின்லாந்தின் கதை.. பின்லாந்து மீது என் கவனம் முதலில் ஈர்க்கப் பட்டது 90 களில் ஈழத்தமிழ் எழுத்தாளரான உதயணன் அவர்களால் பின்லாந்தின் கலேவலா என்ற காவியம் தமிழுக்கு முதன் முதலாக மொழி பெயர்க்கப் பட்ட செய்தியைப் பார்த்த போது தான். சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே, இரு பெரும் குண்டர்களின் நடுவே நெருக்குவாரப் பட்டு பஸ் சீட்டில் உட்கார்ந்திருக்கும் பயணி போல இருக்கும் ஒரு ஸ்கண்டினேவிய தேசமாக பின்லாந்து இருக்கிறது. மேற்கில் சுவீடன், மற்றும் பொத்னியா வளைகுடா வடக்கில் கொஞ்சம் நோர்வேயின் நிலப்பகுதியோடு பரன்ற்ஸ் கடல் பகுதி கிழக்கில் இராட்சத ரஷ்யா, தெற்கில் பால்ரிக் கடல் என்று உலக வரலாற்றில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசத்தில் இருக்கும் பின்லாந்தின் கதை தனி…

    • 8 replies
    • 1.4k views
  22. ஜனநாயகம் குறித்த வினாக்களும் தேசிய இனப்பிரச்சினையின் எதிர்காலமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஓகஸ்ட் 23 தமிழ்த் தேசிய அரசியலின் இயங்கு திசைகள் குறித்த கேள்விகள், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி வெற்றிபெற்ற கட்சிகளின் அதன் பின்னரான நடத்தை என்பன, இந்தக் கேள்விகளின் நியாயத்தை அதிகரித்துள்ளன. இந்த வினாக்கள், சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியைத் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. தமிழ்த் தேசிய அரசியல் மரபில், கோட்பாட்டுக்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான தொடர்பும், அதன் மீதான கவனமும் சிக்கலுக்கு உரியனவாகவே இருந்து வந்துள்ளன. இப்பாரம்பரிய…

  23. இன ரீதியான அரசியலைக் கைவிட்டு, தேசிய அரசியலின் பக்கம் தமிழ் மக்கள் திரும்புகிறார்களா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஓகஸ்ட் 23 கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் பெற்ற ஆசன எண்ணிக்கையைப் பற்றியும் அது எதைக் காட்டுகிறது, அதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பவற்றைப் பற்றி, ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில் பிரதானமாக, தமிழ்க் கட்சிகளின் பிரதான கூட்டணியாகக் கருதப்பட்டு வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைமையைப் பற்றியே, பிரதானமாக ஆராயப்பட்டு இருந்தன. 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 16 ஆசனங்களைக் கூட்டமைப்பு பெற்றிருந்தது. இம்முறை அந்த எண்ணிக்கை, 10 ஆகக் குறைந்துள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.