அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
கூட்டமைப்பு – மகிந்த சந்திப்பு பின்னணி என்ன? - யதீந்திரா மகிந்த ராஜபக்சவுடனான எந்தவொரு சந்திப்பும் இன்றைய நிலையில் உத்தியோகபூர்வமானதல்ல. பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில், மகிந்த ராஜபக்ச எந்தவொரு விடயத்திலும் முடிவுகள் எடுக்கும் அதிகாரமுள்ள ஒருவருமல்ல. ஆனால் தென்னிலங்கை அரசியலை பொறுத்தவரையில் அவர் ஒரு அதிகார மையம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே, அதனை சமாளிக்கும் நோக்கில் மகிந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்திருந்தார். இந்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சிகளான ஜக்கிய தேசியக் கட்சி மற்றும் சஜித்பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தி ஆகியவை நிராகரித்திருந்த நிலைய…
-
- 0 replies
- 449 views
-
-
தமிழர்க்கெதிரான இறுதிப்போரில் தமிழகத் தலைவர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருந்ததாக சிவ்ஷங்கர் மேனன் தனது புத்தகத்தில் கூறுகிறார்? அந்தோணி தேவசகாயம், கல்வி ஆராய்ச்சி-இல் அரசியல்த்துறை மாணவன் (2002-தற்போது) 16ம.நே. முன்பு அன்று புதுப்பிக்கப்பட்டது சிவ்ஷங்கர் மேனன் - ஈழத்தமிழர்களால் மறக்கமுடியாத, அவர்களின் சரித்திரத்தில் பதிந்துவிட்ட பெயர். லட்சக்கணக்கான அப்பாவிகளின் படுகொலைகளுக்கும், தமிழரின் தாயகத்தில் முற்றான சிங்கள ஆக்கிரமிப்பிற்கும், அவர்களின் தாயக சுதந்திர விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடக் காரணமான இரு மலையாளிகளில் ஒருவரது பெயர். …
-
- 0 replies
- 612 views
-
-
- ஒரு முஸ்லிம் நோக்கு நிலை - 01- பௌஸர் மஹ்ரூப்- இந்தப் பதிவின் தொடக்கத்தில் முன்கூட்டியே ஒரு விடயத்தினை தெரிவித்துவிட விரும்புகிறேன். அது தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கானது. திரு - சுமந்திரன் பற்றிய எனது இக்கருத்துகள் சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்களிடத்தில் நீண்ட காலத்தின் பின்பு , அதிக கவனமும் தோழமை உணர்வும் பெற்றுவரும் ஒரு தமிழ்த் தலைவரான சுமந்திரன் தொடர்பான முஸ்லிம் அகத்தின் மனப்பதிவுகள் பற்றியதே. தமிழர் அரசியலில் அவரது ஏற்பு மறுப்புக் குறித்து இப்போது நான் இங்கு பேசுவது எனது நோக்கம் இல்லை. அதனை நான் எழுதுவதும் பொருத்தமானதில்லை. அண்மைக்கால இலங்கையின் முஸ்லிம்கள் மீதான நெருக்கடிகளின் போது , தமது சொந்த அரசியல் தலைவர்களுக்கு வெளியில் அதிகம் விதந்து நட்பு…
-
- 1 reply
- 485 views
-
-
இலங்கைப் பொதுத் தேர்தல் : வரும்……..ஆனால் வராது “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு “ நற்கருத்துக்களைச் சொல்லியதில் புத்தபிரானுக்கும் திருவள்ளுவருக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. வெசாக் திருநாளன்று நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தம்மபதத்திலுள்ள ஒரு வசனத்தை மேற்கோள்காட்டியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. ``ஒரு செயலைச் செய்த பிறகு, அது தவறு என்று நீங்கள் உணர்ந்து கண்ணீர் விடுவதைக் காட்டிலும் அதைச் செய்யாமல் விடுவதே நன்று அதேவேளை ஒரு செயலைச் செய்த பிறகு அது பலனளித்து அதில் தவறில்லை என்று நீங்கள் உணர்ந்து மனமகிழ்ந்தால் அதுவே சிறந்த்து`` என்று கூறுகிறது பௌத்தர்களின் புனித நூலான தம்மபதத்திலுள்ள அந்த வசனம். இலங்கையில் பா…
-
- 0 replies
- 775 views
-
-
மகிந்த ராஜபக்ஷ அழைத்த கூட்டத்திற்கு கூட்டமைப்பு ஏன் போனது? உலகிலேயே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சட்டசபை இன்றி கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற – அந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை வழங்குகின்ற ஒரே அரசாங்கம் இலங்கை அரசாங்கம் தான்…” என்ற தொனிப்பட கரு ஜயசூரிய அண்மையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இலங்கைத் தீவில் இப்பொழுது நாடாளுமன்றம் இல்லை. மாகாணசபைகள் இல்லை. இருப்பதெல்லாம் உள்ளூராட்சி சபைகள் தான். ஆனால் அவற்றுக்கு கோவிட்- 19 இற்குக் கீழான புதிய நிலைமைகளை கையாள்வதற்கு வேண்டிய அதிகாரங்கள் இல்லை. குறைந்தபட்சம் ஒரு அவசரகால நடவடிக்கையாக நிவாரண பொறிமுறை ஒன்றை உருவாக்க கூட அதிகாரம் இல்லை. நாட்டில் நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி உண்டு. அவர…
-
- 1 reply
- 477 views
-
-
புத்தரின் தர்மகோட்ப்பாட்டை நிலைநிறுத்த புனையப்பட்ட கதைகளே இனவழிப்புக்கு வித்திட்டுள்ளது என தொல்லியல் துறை மாணவன் மயூரன் (MA) தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அக்கூட்டுரையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வரலாற்றின் சில நல்ல நிகழ்வுகள் பாதகமான விளைவுகளைத் தருவதுமுண்டு வரலாற்றுப்போக்கில் எழுகின்ற எழுச்சிகள் என்பது அவற்றின் நீண்டகால விளைவுகளினாலேயே எடைபோடப்பட வேண்டும். அந்தவகையில் இலங்கையின் பௌத்தம் பஞ்சசீலக் கொள்கையின்அடிப்படையில் கட்டி வளர்க்க முற்பட்டாலும் புத்தரின் தர்மக்கோட்பாடை நிலைநிறுத்த புனையப்பட்ட கற்பனைக் கதைகள் பின்னாளில் இனவழிப்பையும் பேரினவாதத்தைத் தூண்டிவளர்க்க உதவிற்று என்ற உண்மை மிகக் கசப்பானதே. அந்தவகையில் பௌத்த தர்மத்தை நிலைநிறு…
-
- 2 replies
- 1.1k views
-
-
கொரோனாக் காலத்தில் வன்முறை கொரோனாத் தொற்றினை அடுத்து நாட்டிலே பல்வேறு விதமான வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கி வருகின்றன. ஊரடங்கின் போது உணவுப் பொருட்களை வாங்கவும், குடி தண்ணீர் அள்ளவும் சென்ற, தமது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முற்பட்டவர்களும், பொலிஸாரின் வன்முறைக்கு இலக்காகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விமர்சனக் கருத்துக்களை முன்வைப்போர் அச்சுறுத்தப்படுகிறார்கள். அல்லது அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் திட்டமிட்ட முறையிலே பரப்பப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களிலே ஒரு சிலர் தாம் எதிர்கொண்ட வன்முறை குறித்து மனித உரிமை அமைப்புக்களுக்கு முறையிட்டுள்ளதாகவும் சில செய்தி அறிக்கைகளிலே சொல்லப்பட்டுள்ளது. மறுபுறத்தில் பெண்கள், சிறுவர் மீதான வீட்டு வன்முறையும், ச…
-
- 0 replies
- 717 views
-
-
ஈழத்தில் மனித உரிமைகள் ஜனவரி 2020 - தீபச்செல்வன் · கட்டுரை அண்மையில் இலங்கை சனாதிபதியாக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்ச, பெரும்பான்மையின மக்கள் கோபப்படும்வகையில் சிறுபான்மையினர் எதையும் கேட்கக்கூடாது என்றொரு புதிய தத்துவத்தை திருவாய் மலர்ந்துள்ளார். இன அழிப்பு போருக்கு மனிதாபிமானப் போர் என்று பெயர் சூட்டியவர்கள் இப்படி எல்லாம் பேசுவது ஆச்சரியமானதல்ல. இந்த உலகப் பந்தில் வரலாற்றுரீதியாக பண்பாட்டுரீதியாக ஒரு தனித்துவமான இனமாக இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஈழத் தமிழ் மக்களின் உரிமைகள், சிங்கள அரசாலும் அனைத்துலக சமூகத்தினாலும் எப்படி நோக்கப்படுகின்றன? ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே அடிப்படை உரிம…
-
- 0 replies
- 943 views
-
-
கிம் வழியில் செல்லுமா இலங்கை? -கே. சஞ்சயன் இலங்கை அரசியலில், ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து, சிறப்புச் செயலணியின் விசேட தூதுவராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு வரை ராஜபக்ஷ குடும்பம் எந்தளவுக்கு அதிகாரத்தில் இருந்ததோ, அதைவிடக் கூடுதல் ஆதிக்கத்தைப் பெற்றிருக்கிறது. இப்போது, ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சராக சமல் ராஜபக்ஷவும் பதவிவகிக்கையில் இவர்களுடன் பசில் ராஜபக்ஷவும் இணைந்திருக்கிறார். இதையடுத்து, குடும்ப ஆதிக்கம் தலைதூக்கியிருகிறது என்ற பொதுவான குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ளாமல், ஆட்சியை வலுப்படுத்துவதில் …
-
- 0 replies
- 613 views
-
-
கொரோனாவுக்கும் தேர்தலுக்கும் இடையில் அவதிப்படும் அரசாங்கம் -மொஹமட் பாதுஷா இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்ற நம்பிக்கையை, மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே, இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த அரசாங்கம் முயன்று கொண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் கூட, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரான புள்ளிவிவரங்கள், மக்கள் ஆறுதலடையும் விதத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. அதுபோலவே, தற்போதிருக்கின்ற களச் சூழலைப் பயன்படுத்தி, ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதன் மூலம், சட்டத் தேவைப்பாட்டை நிவர்த்தி செய்வது மட்டுமன்றி, ஆட்சியையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அரசாங்கம் எடுத்து வருகின்ற எத்தனங்கள், 'சாண் ஏற முழம் சறுக்கும்' நிலைமைகளையே அவதானிக்க முட…
-
- 0 replies
- 478 views
-
-
புதிய பனிப்போர் யுகத்திற்குள் பிரவேசிக்கும் தறுவாயில் உலகம் இரண்டாவது உலகப் போரின் முடிவுக்கு பிறகு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக முகாமும் சோவியத் யூனியன் தலைமையிலான சோசலிச முகாமும் உலகில் அவற்றின் செல்வாக்குப் பிராந்தியங்களை அதிகரித்துக்கொள்வதற்காக நேரடியாக போரில் ஈடுபடாமல் உலகின் பல பிராந்தியங்களிலும் நிலவிய நெருக்கடிகளில் பின்னணியில் இருந்து செயற்பட்டு மறைமுகமாக நடத்திய ஒரு போரே பனிப்போர் (Cold War) என்று அழைக்கப்பட்டது. சுமார் அரை நூற்றாண்டு காலமாக நீடித்த அந்தப் போர் உலக நாடுகளை பெரும்பாலும் ஏதாவது ஒரு முகாமுடன் இணைந்ததாக வைத்திருந்தது. சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டில் அந்த பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு அண்மைக்காலம் உலகின் ஒரே வல்லரசாக …
-
- 0 replies
- 776 views
-
-
பிரித்தானியாவில் கொரோனா போரில் தமிழ் மருத்துவத் துறையினரின் பங்கு Bharati May 7, 2020 பிரித்தானியாவில் கொரோனா போரில் தமிழ் மருத்துவத் துறையினரின் பங்கு2020-05-07T20:33:48+00:00Breaking news, அரசியல் களம் லதன் சுந்திரலிங்கம் நேர்காணல் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி மக்களை அதிகளவுக்குப் பலியெடுத்துவரும் நாடுகளில் பிரித்தானியா முக்கியமானது. பிரித்தானியாவில் தற்போதைய நிலையில் கொரோனா மரணம் 30 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. 20 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் தொகை தினசரி அதிகரித்துச் செல்லும் நிலையில், மருத்துவத் துறையினர் நோயாளிகளைப் பராமரித்துக் – குணமாக்குவதில் இரவு பகலா…
-
- 0 replies
- 488 views
-
-
இலங்கை அரசும் சரி.. தமிழக அரசும் சரி.. மதுவினால்.. கொரோனா தொற்று அதிகரிக்கக் கூடிய ஆபத்தான சூழல் இருந்தும்.. மதுக்கடைகளை திறப்பது ஏன்..?!
-
- 0 replies
- 571 views
-
-
கொரோனா வைரஸ் மீது போர்தொடுத்தல் -ஏகலைவா சிவில் நிர்வாகத்துக்கும் இராணுவ நிர்வாகத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் பாரியன. போர்க்கால அடிப்படையில் செயற்படுவதற்கும் போர் போன்று செயற்படுவதற்கும் இடையிலான வேறுபாடுகள் முக்கியமானவை. ஆனால், இவை குறித்துக் கவனம் செலுத்தும் மனநிலையில், இலங்கை இல்லை என்பதை, அண்மைய நிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கை மிகுந்த நெருக்கடியான காலப்பகுதியிலும் சிவில் நிர்வாகத்தால் ஆளப்பட்டது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் அரசாங்கத்தின் சிவில் நிர்வாகம் இயங்கியது. அது, நாடு முழுவதும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது என்பதையும் முழு நிலப்பரப்பின் இறைமையும் இலங்கை அரசிடமே உள்ளது என்பதையும் சான்றுப்படுத்துவதற்கு …
-
- 0 replies
- 760 views
-
-
கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: மீண்டும் தொடங்கும் மிடுக்கு -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நம்பிக்கையீனத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலான ஊசலாடத்தில், காலங்கள் நகர்கின்றன. நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு நகர்வது குறித்த ஓர் உரையாடலைக் கடந்த காலத்தின் மீதான குறுக்குவெட்டுப் பார்வையைத் தவிர்த்து நிகழ்த்திட இயலாது. எதிர்காலம் குறித்த அச்சங்களும் நிச்சயமின்மைகளும் நிச்சயமாகிப் போன பொழுதொன்றில், நம்பிக்கை வைப்பதைத் தவிர வழி வேறில்லை. ஏன் இவ்வாறு சொல்கிறேன், இதற்கான காரணங்கள் என்ன என்று, நீங்கள் கேட்பது புரிகிறது. வாருங்கள், நிகழ்காலத்திலிருந்து எதிர்காலம் நோக்கிப் பயணிப்போம்; நம்பிக்கையோடு! கொரோனா வைரஸ் என்று அறியப்பட்ட கொவிட்-19 நோய்த்த…
-
- 0 replies
- 574 views
-
-
ராஜபக்ஷகளின் தேர்தலுக்கான அவசரம்; ஆபத்தின் வாசலில் மக்கள் -புருஜோத்தமன் தங்கமயில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல், எதிர்பா -ர்க்கப்பட்ட அளவையும் தாண்டி நீடித்து வரும் நிலையில், ராஜபக்ஷக்களின் பொதுத் தேர்தலுக்கான அவசரம், நாட்டைப் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. மக்களின் உயிர்ப் பாதுகாப்பு, வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடங்கி, அரசமைப்பு சிக்கல்கள் வரை, நாளுக்கு நாள் மேலெழுந்து வருகின்றன. இலகுவாகத் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளைக்கூட, ராஜபக்ஷக்கள் தேர்தலை இலக்கு வைத்துக் கையாள முனைவது, பிரச்சினைகளின் அளவை அதிகரிக்கவே செய்திருக்கின்றது. அது, கொள்ளை நோயைக் காட்டிலும் நீண்டகால நோக்கில், பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகளைக் காண…
-
- 0 replies
- 579 views
-
-
நாடாளுமன்ற மீட்பு மாயையும் பலியாகும் தமிழரும் Bharati May 7, 2020 நாடாளுமன்ற மீட்பு மாயையும் பலியாகும் தமிழரும்2020-05-07T10:06:19+00:00Breaking news, அரசியல் களம் இந்திரன் ரவீந்திரன் 2018 நவம்பர் 09 ஆம் திகதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைப் பாதுகாத்து, பதவி இறக்கப்பட்ட ரணிலின் பிரதமர் பதவியைப் பாதுகாத்து அரசியல் யாப்பையும் ஜனநாயகத்தையும் மீட்டதாகக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் திரு.சுமந்திரனும் திரு.சம்பந்தனின் எதிர்க் கட்சித் தலைவர் பதவியைப் பறிகொடுத்ததில் போய் முடிந்தமைதான் உலகம் அறிந்த அவர்களின் சாணக்கியம். இது ரணிலைக் காப்பாற்றப் போய் ஆப்பிழுத்த குரங்கின் கதையாய் சம்பந்தரின் பதவி பறிபோனதில் முடிந்தது. இலங்கை நாடாளுமன…
-
- 0 replies
- 567 views
-
-
உள்ளதை உள்ளபடி சொன்ன பிரதமர் Bharati May 6, 2020 உள்ளதை உள்ளபடி சொன்ன பிரதமர்2020-05-06T06:27:33+00:00Breaking news, அரசியல் களம் ‘கனடியர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்டகாலமெடுக்கும்’ என்று உண்மை நிலை எதையும் மறைக்காது, சூழ்நிலையின் யதார்த்தத்தை ஊடகவியலாளர்களுக்கு எடுத்துச் சொன்னார் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. ‘உலகெங்கும் பரவியிருக்கும் இந்தக் கொரோனா தொற்று நோய்பற்றி நாம் இதுவரை படித்த பாடங்களில் இருந்து எம்மால் இதை புரிந்து கொள்ள முடிகின்றது.’ சென்ற திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெறும் போலி வார்த்தைகளை எதையும் எடுத்து வீசாது, உண்மையான நிலவரத்தை எடுத்து விளங்கப்படுத்தியதைக் கனடியர்கள் பலரும் பாராட்டினார்கள். கொரோனா வைரஸின…
-
- 0 replies
- 817 views
-
-
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் நெருங்கிவரும் அரசியலமைப்பு நெருக்கடி “கொரோனா பொதுச்சுகாதார நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதியும் அவரது இராணுவமும் மருத்துவ ஆலோசகர்களும் இதுவரையில் நடைமுறைப்படுத்திய தந்திரோபாயத்தின் மீது விமர்சன அடிப்படையிலான ஒரு பார்வையை செலுத்தவேண்டிய நேரம் இது” பொதுச்சுகாதாரம், அரசியலமைப்பு, அரசியல் என்று இலங்கை முகங்கொடுக்கின்ற மும்முனை நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டு வருகின்றது.முன்னரங்கக் கடமையில் ஈடுபட்டிருந்த வெலிசறை மற்றும் சீதுவை முகாம்களைச் சேர்ந்த கடற்படை வீரர்களிலும் விசேட அதிரடிப்படை வீரர்களிலும் பலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.அதேவேளை, கொழும்பு மற்றும் கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் ப…
-
- 1 reply
- 557 views
-
-
கொரோனா காட்டுகின்ற ஓட்டைகள் பூமிப்பந்து என்றும்போல உருண்டுகொண்டிருக்கின்றது. சூரியன் காலையில் உதிக்கின்றது. மாலையில் மறைகின்றது. இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. கடல் அலைகள் உல்லாசமாக கரையில் மோதிவிட்டுக் கடலுக்குள் ஓடுகின்றன. ஆனால் இருபத்தியோராம் நூற்றாண்டின் அதிசயமாக மனிதவர்க்கம் முடக்கப்பட்டிருக்கின்றது. மனித வர்க்கத்தின் இயக்கத்தை கண்ணுக்குத்தெரியாத நுண்கிருமி பெருமளவில் கட்டிப் போட்டிருக்கின்றது. ஒன்றன்பின் ஒன்றாக நாடுகள் எல்லைகளை மூடின. நாடுகளுக்கு உள்ளே குறுநிலப்பரப்புக்களும் எல்லைகளை மூடிக்கொண்டன. நாலு சுவர்களுக்குள் மனிதர்கள் முடக்கப்பட்டனர். அதனால் அத்தியாவசியம் தவிர்ந்த நுகர்வுத் தேவைகள் முடங்கின. வர்த்தகப் பரிவர்த்தனைகள் தடைப்பட்டன. …
-
- 0 replies
- 683 views
-
-
யுத்த காலத்தில் எமது மக்களின் வாழ்க்கை தன்னிறைவுக்குட்பட்டதாகவே இருந்தது: சி.வி.விக்கினேஸ்வரன் Bharati May 4, 2020 யுத்த காலத்தில் எமது மக்களின் வாழ்க்கை தன்னிறைவுக்குட்பட்டதாகவே இருந்தது: சி.வி.விக்கினேஸ்வரன்2020-05-04T23:08:30+00:00Breaking news, அரசியல் களம் “30 வருடங்கள் யுத்தம் நடைபெற்றபோது, எமது மக்களின் வாழ்க்கை தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவுக்கு உட்டபட்டதாகவே இருந்தது. இது வரலாற்று உண்மை. எமது மக்கள் மத்தியில் இருந்துதான் அத்தகைய செயல்வீரர்கள் உருவாகி இருந்தார்கள். ஆனால், யுத்தம் முடிவடைந்து கடந்த 10 வருடங்களுக்குள் எமக்குத் தெளிவு இல்லாமல் போய்விட்டது” என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். சென…
-
- 0 replies
- 480 views
-
-
இராணுவத்திற்கு கொரோனா: வடகிழக்கிற்கு பேராபத்து? – தீபச்செல்வன். எதற்கெடுத்தாலும் சிங்களவர்கள் என்ற மனநிலையும் எதற்கெடுத்தாலும் இராணுவம்தான் என்ற மனநிலையும் இலங்கையின் மகாவம்ச மனநிலையின் வெளிப்பாடு ஆகும். இதனாலும் ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராட நேரிட்டது. இதனாலும் ஈழத் தமிழ் மக்கள் தனிநாடு கோரிய போராட்டத்தை தொடங்கினர். இப்போது ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்ச, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் போதும் இராணுவத்தை பயன்படுத்தி வருகின்றமை பலரதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன் விளைவுகள் தற்போது அறுவடையாகத் தொடங்கியுள்ளன. தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, தேசிய கொரோனா தடுப்பு நிலையத்தின் தலைவராக இராணுவத் தளபதி சவேந்திரசில்வாவை நியமித்திருந்தார். அத்துடன் ம…
-
- 0 replies
- 570 views
-
-
தேர்தல் நெருக்கடி ? - யதீந்திரா கொரோனா நெருக்கடியோடு சேர்த்து, இப்போது தேர்தல் நெருக்கடியும் அதிகரித்து வருகின்றது. பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. ஆரம்பத்தில் ஒவ்வொரு கட்சிகளை சேர்ந்தவர்களும், இது தொடர்ப்பில் அவ்வப்போது பேசி வந்தனர். தற்போது எதிரணியை சேர்ந்த அனைத்து கட்சிகளும் கூட்டாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. ஆனால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தரப்பினர் அதனை உறுதியாக நிராகரித்து வருகின்றனர். எக்காரணம் கொண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதில்லை என்னும் நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இதற்கிடையில், புதிய முறையில் தேர்தலை நடத்தப் போவதாக கோட்டபாய தெரிவித்திருக்கின்றார். ஆரம்பத்தில் தேர்தல் தொடர்பான இறுத…
-
- 0 replies
- 382 views
-
-
நாட்டு மக்களுக்கு உணவை தராமல் வெற்று அறிவுரைகளை மட்டுமே தரும் மோடி .! கடந்த 26ம் தேதி மான்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி “கொரோனா வைரசுக்கு எதிரான போரை மக்கள் ஏற்று நடத்தினால் மட்டுமே இந்த நாடு பெருந்தொற்று நோயிலிருந்து மீண்டு வர முடியும்” என்று கூறினார். அது உண்மைதான். ஆனால் பட்டினியில் கிடக்கும் ஒருவனிடம் எதையுமே தராமல் நிராயுதபாணியாய் சென்று போர் புரியுமாறு நிர்பந்திப்பது போர் தர்மத்திற்கே எதிரானதாகும். மக்கள் மோடியின் வாயில் இருந்து ஏதாவது நிவாரணம் தொடர்பான அறிவிப்பு வருமா என்று ஒவ்வொரு முறையும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். ஆனால் மோடியோ எந்தக் கொடும் சூழ்நிலையிலும் தன்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் வெறும் அறிவுரைக…
-
- 1 reply
- 630 views
-
-
கொரோனாவும் ஊடக சுதந்திர தினமும் Bharati May 3, 2020 கொரோனாவும் ஊடக சுதந்திர தினமும்2020-05-03T08:48:22+00:00Breaking news, அரசியல் களம் கிருஷ்ணி கந்தசாமி இஃபாம் கொரோனா வைரஸ் தாக்கத்தில் கடந்த இரண்டு மாதங்களில் உலகளவில் டசின் கணக்கில் ஊடகவியலாளர்கள் இறந்துள்ளனர் என்று உலக பத்திரிகை சுதந்திர அமைப்பு கூறியதுள்ளது. ஊடகத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தொற்றுநோயை மறைப்பதற்கு சரியான பாதுகாப்பு இல்லை என்றும் அவ்வமைப்பு எச்சரித்துள்ளது. மார்ச் 1 ஆம் திகதி முதல், 23 நாடுகளில் 55 ஊடக ஊழியர்கள் இவ் வைரஸால் இறந்ததை பதிவு செய்துள்ளதாக இவ் அமைப்பு கூறியது, இருப்பினும் அவர்கள் அனைவரும் பணியில் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்…
-
- 2 replies
- 1.7k views
-