அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
மலையக மக்கள் செறிவாக வாழ்ந்து வரக்கூடிய நுவரெலியா மாவட்டத்தில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன. சுமார் ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இம்மாவட்டத்தில் வெற்றி பெற்றிருந்தார். இம்மாவட்டத்தின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது ஜன பெரமுன வேட்பாளருக்கு ஆதரவளித்திருந்தாலும் கூடுதலான சிங்கள வாக்குகளே அவருக்கு இம்மாவட்டத்தில் கிடைத்திருந்தன. முக்கியமாக பெருந்தோட்ட பகுதி வாழ் மக்கள் செறிவாக வாழ்ந்து வரக்கூடிய நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் சஜித் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 413 வாக்குகளை (66.37%) பெற்றிருந்தா…
-
- 0 replies
- 562 views
-
-
இலங்கையின் 7வது ஜனாதிபதியாக திரு. கோதாபயா ராஜபக்ஷ அவர்கள் தெரிவு செய்யப்பட்டது நாம் அனைவரும் நன்றாக அறிந்த ஒரு விடயம். இவர் கடந்த காலத்தில் அதாவது திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்க காலத்தில் பல முக்கிய பங்களிப்பினை வழங்கியதன் மூலம் பெரும்பாலான மக்களின் செல்வாக்கினை தன்னகத்தே கொண்டு ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்து வந்தார். இவர் கடந்த காலங்களில் ஒருமுறையேனும் தேர்தலில் போட்டியிடாமல் பல அதி உயர் பதவியில் அரச நிருவாகத்தில் கடமையாற்றி வந்திருந்தார். இவரின் கடந்த கால வெற்றி நோக்கிய திட்டத்தின் காரணமாக மக்கள் இவரை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்க பல அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தனர். அதுமாத்திரமல்லாது அவர் ஒரு பூரண இலங்கைப் பிரஜையா? இல்லையா? போன்ற பல எதிர் வாதங…
-
- 0 replies
- 593 views
-
-
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ள செய்தியும், அதன் விளைவுகளும்
-
- 0 replies
- 385 views
-
-
கோட்டாவின் வெற்றி - யதீந்திரா கோட்டபாய ராஜபக்சவின் வெற்றி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக தமிழ்ச் சூழலில் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து பலரும் மீளவில்லை. உண்மையில் கோட்;டபாயவின் வெற்றி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. அது தொடர்பான கணிப்புக்கள் ஏற்கனவே ஓரளவு பகிரங்கப்பட்டிருந்தது. ஆனாலும் தமிழ்ச் சூழலில் இது அதிகம் பேசப்படவில்லை. சஜித்பிரேமதாச வெற்றிபெறப் போவதான ஒரு தோற்றமே தமிழ் மக்களுக்கு காண்பிக்கப்பட்டது. அதனை நம்பியே தமிழ் மக்களும் அதிகமாக வாக்களிப்பில் கலந்துகொண்டு, சஜித்பிரேமதாசவை ஆதரித்தனர். ஒருவேளை சஜித்பிரேமதாசவின் வெற்றிவாய்ப்பு தொடர்பில் சந்தேகம் இருந்திருப்பின் தமிழர்கள் இந்தளவிற்கு வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள்.…
-
- 1 reply
- 1.5k views
-
-
பௌத்த பேரெழுச்சியான பிரபா இல்லாத அரசியல் வெற்றிடம்! பகலவன் சமத்துவச் சிந்தனைகளை இந்தியாவின் காமராஜர் பேசியதாகத் தெரியவில்லை. ஆனால் அவரது வாழ்வு அந்த நெறியில் தான் அமைந்திருந்தது. இலங்கையிலோ இதற்கு எதிர்மாறு. "ஒரு மொழியெனில் இரு நாடு; இரு மொழியெனில் ஒரு நாடு" என முழங்கித் தள்ளிய பிரபல இடது சாரி கொல்வின் ஆர்.டி சில்வாதான் தமிழர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கும் புதிய அரசியல் அமைப்பை 1972 ல் உருவாக்கினார். இன்னொரு இடதுசாரி( கம்யூனிஸ்ட்) சரத்முத்தெட்டுவே கம பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ஐ.தே.க உறுப்பினர்கள் (ஆளுங்கட் சி) குறுக்கிட்டனர். அப்போதைய பிரதமர் பிரேமதாச "அவரைப் பேசவிடுங்கள்; அவர் அண்மையில் ரஷியாவுக்கு சென்று வந்திருக்கிறார். அங்கே அவர்கள் அவர…
-
- 0 replies
- 1k views
-
-
இணக்கப்பாட்டின் அவசியம் Published on 2019-11-24 15:36:50 இலங்கை இன ரீதியாக இரு முனைகளில் கூர்மையடைந்திருக்கின்றது. இந்தக் கூர்மையின் வெளிப்பாடாகவே நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளது. அதில் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ சிங்கள மக்களின் ஏகபோக தலைவராகத் தலைநிமிர்த்தியுள்ளார். மஹிந்த ராஜபக் ஷவுக்கு அடுத்ததாக ராஜபக் ஷ குடும்பம் இந்தத் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி பதவியைத் தன்னுடைமையாக்கிக் கொண்டிருக்கின்றது. தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக அல்லாமல் மிக மிகப் பெருமளவில் சிங்கள பௌத்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவராக, தேசிய மட்டத்தில…
-
- 0 replies
- 651 views
-
-
வேட்பாளர் இருவருமே உண்மை பௌத்தர்கள், பேரினவாத சிங்களவர் என்ற அடிப்படையில் இவர்களிடம் காணப்பட்ட வேற்றுமைதான் என்ன? இவர்களுக்கு வாக்களித்த தமிழ்மக்கள் இழைத்த தவறுதான் என்ன? வரலாற்றுக் கால பௌத்த சிங்கள மன்னன் ஒருவன் மீண்டும் நாட்டை ஆளப் பிறந்துள்ளானா, என ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்ப்பதுபோல் மக்கள் பார்த்த ஒரு நிகழ்வாக நாட்டின் 7 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்ற கோத்தபாய ராஜபக் ஷவின் பதவிப் பிரமாண வைபவம் இடம்பெற்றிருந்தது. பழைய ராசதானியான அநுராதபுரத்தில் சிங்கள பௌத்த மன்னர்களின் வரலாறுகளை நினைவூட்டும் ருவன்வெலிசாயவுக்கு அருகில், புனித வெள்ளரசு மர நிழல் தெறிக்கும் மேற்படி புனித மண்ணில், பௌத்த குருமார் புடைசூழ வரலாற்று முக்கிய…
-
- 0 replies
- 408 views
-
-
கோத்தாபய வெற்றி பெற உதவிய தரப்புகள் – நிலாந்தன்… November 24, 2019 கோத்தாபய ராஜபக்ச புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் அப்படி ஒரு வெற்றியை பெறுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கடைசி கட்டத்தில் சஜித் பிரேமதாச மேற்கொண்ட பிரச்சார உத்திகள் காரணமாக இரண்டு தரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது என்று செய்திகள் வெளிவந்தன. எனினும் சிங்கள ஆசிரியர்கள் மத்தியில் வேலை செய்யும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரமுகர் ஒருவர் கோத்தபாயதான் வெற்றிபெறுவார் என்பதனை முன்கூட்டியே கூறியிருந்தார். அதுபோலவே சிங்கள மக்கள் மத்தியில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த முக்கியஸ்தர்களும் அவ்வாறு கூறியிருந்தார்கள். கிழக்…
-
- 0 replies
- 545 views
-
-
இந்திய வெளி விவகார அமைச்சின் இலங்கைப் பயணமும் தேசிய நல்லிணக்கமும்-பா.உதயன் External Affairs Minister conveyed to President Rajapaksa, India’s expectation that the Sri Lankan government will take forward the process of national reconciliation to arrive at a solution that meets the aspirations of the Tamil community for equality, justice, peace and dignity”. இலங்கையின் அரசியல் அதிகார மாற்றத்தின் பின் முதல் முதலாக இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கைக்கு விஷயம் செய்திருக்கிறார்.ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் ஈழ தமிழருக்கான தேசிய நல்லிணக்கம் சம்மந்தமாக பேசி இருக்கிறார்.ஈழத் தமிழர்கள் சம உரிமையுடனும் சமத்துவமாகவும் கண்ணியமாகவும் வாழ வழி ஏற்பட வேண்டும் என இலங்கை அரசிட…
-
- 0 replies
- 372 views
-
-
சிறுபான்மையினரின் வாக்குகளில்லாமல் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகியிருக்க முடியுமா என்று கட்டுரையாளர் சகாதேவராஜா தனது கட்டுரையின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தமது கட்டுரையில், இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித்தேர்தல் முடிந்து நாட்டின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகி பதவியேற்பும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தநிலையில் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்ற பாணியில் அவர் ஜனாதிபதியானது வெறும் பெரும்பான்மையின வாக்குகளால் மட்டும்தானா? என்ற வாதம் தலைதூக்கியுள்ளது. அதற்கு விடைகாணும் நோக்கில் ஓரளவாவது இக்கட்டுரை அமையலாம். பெரும்பான்மையின வாக்குகளால்தான் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகியுள்ளார் என்ற கருத்து சமகாலத்தில் பேசுபொருளாகவுள்…
-
- 0 replies
- 591 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதியுடனான மரியாதைச் சந்திப்பு- பின்னாலுள்ள இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல் இலங்கை தமது செற்கேட்டு நடக்க வேண்டுமென்ற அணுகுமுறையில் மீண்டும் இந்தியா இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொழும்பில் உள்ள அமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் சந்தித்து உரையாடியுள்ளனர். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி …
-
- 0 replies
- 1.1k views
-
-
தேர்தல் வெற்றியில் சிறுபான்மையினருக்கு பங்கில்லையா? மொஹமட் பாதுஷா / 2019 நவம்பர் 22 நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியைப் பெரும்பான்மையினச் சிங்கள மக்கள் கொண்டாடுகின்ற சூழலில், சஜித் பிரேமதாஸவுக்கு அதிகளவில் வாக்களித்த முஸ்லிம்களும் தமிழர்களும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதைப் போல, துக்கம் கொண்டாடுவதைக் காணக் கூடியதாக உள்ளது. இத்தருணத்தில், சிறுபான்மைச் சமூகங்கள், தம்மீது தாமே கழிவிரக்கம் கொண்டவர்களாக, காலத்தை வீணே கழிக்காமல், யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு, இதையும் கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது. உலகில் பிரபலமானதும் பலமொழிகளிலும் கூறப்படும் ‘இதுவும் கடந்துபோகும்’ என்ற முதுமொழிக்குப் பின்னால், நூற்றாண்டுகள் பழை…
-
- 0 replies
- 898 views
-
-
தோற்கடிக்கப்பட்ட புறக்கணிப்பு அரசியல் கே. சஞ்சயன் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் அரசியல் கட்சிகள் இருவேறு தரப்புகளின் பின்னால் நின்ற போதும், இந்தத் தேர்தலை அடியோடு புறக்கணிக்க வேண்டும் என்று, ஒற்றைக்காலில் நின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்தமுறையும் மூக்குடைபட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, பலமான பிரசாரங்களைக் கூட முன்னெடுத்திருந்த போதும், வடக்கு, கிழக்கில் அதற்கு யாருமே செவிசாய்க்கவில்லை என்பதே உண்மை. ராஜபக்ஷ ஆட்சியின் மீது, தமிழ் மக்கள் உச்சக்கட்ட வெறுப்பில் இருந்த 2015 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்ததை விடவும், வடக்கு, கிழக்கில் இந்தமுறை அதிகளவில் வாக்களிப்பு இடம்பெற்றிருக்கிறது. வடக்…
-
- 0 replies
- 471 views
-
-
மாற்றம் ஒன்றே தேவை -இலட்சுமணன் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்குரிய தேர்தல் முடிவுகள், இலங்கையின் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் எதிர்கால இனத்துவ அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு சிந்தனாவோட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, தமிழ் அரசியல் தலைமைகளினதும், அதன் எதிர் அரசியல் தலைமைகளினதும் மக்களதும் கருத்தோட்டங்களை மிகத் தெளிவாக வெளிக்காட்டி நிற்கிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், தமிழ் பேசும் இனம், ஓரணியில் நின்றும் சிங்களப் பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டிய ஜனாதிபதியாக, குறிப்பாக சிங்கள மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். இந்தத் தெரிவு என்பது, இலங்கை அரசியல் தலைமைகளுக்கும் சிறுபான்மை …
-
- 0 replies
- 701 views
-
-
இனவாதம் கட்டவிழும் பொழுதுகளில்... இனவாதம் மிகப்பயங்கரமான ஆயுதம். அதைக் கட்டமைப்பது சுலபம்; ஆனால், அதைக் கட்டுப்படுத்துவது கடினம். மனித மனம் போல, கட்டுக்கடங்காமல் அலைபாயும் தன்மை அதற்குண்டு. தேர்தலுக்குப் பிந்தைய இலங்கையை, எவ்வாறு அடையாளப்படுத்துவது என்ற வினாவுக்கான சரியான விடை, இனவாதம் கட்டவிழ்கிறது என்பதாகும். இந்தச் சவாலைப் புதிதாகத் தெரிவாகியுள்ள ஜனாதிபதியும் அரசாங்கமும் வெற்றிகரமாகக் கையாள வேண்டியுள்ளது. இலங்கை போன்ற பல்லின மக்களைக் கொண்ட நாட்டில், இனவாதம் கட்டவிழும் பொழுதுகள் ஆபத்தானவை. தேர்தல் பிரசாரங்களின் போது, ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்பட்ட இனவாதமும் சிங்களப் பௌத்த பெருந்தேசியவாத அகங்காரமும் அதன் பலனைத் தேர்தலில் அளித்துள்ளன என்பதை மற…
-
- 0 replies
- 463 views
-
-
அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கை ஜனநாயகக் குடியரசான நமது நாட்டை ஆளும் உரிமை தேர்தலின் மூலம் நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷவிடம் தேர்தல் மூலம் நாட்டு மக்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்து பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலும், மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கான எதிர்பார்ப்பும் உள்ளது. இவ்வாறுள்ள நிலையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் தெரிவாகியுள்ள ஜனாதிபதியின் எதிர்காலத் திட்டங்கள் எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பை நாட்டு மக்களிடம் குறிப்பாக சிறுபான்மை மக்களிடம் மட்டுமல்ல உலக அரங்கிலும் ஏற்படுத்தியுள்ளது என்பதை நோக்க முடிகின்றது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, தேசிய ப…
-
- 0 replies
- 456 views
-
-
டைம்ஸ் ஓவ் இந்தியா தமிழில் ரஜீபன் நந்தசேன கோத்தாபய ராஜபக்ச முழுமையான வெள்ளை ஆடையில் நவம்பர் 18 ம் திகதி அனுராபுரத்தில் உள்ள ருவன்வெலிசயவில் உள்ள பௌத்த தூபியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டவேளை வடக்குகிழக்கில் அச்சம் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்ற இடம்போன்று அந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்ட சிங்களவர்கள் மாத்திரம் செய்தியும் முக்கியமானது என அதனை தொலைக்காட்சியில் பார்வையிட்ட தமிழர்கள் தெரிவித்தனர். செயற்பாட்டாளர்கள் மிகவும் அமைதியாக உள்ளனர்,அவர்கள் கட்டுரை எழுதுவதையும் அறிக்கைகள் விடுவதையும் நிறுத்திவிட்டனர்,அச்சம் வெளிப்படையாக தெரிகின்றது என யாழ்ப்பாணத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். நல்லாட்சிக்காக பிரச்சாரம் செய…
-
- 0 replies
- 325 views
-
-
பலரும் கணித்ததுபோல் பரபரப்பு – கடினம் – போட்டி இல்லாமலேயே தேர்தலில் வென்று, ஜனாதிபதி ஆகியுள்ளார் கோட்டாபய ராஜபக்ச. அவரின் இந்த வெற்றி – அவர் சார்ந்த சிங்கள – பௌத்தத்தின் வெற்றியாக மட்டுமே கருதப்படுகின்றது – கொண்டாடப்படுகிறது. இதுவே உண்மையும்கூட, தேர்தல் பிரசாரத்தின்போது, “தமிழர்களின் – சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் இல்லாமலே வெற்றிபெறுவேன்”, என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கூற்று இன்று நிரூபணமாகியுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம், தென்னிலங்கையில் பலம் மிக்க – மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை பெற்றவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கோட்டாபயவின் வெற்றியைத் தொடர்ந்து அவர் போட்டியிட்ட கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியமைக்க…
-
- 0 replies
- 425 views
-
-
சுயாதிபத்தியம் கொண்ட அரசு என்ற வகையில் இலங்கை சீனாவுடன் பணியாற்றுவதற்கு சுதந்திரம் இருக்கின்றது என்ற போதிலும் பெய்ஜிங்குடனான இலங்கையின் உறவுகள் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்குமாக இருந்தால், இந்தியா அதன் செல்வாக்கைப் பிரயோகிக்கும் என்பதை தெளிவாகக்கூறிவிடவேண்டும் என்றும் சீனாவின் நெருக்கமான அரவணைப்புக்குள் ராஜபக்ஷக்கள் மீண்டும் செல்வதற்கு அனுமதித்து இந்தியா தவறிழைத்துவிடக்கூடாது என்றும் இந்தியாவின் முக்கியமான தேசிய ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்களில் வலியுறுத்தியிருக்கின்றன. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எதிர்கால உறவுமுறைகள் தொடர்பில் இந்துஸ்தான் ரைம்ஸும் டெக்கான் ஹெரால்டும்…
-
- 5 replies
- 916 views
-
-
-இலட்சுமணன் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்குரிய தேர்தல் முடிவுகள், இலங்கையின் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் எதிர்கால இனத்துவ அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு சிந்தனாவோட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, தமிழ் அரசியல் தலைமைகளினதும், அதன் எதிர் அரசியல் தலைமைகளினதும் மக்களதும் கருத்தோட்டங்களை மிகத் தெளிவாக வெளிக்காட்டி நிற்கிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், தமிழ் பேசும் இனம், ஓரணியில் நின்றும் சிங்களப் பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டிய ஜனாதிபதியாக, குறிப்பாக சிங்கள மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். இந்தத் தெரிவு என்பது, இலங்கை அரசியல் தலைமைகளுக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் …
-
- 0 replies
- 436 views
-
-
ருவான் வெலிசாய...! ஒட்டுமொத்த இலங்கையின் - இலங்கையரின் கவனத்தையும் நேற்று முன்தினம் தன்பக்கம் ஈர்த்துக் கொண்ட இடம். ஆம்...! இங்குதான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம்மிக்க ஏழாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்த இடம். ஜனாதிபதியாகப் பதவியேற்பவர் தனக்குப் பிடித்தமான இடத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், கோட்டாபய ராஜபக்ச ருவான் வெலிசாயவில் பதவி ஏற்றுக்கொண்டதற்குப் பின்னால், ஓர் ஆழமான வரலாற்றுக் காரணம் உள்ளது. இதை அவருடைய முதல் பேச்சும் ஆழமாக உணர்த்திச் சென்றுள்ளது. அவரின் இந்த வியாக்கியானங்களை நாம் விளங்கிக் கொள்ள - கோட்டாபய சொல்லும் வரலாற்றுச் செய்தியை உணர நாம் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னோக்கிப் ப…
-
- 22 replies
- 3k views
- 1 follower
-
-
தமிழில் ரஜீபன் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் நந்தசேன கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். தேசிய பாதுகாப்பு ,ஜனநாயகம் பொருளாதாரம், நல்லிணக்கம் ஆகியவற்றை தோற்கடித்துள்ளது. இலங்கையின் கிளர்ச்சியை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய ஏதேச்சதிகார அரசாங்கம்( கோத்தபாய இதில் முக்கிய பங்காற்றினார்)ஐக்கியதேசிய கட்சி அரசாங்கத்தின் உற்சாகமற்ற செயற்பாடுகளை கருத்தில் கொள்ளும்போது ஐந்துவருடத்திற்கு பின்னர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளமை ஆச்சரியம் அளிக்கும் விடயமல்ல.இம்முறை கோத்தாவை தோற்கடிப்பதற்கான பாரிய கூட்டணியிருக்கவில்லை. இலங்கையில் ஜனாதிபதிதேர்தலில் வெற்றிபெறுவதற்கு முக்கியமான தமிழ் முஸ்…
-
- 0 replies
- 706 views
-
-
நடந்து முடிந்த நாட்டின் 8ஆவது ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் பல செய்திகளை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளது. 16.11.2019இல்இடம்பெற்ற 8ஆவது ஜனாதிபதித்தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ 52.25வீத வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 41.99வீத வாக்குகளைப்பெற்ற புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியைத்தழுவியுள்ளார். இம்முறை 50வீத வாக்குகளை யாரும் பெறமாட்டார்கள். எனவே 2ஆம், 3ஆம் விருப்பு வாக்குகள் எண்ணவேண்டிவரும் என்றெல்லாம் கூறப்பட்டன. அதனைப்பொய்யாக்கி 52.25வீத வாக்குகளைப்பெற முடிந்ததற்கு பல்வேறு வகையான யுக்திகள் பயன்பட்டன எனலாம். …
-
- 0 replies
- 315 views
-
-
Published by Daya on 2019-11-20 10:46:01 பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம், புதிய கட்சியிலிருந்து ஒரு புதிய முகம் அரச தலைவர் பதவியில் அறிமுகமாகியுள்ளது. இந்தப் புதிய முக பிரவேசமானது நாட்டைப் புதியதோர் அரசியல் நெறியில் வழிநடத்திச் செல்வதற்கு வழிவகுக்குமா என்பது பலருடைய ஆர்வமிக்க கேள்வியாக உள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தபாய அரசியல் பின்னணியைக் கொண்டவரல்ல. பாராளுமன்ற அரசியலில் அனுபவமுடையவருமல்ல. யுத்தச் செயற்பாட்டுப் பின்னணியைக் கொண்டதோர் அதிகார பலமுள்ள சிவில் அதிகாரியாகவே அவர் பிரபலம் பெற்றிருந்தார்…
-
- 0 replies
- 427 views
-
-
புருஜோத்தமன் தங்கமயில் / 2019 நவம்பர் 20 , கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு ஒருசில மணி நேரத்துக்கு முன்னராகத் தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில், ‘வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வது, வெற்றியை நோக்கிய பயணத்தை விட முக்கியமானதாகும்’ என்று எழுதியிருந்தார். பெரும் தோல்விகளிலிருந்து, ஐந்து வருடத்துக்கு உள்ளாகவே மீண்டெழுந்து, வெற்றியை அடைந்துவிட்ட ராஜபக்ஷக்களின், தொடர் வெற்றிகளுக்கான கட்டியமாகவே, மேற்கண்ட நிலைத்தகவலைக் கொள்ள முடியும். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், ராஜபக்ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்படும் போது, அவர்கள் குறித்த நம்பிக்கைகள் பெரிதாக யாரிடமும் இருக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படாதவர்க…
-
- 0 replies
- 556 views
-