அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9210 topics in this forum
-
பட்டதாரிகளின் போராட்டமும் அரசின் பொறுப்பும் January 19, 2025 — கருணாகரன் — ‘ஆட்சி மாறினாலும் சில காட்சிகள் மாறாது’ என்பார்கள். அப்படித்தானுள்ளது வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமும். முந்திய அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்திலும் தமக்கு ‘அரசாங்கம் வேலை வழங்க வேண்டும்‘ என்று கேட்டுப் போராடினார்கள். இப்போதைய ஆட்சியின்போதும் போராடுகிறார்கள். இதற்காக ‘வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்‘ என்ற பேரில் ஒரு அமைப்பே உண்டு. அந்தச் சங்கம் தொடர்ந்தும் புதுப்பிக்கப்படுகிறது. அதுவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போராட்டங்களை நடத்துகிறது. பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வரும் ஒவ்வொரு தலைமுறையினரும் அந்தச் சங்கத்தில் இணைகிறார்கள். அதாவது பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது மாண…
-
- 0 replies
- 196 views
-
-
கிளீன் சிறீலங்கா:பொதுக் கழிப்பறைகள் - நிலாந்தன் கிளீன் சிறீலங்கா தொடர்பாக கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரையை வரவேற்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்திருந்தார். ஸ்ரீலங்காவை ஓரளவுக்காவது கிளீன் பண்ணக்கூடிய இடம் சுற்றுச்சூழல் விவகாரங்கள்தான் என்பதை ஏற்றுக் கொண்ட அவர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். நீண்ட தூரப் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை சிரம பரிகாரத்துக்காக நிறுத்தும் இடங்களில் உள்ள சுகாதாரக் கேடுகளை அவர் சுட்டிக் காட்டினார். குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்து வழியில் பேருந்துகள் இடைநிறுத்தப்படுகின்ற உணவகங்களில் உள்ள கழிப்பறை வசதிகளைக் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை அவர் சுட்டிக் காட்டினார். நண்பர…
-
- 0 replies
- 286 views
-
-
பட மூலாதாரம்,SRI LANKA PMD படக்குறிப்பு, சீன அதிபர் ஷி ஜினபிங்குக்கும் மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அதிகாரப்பூர்வ சீன விஜயத்தில், இலங்கைக்கு பாரிய நேரடி முதலீடுகள் கிடைத்துள்ளன. சீன அதிபர் ஷி ஜினபிங்குக்கும் இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் ஜனவரி 16ஆம் தேதி நடந்த சந்திப்பை அடுத்தே இந்த முதலீடுகள் தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஹம்பாந்தோட்டையில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மின்சக்…
-
- 1 reply
- 238 views
- 1 follower
-
-
புவிசார் அரசியல் சிக்கல்களுக்கு மேலாக கயிற்றில் நடக்க வேண்டிய நிலையில் ஜனாதிபதி அநுரா குமார January 12, 2025 — வீரகத்தி தனபாலசிஙகம் — ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு சென்று சரியாக ஒருமாதம் கடக்கும் நிலையில் இவ்வாரம் சீனாவுக்கு விஜயம் செய்கிறார். வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமால் இரத்நாயக்க சகிதம் செல்லும் அவர் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கையும் பிரதமர் லீ கியாங்கையும் எதிர்வரும் புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாகவும் அவரது விஜயத்தின்போது பல்வேறு துறைகள் தொடர்பில் சுமார் பத்து புரிந்துணர்வு உடன்படிக்கைகள் பெய்ஜிங்கில் கைச்…
-
- 1 reply
- 257 views
-
-
சாத்தியமானவையே வெற்றியின் படிகள் January 14, 2025 — கருணாகரன் — உலகத் தமிழர் பேரவையும் (Global Tamil Forum – GTF) சிறந்த இலங்கைக்கான சங்கம் (Sangha for Better Sri Lanka) என்ற அமைப்பும் கூட்டாக முன்னெடுத்து வரும் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான (இமாலயப் பிரகடனத்தின் அடிப்படையிலான) தொடக்க முயற்சி, இரண்டாம் கட்டத்துக்கு நகரத் தொடங்கியுள்ளது. இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் கடந்த மாதம் ஆரம்பமாகியிருக்கின்றன. இரண்டாம் கட்ட நடவடிக்கைகளில் முக்கியமாக, ‘இமாலயப் பிரகடன‘த்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்துவதோடு, அதனை அடிப்படையாகக் கொண்ட உரையாடல்களை மக்களுடன் நேரில் நடத்தும் நிழ்ச்சிகள் அமைகின்றன. இந்த நடவடிக்கைகளின் பரீட்சார…
-
- 1 reply
- 322 views
-
-
பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய விஜயம் முடிவுற்று ஒரு மாத காலத்தில், இரண்டாவதாக சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரபூர்வ விஜயமாக இன்று சீனா சென்றுள்ளார். வரும்17-ஆம் தேதி வரை அவர் அங்கு தங்கியிருப்பார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைந்திருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் கூறுகிறது. 'பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை' - இலங்கையில் அரிச…
-
- 0 replies
- 395 views
- 1 follower
-
-
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் - நிலாந்தன். adminJanuary 12, 2025 சிறீலங்காவை கிளீன் பண்ணத்தான் வேண்டும். ஆனால் அதை எங்கிருந்து தொடங்குவது? சிறீலங்காவின் கறை எது? அல்லது அசுத்தம் எது? என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அங்கிருந்துதான் சுத்தப்படுத்தலைத் தொடங்கலாம். சிறீலங்காவின் அசுத்தம் எது? இனப்பிரச்சினைதான். இன மோதல்கள்தான் சிறீலங்காவை உலக அரங்கில் அவமானப்படுத்தின. இனப்பிரச்சினைதான் சிறீலங்காவை ஜெனிவாவில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. இனப்பிரச்சினைதான் தமிழ் மக்களை கூடு கலைந்த பறவைகள் ஆக்கியது. இனப்பிரச்சினைதான் சிறீலங்காவுக்குள் வெளிச் சக்திகள் தலையிடும் வாய்ப்பை வழங்கியது. இனப்பிரச்சினைதான் நாட்டைப் பொருளாதார ரீதியாக நாசமாக்கியது.…
-
- 0 replies
- 316 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலை மக்கள் மயப்படுத்துவது – நிலாந்தன். கடந்த ஞாயிறுக் கிழமை, குமார் பொன்னம்பலத்தின் 25ஆவது நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் திருமறைக் கலா மன்ற,கலைத்தூது மண்டபத்தில் நடந்த அந்நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் நினைவுப் பேருரை ஆற்றினார். ரகுராம் தெளிவான துணிச்சலான நிலைப்பாடுகளை முன்வைத்துப் பேசினார். “எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற தீர்வு முன்மொழிவை ஏன் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அவர் முன் வைத்தார்.தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக குறிப்பாக ஆயுதப் போராட்டத்தின் கோரிக்கைகள் தொடர்பாகத் தெளிவான முடிவுகளை எடுத்து அதில் பேசினார். ஒரு கட்சி மேடையில், நிகழ்த்தப்பட்ட நி…
-
- 0 replies
- 271 views
-
-
கற்பனைக் குதிரை – 75 Sivarasa Karunakaran on January 3, 2025 Photo, TAMIL GUARDIAN இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது 75ஆவது ஆண்டு. ஆனால் 75 ஆண்டு (பவள விழா) கொண்டாட்டங்களை நடத்த முடியாத அளவுக்குக் கட்சி பலவீனப்பட்டுள்ளது. கட்சிக்குள் உள்மோதல்கள் வலுப்பெற்றுள்ளன. இதனால் அது நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. பல வழக்குகள். மேலும் வழக்குகள் தொடரப்படக்கூடும் என்றே தெரிகிறது. குறிப்பாக மத்திய செயற்குழுவை முடக்குமளவுக்கு நிலைமை வளர்ச்சியடைந்துள்ளது. கட்சியின் முக்கியஸ்தர்களான அரியநேத்திரன், கே.வி.தவராஜா, சசிகலா ரவிராஜ், சரவணபவன் உள்ளிட்ட பலர் தகுதிநிலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிவமோகன் இட…
-
- 3 replies
- 424 views
-
-
"நிதானம்" "நிதானம் இழந்த அரசியல் தலைவர்களே நிம்மதி கொடுக்கா கொள்கை எதற்கு ? நித்தமும் உங்களுக்குள் பிளவு வேறு நியாமான ஒற்றுமை குலைந்தது எனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 397 views
-
-
கானல் நீரில் தாகம் தீர்த்தல்! -நஜீப் பின் கபூர்- முதலில் 2025ம் புத்தாண்டுக்கான வாழ்த்துக்களை நமது வாசகர்களுக்கு கூறிக்கொண்டு கானல் நீரில் தாகம் தீர்த்தல் தொடர்பான கதையையும், கடந்து போன நூறு நாட்களில் நாட்டில் நடந்த மாற்றங்கள் பற்றியும் இங்கு பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கு முன்னர் நாம் கடந்த ஆண்டில் துல்லியமாக வாசகர்களுக்கு வழங்கி இருந்த தகவல்களை மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்த விரும்புகின்றோம். இதற்கு முன்னரும் இப்படியான வார்த்தைகளை நாம் உச்சரித்திருந்தாலும் அதனை கூறியது கூறலாக நமது வாசகர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று நாம் நம்புகின்றோம். அனுரவுடன் மோதுவதாக இருந்தால் மெகா கூட்டணி போட்டுக் கொள்ளுங்கள் என்று எதிரணிகளுக்கு சொல்லி இருந்தோ…
-
- 0 replies
- 295 views
-
-
சிறீலங்காவைக் கிளீன் செய்வது ? நிலாந்தன். அண்மையில் ஐரோப்பாவில் வசிக்கும் பிரபல்யமான ஒரு எழுத்தாளர் என்னைக் காண வந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு வந்தவர் ஒரு இளம் அரச ஊழியர். என்னுடைய மாணவர். அவர் சொன்னார்,தான் வெளிநாட்டுக்குப் போக போவதாக.ஏன் நாட்டில் இருந்து உழைக்க முடியாது என்று நம்புகிறீர்களா என்று கேட்டேன். “ஓம் நான் ஒரு வீடு கட்டினேன். கிட்டத்தட்ட மூன்று மில்லியன் ரூபாய்கள் கடன்.கடனை அடைக்க என்னுடைய மாதச் சம்பளத்திலிருந்து பெரிய தொகை போகிறது. அதனால் வீட்டுச் செலவுகளுக்கு அம்மாவும் அப்பாவும் ஒரு கடை வைத்திருக்கிறார்கள். அந்தக் கடைக்கான முதலீடு கூட புலம்பெயர்ந்த நண்பர்கள் சிலர் தந்தது தான்.ஒரு அரச ஊழியனாக என்னால் அந்தக் கடனைக் கட்டி முடிப்பது கடினமாக உள்ளது.ஆனால…
-
- 4 replies
- 520 views
-
-
என்பார் லெனின் (“இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு” - நூலிலிருந்து). இந்தியாவுடனான ஜேவிபியின் முரணையும் உறவையும் இந்தக் கோணத்தில் பார்ப்பதா என்பதே இந்த வாரம் பரவலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் விவாதங்களாகும். இந்தியத் தலையீட்டு மரபு கிறிஸ்துவுக்கு முன்னர் இருந்தே இலங்கை மீதான ஆக்கிரமிப்பு மரபு இந்தியாவுக்கு உண்டு. இலங்கை சிங்கள மக்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டிருக்கும் ஐதீகங்களைப் பலப்படுத்தி வந்த காரணிகளை சுறுக்கமாக இவ்விடயப் பரப்புக்குள் உள்ளடக்கலாம். இலங்கை மீதான தென்னிந்திய படையெடுப்புகள் பற்றி சிங்கள பௌத்தர்களின் புனித வரலாற்று நூலான மகாவம்சத்தில் ஏராளமான கதைகள் உள்ளன. சிங்கள மக்களுக்கு இந்திய எதிர்ப…
-
- 0 replies
- 313 views
-
-
இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும் புதுவருடத்தில் எவ்வாறு இருக்கும்? January 5, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — 2024 ஆண்டுக்கு நாம் பிரியாவிடை கொடுத்தபோது ஜனாதிபதி பதவியில் அநுரா குமார திசாநாயக்க நூறு நாட்களை நிறைவு செய்தார். புதிய பாராளுமன்றம் கூடிய பிறகு நாற்பது நாட்கள் கடந்திருந்தன. கடந்த வருடத்தில் இலங்கை அதன் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பு முனைகளைக் கண்டது. தெற்காசியாவில் நேபாளத்துக்கு அடுத்ததாக ஆயுதக் கிளர்ச்சியை நடத்திய அரசியல் இயக்கம் ஒன்று ஜனநாயக தேர்தல்கள் மூலமாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த இரண்டாவது நாடாக இலங்கை விளங்குகிறது. இதுகாலவரை இலங்கையை ஆட்சி செய்த பாரம்பரியமான அதிகார வர்க்கத்துக்கு வெளியில் உள்ள மிகவும் எளிமையான குடும்பப…
-
- 0 replies
- 233 views
-
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……! January 2, 2025 — அழகு குணசீலன் — தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமும், பொதுச்சபையும் திருகோணமலையில் கூடி கலைந்தது போல், வவுனியாவில் மத்திய செயற்குழு கூட்டம் கூடி ஊடகங்களுக்கு “பம்பலாக” கலைந்திருக்கிறது. நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளுக்காக ஏறி, இறங்கவேண்டிய நிலையில், நடந்து முடிந்த வவுனியா கூட்டம் கட்சியின் உள் மோதல்களுக்கு “தீர்வு” காணப்பட்டதுபோன்ற ஒரு தோற்றத்தையும், இது தீர்வல்ல “பிரிவு” என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆகக்குறைந்தது முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்களுக்கு இது முள்ளை முள்ளால் எடுத்த நிம்மதி. தமிழரசுக…
-
-
- 30 replies
- 1.6k views
- 1 follower
-
-
2025: தமிழ் மக்களின் ஆண்டுப் பலன்? - நிலாந்தன் adminJanuary 5, 2025 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ்ப் புத்திஜீவிகளில் சிலர் தமிழ்க் கிராம மட்டத்தில் விவசாய அமைப்புகளைச் சந்தித்து, விவசாயிகளின் குறைகளைக் கேட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் கடற் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சந்திரசேகரன் தமிழ்ப் பகுதிகளில் கடல் தொழிலாளர் சங்கங்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தியின் பிடியைப் பலப்படுத்தி வருகிறார். கடந்த மாத இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்தில், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான மற்றொரு குடிமக்கள் அமைப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. “மறுமலர்ச்சிக்கான மக்கள் இயக்கம்” என்று அழைக்கப்பட்ட அந்த அமைப்பை “மாற்றத்துக்கான மக்கள் அமைப்பு” என்று சம்பந்தப…
-
- 0 replies
- 337 views
-
-
Anura Kumara Dissanayaka கூறியது என்ன? | Sri Lanka Politics | Unmaiyin Tharisanam | IBC Tamil சமகால தமிழர் அரசியல் குறித்தான அரசியல் பார்வையை தொட்டுள்ளதாலும், சில கவனத்திற்குரியன என்பதாலும் இணைத்துள்ளேன். நன்றி-யூரூப்
-
- 1 reply
- 387 views
-
-
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ நெருக்கடிகள் January 1, 2025 — கலாநிதி சு.சிவரெத்தினம் — தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற தலைமைத்துவப் பிரச்சினை என்பது அதனது அரசியல் வங்குரோத்துத் தனத்தால் ஏற்பட்ட ஒரு பிரச்சினையாகவே பார்க்கப்பட வேண்டும். அது தோற்றம் பெற்ற காலந்தொடக்கம் தமிழரசுக் கட்சியானது ஒரு எதிர்ப்பரசியலை நடத்திவந்திருக்கிறதே தவிர புரட்சிகரமான எழுச்சி அரசியலை நடாத்தவில்லை. எதிர்ப்பரசியலுக்கும் புரட்சிகரமான எழுச்சி அரசியலுக்கும் என்ன வேறுபாடு என்பது முதலில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். எதிர்ப்பரசியல் என்பது ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளுக்கெதிராக எதிர்ப்பை மட்டுமே வெளிப்படுத்துகின்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும். உதாரணமாக அரச…
-
- 0 replies
- 260 views
-
-
வரலாற்றின் எதிர்பார்ப்பு January 1, 2025 — கருணாகரன் — ‘‘இலங்கையில் மாற்றங்களை உருவாக்க வேண்டும்‘‘ என்ற பிரகடனத்தோடு அதிகாரத்துக்கு வந்திருக்கும் அநுரகுமார திசநாயக்கவின் (NPP) அரசாங்கம், என்ன செய்கிறது? நம்பிக்கை தரக்கூடிய முயற்சிகள் ஏதாவது நடக்கிறதா..?‘ என்று பலரும் கேட்கிறார்கள். மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு அந்த மாற்றம் ஆரம்பித்துள்ளதா? அதற்கான பணிகள் நடக்கிறதா? என்ற எதிர்பார்ப்புள்ளது. எவ்வளவுக்கு விரைவாக மாற்றங்கள் நடக்கிறதோ அந்தளவு மக்களுக்கு நன்மையும் மகிழ்ச்சியும் உண்டு. ஆகவே அவர்கள், அந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். புதிய (தேசிய மக்கள் முன்னணி) அரசாங்கம் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துகிறது – ஏற்படுத்த…
-
- 0 replies
- 285 views
-
-
மீனவர் பிரச்சினை திட்டமிட்டு மேற்கொள்ளும் ஒரு சதி! - மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்ஸன்!
-
- 0 replies
- 276 views
-
-
13வது திருத்தத்தை தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? December 30, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — பதின்மூன்றை துரதிர்ஷ்டம் வாய்ந்த இலக்கம் என்று சொல்வார்கள். அதனால் தான் இலங்கையின் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தை 37 வருடங்களாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறதோ தெரியவில்லை. அண்மையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அவருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு புதுடில்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதின்மூன்றாவது திருத்தம் குறித்து எதையும் கூறிப்பிடத் தவறியதை அடுத்து அது குறித்து ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ஊடகங்களும் அரசியல் அவதானிக…
-
- 0 replies
- 462 views
-
-
உலக வல்லரசின் வீழ்ச்சியை உறுதிப்படுத்திய ஆண்டாக கடந்து செல்லும் 2024 – வேல்ஸில் இருந்து அருஸ் December 30, 2024 மனித வரலாற்றில் மிக அதிக நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்ற ஆண்டாக இந்த வருடம் கடந்து செல்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்ற 70 இற்கு மேற்பட்ட நாடுகளில் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது உலக மக்கள் தொகையில் அரை பங்குக்கு மேற்பட்ட மக்கள் தமது வாக்குபலத்தை பயன்படுத்தியுள்ளதுடன், பல நாடுகளில் தேர்தல்கள் இன்றியே ஆட்சி மாற்றங்களும் இடம் பெற்றுள்ளன. சிரியாவில் அரசு கைப்பற்றப்பட்ட அதே சமயம் ஜேர்மனி அரசும் வீழ்ந்தது. மறுபுறமாக தென்கொரிய அதிபரும் தனது பதவியை இழந்தார், அதற்கு முன்னர் பங்களாதேசத்தின் ஹசீனா அரசு வீழ்த்தப்பட்டது, மேலும் ஈர…
-
-
- 1 reply
- 373 views
-
-
2024 : வென்றவை தோற்றவை – நிலாந்தன். இந்த ஆண்டின் தொடக்கத்திலும் முடிவிலும் நடந்த இரண்டு தேர்தல்கள் தமிழ் அரசியலின் சீரழிவை வெளியே கொண்டு வந்தன.இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தலானது தமிழ் அரசியலில் சீரழிவை குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் சீரழிவை வெளியே கொண்டு வந்தது. இந்த ஆண்டின் இறுதியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய அரசியலின் இயலாமையை வெளியே கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில், தமிழ்த் தேசியத் தரப்பின் பிரதிநிதித்துவம் மேலும் குறைந்திருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கமே தேர்தல்தான். கட்சித் தலைவரை தேர்தல்மூலம் தெரிந்தெடுப்பது கட்சி ஜனநாயகத்தைச் செழிப்பாக்கும். எனினும் தமிழரசுக் கட்சி தன் தலைவரை தேர்தல்கள்மூலம் தெரிந்தெடுக்கும்…
-
- 1 reply
- 533 views
-
-
-
தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா? அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்? December 26, 2024 1:27 pm தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுக்க இந்தியா கடுமையாக போராடுகிறது. கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதார எதிர்பாராத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவின் இன்றைய அந்நிய கையிருப்பு 800 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்தியாவின் வளர்ச்சியானது ஆசிய பிராந்தியத்துக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதுடன், இலங்கை, நேபாளம், மாலைத்தீவு, பங்களாதேஸ் உட்பட பல தெற்காசிய நாடுகளில் பொருளாதாரத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்வதற்கான வாய்ப்புகளும் உர…
-
- 0 replies
- 227 views
-