அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஸ மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரை தற்போது இடம் பெற்று வருகின்றது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கண்டியில் கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகியது. ஐந்து நாட்களாக திட்டமிடப்பட்டிருந்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் முதலாம் திகதியுடன் கொழும்பில் நிறைவடைய உள்ளது. சிங்களம் மற்றும் தமிழ் சமுதாயங்கள் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிய ஆர்ப்பாட்டம் என்றவுடன் ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. இதே போன்றதொரு பேரணி கடந்த 60 வருடங்களுக்கு முன் இடம் பெற்றது என்பது உங்களில் யாருக்காவது தெரியுமா? ஆம், இவ்வாறான எதிர்ப்பு…
-
- 0 replies
- 477 views
-
-
தமிழ் மக்கள் புதிய தலைமையொன்றை தேடுகின்றார்களா? - யதீந்திரா கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தக் கட்டுரை எழுதப்படும்வரையில் அவ் அதிர்வுகள் குறையவில்லை. எது ஆளும் கட்சி, எது எதிர்க்கட்சி, எது மகிந்த தரப்பு – என்று பிரித்தறிய முடியாதளவிற்கு 'எழுக தமிழை' எதிர்ப்பதில் அனைவருமே ஓரணியில் திரண்டிருக்கின்றனர். பொதுபல சேனாவின் தலைவர் ஞானராச தேரர் தொடங்கி தங்களை இடதுசாரியினராக காண்பித்துவரும் ஜனதா விமுக்தி பெரமுன வரையில் வடக்கில் மீண்டும் இனவாதம் தோன்றிவிட்டதாகவும், புலிகள் விட்டுச்சென்ற இடத்தை விக்கினேஸ்வரன் பிடிக்க முயற்சிக்கின்றார் என்றவாறும் ஆவேசமாக பேசி வருக…
-
- 0 replies
- 487 views
-
-
தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றும் சிங்கள அரசின் திட்டம் ஈழத்தமிழினம் இன்று சிங்கள பௌத்த இனவாதத்தின் அடக்குமுறைக்குள் இலங்கைத் தீவிலும், புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அன்று தமிழர் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து, அதன் பின்னர் தமிழர் தாயகப் பகுதியினுள் தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்கத்திலும், செயற்படுத்தப்பட்டன. அந்த வகையில் இன்று தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளையும் சிங்களமயப்படுத்தி தமிழர் தாயக எண்ணக்கருவை அழிக்கும் செயற்திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. இச் செயற்திட்டங்கள் நிறைவேறும் போது, தமிழர்களின் வாழ்வு நிலை, வாழ்வு இயக்கங்கள் யாவும் கட்டுப்படுத்தப…
-
- 0 replies
- 399 views
-
-
புத்தர் சிலைக்கு பின்னாலுள்ள அரசியல் ஊருக்குள் பெரிய ஆஜானபாகுவான ஆட்களாக தம்மைக் காட்டிக் கொள்ளும் ‘மைனர்கள்’, வெளியூருக்கு சென்று அவமானப்பட்டு வருவார்கள். ஊர் எல்லைக்குள் வந்ததும், மீண்டும் வீரமும் தற்பெருமையும் பேசத் தொடங்கி விடுவார்கள். தனது உடம்பில் இருப்பது அடிபட்ட காயமல்ல, மாறாக வெளியூர் சண்டியனுக்கு அடித்தபோது ஏற்பட்ட கீறல்கள் என்பது போலிருக்கும் அவர்களது பேச்சுக்கள்! அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசமான மாணிக்கமடுவில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயம் கடந்த இரு வாரங்களாக சர்ச்சைகளையும் வார்த்தை மோதல்களையும் எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்தி இருக்கின்றது. …
-
- 0 replies
- 798 views
-
-
-
- 0 replies
- 641 views
-
-
இலங்கையின் வெளியுறவுத்துறையும் அது சார்ந்த அமைப்புகளும் அண்மை காலங்களில் மிக சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் கொள்கை ஆய்வாளர்களையும் சந்திக்கும் வெளியுறவு அதிகாரிகள் இலங்கை ஒரு சிறிய நாடு என்பதை கூறுவதற்கு தவறுவதில்லை. குறிப்பாக அதிகார பரவலாக்கம் குறித்த கேள்விகளிற்கு பதிலளிக்கும் பொழுது இலங்கை ஒரு சிறிய தேசம் இந்தச் சிறியதேசத்தில் ஒன்பது அதிகார சபைகளை அமைப்பதுவும் ஒன்பது பொலிஸ் பிரிவுகளை உருவாக்குவதுவும் ஒன்பது காணி அதிகார சபைகளை உருவாக்குவதுவும் மிகவும் கடினம், செலவும் அதிகம் என்று குறிப்பிடுகின்றனர். இந்தக் கருத்துக்களின் பின்னணியில் தமிழ் மக்களிடம் அதிகாரத்தை கொடுக்க முடியாது என்ற விடயமே உள்ளடங்கி உள்ளது. அதேவேளை இந்திய தென்பி…
-
- 0 replies
- 449 views
-
-
போராட்டத்தின் தாற்பரியத்தை புரிந்துகொள்ளுங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மக்கள் அபகரிக்கப்பட்ட தமது காணிகளை மீளப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி போராட்டங்களை நடத்திவருகின்ற போதிலும் அரசாங்கம் அது தொடர்பில் அக்கறை கொள்வதாக தெரியவில்லை. குறிப்பாக இந்த மக்கள் தமது நிலங்களை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்திவருகின்ற போதும் அது தொடர்பில் அரசாங்கம் பாரிய கவனத்தை செலுத்துவதைக் காணமுடியவில்லை. மக்கள் தொடர்ச்சியாக இரவு – பகல் பாராது வெயிலிலும் பனியிலும் தவித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளபோதிலும் பிரச்சினையைத் தீர்க்கவேண்டிய அரசாங்கம் அதனைக் கவன…
-
- 0 replies
- 561 views
-
-
அமெரிக்காவில் பசில்ராஜபக்ச... என்ன நடக்கிறது?
-
- 0 replies
- 558 views
-
-
கடற்கரை மாசும் எமது மௌனமும் உலகில், மனித குலத்துக்கு மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும், சமுத்திரங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம், கடற்கரையையும் கடல்சார் வளங்களையும் பராமரிப்பதும் பாதுகாப்பதும், மிக முக்கியமானது. நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இலங்கை, அழகிய கடற்கரைப் பிரதேசங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள போதிலும், அதிகரித்துச் செல்லும் கடற்கரைச் சூழல் மாசடைதல் காரணமாக, அதன் எழில் படிப்படியாக மறைந்து செல்கிறது. உலகளாவிய ரீதியில், ஒவ்வொரு வருடமும், கடலில் மாத்திரம் 60 சதவீதமான பிளாஸ்டிக் பொருட்களுடன் கூடிய 1,000 தொன்னுக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்படுகின்றன. புள்ளிவிவரத்தின்பட…
-
- 0 replies
- 634 views
-
-
காதில் ஏறுமா ? ஐ. நா நிபுணரின் புத்திமதி உண்மை, நீதி, இழப்பீடு, மீளநிகழாமையை உத்தரவாதப்படுத்தும் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப், இலங்கையில் இரண்டு வாரகால உண்மை கண்டறியும் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியிருக்கிறார். அவர் கொழும்பில் இருந்து புறப்படுவதற்கு சில மணிநேரம் முன்னதாக,- கடந்த 23ஆம் திகதி- ஐ.நாவின் இலங்கைக்கான பணியகத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். அந்தச் சந்திப்பில் அவர் வெளியிட்ட கருத்துக்கள், நிச்சயமாக அரசாங்கத்துக்கு உவப்பான ஒன்றாக இருக்காது. ஆனாலும் ஐ.நா. நிபுணரின் கருத்து வெளியாகி பல நாட்களாகி விட்ட பின்னரும், அரசாங்கத…
-
- 0 replies
- 418 views
-
-
தமிழர் அடையாளத்தை அழிக்கும் முயற்சி திருகோணமலைப் பிரதேசத்தில் தமிழ் மக்களுடைய அடையாளங்களையும் இந்து பூர்வீகங்களையும் அழிப்பதிலும் இல்லாமல் ஆக்குவதிலும் தொல்பொருள் திணைக்களமும் பௌத்த விஹாராதிபதிகளும் காட்டிவருகின்ற அட்டூழியங்களின் ஒருவெளிப்பாடுதான் அண்மையில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சூடைக்குடா (மத்தளமலை) திருக்குமரன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவமாகும். போர் மற்றும் சுனாமி காரணமாக சூடைக்குடா கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள் மீள் குடியேறிய நிலையில் தங்கள் வரலாற்றுப்புகழ் கொண்ட ஆலயத்தை புனரமைக்கவும் அருகில் குடிநீர்கி கிண றொன்றை நிர்மாணிக்கவும் ஆலய பரி…
-
- 0 replies
- 549 views
-
-
சீர்திருத்த முடியாத ஒரு சட்டத்தை நீக்க வேண்டிய உடனடித் தேவை Photo, Tamilguardian ஆயுதம் தாங்கிய எழுச்சி ஒன்றின் மூலம் ஏற்பட முடியும் எனக் கருதப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கான ஒரு தற்காலிக சட்டமாக அது கருதப்பட்டது. ஆனால், அச்சட்டம் இப்பொழுது சுமார் 40 வருடங்களுக்கு மேல் அமுலில் இருந்து வந்துள்ளது. எதிரி தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட அது தொடர்ந்து நிலைத்து வருகின்றது. இச்சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானவர்கள் பல வருட காலம், பல தசாப்தகாலம் கூட சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்; பயங்கரவாதம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பலர் வழக்கை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் அல்லது சித்திரவதைக்கு ஊடாக பலவந்தமாக பெற்றுக்…
-
- 0 replies
- 542 views
-
-
ஈரானின் அணு சக்தி வளர்ச்சி அமெரிக்காவை அச்சுறுத்துகிறதா ? ஐங்கரன் ************* (ரஷ்யாவுடன் வலுவாக கைகோர்க்கும் ஈரானின் ட்ரோன் தானியங்கி ஏவுகணை உற்பத்தியால் ஐரோப்பிய – உக்ரேனிய போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாதோ என்று அமெரிக்கா அஞ்சுகிற வேளையில், ஈரானின் அணு சக்தி வளர்ச்சியால் பிராந்திய வல்லரசாக ஈரான் அணு ஆயுத பலம் பெற்றால் அமெரிக்கவின் வளைகுடா இராணுவ மேலாண்மை குறைக்கப்படும் என வாஷிங்டன் ஐயமுறுகிறதோ என்பது பற்றிய ஆய்கிறது இக்கட்டுரை) *************************************************************************************** 2000 களில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் வெ…
-
- 0 replies
- 702 views
-
-
வெனிசுவேலா: ஜனநாயகம் குறித்த புதிய கேள்விகள் ஜனநாயகம் என்றால் என்னவென்ற கேள்வி, மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. அக்கேள்வியை யார் எழுப்புகிறார்கள், ஏன் எழுப்புகிறார்கள் என்பது முக்கியமானது. அக்கேள்விக்கான பதிலை, யார் வழங்குகிறார்கள் என்பது அதைவிட முக்கியமானது. உலக வரலாற்றில், ஜனநாயகம் குறித்த பல விளக்கங்கள் இருந்துள்ளன. அவையும் ஒருமனதானதாக இருந்ததில்லை. இன்று ஜனநாயகம் பற்றி எழுப்பப்படும் கேள்விகள், வெறுமனே ஜனநாயகத்தை மட்டும் விளக்குவனவல்ல. நாம் வாழும் சூழலையும் அதன் அரசியல் போக்கையும் நோக்கையும் கூட விளக்குகின்றன. இதனால், ஜனநாயகம் குறித்த வினாக்களும் விடைகளும், நாம் வாழும் உலகின் குறுக்குவெட்டு முகத் தோற்றத்தை விளங்க உதவும்…
-
- 0 replies
- 421 views
-
-
கோவிட் – 19 செயற்குழுவும் மக்கள் சேவையின் அரசியல் தலையீடும் – நிலவன்.. April 12, 2020 கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,91,719 ஆக உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர். உலகநாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்த வேண்டாம். கோரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கு முன்பே ஊரடங்கை தளர்த்தினால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார். இலங்கையில் கோரோனா வைரஸ் கோவிட் -19 நோய் பரவுவதைத் தடுப்பதற்கென நாட்ட…
-
- 0 replies
- 275 views
-
-
நடு இரவில் வந்து நாலு பேருக்கு தெரியாமல் வெனிசுலாவை வெருட்டி விட்டு அந்த நாட்டின் ஜனாதிபதியை கைது செய்து கொண்டு போய் இருக்கிறது ஏகாதிபத்தியம்( Imperialism) . அமெரிக்காவின் இந்தச் செயல் பெரும் சர்வாதிகார நிலையை சொல்லி இருக்கிறது. அமெரிக்காவின் எதிரியான வெனிசுவேலா ஜனாதிபதி Maduro வின் அரசியல் கொள்கைக்கு எதிராக செயல்ப்பட்ட வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு சமாதான பரிசை கொடுத்ததன் மூலம் வெனிசுவேலாவுக்குள் அமெரிக்க நலன்சார் நகர்வுகளுக்கு இது உதவியிருக்கிறதா என்றும் எண்ணத் தோண்றுகிறது. இந்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவதாக மரியா கொரினா மச்சாடோ குறிப்பிட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேசரீதியிலான ஒ…
-
- 0 replies
- 108 views
-
-
தமிழ்த் தலைமைகளும், தேர்தலும் | கருத்தாடல் | Sivasubramaniam Jothilingam
-
- 0 replies
- 546 views
-
-
தடத்திற்கு தடை தரலாமா? – முனைவர் ஆ. குழந்தை 39 Views இங்கிலாந்தில் உள்ள தீவிரவாதச் சட்டம்(2000) பிரிவு 2(1, 2)இன் கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்தை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சேர்த்து, தடை செய்திருக்கிறது. இந்த தடையை நீக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாக திருமிகு மாயா இலெசுடர், திருமிகு மால்கம் பிர்டிலிங், திருமிகு சேக்கப் ரொபினோலிட்சு ஆகிய சட்டத்தரணிகள் வாதாடினர்(1,2பத்திகள்). அதன் விளைவாக நடுவர் மன்றம் தந்த தீர்ப்பு அறிக்கையில் மூன்று பகுதிகள் உள்ளதாக நான் பார்க்கின்றேன். அந்த மூன்று பகுதிகளை விளக்கிவிட்டு, நமது கடமைகளை ஆராய்…
-
- 0 replies
- 754 views
-
-
மாலைத்தீவு மையவாடியா? -எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கையில், கொவிட்- 19 நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மாலைத்தீவில் அடக்கம் செய்ய வசதி செய்து கொடுக்க வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மாலைத்தீவு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தாரா? மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷஹீத், தமது ‘டுவிட்டர்’ கணக்கில், வெளியிட்டு இருந்த ஒரு தகவலின்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வாறானதொரு கோரிக்கையை விடுத்துள்ளார். ‘இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபயவின் வேண்டுகோளுக்கு இணங்க, கொவிட்-19 நோயால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகளை, மாலைத்தீவில் நடத்தும் விடயத்தில், இலங்கைக்கு உதவும் முகமாக, ஜனாதிபதி சொலிஹ் உரிய அதிகாரிகளுடன் பேச்ச…
-
- 0 replies
- 705 views
-
-
உலக மானிடத்தின் நம்பிக்கை கனவுகள்-2021-பா.உதயன் பல துன்பமும் துயரம் நிறைந்த வாழ்வோடு விடைபெறுகிறது 2020.உலகத்தையே உலுக்கி அதன் குரல் வளையை நெரித்தபடி இருக்கும் கொரோனாவின் வரவும் அதன் பின் உலக அரசியல் பொருளாதார சமூகவியல் மாற்றங்களோடு 2021 பிறந்திருக்கிறது.உலகமே எதிர் பார்த்திருக்க முடியாத ஒரு துன்பவியல் நிகழ்வினால் துன்பமும் துயரமுமாக பல்லாயிரம் மனித வாழ்வுகளை பறித்தெடுத்து போய் இருக்கிறது கண்ணுக்குத் தெரியாத வைரசு ஒன்று.பலர் உறவுகளை சிலர் நண்பர்களை அருகில் இருப்பவர்கள் அன்பானவர்கள் என்று அந்த கொரோனாவின் கோரப்பிடியில் அகப்பட்டு அநியாயமாக இறந்து போன துயர நினைவுகளால் தூக்கம் மறந்த துன்பம் நிறைந்த மனிதர்களாகிப்போனோம்.எல்லா எம் கனவுகளையும் எம் பாடல்களையும் கொரோனா என்ற கொ…
-
- 0 replies
- 354 views
-
-
தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுகிறதா கூட்டமைப்பு? தமிழ் மக்களிடம் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துகின்ற இரகசியச் சதித் திட்டம் ஒன்றை அரசாங்கம் அரங்கேற்றுகிறதா? கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார். வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியே அவர் இந்தக் கேள்வியை அரசாங்கத்தை நோக்கி எழுப்பினார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஐம்பது நாட்களு…
-
- 0 replies
- 389 views
-
-
முதல்வருக்கு வைக்கப்படும் செக் மழை விட்டாலும் தூவானம் நிற்காதது போன்று, வடக்கு மாகாணசபையில் ஏற்பட்ட பெருங் குழப்பம், பல்வேறு தலையீடுகளின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலும், அதனைச் சார்ந்த பிரச்சினைகள் அவ்வப்போது எழுந்து கொண்டேயிருக்கின்றன. முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற பிரச்சினை மாத்திரம் தீர்க்கப்பட்டுள்ளதே தவிர, அதற்கு அடிப்படைக் காரணியான பல்வேறு பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. அதில் முக்கியமானது, சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இரண்டு அமைச்சர்கள் தொடர்பாக நடத்தப்பட வேண்டிய புதிய விசாரணை. சுகாதார மற்றும் போக்குவரத்து அமை ச்சர் …
-
- 0 replies
- 680 views
-
-
முதல் அமர்வில் கூறத் தவறிய விடயங்களும் எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டி பேச்சுக்களும் - அ.நிக்ஸன்- 28 அக்டோபர் 2013 Notes முதலமைச்சரின் அதிகாரங்கள் பற்றிய சட்டரீதியான அனுகுமுறைகளுக்கு எத்தனை உறுப்பினர்கள் ஒத்தழைப்பு வழங்குவார்கள்? மாகாண சபை நிரந்தரமானது என்ற நம்பிக்கையுடன் தமது பதவிகளை மட்டும் உறதிப்படுத்த முற்படும் உறுப்பினர்கள் பாதிப்புகள் தொடர்பான புள்ளி விபரங்களை சேகரிக்க தவறுகின்றனர் வடமாகாண சபையின் முதல் அமர்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை இரண்டு விடயங்களை கூறியது. ஓன்று அரசியல் தீர்வின் முக்கியத்துவம் இரண்டாவது அரசியல் தீர்வுக்காக இலங்கைக்கு வெளியில் நின்று நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தமிழகம் புலம் பெயர்தமிழர்கள் என்ற இரு சமூகங்களின் ஒத்தழைப்பு. 1…
-
- 0 replies
- 332 views
-
-
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் இலங்கை குறித்த அறிக்கை இலங்கையின் மனித உரிமை நிலவரத்தினை மிகைப்படுத்தப்பட்ட – எதிர்மறையான விதத்தில் சித்தரிக்கின்றது- வெளிவிவகார அமைச்சு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இலங்கைப் பிரிவான ‘உலக அறிக்கை 2022’ நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான வகையில் சித்தரிப்பதாக வெளிநாட்டு அமைச்சு வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் வருடாந்த அறிக்கை குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது. மனித உரிமைகள்…
-
- 0 replies
- 253 views
-
-
நாம் தனித்துவிடப்படவில்லை- தென் அமெரிக்க நாடுகளைப் போல் எழுவோம்: மக்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு! puthinam நம்மை நோக்கி அவலமும் துன்பமும் விரைந்து வருகின்றமையால் எதிர்கொள்ள தயாராவோம்- நாம் தனித்துவிடப்படவில்லை- தென் அமெரிக்க நாடுகளைப் போல் எழுவோம் என்று தமிழீழ மக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நம்பிக்கை அழைப்பு விடுத்துள்ளனர். புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை (07.01.06) "சேர்பியாஇ பொஸ்னியாவைப் போல் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் விரைவில் சிறிலங்கா" என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் ஆற்றிய உரை: சர்வதேச நீதிமன்றில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருக்கும் சேர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி மி…
-
- 0 replies
- 1.3k views
-