Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மைத்திரியின் குத்துக்கரணமும் கூட்டமைப்பின் முடிவும் புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 07 புதன்கிழமை, மு.ப. 03:18 கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அப்போதைய பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை நோக்கி, மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர், “இடுப்பில் தைரியமற்றவர்” (ஆண்மையற்றவர்) எனும் அரசியல் நாகரிகமற்ற, இழிவார்த்தைகளை மேடை தோறும் பேசி வந்தனர். சுமார் நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், அதே மாதிரியான நாகரிகமற்ற இழிவார்த்தைகளைப் பேசிக் கொண்டு, மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவு மேடையில் ஏறியிருக்கிறார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நாட்டு மக்களின் ஆணைபெற்ற தலைவராக, மைத்திரிபால சிறிசேனவுக்குப் பாரிய பொறுப்புண்டு. வார்த்தைகளில் கண்ணியத்தைப் பேண வேண்டிய கடப்பா…

  2. தமிழர் அரசியலும் சர்வதேச அழுத்தங்களும். -வ.ஐ.ச.ஜெயபாலன் கேள்வியும் பதிலும். . Segudawood Nazeer தமிழ் தேசிய கூட்டமைப்பை ரணில் விகரக் சிங்ஹ அவர்களுக்கு ஆதரவு வழங்கக் கோரும் சர்வதேச சமூகம் தமிழர்களின் இறுதி யுத்த கால கட்டத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்ததையும் ,காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆதரவு போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஏன் என்று தெரியவில்லை. . Jaya Palan Segudawood Nazeer நண்பா, இலங்கையில் முள்ளிவாய்க்கால் போன்ற ஒரு பேரழிவுக்கு பின்னர் மூன்றாம் உலகின் எந்த சிறுபான்மையினமும் இத்தனை விரைவாக நிமிர்ந்திருக்க வாய்ப்பில்லை. அரசியல் ரீதியாக சொந்த சின்னத்தில் தேர்தல் வென்று குறிப்பிடத்தக்க நிலத்தையும் மீட்டு அரசியலிலும் தாக்…

    • 0 replies
    • 479 views
  3. தென்னாசியாவில் விரிவடையும் ஆதிக்கப் போட்டி நித்தியபாரதிNov 07, 2018 by in கட்டுரைகள் சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான தென்னாசியப் பிராந்தியத்தின் பூகோள-மூலோபாய போட்டியில், முக்கிய பங்குதாரராகக் கருதப்படும் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்பநிலையை, இவ்விரு நாடுகளும் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் திடீரென பிரதமராக மகிந்த ராஜபக்ச அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சிறிலங்காவின் அரசியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பிரதமர் பதவியிலிருந்து தான் நீக்கப்படுவதற்கு நாடாளுமன்றின் பெரும்பான்மை ஆதரவு தேவை எனவும் இதனை சிறிலங்கா அதிபர் உறுதிப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டும் எனவும…

  4. எங்கள் அன்புக்குரிய தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். . இன்றய அரசியல் நெருக்கடியை நீங்கள் கையாளும் ராஜதந்திரம் பாராட்டுக்கு உரியது. சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டத்துடன் தமிழ் மக்களின் உரிமைகளையும் இணைத்து வெற்றிபெற பிரார்த்திக்கிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

    • 15 replies
    • 1.8k views
  5. அமெரிக்க அரசியல் கட்சிகளின், சின்னமாக... யானை, கழுதை வந்தது எப்படி? அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்பின் ஆட்சிக் காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்படும் இடைத்தேர்தல் அந்நாட்டில் நடைபெற்றுள்ளது. 435 மொத்த உறுப்பினர்களைக்கொண்ட செனட்டில் காலியாக இருந்த 35 இடங்களுக்கு இடைத்தேர்தல் 6 ஆம் தேதி நடந்துள்ளது. இரு சபையிலும் மைனாரிட்டியாக இருக்கும் ஜனநாயகக் கட்சி இந்த தேர்தலில் சில இடங்களை ஜெயிக்கும் என கருதுகிறது. குடியரசுக்கட்சி ஏன் யானை சின்னத்திலும், ஜனநாயக்கட்சி ஏன் கழுதை சின்னத்திலும் போட்டியிட்டுவருகின்றனர் எனத் தெரியுமா? இதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது.1874 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கார்ட்டூன்களின் தந்தை என வர்ணிக்கப்படும் தாமஸ் நஸ்ட் குடியரசு கட்சியின் 3வது முறை வெற்றி…

  6. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) இலங்கையில் 2015ல் நடந்த ஜனாதிபதி தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் நாட்டில் மிகப் பெரிய ஜனநாயக மாற்றத்தைக் கொண்டுவந்தது. நாட்டின் பிற பகுதிகளுக்கு எப்படியோ, வடக்குக்கும் கிழக்கிற்கும் இது இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் போல…

  7. குழப்புதலும் அதிகாரத்தை ஒன்றுதிரட்டலும் Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 05:33 Comments - 0 - அகிலன் கதிர்காமர் பதினொரு நாள்களுக்கு முன்னர், அதிகாரம் கைப்பற்றப்பட்டமையும் அதற்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளிலும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்த பின்னர், அவரால் போடப்பட்ட திட்டங்களின் உச்சநிலையே என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. அது தொடர்பான உத்தியாக, சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தைக் குழப்புதலும், பின்னர் இயக்கச் செயற்பாடுகள், தேர்தல்கள் மூலமாக, அதிகாரத்தை ஒன்றுதிரட்டலும் என்ற வகையில் அமைந்திருந்தது. இவ்வாண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ராஜபக்‌ஷ பிரிவினர் பெற்ற…

  8. மஹிந்த தோற்றால், அடுத்து என்ன? சிறிசேனவின் Plan - B Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:15 Comments - 0 - முகம்மது தம்பி மரைக்கார் பூனைகளை விடவும் சிங்கங்கள் பலம் மிக்கவை என்று சொன்னால், அதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஒரு பழமொழி உள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தை, ஒவ்வொருவரும் தத்தமது அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்பவே விளங்கி வைத்துக் கொண்டு, வியாக்கியானம் செய்து வருகின்றனர். சிலவேளைகளில், உண்மை நிலைவரம் இவற்றுக்கு அப்பாலும் இருக்கக் கூடும். மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்தமை ஜனாநாயக மீறலாகும் என்று, சிலர் வாதிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அரசமைப்புக்கு இணங்கவே அதைச் செய்தத…

  9. தமிழர் அபிலாஷைகளையும் தீர்க்குமா ஜனநாயகத்துக்கான போராட்டம்? Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:25 - க. அகரன் ஜனநாயகத்துக்கான போராட்டம், இலங்கையில் இன்று வலுப்பெற்றிருக்கும் நிலையில், இலங்கை தேசம், சர்வாதிகாரச் சிந்தனைகொண்டவர்களால் ஆளப்படுகிறதா என்கின்ற கேள்வி, பரவலாகவே அனைவரிடமும் எழுந்துள்ளது. இறைமை என்கின்ற ஒற்றைச்சொல்லுக்குள், போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாகக் கூறிவந்த இலங்கை, இன்று சர்வதேசத்தின் கண்டனங்களுக்குள்ளாகும் போது, இறைமையிலும் மேலானது சர்வதேசத்தின் பார்வை என்பதை எண்ணத்தலைப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் இழுபறி நிலை, அரசமைப்பு முறைமையை மாத்திரமல்ல, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையையும் மீள் பரிசீலன…

  10. மத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா? Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:15 - தமிழ் மிரரின் விவரணப் பிரிவு ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்தவரை, முக்கியமான நாளாக, இன்றைய தினம் (06) அமைந்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளிலும், அந்நாடு எப்பாதை நோக்கிச் செல்லுமென்பதைத் தீர்மானிக்கின்ற நாளாக இது அமையவுள்ளது. ஐ.அமெரிக்காவின் மத்தியகாலத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாள் தான் இது. மத்தியகாலத் தேர்தல் என்றால்? ஐ.அமெரிக்காவில், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றம், இரண்டு அவைகளைக் கொண்டது. பிரதிநிதிகள் சபை என அழைக்கப்படுவது, கீழவையாகக் காணப்படுவதோடு, செனட் என்று அழைக்கப்படுவது, மேலவையாக உள்ளது. இதில், பிரதிநிதிக…

  11. PREDICTION. எதிர்வு கூறல்: . நாடாளுமன்றம் ஒருரிரு நாட்களில் கூடினால் ரணில் வெற்றி பெறுவார். அதற்க்கு அவைத்தலைவர் துணிச்சலான முடிவுகளை எடுத்து சர்வதேச ஆதரவுடன் நாடாளுமன்றத்தின் ஜெயவர்தனபுர கட்டிடத்திலோ அல்லது வெளியிலோ நாடாளுமன்றத்தைக் கூட்டியாக வேண்டும். இல்லையேல் மகிந்த ராஜபக்சவே பிரதமராக வெற்றி பெறுவார் .

  12. நடந்தது என்ன? திடீர் மாற்ற அரசியலில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் என்ன?

    • 0 replies
    • 466 views
  13. முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேர்காணல் சமகால அரசியல் பற்றியது! thanks cmr.fm

    • 0 replies
    • 393 views
  14. THINATHANTHI INTERVIEW. தந்தி டிவி குறும் நேர்கானல். - வ.ஐ.ச.ஜெயபாலன் . சற்றுமுன் தினத்தந்தி என்னைக் குறும் பேட்டிகண்டது. . மகிந்த ஊடாக சீனா இனப்பிரச்சினையில் ஒரு தீர்வை முன்வைகிறதன் மூலம் இலங்கையில் இந்தியாவின் தளத்தை தட்டிப்பறிக்க முனைகிறது என்கிற சேதியை தெரிவித்துள்ளேன். இத்தகைய ஒரு நகர்வு தொடர்பாக விடுதலை புலிகளோடும் பேச சீனா முயன்றது. இதனை என்னிடம் விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். . ” சீனா சிங்கப்பூரில் வைத்து எங்களுடன் தொடர்புகொண்டது. இந்தியா எங்களுக்கு எதிராக இருந்தாலும் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் செயல்பட விரும்பாததால் சீனாவின் முயற்ச்சியை நிராகரித்துவிட்டோம். இதனை இந்தியாவிடம் தெரிவ…

    • 0 replies
    • 741 views
  15. இலங்கையின் அரசியல் குழப்பநிலையை சம்பந்தன் எவ்வாறு கையாள வேண்டும்? யதீந்திரா இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை தோன்றியதில்லை. இந்த நெருக்கடி நிலைக்கான விதை 2015 ஜனவரி 8இல் விதைக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ஆகியோரை அதிகாரத்திலிருந்து அகற்றும் நோக்கிலேயே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில், இலங்கையில் இரண்டு பிரதமர்களும், இரண்டு பிரதமர் அலுவலகங்களும் இயங்கிவருகின்றன. 2015இல் இடம்பெற்ற ஆட்சிமாற்றமும் வெளிநாட்டு சதியென்றுதான் வர்ணிக்கப்பட்டது. தற்போது மகிந்தவின் மீள்வருகையும் வெளிநாட்டு சதியென்றே கூறப்படுகிறது. சதிகளை நம்பி அரசியல் செய்தால் மீண்டும் மீண்…

  16. சம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார் – நிலாந்தன் November 4, 2018 ‘சந்தர்ப்பவாதிகளை எம்.பி ஆக்கிவிட்டு அவர்கள் நேர்மையாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இது எந்த வகையான லொஜிக்? யாருடைய பிழை?’ இவ்வாறு முகநூலில் கேட்டிருப்பவர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரான சிராஜ் மஷ்ஹூர். அவர் கேட்பது சரி. நாட்டின் மீயுயர் மன்றம் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றத்தின் அடுத்த கட்டம் அதில் எத்தனை பேர் சந்தர்ப்பவாதிகள் என்பதில்தான் தங்கியிருக்கிறது. எத்தனை பேரை விலைக்கு வாங்கலாம் என்பதுதான் யார் வெல்லக்கூடும் என்பதை தீர்மானிக்கப் போகிறது. இப்படிப் பார்த்தால் ஆட்சி மாற்றம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. பேரம் முடிந்தால் தான் ஆட்…

  17. அரசியலமைப்பின் 42(4) பிரிவில் மோதும் ரணில் - மைத்திரி இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி அரசியலமைப்பிற்கு அப்பால் சென்று ஆரயப்பட வேண்டியதொன்றாகியுள்ளது. உலகில் எந்தவொரு நாடு ஜனநாயக கோட்பாடுகளை மதித்து அதன் விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர்கின்றதோ அந்த நாட்டை நல்லாட்சி என்ற வரையறைக்குள் உட்படுத்தலாம். இதனை ஜனநாயக ஆட்சி முறைமை உடைய நாடுகளுக்கு மாத்திரமல்லாது இலங்கையால் ஒதுக்கப்படுகின்ற சமஷ்டி ஆட்சி முறைமையை கொண்ட நாடுகளையும் கருத்தில் கொள்ள முடியும். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இரண்டு பிரதான கட்சிகளுமே ஒன்றிணைந்து நல்லாட்சி என்ற சித்தாந்தத்திற்குள் தேசிய அரசாங்கத்தை தொடர்வதற்கு ஒப்பந்த ரீதியில் முன்வந்தது .…

  18. அரசியலமைப்பு வியாக்கியானமும் அரசியலும் - பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட இலங்கை ஜனாதிபதி தனது பிரதமரை பதவிநீக்கம் செய்துவிட்டு அவரின் இடத்துக்கு இன்னொருவரை நியமித்த நடவடிக்கை முறைமைத்தகுதியே இப்போது நாட்டில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்ற பெரும் முக்கியத்துவமுடைய ஒரு பிரதான விவகாரமாகும். தனது நடவடிக்கை முற்றுமுழுதாக அரசியலமைப்புக்கு இசைவானதே என்று ஜனாதிபதி உரிமைகோரியிருக்கிறார்.மேலும் அவர் அக்டோபர் 26 அந்த நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாக சட்ட ஆலோசனையைப் பெற்றதாகவும் கூறியிருக்கிறார். பதவிநீக்கப்பட்ட தனது பிரதமரைப் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புச் சட்டத்துடன் பரிச்சயத்தையோ அறிவையோ கொண்டவரல்ல.எனவே அவர் தான் எடுக்க உத்தேசித்த நடவடிக…

  19. VIYALENDRAN DILEMMA OF THE EAST கிழக்கு எதிர்நோக்கும் ”வியாழேந்திரன் சிக்கல்” - வ.ஐ.ச.ஜெயபாலன். கவிஞன் . நண்பர் வியாழேந்திரன் மகிந்த அரசில் இணைந்தமை எதிர்பார்க்காத அதிற்ச்சிச் சேதியாகும். நான் எதிர்ப்பவர் அணி வண்டியில் தொற்றிக்கொள்ளமுன்னம் கொஞ்சம் சிந்திக்க முனைகிறேன். அதே சமயம் சோமாலியாவை விட வறுமையில் உழலும் படுவான்கரையை தண்ணீர் மணல் மாபியாக்களிடம் இருந்து பாதுகாக்கும் முயற்ச்சியில் அவர் தன் பாதுகாப்பைப் பணயம் வைத்துப் போராடியவர் என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த “வியாழேந்திரன் சிக்கல்” கிழக்கில் பல தமிழ்த் தலைவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைதான். இதனை சம்பந்தர் நன்கு அறிவார். . வியாழேந்திரன் என்னிடம் பேசும்போது…

  20. SAVE THE PARTY AND TNA - AN APPEAL TO SAMPANTHAN கட்சியையும் கூட்டமைப்பையும் காப்பாற்றுங்கள். சமபந்தருக்கு ஒரு விண்ணப்பம். - வ.ஐ.ச. ஜெயபாலன் . தனி நபர் சர்வாதிகாரத்தில் இருந்து தமிழரசுக் கட்சியையும் கூட்டமைபையும் காப்பாற்றுங்கள். . சம்பந்தர் ஐயாவுக்கு பணிவான வேண்டுகோள். 1970பதுகளில் திருசெலவம் போன்றவர்கள் செல்வநாயகத்தின் முதுமையை பயன்படுத்தி உள்நோக்கங்களுடன் தமிழரசுகட்சியை கைபற்றினார்கள். அவர்கள் காலம்காலமாகக் கட்ச்சியை வளர்த்த விசுவாசிகளை வெளியேறச் செய்தனர். கட்ச்சியை வலுவிளக்க செய்தார்கள். இது இளைஞர்களின் விரக்திக்கு வழிவகுத்தது. . வரலாறு தெரிந்த நீங்களே அத்தகைய ஒரு சூழலுக்கு வழிவகுக்கலா…

    • 3 replies
    • 849 views
  21. இலங்கை அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஒவ்வொரு தரப்பினதும் நகர்வுகள் – விரிவான ஒரு அரசியல் அலசல் பட மூலம், MONEY1055 அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டம். தாம் முன்கூட்டியே திட்டமிட்டு எந்த காய்களையும் நகர்த்த முடியாது. எதிராளி நகர்த்தும் காய்களுக்கு ஏற்பவே நமது காய்களை நகர்த்த முடியும். சில நேரம் சம்பந்தம் இல்லாமல் சில காய்கள் நகர்த்தப்படுவது போல பார்வையாளர்களுக்கு இருந்தாலும், அந்த நகர்வுகள் கூட எதிராளியை இறுதியில் திணற வைக்கும். தற்போது இலங்கை அரசியல் நகர்வுகளை உற்றுநோக்கும் போது, சில காய்கள் பார்வையாளர்களுக்காக நகர்த்தப்படுவது போலவும், சில காய்கள் தத்தமது இறுதி வெற்றிகளை நோக்கி நகர்த்தப்படுவது போலவும் தோன்றுகிறது. ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து…

  22. வலைவீச்சு – பி.மாணிக்கவாசகம் November 3, 2018 ஒரு வாரமாகத் தொடர்கின்ற பரபரப்பான அரசியல் நெருக்கடிக்கு நவம்பர் 5 ஆம் திகதி திங்கட்கிழமை முடிவேற்படுமா, எத்தகைய முடிவேற்படும் என்பதை அறிய, நாட்டு மக்களும், ஐநா உள்ளிட்ட சர்வதேசமும், ஜனநாயகத்தின் மீது பற்றுள்ள பலதரப்பினரும் ஆவலாக இருக்கின்றார்கள். நாட்டின் அதி உயர் அரச அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றியபோது, அரசியலில் பரம எதிரியாகக் கருதப்பட்ட ஒருவரை பிரதமராக்கி, பதவியில் இருந்தவரைப் பதவி நீக்கம் செய்ததுடன் நில்லாமல், நாடாளுமன்றத்தையும் நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிஸ்டத்திற்கு ஒத்தி வைத்ததையடுத்தே, இந்த அரசியல் நெருக்கடி உருவாகியது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி…

  23. முஸ்லிம் அரசியல்வாதிகள்: மக்களின் நிலைப்பாடு என்ன? மொஹமட் பாதுஷா / 2018 நவம்பர் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:49 Comments - 0 உலக அரசியல் அரங்கில், நாமறிந்த காலத்தில் கேள்விப்பட்டிராத அரசியல் திருப்பமொன்று, இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு திரைப்படத்தின் ‘கிளைமக்ஸ்’ காட்சி போல, அன்றேல் திருப்புமுனை போல, இந்த மாற்றம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த நகர்வுகள் எங்கே சென்று முடியப் போகின்றன என்பதும் அவை, முஸ்லிம்கள் மீது, எவ்வாறான விளைவுகளைக் கொண்டு வரப்போகின்றன என்பதும்தான் தெரியவில்லை. நல்லாட்சி அரசாங்கம், சாத்தியமான எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்டது என்பதையும் அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை, முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிரான…

  24. இத்தனை குழப்பங்களுக்கும் யார் பொறுப்பு? கே. சஞ்சயன் / 2018 நவம்பர் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:26 Comments - 0 ஒக்டோபர் 26ஆம் திகதி மாலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றிய எதிர்பாராததொரு நாடகத்தின் அதிர்ச்சியில் இருந்து, இன்னமும் பலர் வெளிவரவில்லை; வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள். “அவர் இப்படி ஏமாற்றுவார் என்று, நாங்கள் நினைக்கவில்லை. கழுத்தறுத்து விட்டுப் போய்விட்டார்” என்று புலம்புகின்ற நிலை, அரசியல் கட்சிகளிடத்தில் மாத்திரமன்றி, அவருக்கு வாக்களித்த மக்களில் பெரும்பாலானோருக்கும் இருக்கிறது. அதுபோல, சர்வதேச சமூகத்தின் கணிசமான பகுதிக்கும், அந்தக் கவலையும் அதிர்ச்சியும் இருக்கின்றன. மைத்திரிபால சிறிசேன இந்த முடிவைத் திடீரென அறிவிக்க…

  25. குமுதம் ரிப்போட்ட்ரில் இன்று (02.11.2008) வெளிவந்த கட்டுரையின் முழுவடிவ்ம். . இலங்கை அரசியல் நெருக்கடிகளும் சீனாவின் சதுரங்கமும் - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் . முன்னைநாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழராலும் சிங்கள ஜனநாயக சக்திகளாலும் மேற்குலகின் மனித உரிமை அமைப்புகளாலும் போர்க்குற்றம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டபட்டவர். தனது ஜன்மவிரோதியான மகிந்த ராஜப்கசவை சிறைக்கு அனுப்புவேன் என சூழுரைத்துவந்த இலங்கை ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன அக்டோபர் 26ல் திடீரென மகிந்த ராஜபக்சவை இலங்கையின் பிரதமராக நியமித்துள்ளார். இதை உலகநாடுகள் எதிர்பார்க்கவில்லை. . மகிந்த உலகறிந்த சீன ஆதரவாளர். அவருக்குச் சீனா தேர்தல் ந…

    • 0 replies
    • 391 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.