Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஹெல்சிங்கியில் ட்ரம்ப் புட்டின் உச்சி மாநாடு அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பூகோ­ளத்தில் முதன்­மை­யான தலைவர் மட்­டு­மல்ல அண்மைக் காலங்­களில் உலகின் கவ­னத்தை பல வழி­க­ளிலும் ஈர்த்த தலைவர் என்று துணிந்து கூறலாம். கொரிய தீப­கற்­பத்தில் யுத்தம் ஒன்று வரு­குது பார் என்ற நிலை­யி­லி­ருந்து வட­கொ­ரிய அதி­ப­ருடன் சிங்­கப்­பூரில் உச்­சி­ம­ா­நாடு நடத்தி, கொரிய தீப­கற்­பத்தில் பதற்றத்தை நீக்கி, பேச்­சு­வார்த்தை நகர்­வுகள் மூலம் கொரிய பிணக்­குக்கும் வட­கொ­ரி­யாவின் அணு­ஆ­யுத அபி­ல­ாஷை­க­ளுக்கும் முடி­வு­கட்டும் இரா­ஜ­தந்­தி­ரத்தை சாமர்த்­தி­ய­மாக கையாள்­கின்றார்.வட­கொ­ரிய தலை­வ­ருடன் உச்­சி­மாநாடு நடத்­திய சூடு தணிய முன்னர் ரஷ்ய அதிபர் விளா­டிமிர் புட்­டி­னுடன் உ…

  2. மூடி மறைக்க முயலும் செயற்பாடு தமிழ் மக்­க­ளையும் உல­கத்­தையும் ஏமாற்றும் நோக்கில் இலங்கை அர­சாங்­கத்தால் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் காணாமல் ஆக்­கப்பட்டோர் அலு­வ­ல­கத்தை எதிர்த்தும் அமர்வைப் புறக்­க­ணித்தும் கடந்த 14 ஆம் திகதி சனிக்­கி­ழமை யாழில் காணாமல் ஆக்­கப்­ப­ட்­டோரின் உற­வுகள் பலர் மாபெரும் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். அர­சாங்­கத்தால் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் காணாமல் ஆக்­கப்­ப­ட்டோர் தொடர்­பான அலு­வ­லகம் மாவட்டம் தோறும் காணாமல் போனோரின் உற­வு­களை சந்­தித்து உரை­யா­டி­வரும் நிகழ்ச்­சித்­திட்­டத்­துக்கு ஏற்ப யாழ். வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடத்­தப்­பட்ட கலந்­து­ரை­யா­டலை உற­வி­னர்கள் முற்­றாக புறக்­க­ணித்­தது மாத்­தி­ர­மன்றி எதிர்ப…

  3. அபாய அறிவிப்பு! பி.மாணிக்­க­வா­சகம் பிராந்­திய சுயாட்­சியின் கீழ் சமஷ்டி முறையில் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுக்க வேண்டும் என்­பதே, ஆயுதப் போராட்டம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டதன் பின்னர் தமிழர் தரப்பு அர­சி­யலின் அடிப்­படை நோக்­க­மாகும். அந்த நோக்­கத்தை நிறை­வேற்­று­வ­தற்கு அல்­லது அந்த இலக்கை அடை­வ­தற்கு அவ­சி­ய­மான செய­ற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­னவா என்­பது கேள்­விக்கு உரி­ய­தா­கி­யி­ருக்­கின்­றது. இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு, இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கா­கச் செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்தின் மூலம் மாகா­ண­சபை ஆட்சி முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­…

  4. அரச தலை­வர் தேர்­த­லும் -சிறு­பான்­மை­யின மக்­க­ளும்!! எதிர்­வ­ர­வுள்ள அரச தலை­வர் தேர்­த­லில் இம்­முறை சிறு­ பான்­மை­யின மக்­கள் அக்­கறை காட்­டு­வார்­க­ளென எதிர்­பார்க்­க­மு­டி­யாது. கடந்த தேர்­த­லில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வு­ககு ஆத­ர­வாக வாக்­க­ளித்து அவரை வெற்­றிப் பாதைக்கு இட்­டுச் சென்­ற­வர்­கள் சிறு­பான்­மை­யின மக்­களே என்­பதை எவ­ருமே மறந்­தி­ருக்க மாட்­டார்­கள். ஆனால் இம்­முறை அவ்­வா­றா­ன­தொரு நிலை காணப்­ப­ட­வில்லை. அடுத்த அரச தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து இதுவரை முடிவு இல்லை மகிந்த அணி­யைப் பொறுத்…

  5. விக்கியின் உண்மையான முகத்தை சம்பந்தன் வௌிப்படுத்துவாரா? விரை­வில் மாகா­ண­ச­பைத் தேர்­தல் இடம்­பெ­ற­வுள்­ள­தால் சம்­பந்­த­னும், விக்­னேஸ்­வர­ னும் சந்­தித்­துப்­பேசி தமிழ் மக்களுக்கு நன்மை யளிக்கத் தக்க நல்­ல­தொரு முடி­வைக்­காண வேண்­டு­மென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின் பிரித்­தா­னி­யக் கிளை­யி­னர் வலி­யு­றுத்­திக் கேட்­டுக்­கொண்­ட­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. முத­ல­மைச்­சர் பத­விக்கு வந்­த­தில் இருந்து விக்­னேஸ்­வ­ரன் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான கொள்­கை­க­ளையே கடைப்­பி­டித்து வரு­கின்­றார். அவர் பத­விக்கு வந்­த­தன் பின்­னர் இடம்­பெற்ற தேர்­தல்­கள்…

  6. 48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 48 ஆண்டுகள் ஆகின…

  7. மத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா? “இந்திய நிறுவனத்துடன் இணைந்து, மத்தல விமான நிலையத்தை இயக்க முடியும் என்று நம்புகிறோம்; எனவே. எல்லாவற்றையும் சீனா தான் மேற்கொள்ளுகிறது என்று யாரும் இனிமேல் குற்றம்சாட்ட முடியாது” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளைச் சமநிலையில் வைத்திருப்பதற்காக, இலங்கை அரசாங்கம் நடத்தி வருகின்ற போராட்டத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் கைகளுக்குச் சென்றதை இந்தியா விரும்பவில்லை. அது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இந்தியா கருதுகிறது. இத்தகைய …

    • 1 reply
    • 594 views
  8. நிலைமாறுகால நீதி கிடைக்குமா? பி.மாணிக்கவாசகம்… நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் ஒன்றாகிய காணாமல் போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. அந்த அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து, சர்வதேச விசாரணையே தேவை என கோரி, அதற்கு எதிராக, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றார்கள். இந்த மாவட்டங்களில் காணாமல் போனோருடைய உறவினர்களுடன் நடத்திய அமர்வின்போதே, காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது. . யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும், கிளிநொச்சி பல…

  9. குரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம் கலர்கலராய் காகிதங்கள் கப்பலாகி, கடல் நடுவே காத்துக்கிடப்பது போல, உண்மைகள் மறைக்கப்பட்டு, ஊடக ஒளியில் புதிய சித்திரம் எமக்காய் தீட்டப்படுகிறது. உணர்வுப் பிழம்புகளாய் அதை ஏற்றுக்கொண்டாடி, நாம் மகிழ்ந்திருக்கிறோம்; திருவிழா முடிந்தது. ஈழத்தமிழரும் குரோஷியர்களிடம் கற்க, நிறைய உண்டென,வெற்றியில் மகிழ்ந்திருப்போம். உண்மைகளைக் கொஞ்சமும் தேடி அறிய,ஆவலாய் இல்லாத சமூகம், தனக்கான புதைகுழியைத் தானே தோண்டுகிறது. கால்பந்தாட்ட உலகக்கிண்ணம் முடிந்துவிட்டது. பேச்செல்லாம் குரோஷிய அணி பற்றியும் அனைவரையும் கட்டியணைத்த குரோஷிய ஜனாதிபதி பற்றியுமாய் இருக்கிறது. …

  10. சவால்களை எதிர்நோக்கும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கம் இலங்­கை­யில் தமி­ழ­ரின் மர­பு­ரிமை உட்­பட்ட சுய­நிர்­ணய உரி­மைக்­காகப் போரா­டிய இயக்­கங்­க­ளில் தனித்­து­வ­மா­ன­தொரு பேரி­யக்கமாகும். புலி­கள் இயக்­கம் ஆரம்­பித்த காலம் தொடக்­க­ம், இன்­று­வரை இலங்கைத் தமி­ழர்­கள் உரிமை, அர­சி­யல், சக­வாழ்வு, சமூ­கம் என்ற சகல சந்­தர்ப்­பங்­க­ளி­லும் அவர்­க­ளது பெயர், பேச்­சுக்குப் பேச்­சும், வரிக்கு வரி­யும் உச்­ச­ரிக்­கப்­ப­டா­மல் இல்லை. ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கா­க­வும், வேண்­டப்­பட்ட விடு­த­லைக்­கா­க­…

  11. அருமைத்தம்பிமாரும் “My Boys” களும் செலுத்திய நன்றிக்கடன்!? தமிழர்களின் எதிரிகள் யார்….? உறைபொருளும் மறைபொருளும்! யேசுநாதர் ஒரு வெள்ளிக்கிழமையன்று 12 பேருடன் (அவருடன் சேர்த்து மொத்தம் 13 பேர்) விருந்துக்குச்சென்றபோதுதான் யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டதனால் கிறீஸ்தவர்களில் பலர் 13 ஆம் திகதி வரும் வெள்ளிக்கிழமை தினத்தை கவலையோடுதான் எதிர்நோக்குவார்கள். ஐரோப்பிய நாடுகளில் 13 ஆம் திகதி வெள்ளியன்று வந்தால் வேலைக்குச்செல்வதற்கும் சற்று தயங்குவார்களாம்! அவ்வாறு ஒரு 13 ஆம் திகதியன்று இலங்கையில் அவலச்சம்பவம் ஒன்று நடந்தது. ஆனால், அது ஒரு வியாழக்கிழமை வந்தது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் வரும்போது, எனக்கு மனதில் இனம்புரியாத கலக்கம் வரும். …

    • 0 replies
    • 572 views
  12. மரண தண்டனை விடயத்தில் நேர்மையான ஒருவரைத் தேடித் தாருங்கள் அடிக்கடி சர்ச்சைகளைக் கிளப்பி வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்முறை மரண தண்டணை விடயத்தில் சர்ச்சையொன்றைக் கிழப்பிவிட்டுள்ளார். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகக் கூறியே, அவர் இந்தச் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார். போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் சிறையிலிருந்தும், அத்தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், அவர்கள் விடயத்தில் மட்டும், மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால்…

  13. அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கி குற்றச்சாட்டும் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக, பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்திருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் குழப்பங்கள் குறித்து, ஆராய்வதற்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை விசேட சபை அமர்வொன்று நடாத்தப்பட்டது. அங்கு பேசும் போதே, அஸ்மின் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். கூட்டமைப்புக்குள் இருக்கும், முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிரான அணியில் அங்கம் வகிப்பவர்களில் அஸ்மினும் ஒருவர். அ…

  14. அவுஸ்திரேலியாவுக்கு நன்றி, கனடாவை பின்பற்றி அவுஸ்திரேலியாவும் புலம் பெயர்ந்த தமிழர்களை அங்கீகரித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இவற்றின் மகுடமாக அவுஸ்திரேலியா தமிழை தேசிய மொழியாக அங்கீகரித்தமையை கொண்டாடலாம். வாழும் நாடுகளில் உடலும் வடகிழக்கு இலங்கையில் மனசுமாக எழுச்சி பெறும் புலம் பெர்ந்த இளம் தமிழர் சக்தியை அரசியல் தீர்வுமூலம் இலங்கை அரசு அரவணைத்துக் கொள்ள வேண்டுமென்பது என்னுடைய கோரிக்கையாக உள்ளது. வடகிழக்கு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பலப்பட்டு வருகிறார்கள். இந்திய தமிழர்களதும் இந்தியாவினதும் கரிசனை ஈழத் தமிழர்களை மட்டுமன்றி மலையக தமிழர்களை உள்ளடக்கியதாகும். . …

    • 2 replies
    • 632 views
  15. பா.ஜ.கவின் பதற்றம் மிகுந்த பயணம் பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரை, பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அமித்ஷா, பாட்னாவுக்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்திய அரசியல் வானில் உதிக்கப் போகும் புதிய கூட்டணிகள் எது என்பது, இன்னும் தெளிவாகாத நிலையில், இருக்கின்ற கூட்டணிக் கட்சிகளை இழந்து விடக்கூடாது என்ற, தாமதமான முயற்சியின் ஒரு பகுதியாக, இப்போது அமித்ஷா- நிதிஷ் குமார் சந்திப்பு நடைபெற்றுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை, நாட்டில் உள்ள பல கட்சிகள் எதிர்த்த போது ஆதரித்தவர் பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார். அதுவே பிறகு பா.ஜ.கவின் நட்புக்கு ஆதாரமாக அமைந்தது. …

  16. http://www.kaakam.com/?p=1234 புலம்பெயர்ந்தோரின் செயற்பாடுகளும் தமிழீழ மீட்புக்கான அரசியலும் இடைவெட்டுவதன் நிகழ்தகவு சுழியமா?-மான்விழி காலனியக் கல்வி பெற்று தமது காலனிய எசமானர்களின் நல்ல பணியாளர்களாகி எசமானர்களின் நாடு வரை சென்று பணியாற்றிப் பொருளீட்டல் என்பது கல்வித்துறையில் பெற்ற உச்ச அடைவெனச் சிந்திக்கும் காலனியடிமை மனநிலையின் தொடர்ச்சியாக புலம்பெயர்ந்தோர், உடலுழைப்பை ஊரிற் செலுத்துவது மான இழுக்கென்று சிந்திக்கும் சிந்தையில் பார்ப்பனியத்தன்மை கொண்டவர்கள் சொந்த மண்ணில் உடலுழைப்பைச் செலுத்தாது வெளிநாடு சென்று பொருளீட்டலாம் என முடிவெடுத்துப் புலம்பெயர்ந்தோர், இனக் கலவரங்களின் தொடர்ச்சியால் தமது உயர் நடுத்தரக் குடும்ப வாழ்க்கை இலங்கைத்தீவில் பாதுகாப்பற்றதெனவுணர்ந…

  17. புள்ளிகள் இல்லாத புள்ளிகள் கடந்த வாரம் முல்லைத்தீவில் நடைபெற்ற மரணக்கிரியையில் பங்குபற்றுவதற்காகச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு, அவலக் குரல் அழுகைக் குரல் கேட்டு வானமே ஒரு கணம் அழுதது. ஆனால், ஐம்பது வயதை அண்மித்த அம்மா ஒருவர், இம்மியளவும் அசராமல் இருந்தார். மெல்ல அவரை அணுகி, காரணத்தை வினாவியபோது, பதில் தூக்கிவாரிப் போட்டது. “2009ஆம் ஆண்டு மேமாதம் தொடக்கம், அழுதழுது எனது கண்ணீரீன் இருப்புத் தீர்ந்து விட்டது” என்றார். அன்றைய தினம், பொதுச்சந்தை செல்வதற்கான தேவை ஏற்பட்டது. நேரம் காலை பத்து மணி; சந்தை களை கட்டியிருந்தது. “ஒரு பக்கத்தால அடி விழுந்தா தாங்கலாம்; ஆனா எல்லாப் பக்கங்களாலும் அடி வி…

  18. விடு­த­லைப் புலி­க­ளின் மீளு­ரு­வாக்­கம் தரு­ணத்­துக்­கேற்ற அர­சி­யல் பூச்­சாண்டியே வட­ப­குதி தமிழ் மக்­கள் மத்­தி­யில் நில­வும் விடு­த­லைப் புலி­க­ளின் ஆத­ரவு மன­நிலை குறித்து ஆய்ந்­த­றிந்து அதற்­கான நட­வ­டிக்கை தொடர்­பாக தீர்­மா­னிப்­ப­தற்­காக சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் பிரதி அமைச்­சர் மற்­றும் பொலிஸ்மா அதி­பர் ஆகி­யோர் அண்­மை­யில் வட­ப­கு­திக்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­த­னர். நாட்­டின் வடக்கு மற்­றும் கிழக்கு பிர­தே­சங்­க­ளில் மட்­டு­மல்­லா­மல் நாட்­டின் ஏனைய பிர­தே­சங்­க­ளில் வாழும் தமிழ் மக்­கள் மத்­…

  19. கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் ? யதீந்திரா வடக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு முன்பதாகவே அடுத்த முதலமைச்சர் யார் என்னும் கேள்வி எழுந்துவிட்டது. கேள்வி எழுந்தது மட்டுமல்ல, அது வடக்கில் தேனீர் கடையிலிருந்து வெற்றிலைக் கடைவரையில் பேசு பொருளாகவும் இருக்கிறது. தமிழரசு கட்சியின் தலைவராக கருதப்படும் மாவை சேனாதிராஜா தொடக்கம் பாதர் இம்மானுவல்வரையில், பலரது பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் – அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அல்லது எந்தவொரு கட்சிiயும் சாராதவரா? தமிழ் அரசியல் அரங்கில் மன்னிக்க வேண்டும் தற்போதுள்ள தமிழ் தேசிய அரசியல் அரங்கில் இவ்வாறான கேள்விகளையோ அல்லது அதனை அடியொற்றிய உரையாட…

  20. பதவி நீடிப்பும் பின்­ன­ணியும் -சுபத்ரா இறுதிப் போரில் முக்கிய பங்காற்றிய இராணுவ அதிகாரிகளை ஒருவாறு ஒதுக்கித் தள்ளி வந்துள்ள அரசாங்கம், அதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான், மீண்டும், லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு சேவை நீடிப்பை வழங்கியுள்ளது. நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராகப் பேசுவோர், செயற்­ப­டு­வோரை இரா­ணுவ முகாம்­க­ளுக்குள் அனு­ம­திக்கக் கூடாது என்ற கடு­மை­யா­ன­தொரு உத்­த­ரவை இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க அனைத்து பற்­றா­லியன் கட்­டளை அதி­கா­ரி­க­ளுக்கும் பிறப்­பித்து, ஒரு வார காலத்­துக்குள் அவ­ருக்கு சேவை நீடிப்பு அளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அண்­மையில் யாழ்ப்­பா­…

  21. விக்னேஸ்வரன் தாண்ட வேண்டிய கண்டங்கள்! முதலை நீருக்குள் அமிழ்ந்திருக்கும் போது யானைப் பலத்துடனிருக்கும். அதைத் தரையில் எடுத்துப் போட்டால் அதன் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்லலாம் என்று கூறப்படுவதுண்டு. அப்படித்தான் பாம்பும். பாம்புக்குத் தரையில் வயிறு படும் வரைதான் பலமெல்லாம். அதைத் தரையிலிருந்து தூக்கி விட்டால் அது பலமிழந்து விடும். கழுகு பாம்புடன் மோதும் போது அதைத்தான் செய்வதுண்டு. பாம்பின் வாலைப்பிடித்து வானில் தூக்கி விட்டால் பாம்பு அதன் இயங்குதளத்தை இழந்து விடும். பலத்தையும் இழந்து விடும். அரசியலிலும் அப்படித்தான். தனது பலம் எது – பலவீனம் எது – தனக்கு பலமான களம் எது – பலவீனமான களம் எது என்பதைக் குறித்து சரியாக முடிவை எடுப்பவரே சிறந்த தலை…

  22. விஜயகலாவின் கூற்றுக்கான -காரணத்தை அரசு -இனியாவது கண்டறியுமா? கடந்த காலங்­க­ளி­லும் விடு­த­லைப் புலி­களை மீண்­டும் கொண்டு வரு­வ­தற்­குப் பல அர­சி­யல்­வா­தி­கள் முயற்­சித்­த­னர். அவர்­கள் அனை­வ­ரும் தற்­போது ஆறு­அடி நிலத்­திற்­குள் முடங்­கிக் கிடக்­கின்­ற­னர். இதுவே விஜ­க­லா­வுக்­கும் நடக்­கு­மென முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும், தற்­போது அமைச்­சர் பொறுப்­பில் உள்­ள­வ­ரு­மான சரத் பொன்­சேகா கூறி­யுள்­ளதை சாதா­ர­ண­மாக எடுத்­துக்­கொள்ள முடி­யாது. இறு­திப்­போர் இடம்­பெற்­ற­போது இரா­ணு­வத் தள­ப­தி­யாக இருந்­த­வர் சரத்­பொன்­சேகா. அ…

  23. தமிழர்களை மேலும் வதைப்பது நியாயமா? இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வை வழங்­காது இழுத்­த­டிப்­ப­தன் மூல­மாக நாட்­டில் இன்­னு­மொரு ஆயுத மோத­லுக்­குத் தூபம் இடப்­ப­டு­கின்­ற­தா­வென்ற சந்­தே­கம் எழும்­பி­யுள்­ளது. நீண்ட ஆயுத மோதல் ஒன்று இடம்­பெற்று முடி­ந்து 10 ஆண்­டு­கள் பூர்த்­தி­யா­கப் போகின்றன. இந்­தப் போரி­னால் ஏற்­பட்ட அழி­வு­கள் கணக்­கிட முடி­யா­தவை. இந்த நாடு சகல துறை­களி ­லும் பின்­தங்கி நிற்­ப­தற்கு நீண்டு சென்ற ஆயு­தப் போரே கார­ண­மெ­னச் சொல்ல முடி­யும். நாட்­டின் அரிய வளங்­கள் யாவற்­றை­யும் இந்­தப் போர் ஈவி­ரக்­க­மின்ற…

  24. காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க போராடாத முஸ்லிம்கள் சனத்தொகைப் பரம்பல் மற்றும் அதனது மேல்நோக்கிய வளர்ச்சிப் போக்கு ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல், காணிகள் இல்லாத இனக் குழுமமாக, நாட்டில் பரவலாகவும் குறிப்பாக வடக்கு, கிழக்கிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இழந்த காணிகளை மீட்பதிலோ அல்லது காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலோ, இவர்கள் அக்கறை இல்லாமல் இருக்கின்றமை, மிகவும் ஆபத்தான நிலைமையாகும். பொருத்தமற்ற தலைவர்களையும் அரசியல் பிரதிநிதிகளையும் தெரிவு செய்கின்ற சமூகமும், சமூக அக்கறையற்ற அரசியல்வாதிகளால் ஆளப்படும் மக்கள் கூட்டமும் எவ்வாறான இழப்புகளையும் பின்னடைவுகளையும் சந்திக்கும் என்பதைத்தான், இலங்கை முஸ்லிம்கள் தற்சமய…

  25. சர்வதேச தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் மாநாடு சென்னையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி கூடி ஈழத் தமிழர் இன அழிப்பை சர்வதேச சட்டங்களின் வெளிச்சத்தில் விரிந்த தளத்தில் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை விவாதித்தது. தமிழ்நாடு, சென்னையில் பிட்டி. தியாகராயர் அரங்கில், ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியா வினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி…

    • 0 replies
    • 249 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.