அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
மகிந்த தரப்பின் மூன்றில் இரண்டு சாத்தியமா ? யதீந்திரா தேர்தல் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இதில் மகிந்த தரப்பின் வெற்றி வாய்பிலும், எந்தவொரு பிரச்சினையும் இருக்கப் போவதில்லை. இதுவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான். ஆனால் மகிந்த தரப்பிற்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற முடியுமா என்பது ஒரு பெரிய கேள்வி. கிடைக்கும் தகவல்களின்படி அது இலகுவான ஒன்றல்ல ஆனால் மகிந்த தரப்பு தனது முழு ஆற்றலையும் வளங்களையும் பயன்படுத்தி, தங்களின் வெற்றியை எந்தளவிற்கு பெருப்பிக்க முடியுமோ அந்தளவிற்கு பெருப்பிக்கவே முயற்சிக்கும். பொதுவாக ஒன்றின் பலம் என்பது பிறிதொன்றின் பலவீனத்தில்தான் தங்கியிருக்கின்றது. அரசியலில் ஒவ்வொரு விடயத்தையும் இந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். மகிந்தவின் வெற…
-
- 0 replies
- 389 views
-
-
ஓயும் குரலால் ஓங்கும் பேரினவாதம் கே. சஞ்சயன் / 2020 ஜூன் 12 முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகிக் கொள்ள எடுத்துள்ள முடிவை, சிங்கள, பௌத்த தேசியவாத சக்திகளுக்குக் கிடைத்துள்ள ஒரு வெற்றியாகவே குறிப்பிடலாம். ஏனைய, சிங்களத் தலைவர்களை விட, ஒப்பீட்டளவில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அதிகளவில் புரிந்து கொண்டவர் என்பதும், பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தவர் என்பதும், மங்கள சமரவீர தொடர்பாக, முக்கியமாகக் குறிப்பிடக் கூடிய விடயங்கள். சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை, அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்திய மூவரணியில் முக்கியமானவர் மங்கள சம…
-
- 0 replies
- 436 views
-
-
‘மாவோவாத இயக்கத்துக்கு சர்வதேச ரீதியில் பெரும் கோட்பாட்டு பங்களிப்புச் செய்த தலைவர்’- பிறந்ததின நூற்றாண்டில் சண்முகதாசனை நினைவுகூருதல் – கலாநிதி ஜெகான் பெரேரா அரசியல் ஆளுமை ஒருவரை அவர் வாழ்ந்த காலகட்டத்தின் பின்புலத்தில் வைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும்.ஆனால், அவரது செயற்பாடுகளின் நீடித்த பொருத்தப்பாட்டை உறுதிசெய்து பின்னறிவைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் மதிப்பிடலாம். ‘ தோழர் சண் ‘ என்று பிரபலமாக அறியப்பட்டிருந்த நாகலிங்கம் சண்முகதாசனின் பிறந்ததின நூற்றாண்டை (2020 ஜூலை 3) முன்னிட்டு அவரைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை செய்வது பொருத்தமானதாகும் என்று நம்புகிறேன். கடந்தகால நிகழ்வுகளின் தொடரை திரும்பிப்பார்ப்பதை நாம் வாழும் இன்றைய தருணத்தில் இருந்து தொடங்குவோம். ‘ மன…
-
- 0 replies
- 284 views
-
-
திலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது – நிலாந்தன் BharatiSeptember 19, 2020 நிலாந்தன் அமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக் கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில் அதிகம் கவனிப்பைப் பெற்ற ஒளிப்படம் ஒன்று உண்டு. அதில் அரைக் கால்சட்டை அணிந்த ஒரு போலீசார் வீதியில் விழுந்து கிடக்கும் ஒரு சத்தியாகிரகியின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்துக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் காணப்படும் சத்தியாகிரகி அரசையாதான். அவரை 1990களின் தொடக்கத்தில் ஒரு தேவைக்காக நான் சந்தித்தேன். அப்போது கேட்டேன் “தமிழரசுக்கட்சி உண்மையாகவே சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதா? காந்தி …
-
- 0 replies
- 536 views
-
-
மனிதகுல நீதிக்கான குரல் கொண்ட கௌரவமான தேசிய இனம் நாம் தத்தர் ஜனநாயகக் கண்ணோட்டம் இன்றி உலகக் கண்ணோட்டம் இன்றி ஒரு தேசிய கட்டுமானம் அமைய முடியாது. அதே வேளை 'சரியாக நடந்தால் மட்டும் போதாது சரியாக நடந்ததாகக் கருதப்படவும் வேண்டும்'. பரப்புரை என்பது எதிரியை அம்பலப்படுத்துவதிலும் எம்மை நியாயப்படுத்துவதிலும் அடங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையோடு எதிரி தன்னைத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளான். ஆனால் அந்த அம்பலப்பட்டுள்ள நிலையை அரசியல் தீர்மானங்களாக்கவேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. இந்நிலையில் நாம் எம்மை அதிகம் நியாயப்படுத்தி எதிரிக்கெதிரான அரசியல் தீர்மானங்களை உருவாக்கவேண்டும். உலகில் நாம் வெடிகுண்டு வைப்பவர்களாயும், மனித வெடிகுண்டுகளாயும், பயங்கரவாதிகளாயும…
-
- 0 replies
- 750 views
-
-
-
இலங்கையின் இராஜ தந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா.? சீனத் தூதுக்குழுவின் வருகை இலங்கை சீன நட்புறவை மேலும் பலப்படுத்திய போதும் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் அதிகம் பாதித்துள்ளதை காணமுடிகிறது. குறிப்பாக சீனாவின் உதவிகளை கடன் பொறி எனக்கூறமுடியாதென்ற கருத்தினை இலங்கையின் ஜனாதிபதி வலியுறுத்தியதுடன் இலங்கையின் இறைமையை சர்வதேச அளவில் பாதுகாக்கும் என சீனாவின் உயர்மட்ட தூதுக் குழு தெரிவித்திருந்தது. கடந்த 26.09.2020 அன்று இந்திய இலங்கை பிரதமர்களது உரையாடலை அடுத்து பெரும் இராஜதந்திர நகர்வுகள் ஆரம்பமாகியது.இத்தகைய சந்திப்புக்கு வழிவகுத்த இந்தியத் தூதுவருடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உரையாடலாகும். அதன் பிரதியாகவே சீனாத் தூதுக்குழுவின் வருகை அம…
-
- 0 replies
- 457 views
-
-
ஜெனீவாத் தொடர் கதை -எம்.எஸ்.எம். ஐயூப் எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டம், நெருங்கி வரும் நிலையில், இலங்கையில் மனித உரிமை விவகாரமும் சூடு பிடித்து வருகிறது. சகல தமிழ் அரசியல் கட்சிகளும், ஒருமித்த நிலைப்பாட்டில் இருந்து, மனித உரிமைப் பேரவையை எதிர்கொள்ள வேண்டும் என்ற தொனிப் பொருளிலேயே இந்தக் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. மனித உரிமைப் பேரவையின் 45 ஆவது கூட்டத்தில், சகல தமிழ்க் கட்சிகளும் கூட்டாகச் செயற்பட வேண்டும் என்பதை, அக்கட்சிகள் வலியுறுத்திக் கூறுகின்றன. ஆனால், கூட்டாக என்ன செய்ய வேண்டும் என்பதில், அவற்றுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதாகவே தெரிகிறது. அந்த ஒருமித்த கருத்து என்ன என்பது தொடர…
-
- 0 replies
- 560 views
-
-
இந்திய அரசியல் நடுநிலைமைத் தன்மையின் அரசியல் 46/1 ஜெனிவாத் தீர்மானத்தில் இந்தியாவின் வகிபங்கு தொடர்பில், அதனுடைய அரசியல் ஆட்டம், வகிபங்கு நடுநிலையானதா அல்லது பக்கச் சார்பற்றதா? என்ற விவாதம் பொதுப்பரப்பில் பேசு பொருளாக உள்ளது. அரசியலில் நடுநிலைக் கருநிலைக் கோட்பாடு என்று ஒன்று உள்ளதா? இல்லையா? அதற்குப் பின்னால் உள்ள அரசியல் தொடர்பில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது. நடுநிலை வகித்தல் போரைத்தடுக்குமா? அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட சமூகத்திற்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்குமா? என்ற வினாவிற்கான விடை பெரும்பாலும் ‘இல்லை’ என்றே தோன்றும். இந்திய சுதந்திரத்தின் பின்னர், ஐ.நா. சபையின் இரண்டாவது பொது அமர்வில், இந்தியா, தென்னாபிரிக்க கறுப்பின அடக்குமுறைக்கெதிராக தனது காட…
-
- 0 replies
- 533 views
-
-
நெருக்கடிக்குள்ளாகும் சர்வதேச உறவுகளும், புதிய உலக ஒழுங்கும் 39 Views பனிப்போரின் முடிவில் இருந்து நிலவிய ஐக்கிய அமெரிக்காவின் தலமையிலான ஒரு துருவ உலக ஒழுங்கின் (unipolar world order) ஒப்பீட்டு உறுதித்தன்மை (stability) மற்றும் பொருளாதார வளர்ச்சியானது, இன்று உறுதி அற்ற ஒழுங்கு நிலை குலைந்த பல்துருவ உலக ஒழுங்கிற்கு (multi polar world) மாற்றம் பெற்று வருகின்றது. முன்னாள் ஐக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை, அமெரிக்க-சீனா புவிசார் அரசியல் மோதல், சீனா மற்றும் ரஷ்யாவின் வளர்ந்து வரும் நெருக்கம், உள்ளக நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் ஐரோப்பா மற்றும் பிரெக்ஸிட் (Brexit) என்று அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்…
-
- 0 replies
- 561 views
-
-
‘பிணங்களோடு வாழ்’ “பிணங்களோடு வாழ்” என்று உங்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. இதற்கு நீங்கள் சம்மதிப்பீர்களா? அரிச்சந்திர மகாராஜா, சுடுகாட்டில் பணிசெய்தார் என்பதற்காக, நீங்களும் அப்படிச் செய்யத் தயாரா? சிவபெருமான் சுடலைப் பொடியைப் பூசுகிறார். ஆகவே, நீங்கள் அப்படிச் சுடலைச் சாம்பரைப் பூசுவீர்களா? இப்படியெல்லாம் ஏன் கேட்க வேண்டியிருக்கிறது என்றால், புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையத்துக்கு அண்மையில் இருக்கும் மக்களை, “பிணங்களோடு கூடி வாழுங்கள். பிணங்கள் எரிக்கப்படும் புகையைச் சுவாசித்து இன்புறுங்கள். மயானமும் உங்களுடைய வீடும் ஒன்றாக இருப்பதில் என்ன பிரச்சினை? எரியும் பிணத்தைப் பார்த்துக்கொண்டே நீங்கள் தூங்கலாம், …
-
- 0 replies
- 593 views
-
-
13வது திருத்தமும் தமிழ் சமூகமும் டிசம்பர் 26, 2021 இலங்கை – இந்திய சமாதான உடன்படிக்கையின் விளைவாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 13ம் திருத்தம் காரணமாகவே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதையும் அது தற்போது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக ஆகி இருப்பதையும் நாம் அறிவோம். கடந்த இரண்டு வருடங்களாக பேசப்படாமல் இருந்த இந்த 13ஆவது திருத்தம் தற்போது தமிழ் அரசியலில் பேசு பொருளாக மாறி இருப்பதால் அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தமிழர்கள் அதிகாரங்களைக் கேட்பது இலங்கையில், குறிப்பாக தேசிய அரசியலில், கெட்ட வார்த்தையாக மாறியிருப்பதால், தமிழ்க் கட்சிகளின் கோரிக்கையான 13ம் திருத்த சட்டத்தை முழுமையாக அமுல…
-
- 0 replies
- 350 views
-
-
தமிழீழ விடுதலையை ஈட்டுவதற்கேற்ற வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை தத்தர் தற்போது இலங்கைத்தீவு சார்ந்து காணப்படும் புவிசார் அரசியல் யதார்த்தமும், தமிழீழ விடுதலையை ஈட்டுவதற்கேற்ற வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை ஈழத்தமிழர் தேசியப் பிரச்சனையானது புவிசார் அரசியல் பிரச்சனைக்குள் சிக்குண்டுள்ள ஒரு பிரச்சனையாகும். தேசிய இனப்பிரச்சனை என்பது ஒருபோதும் ஓர் உள்நாட்டுப் பிரச்சனையல்ல. அது எப்போதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும். இத்தகைய இரண்டு அடிப்படைகளையும் வைத்தே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வடிவமைக்க வேண்டும். சுமாராக ஒன்றரை லட்சம் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி இன்றைக்கு ஐந்து ஆண்டுகளாகின்றன. அதன் பின்பும் எதிரி தனது ஒடுக்குமுறைகளை பல வகைகளிலும், பல பரிமாணங்களிலும் அதிகரி…
-
- 0 replies
- 700 views
-
-
கொமன்வெல்த் அமைப்பின் தலைவரால், கொமன்வெல்த் நாள் நிகழ்விலோ, கொமன்வெல்த் போட்டிகளிலோ பங்கேற்க முடியாது போனது இதுவே முதல்முறை என்று - சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் கார்வண்ணன். ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோவில் நடைபெறும் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்காததற்கான காரணங்களை விபரித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அனுப்பியுள்ள கடிதம், இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. சிறிலங்கா அதிபருக்கு எதிரான, புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை ஒடுக்க, பிரித்தானிய அரசாங்கம் தவிறிவிட்டதாக, அதில் காரணம் கூறப்பட்டிருந்…
-
- 0 replies
- 649 views
-
-
இலங்கை இஸ்லாமியர்களின் அரசியல் பலம் தமிழர்களுக்கு இணையானதாக வளர்ந்து வருகிறது
-
- 0 replies
- 333 views
-
-
ரசிய உக்ரெய்னில் நடத்திய பொது வாக்கெடுப்புக்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையிலெடுக்க வேண்டிய இந்தியா இலங்கையில் சீன எதிர்ப்பைவிட இந்திய முதலீடுகளுக்கான கடும் எதிர்ப்பைக் கண்டுகொள்ள மறுக்கும் புதுடில்லி உக்ரெய்னின் நான்கு பிராந்தியங்களை ரசிய பொது வாக்கெடுப்பின் மூலம், இணைத்துக் கொண்டமை தொடர்பாக இந்தியப் பேரரசுக்குப் பெரும் இராஜதந்திரச் சோதனை ஏற்பட்டுள்ளது. புதுடில்லி தனது நிலைப்பாட்டை விரைவில் விளக்குவோமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதாக ரூதமிழ் (totamil) என்ற இந்திய செய்தி இணையத்தளம் தொிவித்துள்ளது. இந்த வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபையும்…
-
- 0 replies
- 632 views
-
-
எங்கே நிம்மதி? அங்கே எமக்கோர் இடம்வேண்டும்.... மார்ச் மாதம் 26ஆம் திகதி, திங்கட்கிழமை, காலை ஏழு மணி. யாழ். பஸ் தரிப்பு நிலையத்தில், கிளிநொச்சி செல்வதற்காக காத்திருந்தேன். “வவுனியா... வவுனியா....” எனக் கூவி வந்த, தனியார் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். அரச உத்தியோகத்தர்களால் பஸ் நிறைந்து காணப்பட்டது. பக்தி கீதங்களால் அனைவரும் பரவசம் பெற்ற நிலையில் பயணம் தொடர்ந்தது. கொடிகாமம் சந்தியை அண்மித்தவேளை, வானொலி அலைவரிசையை, சாரதி தட்டி விட்டார். அதில் அன்றைய பத்திரிகைச் செய்திகள் ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்தன. “யாழ்ப்பாணம் இன்று சுதந்திர நாடு” என்றிருந்த பத்திரிகை தலைப்பின் செய்தி தொடர்ந்தது. பஸ்ஸுக்குள் இருந்தவர்கள், மற்ற…
-
- 0 replies
- 429 views
-
-
கூட்டமைப்பின் மே தின பிரகடனமும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கையும் தமிழ் மக்களின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பில் தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியல்யாப்பு அமையவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதுடன் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இவ்வாண்டுக்குள் காணப்படவேண்டும் என்று அரசாங்கத்திடமும் அரசியல் கட்சிகளிடமும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலும் கிழக்கில…
-
- 0 replies
- 363 views
-
-
ஈரான்: சூழும் போர்மேகங்கள் போரின் அவலம் சொல்லி மாளாதது. ஆனால், போர்கள் இன்றிய காலமொன்றை வரலாற்றில் காணவியலாது. இன்று, போர்கள் பலரின் சீவனோபாயமாகி விட்டன. ஆயுத விற்பனை ஒருபுறமும், அதிகாரத்துக்கான ஆவல் மறுபுறமும் எனப் போர்கள் இன்று தவிர்க்க இயலாதனவாகி விட்டன. போர்கள் பற்றிய அறிக்கையிடல்களும் அதன் அவலத்தையன்றி, நவீன தொழில்நுட்பத்தையும் வெற்றியாளர் யார் என்பதையும் தெரிவிக்கும் தன்மையுடையனவாய் மாறிவிட்டன. இன்று, ஈரானைப் போர்மேகம் சூழ்ந்துள்ளது. அதற்கான முதலாவது அடியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம்…
-
- 0 replies
- 645 views
-
-
MANO GANESAN AND NORTH EAST MERGER. மனோ கணேசனும் வடகிழக்கு இணைப்பும் விவாதங்கள். . வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டுமென 21.05.2018 அன்று மட்டக்ககளப்பில் நடந்த ஊடக சந்திப்பில் மனோ கணேசன் தெரிவித்தார். இது கிழக்கு தமிழர் மத்தியில் பேராதரவையும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் உருவாக்கி உள்ளது. முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பை ஆதரிக்கக்கூடாது என்றும் மனோகணேசன் கிழக்குமாகான மக்கள் பிரச்சினையில் தலையிடக்கூடாது அவர் மலையக மக்கள் பிரச்சினையை மட்டும் பார்கட்டும் என்றும் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான விடயங்களில் ஆய்வு செய்கிறவன் என்கிற வகையில் என் கணிப்புக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். . வடகிழக்கு இணைப்பு பற்றி மனோ கணேசன் குறிப்பிட்ட…
-
- 0 replies
- 409 views
-
-
விஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய சர்ச்சையால், இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்த விஜயகலா மகேஸ்வரனின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் நிலைக்குமா என்பது இப்போது கேள்விக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. பிரதமரும், ஐ.தே.க தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் அழுத்தங்களை அடுத்து, விஜயகலா மகேஸ்வரன், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் அரசியலைத் துறந்து, வெளிநாடு ஒன்றில் புகலிடம் தேடவுள்ளதாகச் சில தகவல்கள் வெளியாகின. ஆனாலும் அவர், அதனை நிராகரித்திருக்கிறார். இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும், விஜயகல…
-
- 0 replies
- 662 views
-
-
‘றோவின் கரங்களும்’ மோடி – மஹிந்த சந்திப்பின் அரசியலும் யதீந்திரா படம் | Reuters, ALJAZEERA அண்மையில் இலங்கைக்கு இரு நாள் விஜயமாக வந்துசென்ற இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு அமைவாக சில நிகழ்வுகளில் பங்குகொண்டிருந்தார். மோடி – மஹிந்த சந்திப்பும் அவ்வாறான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால், மேற்படி மோடி – மஹிந்த சந்திப்பு ஏனைய நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாவே தெரிகிறது. ஏனெனில், மோடி – மஹிந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பதாக மஹிந்த இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், இந்திய வெளியக உளவுத் துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அமைப்பானது (Research and Analysis Wing) அமெரிக்க வெளியக உளவுத்…
-
- 0 replies
- 510 views
-
-
இந்திய - சீன - அமெரிக்க போட்டிக்குள் அகப்பட்டுக் கொள்ளும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனாவுக்கான தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல்- தானி, குறுகிய நேர இலங்கைப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். கடந்த மார்ச் 24ஆம் திகதி பகல், சில மணித்தியாலங்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்த அவரது பயணத்தின் போது, சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன. எனினும், அவரது பயணத்தின் நோக்கம் குறித்து அதிகம் பேர் அக்கறை கொள்ளவில்லை. அவர் தனது பயணத்தின்போது, மத்தள சர்வதேச விமான நிலையத்தை, குத்தகைக்குப் பெறுவதற்கு விருப்பம் வெளியிட்ட பின்னர் தான், அவரது வருகையின் சூத்திரம் பலருக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது. அம்…
-
- 0 replies
- 316 views
-
-
எதைச் செய்ய முடியும்? Norman Finkelstein அவர்கள் 1953 இல் அமெரிக்காவில் பிறந்த யூத இனத்தவர். அவரது பெற்றோர் இருவரும் நாசிகளின் இருவேறு கொன்சன்றேசன் முகாம்கள் (Auschwitz, Majdanek) இலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள். இவர்கள் 1995 இல் காலமாகினர். பின்கல்ஸ்ரைன் அவர்கள் அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியும், பேராசிரியரும் எழுத்தாளரும் ஆவார். அவர் சியோனிசம், கொலோகாஸ்ற் என்பன குறித்து நூல்கள் எழுதியவர். அவர் The Jimmy Dore Show க்கு 12.10.2023 இல் வழங்கிய நேர்காணலில் அவர் முன்வைத்த கருத்துகளை நன்றியுடன் தமிழாக்கம் செய்திருக்கிறேன். யார் காஸா மக்கள்?. 70 வீதமான காஸா மக்கள் 1948 யுத்தத்தின் போதான அகதிகள் அல்லது அந்த அகதிகளின் வாரிசுகள். இஸ்ரேலிய அரசால் துரத்தப்பட்ட …
-
- 0 replies
- 342 views
-
-
'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம். சமகாலத்திற்குப் பொருத்தமான பலஸ்தீன போராட்ட அமைப்புகளான பற்றா [FATAH] மற்றும் ஹமாஸ் [Hamas] இயக்கங்களுக்கிடையில் கடந்த ஏப்ரல் 27ம் திகதி கைச்சாத்தான உடன்படிக்கை, அதனுடைய தாக்கம் போன்றவை ஈழத்தமிழர்களுக்கு சொல்லும் பாடம் என்னவென்பதை இம்முறை பத்தியிலே அலசுவோம். தேசிய விடுதலைக்காக போராடும் இனங்களின் ஆயுதங்களும், களங்களும், அந்த இனங்களின் விடுதலைக்காக போராடும் போராட்ட அமைப்புக்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை. காலப்போக்கில் இதில் ஒரு மாற்றம் வரலாம், ஆனால், ஆரம்பக் கட்டம் அடக்குமுறையாளர்களாலேயே இது நிர்ப்பந்திக்கப்படுகிறது. இந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில், நிகழ்வுகளுக்கு பிரதிபலிப்பதாக போராட்டங்கள் உருவாகும் போது பிளவுகள…
-
- 0 replies
- 602 views
-