அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
முடிவுறாத அரசியல் போரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் இலக்கும்? - யதீந்திரா ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெறவுள்ள ஒரு தேர்தல் என்னும் வகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் உள்ள அதிருப்திகளை காண்பிக்க இது பொருத்தமான தருணமல்ல. இவ்வாறு நான் குறிப்பிடும் போது, இது ஒரு வழமையான கதைசொல்லல் போன்று தெரியக் கூடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்னும் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைத்து வந்த நானே, இவ்வாறு கூறும் போது இதனை சில வாசகர்கள் ஆச்சரியமாகவும் பார்க்கலாம். ஆனால் இங்கு விளங்கிக்கொள்ள வேண்டிய விடயமோ வேறு. அதாவது, எனது கருத்து…
-
- 0 replies
- 374 views
-
-
தேசிய (இனப்) பிரச்சினை: தமிழ்த் தேசிய அரசியற் தீர்வுகளைக் கேள்விக்குட்படுத்தல் படம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரினதும் தேர்தல் பிரசாரங்கள் இலங்கைத் தீவில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த உரையாடல்கள் மீது தீவிரமாகக் கவனம் செலுத்துகின்றன. தென்னிலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் பிரதானமான அரசியற் கட்சிகள் யாவும் சமஷ்டியினையும், சுயநிர்ணய உரிமையினையும் நிராகரித்துள்ள அதேவேளை இந்த இரண்டு தமிழ்த் தரப்புக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகள் திம்புக் கோட்பாட்டினை மையமாகக் கொண்டவையாக இருக்கின்றன. தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தமிழர்களை சுயநிர்ணய உரிமைக்கு உரித்தான ஒரு தேசமாக அல்லது மக்கள் கூட…
-
- 0 replies
- 220 views
-
-
ஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 03 புதன்கிழமை, பி.ப. 12:07 Comments - 0 தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில், இரா. சம்பந்தன் ஆற்றிய உரையில், ஒரு பகுதி கவனம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, “...(நாங்கள்) ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் அரசியல் தீர்வு குறித்து நீங்கள் (அரசாங்கம்) ஆக்கபூர்வமாகக் கருமங்களை ஆற்றுவீர்கள்; (எம்மிடம்) ஆயுதப் பலம் இல்லாவிட்டால், அதைக் கைவிடலாம் என்று நினைப்பீர்கள் என்றால், அதுவொரு தவறான நிலைப்பாடாகும்...” என்கிற பகுதி, ஊடகங்களில் பல்வேறு தொனியில் அர்த்தப்படுத்தப்பட்டு, செய்திகளாக வெளியாகி இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்று, “தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்…
-
- 0 replies
- 653 views
-
-
பிரதமரின் கூற்று சாத்தியமா? எட்டாக்கனியாக உள்ள அரசியல் தீர்வை இன்னும் இரண்டு வருடங்களுக்குள் எட்டிவிட முடியும் என்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பு, சிலருக்கு காதில் தேன் வந்து பாய்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி இருக்க லாம். ஏழு தசாப்தங்களாகப் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினையினால் நாடு எண்ணற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றது. நாட்டின் பொருளாதாரம், மக்களின் சீரான வாழ்வியல், பல்லின மக்களிடையேயான நல்லிணக்கம், நல்லுறவு, சுகவாழ்வு, ஐக்கியம் போன்ற பல பிரச்சினைகளுக்கு நாளாந்தம் முகம் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு மக்கள் ஆளாகியிருக்கின்றார்கள். தீர்க்கப்படாத இனப்பி…
-
- 0 replies
- 564 views
-
-
தமிழர் அரசியல் நிலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் Editorial / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:58 -இலட்சுமணன் தமிழர் அரசியல் வரலாற்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்தபின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே, விடுதலைப் புலிகளின் அரசியல் நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்தியவர்கள்; அவர்கள் பாதையில் தமிழர்களை நெறிப்படுத்தியவர்கள் என்ற விசுவாசம், தமிழ் மக்களின் இதயங்களில் உணர்வுபூர்வமாகக் கொலுவீற்றிருக்கின்றது எனலாம். இந்தப் பின்புலத்தில், தமிழ் மக்களின் விடுதலை உணர்வை, அதன் அடையாளமாக அவர்கள் சந்தித்த தியாகங்கள், இழப்புகள் அதன்வழி அடிநாதமாக மேற்கிளம்புகின்ற அரசியல் பிம்ப உலாவுகைகள், தேசிய, சர்வதேச மட்டங்களில் பேசுபொருளாக அடையாளப்படுத்…
-
- 0 replies
- 605 views
-
-
‘பட்டலந்த அறிக்கை’ என்னும் ‘பூமராங்’ முருகானந்தம் தவம் ஜே .வி.பியினரின் (மக்கள் விடுதலை முன்னணி) ஆயுதக் கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கவென 1988, 1989களில் நடத்தி செல்லப்பட்டதாகக் கூறப்படும் ‘பட்டலந்த வதை முகாம்’ தொடர்பான ‘பட்டலந்த அறிக்கை’ 25 வருடங்களின் பின்னர், தூசி தட்டப்பட்டு வெளியே எடுக்கப்பட்டு தற்போதைய ஜே.வி.பி., என்.பி.பி. அரசினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நாள் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையில், அந்த அறிக்கை தொடர்பில் இலங்கையில் மீண்டும் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச ஆட்சி புரிந்த காலத்தில், இளைஞர் விவகார, தொழில் வாய்ப்புக்கள் அமைச்சராகவும், பின்னர் கைத்தொழில் அமைச்சராகவும் இருந்த ரணில் வ…
-
- 0 replies
- 247 views
-
-
சர்வதேசத்திடம் கையேந்தி நிற்போருக்கு... சர்வதேச அரசியலோ, இராஜதந்திர உறவுகளோ, வெறும் கூட்டல் கழித்தல் கணக்கல்ல. அவை எந்தவொரு பொதுச் சூத்திரத்தின் அடிப்படையிலும் விளங்கிக்கொள்ளக் கூடியவையல்ல. அவை, தேசநலன்களாலும் தந்திரோபாய, மூலோபாயத் தேவைகளின் அடிப்படைகளிலும் வழிநடத்தப்படுபவை ஆகும். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழ் மக்களுக்கு ஆதரவானதெனவும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம், இப்போது தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதற்காக, முன்னெப்பொழுதையும் விட, மிகுந்த முனைப்புடனும் அக்கறையுடனும் செயற்படுகின்றது என்ற பொய்களின் சாயம், வெளுத்துக் காலம் கடந்து விட்டது. ஆனாலும், இன்னமும் சர்வதேசத்தின் மீது நம்பிக்கை …
-
- 0 replies
- 607 views
-
-
கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் - செம்மணி - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணபட்டு வருகின்ற நிலையில், அந்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதம் 03ம் மற்றும் 04ம் தேதிகளில் அந்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மேலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த ஸ்கேன் மேற்கொள்ளப்படவுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் இயந்திரத்தின் ஊடாக, குறித்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனிதா ஞானராஜா த…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
வட்டுக்கோட்டை தீர்மானமும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினையும்! 1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றோடு அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. மித வாத அரசியலில் தமிழ் தரப்புக்கள் சந்தித்த தோல்விகள் மற்றும் அனுபவங்களால் தனித் தமிழீழம் அமைக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு நகர்ந்தமையே வட்டுக் கோட்டைப் பிரகனடம் ஆகும். தந்தை செல்வநாயகம் தலையில் கூடிய மாநாட்டில் 01. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.02.அதில்…
-
- 0 replies
- 542 views
-
-
சுவிற்சலாந்தின் நல்லிணக்க நகர்வுகள் – நிலாந்தன். இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் சுவிற்சலாந்து ஆர்வத்தோடு காணப்படுவதாக தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரச பிரதிநிதிகளும் தீர்வு முயற்சிகள் தொடர்பாக உரையாடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை சுவிற்சலாந்து ஏற்படுத்திக் கொடுத்தது. சுவிற்சலாந்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது துறைசார் நிபுணர்களும் அங்குள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த சந்திப்பின் அடுத்த கட்டமாக கடந்த வாரம் கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதுவரின் இடத்தில் காலை உணவோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.இதில் அழைக்கப்பட்ட தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சிலர் …
-
- 0 replies
- 140 views
-
-
சாவினை அடுத்த சாணக்கியம் என்ன? ப.தெய்வீகன் அந்த இரண்டு இளைஞர்களின் படுகொலையும் ஓர் இனத்தின் மீதான பேரதிர்வாக மீண்டுமொரு தடவை தமிழ்நிலத்தில் பதிவாகியிருக்கிறது. தங்களின் உதிரத்தில் ஓடுகின்ற வக்கிரத்தினை மறைத்துக்கொள்ள முடியாமல்போன, இன்னொரு உக்கிர தருணமாகிப்போன அந்த மரணங்கள் தமிழர் பிரதேசங்களில் துண்டுப்பிரசுரங்களாக மாத்திரம் பறந்து கொண்டிருக்கின்றன. போருக்குப் பின்னர் தவணை முறையில் இடம்பெற்று வருகின்ற எத்தனையோ மரணங்களில் இதுவும் ஒன்றாகச் சேர்ந்துள்ளது. இந்தச் சாக்குரலின் சத்தங்களுக்கும் நீதியை நோக்கிய கேவல்களுக்கும் என்ன நடந்துவிடப்போகிறது என்று பார்த்தால், புங்குடுதீவுச் சம்பவமாகவும் வவுனிய…
-
- 0 replies
- 300 views
-
-
துமிந்த சில்வாவிற்கான பொது மன்னிப்பும், அரசியற் கைதிகளின் விடுதலையும் என்.கே.அஷோக்பரன் தன்னை “மனித உரிமைகளின் பாதுகாவலன்” என்று பறைசாற்றிக்கொள்ளும் மனோ கணேசன் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வேண்டி 150 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கைப் பத்திரத்தில் தானும் கையெழுத்திட்டிருந்தார். இந்த விஷயம் வௌியானதும், அதற்கு அவர் கொடுத்த முதல் விளக்கத்தில் “இளைஞன், குடிபோதையில் தவறிழைத்துவிட்டார்” என்று சொன்னார். அதற்கு எதிர்ப்பு வலுக்கவே அதை அப்படியே கைவிட்டுவிட்டு, இரண்டாவது இன்னொரு விளக்கத்தைக் கொடுத்தார். இரண்டாவது விளக்கத்தில், “இந்த ஆவணத்தில் நான் கையெழுத்திட்டது, இதன் மூலம் ஏற்படும் பிரச்சாரத்தை பயன்படுத்தி, தசாப்தகாலமாக சிறைவாசம் அனுபவிக்கும…
-
- 0 replies
- 487 views
-
-
தடையை நீக்கினால் தடம் பிறக்கும் – முனைவர் ஆ. குழந்தை, சென்னை 23 Views பிரித்தானிய நடுவர் மன்றம் கடந்த அக்தோபர் திங்கள் தமிழீழ விடுலைப் போராளிகளைக் கொண்ட விடுதலைப்புலி இயக்கத்திற்கு தடை விதித்திருப்பது தவறு என்ற தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு சிங்கள பேரினவாத, பௌத்த இராணுவ அரசு தடையை நீக்கக் கூடாதென இங்கிலாந்து அரசை வலியுறுத்துகிறது. இந்திய அரசின் ஆதரவையும் பெற முயற்சிக்கிறது. 15. 11. 2020 ஞாயிறு அன்று கனடாவில் உள்ள ஒந்தாரியோ கொள்கை ஆய்வு மையம் தடையை நீக்குவதால் வரும் கற்பனை செய்யப்பட்ட ஆபத்துகளைப்பற்றி கருத்தரங்கு நடத்தியது. அதில் பிரகாசு ஆ. ஷா, மிசுக்கா குவ்சுகா, மனிசு ஆப்ரேட், நேவில் கேவாசு ஆகியோர் கலந்துகொண்டு கருத்த…
-
- 0 replies
- 541 views
-
-
இலங்கை தொடர்பான தீர்மானத்தின் உத்தேச வரைவு Digital News Team 2021-02-20T20:59:14 தீர்மானத்தின் வடிவம். இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் மனித உரிமைகள் பேரவை பிபி 1: ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்துதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய கருவிகளை நினைவுபடுத்துதல், பிபி 2: இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை 19/2, 22/1 2…
-
- 0 replies
- 650 views
-
-
இலங்கை முஸ்லிம்களை தீவிரவாதத்தோடு முடிச்சுப்போடல் - மொஹமட் பாதுஷா கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதக் குழுக்கள் இரண்டுக்கு இடையில் இடம்பெற்ற பரஸ்பர மோதல்கள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இந்தச்சம்பவத்தை முஸ்லிம் தீவிரவாதமாகக் காட்டுவதற்கான முயற்சிகளும் சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்துவதற்கான கைங்கரியங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இன்னும் சொல்லப் போனால், எப்போது இப்படியான ஒரு பிரசாரத்தை முன்னெடுக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்த நாசகார சக்திகளுக்கு, முஸ்லிம்களே அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடு…
-
- 0 replies
- 514 views
-
-
மற்றொரு இனப்படுகொலைக்கு திட்டமா? கொரோனா பாதுகாப்பில் காட்டப்படும் பாரபட்சம் எழுப்பியுள்ள கேள்விகள் – அகிலன் 27 Views சென்ற வார மின்னிதழ் கட்டுரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில், கொரோனா தொற்றைப் பயன்படுத்தி மற்றொரு இனப்படுகொலைக்கு அரசாங்கம் திட்டமிடுகின்றதா என்ற கேள்வி தமிழ்த் தரப்பினரால் எழுப்பப்பட்டிருக்கின்றது. கொரோனா தொற்று இலங்கை முழுவதிலும் வேகமாகப் பரவி வருவதற்கு அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் தான் காரணம் என்பதை சிங்கள மக்களும் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளமைதான் அரசுக்கு இன்றுள்ள பிரச்சினை. சிங்கள மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ள ஒரு நிலையில்தான், வடக்கில் …
-
- 0 replies
- 317 views
-
-
இனப்படுகொலையை வீரமாக சித்திரிப்பவர்களால் நீதியை நிலைநாட்ட இயலாது! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் உலகில் அன்னையர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஒரு முக்கியமான இடமும் வரலாறும் உண்டு. அன்னையர்கள் தலைமுறைகளால் பூமியை உருவாக்கியவர்கள். தங்கள் மாசற்ற தாய்மையால் எல்லோராலும் நேசிக்கப்படுபவர்கள். தாய்மை என்பது மனிதர்களுக்கு மாத்திரம் உரிய விடயமில்லை. விலங்குகளிடமும் பறவைகளிலும் தாய்மையின் உன்னததத்தைப் பார்க்கிறோம். அன்னையர்கள் தவித்தால் அந்த தேசம் அநீதியில் மாண்டிருக்கிறது என்றே அர்த்தம். அன்னையர்கள் தவித்து வாழும் தேசங்களில் வடக்கு கிழக்கு தமிழ் தேசமும் ஒன்று. ஈழம் முழுக்க முழுக்க அன்னையர்களின் தவிப்பாலும் கண்ணீராலும் ஏக்கத்தாலு…
-
- 0 replies
- 246 views
-
-
யாரை ஏமாற்றும் முயற்சி? வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று கடந்த அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் நடத்தப்பட்ட முக்கியமான கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா பொதுமக்களின் காணிகளை சுவீகரித்து வைத்திருப்பதற்கு இராணுவத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், தாம் அவ்வாறு காணிகளைச் சுவீகரிக்கவுமில்லை என்…
-
- 0 replies
- 542 views
-
-
ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியா –ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விவகாரம் பாரப்படுத்தப்படாமல் தடுக்கப்பட வேண்டுமானால், அமெரிக்க- இந்திய ஒத்துழைப்பு இலங்கைக்கு அவசியமானது– சீன விரிவாக்கத்தினால் அமெரிக்காவுடன் இந்தியாவுக்குத் ஏற்பட்டுள்ள தவிர்க்க முடியாத நெருக்கம், ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தானதே— -அ.நிக்ஸன்- இந்தோ- பசுபிக், தென்சீனக் கடல் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள கொதிநிலைமை, தலிபான் தீவிரவாதிகளின் மீள் எழுச்சிக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான ஓகஸ்ட் மாதத்துக்குரிய தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தோ- பசுபிக் பாதுகாப்புத் திட்டத்திற்கான…
-
- 0 replies
- 548 views
-
-
வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் அரசியல் January 12, 2016 Photo: VATICAN NEWS ‘ஹெரோயினின் அரசியல்: பூகோள போதைப்பொருள் வர்த்தகத்தில் சி.ஐ.ஏயின் உடந்தை ஆப்கானிஸ்தான், தென் கிழக்காசியா, மத்திய அமெரிக்கா, கொலம்பியா’ என்ற நூல் அல்பிரட் W.மக்கோய் அவர்களால் திருத்திய பதிப்பாக 2005இல் வெளிவந்தது. இராணுவ ஆக்கிரமிப்பின் பின்னர் வடக்கு – கிழக்கில் இலங்கை அரசு பன்முக போர் முனையை விரிவாக்கியது. நில ஆக்கிரமிப்பு, சிங்கள – பௌத்த மயமாக்கம், இராணுவ மயமாக்கம், வரலாற்றியல் திரிபு இன்னும் பிற. அவற்றில் மிக முக்கியமான புதிய போர்முனைக்களமாக போதைப் பொருள் மீதான போர் முக்கிய பேசு பொருளாக மாறியது. போதைப்பொருள் பாவனை இளைஞர்கள் மத்தியில் பூதாகரமான விளைவாக வெளிவந்த போது, அதனை குற…
-
- 0 replies
- 407 views
-
-
நாங்கள் பசியோடு இருக்கிறோம்- என்று தணியும் இந்த இன்னல் வாழ்வு சொல்ல முடியாத துன்ப வாழ்வு. இலங்கைத் தீவின் 22 மில்லியன் மக்களின் வாழ்வு பெரும் பொருளாதார அரசியல் பிரச்சினைக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. இலங்கையின் சுதந்திரம் அடைந்த காலத்தின் பின் இதுவே முதற் தடவையாக இப்படியோர் பாரிய பிரச்சினையை இலங்கை மக்கள் எதிர் நோக்குகின்றனர். எரிக்க எண்ணெய் இல்லாமல் உண்ண உணவில்லாமல் வாழ வழி இல்லாமல் அன்று சொல்ல முடியாத துன்பத்தில் சோமாலியா இருந்தது போல் இன்று இலங்கை இருக்கிறது. நாங்கள் பசியோடு இருக்கிறோம் என்கிறார்கள் இலங்கை மக்கள். எல்லோரும் அதிகார ஆசை மதவாத அரசியல் இனவாத பேச்சு இப்படி எத்தினையாய் மதம் என்றும் இனம் என்றும் வெறுப்போடும் மனிதம் தொலைந்து சரியான கொள்…
-
- 0 replies
- 400 views
-
-
பிணைமுறி விவகாரமும் அடுத்த கட்ட நகர்வுகளும் இலங்கை மத்திய வங்கியில் கடந்த 2015 பெப்ரவரி முதல் 2016 மார்ச் 31 வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அந்த அபிப்பிராயங்களில் அனேகமானவை அக்காலப்பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடிகள் நிகழ்ந்ததாக கூறுகின்றன. நிதி, அதிகார ரீதியிலான துஷ்பிரயோகங்கள், சிறப்புரிமை துஷ்பிரயோகம் என அப்பட்டியலை குற்றச்சாட்டின் அடிப்படையில் நீட்டிச் செல்லலாம். இந் நிலையில் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகத்தின் போது உண்மையிலேயே மோசடி இடம்பெற்றதா என ஆராய ஜனாத…
-
- 0 replies
- 509 views
-
-
சிறிலங்காவின் தற்போதைய ஒற்றையாட்சி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும்: ஜெயதேவ உயங்கொட சிறிலங்காவின் தற்போதைய ஒற்றையாட்சி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சிங்களப் பேராசிரியரான ஜெயதேவ உயங்கொட வலியுறுத்தியுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ரெடிஃப் இணையத்தளத்துக்கு அவர் அளித்த நேர்காணல்: இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண காலனியாதிக்க காலத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை மறுசீரமைக்க வேண்டும். ஆனால் சிங்கள அரசியல் சக்திகள் அரச கட்டமைப்பை மாற்றத் தயாராக இல்லை. 25 ஆண்டுகாலம் இனப்பிரச்சனை நீடிக்கின்ற போதும் கூட சிங்கள அரசியல் சக்திகள் இம்முடிவுக்கு வரவில்லை. தற்போதைய சிறிலங்கா அரசியல் யாப்பானது ஒற்றையாட்சியைத்தான் வரையறுக்கிறது. ஆனால் …
-
- 0 replies
- 1.1k views
-
-
புவிசார் - அரசியல், புவிசார் - பொருளாதாரம் சீனாவுக்குப் புத்துயிர் கொடுக்கும் இந்தியா தேச நலன் என்ற போர்வையில் ஈழத்தமிழர் விவகாரத்தை ஓரக் கண்ணால் பார்க்கும் டில்லி ரசிய - உக்ரெயன் போர்ச் சூழலில், ரசியாவைத் தனிமைப்படுத்த ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ள கடும் முயற்சிகளுக்கு மத்தியில், சீனா தனித்து நின்று ரசியாவுக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றது. ஆனால் இதுவரையும் சீனா ரசியாவுக்கு ஆயுதங்கள் எதனையும் வழங்காத சூழலில், ரசியாவை ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகள் முன்னிலையில் தனித்துவம் மிக்கதாகக் காண்பிக்கவே சீனா முற்படுகின்றது. அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்று உலக அரசியல் …
-
- 0 replies
- 255 views
-
-
சுமந்திரனை வளர்க்கும் புதிய கூட்டணி புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் எம்.ஏ சுமந்திரன் நுழைந்தது முதல், கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதித்திட்டங்களில் ‘ஆமை’ போன்று ஈடுபட்டதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (ஜ.த.தே.கூ - DTNA)) குற்றஞ்சாட்டுகின்றது. கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ‘சுமந்திரன்’ என்ற பெயர் பிரதான பேசு பொருளானது. “ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை” என்று சுமந்திரன், சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி, அவரை பலமாகப் பதம் பார்த்தது. அவரது கட்சியின் சக வேட்பாளர்களே, அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார்கள். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சுமந்திரனின் பெயர்தான் பிரதா…
-
- 0 replies
- 724 views
-