அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன். எதிர்பாக்கப்பட்டதைப் போலவே உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஒப்பீட்டளவில் அதிக ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத சபைகளில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கிடையே இணங்கிச் செயற்படத் தயாராக இருந்தால் சபைகளை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும். எனவே தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் கட்சிகள் பின்வரும் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்ப கூறுவது போல, உள்ளூராட்சி சபைகள் உள்ளூர் நிலைமைகளுக்கானவை என்ற போதிலும் அவை தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் வழியில் அடிப்படையானவை. கீழிருந்து மேல் நோக்கித்தான் தேசத்தைக் கட்டியெழுப்பலாம். அந்த அ…
-
- 0 replies
- 243 views
-
-
எங்கள் புரட்சி வெற்றி பெற்றது! மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் பிரசன்ட அண்மைக்காலத்தில் ஆயுத மோதல்கள் நடைபெற்ற பல நாடுகளில் சமாதானத்துக்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அவ்வாறு சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் இலங்கைக்கு அண்மையில் உள்ள நேபாளமும் ஒன்று. அங்கு இரண்டு தசாப்தங்களாக அரசுக்கு எதிராக மக்கள் விடுதலைக்காக போராடி வந்த மாவோயிஸ்ட் போராளிகளுக்கும் நேபாள அரசாங்கத்திற்குமிடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. அவ் வுடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் 2006ஆம் ஆண்டின் பிற்பகுதியல் இத்தாலியப் பத்திரிகை ஒன்றுக்கு நேபாள மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர் பிரசண்ட வழங்கிய நேர்காணல் இது. நேர்கண்டவர் அலெக்ஸ்ஸான்ரா கிலியோலி. பிரசண்ட, நாங்கள் தற்போதைய ந…
-
- 0 replies
- 985 views
-
-
எமது உறவிலும் ஒரு புதிய பாதை உலக உறவிலும் ஒரு புதிய பாதை தத்தர் வீழ்ந்தோம் ஆயினும் வெல்வோம் வீழ்ச்சியின் அளவையும் தன்மையையும் விளங்கிக் கொண்டால். நாம்பட்ட இன்னலாலும் எமக்கு ஏற்பட்ட அளப்பெரும் தோல்வியாலும், துயரத்தாலும் எம்மை ஒட்டி இணைக்க முடியவில்லை என்றால் வளம் பொருந்திய எமது பண்பாட்டின் அர்த்தந்தான் என்ன? இந்து மாகடலை செந்நீராக்கிய இரத்தத்தாலும் எம் இதயத்தை கழுவமுடியாது போனதா? ஆறாய்ப் பெருகிய கண்ணீராலும் எம் வேறுபாடுகளைக் கழுவிச் சுத்தம் செய்ய முடியாது போனதா? வரலாறு எழுப்பும் இக் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். வீழ்ச்சியிலிருந்து நாம் மீழ்ச்சி பெறப் போவது எப்போ என்ற கேள்விக்கான பதில் மிகவும் இலகுவானது. எப்போது நாம் எம் வேறுபாடுகளைக் கடந்து துயரப்…
-
- 0 replies
- 682 views
-
-
‘எழுக தமிழ்’: எங்கிருந்து ஆரம்பித்தது, எதனைப் பிரதிபலித்தது? யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி குறிப்பிட்டளவான மக்களின் பங்களிப்போடு முதல்வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின் நீண்ட ஏழரை ஆண்டுகளில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியான கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கு பெருவாரியாக இறங்கிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். தேர்தல் அரசியலில் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து வந்த மக்கள், பொதுத்தள போராட்ட வடிவங்களினூடு ஒருங்கிணைவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதற்கு ‘எழுக தமிழ்’ களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றது. சுமார் 8,000 பேர் முற்றவெளியில் கூடியிருப்பார்கள். …
-
- 0 replies
- 345 views
-
-
மீண்டும் வந்த ஆவா குழு பின்னணியில் யார்? மாணவர்களின் மரணத்துக்கு தமிழ்ப் பொலிஸாரே காரணம் என்பதை வலியுறுத்தும் வகையிலும், அவர்களை இனவிரோதிகளாகவும், சமூக விரோதிகமாணவர்களின் மரணத்துக்கு தமிழ்ப் பொலிஸாரே காரணம் என்பதை வலியுறுத்தும் வகையிலும், அவர்களை இனவிரோதிகளாகவும், சமூக விரோதிகளாகவும் காண்பிக்க முனைந்திருந்தது அந்தத் துண்டுப் பிரசுரம். ளாகவும் காண்பிக்க முனைந்திருந்தது அந்தத் துண்டுப் பிரசுரம். யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆவா குழு பற்றிய பீதி கிளப்பி விடப்பட்டிருக்கிறது. கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியருகே, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால், கொல…
-
- 0 replies
- 647 views
-
-
நினைவேந்தல் உரிமையும் சட்டரீதியான போராட்டமும் -பி.மாணிக்கவாசகம் 41 Views மாவீரர் தின நினைவேந்தலைத் தடுக்க கொரோனா வைரஸ் தடுப்புச் சட்ட நெறிமுறைகள் பயன்படுத்தப்படும் என அரசாங்கம் கூறியிருக்கின்றது. இது ஓர் அபத்தமான முயற்சி. இறந்தவர்களை நினைவேந்துவது ஓர் அடிப்படை உரிமை சார்ந்த விடயமாகும். இதில் கொரோனா தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த ஓர் அரசு முற்பட்டிருப்பதன் மூலம் அதன் இயலாத் தன்மையும், அதன் இனவாதப் போக்கும் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பயங்கரமாக உருவெடுத்துள்ளது. சுகாதாரம் சார்ந்த இந்த விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் கையாள வேண்டியது அரசாங்கத்தின் கடமையும், பொறுப்புமாகும். அதேவேளை, அந்த வைரஸ் தொற்றிப்…
-
- 0 replies
- 426 views
-
-
சட்டத்தரணி எனும் உத்தியோகம் என்.கே. அஷோக்பரன் “பிரபல்யமற்ற நிலைப்பாடுகள் சார்பாகவும் வாதாடுவதுதான், சட்டத்தரணிகளின் கடமை” - போல் க்ளெமெண்ட், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் மன்றாடியார் நாயகம். நேற்றைய தினம், சமூக ஊடகங்களில் பரவலான ஒரு செய்தி, என் கண்களையும் எட்டியது. கொவிட்-19 பெருந்தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் உடலங்கள், எரிக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, முஸ்லிம் மக்களின் சார்பாக, அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் சில, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்தவாரம் இவை விசாரணைக்கு வந்தபோது, குறுக்கீடு செய்யும் மனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, சுயதனிமைப்படுத்தலில் இருப்பதா…
-
- 0 replies
- 642 views
-
-
இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதை தேடும் இலங்கை அரசாங்கம் 33 Views இந்திய நாட்டுக்கும், உலகின் பல நாடுகளுக்கும், இடையில் நடைபெறும் கொள்கலன் மூலமான ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களை ஏற்றி இறக்கும் தொழில் வருமானத்தால்தான், கொழும்பு துறைமுகம் இலாப வருமானம் பெறுகிறது. பல பத்தாண்டுகளாக, பெரிதும் வெளிவராத, உண்மை கதை இதுவாகும். கொழும்பு துறைமுகத்தில் சுமார் 70%க்கு குறையாத கொள்கலன் பரிமாற்றம் இந்திய நாட்டுக்கு போவதும், வருவதும்தான். பெரும் கொள்கலன்களை சுமந்து வரும் பெரிய கப்பல்கள் பொதுவாக தமது பயணத்தில் ஒருசில துறைமுகங்களுக்குதான் போகும். எல்லா துறைமுகங்களிலும் நின்று போவது, வர்த்தக ரீதியாக பெரிய கப்பல்களுக்கு சரிபட்டு வராது…
-
- 0 replies
- 663 views
-
-
வடக்கும் இல்லை – தெற்கும் இல்லை – இந்தியாவின் இராஜதந்திரம் 36 Views ஈழத்தின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு பகுதிகளில், சீனாவின் Sinosar-Etechwin கம்பனியானது இலங்கை மின்சார சபையோடு இணைந்து காற்று-சூரிய ஒளி (Wind-Solar)ஆலைகளை நிறுவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. கொழும்பு துறைமுக கிழக்கு முனையமும் போச்சு. வடக்கின் தீவுகளும் போச்சு. 1974 இல் இலங்கைக்கு இந்தியா வழங்கிய கச்சதீவும் போகலாம். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அபாரம் என நேற்று (7) இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கருக்கு எழுதிய திறந்தமடல் மூத்த அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐக்கிய இலங…
-
- 0 replies
- 642 views
-
-
முள்ளிவாய்க்காலுக்குப் பின்: எதிர்பார்ப்பும் யதார்த்தமும் - யமுனா ராஜேந்திரன் ஜெனீவா ஐ.நா மனித உரிமை அமர்வுகளை முன்வைத்து புகலிட நாடுகளில் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்தன. தமிழகமெங்கிலும் மாணவர்களின் எழுச்சி முக்கியமான நிகழ்வாக இருந்தது. வடகிழக்கில் ராணுவ பிரசன்னத்துக்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. முஸ்லிம்களுக்கும் இலங்கை அரசுக்குமான முறுகல்நிலை அதிகரித்து வருகிறது. தமிழக சட்டசபையில் இலங்கை அரசுக்கு நெருக்கடி தரக்கூடிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. கலைஞர் கருணாநிதியின் திமுக இந்திய மத்திய அரசிலிருந்து வெளியேறியிருக்கிறது. இதனது பெறுபேறுகள் அல்லது விளைவுகள் என்னவாக இருக்கிறது எனப் பார்ப்பதற்கு முன்னால், உலக மற்றும் இந்திய இலங்கை அரசியல் சதுரங்க…
-
- 0 replies
- 663 views
-
-
முன்னாள் போராளிகள் குறித்த தமிழரசுக் கட்சியின் முடிவு முன்னாள் போராளிகளை இணைத்துக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 29) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முன்னாள் போராளிகள் தொடர்பிலான தீர்மானம் கீழ்கண்டவாறு கூறுகின்றது. “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து இறுதி மோதல்களின் போது, அரச படைகளிடம் சரணடைந்து, புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் வாழ்க்கை முறை, சரி…
-
- 0 replies
- 566 views
-
-
தமிழ்மொழியை புறக்கணிக்கிறதா பா.ஜ.க? தி.மு.க கிளப்பும் திடீர் பிரசாரம் மொழிப்போருக்கான களம் மீண்டும் தமிழகத்தில் அமைந்து விடுமோ என்ற அச்ச உணர்வு அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. ஹிந்தி திணிப்பு என்ற காரணத்தையும் ‘நீட்’ தேர்வு எழுதுவதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவில்லை என்ற அடிப்படையிலும் ‘தமிழ் மொழி காப்போம்’ என்று மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம், விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது. ஹிந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் 1967 இல் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது என்பது வரலாற்று உண்மை. ஆனால், அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் இருந்தது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி. இந்த முறை ம…
-
- 0 replies
- 645 views
-
-
2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணக்கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்று தொடர்பாக இலங்கை அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்தது. 2017 செப்டெம்பர் 21 இல் அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழு புதிய அரசியலமைப்பு தொடர்பான தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்வதற்கான யோசனையைக் கொண்டதாக அந்த அறிக்கை அமைந்திருக்கின்றது. இந்த யோசனை பற்றி தமிழர்கள் கேட்டிருப்பதிலும் பார்க்க அதிகளவுக்கு குறைவானதாகும். தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதை நோக்கி அடி எடுத்து வைப்பதாக யோசனைகள் அமைந்திருக்கின்றதா அல்லது 30 வருட கால உள்நாட்டு யுத்தத்திற்கு நாட்டைக் கொண்டு சென்ற துன்பங்களை …
-
- 0 replies
- 413 views
-
-
இலங்கை பதில் ஜனாதிபதி முழு நேர ஜனாதிபதி ஆன முந்தைய வரலாறு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க, இலங்கை புதிய ஜனாதிபதி இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரின் பதவி, இடைநடுவில் வெற்றிடமாகும் பட்சத்தில், அதற்கு மற்றுமொரு ஜனாதிபதியை தேர்வு செய்யும் இரண்டாவது சந்தர்ப்பம் இன்று இடம்பெற்றது. இலங்கையில் இதற்கு முன்பு முதல் முறையாக நாடாளுமன்றத்தால் 'நிறைவேற்று அதிகார ஜனாதிபதி' தெரிவு 1993ஆம் ஆண்டு இடம்பெற்றது. அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாஸ, 1993ம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி, கொழும்பில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தருணத்…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள் சிறிலங்காவிலுள்ள மதில்களில் பரிச்சயமான ஒருவரின் சுவரொட்டிகள் மீண்டும் காணப்படுகின்றன. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவப்படங்களைக் கொண்ட பல ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் மீண்டும் நாட்டில் தென்படுகின்றன. ராஜபக்ச அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணை மற்றும் வெள்ளை வான் கடத்தல்கள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு சிறிலங்காவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற தேர்தலில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு மக்கள் தமது வாக்குகளை வழங்காதமை, அவர்களுக்கு அதிர்ச்…
-
- 0 replies
- 455 views
-
-
புதிய அரசியல் யாப்பு அனைவரையும் திருப்தி படுத்தாதது...பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
-
- 0 replies
- 362 views
-
-
கோமாளிகளா அல்லது கொலைகாரர்களா – எங்களது தெரிவு எது? வியாத் மாவத்தை’’ என்பது ஒரு வழியையோ, பாதையையோ குறிப்பிடுவது அல்ல. மகிந்த சிந்தனை என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதலே அவ்விதம் குறிப்பி டப்படுகிறது என கடந்த ஜூலை மாத முதல் வாரத்தில் மகிந்த ராஜபக்ச நிகழ்வொன்றில் வைத்துக் குறிப்பிட்டிருந்தார். இரத்தினபுரியிலுள்ள ஒரு விகாரையின் விகாராதிபதி, பொலிஸ் சிரேஷ்ட உத்தியோகத்தர் (சார்ஜன்ட்) ஒருவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அது, உணர்ச்சி மிக…
-
- 0 replies
- 504 views
-
-
தமிழ்த் தேசியத்தை சிதைப்பதற்கான தந்திரோபாயங்கள் என்.கே அஷோக்பரன் தேசம், மற்றும் தேசியம் என்றால் என்ன என்பது மிகப்பெரியதொரு ஆய்வுப்பரப்பு. இவற்றை வரவிலக்கணப்படுத்துவது கூட சுலபமான காரியங்கள் அல்ல. புலமைத்தளத்தில் அகநிலை வரவிலக்கணங்கள், புறநிலை வரவிலக்கணங்கள் என்று பல வரவிலக்கணங்களைப் பலரும் வழங்கியிருக்கிறார்கள். என்னுடைய முன்னைய பல பத்திகளில் இவை பற்றி விரிவாகப் பேசியிருக்கிறேன். அது என்ன புறநிலையில் அணுகும் வரைவிலக்கணம்? தேசம் என்ற சொல்லை வரைவிலக்கணம் செய்த சோவியத் யூனியனின் கொம்யூனிஸ சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின், “வரலாற்று ரீதியாகக் கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு …
-
- 0 replies
- 686 views
-
-
-
- 0 replies
- 575 views
- 1 follower
-
-
சிறீதரனுக்கு முன்னுள்ள பொறுப்புக்கள் – நிலாந்தன். January 28, 2024 தமிழரசு கட்சிக்குள் நடந்த தேர்தல் ஏன் முக்கியத்துவமுடையது? செல்வநாயகம் தமிழ் மக்களைக் கடவுளிடம் ஒப்படைத்த பொழுதே அக்கட்சி செயல்பூர்வமாக இறந்து போய்விட்டது. அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு யார் தலைவராக வந்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை என்று ஒரு விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வைக்கப்படுகின்றது. கோட்பாட்டு ரீதியாக அது சரி. ஆனால் நடைமுறையில் தமிழரசுக் கட்சி இப்பொழுதும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. உள்ளதில் பெரிய கட்சி அது. தமிழ் மக்கள் மத்தியில் மக்கள் இயக்கம் எதுவும் கிடையாது. இருக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகள்தான் தமிழ் அரசியலை முன்னெடுக்கின்றார்கள். அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை.…
-
- 0 replies
- 527 views
-
-
தமிழ் - சிங்கள புத்தாண்டு முடிவடைந்த உடனேயே அனைத்து அரசியல் கட்சிகளும் மே தினத்தில் தத்தமது மக்கள் செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக செயற்படத் தொடங்கியுள்ளன. உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினமாக கொண்டாடப்படுகின்ற மே தினம் இலங்கையில் மாத்திரமன்றி பல நாடுகளிலும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். உலகில் நாடுகளுக்கு இடையிலான மேலாதிக்க மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பெரும்பாலும் வல்லரசு நாடுகள், தனக்கு எதிரான நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகார மேலாதிக்க போக்குடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தடை விதிப்பது மாத்திரமன்றி உலக பொருளாதார ஒழுங்கிலிருந்தும் எதிரி நாடுகளை தனிமையப்படுத்துவதன் ஊடாக வல்லரசு நாடுகள் தமது மேலாதி…
-
- 0 replies
- 310 views
-
-
இலங்கை குறித்த இந்தியாவின் வெளிவிவகார கொள்கை மாறாது; உட்கட்டமைப்பு திட்டங்கள் ஏனைய கொள்கைகள் தொடர்பில் கடும் அழுத்தங்களை கொடுப்பதை இந்தியா குறைத்துக்கொள்ளும் - இராஜதந்திர ஆய்வாளர்கள் கருத்து Published By: RAJEEBAN 08 JUN, 2024 | 11:50 AM ECONOMYNEXT SHIHAR ANEEZ இந்தியாவின் பிரதமராக இரண்டு தடவை பதவிவகித்துள்ள நரேந்திரமோடி இந்திய நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறை எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் தேர்தல்முடிவுகள் இலங்கை தொடர்பான அவரது கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையுடனான இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஆக்ரோசமான உந்துதல் குறையலாம்…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
எமது குழந்தைகளின் எதிர்காலம்: வளமா, வங்குரோத்தா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மே 09 வியாழக்கிழமை, பி.ப. 12:16 Comments - 0 குழந்தைகளின் எதிர்காலம் முற்றிலும் அவர்களின் கைகளில் இல்லை; அவர்களின் பெற்றோரின் கைகளிலும் இல்லை; அவர்கள் வாழும் சமூகத்திடமும் இல்லை. மாறாக, உலகத்தின் ஒவ்வோர் மூலையில் இடம்பெறும் சம்பவங்கள்தான், அவர்களின் வாழ்வில் தாக்கம் செலுத்துமாறு, உலகமும் உலக அரசியலும் மாறிவிட்டன. உலகமயமாக்கலிலும் அதன் விளைவுகளிலும் தங்கியிருக்க வேண்டும் என்ற தவிர்க்க இயலாததாகி உள்ள நிலையில், எங்கோ நடப்பதன் பக்கவிளைவு, இங்கேயும் உணரப்படுகிறது. தொடர்ந்து நெருக்கடிக்குள் இருக்கும் உலகப் பொருளாதாரம், உலக அரசியல் ஆதிக்கப் போட்டி, பயங்கரவாதம், ஒருசிலரி…
-
- 0 replies
- 503 views
-
-
‘தன்நெஞ்சறிவது பொய்யற்க’ Editorial / 2019 ஜூன் 27 வியாழக்கிழமை, பி.ப. 12:39 Comments - 0 -இலட்சுமணன் ‘தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற குறளையும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் (தமிழ் ) தரமுயர்த்தலுக்கான பிரச்சினைகளையும் சம்பந்தப்படுத்தி, நண்பர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு அவரது நண்பர், கல்முனை விவகாரம் உக்கிரமடைய நாங்களும் காரணம் அல்ல; புத்த பிக்குகளும் காரணமல்ல; எமது அரசியல்வாதிகளும் இனவாத முஸ்லிம்களுமே காரணம் என்று விளக்கம் ஒன்றைக் கொடுத்திருந்தார். ஆனால், கல்முனை விவகாரத்தில், ‘நிலத் தொடர்பற்ற’ என்ற பதம், மிகப் பெரிதாகவே பேசப்படுகிறது. நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகு என்ற எண்…
-
- 0 replies
- 612 views
-
-
ஜனாதிபதி தேர்தல்-சம்பந்தன் ஐயாவுக்கு பணிவான வேண்டுகோள். - வ.ஐ.ச.ஜெயபாலன் . ஐயா, இன்றைய இந்துசமுத்திர சர்வதேச சூழலில் ஈழத் தமிழரோ மலையக தமிழரோ அஞ்சும் சூழல் இல்லை. அதனால் 13 அம்ச அரசியல் கோரிக்கைகளின் அடிப்படையில் வாக்களிப்பதை உறுதிப்படுத்துங்கள். தமிழ் பேசும் முஸ்லிம்களைபொறுத்து தலைவர்கள் பொறுபோடு தங்கள் முடிவுகளை எடுக்கவேண்டும், . இது சிங்கள மக்கள் மத்தியில் உள்ள பிரிவுகளுக்கிடையிலான மோதல். உங்கள் 13 அம்ச கோரிக்கை எதனையும் ஆதரிக்க மாட்டோம் எங்களுக்கு வாக்களி என எந்த கொம்பனும் எங்களுக்கு சொல்ல முடியாது. செல்வநாயகம் காலத்தில் இருந்தே 1953 கர்த்தால் உட்பட சிங்க்ளவருக்கிடையிலான மோதலில் நாம் எப்பவும் சிங்கள ஜனநாயக சக்திகளோடு நின்றிருக்கிறோம். ஆனால் அவர்கள் எங்கள…
-
- 0 replies
- 601 views
-