அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
மீண்டும் பரபரக்கும் திருகோணமலை - கே.சஞ்சயன் கடந்த பல ஆண்டுகளாகவே இலங்கை அரசியலில் துறைமுகங்கள் பற்றிய சர்ச்சைகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்று வந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில், கொழும்பு துறைமுக நகரச் சர்ச்சை தீவிரமாக இருந்தது. அதற்குப் பின்னர் கொழும்புத் துறைமுகத்துக்கு சீன நீர்மூழ்கிகள் மேற்கொண்ட பயணங்களால் சர்ச்சைகள் எழுந்தன. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், துறைமுக நகரத் திட்டத்தை புதிய அரசாங்கம் இடைநிறுத்தியதாலும், அந்தத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் விடயத்தில் நீடித்த இழுபறிகளாலும் சர்ச்சைகள் எழுந்திருந்தன. …
-
- 1 reply
- 431 views
-
-
நம்பிக்கை பற்றிய கேள்விகள் நம்பிக்கை என்பது அரசியலில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா விடயங்களுக்கும் மிக முக்கியமான கூறாகும். அரசியலில் அசட்டுத் துணிச்சலுடன் மேற்கொள்ளப்படும் நகர்வுகளுக்கு, அளவுகடந்த நம்பிக்கையே காரணமாக அமைகின்றது. அதேபோல், அரசியலைப் பொறுத்தமட்டில் எந்த ஆட்சியாளர் அல்லது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல்வாதி மீதான நம்பிக்கையும் ஒரே சீராக எக்காலத்திலும் தொடர்ச்சியாக இருப்பதில்லை என்பதே மக்களின் அனுபவமாகும். ஆனால் முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள், - ஆட்சியாளர் ஒருவர் மீதான நம்பிக்கையை, வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் தீர்மானிப்பதில்லை. அதற்குப் பின்னால், அவர்களுடனான இவர…
-
- 0 replies
- 430 views
-
-
முதலமைச்சர் சி.வி.யின் அறிவிப்பும் சிந்திக்கவேண்டியதன் அவசியமும் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தனித்தோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதற்கான சமிக்ஞையை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் காண்பித்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் தனது இந்த முடிவு குறித்து சூசகமாக தெரியப்படுத்தியுள்ளார். கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். இதன்போது, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் முதல…
-
- 0 replies
- 430 views
-
-
பால் சமநிலையை பேணத் தவறிய தமிழ் அரசியல்! நிலாந்தன். அண்மையில், தமிழ் கட்சிகளையும் குடிமக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்த ஐரோப்பிய நாடு ஒன்றின் ராஜதந்திரிகள் தங்களைச் சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் ஏன் ஒரு பெண்கூட இல்லை என்று கேட்டிருக்கிறார்கள். அவரை சந்தித்து குழுவில் மட்டுமல்ல, அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு என்று அழைக்கப்படுகின்ற மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கட்டமைப்புக்குள் மொத்தம் 14 பேர்கள் உண்டு. அதில் ஒருவர் கூட பெண் இல்லை. அதுபோலவே தமிழ் கட்சிகள் மத்தியில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் என்று பார்த்தால் அனந்தி சசிதரனின் கட்சியைத் தவிர ஏனைய பெரும்பாலான கட்சிக…
-
- 0 replies
- 430 views
-
-
மீண்டும் தோன்றும் நெருக்கம் இரா.சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இதுவரையில் பகிரங்கமான மோதல்கள் இருந்ததில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவ்வப்போது தனது உரையில் கூட்டமைப்பின் தலைமையை விமர்சித்திருந்தாலும், இரா.சம்பந்தனின் பெயரைக் குறிப்பிட்டு அத்தகைய விமர்சனங்களைச் செய்ததில்லை. அதுபோலவே, இரா.சம்பந்தன் ஒருபோதும், முதலமைச்சர் விக்னேஸ்வரனை விமர்சிக்கவோ, அவரைக் குறை கூறும் வகையிலோ நடந்து கொள்ளவில்லை தமிழ் அரசியல் பரப்பில் அண்மையில் மிகவும் உன்னிப்பாக நோக்கப்பட்ட ஒரு நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் நடந்த “நீதியரசர் பேசுகிறார்” என்ற நூல் வெளியீடு தான். வடமாகாண ம…
-
- 0 replies
- 430 views
-
-
எதுவரை நீளும் இந்த காலஅவகாசம்? - கே.சஞ்சயன் ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வரைவு, மார்ச் 13ஆம் திகதி பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளில், இலங்கை தொடர்பான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட தருணங்களில் எல்லாம், பல்வேறு கலந்துரையாடல்கள், பேச்சுக்கள் என்று இழுபறிப்பட்டு, கடைசி நேரத்திலேயே பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை வரலாறு. உறுப்பு நாடுகளின் போதிய ஆதரவைத் திரட்டுவதற்காகவும், தீர்மான வரைவு தொடர்பாக இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதற்காகவும், இழுபறி நிலை நீடிக்கும். ஆனால், இம்முறை நிலைமை அ…
-
- 0 replies
- 430 views
-
-
https://www.koormai.com/pathivu.html?therivu=2448&vakai=5&fbclid=IwAR0m1zWUvXeFCm4XHM8wrPzEqTKbwUASjJq6ZG0rUXm9wW5Z8gHzJAZFgXA ஜெனீவா மனித உரிமைச் சபையின் மார்ச் மாத அமர்வு ஆரம்பமாவதற்கு இன்னமும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், இலங்கை தொடர்பாக ஆணையாளர் தயாரிக்கவுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டு மேலதிக முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையிலேதான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி மாநாட்டை நடத்தியிருக்கிறார். ஈழத்தமிழர் விவகாரத்தை ஒட்டுமொத்த இலங்கை மக்களின் மனித உரிமைப் பிரச்சினையாக 2015 இல் ரணில் மடைமாற்றியிருந்தார். தற்போது ரணில் முழு அதிகாரம் படைத்த ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், 2015 இ…
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
எங்கே நிம்மதி? அங்கே எமக்கோர் இடம்வேண்டும்.... மார்ச் மாதம் 26ஆம் திகதி, திங்கட்கிழமை, காலை ஏழு மணி. யாழ். பஸ் தரிப்பு நிலையத்தில், கிளிநொச்சி செல்வதற்காக காத்திருந்தேன். “வவுனியா... வவுனியா....” எனக் கூவி வந்த, தனியார் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். அரச உத்தியோகத்தர்களால் பஸ் நிறைந்து காணப்பட்டது. பக்தி கீதங்களால் அனைவரும் பரவசம் பெற்ற நிலையில் பயணம் தொடர்ந்தது. கொடிகாமம் சந்தியை அண்மித்தவேளை, வானொலி அலைவரிசையை, சாரதி தட்டி விட்டார். அதில் அன்றைய பத்திரிகைச் செய்திகள் ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்தன. “யாழ்ப்பாணம் இன்று சுதந்திர நாடு” என்றிருந்த பத்திரிகை தலைப்பின் செய்தி தொடர்ந்தது. பஸ்ஸுக்குள் இருந்தவர்கள், மற்ற…
-
- 0 replies
- 430 views
-
-
கோத்தாவின் வீழ்ச்சி ? -நிலாந்தன்.- ஒன்பதாம் திகதிக்கும் ராஜபக்சக்களுக்கும் பொருந்தி வராது போல? நிச்சயமாக இது ஒரு எண் சோதிடப் பதிவு அல்ல. அல்லது எண் சோதிடத்திற்கும் அரசியலுக்கும் இடையில் இருக்கக்கூடிய தொடர்பு பற்றிய பதிவும் அல்ல. கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி மஹிந்த மூட்டிய நெருப்பு அவருடைய ஆதரவாளர்களின் வீடுகளை எரித்தது. அவர் பதவி விலக நேர்ந்தது. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் வீடுகள் எரிக்கப்பட்டன, சொத்துக்கள் அழிக்கப்பட்டன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு பிரதேச சபை தலைவரும் அடித்தே கொல்லப்பட்டார்கள். இச்சிறிய தீவின் நவீன வரலாற்றில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு அப்படி ஒரு ஆபத்து முன்னபொழுதும் வந்ததே இல்லை. மஹிந…
-
- 0 replies
- 430 views
-
-
பிரான்சின் அரசியல் மாற்றம் – சிறிலங்கா கற்க வேண்டிய பாடம்! பிரான்சின் அரசியல் மாற்றம் – சிறிலங்கா கற்க வேண்டிய பாடம்! மறுமலர்ச்சிகளை விரும்புவதாக பிரெஞ்ச் நாட்டு மக்கள் கூறுகின்றனர். இவர்கள் தற்போது 39 வயதான இம்மானுவேல் மக்ரோனை புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்ரோன் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைத் தனதாக்கி, தனக்கு எதிராகப் போட்டியிட்ட மேரியன் லீ பென் என்பவரை வென்று பிரான்சின் புதிய அதிபராகியுள்ளார். இவரது வெற்றியானது வெறித்தனமான ஜனரஞ்சக தேசியவாதத்திற்கு எதிராகக் கொடுக்கப்பட்டுள்ள கடுமையான பதிலையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவ்வாறான வெறித்தனமான ஜனரஞ்சக தேசியவாதமே டொனால்…
-
- 0 replies
- 430 views
-
-
ஆணையகத் தீர்மானங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர் உரிமைகளை முன்னெடுத்தல் 64 Views ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 2021ஆம் ஆண்டுக்கான 46ஆவது அமர்வில், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பொறுப்புக்கூறலை முன்னெடுத்தல், மனித உரிமைகளை மேம்படச் செய்தல் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டு, அதனைச் செயற்படுத்தலுக்கான ஏழு தீர்மானங்களும் விதந்துரைக்கப்பட்டுச், சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே ‘மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான தனது உரையில், மோதலின் பின்னரான 12 ஆண்டுகள் குறித்த மனித உரிமைகள் ஆணையக உயர் ஆணையாளரின் மதிப்பீட்டு அறிக…
-
- 0 replies
- 430 views
-
-
எப்படி போர் நிறுத்தம் ஏற்பட்டது? -ச.அருணாசலம் அமெரிக்காவின் நிர்பந்தமா? பாகிஸ்தான் பின்னணியில் சீனா இருந்ததால் ஏற்பட்ட தயக்கமா? நமது ரபேல் ராணுவ விமானங்களை சீனாவின் PL-15E ஐ பயன்படுத்தி பாகிஸ்தான் முறியடித்ததால், சீனாவின் ஆயுத வியாபாரத்திற்கு சர்வதேச மவுசு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அமெரிக்காவின் பதட்டமா..? ஒரு அலசல்; பெஹல்காம் படுகொலையைத்தொடர்ந்து, இந்திய அரசு , பாகிஸ்த்தான் நாட்டில் ஒன்பது இடங்களை குறி வைத்து தாக்கி தாக்குதலை (போரை) தொடங்கி வைத்தது. அண்டை நாட்டு மீதான இத்தாக்குதலை இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என அழைத்தாலும், இது ஒரு மட்டுபடுத்தப்பட்ட, பொறுப்பான, அளவான, பிரச்சினையை விரிவாக்காத தாக்குதல் என இந்திய அரசு வருணித்தது! இத்தாக்குதல் பாகிஸ்த்தான் இராணுவத்தின் மீ…
-
- 0 replies
- 430 views
-
-
ஆட்சிமாற்றமும் தமிழ் மக்களும் - நிலாந்தன் சிங்கள வாக்காளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மாற்றம் படிப்படியாக வரத் தொடங்கிவிட்டது. அது உடனடியானதாகவும், தூலமானதாகவும் தொட்டுணரக் கூடியதாகவும் அதிகம் காட்சிமயப்படுத்தப்பட்டதாவும் காணப்படுகிறது. பொது எதிரணியின் நூறு நாள் திட்டம் எனப்படுவது நடைமுறையில் ராஜபக்சாக்களை மீண்டும் தலையெடுக்க முடியாதபடி தோற்கடிப்பதாகவே காணப்படுகின்றது. அதை அவர்கள் இரண்டு தடங்களில் முன்னெடுக்கின்றார்கள். முதலாவது, சம்பள உயர்வு, விலைக்குறைப்பு, பாதைகள் திறப்பு என்பவற்றின் மூலம் படித்த நடுத்தர வர்க்கத்தையும் கீழ் நடுத்தர வர்க்கத்தையும் ஓரளவுக்கு வறிய சிங்கள மக்களையும் கவர முற்படுகின்றார்கள். வரப்போகும் பொதுத் தேர்தலை நோக்கிய ஒரு தயாரிப்பே இது. இது …
-
- 0 replies
- 430 views
-
-
கலாநிதி ஜெகான் பெரேரா முக்கியமான தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறை எச்சரிக்கையுடனானதாகவும் முன்னைய அரசாங்கம் தீர்மானித்த திசையில் தொடர்வதாகவும் அமைந்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையையும் அதன் இறுக்கமான நிபந்தனைகளையும் பின்பற்றுவதில் இது தெளிவாகத் தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேசிய கடுமையாக கண்டனத்துக்குள்ளான முக்கியமான அதிகாரிகளே பொருளாதாரத்தைக் கையாளுவதற்கு பதவிகளில் தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த வாரம் ஜெனீவாவில் தீர்மானத்துக்காக முடிவெடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தின் வடிவில் வந்த மிகவும் உடனடியான சர்வதேச சவாலை எதிர்கொண்டதிலு…
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
தேசத்தின் இரு கண்களாக ஊழலும் இனவாதமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையர்களுக்கு ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற சொற்றொடர் புதிதல்ல. குறிப்பாகத் தேர்தல் காலங்களில் -உச்சரிக்கப்படும் சொற்றொடர் இது. ஆனால், ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற அந்த எதிர்காலத்தின் சாயலைக்கூட, சமானிய இலங்கையர் அனுபவிக்கவில்லை என்பது வருத்தம் தோய்ந்த உண்மை. கொவிட்19 பெருந்தொற்று தொடக்கிவைத்த நெருக்கடியை, அளவில்லாத ஊழலும் வளக் கொள்ளையும் அதிகாரத் துஷ்பிரயோகமும், இன்னொரு கட்டத்துக்கு நகர்த்தியுள்ளன. ஊழலும் இனவாதமும் வெளிப்படையாகவே செயற்படுகின்ற ஒரு சூழலை, அன்றாட இலங்கையர்களால் காண முடிகிறது. ஜனாதிபதி விதந்துரைத்த ‘ஒழுக்கமான சமூகத்தின்’ இலட்சணத்தை, அன்றாடம் காணக் கிடைக்கிறது. பொதுமக்க…
-
- 0 replies
- 430 views
-
-
காரணம் என்ன? ஏலவே 1972ஆம் ஆண்டு குடியரசு யாப்பு கொண்டு வரப்பட்டபோது வட கிழக்கெங்கும் கறுப்புக் கொடியேற்றப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர் நிலையாகவே தொடர்ந்து வந்த சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வடகிழக்கில் தமிழ் மக்களால் பகிஷ்கரிக்கப்பட்ட நிலையில் இலங்கையின் நான்காவது குடியரசு தினமான 1976 ஆம் ஆண்டு கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் அரசியல் அமைப்புக்கு முரணானது எனக் குற்றம் சாட்டி அரசியல் அமைப்புக்கு முரணான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தினால் ஆ.அமிர்தலிங்கம், வி.என். நவரத்தினம், க.பொ.இரத்தினம், கே. துரைரத்தினம் ஆகி…
-
- 0 replies
- 429 views
-
-
அரசியல் மயப்படுத்தபட்ட சிந்தனை யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் வடபகுதியில் மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பு சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. ஊடகங்களில் இது, தலைப்புச் செய்தியாக இடம்பெற்றிருந்தது. அரசியல் மட்டங்களிலும் புத்திஜீவிகள் மட்டத்திலும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவமானது இரண்டு இனங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையே ஏற்பட்டிருந்த ஒரு மோதலாக இருந்த போதிலும்,இன அடையாளத்தை முதன்மைப்படுத்திய அரசியல் நோக்கில் இதனை சீர்தூக்கிப் பார்த்ததன் விளைவாக அது ஊதிப் பெருத்து, பெரியதொரு விவகாரமாகியது. பல்கலைக்கழகம் ஒன்றில் …
-
- 0 replies
- 429 views
-
-
சீனாவின் ஆத்திரமூட்டல் சீனாவின் ஆத்திரமூட்டல் ஆபத்தில் இலங்கை துடித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் எவ்விதமான தயவுதாட்சியம் இன்றியும் எதிர்ப்பார்ப்புகள் இன்றியும் ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டிய, நீடிக்கொண்டிருக்கின்ற நாடு என்றால் அது இந்தியாதான். அதனால்தான் என்னவோ இந்தியாவை இலங்கையின் “பெரியண்ணா” என்றழைப்பார்கள். பெரியண்ணாவின் உதவிகளை குறைத்து மதிப்பிடமுடியாது. சுனாமி அனர்த்தத்தின் போது பெரும் சேவைகளை ஆற்றியிருந்தது. உதவிகளையும் செய்திருந்தது. அதன்பின்னர் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போதெல்லாம் வியப்படைய செய்யும் வகையில் உதவிகளைச் செய்திருந்தது. கொரோனா வைரஸின் தாக்கம் தங்களுடைய நாட்டில் தாண்டவமாடிக்கொண்டிருந்த நிலையிலும் “அயலுறவுக்கு முதலிடம்” என்றஅடிப்…
-
- 4 replies
- 429 views
- 1 follower
-
-
அம்பாறையில் இனவாத தாக்குதல் முஸ்லிம் அரசியல்வாதிகள் முடிவுகளை எடுப்பதற்கு முன்னமே முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்தார்கள். முஸ்லிம்கள் மைத்திரிபால சிறிசேனவின் மீது கொண்ட இரக்கத்தினால் அல்ல. மாறாக மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் மதவிழுமியங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டன. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற வேண்டுமாயின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டுமென்று முஸ்லிம்கள் எண்ணினார்கள். முஸ்…
-
- 1 reply
- 429 views
-
-
வடக்கு கிழக்கு இணைப்பின் அவசியம் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலானது ஆளும் அராசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு உள்ளதா அல்லது குறைந்து விட்டதா என்பதை மதிப்பீடு செய்யும் தேர்தலாக இருக்கப்போகிறது. அதேவேளை எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக மஹிந்த ராஜபக் ஷ அணிக்கு பரீட்சைப் போராக இருக்கப் போகிறது என்பது ஏதோவொரு வகையிலுண்மை. வட – கிழக்கைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட வாய்ப்பாட்டை பிரயோகிக்க முடியாவிட்டாலும் இந்த தேர்தலானது கூட்டமைப்புக்கும் அதற்கு எதிரே அணிகட்டி நிற்கும் மாற்றுக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் ஆகியவற்றுக்கிடையிலான பலப்பரீட்சையை பரி…
-
- 0 replies
- 429 views
-
-
வடமாகாண சபையின் நீதி:- நிலாந்தன்:- ‘என்ன சார், தனிநாடு கேட்டீர்களே, ஒரு மாகாணசபையையே பரிபாலனம் செய்ய முடியவில்லையா?’ என்று லங்காதீப செய்தியாளர் அமைச்சர் மனோ கணேசனிடம் கிண்டலாகக் கேட்டிருக்கிறார். இது இப்பொழுது வடமாகாண சபை தொடர்பில் தெற்கில் உருவாகி வரும் கருத்தோட்டத்தைப் பிரதிபலிப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிவந்;த பின் விக்கினேஸ்வரனை எதிர்க்கும் பலரும் அப்படித்தான் கேட்டு வருகிறார்கள். விக்னேஸ்வரனுக்கு நிர்வாகம் செய்யத் தெரியவில்லை. அல்லது அவருக்கு தலைமைத்துவப் பண்புகள் போதாது என்ற தொனிப்படவே அவர்கள் விமர்சித்து வருகிறார்கள். வடமாகா…
-
- 0 replies
- 429 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை எதிர்ப்போரும் - செய்ய வேண்டியது என்ன? யதீந்திரா இதுவரை சம்பந்தன் தொடர்பில் பேசப்பட்டு வந்த விடயங்கள் அனைத்தும் இவ்வாண்டில் கூட்டமைப்பின் விடயங்களாக உருமாறவுள்ளன. தொடர்ந்தும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் என்னும் பெயர்களை முன்னிறுத்தி விவாதங்கள் செய்துகொண்டிருக்க முடியாது. அது ஆரோக்கியமான ஒன்றுமல்ல. இதுவரை சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தொடர்பில் முன்வைக்கப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்கள், அவர்கள்தான் சகல விடயங்களையும் கையாளுகின்றனர்- எனவே அவர்கள்தான் அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. ஒரு வகையில் அது சரியாக இருப்பினும் கூட, அவர்களது அனைத்து முன்னெடுப்புக்களும் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்ட நி…
-
- 0 replies
- 429 views
-
-
வள்ளுவரிலிருந்து வெடுக்குநாறிமலைக்கு? – நிலாந்தன் April 2, 2023 வவுனியா வெடுக்குநாறிமலையில் வழிபாட்டுருக்கள் சிதைக்கப்பட்டமை திட்டவட்டமாக ஒரு பண்பாட்டுப் படுகொலைதான். ஆனால் அந்தத் தீமைக்குள் ஒரு நன்மை உண்டு. அச்சம்பவம் தமிழ்மக்களை உணர்ச்சிகரமான ஒரு புள்ளியில் ஒன்று திரட்டியுள்ளது. இது தொடர்பாக சைவமகாசபை ஒழுங்குபடுத்திய எதிர்ப்பில் ஒரு கிறிஸ்தவமதகுரு காணப்பட்டார். கத்தோலிக்கத் திருச்சபையின் நீதிக்கும் நல்லிணக்கத்துக்குமான அமைப்பு அது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது. இது அண்மை நாட்களாக தமிழ்மக்கள் மத்தியில் மதரீதியான அகமுரண்பாடுகளைத் தூண்டிவரும் சக்திகளின் வேகத்தை ஒப்பீட்டளவில்தடுக்குமா? ஒருபுறம் சிங்களப…
-
- 1 reply
- 429 views
- 1 follower
-
-
வடக்கின் களம் யாருக்கு பலம்? July 12, 2020 தாயகன் சற்றுத் தணிந்திருந்த கொரோனா மீண்டும் வெளிக்கிளம்பி நாட்டை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள போதும் இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தீவிர தேர்தல் பிரசார யுத்தத்தில் களமிறங்கியுள்ளன . வழக்கம் போலவே இம்முறையும் சிங்கள இனவாதம், தமிழ் இனவாதம்,முஸ்லிம் இனவாதம் என்ற ஆயுதங்கள் மூலமே தேர்தல் பிரசார யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் தேர்தலில் வெற்றிபெற்றால் மக்களுக்காக என்ன செய்யப் போகின்றோம் என்று கூறுவதை தவிர்த்து தமது எதிரிக்கட்சிகள் மீது வசைபாடும்,சேறுபூசும் குற்றம்சாட்டும் பிரசாரங்களும் அதிகளவில் இடம்பெறுவதன…
-
- 0 replies
- 429 views
-
-
முஸ்லிம்களுக்கு ஆபத்தான சட்டம் இலங்கையில் 1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979 ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காகவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. யாரையும் கேள்வியின்றி கைது செய்யவும், தடுத்து வைக்கவும் இச்சட்டத்தில் ஏற்பாடுகளுண்டு. இதனால், இச்சட்டத்தை பயன்படுத்தி பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். இன்றும் இச்சட்டத்தின் மூலமாக கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு அவசரகால சட்டமும் நாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமும், பயங்கரவாத தடுப்புச் சட்டமும் தனிநபர்களை கைது செய்ய…
-
- 0 replies
- 429 views
-