அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் அனைவருக்கும் எதிர்ப்பை வெளியிடுவது "கோமாளி'த்தனமாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார். இங்கு வரும் ஐ.நா நிபுணர் குழு எமக்கு எதிராக செயற்பாடுகளை மேற்கொண்டால் உடனடியாக அவர்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார். இது தொடர்பாக எல்லாவெல மேதானந்த தேரர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டுடன் நட்புறவோடு செயற்பட ஐ.நா.வோ அல்லது உலக நாடுகள் தயாரென்றால் நாமும் நட்புறவுக்கரங்களை நீட்ட வேண்டும். ஐ.நா. குழு நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முன்வருவதை வரவேற்கின்றோம். எனவே இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் அனைவருக…
-
- 0 replies
- 639 views
-
-
இலங்கைத்தீவின் தலைவிதி என்றுதான் மாறப்போகிறது? களுத்துறைப் பிரதேசத்தில் பெருமளவில் கறுவாவைப் பயிரிட்டு, அவற்றை வௌிநாடுகளுக்கு அனுப்பித் தேடிக்கொண்ட பணத்தைக்கொண்டே பராக்கிரம சமுத்திரம் உருவாக்கப்பட்டது. மேற்கண்ட விதத்தில் கடந்தவாரம் அரசதரப்பு பிரபல அரசியல்வாதி ஒருவர் வௌியிட்ட கருத்து இந்த நாள்களில் பலரது முகப்புத்தகங்களில் பல்வேறு விதத்தில் விமர்சிக்கப்படும் ஒரு விடயமாக ஆகியுள்ளது. பொலநறுவை யுகத்தில…
-
- 0 replies
- 446 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்களினாலும் சுவாரஸ்யங்களினாலும் நிறைந்து கொண்டிருக்கிறது. தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறபோது, அந்தப் போராட்டத்தை உடைத்து வெற்றி பெறும் எண்ணத்தில் கணிசமானளவு முன்னோக்கி வந்துள்ளதாக பொது எதிரணி கருதுகிறது. பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய தேர்தல் பிரசாரக் கூட்டத்தை சொந்த மாவட்டமான பொலனறுவையில், புறாக்களைப் பறக்கவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்திருந்தார். ஊடகங்களால் அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும் நபராக மைத்திரிபால சிறிசேன மாறி, இரண்டு வாரங்களுக்குள்ளேயே அவர் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்திருப்ப…
-
- 0 replies
- 569 views
-
-
சமயோசித செயற்பாட்டின் அவசியமும் அவசரமும் – பி.மாணிக்கவாசகம்… January 11, 2019 குழப்பத்திற்குள் குழப்பம். அந்த அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்து குழம்பிப் போக முடியாது. அதில் இருந்து மீள்வது எப்படி என்பதுதான் கேள்வி. ஒக்டோபர் 26 இல் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடி என்பது முதலாவது குழப்பம். ஐம்பத்திரண்டு நாட்கள் நீடித்த அந்தக் குழப்பத்திற்கு, அக்டோபர் 26 ஆம் திகதிக்கு முந்திய அரசியல் நிலைமையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காய் நகர்த்தல்களை மேற்கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் ஒரு முடிவேற்பட்டது. இரண்டு பிரதமர்கள், இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ற இரட்டை நிலையில், நாட்டில் அரசாங்கமே இல்லை என்ற விநோதமானதோர் …
-
- 0 replies
- 535 views
-
-
இனப்பிரச்சனைக்கான அரசியற் களம்: மாறுபட்ட அணுகுமுறைகளுக்கான தேவை குறித்து... ஈழத் தமிழர்களின் அரசியல் வழிமுறைகள், அரசியல் நிலைப்பாடுகள், அவர்களுடைய அரசியற் சிந்தனைகள், அரசியல் எதிர்பார்ப்புகள், அரசியல் நம்பிக்கைகள் போன்றவற்றைப் பற்றிய ஆய்வுகளுக்கு இன்று மிக அவசியமான ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இதைப் பார்ப்பதற்கும் விளங்கிக் கொள்வதற்கும் கடந்தகால இலங்கைத் தமிழர்களின் அரசியல் வழிமுறைகள், அரசியல் நிலைப்பாடுகள், அவர்களுடைய அரசியற் சிந்தனைகள், அரசியல் எதிர்பார்ப்புகள், அரசியல் நம்பிக்கைகள், இவற்றிற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியற் செயற்பாடுகள் போன்றவற்றைப் பற்றிய ஆய்வுகள், மதிப்பீடுகள், விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் எல்லாம் இன்று அவசியமாக உள்ளன. இதற்கு, கடந்த க…
-
- 0 replies
- 566 views
-
-
இந்தியாவுடன் பேசித்தான் ஆகவேண்டும் | அரசியல் களம் | ஆய்வாளர் நேரு குணரட்ணம்
-
- 0 replies
- 513 views
-
-
சிறந்த பொருளாதாரக் கொள்கை யாருடையது? ச.சேகர் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இன்னமும் இரண்டு வாரங்களுக்கு குறைவான நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் முக்கிய போட்டியாளர்கள் கடந்த வாரம் தமது பொருளாதாரக் கொள்கைகளை வெளியிட்டிருந்தனர். இதுவரை காலமும் நடைபெற்ற தேர்தல்களில் பொருளாதாரக் கொள்கை என்பது காகிதங்கள் சிலவற்றுக்குள் அடங்கியிருக்கும் பொருளாக மாத்திரமே அமைந்திருந்ததுடன், வாக்காளர்கள் மத்தியில் அவை தொடர்பில் பெரிதும் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனாலும், இம்முறை, நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, எதிர்வரும் காலங்களில் இன்னும் சவால்களுக்கு …
-
- 0 replies
- 450 views
-
-
உலகளவில், 2011 ஆம் ஆண்டிற்கான படைத்துறைச் செலவீனம் தென் ஆசியப் பிராந்தியத்தில் மிக உயர்வாக இருப்பதாக ஸ்ரொக்கோம் அனைத்துலக சமாதான ஆய்வு மையம் (SIPRI) தெரிவிக்கிறது. அது பாகிஸ்தானில் மொத்த உள்ளூர் உற்பத்தியின் 2.8 சதவீதமாகவும், இந்தியாவில் 2.7 சதவீத இருக்கும் அதேவேளை, இலங்கையில் 3 சதவீதமாக உள்ளது. ஆகவே, உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் கடந்தாலும் இலங்கையின் படைத்துறைச் செலவு அதிகரிப்பதையிட்டு உலக வங்கியோ அல்லது அனைத்துலக நாணய நிதியமோ கேள்வி கேட்பதில்லை. ஆனாலும், இறுதிக் கொடுப்பனவான 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறது அனைத்துலக நாணய நிதியம். இலங்கை ரூபாய் நாணயத்தின் பெறுமதியும் வீழ்ச்சியடைகிறது. அதே…
-
- 0 replies
- 501 views
-
-
இது மகிந்த ராஜபக்சவின் அதிரடி ஆட்சியின் யுகம் அல்ல. ரணில் – மைத்திரியின் இராஜதந்திர ஆட்சி. தமிழர்களின் எதிர்கால அரசியலை, தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்கால இருப்பை கேள்விக்குள்ளாக்கப்போகும் ஆட்சி என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இலங்கையில் தமிழர்களின் இருண்ட காலம் என்று வர்ணிக்ககூடிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு எதிர்வரும் தை மாதம் 8ம் திகதியோடு ஓராண்டை பூர்த்தி செய்யும் நாள் நெருங்குகின்றது. அதாவது இதை பின்வரும் நிலைகளில் விளக்கலாம். ஒன்று மகிந்த ராஜபக்ச ஆட்சியிழந்த காலம், தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளை தமிழர்கள் தங்கள் விருப்பு வாக்குகள் மூலம் தகர்த்தெறிந்த காலம், தமிழ் மக்…
-
- 0 replies
- 683 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதியுடனான மரியாதைச் சந்திப்பு- பின்னாலுள்ள இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல் இலங்கை தமது செற்கேட்டு நடக்க வேண்டுமென்ற அணுகுமுறையில் மீண்டும் இந்தியா இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொழும்பில் உள்ள அமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் சந்தித்து உரையாடியுள்ளனர். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி …
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் அரசியலில் பாலின வன்மம் என்.கே. அஷோக்பரன் / 2020 மார்ச் 16 இலங்கை சனத்தொகையில், 2017ஆம் ஆண்டு தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தின் அனுமானத்தின்படி, 51.6 சதவீதமானோர் பெண்களாவர். அதேவேளை, 2016/2017 புள்ளிவிவரங்களின்படி, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இளமாணிப் பட்டப்படிப்புக்கு அனுமதி பெற்றுக்கொண்டவர்களில் 60.9 சதவீதமானோர் பெண்கள்; இளமாணிக் கற்கைகளுக்காகப் பல்கலைக்கழகங்களில் இணைந்துகொண்டவர்களில் 62.3 சதவீதமானோர் பெண்களாவர். மேலும், இதே ஆண்டு, இளமாணிப் பட்டம் பெற்றுக்கொண்டோரில், 63.1 சதவீதமானோர் பெண்கள். இதே ஆண்டு, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் முதுமாணிப் பட்டப்படிப்புக்கு அனுமதி பெற்றுக்கொண்டோரில் 54.9 சதவீதமானோர் பெண்கள்; முதுமாணிக் கற்கையில் இணைந…
-
- 0 replies
- 729 views
-
-
[size=6]September 28, 2012 [/size] [size=6]================[/size] [size=5]Sri Lanka military behind attack on politicians - Bahu[/size] [size=3] [size=5]The Nava Sama Samaja Party (NSSP) has accused the Sri Lankan military of being involved in an attack against opposition politicians and peaceful demonatrators.[/size][/size] [size=3] [size=5]NSSP General Secretary and Dehiwala Municipal Councillor Vickramabahu Karunaratne has informed President Mahinda Rajapaksa and that vehicles carrying Tamil National Peoples Front (TNPF) Leader Gajendrakumar Ponnambalam and him has come under attack in the northern Vanni area on the 22nd of September. They have been retu…
-
- 0 replies
- 610 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழகத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் கொண்டு வருவதற்கான முயற்சியை எடுத்திருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. காங்கிரஸ் கட்சியுடன் திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பதால், மற்ற கட்சிகள் தி.மு.க.வுடன் இணைந்து இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்க தமிழகத்தில் தயாராக இல்லை. அதை உணர்ந்துள்ள தி.மு.க. தலைமை சமீபத்தில் அதற்கான முயற்சியில் இறங்கியது. அது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகையையொட்டி சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற டெசோ அமைப்பின் கருஞ்சட்டைப் போராட்டத்தில் எதிரொலித்தது. கருஞ்சட்டைப் போராட்டத்தில் பங்கேற்று பேசிய கருணாநிதி, "இங்குள்ள (தமிழகத்தில்) இனப்பகைவர்கள்…
-
- 0 replies
- 541 views
-
-
யாழில் கால் பதிக்கும் சீனாவின் முயற்சியை தடுக்குமா இந்தியா? – அகிலன் 7 Views முதலீடுகள் என்ற போர்வையில் இலங்கையின் வடக்கில் கால் பதிக்கும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இராஜதந்திர மட்டத்தில் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ள புதுடில்லி, வடக்கில் இவ்வாறு சீனா கால்பதிப்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தமக்குக் கிடைக்கும் என இறுதிக் கணம் வரையில் எதிர்பார்த்திருந்து ஏமாற்றமடைந்த இந்தியாவுக்கு, கடந்த வாரத்தில் மற்றொரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது கோட்டாபய அரசு. யாழ்ப்பாணத்திற்கு அருகில…
-
- 0 replies
- 483 views
-
-
ஆணையகத் தீர்மானங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர் உரிமைகளை முன்னெடுத்தல் 64 Views ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 2021ஆம் ஆண்டுக்கான 46ஆவது அமர்வில், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பொறுப்புக்கூறலை முன்னெடுத்தல், மனித உரிமைகளை மேம்படச் செய்தல் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டு, அதனைச் செயற்படுத்தலுக்கான ஏழு தீர்மானங்களும் விதந்துரைக்கப்பட்டுச், சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே ‘மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான தனது உரையில், மோதலின் பின்னரான 12 ஆண்டுகள் குறித்த மனித உரிமைகள் ஆணையக உயர் ஆணையாளரின் மதிப்பீட்டு அறிக…
-
- 0 replies
- 444 views
-
-
பிரபாகரன் தமிழீழம் கேட்டதில் என்ன தவறு? இலங்கையில் இருந்து - பிரியதர்சன் 20 ஜூலை 2013 விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு இலங்கை இந்திய ஒப்பந்த்தின்படி இலங்கை அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்குவேன் என்று சொல்லியே மகிந்த ராஜபக்ஸ போரை தொடங்கி மாபெரும் அழிவுகளை நிகழ்த்தினார். தமிழர்களுக்கு சிங்கள அரச தலைவர்கள் எந்தத் தீர்வையும் வழங்கமாட்டார்கள் என்ற நிலையிலேயே தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற அளவுக்கு ஜனநாயக அரசியலில் ஏற்பட்ட பின்னடைவே ஆயுதப் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது. ஏதுவுமற்;ற 13 ஐ வைத்து மாபெரும் போர் நடத்தப்பட்டதோ அந்தப் 13ஐயும் இல்லாது ஒழித்துக் கட்டுகிற வேலையில் இனவாத அணியி…
-
- 0 replies
- 616 views
-
-
தனிமைப்படுவதற்கான களமல்ல முள்ளிவாய்க்கால் தமிழ்த் தேசிய அரசியலிலும், அதுசார் போராட்ட வரலாற்றிலும் முள்ளிவாய்க்கால் என்றைக்குமே மறக்கவும் மறைக்கவும் முடியாத களம்; காலா காலத்துக்கும் உணர்வுபூர்வமான களம். அதுபோல, முள்ளிவாய்க்கால் கோரி நிற்கின்ற கடப்பாடுகளும் அரசியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் அதிகமானவை. ஆனால், கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்வைத்து, நிகழ்த்தப்பட்ட காட்சிகள், பெரும் ஏமாற்றத்தை தமிழ் மக்கள் மத்தியில் வழங்கியிருக்கின்றது. வடக்கு மாகாண சபை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் மற்றும் அருட்தந்தை எழில்ராஜன் தலைமை வகித்த குழு என நான்கு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட நி…
-
- 0 replies
- 392 views
-
-
சுய பாதுகாப்பு எனும் ஒற்றை வழி புருஜோத்தமன் தங்கமயில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற கட்டத்தில், நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அல்லாடுகிறார்கள். கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பரவல் வேகம், சொல்லிக் கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்து இருக்கின்றது. வீதியில் இறங்கினாலே, நாம் சந்திக்கும் நபர்களில் ஒருவராவது, கொரோனா தொற்றோடு இருப்பார் என்கிற அளவுக்கு அந்த நிலை இருக்கின்றது. உலக அளவில், கொவிட்-19 பெருந்தொற்றால் இறப்பவர்களின் வீதத்தில், இலங்கை முதலிடத்தில் இருக்கின்றது. வைத்தியசாலைகள் தொற்றாளர்களால் நிரம்பி வழிகின்றன. ஒரு படுக்கையில், ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை வைத்துப் பராமரிக்கும் நிலையில், அரச வைத்தியசாலைகளில் நெருக்கடி நீடிக்கின்றது. ‘1990’ என்கிற நோ…
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கையின் புதிய அரசியலமைப்பிலிருந்து தமிழர்கள் ஏன் விலகி இருக்க வேண்டும் ? 00000000 ”தற்போதைய அரசாங்கம் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் பதற்கான ஆற்ற லை கொண்டிருக்கவில்லை , புதிய அரசியலமைப்பு ஏற்கனவே பெற்ற சில நன்மைகளை மாற்றியமைக்க முடியும். ” 00000000000 ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு தொடர்பில் நம்பிக்கையுடன் இருப்பதற்கும் அரசியலமைப்பு உருவாக்கத்தை துரிதப்படுத்துவதற்கும் நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. புத்திசாலித்தனமானது தமிழர் கட்சியானது செயல்முறையை மெதுவாக்க முயற்சிக்கும். மிகவும் சிறப்பானதும் சாத்தியமானதுமானவழி புதிய அரசியலமைப்பை தடுக்க தமிழ் அல்லது சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பாரிய கூட்டணியை தமிழ் த் தேசிய கூட்டமைப்பு…
-
- 0 replies
- 394 views
-
-
விக்னேஸ்வரன் - மகாநாயக்கர்கள் சந்திப்பு: நாட்டுக்கு இன்று தேவையானது வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த வெள்ளிக்கிழமை (15.09.2017) இலங்கையின் இரண்டு பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களுடனும் சந்திப்புகளைச் செய்திருந்தார். இந்தச் சந்திப்புகள் இலங்கையின் அரசியல் வட்டாரங்களில் கவனிப்பைப் பெற்றிருந்தன. இது தொடர்பாக இலங்கையின் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களும் பல்வேறு கோணங்களில் செய்திகளை வெளியிட்டிருந்தன. கடந்த சில நாட்களாக இந்தச் சந்திப்புகளைப் பற்றித் தமிழ்த்தரப்பிலும் சிங்களத்தரப்பிலுமாக அரசியல் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் தாராளமாகப் பல ஆய்வுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார்கள். இன்னும் இந்த அலை ஓயவில்லை. தமிழ் ஊடக…
-
- 0 replies
- 680 views
-
-
தமிழ் மக்களின் சாபக்கேடு - செல்வரட்னம் சிறிதரன்:- 08 பெப்ரவரி 2014 இலங்கையில் இனப்பிரச்சினை காரணமாக முப்பது வருடங்களாக மோசமான ஒரு யுத்த நிலைமை நீடித்திருந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளார்கள். எண்ணற்றவர்கள் அவயவங்களை இழந்தும், மனநிலை பாதிக்கப்பட்டும் இருக்கின்றார்கள். இதைவிட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்து வசித்து வந்த பிரதேசங்களில் இருந்து மக்கள் அடியோடு பெயர்த்து வெளியேற்றப்பட்டார்கள். இவ்வாறு வெளியேற்றப்பட்டபோதும், யுத்தச் சூழலில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் பல்வகையான அவமானங்களுக்கு ஆளாகி சுயகௌரவம், தன்மானம் என்வற்றை இழக்கவும் நேரிட்டிருந்தது. இவ்வாறான கொடுமைகளுகு;கு மத்…
-
- 0 replies
- 579 views
-
-
சர்வதேச விசாரணையும் இந்தியாவின் புதிய அரசும் சர்வதேச விசாரணை இந்த மாதம் ஆரம்பமாகலாம் அல்லது விசாரணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் பெயர் விபரங்கள், குழுவின்தலைவர் யார் என்ற பெயர் விபரங்கள் வெளியாகலாம். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனாண் விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தவரை இந்த விசாரணைகளை எதிர்கொள்ள தயாராகி வருகின்றார் என்பதுடன், முடிந்தவரை சாதகமான நாடுகளின் ஆதரவுகளுடன் அதனை தட்டிக்கழிக்கவும் முற்படுகின்றார். அதேவேளை, ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் பதவிக் காலம் செப்டெம்பர் மாதம் முடிவடையவுள்ளது. வரவுள்ள புதிய ஆணையாளரின் செல்வாக்கைப் பயன்படுத்தி அல்லது புதிய ஆணையாளரின் இல…
-
- 0 replies
- 1k views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையும், அதன் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் தற்போதைய அரசாங்கத்தின் ஆணிவேரையே ஆட்டம்காண வைத்திருக்கிறது. மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களின் வெளியேற்றம், அரசாங்கத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை விட, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் தலைமைத்துவத்துக்கும் பெரும் சவாலாக மாறியிருக்கிறது என்பதே உண்மை.மைத்திரிபால சிறிசேனவும் அவருடன் இணைந்து கொண்டுள்ளவர்களும், ஐ.தே.க.வுடன் இணைந்து கொண்டிருந்தால், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விடயமன்று. மைத்திரிபால சிறிசேன எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்தப்ப…
-
- 0 replies
- 668 views
-
-
‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கைச் சமூகம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத சமூகம் என்பதற்கு, இந்நாட்டு இனப் பிரச்சினையே சிறந்த உதாரணமாகும். பாடம் படிக்காதவர்கள் என, நாட்டின் குறிப்பிட்டதொரு சமூகத்தைக் குறிப்பிட முடியாது. ஏறத்தாழ, சகல இன மக்களும் இந்த நிலையிலேயே தான் இருக்கிறார்கள். நேற்று, (ஜூலை 24) இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஒரு சம்பவம் இடம் பெற்று, 35 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. அது, ‘கறுப்பு ஜூலை’ எனப் பொதுவாக அழைக்கப்படும், 1983 ஆம் ஆண்டு இனக் கலவரமாகும். சுமார் ஒரு வார காலமாக இடம்பெற்ற வன்செயல்க் கொடுமைகளுக்கு, அதன் சூத்திரதா…
-
- 0 replies
- 465 views
-
-
மாவீரர் நாள் நினைவேந்தல் நிறைவுக்கு வந்து ஒரு வாரம் கடந்து விட்டது. ஆனால் மழைவிட்டும் தூவானம் விடாத குறையாக, மாவீரர்நாளால் உண்டான சலசலப்பு மாத்திரம் இன்னமும் குறையவில்லை. மாவீரர் நாளைப் பயன்படுத்தி எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம்,பெளத்த - சிங்கள மக்களை உசுப்பேத்தலாம் என்று தென்னிலங்கை தினமும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. நாடாளுமன்றத்திலும் சரி, அதற்கு வெளியிலும் மாவீரர் நாளை வைத்துக்கொண்டு தென்னிலங்கை அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துகள் இன்னமும் அடங்குவதாயில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த தென்னக்கோன், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று தொடர்ச்சியாக மாவீரர் நாள்…
-
- 0 replies
- 564 views
-