Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ்த் தலைவர்கள் எதற்கு? கே. சஞ்சயன் / 2020 ஜனவரி 24 அவ்வப்போது நீண்ட அறிக்கைகள், கடிதங்களை வெளியிட்டும், செய்தியாளர் சந்திப்புகளை நடத்தியும் பழைய வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருப்பவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆவார். தான் கூறியபடி தான், தமிழ் மக்களின் வரலாறு நகர்கிறது என்பது போல, தீர்க்கதரிசியாகத் தன்னை் கருதிக் கொண்டு, அவர் அவ்வப்போது வெளியிடும் கருத்துகள், முரண்பாடுகளும் விமர்சனங்களும் நிறைந்தவவையாக இருப்பது வழமை. 2004ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழரசுக் கட்சிக்கு உயிர் கொடுக்கப்பட்ட விடயத்தை, அவரால் இன்னமும் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. இந்த விடயத்தில், அவர் விடுதலைப் புலிகளைக் கூட விட்டு வைக்க…

  2. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் வரலாற்றுப் பொறுப்பு June 24, 2025 — கருணாகரன் — “ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் எதிர்காலச் செயற்பாடுகள் எப்படி இருக்கும்? அதனுடைய அரசியல் எதிர்காலம்?” என்று கொழும்பில் உள்ள மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். “நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்” – அவரிடமே கேள்வியைத் திருப்பினேன். “என்னால் மதிப்பிடவே முடியவில்லை. காரணம், எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் எல்லாம் திடீரென்று ஒரு கூட்டுக்கு வந்துள்ளன. அதற்காக ஒரு உடன்படிக்கையையும் செய்திருக்கிறார்கள். என்றாலும் இதில் யாருடைய கருத்தை –கொள்கையை – நிலைப்பாட்டை யார் ஏற்பது என்ற தெளிவில்லை. இப்போதைய சூழலில் கஜேந்திரகுமாரின் நிலைப்பாடுதான் வலுப்பெற்றுள்ளது போலிருக்கு… இந்தப் போக்குக்கு ஜன…

  3. மலையகம்: பேரழிவும் மீட்சியும் Photo, Facebook: mariyan.teran காலநிலை மாற்றம் (Climate Change) என்பது பூகோள ரீதியில் ஒரு நீண்டகால சவாலாக இருந்தாலும், வெப்பமண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள இலங்கையை பொறுத்தவரை, இதன் தாக்கம் தீவிரமானதாகவும் உடனடியானதாகவும் உள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் ஏற்படும் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை அதிகரிப்பு, சூறாவளிகள் (Cyclones) உருவாகும் வீதத்தையும், அதன் தீவிரத்தையும் (Intensity) கணிசமாக உயர்த்தியுள்ளது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையின் நிலப்பரப்பு, அதன் புவியியல் மற்றும் சனத்தொகையின் அடர்த்தி காரணமாக, பருவமழை தொடர்பான வெள்ளப்பெருக்குகள் மற்றும் நிலச்சரிவுகளுக்கு (Landslides) மிக எளிதில் ஆளாகி…

  4. Started by akootha,

    [size=4]நிறைவேற்று ஜனாதிபதி முறைமையானது இலங்கையில் சர்வதிகாரிகளை உருவாக்கவே பயன்பட்டு வந்திருப்பதை இப்போது தான் தென்னிலங்கை மக்கள் உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள்.[/size] [size=2] [size=4]இத்தகைய சர்வதிகார ஜனாதிபதி உருவாவதற்கான அரசியல் யாப்பை எழுதி அரங்கேற்றிய கட்சியைச் சேர்ந்தவர்களே இன்று பொதுக்கூட்டு அமைத்துக் கொண்டு ஜனாதிபதி பதவியை இல்லாதொழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி எனும் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு யாப்பின் மூலம் நடைமுறைப்படுத்தினார். [/size][/size] [size=2] [size=4]1972 மே 22 இல் இந்த யாப்பு அறிமுகமானது. 1970 தேர்தலில் கிடைத்த பெரும்பான்மை ஆசனங்களால்…

    • 0 replies
    • 945 views
  5. பிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன? – நஜீப் பின் கபூர் இந்தக் கட்டுரையை நாம் எழுதி நிறைவு செய்கின்ற நேரத்தில் 20 தொடர்பில் புதிய பல அதிரடித் தீர்மானங்களுக்கு அரசு வந்திருக்கின்றது. அதனால் பிரதமர் நியமித்த குழுவால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அவர்களது எந்த சிபார்சுகளும் அதில் உள்வாங்கப்படவில்லை. அது எப்படி வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதோ அதே போன்று தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது என்று ஆளும் தரப்பினர் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்கள். எனவே ஜனாதிபதி விரும்பியவாறுதான் அது தற்போது பாராளுமன்றத்துக்கு விரைவில் வருகின்றது. திருத்தங்கள் இருப்பின் அங்கே பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி கடும் தெனியில் கட்டளை போட்டதால் பிரதமர் …

  6. இலங்கை: வீழ்ச்சி கண்ட நாடாகியுள்ளதா…..? – பி.மாணிக்கவாசகம் இலங்கை ஒரு தோல்வியுற்ற நாடாக மாறி வருகின்றதா என்ற சந்தேகம் பல தரப்பினரிடையேயும் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபச்ச தலைமையிலான அரசாங்கத்தின் செயல் வல்லமையற்ற செயற்பாடுகளினால் இந்த நிலைமை உருவாகி உள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அறுபத் தொன்பது இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று, தன்னிகரற்ற தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் ஆட்சி முறைமை பல துறைகளிலும் பலவீனமாகி இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என அவதானிகளும், ஆய்வாளர்களும் சுட்டிக் காட்டி உள்ளனர். தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்தி, சுபீட்சம் மிகுந்ததாக நாட்டைக் கொண்டு நடத்துவதாக உறுதியளித்த ஜ…

  7. பாதுகாக்கப்பட வேண்டிய நல்லிணக்கம் நமது நாட்டில் நம்மைச் சுற்றி என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை ஒவ்வொன்றாகச் சொல்ல வேண்டியதில்லை. இத்தேசத்தில் வாழ்கின்ற சிங்கள இனத்தவரில் ஒவ்வொருவரும், தமிழ் இனத்தவரில் ஒவ்வொருவரும், முஸ்லிம் இனத்தவரில் ஒவ்வொருவரும் நமது தேசத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதை, ஒவ்வொரு வினாடியும் உணர்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களின் மத அடையாளங்கள் மீதும், அவர்களுக்குரித்தான சொத்துகள் மீதும் மேற்கொள்ளப்படுகின்ற இனவெறுப்பு நடவடிக்கைகள், கடந்த இரு வாரங்களாக அதிகரித்துக் காணப்படுகின்ற ஒரு சூழலில், நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமாகிக் …

  8. சம்பந்தனின் ஒத்துழைப்பை பலவீனமாக கருதவேண்டாம் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-03#page-3 சம்பந்தன் ஒத்துழைப்பை பலவீனமானதாக கருதவேண்டாம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது என்­ப­தற்­காக அந்த ஆத­ரவை பல­வீ­ன­மாக கரு­தி­வி­டக்­கூ­டாது. வேறு வழி­யின்றி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக எண்ணி தமி­ழர்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை புறந்தள்ளி விடு­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கக்­கூ­டாது.எவ்­வ­ளவு பெரிய ஆபத்­துக்கு மத்­தியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கும் போக்கை கடைப்பிடிக்­கின்­றது …

  9. இனப்பிரச்சினைக்கு தீர்வு சாத்தியமா? செல்­வ­ரட்னம் சிறி­தரன் பிராந்திய பாதுகாப்பு, அரசியல் இராணுவ, பொருளாதார ரீதியாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு இலங்கையின் அரசியல் நிலைமை ஸ்திரமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அதேவேளை, மேற்கத்தேய நாடுகளும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளும் கால் பதிக்கத்தக்க நிலைமைகளை உருவாக்க வல்ல இனப்பிரச்சினைக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதும் அவசியமாகும். இத்தகைய நிலைமையில், இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் ஆக்கபூர்வமான முறையில் பங்களிப்பு செய்து ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கு முன் வர வேண்டும் இலங்­கையில் தமி­ழர்கள் மீது ஓர் இன அழிப்பு நட­வ­டிக்­கை­யாக 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்­…

  10. ஜெனிவாவில் பலமுனைப் போர் By VISHNU 18 SEP, 2022 | 07:34 AM கார்வண்ணன் “கடந்த 13 ஆண்டுகளில் தமிழர் தரப்பின் போராட்டங்களும், வலியுறுத்தல்களும் தான் ஜெனிவாவில் முதன்மையான விடயமாக இருந்து வந்தன. இப்போது, அது பலமுனை அழுத்தங்களாக விரிவடைந்திருக்கிறது” இலங்கையைப் பொறுத்தவரையில், ஜெனிவா இம்முறை வழக்கத்துக்கு மாறானதாரு போர்க்களமாக மாறியிருக்கிறது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ என இரண்டு சட்ட நிபுணர்களின் தலைமையில் ஜெனிவா கூட்டத்தொடரை இலங்கை அரசாங்கம் எதிர்கொள்கிறது. இம்முறை ஜெனிவா கூட்டத்தொடர் இலங்கைக்கு சவாலானதாக இருக்கப் போகிறது என, முன…

  11. பதவியேற்பு விழாவுக்கு மகிந்த ராஜபக்சவை அழைக்கக் கூடாது என தமிழ்நாட்டுக் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் செய்தபோது அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு விடுத்தார். இவ்வாறு Shastri Ramachandaran எழுதியுள்ள தனது பத்தியில் தெரிவித்துள்ளார். DNA இணையத்தில் வெளியான அந்த பத்தியை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீளவும் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி இறங்கத் தீர்மானித்துள்ளது போல் தெரிகிறது. பா.ஜ.க வின் இத்தகைய செயல்கள் இந்தியாவின் திராவிடக் கட்சிகளான அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க ப…

  12. உலகளாவிய உணவு நெருக்கடி: தற்செயலானதா, திட்டமிடப்பட்டதா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், அண்மையில் ‘பசியின் சூறாவளி மற்றும் உலகளாவிய உணவு முறையின் உருக்குலைவு’ குறித்து கவலையுடன் பேசினார். விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்து உணவு, எரிபொருள், உரங்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதாகவும், இது ஏழைகளைக் கடுமையாகப் பாதித்து, உலகம் முழுவதும் அரசியல் ஸ்திரமின்மை, அமைதியின்மைக்கு வித்திடுவதாகவும் அவர் கூறினார். உலகளாவிய உணவு நெருக்கடி பற்றி எமக்குச் சொல்லப்பட்டாலும், நிலையான உணவு முறைகள் குறித்த சர்வதேச நிபுணர்கள் குழுவின் கூற்றுப்படி, தற்போது போதுமான உணவு உள்ளது; உலகளாவிய உணவு வழங்கல் பற்றாக்…

  13. தாயக மண்ணில் புலிகளை அடிமைகளாக்கியது யார்? – கதிர் http://www.kaakam.com/?p=1071 முள்ளிவாய்க்காலில் சிங்கள மற்றும் பன்னாட்டு அரசுகள் தமிழினத்தின் மீதான இன அழிப்பை நடாத்தி முடித்த கையோடு புலம்பெயர் அமைப்புகள் தங்களுக்குள் முட்டி மோதி கட்டமைப்புகளை சிதைத்தது மட்டுமல்லாது சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் கைக்கூலிகளாகவும் மாறியிருக்கின்றனர் என்பதை பல தரப்பட்ட நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி புரிந்து கொள்ளலாம். விடுதலைப்போராட்டங்கள் எழுச்சிகரமாக ஆரம்பிக்கப்பட்டாலும் கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வரும் போது அதன் பின்னரான காலப்பகுதியையும் மறப்போராட்டத்தில் பங்கெடுத்த போராளிகளின் எதிர்கால நலன் குறித்த நிலைப்பாடுகளும் மிக நேர்த்தியாக கையாளப்பட வேண…

  14. 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை – அலி சப்ரி! பொங்கல் விழாவுக்கு யாழ்ப்பாணத்துக்கு வந்த ரணில் விக்ரமசிங்க நல்லூர் துர்கா மணிமண்டபத்தில் ஆற்றிய உரையில் 13வது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறிய சில நாட்களின் பின் கொழும்புக்கு வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதனை இந்தியாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக வலியுறுத்தி கூறினார்.கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்தியாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக அதுதான் காணப்படுகிறது. இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்டது 13ஆவது திருத்தம். இந்திய இலங்கை உடன்படிக்கையில் கையெழுத்திட்டது இந்தியாவ…

  15. யார் யாருடன் கூட்டுச் சேர்வது? மு.திருநாவுக்கரசு அரசியலில் கூட்டு முன்னணி அமைப்பது என்பது ஒரு தந்திரோபாய நகர்வு. இதனை கோட்டுபாட்டு ரீதியில் “கூட்டு முன்னணி தந்திரோபாயம்” என அழைப்பர். இது அறிவியல் ரீதியான ஒரு விஞ்ஞானபூர்வ அமைப்பு. இதனை முற்கப்பிதங்களுக்கு ஊடாகவோ, மனவேகத்திற்கு ஊடாகவோ அணுக முடியாது. அறிவார்ந்த விஞ்ஞானபூர்வமாக அமைக்கப்படும் எந்த கூட்டு முன்னணியும் அதற்குரிய இலக்கை அடையமுடியாது போவதாக மட்டுமன்றி அது தோல்வியிலும் துயரகரமான அழிவிலும் முடியக்கூடிய ஏதுக்களை கொண்டுள்ளது. ஆயிரக்கரணக்கான ஆண்டுகால நீண்ட வரலாறு முழுவதிலும் இத்தகைய கூட்டு முன்னணிகள் அமைக்கப்படும் வரலாற்றுப் போக்கைக் காணலாம். ஆனால் கடந்து ஒரு நூற்றாண்ட…

  16. மூன்று காரணங்களும் மூக்குடைவும் கே. சஞ்சயன் / 2018 நவம்பர் 16 வெள்ளிக்கிழமை, மு.ப. 09:48 Comments - 0 நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டு, இரண்டு நாள்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கான காரணங்களை விளக்கி, நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதி வெளியிட்ட அந்த நீண்ட அறிக்கையின் தொடக்கத்திலேயே, 14 நாள்களுக்குள் மூன்றாவது தடவையாக, உங்கள் முன் உரையாற்றுவதாகக் கூறியிருந்தார். முதல் உரையில், ரணில் விக்கிரமசிங்கவை ஏன் பதவிநீக்கினேன், என்று நீண்ட விளக்கங்களையும் மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்த நோக்கத்தையும் விவரித்திருந்தார். இரண்டாவதாக, பத்தரமுல்லவில் கட்சிப் பேரணியில் உரையாற…

  17. ஜனாதிபதித் தேர்தல் உடனடிச் சாத்தியமா? கே. சஞ்சயன் / 2019 ஜனவரி 11 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:34 இலங்கை அரசியலில், 52 நாள்கள் நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்த பின்னர், தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. முறைப்படி மாகாணசபைத் தேர்தல்கள் தான், முதலில் நடத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஆறு மாகாணசபைகளின் பதவிக்கால‍ங்கள் ஏற்கெனவே முடிந்து விட்டன. ஆனாலும், உடனடியாக மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும் திட்டத்தில், அரசாங்கம் இருப்பதாகத் தெரியவில்லை. முன்னர், மாகாணசபைத் தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே இழுத்தடித்தது. இப்போது, மஹிந்தவின் நிழலில் உள்ள பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்துக் கொண்டுள்ள சுதந்திரக் கட்சி, மாகாணசபைத் தேர…

  18. 70 வருடங்களை கடந்துவிட்ட நேட்டோ ; அடுத்தது என்ன? பெய்ஜிங் ( சின்ஹுவா ) - வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் அமைப்பு (North Atlantic Treaty Organisation -- NATO ) கடந்த வியாழக்கிழமை 70 வருடங்களை நிறைவுசெய்திருக்கிறது. நவீன வரலாற்றில் மிகவும் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் ஒரு இராணுவ கூட்டணி என்ற வகையில் நேட்டோ சற்று நின்று நிதானமாக அதன் பாதை குறித்து சிந்திப்பதற்கான உகந்த நேரம் இதுவாகும்.1949 ஆம் ஆண்டில் நேட்டோ அமைக்கப்பட்டபோது அன்றைய சோவியத் யூனியனுக்கும் அதன் சார்பு நாடுகளுக்கும் எதிரான ஒரு கூட்டு பாதுகாப்பு அமைப்பாக செயற்பட்டது.பனிப்போரின் ( Cold War ) முடிவையடுத்து அது அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு இரு மருங்கிலும் உள்ள நாடுகளுக்கிடையிலான இடையிலான ( Transatla…

  19. மே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால் Editorial / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 06:52 Comments - 0 போர் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக ஈழத்தமிழர் வாழும் நாடுகள் எங்கும் மே 18 நினைவுகூரப்படுகிறது. இந்த நினைவுகூரலின் சமூகப் பெறுமானம் என்ன என்ற கேள்வியை இப்போதாவது நாம் கேட்டாக வேண்டும். மே 18 நினைவுகூரல்கள், மெழுகுதிரி ஏற்றுதல், அஞ்சலி, நீதிக்கான கோரிக்கை, வீரப்பேச்சுக்கள் என்பவற்றுடன் முடிகின்றன. ஒரு மே, அடுத்த மே, அதற்கத்த மே என ஆண்டுகள் பத்து கடந்துவிட்டது. இப்போது மே18 ஆண்டு நாட்காட்டியில் சடங்குக்கு உரிய ஒரு தினம் மட்டுமே. பத்தாண்டுகளைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்க்குமிடத்து இந்த…

  20. இலங்கையில் தொகுதி வாரி தேர்தலும் இன உறவும் - வ.ஐ.ச.ஜெயபாலன் . தொகுதிவாரி தேர்தல் அடிப்படையில் மட்டுமே மாகாணசபை தேர்தலை நடத்த முடியும் என்கிற நீதி மன்ற தீர்ப்பு வந்துள்ளது. இனி எதிர்காலத் தேர்தல்களில் தொகுதி வாரி முறைமையே முன்னிலை பெறும் என்பதில் சந்தேகமில்லை. புதிய சூழ; . புதிய முறை வடக்கில் தமிழரைப் பாதிக்காது. கிழக்கில் தமிழரையும் முஸ்லிம்களையும் ஓரளவு பாதிக்கலாம். அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தமிழரும் முஸ்லிம்களுக்கும் புரிந்துணர்வு ஏற்பாடுகள் இல்லாவிட்டால் பாதிப்புகள் ஏற்படும். புதிய முறை தென் இலங்கை முஸ்லிம்களையும் மலையக தமிழரையும் வடமாகாண முஸ்லிம்களையும் அதிகம் பாதிக்கும். . பழைய தேர்தல் முறைமையில் திருகோண மலையிலு…

    • 0 replies
    • 437 views
  21. சங்குக் கூட்டணியின் தோல்வி அல்லது DTNA யின் முடிவு November 26, 2024 — கருணாகரன் — ‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கதை முடிந்து விட்டது. இல்லாத கூட்டமைப்புக்காக ஏன் அடிபட்டுக் கொள்ள வேணும்‘ என்று சில மாதங்களுக்கு முன்பு, (DTNA உருவாக்கப்பட்டபோது) ரெலோவின் முக்கியஸ்தர் ஒருவரிடம் கேட்டேன். உடனே அவர் குரலை உயர்த்தி ஆவேசப்பட்டார். ‘கூட்டமைப்பு இல்லையென்று யார் உங்களுக்குச் சொன்னது? கூட்டமைப்பை விட்டு தமிழரசுக் கட்சிதான் வெளியேறிச் சென்றதே தவிர, நாம் தொடர்ந்தும் கூட்டமைப்பாகவே இருக்கிறோம்‘ என்றார். ‘அப்படியில்லையே! நீங்கள் DTNA (ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு‘ என்றல்லவா செயற்படுகிறீர்கள்? கூட்டமைப்பு என்ற பேரில் தமிழரசுக் கட்சிதானே உள்ளத…

  22. தமிழர் அரசியல் ஆரோக்கியமாகுமா? இலட்சுமணன் தேர்தலுக்குப் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியல் சூழ்நிலையானது, தத்தம் தரப்பு நியாயங்களைப் பட்டியல்படுத்தி, அவற்றை மெய்ப்பிப்பதற்கான முயற்சிகளில், ஏட்டிக்குப் போட்டியாக ஈடுபட்டு வருவதைக் காணமுடிகிறத. இவை யாவும் ‘அறிக்கை அரசியல்’ என்ற பழைய மொத்தையில் கள்ளருந்தும் கலாசாரமாகவும் புளித்துப்போன உப்புச்சப்பற்ற வியாக்கியானங்களாகவுமே காணப்படுகின்றன. இத்தகைய போக்குகள், தமிழ்த் தேசிய இருப்பின் ஊடாகச் சமகால அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கும் முன்னெடுப்பதற்கும் தற்காத்துக் கொள்வதற்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லாத நிலைமையை, குறைபாட்டையே வௌிப்படுத்தி நிற்கின்றன. வடக்கு, கிழக்கு பிரதேசங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…

  23. ஐ. அமெரிக்கா – ஈரானிய முறுகல்களின் வெற்றியாளர் யார்? Shanmugan Murugavel / 2020 ஜனவரி 10 , சமகால விடயங்களில் தற்போது அனைவரினது முணுமுணுப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஈரானிடையேயான யுத்தத்தின் எதிர்பார்ப்பே காணப்படுகிறது அதன் விளைவே யாழ்ப்பாணத்தில் பெற்றோல் நிலையங்களில் நேற்று நிலவிய நீண்ட வரிசை முதல் மசகெண்ணை, தங்கம் விலை அதிகரிப்பு, பங்குச்சந்தை வீழ்ச்சி வரை நீள்கிறது. ஆக, இப்போது உலகம் ஒன்றோடு ஒன்றாக தொடர்புபட்டு சுருங்கியுள்ள நிலையில், பெரும்பாலும் குறிப்பிட்ட விடயங்களின் தாக்கங்கள் உலகம் முழுவதும் உணரப்படுபவையாக மாறியுள்ளன. அந்தவகையில், இவ்வாறான குறிப்பிட்ட விடயங்களால் குறிப்பிட்ட தரப்புகளுக்கு கிடைக்கும் அனுகூலங்களே குறித்த விடயங்களுக்கு பின்னால் சத…

  24. இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் சுமார் ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்களை ஒருங்கிணைக்கின்ற அமைப்பாக உள்ள பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொடர் முயற்சியால் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 80 பேர் வரை உறுப்பினராக உள்ள தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக்குழு (All Party Parlimentary Groups for Tamils) உருவாகியுள்ளது. இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்திலேயே, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனப்படுகொலை குறித்து ஒரு சர்வதேச சுயாதின விசாரணை கோரி (International Independent Ivestigaion) உலகத் தமிழர் மாநாட்டை கடந்த 7,8,9-ஆம் தேதிகளில் லண்டன் மாநகரில் நடத்தினர். [size=3][size=4]இந்த மாநாட்டி…

    • 0 replies
    • 734 views
  25. சில்கொட் அறிக்கை ஒரு கண்துடைப்பு ஈராக்குக்கு எதிராக 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகள் இணைந்து நடத்திய போரில் பிரிட்டனின் பங்கைப் பற்றி சேர் ஜோன் சில்கொட் தலைமையில் பிரித்தானியா அரசாங்கம் நியமித்த குழுவின் அறிக்கை, அக்குழு நியமிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளின் பின்னர் கடந்த வாரம் வெளியாகியது. அது பிரித்தானியா அரசாங்கத்துக்கும் முன்னாள் பிரித்தானியா பிரதமர் டொனி பிளயருக்கும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அறிக்கையில் உள்ள முக்கிய விடயங்கள் ஒரு விசாரணையின் பின்னர் ஊர்ஜிதமாகியுள்ளதேயோழிய அவை எதுவும் புதியன அல்ல. போர் நடக்கும் காலத்திலேயே சாதாரண அறிவுள்ள மக்களும் கூட அவற்றை அறிந்திருந்தனர். ஈராக்குக்கு எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.