அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
முஸ்லிம் மக்கள் மீது தவறான கண்ணோட்டம் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றார்கள். அந்த அடிப்படைவாதத் தைத் தழுவிய ஒரு குழுவினரால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களும், அவர்களுடைய கொள்கைக ளும் பலதரப்பினராலும் கண்டிக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு சந்தர்ப்பங்களில் சில தரப்பினராலும், சில அரசியல் பின்னணியைக் கொண்டவர்களினாலும் முழு முஸ்லிம் சமூகமும் இந்த கண்டனங்களுக்குள்ளேயும் விமர்சனங்களுக்குள்ளேயும் உள்ளடக்கப்படுகின்ற துரதிர்ஷ்டவசமான சூழ லும் ஏற்பட்டிருக்கின்றது. அதேவேளை, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளின் பயங்கரவாதப் போக்…
-
- 0 replies
- 453 views
-
-
தேர்தல் வாக்குறுதிகளைப் பார்க்கிலும் வரலாறே முக்கியம் எம்.எஸ்.எம்.ஐயூப் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் (கடந்த 22 ஆம் திகதி காலஞ்சென்ற டொக்டர் ஐ.எம். இல்யாசைத் தவிர) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்களில் பெரும்பாலானோர் இது வரை ஒரு பிரசார கூட்டமேனும் நடத்தவில்லை எனத் தெரிய வந்துள்ளது. தெற்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட சர்வஜன கட்சியின் வேட்பாளர் திலித் ஜயவீர ஆகியோரும் வடக்கில் தமிழ் பொது வேட்பாளர் பி.அரியநேத்…
-
- 0 replies
- 223 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்: தமிழ்த் தலைமைகளின் தெரிவு என்ன? Editorial / 2019 ஒக்டோபர் 10 வியாழக்கிழமை, பி.ப. 05:22 இப்போது எல்லோர் மத்தியிலும் உள்ள கேள்வி யாதெனில், தமிழ்த் தலைமைகள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்பதேயாகும். சிலர் ஏற்கெனவே வாய்திறந்துள்ளனர்; சிலர் திறக்கவுள்ளனர்; சிலர் இப்போதே பகிஸ்கரிப்பு என்ற கோஷத்தைத் தொடங்கியுள்ளனர். வேடங்கள் மெதுமெதுவாக் தானே கலையும். எனவே, பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான். தமிழ் அரசியல் தலைமைகளின் வரலாற்றைப் பார்த்தால், அது என்றுமே தமிழ் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை என்பது புலனாகும். தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பேசியே, புதிய கட்சிகள் உருவாக்கம…
-
- 0 replies
- 414 views
-
-
யாருக்கு கை கொடுக்கும் மஹிந்த என்கிற அரசியல் கருவி? ராஜபக்ஷவை முன்னிறுத்தி, மீண்டுமொரு அரசியல் சதுரங்கத்தை ஆடுவதற்கு தென்னிலங்கை தயாராகின்றது. அதிகாரங்களின் அரசனாக அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, பேரரசனாகும் கனவோடு அரசியலமைப்பில் பல திருத்தங்களைச் செய்து நகரந்து கொண்டிருந்த போது, தேர்தல் சதுரங்கத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டார். ஜனாதிபதித் தேர்தலில் வீழ்த்தப்பட்ட வடு கொஞ்சமும் தணிவதற்கு முன்பே, பொதுத்தேர்தல் களத்தில் இறங்கி அங்கும் சூடுபட்டுக் கொண்டார். இன்றைக்கு முன்னாள் ஜனாதிபதியாக, சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக ஆற்றாமையோடு அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்துக்கு செல்வதே திரு…
-
- 0 replies
- 468 views
-
-
[size=5]'ஆடியும் ஜூலையும் : குட்டிமணி முதல் நிமலரூபன் வரை' [/size] [size=4]ஜூலையில் முந்தி ஆடிப்பிறப்பு வரும். அதுக்கெண்டு ஒரு நாள் விடுமுறையும் வரும்.[/size] [size=4]'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை, ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழும் குடித்திடலாம்...' என்று பள்ளிச்சிறுவர்களெல்லாம் ஆடிப்பாடுவார்கள். ஆடிப்பிறப்பு அன்றைக்கு பள்ளிகள் மட்டுமல்ல அரசாங்க அலுவலகங்களிலும் விடுமுறை இருந்தது.[/size] [size=4]ஆடிப்பிறப்பன்று எல்லா வீடுகளிலும் கூழ் காய்ச்சப்படும். இந்தக்கூழ் மச்சக்கூழல்ல. இது பனங்கட்டிக்கூழ். கலவை ஏதுமில்லாத பனங்கட்டி வாசம் வீசும் இந்தக்கூழை வயிறுமுட்டத் தமிழரெல்லாம் குடித்தார்கள். குடித்துக் கொண்டாடினார்கள். கூழுடன் கொழுக்கட்டையும் அவித்து…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் மீது ஈழத் தமிழ் மக்களுக்கு பெருத்த விமர்சனங்கள் உண்டு. ஆனாலும், சிங்கள மக்களுக்கான ஒரு கட்சியாக அவர்கள் பல்வேறு தியாகங்களை செய்கின்றனர். தேர்தலில் தம்மை மக்கள் கடுமையாக நிராகரித்தபோதும், தமது தியாகங்களை அவர்கள் ஒருபோதும் குறைத்துக்கொள்வதில்லை. ஆனால் இனத்திற்கான விடுதலைக்காக போராடுகிறோம் என்று சொல்லும் தமிழ்த் தேசியவாதிகள் உண்மையில் எதை தியாகம் செய்கின்றனர்? ஜே.வி.பி கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் உள்ளவர்கள், அரசிடம் இருந்து சலுகையாகப் பெறும் தமது வாகன உரிமத்தை விற்று, அந்நிதியை மக்களுக்காக செலவிடுமாறு கட்சியிடம் கொடுக்கின்றனர். அக்கட்சி மீதான பல்வேறு விமர்சனங்களுக்கும் அப்பால், இந்த விடயம் ஒரு…
-
- 0 replies
- 887 views
-
-
இது மோசமான காலம் -இலட்சுமணன் தமிழ் தேசிய இனத்துக்கு மிக மிக மோசமானதொரு காலச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு, வடக்கிலும் கிழக்கிலும் புதிய புதிய அரசியல் கட்சிகள், உதயமாகிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்த சூழ்நிலையை விட, இன்றைய சூழலில், வடக்கு வாதம், கிழக்கு வாதம், சாதி வாதம், மதவாதம், பிரதேசவாதம் போன்ற பூதங்கள் கிளம்பியுள்ளன. இம்முறை, கிழக்கில் தேர்தல் வியூகம், தமிழ்ப் பிரதேசங்களில் சூடுபிடித்துள்ளன. தமிழர் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றப் போவதாக, ஏட்டிக்கு போட்டியாகப் பீற்றப்படுகின்றது. ஐக்கியம், ஒற்றுமை பற்றி பேசினாலும், அதற்கான சூழல் இதுவரை கனியவில்லை. கண்ணியமும் செயற்றிறனும் உள்ளவர்களைப் புறந்தள்ள…
-
- 0 replies
- 368 views
-
-
மக்களுக்கு வைத்துள்ள ‘பரீட்சை’ எம். காசிநாதன் “வயது 40 முதல் 45 வரை உள்ள இளைஞர்கள், அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும்”. “தேர்தல் முடிந்த பிறகு, கட்சியில் பல்வேறு மட்டத்தில் உள்ள பதவிகள், அதிகம் தேவையில்லை” “நான் முதலமைச்சராக மாட்டேன்; வருங்கால முதலமைச்சர் ரஜினி என்று சொல்வதைத் தவிர்த்து விடுங்கள்” என்று, ரஜினி மூன்று முக்கிய அறிவிப்புகளை வௌியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகள், தன்னை வளர்த்த ரசிகர் மன்றங்களை ரஜினி கைகழுவுகிறார் என்ற ஏமாற்றத்தையும் தோற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘வருகிறார்... வருகிறார்’ என்ற ரஜினி, இப்போது வந்து விட்டார். ஆனால், அரசியலுக்கு வரவில்லை. அரசிய…
-
- 0 replies
- 756 views
-
-
ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவான இலங்கை நீதித்துறையை விமர்சிக்க முடியுமா? சில பிரதான தமிழ் ஊடகங்கள் அந்தப் பொறுப்பில் இருந்து விலகி நிற்கின்றன இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீத்துறையை விமர்சிக்க ஊடக ஒழுக்க விதிகளில் இடமில்லை எனவும் இலங்கை அரசியலமைப்புக்கு அமைவாக ஊடகங்களில் நீதித்துறையை விமர்சித்தால் அது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் ஊடகவியலாளர்கள் பலர் கருதுகின்றனர். ஆனால் நீதித்துறையை விமர்சிக்க முடியும். எந்த அடிப்படையில் என்றால்...? ஈழத் தமிழர் அரசியல் வாழ்வுரிமைகளோடு கூடிய நியாப்பாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதும்போது, இலங்கை நீதித்துறையை விமர்சிக்கவும், குற்றம் சாட்டவும் முடியும். நீத்துற…
-
- 0 replies
- 319 views
-
-
போர்க் குற்றவாளிகள் மக்கள் மத்தியில் சுதந்திரமாக உலாவருகிறார்கள்: ஜெனீவாவில் கோகிலவாணி “இலங்கையின் போர்க் குற்றவாளிகள் மக்கள் மத்தியில் சுதந்திரமாக உலாவருகிறார்கள். உலகம் முழுவதும் வாழும் போர்க் குற்றவாளிகளுக்கு இச் சூழல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. தாங்கள் விரும்பிய எந்தப் படுகொலைகளையும் நடத்தி முடித்துவிட்டு தப்பிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்துள்ளது” என முன்னாள் போராளியும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவருமான கோகிலவாணி தெரிவித்திருக்கின்றார். ஜெனீவாவில் நடைபெறும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை முன்னிட்டு ஜெனீவா பத்திரிகையாளர் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்ற…
-
- 0 replies
- 393 views
-
-
புதிய அரசியலமைப்பில் இதன் பிரதிபலிப்பை காணலாம் இலங்கையின் இன ஒற்றுமை சமஷ்டி ஆட்சியிலேயே தங்கியுள்ளது என்ற கொள்கையை அடித்தளமாகக் கொண்டு இலங்கையின் பிரதானமான தென்னிலங்கை அரசியல்கட்சிகளும் தமிழ்ப் பகுதிகளின் பிரதானமான கட்சிகளும் ஒரு காலத்தில் சிந்தித்தன. இதன் பிரதிபலனாக நாட்டில் இன ஒற்றுமை குறைந்ததுடன், இனங்களுக்கிடையே குரோதங்களும் வளர்ச்சி பெற்று இனப்படுகொலையும் அராஜக சூழ்நிலையும் இடம்பெற்றன. இன்று அந்நிலை இல்லை. இன்று அவற்றின் சுருதிகள் அடங்கிப்போயுள்ளன. ஆயினும், மேற்படி கொள்கைகளை அடிநாதமாகக் கொண்ட கட்சிகள் தம் நிலையில் நின்று மாறிவிட்…
-
- 0 replies
- 864 views
-
-
எதிர்காலத்துக்கு வாக்களித்தல்? – நிலாந்தன் August 2, 2020 கூட்டமைப்பு அதன் தேர்தல் அறிக்கையில் பரிகார நீதியைக் கோரவில்லை. இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டால்தான் பரிகார நீதியைக் கேட்கலாம். பரிகார நீதி என்றால் என்ன? இனப்படுகொலைக்கு எதிரான நீதியேது. இனப் பிரச்சினைக்கான பரிகாரம் அல்லது தீர்வு எனப்படுவது இனப் படுகொலைக்கு எதிரான நீதிதான் என்ற பொருளில் அது பரிகார நீதி என்று அழைக்கப்படுகிறது. கூட்டமைப்பின் பேச்சாளர் இனப்படுகொலை என்பதனை சட்டரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று சட்டத்தரணித் தனமாகப் பேசுகிறார். பரிகார நீதி மட்டுமல்ல நிலைமாறு கால நீதியும் தூய நீதி அல்ல. அவை அரசியல் நீதிகள்தான். அரசுகளின் நீதிகள்தான். அரசுகளால் தீர்மானிக்கப்படும் நீதிகள்தான். …
-
- 0 replies
- 551 views
-
-
பொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் வழங்கிய ஆணையின் அர்த்தம் -பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட பொதுத் தேர்தலில் சகல எதிர்க்கட்சிகளையும் முக்கியத்துவமற்றவையாக்கி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுலபமாக சாதித்த ஏறத்தாழ 2/3 பாராளுமன்ற பெரும்பான்மை வெற்றி கடந்த காலத்தில் ஒரேயொரு சமாந்திரத்தை மாத்திரமே கொண்டிருந்தது. 1977 ஜூலை பொதுத் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்தனா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற 6/5 பாராளுமன்ற பெரும்பான்மை வெற்றியே அதுவாகும். முக்கிய போக்குகள் 225 ஆசனங்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை வென்றிக்கும் அதேவேளை, முன்னாள் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பரிதாபகரமான தோல்வியை சந்தித்திருக்கிறது. அந்தக் கட்சிக்கு ஒரேயொரு ஆசன…
-
- 0 replies
- 533 views
-
-
இருபதாவது திருத்தமும் திருந்தாத தலைமைகளும் Bharati இலங்கையின் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் இருபதாவது திருத்தம் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. எதிர்ப்பு என்பது பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்ததைவிட வெளியே சிவில் சமூக அமைப்புக்களிடம் அதிகமாக இருந்தது. அதற்கும் மேலாக சில முக்கியமான பௌத்த மத பீடங்களில் இருந்தும் எதிர்ப்புகள் வந்திருந்தன. ஆனாலும் பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்த பலவீனங்களைக் கொண்டு இருபது நிறைவேற்றப்பட்டுள்ளது எனலாம். அத்தகைய பலவீனத்தை அதிகம் வெளிக்காட்டியவர்களாக சிறு கட்சிகளின் தலைமைகளைக் கூறலாம். ஆளும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெர…
-
- 0 replies
- 637 views
-
-
நல்லிணக்க செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார். நல்லாட்சி அரசாங்கமானது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்துவருகின்ற போதிலும் அதனை குழப்பும் வகையிலான செயற்பாடுகளில் இனவாத சக்திகள் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றன. அரசாங்கமானது அரசியலமைப்பை மாற்றியமைத்து பிரச்சி னைக்கு தீர்வுகாண்பதற்கான முன்முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனால் இந்த முயற்சிகளைக் கூட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையி…
-
- 0 replies
- 217 views
-
-
சைப்ரஸ்: அமைதியைத் தேடி -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ போரின்றி அமைதியும் அமைதியின்றிப் போரும் பொருளற்றன. அமைதியின் தேவை பெரும்பாலும் காலங்கடந்தே உணரப்படுகிறது. உணரும்போது தாமதம் மிகுந்து அமைதியின் அனைத்துக் கதவுகளும் இறுகச் சாத்திக் கிடக்கலாம். அமைதி இலகுவில் இயலுவதில்லை; அவ்வாறு இயல்வது வெகுகாலம் நிலைப்பதில்லை. எனவேதான், கடவுளைக் கண்டாலும் அமைதியைக் காணவியலாது என்று சொல்வதுண்டு. அமைதியின் விலை மதிக்கவியலாதது. அது நிலைக்கும் போது உருவாகும் சூழலுக்கும் மகிழ்ச்சிக்கும் ஈடில்லை. சின்னஞ்சிறிய நாடான சைப்ரஸ் உலகில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் பழைய முரண்பாடுகளில் பிரதானமானதைத் தன்னகத்தே கொண்டது. அந் நெருக்கடியை…
-
- 0 replies
- 455 views
-
-
ஒரு இலட்சம் காணித் திட்டம் நிலப்பறிப்பின் இன்னொரு வியூகம்! - நா.யோகேந்திரநாதன்.! பொலன்னறுவை மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் மாதுறு ஓயா குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது அப்பிரதேசத்தின் அமைவிடம் காரணமாக பல சிங்கள மக்கள் அங்கு குடியேறத் தயங்கினர். அப்போது ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜே.ஆர்.ஜயவர்த்தன நாம் எல்லைகளை நோக்கி நகர மறுத்தால் எல்லைகள் எங்களை நோக்கி நகர்ந்து வந்துவிடும் எனப் பகிரங்கமாக எச்சரித்தார். அந்த அறைகூவல் ஏராளமான சிங்கள மக்களை அங்கு குடியேற வைத்ததுடன் காலப்போக்கில் பிரதேசத்தின் தற்போது மேய்ச்சல் தரவைகளை ஆக்கிரமிக்கும் நிலையும் உருவாகி விட்டது. அன்று ஜே.ஆர்.ஜயவர்த்தன விடுத்த எல்லைகள் நகரும் பிரச்சினையை தமிழ் மக்கள் கவனத்தில்…
-
- 0 replies
- 373 views
-
-
விக்கிலீக்ஸ் - அம்பலமாகும் இரட்டை வேடங்கள் சந்திர பிரவீண் குமார் 1940களில் லக்ஷ்மிகாந்தன் என்ற பத்திரிகையாளர் சினிக்கூத்து என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் மட்டுமல்லாது நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய அவதூறான செய்திகளை வெளியிட்டதால் பத்திரிகை தடை செய்யப்பட்டது. ஆனால் அவர் அசராமல் ஹிந்துநேசன் என்ற பத்திரிக்கையைத் துவங்கி அதில் நடிகர்கள் மட்டுமல்லாது அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பற்றி விமர்சனம் செய்தார். இறுதியில் லக்ஷ்மிகாந்தன் கொல்லப்பட்டார். அவரது கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு அந்த நாளைய நடிகர்கள் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோருக்கு நாடு கடத்தும் தண்டனை வழங்கப்பட்டது. கடைசியில் அவர்கள் ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெனிவாத் தீர்மானமும் பின்னும் - நிலாந்தன் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் வலைஞர்மடம் தேவாலயத்தை மையமாகக் கொண்டு மருத்துவர்களும் மதகுருக்களும் இயங்கிக்கொண்டிருந்த ஒரு காலகட்டம். மாதா கோயிலின் பங்குத்தந்தையாக அமரர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் இருந்தார். மாதா கோயில் வளாகத்தில் ஒரு பெரிய பதுங்குகுழி இருந்தது.அதைத்தான் மருத்துவர்களும் மதகுருமார்களும் கன்னியாஸ்திரிகளின் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்திவந்தார்கள்.கடைசிக்கட்டப் போரில் கட்டாய ஆட்சேர்ப்பில் இருந்து தப்பிவந்தவர்களுக்கு வலைஞர் மடம் தேவாலயம் ஒரு புகலிடமாகவும் இருந்தது. அந்நாட்களில் அத்தேவாலயம் ஓரூழிக்காலத்தின் சமூக இடையூடாட்ட மையமாகச்…
-
- 0 replies
- 437 views
-
-
பசில் ஒரு மந்திரவாதியில்லை ? நிலாந்தன். July 25, 2021 அமெரிக்கா வழங்கிய மிலேனியம் சலேன்ச் உதவித்தொகையை நிராகரித்த ஒரு அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்சவை நிதியமைச்சராக நியமித்திருக்கிறது. இதை அகமுரண் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது மேற்கு நாடுகளோடு சுதாகரித்துக்கொள்ளும் ஓர் உத்தி என்று எடுத்துக் கொள்வதா ? கடந்த சில வாரங்களாக இலங்கை அரசாங்கம் மேற்கு நாடுகளைச் சமாளிக்கும் விதத்தில் சில நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தாவிட்டால் அல்லது அகற்றாவிட்டால் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்காது என்ற தொனிப்பட எச்சரிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவே…
-
- 0 replies
- 371 views
-
-
13ஆவது திருத்தமும் தமிழ் அரசியல் சமூகமும் – ஒரு யதார்த்த அணுகுமுறை Samakalam February 21 http://www.samakalam.com/wp-content/uploads/2022/02/856.jpeg – கலாநிதி நிர்மலா சந்திரகாசன் இன்றைய தமிழ் அரசியல் பரப்பில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ள விவகாரம் இலங்கை அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தம் பயனுள்ளதா, பயனற்றதா என்பதும், அதன் விளைவாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை அரசு முறைமை உண்மையிலேயே தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் தன்மையை கொண்டதா, இல்லையேல் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அடையக்கூடிய கணிசமான அதிகார பகிர்வை தடுத்து நிறுத்தும் ஒரு பயனற்ற நிறுவனமாக இருக்கின்றதா? என்பதுமாகும். …
-
- 0 replies
- 311 views
-
-
உலக உணவு நெருக்கடி: அடுப்பிலிருந்து நெருப்புக்குள் இலங்கை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை, இலங்கையர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பது போலவே, நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றபோது, ‘உடனடியாக வெளிநாடுகள் கடன் கொடுக்கும்; பிரச்சினைகள் தீரும்’ என்று சொல்லப்பட்டது. “எல்லா இலங்கையர்களுக்கும், மூன்றுவேளை உணவை உத்தரவாதப்படுத்துவதே எனது பணி” என்று பதவியேற்றவுடன் ரணில் விக்கிரமசிங்க சொன்னார். நடந்தது யாதெனில், அவர் பதவியேற்ற போது மூன்று வேளை உண்டவர்கள், இப்போது இரண்டு வேளையும், இரண்டுவேளை உண்டவர்கள் ஒரு வேளையும் உண்கிறார்கள். புதிய பிரதமரின் சாதனையாக …
-
- 0 replies
- 402 views
-
-
இந்தியாவின் அயல்நாடுகள் பல சீனாவுடன் நல்லுறவைப் பேணிவருவதில் ஆர்வங் காண்பிக்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தியாவை எதிர்த்தே இந்த நாடுகள் சீனாவுடன் நல்லுறவைப் பேணுகின்றன எனத் தென்படுகின்ற போதிலும், தமக்கெதிரான அமெரிக்காவின் கடும்போக்கு அணுகுமுறையை எதிர்கொள்வதற்கான ஒரு புதிய உத்தரவாதம் அளிப்பவராகவே இந்த நாடுகள் சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணுகின்றன. இவ்வாறு Eurasia Review இணையத்தில் Chintamani Mahapatra* எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தென்னாசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கானது மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இப்போக்கானது எதிர்காலத்தில் மேலும் அதிகமாகும் என எதிர்வு கூறப்படுகிறது. இரண்டாம் உலக யுத்த…
-
- 0 replies
- 2k views
-
-
பறிக்கப்படுமா ரணிலின் பதவி? பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், சமர்ப்பித்திருக்கிறது ம ஹிந்த ராஜபக்ஷ ஆதரவு, ஒன்றிணைந்த எதிரணி. இந்தமாத முற்பகுதியில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது அதை அவர்கள், சபாநாயகரிடம் கையளித்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, வெற்றி பெறுமா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்படுவாரா என்ற கேள்விகள், அரசியல் வட்டாரங்களில் மாத்…
-
- 0 replies
- 339 views
-
-
நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை மறுசீரமைக்கப்படுதலே பொருத்தம்!! நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை மறுசீரமைக்கப்படுதலே பொருத்தம்!! இன்றைய அரசியலரங்கில் நாட்டு மக்களால் பெருமளவில் பேசப்படுமொரு விஷயம்தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் பதவியை ஒழிப்பதென்பதாகும். இந்த முறைமை ஒரு சர்வாதிகாரத் தன்மை கொண்டதெனக் கருதப்படுமானால், மேற்குலக வல்லரசான அமெரிக்காவில் இன்றும் நடைமுறையிலிருப்ப…
-
- 0 replies
- 322 views
-