அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
ஆட்சிமுறை சர்வதேச நாணய நிதியத்தின் ‘ராடருக்குள்’ வரும் முதல் ஆசிய நாடாக இலங்கை Veeragathy Thanabalasingham on March 27, 2023 Photo, The New York Times இலங்கை அரசாங்கம் கடந்த செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன் கண்ட உடன்பாட்டுக்கு அதன் நிறைவேற்று சபை ஏழு மாதங்களுக்கு பிறகு கடந்தவாரம் (மார்ச் 20) அங்கீகாரம் வழங்கியதையடுத்து விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியாக (Extended Fund Facility) 300 கோடி அமெரிக்க டொலர்கள் கடனுதவி கிடைத்திருக்கிறது. நான்கு வருட காலத்தில் எட்டு தவணைகளில் வழங்கப்படவிருக்கும் இந்த கடனுதவியின் முதல் தவணைக் கொடுப்பனவு 30 கோடி 30 இலட்சம் டொலர்கள் உடனடியாகவே கடந்த வாரம் கிடைத்தது. இதில் 12 கோடி 10 இலட்…
-
- 0 replies
- 876 views
-
-
இலங்கையில் அதிகாரப் பரவலாக்கலும் பார்த்தசாரதியின் பங்களிப்பும் இலங்கை அரசியலிலும் இனங்களுக்கிடையிலான உறவுகளிலும் ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவாத வன்செயல்களுக்கு ( கறுப்பு ஜூலை) பிறகு 35 வருடங்கள் கடந்தோடிவிட்டதை முன்னிட்டு கடந்த மாதம் கட்டுரைகளை எழுதிய அரசியல் ஆய்வாளர்கள், விமர்சகர்களில் அனேகமாக சகலருமே ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாடு பூராவும் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அந்த மிலேச்சத்தனமான வன்செயல்களே இலங்கையின் இனமுரண்பாட்டுப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது என்பதையும் இறுதியில் 1987 ஜூலை 29 இந்திய --இலங்கை சமாதான உடன்படி…
-
- 0 replies
- 433 views
-
-
தமிழீழ விடுதலை புலிகள், மே 2009ம் ஆண்டு வரை, தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளாக விளங்கியவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிறிலங்கா அரசிடம் கூலி பெற்ற சிலர் கடந்த சில வருடங்களாக இவ்வியக்கத்தை சின்னபின்னமாக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலை புலிகளை வெற்றி கொண்டது யார் என்பதை ஆராயும் பொழுது, தேர்தல் பிரச்சார மேடைகளில், மைத்திரிபால சிறிசேனவின் சார்பணியினரான – சந்திரிக்க குமாரதுங்க, தளபதி சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர போன்றோர் தமது நடவடிக்கைகளினாலே தமிழீழ விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களென வீரம் பேசுகின்றனர். மறுபுறம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தானும் தனது சகோதரருமான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரே வெற்றி கொண்டத…
-
- 0 replies
- 1.4k views
-
-
13 படும்பாடு August 4, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு 45 வருடங்களுக்கும் அதிகமான காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இதுவரையில் அதற்கு 21 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. பதவியில் இருந்த ஜனாதிபதிகள் தங்களது அரசியல் நலன்களுக்கு வசதியான முறையில் கொண்டுவந்த திருத்தங்களே — அடிப்படையில் ஜனநாயக விரோதமான ஏற்பாடுகளைக்கொண்ட திருத்தங்களே அவற்றில் அதிகமானவை எனலாம். ஆனால், அத்தகைய ஜனநாயக விரோத திருத்தங்களையும் விட மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்ட — ஜனநாயக பரிமாணத்தைக் கொண்ட 13 வது திருத்தமே மிகவும் நீண்டகாலமாக கடுமையான அரசியல் சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. 1…
-
- 0 replies
- 779 views
-
-
இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசு, ராஜபக்ச சகோதரர்களின் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணகளையும் வழக்குகளையும் தொடுத்து வருகின்றது. ராஜபக்ச சகோதரர்கள் தமது ஆட்சிக் காலம் முழுவதும் ஈழ மக்களுக்கு எதிராக பல்வேறு அநீதிகளை இழைத்தமை குறித்து யாரும் எதுவும் பேசவில்லை. ராஜபக்ச சகோதரர்கள் தங்கள் குடும்ப சர்வாதிகார ஆட்சியில் செயத மாபெரும் குற்றம் ஈழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றமே. ஈழ மக்கள் ஒன்றரை லட்சம் பேரை படுகொலை செய்து மிகக்கொடிய போர்க்குற்றங்களை அரங்கேற்றிய ராஜபக்சக்களை விசாரிக்க சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கு மாத்திரம் இலங்கையின் புதிய ஆட்சியாளர் தயங்குவது ஏன்? முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக…
-
- 0 replies
- 331 views
-
-
திருகோணமலையை வசப்படுத்திய மோடி! மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில், இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்ட ,திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் விவகாரத்துக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தின் போது ,திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை, இந்தியாவின் ஐ.ஓ.சி (இந்தியன் ஒயில் நிறுவனம்) ஊடாக புனரமைப்பதற்கு இரு நாடுகளும் இணைந்து உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. 13 ஆண்டுகளுக்கு முன்னர், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கமைய.திருகோணமலை எண்ணெய்க் குதங்களின் மீதான கட்டுப்பாட்டை இந்தியா தன்வசம் எடுத்துக் கொண்டிருந்தாலும், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அந்த உடன்பாடு …
-
- 0 replies
- 296 views
-
-
இந்தியா - பாகிஸ்தான்: போரின் மொழி சொல்லும் கதைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மார்ச் 07 வியாழக்கிழமை, பி.ப. 05:43Comments - 0 போரை விரும்புகிறவர்கள் போரில் பங்கேற்பதில்லை; போரில் மரிப்பதில்லை; அவர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. போரின் மொழியை, அவர்களே உரைக்கிறார்கள்; ஊடகங்களில் கூவுகிறார்கள்; அவர்களே, போரை விற்கவும் செய்கிறார்கள். முன்பு, போர்களுக்காக ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இப்போது, உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களை விற்பதற்காகப் போர்கள் உருவாக்கப்படுகின்றன. போர், மிகப் பெரியதொரு வியாபாரம். அது, மரண ஓலங்களையோ, இழந்த அவயவங்களையோ, அநாதைகளையோ அறியாது. அதையே தொடர்ந்தும் சிலர் உரைக்கிறார்கள்; தேசபக்தியின் பெயரால், தேசியத்தின் பெயரால் அ…
-
- 0 replies
- 501 views
-
-
இந்திய வெளி விவகார அமைச்சின் இலங்கைப் பயணமும் தேசிய நல்லிணக்கமும்-பா.உதயன் External Affairs Minister conveyed to President Rajapaksa, India’s expectation that the Sri Lankan government will take forward the process of national reconciliation to arrive at a solution that meets the aspirations of the Tamil community for equality, justice, peace and dignity”. இலங்கையின் அரசியல் அதிகார மாற்றத்தின் பின் முதல் முதலாக இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கைக்கு விஷயம் செய்திருக்கிறார்.ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் ஈழ தமிழருக்கான தேசிய நல்லிணக்கம் சம்மந்தமாக பேசி இருக்கிறார்.ஈழத் தமிழர்கள் சம உரிமையுடனும் சமத்துவமாகவும் கண்ணியமாகவும் வாழ வழி ஏற்பட வேண்டும் என இலங்கை அரசிட…
-
- 0 replies
- 366 views
-
-
-
- 0 replies
- 875 views
-
-
இது போர்க்களமல்ல; அரசியற் களமே! September 29, 2025 — கருணாகரன் — மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாகாணசபைகளுக்கு மேலான (13+) அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் இதுவரையிலும் வலியுறுத்திக் கொண்டிருந்தன தமிழ்த்தேசியக் கட்சிகள். இதற்காக இலங்கை அரசை மட்டுமல்ல, இந்திய அரசையும் கோரிக் கொண்டிருந்தன. இந்தக் கோரிக்கையோடு கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரலாயத்துக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதரகத்துக்கும் பல தடவை சென்று முறையிட்டும் பேசியும் வந்திருக்கிறார்கள். 23.09.2025 அன்று கூட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் இதற்காக இந்தியத் தூதரைச் சந்தித்திருக்கின்றனர். ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தல…
-
- 0 replies
- 109 views
-
-
மனிதாபிமானத்தின் தராசில் இனவழிப்பும் இனச் சுத்திகரிப்பும்: எது கனமானது? Photo, THE ECONOMIST இனவழிப்பு (Genocide) – இன சுத்திகரிப்பு (Ethnic Cleansing) இரு வார்த்தைகளில் உள்ள நுண்ணரசியல் குறித்து விளங்கிக்கொள்ள வேண்டியதொரு புள்ளியில் இன்று நாம் இருப்பதாகத் தோன்றுகின்றது. ஓர் இன, மத அல்லது சமூகக்குழுவை முழுமையாக அழித்துவிடும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்படும் கொலைகள் இனவழிப்பு எனப்படுகின்றது. இது பல்வேறு முறைகளில் முன்னெடுக்கப்படலாம். கொலைகள், பாலியல் வன்முறைகள், மொழி மற்றும் கலாசார ஒழிப்புக்கள் இதனுள் உள்ளடங்கும். இது சர்வதேச சட்டத்தின் கீழ் (1948 UN Genocide Convention) தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதொரு குற்றமாகும். இதன் ஒரே நோக்கு குறிப்பிட்ட குழுமத்தினை அழிப்பது மட…
-
- 0 replies
- 118 views
-
-
கிழக்கு வெளுக்குமா..? July 20, 2020 இலங்கையில் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்ற ஒரு கருத்து தமிழர்களிடையே இருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் கலைஞருமான மு.கருணாநிதி யும் இதனையே சொல்லி தனது பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள காரணம் தேடிக்கொண்டார். ஏன் உலகெங்கும் வாழும் தமிழிரிடையே கூட இந்த ஒற்றுமை இல்லை என்ற ஒரு கருத்து உண்டு. உலகில் எந்தவொரு இனமும் எல்லோரும் எதிர்பார்க்கும் இந்த ஒற்றுமையை அடையவில்லை என்பது ஒருபுறமிருக்க, இலங்கையில் தமிழர்களிடையே ஒற்றுமையை அரசியலில் மாத்திரம் எதிர்பார்ப்போர், மொழியைப் போல ஏனைய கலை, கலாசார, பண்பாட்டு இலக்கிய தளங்களில் ஒற்றுமையாக இணைந்து செயல்படுகின்றனரா அல்லது அதற்கான முயற்சிகளை எடுக்கின்றார்களா எனும் கேள்வியை முன்வை…
-
- 0 replies
- 365 views
-
-
திட்டமிட்ட செயற்பாடுகளை நிறுத்தி மாணவர் கொலைக்கு நீதி வழங்கவேண்டும் யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவரின் படுகொலையினை கண்டித்து வடக்கில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதனைவிட வடக்கு உட்பட நாடு முழுவதிலும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது நண்பர்களின் படுகொலைக்கு நீதி வழங்கக்கோரி பெரும் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையை கண்டித்தும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தி நீதி வழங்குமாறு வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் நேற்று முன்தினம் யாழ்ப்பாண செயலகத்தை முடக்கி பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கின்றது. கொட்டும் மழைக்கு மத்தியில…
-
- 0 replies
- 242 views
-
-
பல்கலைக்கழக மாணவர் கொலையும் தமிழர் தலைமையின் பொறுப்பும் - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரு பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலையே இன்றைய நிலையில் இலங்கை அரசியலின் பேசுபொருளாக இருக்கிறது. அப்படுகொலை இடம்பெறும் வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' நிகழ்வே அரசியல் அரங்கின் பேசுபொருளாக இருந்தது. இப்போது சடுதியாக ஒரு பதட்டநிலை தோன்றியிருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் தெற்கிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இது ஒரு நல்ல விடயம் என்பதில் சந்தேகமில்லை இந்த கொலைகளுக்கு கண்டனம் தெரிவிப்பது போன்றே தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட படுகொலைகள், யுத்தக் குற்றங்கள் தொடர…
-
- 0 replies
- 434 views
-
-
சர்வதேசத்தில் உள்ள தடைகள் உடைக்கப்படவேண்டும்- நா.விஸ்ணுகாந்தன் வேண்டுகோள் சர்வதேசத்தில் இருக்கின்ற அத்தனை நாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த வேண்கோளை விடுத்துள்ளார். தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வும் கிடைக்கவேண்டுமானால் சர்வதேச ரீதியாக இருக்கும் தடை நீக்கப்படவேண்டும் எனவும் வரவு செலவுத் திட்டம் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 487 views
-
-
எனது அரசியல் நகர்வுகளை சிறையில் இருந்தே திட்டமிட்டேன் – ‘தினக்குரல்’ பிரத்தியேகப் பேட்டியில் பிள்ளையான் 0 போரட்டத்தில் என்ன நடந்தது? போரட்டத்தின் போக்கு இறுதியில் தோல்விக்கான காரணம் என்ன? என்பது குறித்து நூல் ஒன்றை எழுதுகன்றேன். 0 சிறைச்சாலை வாழ்க்கை ஒரு கடினமான வாழ்க்கை. 61 மாதங்கள் சிறையில் இருந்திருக்கின்றேன். சுமார் மூன்றறை வருடங்கள் தனி அறையில் இருந்துள்ளேன்! 0 தமிழ் தேசிய கூட்டமைப்பு பிள்ளையானை அழிக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தியது வேடிக்கையான விடயம். காயத்திரி நளினகாந்தன் “என்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கள் உண்மைக்கு புறம்பான அரசியல் பழிவாங்கல். ஆகையால் இதனை என்னால் முழுப்பிரயத்தனம் வழங்கி…
-
- 0 replies
- 834 views
-
-
அரசியலில் வெகுஜனங்களும் புலமைத்தளமும் -என்.கே. அஷோக்பரன் பிரபல எழுத்தாளரான ஐசக் அசிமொவ், அமெரிக்க ஜனநாயகம் அடைந்து வரும் மாற்றத்தை அவதானித்து, “புலமைத்துவ எதிர்ப்பு என்பது, நமது அரசியல், கலாசாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வாழ்க்கையில், ஒரு நிலையான அம்சமாக இருந்து வருகிறது. ‘எனது அறியாமையும் உங்கள் அறிவும் ஒன்று’ என்ற தவறான கருத்தியலால், ஜனநாயகம் தவறான வழியில் வளர்க்கப்படுகிறது”என்று கருத்துரைத்திருந்தார். ‘மக்கள் மயப்படுத்துகிறோம்; மக்களிடம் கொண்டு செல்கிறோம்’ என்ற போர்வையில், புலமைத்தளத்தின் பங்களிப்பை நிராகரித்து விட்டு, ஜனநாயகத்தை கொண்டு நடத்துவதானது, தோல்வியிலேயே முடியும். வீதியில் இறங்குவதும், கூச்சல் கூப்பாடு போடுவதும், அதன் மூலம் அரசியல் சாதனைகளைப் பு…
-
- 0 replies
- 454 views
-
-
ஊசிக் கதைகள் -நிலாந்தன்! September 26, 2021 கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நேற்று முன்தினம் அதாவது கடந்த 24ஆம் திகதியிலிருந்து பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடக்கப்படுவதையொட்டி மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள். கொரோனா வைரஸ் தோன்றிய காலமிருந்தே அதுதொடர்பான கட்டுக்கதைகளும் தோன்றத் தொடங்கின. கிளிநொச்சியில் நடந்த ஒரு கதை வருமாறு. ஐரோப்பாவில் வசிக்கும் ஒருவர் கிளிநொச்சியிலுள்ள உறவினருக்கு ஒரு காணொளியை அனுப்பியிருக்கிறார். காணொளியில் தான் தடுப்…
-
- 0 replies
- 832 views
-
-
யூலைக் கலவரமும் தீர்வின்றி தொடரும் தமிழ் மக்கள் கோரிக்கையும்! இற்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னர் தீவிரம் பெற்ற தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டமும், அதன் கோரிக்கைகளும் இன்றும் தீர்க்கப்படாத நிலையிலேயே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் புதிய குடியேற்றங்களின் மூலமாகவும் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகவும் முன்பை விடவும் மோசமான நிலைக்கு சென்றிருக்கின்றது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம் தனது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1920 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மனிங் அரசியல் யாப்பு சீர்திருத்தம் ச…
-
- 0 replies
- 332 views
-
-
முட்டுச்சந்தியில் முனகும் தேசம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மக்கள் போராட்டங்களின் வீரியம் என்னவென்பதை இலங்கையர்களும் குறிப்பாக அரசியல்வாதிகளும் உணர்ந்த தருணம் மகத்தானது. ஆனால் இலங்கை அரசியலில் பேரிடர்கள் வரிசைகட்டி நிற்கின்றன. எதிர்கட்சித் தலைவர் ஒருபேரிடர் என்றால் சபாநாயகர் இன்னொரு பேரிடர். எதிர்கட்சிகளும் பாராளுமன்றும் இதன் தொடர்ச்சி. இந்தப் பின்னணியிலேயே இந்நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிகளை மக்கள் தேடவேண்டியிருக்கிறது. ஹிட்டலராகத் தன்னை உருவகித்துக் கொண்டவர் இறுதியில் கோமாளியாகி நாட்டை விட்டுத் தப்பியோட நேர்ந்திருப்பது அவல நகைச்சுவை. இதை சாத்தியமாக்கிய பெருமை போராட்டக்காரர்களையே சாரும். கடந்த 9ம் திகதி மக்கள் திரள் உறுதியானதும் இறுதியானதுமான செய்தியை…
-
- 0 replies
- 500 views
-
-
வட-கிழக்கு நில ஆக்கிரமிப்பும் நிலைகுலைந்த தமிழர் தலைமையும் கலாநிதி சூசை ஆனந்தன் வடக்கில் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி விகாரை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்திருந்தன.முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் பிக்குவின் உடல் தகன விவகாரம், இப்போது திருகோணமலை கோணேஸ்வர கோயிலை மாசுபடுத்தும் விவகாரங்கள், ஏற்கனவே பறிபோன கன்னியா வெந்நீரூற்று விவகாரம்…இவைகள் இப்பிரபஞ்சத்தில் மிகவும் மோசமான இழி நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு மதவாத தொழுநோய் பிடித்த நாடு சிறிலங்கா என்பதை நிரூபிக்க போதும். வடகிழக்கில் இன்று ஏற்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு,மற்றும் நினைத்தவாறு புத்த விகாரைகள் கட்டுதல் போன்ற அரா…
-
- 0 replies
- 341 views
-
-
நம்பிக்கையில்லா பிரேரணையும் அதன் அதிர்வலைகளும் நரேன்- கிராம, நகர அபிவிருத்தி மற்றும் அவைகளின் அடிப்படை சுகாதாரம் போன்ற விடயங்களை கையாள்வதற்காக கிராம மட்டத்தில் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான உள்ளூராட்சி தேர்தலானது நாட்டின் ஒட்டுமொத்த அரசியலையே ஆட்டம் காண வைத்துள்ளது. மைத்திரி – ரணில் கூட்டாச்சியை இல்லாமல் செய்து ரணிலை பிரதமர் பதவியில் இருந்து அகற்றிவிடுமோ என்ற அளவிற்கு கூட நிலமைகள் சென்றிருந்தது. ஒரு சில அரசியல் அவதானிகள் மத்தியில் இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை மீறுவதற்காகவே இந்த நகர்வு மஹிந்தவின் மூலம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவடைந…
-
- 0 replies
- 344 views
-
-
#தமிழ்தேசியம்: வாழ்வுரிமையை முன்னிறுத்துவது தேசிய இன அரசியல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இ…
-
- 0 replies
- 703 views
-
-
கொள்கைப்பிரகடனமும் யதார்த்த நிலையும்! ஓர் ஆட்சி மாற்றத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஆட்டம் கண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியம். உறுதியான அரசியல் நிலைமை இல்லாமல் ஆட்சியைக் கொண்டு நடத்துவது என்பது கடினமான காரியம். நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளான இரண்டு அரசியல் கட்சிகளும் பலப்பரீட்சைக்கான மோதல்களில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. தனித்து ஆட்சியை நடத்துவதா? அல்லது இணைந்து செயற்படுவதா என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முடிவு காண முடியவில்லை. அதிகாரத்தைத் தொடர்வத…
-
- 0 replies
- 735 views
-
-
வெளியாரின் ஆக்கிரமிப்புக்குள் வடமராட்சி கிழக்கின் கடலும் நிலமும் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் குறிவைத்து அழிக்கும் செயற்பாடுகள், காலத்துக்குக் காலம் வெளித்தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலம் வரையில், இந்திய ரோலர்களின் ஆக்கிரமிப்பால் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்த வடமராட்சி கிழக்கு மீனவர்கள், தற்போது தென்இலங்கை மற்றும் வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வடமராட்சி கிழக்கு மீனவர்கள், பாரம்பரிய முறையிலான கரையோர மீன்பிடியையும் நவீன முறையிலான ஆழ்கடல் மீன்பிடியையும் ஒன்றுக்கொன்று பாதிப்பு ஏற்படாத வகையில்…
-
- 0 replies
- 336 views
-