அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
விக்னேஸ்வரனின் கூட்டணி: காத்திருக்கும் சவால்கள் வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் சுருங்கத் தொடங்க, தமிழ்த் தேசிய அரசியலில் பரபரப்புத் தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. ஏனென்றால், வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் பரவலாக எதிர்பார்ப்புக்குரியதொன்றாக மாறியிருக்கிறது. வடக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பது, இலங்கையில் மாத்திரமன்றி, வெளியுலகினாலும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்ற விடயம். ஏனென்றால், வடக்குடன் பல்வேறு நாடுகள் பல்வேறு தொடர்புகளை வைத்திருக்கின்றன. இலங்கையின் ஏனைய 8 மாகாணங்களையும் விட வடக்கின் மீது தான் சர்வதேச கவனம் குவிந்திருக்கிறது. வ…
-
- 0 replies
- 517 views
-
-
கூட்டமைப்புடன் அரசாங்கம் இருதரப்பு பேச்சு நடத்துமா? புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் பாரிய சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த விடயத்தில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகின்றது. அதாவது புதிய அரசியலமைப்பு வருமா? அதில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளடக்கப்படுமா? தேர்தல் முறைகள் மாற்றப்படுமா? நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமா போன்ற கேள்விகள் அனைவர் மத்தியிலும் எழுகின்றன. காரணம் இந்த விடயங்களை முன்னெடுப்பதாக கூறியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது…
-
- 0 replies
- 381 views
-
-
கடந்த வாரம் அமெரிக்க பாராளுமன்றத்தின் ஆயுதப்படைகள் தொடர்பான உப குழுவின் முன்பாக உரையாற்றிய அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைப் பிரதித் தளபதியான வைஸ் அட்மிரல் ஜோசப் முல்லொய், அதிர்ச்சி தரக்கூடிய பெரியதொரு குண்டைத்தூக்கிப் போட்டிருந்தார். அமெரிக்கவிடம் உள்ள நீர்மூழ்கிகளின் எண்ணிக்கையை விட, சீனாவின் நீர்மூழ்கிகளின் பலம் அதிகமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். உலகிலேயே படைபல ரீதியாக அதிசக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்ட நாடு அமெரிக்காவே என்ற கருத்து உலகில் உள்ளது. அமெரிக்கா அடுத்த தலைமுறைக்கான ஆயத தயாரிப்புகள், கண்டுபிடிப்புகளுக்குக் கூட முக்கியமளிக்கும் ஒரு நாடு. ஆனால், அமெரிக்காவையும் மிஞ்சக் கூடியளவுக்கு சீனாவின் ஆயுதப் போட்டி அதி வேகத்தில்…
-
- 0 replies
- 332 views
-
-
தமிழரசு கட்சிக்குள் தேர்தல்: தமிழ் கட்சிகளும் உட்கட்சி ஜனநாயகமும்! நிலாந்தன். தமிழரசு கட்சியின் தலைவரைத் தீர்மானிப்பதற்கான தேர்தல் பெரும்பாலும் இம்மாத இறுதியில் நடக்கலாம் என்றே தோன்றுகிறது. அதை ஒத்தி வைப்பதற்கு சம்பந்தர் முயற்சிப்பதாக இடையில் தகவல்கள் வந்தன.ஆனால் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் இரண்டு பிரதான வேட்பாளர்களும் தீர்மானகரமாக இருப்பதாகத் தெரிகிறது.குறிப்பாக சுமந்திரன் தேர்தலை நடத்த வேண்டும் என்ற விடயத்தில் பிடிவாதமாக காணப்படுகிறார்.பல மாதங்களுக்கு முன்னரே அவர் அதை நோக்கி உழைக்கத் தொடங்கி விட்டார்.சம்பந்தருக்கு எதிராக வெளிப்படையாக ஒரு தென்னிலங்கை ஊடகத்துக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும் பொழுது,அந்தக் கலகம் தொடங்கிவிட்டது. அந்த கலகத்தின் விளைவாகத்தான் தமிழரசுக்…
-
- 0 replies
- 463 views
-
-
சம்பந்தனால் நிராகரிக்க முடியாத தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட யோசனை - யதீந்திரா சில நாட்களாக ஊடகங்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட நகல் தற்போது வெளியாகியிருக்கிறது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டது போன்று, அது வெளியிடப்பட்ட பின்னர் பெரியளவில் விவாதங்களோ அல்லது சர்ச்சைகளோ இடம்பெறவில்லை. ஏனெனில் பெரியளவில் சர்ச்சைக்குரிய விடயங்கள் எதுவும் அதில் இல்லை. ஒருவேளை குறித்த யோசனையில் விடுதலைப் புலிகளின் சாயல் தெரிந்திருந்தால், அது ஒருவேளை சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் குறித்த தீர்வு நகலை தயாரிக்கும் நிபுணர்குழுவில் இருந்தவர்கள், மிகுந்த அவதானத்துடன் விடயங்களைக் கையாண்டிருக்கின்றனர். கடந்த காலத்தில் கூட்டமைப…
-
- 0 replies
- 522 views
-
-
05 AUG, 2025 | 10:09 AM ஆர்.ராம் 2022இல் இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக தானே அறிவித்ததன் பின்னரான சூழலில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள மக்கள் கூட்டத்தினர் ஏதோவொரு வகையில் நெருக்கடிக்குள் வாழுகின்ற நிலைமைகள் தோற்றம் பெற்றிருந்தன. குறித்த அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகளாகின்றபோதும் சாதாரண மக்கள் மத்தியில் மீளெழுச்சி அடைந்த நிலைமைகள் இன்னமும் தோற்றம் பெற்றிருக்கவில்லை என்பதே கள யதார்த்தமாக உள்ளது. கள ஆய்வுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ள குடும்பங்கள் ஏதோவொரு வகையில் தமது செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்காக போராடிக்கொண்டிருக்கும் நிலைமைகள் தொடர்கின்றன. குறிப்பாக, வாழ்வாதாரத்துக்கான போராட்டம் நீண்டதாக இருப்பது முக்கியமான விடயமாகின்றது. நாட்டின் தற்போதைய பொர…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
தமிழ் மக்களுக்கு 'போக்கிமொன்' சொல்லும் செய்தி என்ன? ப. தெய்வீகன் உலகம், கடந்த இரண்டு மாதங்களாக பயங்கரவாதத்தின் கொடும்பிடியில் சிக்கி பல உயிர்களை இழந்திருக்கிறது. அதற்குச் சற்றும் குறைவில்லாமல், அரசியலிலும் பல அதிரடி நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில், கடந்த ஜூலை 11ஆம் திகதி உலக சனத்தொகையில் பல இலட்சக்கணக்கானவர்களை தன் பக்கம் திரும்ப வைத்த ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அது வேறொன்றுமில்லை. 'போக்கிமொன்' எனப்படும் ஒரு விளையாட்டின் அறிமுகம்தான். இந்த விளையாட்டு, கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி திறன்பேசி அப்பிளிக்கேசன்களிலும் வெளியாகியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது தங்களது திறன்…
-
- 0 replies
- 458 views
-
-
காவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன் 91 Views கடமையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரைக் காணொளி எடுக்கின்ற செயற்பாட்டைக் குற்றச்செயலாக வகைப்படுத்தும் உத்தேச பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பகுதியை நீக்க வேண்டும் எனக் கோரி, ஆயிரக்கணக்கான மக்கள் அண்மை நாட்களாக பாரிஸ் நகர வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். வீதிகளில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மக்கள் வெளிப்படுத்திய கோபாவேசம், சட்டவரைபின் குறிப்பிட்ட பகுதியை தாம் மீள எழுதுகின்றோம் என்று அரசு அறிவிப்பை மேற்கொள்வதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சட்டத்தை முழுமையாகக் கைவிடுவதே அரசு உண்மையில் மேற…
-
- 0 replies
- 668 views
-
-
கொடூரக் குற்றங்களுக்கு இழப்பீட்டு வெகுமதியுடன் விடுதலை – வழிகாட்டிய விசாரணைக்குழு – பி.மாணிக்கவாசகம் 90 Views இலங்கையின் நீதி நியாயச் செயற்பாடுகள் நடுநிலையானவைதானா என்ற கேள்வி காலத்துக்குக் காலம் எழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. நீதி நியாயப்படுத்த வல்லதாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தையும், நிவாரணத்தையும் வழங்க வேண்டும். பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பளிக்க வேண்டும். பாதிப்புகள் மீண்டும் நிகழாமையை உறுதி செய்வதும் நீதிப் பொறிமுறையின் தலையாய கடமையும், பொறுப்பும் ஆகும். ஆனால் நீதி நியாயம் தொடர்பிலான இந்த நியதிகளும் சாதாரண மக்களின் இவற்றுக்கான எதிர்பார்ப்பும் இலங்கையின் நீதித்துறையினால் நிறைவேற்றப்படவில்…
-
- 0 replies
- 492 views
-
-
சீனா: ஒரு பட்டை ஒரு பாதை - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ காலத்துடன் கருத்துக்களும் மாறுகின்றன. உலகின் தீர்மானகரமான சக்திகள் எப்போதும் ஒன்றாக இருக்கின்றன. மாறுகின்ற காலங்கள் அதிகாரத்தின் தன்மையையும் இயங்கியலையும் தீர்மானிக்கவும் மாற்றவும் வல்லன. மாற்றங்கள் மாறாது நிகழ்ந்து கொண்டேயிருக்கும் என்பதை காலம் பலமுறை சுட்டிக் காட்டியபடி இருக்கிறது. எல்லாச் செயல்களும் அதிகாரத்துக்கான அவாவினால்ல. அதேவேளை அதிகாரத்தின் தன்மைகள் மாறியுள்ள நிலையில் புதிய பாதைகள் அதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்வனவாக இருக்கின்றன. இந்தவாரம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 29 நாடு…
-
- 0 replies
- 1.1k views
-
-
செலாவணித் தட்டுப்பாடு: 1970களிலும் பஞ்சத்தில் மூழ்கடித்தது எம்.எஸ்.எம். ஐயூப் மின்சார விநியோகத்தைத் தடையின்றி நடத்திச் செல்ல, மின்வெட்டைத் தவிர வேறு வழியே, அரசாங்கத்துக்கு இல்லை என்று தான் தெரிகிறது. மின்சாரத்தோடு சகலதும் சம்பந்தப்பட்டு இருக்கும் நிலையில், மின்வெட்டுத் தொடர்ந்தால், நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில், சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாமல் போய்விடும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரை விட இன்று, வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவையும் கட்டுப்படுத்தும் ஆற்றல்மிக்கதாக மின்சாரம் மாறியுள்ளது. அக்காலத்தில், நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கிணறுகள், ஆறுகள், வாவிகளில் இருந்தே மக்கள் நீரைப் பெற்றுக் கொண்டனர். கொழும்பு போன்ற நகரங்களிலும் பல இடங…
-
- 0 replies
- 392 views
-
-
கல்வித் தகைமையும் அரசியலும் என்.கே. அஷோக்பரன் அரசியலில் மாற்றம் வேண்டும் என்போர் பலரினதும் எண்ணப்பகிரல், ‘படிச்சவன் அரசியலுக்கு வரவேண்டும்’ என்பதாக இருக்கிறது. ‘படிச்சவன்’ என்ற சொற்பதத்தின் பயன்பாடு, கொஞ்சம் மேலோட்டமானது. ஆனால், பெரும்பாலும் இந்தச் சொல் ஏதோ ஒரு துறையில் கற்று, பட்டம் பெற்று, குறித்த துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளமையைச் சுட்டியே, பொதுவில் பயன்படுத்தப்படுவதை அவதானிக்கலாம். தம்மைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதி, படித்துப் பட்டம் பெற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்ற அவா, மக்களிடையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒருவகையில், ஏலவே உள்ள அரசியல்வாதிகளின் நடத்தைகளும் நடவடிக்கைகளும், முக்கிய காரணமாக இருக்கிறது. இத்தகைய மோசமான அரசிய…
-
- 0 replies
- 749 views
-
-
யாழ்ப்பாணத்தில் அரங்கேறிய ‘பசில்’ நாடகம் சர்ச்சைக்குரிய விடயங்களைப் பற்றி, குறிப்பாக இன ரீதியாக, முக்கியமான விடயங்களைப் பற்றி அறிக்கையிடும் போது, ஊடகங்களின் நடத்தை, பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரியதாகி விடுகிறது. ஏனெனில், தேசிய கடமையை நிறைவேற்றி வருவதாகப் பறைசாற்றிக் கொள்ளும் பல ஊடகங்கள், தேசியளவில் மிகவும் முக்கியமான விடயங்களை மக்களிடமிருந்து மறைக்க முற்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு மறைப்பதில் அர்த்தம் இல்லை என்பது தெளிவாக இருக்கையிலும், அவை அச்செய்திகளை மறைக்கவே செய்கின்றன. உதாரணமாக, அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய மிக முக்கிய இரண்டு தீர்ப்புகளை, ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன என்பதைச் சுட்டி…
-
- 0 replies
- 334 views
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் – இடைக்கால அறிக்கையின் மீதான வாக்கெடுப்பு? நிலாந்தன்:- இடைக்கால அறிக்கையை மக்கள் முன் கொண்டு சென்று வாக்குக் கேளுங்கள் என்ற தொனிப்பட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது கட்சி ஆட்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். அண்மையில் வடமராட்சியில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வின் போது அவர் மற்றொரு விடயத்தையும் கூறியுள்ளார். அதாவது வரவிருக்கும் தேர்தலில் கூட்டமைப்புத் தோற்றால் அது யாப்புருவாக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்ற தொனிப்பட. எனவே தமிழரசுக்கட்சியானது இடைக்கால அறிக்கையை முன்வைத்து மக்களாணையை கேட்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது உள்ளூர் தலைமைத்துவங்களைக் கட்டியெழுப்பு…
-
- 0 replies
- 326 views
-
-
கூட்டமைப்பினருடனான பிரதமரின் உறுதிப்பாடும் தொடரும் முரண்பாடும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது நிபந்தனைகளை முன்வைத்ததாகவும் அந்த நிபந்தனைகளுக்கு பிரதமர் இணக்கம் தெரிவித்தமையினாலேயே கூட்டமைப்பு அவருக்கு ஆதரவாக வாக்களித்தது என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது. பொது எதிரணியினாரல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 4ஆம் திகதி அதன்மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்றன. இந்த வாக்கெடுப்பிற்கு முன்னர் தமிழ்த் த…
-
- 0 replies
- 358 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கின்றது
-
- 0 replies
- 612 views
-
-
ஆஹா, ஹொங்கொங் மக்களும் உலக மக்கள் புரட்சி இயக்கங்களுடன் இணைந்து விட்டார்களே. சிங்கப்பூர் போன்றே அதே விதமான வர்த்தகப் பொருளாதார அபிவிருத்திக்குப் பெயர் போன ஹொங்கொங் கூட ஒரு புரட்சித்தலமாக மாறும் என நாம் நினைத்திருக்க மாட்டோம். அது புரட்சித்தலமாக மட்டுமன்றி மிகப்பண்பான எதிர்ப்பாளர்கள் (politest protestors) கொண்ட இடம் எனவும் பெயர் பெற்றுவிட்டது. லட்சோப லட்சமாகக் மக்கள் இரவுபகலாகக் கூடியிருந்தும், அவர்கள் பொலிஸ் தாக்குதலுக்கு முகம் கொடுத்திருந்;தும், சிரித்த முகத்துடன் அமைதியுடன் எதனையும் எதிர்கொள்பவர்களாக இருக்கின்றார்கள். போகும் பாதைகளை அவர்கள் அடைக்க நேர்ந்தால் அசௌகரியத்துக்கு மன்னிக்கவும் என்று அறிவித்தல் போடுகின்றார்களாம். இரவு முழுக்க மக்கள் தங்கிய இடங்கள் காலை பார்த்த…
-
- 0 replies
- 447 views
-
-
எப்போது இவர்களுக்கு நீதி கிடைக்கும் என்னுடைய மகனுக்கு என்ன நடந்தது? என்னுடைய கணவர் எங்கே? என் சகோதரனுக்கு நடந்தது என்ன? இவ்வாறான கேள்விகளை எழுப்பிய வண்ணம் காணாமல் போனோரின் உறவினர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது அரசாங்கத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களிலும் காணாமல் போனோரின் உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து இந்த காணாமல் போனோரின் உறவினர்கள் இவ்வாறு தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தக்கோரி போராடி வருகின்றனர். ஆனால் இதுவரையும் எந்தவொரு சம்ப…
-
- 0 replies
- 604 views
-
-
இராணுவச்சூழலுக்கு இயல்பாக்கமடையும் வடக்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு பாராளுமன்றத்தில், மாகாண சபையில், உள்ளூராட்சி சபைகளில் முக்கியமானது. அந்த விடயங்களை மறந்து விட்டு. அரசியல்வாதிகள் வேண்டாம் , நாங்களே பார்த்துக் கொள்வோம் என்று கிளம்பும் போக்கு, இப்போதைய நிலையில், ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லதல்ல. அரசியல் என்பது சமூகத்தினதும், அன்றாட வாழ்வியலினதும் ஒரு அங்கம். அதனைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான், அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டத்தை கிளப்பி விடுகின்றனர். ஒரு பக்கத்தில், அரசியல்வாதிகளை ஓரம்கட்ட வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கிளம்பியிருக்கும் ந…
-
- 0 replies
- 388 views
-
-
விக்னேஸ்வரனும் ஓர் இடைக்கால உத்தரவும் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்ற பின்னர், நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்னிறுத்தும் இரண்டு முக்கிய வழக்குகளில், முதல் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருக்கின்றார். முதலாவது சந்தர்ப்பம், 2013- 2014 காலப்பகுதியில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக இருந்த விஜயலட்சுமி ரமேஷின் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு. இரண்டாவது சந்தர்ப்பம், வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரான பா.டெனீஸ்வரன், தன்னுடைய பதவி நீக்கத்துக்கு எதிராக, கடந்த வருடம் தொடுத்த வழக்கு. இந்த இரண்டு வழக்குகளும் மாகாண சபையினதும், முதலமைச்சரினதும் அதிகார எல்லை…
-
- 0 replies
- 452 views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களின் பணத்திலிருந்து கோடிகோடியாக வருடாவருடம், சர்வதேச பிரச்சார அமைப்புகளுக்கு வழங்கி தன்னை பற்றி சர்வதேச அளவில் உருவாகியுள்ள களங்கத்தை துடைக்கும. முயற்சியில் ஈடுபடுகின்றார், அதன் மூலமாக தான் யுத்த குற்றங்களுக்கா விசாரணை செய்யப்படுகிறேன் என்பதை மக்கள் மறக்கச்செய்கின்றார். எனினும் ஊழல், சட்டவிரோதம் மற்றும் ஈவிரக்கமற்ற தன்மை ஆகியவற்றின் துர்நாற்றம் அவரிலிருந்து அகலுவதில்லை,அது அவரின் ஆன்மாவில் ஆழமாக பதிந்துள்ளது,அவரது ஒவ்வொரு அசைவிலும் புலப்படுகின்றது. தனது பதவிக்காலம் ப+ர்த்தியாவதற்க்கு இன்னமும் இரண்டுவருடங்கள் இருக்கையில் தேர்தலை நடாத்தும்அவரது முடிவும் அவ்வாறனதே, வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற தனது ஆதரவை காப்பாற்றும் இறுதிமுயற்ச…
-
- 0 replies
- 589 views
-
-
இலங்கையில் கடந்த 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு முதல்நாள் இந்தியாவை ஆளும் பாஜக வின் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜய் ஜோலி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்களில் எவரையும் பாஜக கட்சி ஆதரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டதாக சில ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். கடந்த நவம்பர் மாதம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு விட்டு, மகிந்த ராஜபக்ச நேபாளத்தில் நடந்த சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். அந்த மாநாட்டில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக் கூறியிருந்தார். இதுபோன்ற…
-
- 0 replies
- 920 views
-
-
17 JUL, 2023 | 04:55 PM வட இலங்கையில் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண அரசு ஏறத்தாள 350 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளது. பாளி, சிங்கள, தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், ஐரோப்பியர் கால ஆவணங்கள் இவ்வரசு பற்றியும், அதன் நான்கு பக்க அரண்கொண்ட அரசமாளிகை, அதிலிருந்த பெரிய ஆலயம், அரச அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் இருப்பிடங்கள், பூங்காவனம், புனித ஜமுனா ஏரி, நீதி மன்றம், நாற்றிசைக் கோவில்கள், காவலரண்கள், கோட்டைகள் முதலியன பற்றியும் கூறுகின்றன. அவ்வரலாற்றை மீள் நினைவுபடுத்துவதாகவே இன்றும் நல்லூரின் சிறிய வட்டாரத்திற்குள் எஞ்சியிருக்கும் ஜமுனா ஏரி, மந்திரிமனை, சங்கிலியன் அரண்மனை, சங்கிலியன் தோரணவாசல் முதலான மரபுரிமைக் கட்டிடங்களும், நினைவுச…
-
- 0 replies
- 798 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசிய விடுதலை அரசியலே தமிழ் மக்களுக்கு விடிவைத் தரும் . புதுக்காலனிய ஆதிக்கம் பொருளாதாரச் சுரண்டலையே இலக்காகக் கொண்டிருக்கிறது. அதன் விரிந்த செயல்பாடுகளை இந்த சிறிய தொகுப்புகளுக்குள் காண்பது இயலாது. சுரண்டலைப் பற்றிய அடிப்படைகளை கோடிட்டு மட்டுமே காட்ட இயலும். இன்று பொருளாதார அரங்கில் காணப்படும் இந்த கொடூரச் சுரண்டல் முறை சோசலிச முகாமின் வீழ்ச்சியால் மக்களுக்கு ஏற்பட்ட துயரம் என்று சொல்லலாம். இந்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும், இந்திய முதலாளிகளின் தேவைக்காகவும் தமிழ் மக்களின் வாழ்வாதாரமான நிலங்களை 'வளர்ச்சி' என்ற பெயரில் பறித்து வருகின்றது. கெயில், எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், துறைமுகங்கள், விமான நிலையங்கள் விரிவாக்கம், மின்பாத…
-
- 0 replies
- 440 views
-
-
பரபரப்பாக்கும் ‘மறுத்தான்’ ஆட்டங்கள் கே. சஞ்சயன் / 2018 நவம்பர் 23 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:35 கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்ட அரசியல் குழப்பங்கள், நாடாளுமன்றத்துக்கு உள்ளே தான், பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, நாடாளுமன்றத்தையும் கலைத்து விட்டால், எல்லாத் தடைகளும் நீங்கி விடும், புதிதாகத் தேர்தலை நடத்தி, ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று போடப்பட்ட திட்டம், இப்போது முட்டுச்சந்தியில் வந்து நிற்கிறது. மஹிந்த - மைத்திரி தரப்புக்கு, அங்குமிங்குமாக எங்கு திரும்பினாலும், ஒரு முட்டுக்கட்டை வந்து விடுகிறது. நாடாளுமன்றத்துக்கு…
-
- 0 replies
- 601 views
-