Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மே பதினெட்டு: ரணில் நினைவு கூர்த்தலைத் தடுப்பாரா? - நிலாந்தன். - மே 18 இம்முறை மிகவும் வித்தியாசமான ஒரு சூழலுக்குள் வருகிறது. எந்த மே மாதம் ராஜபக்சக்கள் நாட்டை சிங்கள மக்களுக்கு வென்று கொடுத்ததாக பிரகடனப்படுத்தினார்களோ, அதே மே மாதம் அவர்களை சிங்கள மக்களை அவர்களுடைய சொந்த தேர்தல் தொகுதிகளில் இருந்து துரத்தியிருக்கிறார்கள். இப்பொழுது மஹிந்த ராஜபக்ச நாட்டின் வடக்குக் கிழக்கில் எங்கேயோ ஒரு படைத் தளத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாக கருதப்படுகிறது.அவர்கள் பாதுகாத்து கொடுத்த தேசமே அவர்களை ஓட ஓட விரட்டுகிறது. அவர்கள் எங்கேயும் தப்பி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி விடாமல் இருக்க நீதிமன்றங்களில் தடையுத்தரவை வாங்கி வைத்திருக்கிறது. இலங்கைத்தீவின் நவீன வர…

  2. காணாமல் ஆக்­கப்­ப­டுமா...? ‘காணாமல் போனோர்’ விவ­காரம் காணாமல் போனோரை தேடும் தமிழ் உற­வுகள் விரக்­தியின் விளிம்பில் நிற்­பதை நான் நேரில் பார்த்தேன். அவர்­களை பொறுத்­த­வரை தங்­க­ளுக்கு ஆறுதல் வார்த்­தைகள் கூறு­வ­தற்கு கூட எவரும் இல்­லாத நிலை. இதில் ஒரு உண்­மையை உணர வேண்டும். இலங்கை அர­சியல்வாதி­களின் சிங்­க­ளவர் உட்­பட எவ­ரு­டைய பிள்­ளையும் இவ்வாறு காணாமல் ஆக்­கப்­பட­வில்லை. அப்­படி நடந்­திருந்தால் அதன் வேத­னையை ஓர­ள­வா­வது புரிந்து இருப்­பார்கள். தமிழ் அர­சியல்வாதிகள் முக்­கி­ய­மாக எதிர்­க்கட்சித் தலை­வ­ராக இருக்கும் சம்­பந்தன் இந்த விடயம் தொடர்­பாக எவ்­வித கரி­ச­னை­யையும் காட்­ட­வில்லை என்­பது தெளி­வா­கின்­றது. தமிழ் அர­சியல்வாதி­களை நம்­பினோம், ஜ…

  3. சிறுபான்மையினரை அ்ங்கீகரிக்கும் மனோநிலை பெரும்பான்மையினருக்கு வேண்டும் எமது நாட்டில் இன­வாத நட­வ­டிக்­கைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றன. இவ்­வி­ன­வாத நட­வ­டிக்­கை­களின் விளை­வாக மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யினர் பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் தனது வகி­பா­கத்­தினை சரி­யாக நிறை­வேற்­ற­வில்லை. இன­வா­தத்தை தடுக்கும் செயற்­பா­டு­களை மேற்­கொள்­வதில் அர­சாங்கம் பின்­ன­டிப்பு செய்து வரு­கின்­றது என்றும் விமர்­ச­னங்கள் மேலெ­ழுந்து வரு­கின்­றன. இன­வா­தமும் விளை­வு­களும் இன­வாதம் என்­பது எமது நாட்­டுக்கு புதி­ய­தல்ல. நாடு சுதந்­தி­ர­ம­டை­வ…

  4. பயங்கரவாதத்துக்கு தூபமிடும் இன,மத வாதப் பிரசாரங்கள் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் மூலம் நாட்டில் உரு­வா­கி­யுள்ள பயங்­க­ர­வா­தத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகளை பாகு­பா­டற்ற முறையில் முன்­னெ­டுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். அந்தக் கட­மையை அரசு சரி­யான முறையில் கடைப்­பி­டிக்­கின்­றதா என்­பது சந்­தே­கத்­துக்குரி­ய­தா­கி­யுள்­ளது. இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக அவ­ச­ர­காலச் சட்டம், பயங்­க­ர­வாதத் தடைச்­ சட்டம் என்­பன வரை­ய­றை­யற்ற முறையில் பாய்­கின்­றன. ஆனால், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்தைப் போன்று மத ரீதி­யாக, இன ரீதி­யாகக…

  5. தலைவிரித்தாடும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளியிடுவது யார்? -க.அகரன் இனமுறுகளின் பின்னணியின் பல வரலாறுகள், பாடம் புகட்டும் தன்மையைக் கொண்டிருக்கும் என்பதற்கு, மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்ற பல உள்நாட்டுப் போர்கள் சான்றாகியுள்ளன. அந்தப் பாடங்களில் இருந்து, நம் நாட்டவர்களும் பாடம் கற்றுக்கொண்டனரா என்பதை ஆராய்ந்துப் பார்க்க வேண்டிய தேவை, காலத்தின் கட்டாயமாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் என்ற தொனிப்பொருளை, ஏட்டளவில் வைத்து அரசியல் நகர்வை மேற்கொள்ளும் இலங்கை அரசியலாளர்கள், அதற்கு யதார்த்த வடிவத்தைக் கொடுத்துள்ளனரா என்ற சந்தேகம் நிறைந்தேயுள்ளது. யுத்தம் நடைப…

  6. சமாதான தேவதையும் பிசாசுகளும்! sudumanal கடந்த வெள்ளியன்று (28.02.2025) அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவர்களுக்கும் ட்றம் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அவர்களுக்கும் இடையில் யாரும் எதிர்பாராத விதத்தில் விவாதம் முற்றியது. இது பேசப்படும் பொருளாக ஊடகங்களிலும் அரசியலாளர்களிடமும் புத்திஜீவிகளிடமும் மாறியிருந்தது. இது ஏதோ அந்த இடத்தில் தோன்றிய முரண்பாடாகத் தெரியவில்லை. இதற்கு முன்னராக மூடிய அறைக்குள் தொடங்கிய ஒன்றாகவே கருத இடமுண்டு. இராஜதந்திரங்கள் பலவும் சம்பிரதாயபூர்வமாக மக்கள் கண்களில் சாந்தமான ஜனநாயக அணுகுமுறை போலவும், நான்கு பக்க சுவர்களுக்குள் வல்லான் அழுத்தங்களினாலும் பயமுறுத்தல்களினாலும் நிறைவேற்றப்படுகிற அரங்க நிகழ்வுகளாகும். இது பல நாடுகளி…

  7. போட்டி களமாக மாறும் இலங்கை!! தமிழ் தரப்புகளின் நிலை என்னவாகும்??

  8. இன்றைய நெருக்கடியில் இருந்து கற்க வேண்டிய பாடம் புருஜோத்தமன் தங்கமயில் நாடு அறிவிக்கப்படாத முழு முடக்கத்துக்குள் வந்துவிட்டது. பசி பட்டினிக்கான முன் அறிவிப்பை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளாந்தம் வெளியிட்டு வருகின்றார். போர் நீடித்த காலத்தில், நாட்டு மக்கள் கொண்டிருந்த பதற்றத்தைக் காட்டிலும், தற்போது மக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல், மிகப்பெரியதாக மாறியிருக்கின்றது. வாழ்வதற்கு தகுதியில்லாத நாடாக இலங்கை இன்று நோக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையை ஏற்படுத்திவிட்ட அரசாங்கம், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு நாடுகள் என்று பல நாடுகளுக்கு, அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அனுப்பி, கடன்களை கோரி வருகின்றது. இன்னொரு பக்கம், ரணிலுக்கு பிரதமர் பதவியை வழ…

  9. பொறுப்புக்கூறாமைக்கு யார் பொறுப்பு? நிலாந்தன். 53வது ஐநா மனிதஉரிமைகள் கூட்டத்தொடர் கடந்த 19ஆம் திகதி தொடங்கியிருக்கிறது. இதில் இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது.அதில் பொறுப்புக் கூறல் தொடர்பாக அழுத்தமான கருத்துக்கள் உண்டு. பொறுப்பு கூறல் எனப்படுவது இறந்த காலத்திற்கு பொறுப்பு கூறுவது. இறந்த காலத்தில் நடந்த குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுவது. அக்குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நிவாரணத்தையும் வழங்குவது. அவ்வாறு நீதியை நிலை நாட்டுவதன்மூலம் சமாதானத்தை,நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பது. இதை ஐநாவின் வார்த்தைகளில் சொன்னால் நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பது. ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானம் 2015 ஆம் ஆண்…

  10. திட்டமிடப்படாத கிரவல் அகழ்வும் திட்டமிட்டே அழிக்கப்படும் வன்னிக் காடுகளும் – மு.தமிழ்ச்செல்வன் எவனொருவன் திட்டமிடாமல் செயற்படுகின்றானோ அவன் திட்டமிட்டே தோல்வியை தழுவிக்கொள்கிறான் என்பது ஒரு பழமொழி. இது அனைத்து வகையான செயற்பாடுகளுக்கும் பொருந்தும். மிக முக்கியமாக அபிவிருத்தி பணிகளின் போது சிறந்த திட்டமிடல் அவசியம் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியில் இது கட்டாயம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் வன்னியின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் போது இந்த திட்டமிடலுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழும்பும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக அபிவிருத்திக்கான கிரவல் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட…

  11. காந்திய தேசத்திடம் அரசியல் தீர்வுக்காக கையேந்துவது எவ்வகையில் அறம்’ 45 Views தமிழ் அரசியல் தலைமைகள் காந்திய தேசத்திடம் அரசியல் தீர்வுக்காக கையேந்துவது எவ்வகையில் அறமாகும் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “உலகில் நடைபெற்ற அடக்கு முறைகளுக்கெதிரான அத்தனை போராட்டங்களும் வெற்றி பெற்றதின் பின்னர்தான் விடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் அவ்வகையிலான போராட்டங்கள் தீவிரவாதம் என்றும் பயங்கரவாதம் என்றும் முத்திரை குத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டதே வரலாறு. இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சியாளர்கள் தமது ஆட்சியுரிமையை தொட…

  12. நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும் http://epaper.virakesari.lk

  13. வேலையில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உற்பத்திசார் பொருளாதார கொள்கைகளே தேவை - கருணாகரன் வேலைகோரும் பட்டதாரிகள் வீட்டிலும் வீதியிலுமாக நிறைந்து போயிருக்கிறார்கள். படித்துப் பட்டம் பெற்ற பிறகு வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களால் என்ன செய்ய முடியும்? வேலை கேட்டுப்போராடுவார்கள். இந்தப் போராட்டத்தைப் பற்றி அரசாங்கம் அக்கறைப்படவில்லை என்றால், அதைக் கோவிப்பார்கள், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவார்கள். கூடவே தங்களுக்கு முன்னே உள்ள அரசியல்வாதிகளையும் அதிகார அமைப்புகளையும் எதிர்ப்பார்கள். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான். மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் பட்டதாரிகளின் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இங்க…

  14. அமெரிக்காவின் எல்லைக்குள் செல்லும் ரஸ்ய ஆயுதங்கள் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்

    • 2 replies
    • 333 views
  15. கட்ட முடியாத பாலமும் கட்டப்படும் விகாரைகளும் – நிலாந்தன். “இந்திய பெருங்கடல் மற்றும் பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகள் குறித்து இலங்கை முழுமையாக அறிந்திருக்கிறது, இந்தியாவில் உருவாகி வரும் சூழ்நிலைகள் குறித்து இலங்கை அதிக கவனம் செலுத்துகிறது” என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். புதுடெல்லி அனந்தா மையத்தில், “இந்தியா-இலங்கை உறவுகள் : இணைப்பை ஊக்குவித்தல், செழிப்பை ஊக்குவித்தல்”என்ற தலைப்பில் நடைபெற்ற விரிவுரை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இலங்கை–இந்திய நில இணைப்பு மற்றும் வலுவான பொருளாதார உறவுகளை கட்டியெழுப்புவதன் மூலமு் இலங்கை பொருளாதார ஸ்திரம…

  16. வேண்டும் புதிய பாதை! முற்றிலும் புதிய அணுகுமுறை: ஏ.ஜி.யோகராஜா சயந்தன் என்னிடம் இப்படிக் கேட்டிருந்தார்: இலங்கையின் இன்றைய அரசியல் – குறிப்பாக சாதிய மற்றும் தமிழ்த் தேசிய – பிரச்சனைகள் குறித்த உங்கள் கருத்தியலை, (அதாவது மார்க்ஸியமா, அல்லது பெரியார் மற்றும் அம்பேத்கார் வழியிலா அல்லது வேறு எந்த அடிப்படையில்) கட்டுரையாக எழுதித்தரும்படி. இவ் வருட ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருந்த “எழுவோம்! நிமிர்வோம்! திரள்வோம்! சமூக சமத்துவம்: அடுத்தகட்ட நகர்வு குறித்த முன்வரைவு” எனும் எனது நூலை வாசித்ததன் பிரகாரம் இம் முடிவுக்கு வந்திருப்பார் என்பது எனது எண்ணம். சோவித் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் மார்க்ஸிய உலகங்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன என்பது உலகள…

  17. முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும் ‘திருவிழா என்று’ உவமிக்குமளவுக்கு தேர்தல் காலம் இன்னும் களைகட்டவில்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் நாளெடுக்கும். தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட தினத்துக்கும், தேர்தல் நாளுக்குமிடையில் 50 நாட்கள் இடைவெளி இருந்தமைதான் இதற்குக் காரணமாகும். இன்னும் இரண்டு வாரங்கள் கழியும் போதுதான், தேர்தல் காலம் களைகட்டத் தொடங்கும். ஆனாலும், திருவிழா அளவுக்கு தேர்தல் காலம் களைகட்டும் என்பதற்கு, நடக்கும் நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன. வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து நடந்தவற்றை எல்லாம் வைத்தும் பார்க்கும்போது, தேர்தல் காலம் களைகட்டுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே தெரிக…

  18. இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசு, ராஜபக்ச சகோதரர்களின் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணகளையும் வழக்குகளையும் தொடுத்து வருகின்றது. ராஜபக்ச சகோதரர்கள் தமது ஆட்சிக் காலம் முழுவதும் ஈழ மக்களுக்கு எதிராக பல்வேறு அநீதிகளை இழைத்தமை குறித்து யாரும் எதுவும் பேசவில்லை. ராஜபக்ச சகோதரர்கள் தங்கள் குடும்ப சர்வாதிகார ஆட்சியில் செயத மாபெரும் குற்றம் ஈழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றமே. ஈழ மக்கள் ஒன்றரை லட்சம் பேரை படுகொலை செய்து மிகக்கொடிய போர்க்குற்றங்களை அரங்கேற்றிய ராஜபக்சக்களை விசாரிக்க சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கு மாத்திரம் இலங்கையின் புதிய ஆட்சியாளர் தயங்குவது ஏன்? முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக…

  19. பிரெக்ஸிட் ஓராண்டின் பின்னே: இருளின் ஒளியில் வழிதேடல் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் பூவுலகில் தான் வாழப்படுகிறது. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பதால் அது இறுதிவரை நிலைக்கும் என்பதற்கான எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. அரசியலில் ஏற்படுத்தப்படும் கூட்டிணைவுகளும் அவ்வாறுதான். மிகவும் வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும் கூட, அக்கூட்டிணைவு நிலைப்பதற்கான உத்தரவாதத்தை யாரும் வழங்க முடியாது. திருமணங்களை விட விவாகரத்துகள் விவகாரமானவை. திருமணத்துக்குக் குறைந்த காலத்தில் உடன்படிக்கைகள் எட்டப்படக்கூடியதாக இருக்கின்றன. ஆனால், விவாகரத்துகளின்போது, உடன்படிக்கைகளை எட்டுவது…

  20. சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு செய்தவரிடமே பேட்டி

  21. விஜயகாந்த் அரசியல் எழுச்சியும் வீழ்ச்சியும்: எதிர்க்கட்சித் தலைவராக எழுந்தவர் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக முடியாமல் வீழ்ந்தது எப்படி? க. சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DMDK விஜயகாந்த். தமிழ் திரையுலகிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர். ஆனால், அவருடைய திரையுலக வெற்றியைப் போல் அரசியல் வெற்றி நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக வளர்ந்த விஜயகாந்த், தமிழக அரசியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டது எப்படி? அவர் நடிக்கத் தொடங்கி சில காலத்திலேயே, அவருக்கு ரசிகர் மன்றங்கள…

  22. உலக நாடுகளின் பார்வையாளர் தேசம் - பாலஸ்தீனம்! ஐ.நா.வின் சின்னம் நவம்பர் 29-ம் தேதியை ‘பாலஸ்தீன மக்களுக்கு உலக ஆதரவு தினமாக’ ஐ.நா. சபை அறிவித்து அதன்படியே ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. மன்னிக்கவும்; அனுசரிக்கப்படுகிறது. “சரி.. ஏதோ நடக்கப் போகிறது... ஐ.நா.வே சொல்லி விட்டது” என்று பாலஸ்தீனிய மக்களில் சிலருக்கேனும் நம்பிக்கை தோன்றியிருக்கும். பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபை ஒரு சிறப்புக் குழுவை நியமித்தது. 1947 மே மாதம் இக்குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதன்படி, யூத நாடு - அரபு நாடு என்று இரண்டாகப் பிரித்து, தனி பாலஸ்தீனம் அமைக்கலாம் என்று பரிந்துரைத்தது. …

  23. இலங்கை குடியரசாக மாற்றம் பெற்ற பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகள் இரண்டும் இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்புதல் இன்றியே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1978 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதியின் கைகளுக்கு அதாவது ஒரு மனிதரின் கைகளுக்கு அதிகாரங்கள் மாறின. பாராளுமன்றமே ஜனாதிபதியின் தயவில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. அந்த முறைமை காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளினாலும் தமது நலன்களை முன்னிறுத்தியும், கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், மாற்றுக் கட்சிகளை அதிகாரத்திற்கு வர முடியாமல் தடுப்பதற்காகவும் அரசியலமைப்…

    • 0 replies
    • 333 views
  24. தடுமாறும் அரசாங்கத்துக்குச் சட்டங்கள் காவல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் இன்றைய நெருக்கடியை, ரம்புக்கனை கொலைகள் இன்னொரு தளத்துக்கு நகர்த்தியுள்ளன. இலங்கையில் அரச பயங்கரவாதம் புதிதல்ல. பொலிஸ் அராஜகத்தின் வரலாறு மிக நீண்டது. ஆனால், செல்வந்தர்கள், உயரடுக்கினர் தவிர்த்து, முழு இலங்கையர்களும் பொருளாதார நெருக்கடியை அன்றாடம் எதிர்நோக்கி இருக்கையில், இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. தமது வாழ்வாதாரத்துக்காகப் போராடிய மக்களை, அதே வாழ்வாதாரத்துக்காகத் தொழில்புரியும் பொலிஸ்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். போராடுகின்ற மக்கள், இதே பொலிஸ்துறையினருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறார்கள். இந்த நெருக்கடி யாரையும் விட்டுவைக்கவில்லை. வரிசைகளில் அனைவரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.