அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
புதிய சட்டங்கள் தேவையானவை தானா? கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான நேரடியான கவனம் குறைவடையத் தொடங்கியிருக்கிறது. வெவ்வேறு பிரச்சினைகள் பற்றி, இப்போது கவனம் எழத் தொடங்கியிருக்கிறது. இன்னும் சில வாரங்களில், இப்பிரச்சினை முழுமையாக மறக்க, மறைக்கப்படலாம். இது, கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு மாத்திரம் தனியான ஒன்று கிடையாது. கடந்தாண்டில், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும், தாக்குதல்கள் பல மேற்கொள்ளப்பட்டன. கண்டியைப் போல, குறிப்பிட்ட ஒரு சில நாட்களுக்குள் நடத்தப்படாமல், தொடர்ச்சியாகச் சில வாரங்களுக்கு, ஆங்காங்கே நடத்தப்பட்டன. உடனடியான கோபம் காணப்பட்டது. ஆனால், பின்னர் அவை மறக்கப்பட்டன. …
-
- 0 replies
- 332 views
-
-
தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு – நிலாந்தன். June 26, 2022 பள்ளிஹகார முன்பு வட மாகாண ஆளுநராக இருந்தவர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் களில் ஒருவர்.இவர் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பின் வினைத்திறனை குறித்து உயர்வான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. போர்காலத்தில் மிக நெருக்கடியான ஒரு சூழலில் நிர்வாகம் செய்து பழகிய தமிழ் அதிகாரிகளிடமிருந்து முழு நாடும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுவாராம். அதில் உண்மையும் உண்டு.நெருக்கடியான காலகட்டத்தில் இரண்டு நிர்வாகங்களுக்கு இடையே செயல்படுவது என்பது கயிற்றில் நடப்பது போன்றது. மூத்த தமிழ் நிர்வாகிகள் பலரிடம் அந்த ஆற்றல் இருந்தது. ஆனா…
-
- 0 replies
- 332 views
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,G.L.PEIRIS'S FACEBOOK படக்குறிப்பு, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கை அரசு வெளிநாடுகளிடம் இருந்து வாங்கியிருக்கும் கடனுதவிகளால் எதிர்காலத்தில் பலவித தாக்கம் ஏற்படலாம் என்று பல்துறை நிபுணர்களும் கவலை தெரிவிக்கின்றனர். இலங்கை உலகின் பல்வேறு நாடுகளிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் உதவிகளை பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சமீபத்தில் கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய அவர், சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதிய…
-
- 0 replies
- 332 views
-
-
தேவதூத மனநிலை: பொதுப்புத்தியில் மாற்றமின்றி தீர்வு சாத்தியமில்லை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தற்போதைய நெருக்கடி, இலங்கையின் பொதுப்புத்தி மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இன்று இலங்கையர்கள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கான காரணங்களை, பொருளாதாரத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் போட்டுவிட்டு அப்பால் நகர முடியுமா? இதற்கு இலங்கையர்களாகிய நாங்கள், பொறுப்புக்கூற வேண்டியது இல்லையா? இந்த நெருக்கடிக்கு நாமனைவரும் எவ்வாறு பங்களித்திருக்கிறோம்? இப்போதும் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, நாம் பங்களிக்கின்றோமா? நமது பங்களிப்பு, மக்கள் நலநோக்கில் நெருக்கடியை தீர்ப்பதாக இருக்கிறதா, அல்லது அரசியல்வாதிகளின் இழிசெயல்களுக்கு ஒத்தூதுவதன் மூலமும், அமைதிகாத்து அங…
-
- 0 replies
- 332 views
-
-
கிழக்கின் தேர்தல் களம் வாய்ப்புகளும் சவால்களும் - யதீந்திரா July 19, 2020 யதீந்திரா தேர்தல் களம் தொடர்பான பொது அவதானம் என்பது எப்போதுமே வடக்கை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. ஒப்பீட்டடிப்படையில் வடக்கின் தேர்தல் களம்தான் தமிழ்த் தேசிய நிலையில் போட்டிமிக்கதாக இருக்கின்றது. அதே வேளை ஒப்பீட்டடிப்படையில் வடக்கு மாகாணத்தில், முக்கியமாக யாழ் தேர்தல் மாவட்டத்தில்தான் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் போட்டியிடுகின்றனர். மேலும் அங்குதான் தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் பலமாக இருக்கின்றன. இதன் காரணமாகவே தேர்தல் அரசியல் தொடர்பான அவதானம் முழுவதும் வடக்கை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் பிரதான தலைவர்களாக அடையாள…
-
- 0 replies
- 332 views
-
-
ஜெனீவா அரங்கில் இலங்கையை தக்கவைத்தல் புருஜோத்தமன் தங்கமயில் இந்த ஆண்டின் இறுதி ஜெனீவா அரங்காற்றுகை, தற்போது நிகழ்த்தப்படுகின்றது. வழக்கத்துக்கு மாறாக, தென் இலங்கையில் இருந்தும் பிரதான எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிங்கள பெரும்பான்மை எண்ணங்களை பிரதிபலித்து வருகின்ற தரப்புகள் சிலவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை நாடிச் சென்றிருக்கின்றன. ராஜபக்ஷர்களுக்கு எதிரான தென் இலங்கையின் கிளர்ச்சிப் போராட்டங்களுக்குப் பின்னரான நாள்களில் இடம்பெற்றுவரும் சட்டத்துக்குப் புறம்பான கைதுகள், கடத்தல்கள் பற்றி முறையிடுவதற்காக, சிங்களத் தரப்புகள் ஜெனீவாவில் நடமாடி வருகின்றன. இலங்கையில் இடம்பெற்று வரும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்,…
-
- 0 replies
- 332 views
-
-
சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாகும் பிக்குமாரின் நடத்தைகள் இரைச்சலினால் சுற்றாடல் மாசடைவதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கொன்றின் விசாரணையில் ஆஜராகுமாறு இராஜகிரியவில் உள்ள பௌத்த விகாரையின் குருவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தது. அவர் மன்றில் ஆஜராகத் தவறியதனால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. பிரதம நீதியரசர் தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வினால் பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவையடுத்து தேரரைக் கைது செய்த இராஜகிரிய பொலிஸார் விளக்கமறியலில் வைத்தனர். அவரைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி பிறகு மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பிணைமனுவை பரிசீலனைக்கு எடுப்…
-
- 0 replies
- 332 views
-
-
இலக்கை மறந்த தமிழர் அரசியல் புருஜோத்தமன் தங்கமயில் முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி தொடர்பில், தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. அது, தமிழ் மக்களின் அரசியல், விடுதலை எனும் இலக்கை மறந்து நின்று, அன்றாடம் நிகழும் சம்பவங்களுக்குப் பிரதிபலிப்பது மாத்திரமே அரசியல் எனும் கட்டத்தில், தமிழ்த் தேசிய அரசியலை இன்றைய கட்சிகள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றன. இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தொடங்கி, தற்போது புதிது புதிதாக முளைக்கும் எந்தத் தமிழ்க் கட்சியும் கூட, இப்படியான இயங்குநிலையையே கொண்டிருக்கின்றன. நிகழ்வுகளுக்கு அல்லது சம்பவங்களுக்கு பிரதிபலிக்கும் அரசியல் என்பது பெரிய உழைப்பை கோருவதி…
-
- 0 replies
- 332 views
-
-
டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்! June 9, 2025 — கருணாகரன் — இலங்கை அரசியலில் NPP செல்வாக்குப் பெற்றதோடு தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள அரசியல் எல்லாமே தடுமாற்றத்துக்குள்ளாகி விட்டன. குறிப்பாகத் தமிழ்த்தேசியவாத அரசியற் கட்சிகள் பெரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளன. இவ்வளவுக்கும் NPP ஒன்றும் ஆகச் சிறந்த அரசியல் விளைவுகளை உருவாக்கிய சக்தியாக இன்னும் வளர்ச்சியடையவில்லை. எதிர்காலத்தில் அதற்கான சாத்தியங்கள் இருக்கலாம். இதைப்பற்றிப் பல தடவை குறிப்பிட்டதால், மேலும் விளக்கத் தேவையில்லை என்று கருதுகிறேன். அல்லது இன்னொரு கட்டுரையில் தனியாகப் பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நமது கவனம், NPP யின் எழுச்சியானது, தமிழ்த்தேசிய அரசியலை எப்படி நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது? அதனால் ஏற்பட்…
-
- 1 reply
- 332 views
-
-
ரணில் பலமடைந்து வருகிறாரா? -நிலாந்தன் பயங்கரவாத தடைச் சட்டம் அரகலயவின் மீது பாயத் தொடங்கிவிட்டது. “மனித உரிமைகள் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.அவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணிலிடம் கேட்டுக்கொள்கின்றேன், அவ்வாறு செய்வது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்” என்று மேரி லோலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். மனித உரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாட்டாளர்கள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் அவர்.எனினும், அந்த இருண்ட நாளை அவரால் தடுக்க முடியவில…
-
- 0 replies
- 332 views
-
-
தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நிகழ்த்திய உரையின் முக்கியத்துவத்தை கவனிக்கத் தவறக்கூடாது. 2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30-1 க்கு வழங்கிய இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகும் பிரச்சினை பெரும் கவனத்தை ஈர்த்ததன் பின்னணியில் அவரது உரைக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. நாட்டில் நல்லிணக்கத்துக்கும் நீதிக்குமான செயன்முறையொன்றை வகுத்த அந்த தீர்மானத்திற்கு அன்றைய அரசாங்கம் (சர்வதேச சமூகத்திற்கு நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் முகமாகவே) இணை அனுசரணையை வழங்கியது. அதற்கு முன்னரான 5 வருடங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பல…
-
- 0 replies
- 332 views
-
-
கடந்த வாரம் அமெரிக்க பாராளுமன்றத்தின் ஆயுதப்படைகள் தொடர்பான உப குழுவின் முன்பாக உரையாற்றிய அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைப் பிரதித் தளபதியான வைஸ் அட்மிரல் ஜோசப் முல்லொய், அதிர்ச்சி தரக்கூடிய பெரியதொரு குண்டைத்தூக்கிப் போட்டிருந்தார். அமெரிக்கவிடம் உள்ள நீர்மூழ்கிகளின் எண்ணிக்கையை விட, சீனாவின் நீர்மூழ்கிகளின் பலம் அதிகமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். உலகிலேயே படைபல ரீதியாக அதிசக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்ட நாடு அமெரிக்காவே என்ற கருத்து உலகில் உள்ளது. அமெரிக்கா அடுத்த தலைமுறைக்கான ஆயத தயாரிப்புகள், கண்டுபிடிப்புகளுக்குக் கூட முக்கியமளிக்கும் ஒரு நாடு. ஆனால், அமெரிக்காவையும் மிஞ்சக் கூடியளவுக்கு சீனாவின் ஆயுதப் போட்டி அதி வேகத்தில்…
-
- 0 replies
- 332 views
-
-
யாழ்ப்பாணத்தில் அரங்கேறிய ‘பசில்’ நாடகம் சர்ச்சைக்குரிய விடயங்களைப் பற்றி, குறிப்பாக இன ரீதியாக, முக்கியமான விடயங்களைப் பற்றி அறிக்கையிடும் போது, ஊடகங்களின் நடத்தை, பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரியதாகி விடுகிறது. ஏனெனில், தேசிய கடமையை நிறைவேற்றி வருவதாகப் பறைசாற்றிக் கொள்ளும் பல ஊடகங்கள், தேசியளவில் மிகவும் முக்கியமான விடயங்களை மக்களிடமிருந்து மறைக்க முற்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு மறைப்பதில் அர்த்தம் இல்லை என்பது தெளிவாக இருக்கையிலும், அவை அச்செய்திகளை மறைக்கவே செய்கின்றன. உதாரணமாக, அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய மிக முக்கிய இரண்டு தீர்ப்புகளை, ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன என்பதைச் சுட்டி…
-
- 0 replies
- 332 views
-
-
தமிழ் மக்கள் மத்தியில் அனுர அலை தணியத்தொடங்கி விட்டதா? நிலாந்தன். மிகக் குறுகிய காலத்துக்குள் தமிழ் பகுதிகளில் அனுர அலை தணியத் தொடங்கி விட்டதா? அண்மை வாரங்களில் இடம்பெற்று வரும் சில விடயங்கள் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரின் மத்தியில் ஜேவிபிக்கு இருந்த கவர்ச்சியைக் குறைக்கத் தொடங்கிவிட்டன. முதலாவதாக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய ரில்வின் சில்வா இனப்பிரச்சினை தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்கள். இரண்டாவது, பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான நிலைப்பாடு. மூன்றாவது,முட்டை விலை ஏறி இறங்குவது;தேங்காய் விலை அதிகரித்திருப்பது. நாலாவது,தமிழ்ப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ஜேவிபி வேட்பாளர்களுக்கு வெகுசனக் கவர்ச்சி குறைவு என்பது. தென்னிலங்கை அர…
-
- 0 replies
- 332 views
-
-
புதிய அரசியல் சாசனம் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா? தேர்தல் மறுசீரமைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது பற்றி பல்வேறு ஊகங்களும் கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புதிய அரசியல்யாப்பின் மூலம் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தரப்பினரும் பல்வேறு அழுத்தங்களை அரசுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதேவேளை, புதிய அரசியல் சாசனத்தின் மூலம் சிறுபான்மை மக்களின் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணப்படுமென அரசாங்கம் உறுதியாக இருப்பதுடன் வாக்குறுதிகளையும் வழங்கி வ…
-
- 0 replies
- 332 views
-
-
குறிவைக்கப்படும் தமிழ்ப் பொலிஸார் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், கடந்த மாதம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னர், ‘ஆவா குழு’, ‘பிரபாகரன் படை’ என்ற பெயர்களில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் தமிழ்ப் பொலிஸாரே முக்கியமாகக் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் படுகொலைச் சம்பவத்தைக் காரணம் காட்டி, கடந்த காலங்களில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட ஆவா குழுவின் பெயரைப் பயன்படுத்தி, மாணவர்கள் கொலைக்குப் பதிலடியாகச் சுன்னாகத்தில் இரண்டு பொலிஸாரைத் தாமே வெட்டிக் காயப்படுத்தியதாகத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் உரிமை கோரப்பட்டிருந்தது. அந்தத் துண்டுப் பிரசுரத்தில், தமிழ்ப் பொலிஸாரே மாணவர்கள…
-
- 0 replies
- 332 views
-
-
ஈழத் தமிழர்களின் அரசியலில் கால் நூற்றாண்டுகால தந்தையின் தீர்க்கமான பங்கு – அகிலன் 59 Views 26.04.2021 அன்று தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தினத்தை நினைவுகூரும் விதமாக இக்கட்டுரை பிரசுரமாகின்றது. தனிச் சிங்களச் சட்டம் 1956ஆம் ஆண்டு ஐூலை மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டங்களையும் ஆரம்பிக்கப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்தது. அதனை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு முயற்சியாக “இந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் வாருங்கள்” என தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா என தமிழ் மக்களால் அன்பாக அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை அழை…
-
- 0 replies
- 332 views
-
-
13ஆவது திருத்தத்தின் கடந்த காலமும் எதிர்காலமும் Veeragathy Thanabalasingham on October 25, 2022 Photo, AP Photo, Eranga Jayawardena திருத்தத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தி புதிய உடன்படிக்கையொன்றை செய்யவேண்டும் என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடந்தவாரம் தெரிவித்த கருத்து குறித்து ஒரு பார்வை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட புதுடில்லியில் பதவியேற்பதற்கு கடந்த வருட பிற்பகுதியில் செல்வதற்கு சில மாதங்கள் முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பதற்கான ஒரு ‘செயற்திட்ட நகர்வு வரைவு’ ஒன்றை அன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கையளித்தார். இரு தரப்பு உறவுகளை ‘பர…
-
- 0 replies
- 332 views
-
-
இலங்கை அரசின் இனப்படுகொலை மறுப்பு (வாதத்தி)ன் அரசியல் Photo: Dinuka Liyanawatta Photo, The New York Times இனப்படுகொலை புலமைத்தளத்தில் இனப்படுகொலையின் இறுதிகட்டமாக ‘இனப்படுகொலை மறுப்பு’ அமைகின்றது எனக் குறிப்பிடப்படுகின்றது (Genocide denial is the final stage of genocide). ஸ்ரான்லி கோஹைன் தன்னுடைய நூலில், ‘அரசுகளுடைய மறுப்பு : அட்டூழியங்களையும், துன்பப்படுத்தல்களையும் தெரிந்து கொள்ளல் – States of Denial: Knowing about atrocities and suffering (2001), மறுப்பு என்றால் என்னவென்பதை, ‘மறுப்பு என்பது இலகுவில் நழுவித் தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு சொற்பதம், அது பலவற்றைக் குறித்து நிற்கும் மறுப்புக்குரிய முறையான பாவனை அல்லது நடைமுறை என்பது, எப்போது நபர்கள் பார்வையாளர்…
-
- 0 replies
- 332 views
-
-
தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர் கொள்வது – நிலாந்தன் புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும். அதன்பின் புதிய அதிகார கட்டமைப்பிற்கான ஒரு தேர்தல் நடைபெறக் கூடும். அத் தேர்தலில் விக்கினேஸ்வரனுக்கு தமிழரசுக்கட்சி இடம் கொடுக்காது. என்பது ஒரு பரவலான ஊகம். விக்னேஸ்வரனும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அண்மையில் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு பேட்டியில் கருத்துத் தெரிவித்திருந்தார். இவ்வாறான ஒரு பின்னணியில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு விழாவில் விக்னேஸ்வரன் சி…
-
- 0 replies
- 331 views
-
-
உள்நாட்டுப் பொறுப்புக் கூறலுக்கான நம்பத்தகுந்த பொறிமுறையைக் கட்டியெழுப்புதல்: வழக்குத் தாக்கல் செய்தலும் குற்றவியல் நீதியும் நிறான் அங்கிற்றல் படம் | WORDPRESS ராஜபக்ஷ ஆட்சியின் வீழ்ச்சியானது பல புதிய ஆரம்பங்களுக்கு நம்பிக்கைச் சமிக்ஞை காட்டியுள்ளது. இந்த நம்பிக்கைகளுள் ஒன்றுதான் போர்க் காலகட்டத்தில், குறிப்பாக யுத்தத்தின் இறுதி மாதங்களிலே முன்னெப்போதுமிருந்திராத அளவிலான காட்டுமிராண்டித்தனத்தின்போது மனித உரிமைகள் மற்றும் யுத்தவிதிகளின் மீறுதல்கள் பற்றி இப்போதாவது நாடு நம்பத்தகுந்த அளவுக்கு உள்நாட்டிலே கவனத்திற்கொள்ளும் என்பது. ஜனாதிபதி சிறிசேனாவின் தேர்தல் பரப்புரையின்போது அவரும் அவரது கட்சியினரும் சர்வதேச பொறுப்புக்கூறலுக்கான மாற்றீடாக உள்ளூர் பொறிமுறை பற்றி …
-
- 0 replies
- 331 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வு வேண்டிய போராட்டம் பொய்த்துப்போனதா? உணர்வுகளின் நிலைபேறு தன்மையின் இறுதி ஆயுதமாக பல போராட்டங்கள் உலக அரங்கில் உருவாக்கம் பெறுகின்றது. இந்த வகையில் மக்களினுடைய எழுச்சியினூடாக ஏற்படும் போராட்டங்கள் பல, வெற்றியினை அடைந்ததன் பின்னரே நிறைவு பெற்றதும் அதனை புரட்சி என்ற பெயர் கொண்டழைப்பதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. அண்மையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இடம்பெற்ற போராட்டம் இறுதி தீர்வை பெற்றதாக அமைந்திருந்தமை அண்மைய மக்கள் எழுச்சிக்கு சான்றாக அமைந்துள்ளது. அவ்வாறான போராட்டங்களின் ஓர் அங்கமாகவே நீண்ட காலமாக வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டும் வ…
-
- 0 replies
- 331 views
-
-
‘ஒரு கடிதமும் ஆறு கட்சிகளும்’ -நிலாந்தன்- கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூர் சட்டநாதர் தெருவில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. இந்தியாவுக்கு கூட்டுக் கோரிக்கையை அனுப்பிய ஆறு கட்சிகளும் இணைந்து அக்கருத்தை ஒழுங்குபடுத்தியிருந்தன.ஆறு கட்சிகளின் சார்பாகவும் ஈபிஆர்எல்எப் அமைப்பு அக்கருத்தரங்கை முன்னின்று ஒழுங்குபடுத்தியதாக தெரிகிறது.ஒன்பதரை மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட கருத்தரங்கு பத்தரைக்குத்தான் தொடங்கியது. அந்த மண்டபம் ஆகக்கூடியது 400 அல்லது 500 ஆட்களைத்தான் கொள்ளக்கூடியது. அதிகளவு தொகை மக்களைத் திரட்டுவது என்று ஏற்பாட்டாளர்கள் யோசித்திருக்கவில்லை என்றே தெரிகிறது. அவ்வாறு யோசித்து இருந்திருந்தால் கருத்தரங்கை வீரசிங்கம் மண்டபத்தில் ஒழு…
-
- 0 replies
- 331 views
-
-
தமிழ் அரசியலில் திட்டமிடல், தூரநோக்குக்கான தேவை என்.கே. அஷோக்பரன் http://www.twitter.com/nkashokbharan உலகத்தையே, ஏறத்தாழ ஒன்றரை வருட காலத்துக்கு மேலாக, ‘கொவிட்-19’ பெருந்தொற்று ஆட்டம் காணச் செய்துகொண்டிருக்கிறது. ‘கொவிட்-19’ இன் கோரமுகத்தை, இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இந்த நிலையில், இலங்கை வாழ் மக்கள், ஆரோக்கிய ரீதியான சவாலை மட்டுமல்ல, வாழ்வாதார ரீதியான சவாலையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘கொவிட்-19’ வெறும் பெருந்தொற்று நோய் மட்டுமல்ல; அதன் விளைவுகள், இந்நாட்டின் உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் தள்ளாட்டம் காணச்செய்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில், இலங்கை நின்று கொண்டிருக்கிறது. உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என…
-
- 0 replies
- 331 views
-
-
சுமந்திரன் சுற்றும் வாளும் அகப்படும் ஊடகங்களும் தமிழ்த் தேசிய அரசியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அரசியல் என்பது, கூட்டமைப்புக்கு எதிரான நிலையிலிருந்து, தமிழரசுக் கட்சிக்கு எதிரான நிலையாக மாறி, இன்றைக்கு அது, எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான அரசியலாக மாறி நிற்கின்றது. ஒரு முனையில் சுமந்திரனும் மறுமுனையில் சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் நிற்கின்றனர். (அவர்களோடு சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி, தமிழ் மக்கள் பேரவையும் சில புலம்பெயர் தரப்புகளும் இணைகின்றன) சுமந்திரனுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளின் போக்கில், எதிர்முனையிலுள்ளவர்கள் அவ்வப…
-
- 0 replies
- 331 views
-