அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
ராஜபக்ஷர்களின் சீரற்ற நிர்வாகமும் மக்கள் மீதான சுமையும் புருஜோத்தமன் தங்கமயில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை அண்மிக்கின்றது. ஒவ்வொரு நாளும் 150க்கு மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவலின் முதல் அலையை, குறிப்பிட்டளவு வெற்றிகரமாகக் கையாண்ட அரசாங்கம், இரண்டாம் மூன்றாம் அலையின்போது, எதுவும் செய்யமுடியாதளவு தடுமாறுகின்றது. கொரோனா முதல் அலையில், நாட்டை முழுமையாக முடக்கி, பரவலின் தாக்கத்தை கட்டுப்படுத்திய அரசாங்கத்தால், இரண்டாம் மூன்றாம் அலைகளின் போது, நாட்டை ஏன் முழுமையாக முடக்க முடியவில்லை என்கிற கேள்வியை, வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் எழுப்பினர். கொரோனா இரண்டாம் அலையின் பரவலின் போதே, மூன்றாம் அலை இ…
-
- 0 replies
- 321 views
-
-
ஈழத்தமிழர்களது பல இழப்புக்கள் பதிவான ஜனவரிமாதத்து இரைமீட்டல்கள் ஈழத்தமிழர்களது பல இழப்புக்கள் பதிவான ஜனவரிமாதத்து இரைமீட்டல்கள் இலங்கை அரசியல்வரலாற்றில் ஈழத் தமிழினத்துக்கு எதிராக அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களால் இனவாதத் தீ மூட்டி விடப்பட்டதற்கும், ஜனவரி மாதத்துக்கும் ஏதோ ஒருவித நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழினத்தின் உரிமைகளுக்கு வேட்டுவைக்கவும் , உரிமைகளைப் பறித்தெடுக்க வும், பல படுகொலைகளை தமிழர்களுக்கு எதிராக அர…
-
- 0 replies
- 321 views
-
-
காலஅவகாசத்தைக் கடந்துசெல்வது எப்படி? ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக மீண்டும் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான நாடுகள், 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை முன்வைத்த தீர்மானங்களின் நீட்சியாக- 2015ஆம் ஆண்டு இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் தொடர்ச்சியாகவே இப்போதைய தீர்மானம் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2015இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியே இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்…
-
- 1 reply
- 321 views
-
-
விடியும்போது நல்ல நல்ல விளையாட்டுக்கள் சூடுபிடிக்கும் அரசியல் கள நகர்வுகள் ரொபட் அன்டனி ""எலிவென ஜாமெட்ட ஹொந்த ஹொந்த செல்லம்"" என்று சிங்களத்தில் கூறுவார்கள். அதாவது விடியும்போது நல்ல நல்ல விளையாட்டுக்கள் என்பதே அதன் அர்த்தமாகும். தற்போது எமது நாட்டிலும் இவ்வாறு நல்ல நல்ல அரசியல் விளையாட்டுக்களை காண முடிகின்றது. காரணம் நாட்டின் அரசியல் நகர்வுகள் பரபரப்பாகின்றன. அரசியல் காய் நகர்த்தல்கள் சூடு பிடிக்கின்றன. அடுத்து அரசியலில் என்ன நடக்கப்போகின்றது? முன்னாள் வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸினால் ஆரம்பிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ இணைந்துகொண்டுள்ள சிற…
-
- 0 replies
- 321 views
-
-
இந்தியாவும் தெற்காசிய புவிசார் அரசியலும்! தெற்காசியாவின் புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின் முக்கியத்துவம் அவசியமானதாக கருதப்படுகிறது. அதிகரித்து வரும் பிராந்திய கொந்தளிப்புக்கு மத்தியில், இந்தியாவுக்கு கடினமான பணி உள்ளது. அதன் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதையும், அது தொடர்ந்து மேல்நோக்கி வளர்ச்சிப் பாதையில் செல்வதையும் முதலில் உறுதி செய்ய வேண்டும். தெற்காசியா எப்போதும் ஒரு கொந்தளிப்பான பகுதியாக இருந்து வருகிறது. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினருக்கு இடையே, மற்றும் அரசுகளுக்கு இடையேயான போட்டிகளுடன் கூடிய ஒரு பிராந்தியமாக இது இருக்கிறது. இந்த பிராந்தியத்தில் அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் அந்நிய சக்திகளின் தலையீடுகள்…
-
- 0 replies
- 321 views
-
-
இணைவு – எழுச்சி – சர்ச்சை – முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் – பி.மாணிக்கவாசகம் 9 Views தமிழ் மக்களின் போராட்டம் என்பது சாதாரண அரசியல் விளையாட்டல்ல. அது நீதிக்கும் நியாயத்துக்குமானது. அரசியல் உரிமைகள் சார்ந்தது. அடிப்படை உரிமைகளுக்கானது. அது அவர்களுடைய வாழ்வுக்கும் இருப்புக்குமானது. தமிழ் மக்கள் சாதாரண மக்களல்ல. அவர்கள் வந்தேறு குடிகளுமல்ல. வாழ்வியல் வழியில், கலை, கலாசார, மத, பண்பாடு, அரசியல் ரீதியான வரலாற்று பாரம்பரியத்துடனான தாயகப் பிரதேசத்தைக் கொண்டவர்கள். ஆனால் பெருந்தேசியப் போக்கில் தனி இனத்துவ அரசியல் மமதையில் சிங்கள பௌத்த தேசியக் கொள்கையின் அடிப்படையில் அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள். அவர்களுடைய நில…
-
- 0 replies
- 321 views
-
-
'மோடியின் வெற்றி உலகிற்கும், இந்தியாவிற்கும் கெடுதியானதொரு செய்தியாகும்' இந்தியப் பொதுத்தேர்தலில் நரேந்திர மோடிக்குக் கிடைத்திருக்கும் பிரம்மாண்டமான வெற்றி இந்தியாவிற்கும், உலகிற்கும் நல்லதொரு செய்தியல்ல. குறிப்பாக இந்தியாவின் ஆன்மாவுக்குத் தீங்கானது என்று லண்டன் கார்டியன் பத்திரிகை இந்தியத் தேர்தல் முடிவு குறித்து எழுதிய ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, வரலாற்றில் மிகப்பெரிய தேர்தலில் மோடி என்ற ஒரு மனிதன் வெற்றி பெற்றிருக்கிறார். சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு தனியொரு கட்சியை அறுதிப் பெரும்பான்ம…
-
- 0 replies
- 321 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் மற்றும் பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்களும், இலங்கை அரசைக் கண்டித்து தமிழ்நாடு மீனவர்களும் நடுக்கடலில் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். மீனவர்களுக்கு இடையே என்ன பிரச்னை? தமிழக மீனவர்கள் தங்கள் கடற்பரப்பினுள் வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறி, அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று (ஞாயிறு, மார்ச் 3) நடத்தினர். யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்துள்ள கடற்கரைப் பகுதிகளிலுள்ள மீனவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி…
-
- 1 reply
- 320 views
- 1 follower
-
-
இலங்கையில் ஆட்சிமாற்றம்; இந்தியாவின் வகிபாகம் - யதீந்திரா படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO 2009இல் பிரபாகரன் யுத்தகளத்தில் வீழ்ந்தபோது எவ்வாறானதொரு ஆச்சரியம் நிலவியதோ, அவ்வாறானதொரு ஆச்சரியம்தான் மஹிந்த ராஜபக்ஷ விடயத்திலும் நிலவுகிறது. ஏனெனில், மஹிந்த ராஜபக்ஷவை இவ்வளவு எளிதாக அதிகாரத்திலிருந்து அகற்ற முடியுமென்பதை அவர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறும் வரையில் எவருமே நம்பியிருக்கவில்லை. எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்ததான உணர்வே எஞ்சியிருக்கிறது. இது எவ்வாறு நிகழ்ந்தது? இந்த புதிரை மெதுவாக அவிழ்க்கும் வகையில் தற்போது ஒரு சில தகவல்கள் கசிந்திருக்கின்றன. அதாவது, நடந்து முடிந்த ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இந்திய வெளியக உளவுத் துறையான ஆய்வு ம…
-
- 0 replies
- 320 views
-
-
கண்களை குத்திக்கொண்ட அதிகாரம் – ஏமாற்றப்பட்ட காரைநகர் சுயேட்சைக் குழு – நிலாந்தன்…. கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது. விழிம்புநிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி சுயேட்சைக் குழு பெரிய கட்சிகள் எதனோடும் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருக்கவில்லை. பெரிய கட்சிகள் கடந்த காலங்களில் தமது மக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை என்றும் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கூடப் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் இச் சுயேட்சைக் குழு குற்றம் சாட்டியது. தேர்தலில் இக் குழுவிற்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தன. கூட்டமைப்புக்கும் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. ஏனைய கட்சிகள் அதை விட குறைவாகப் பெற்றன. யாருக்…
-
- 0 replies
- 320 views
-
-
வலிசுமந்த மாதத்தில் அம்பலமான தோழர்கள் -விதுரன் May 19, 2025 ஈழத் தமிழர்களின் இனவிடுதலை வரலாற்றில் மே மாதம் கண்ணீரால், தோய்ந்த, வலிகளும், காயங்களும் தாரளமாகவே நிறைந்ததொன்றாகும். 2009 மே இல் முள்ளிவாய்க்காலில் கட்டமைக் கப்பட்ட இனவழிப்பொன்று நிகழ்ந்தேறியது. ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற போர்வையில் மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் தாராளமாகவே மீறப்பட்டு முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு கடந்த 16வருடங்களாக பேரவலத்துக்கான நீதி கோரிய போராட்டமும் இனவிடுதலைக்கான பயணத்தில் பின்னிப்பிணை ந்து தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கின்றது. தமிழின விடுதலைப்போராட்டம் ஆரம்பித்தகாலம் முதல், தாயகக் கோட்பாட்டிற்கும், அதிகாரப் பகிர்வுக்கும் ஆட்சியிலிருந்த சிங்கள, பௌத்த ம…
-
- 0 replies
- 320 views
-
-
தேவை ஒரு புதுப்பாதை – கலாநிதி அமீரலி கலாநிதி அமீரலி எழுபது ஆண்டுகளுக்கும் மேலான சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மை இனங்களிரண்டும் இரண்டு பாதைகள் வழியாக நடந்துசென்று இன்று திசைதவறி நடுச்சந்தியில் நிற்கின்றனர். தமிழினம் தனக்கெனத் தனிப்பட்ட கட்சிகளை அமைத்து பெரும்பான்மை இனத்துடன் போராடித் தனது உரிமைகளை வென்று அதன் தனித்துவத்தையும் காப்பாற்றலாமென முயன்றது. அதற்காக ஆயுதமேந்திப் போராடியும் இறுதியில் தோல்வியடைந்து இருந்ததையும் இழந்து, இனியென்ன செய்வதென்று தெரியாத ஒரு குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம்களோ தமிழருடன் இணையாது ஆட்சிக்குவரும் கட்சி எதுவாகினும் அதனுடன் சேர்ந்து சலுகைகளைப் பெற்…
-
- 0 replies
- 320 views
-
-
அச்சம் அரசியல் எதிராளிகளுக்கு, ஆட்சியாளர்கள் நிறையவே பயப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தேர்தல் களமொன்றில், எதிரணியினரைச் சந்திப்பதற்கு, ஆட்சியாளர்கள் கடுமையாக அச்சப்படுகின்றனர். அதனால்தான், ஒக்டோபர் மாதம் பதவிக் காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கான தந்திர வேலைகளை அவர்கள் செய்யத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, உள்ளூராட்சித் தேர்தல்களையும் நடத்தாமல், நாட்களைக் கடத்தி வருகின்றனர். கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலங்கள், ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியுடன் முடிவடைகின்றன. இரண்டாம் திகதி, தேர்தல் குறித்து அறிவிப்புச் செய்வதற்…
-
- 0 replies
- 320 views
-
-
காணிவிடுவிப்பு விவகாரத்தில் கண்துடைப்பு நடவடிக்கை இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதில் கையாளப்படுகின்ற அணுகுமுறை, பொறுப்பு மிக்க ஓர் அரசாங்கத்தின் செயற்பாடாகத் தோற்றவில்லை. பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாகக் கூறி கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலேயே இராணுவத்தினரும் அரசாங்கமும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பது கேப்பாப்புலவு காணி விடுவிப்புச் செயற்பாட்டின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அடாத்தாக பொதுமக்களின் காணிகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தமது தேவைக்குரிய காலம் முடிவடைந்த பின்னரும். அந்தக் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு உடன்படா…
-
- 0 replies
- 320 views
-
-
‘ஒரு கடிதமும் ஆறு கட்சிகளும்’ -நிலாந்தன்- கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூர் சட்டநாதர் தெருவில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. இந்தியாவுக்கு கூட்டுக் கோரிக்கையை அனுப்பிய ஆறு கட்சிகளும் இணைந்து அக்கருத்தை ஒழுங்குபடுத்தியிருந்தன.ஆறு கட்சிகளின் சார்பாகவும் ஈபிஆர்எல்எப் அமைப்பு அக்கருத்தரங்கை முன்னின்று ஒழுங்குபடுத்தியதாக தெரிகிறது.ஒன்பதரை மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட கருத்தரங்கு பத்தரைக்குத்தான் தொடங்கியது. அந்த மண்டபம் ஆகக்கூடியது 400 அல்லது 500 ஆட்களைத்தான் கொள்ளக்கூடியது. அதிகளவு தொகை மக்களைத் திரட்டுவது என்று ஏற்பாட்டாளர்கள் யோசித்திருக்கவில்லை என்றே தெரிகிறது. அவ்வாறு யோசித்து இருந்திருந்தால் கருத்தரங்கை வீரசிங்கம் மண்டபத்தில் ஒழு…
-
- 0 replies
- 320 views
-
-
யுவான் வாங் 5: இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல் - இந்திய பெருங்கடலில் ஆதிக்கத்தை சீனா உறுதிப்படுத்தியதா? 18 நிமிடங்களுக்கு முன்னர் சீனாவிற்கு சொந்தமான விண்வெளி ஆய்வு கப்பலான யுவான் வாங் - 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நடவடிக்கை, தற்போது சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது. இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கைக்குள் சீனா நுழைந்துள்ளதாகவும் அதன் அங்கமாகவே தனது கப்பலை அந்நாடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதார ரீதியில் இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், ஆரம்பம் முதல…
-
- 2 replies
- 320 views
- 1 follower
-
-
அணுகுமுறையில் மாற்றம் அவசியம்! http://www.virakesari.lk/
-
- 0 replies
- 320 views
-
-
இதுதான் நல்லிணக்கமா? சிறையிலடைக்கப்பட வேண்டிய மதத்தலைவர்களை அரசாங்கம் பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதி மாளிகைக்கும் அழைத்து கௌரவப்படுத்துகிறதா என இப் பத்தியில் இரு வாரங்களுக்கு முன்னர் கேள்வியெழுப்பியிருந்தோம். ஆனால் தற்போது அரசின் செயற்பாடுகள் அதை விட ஒருபடி மேலே போய் அடாவடித்தனம் புரிகின்ற பிக்குகளை அமைச்சர்கள் அவர்களது காலடிக்கே சென்று சந்திக்கின்ற அளவுக்கும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அவர்களது ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்கின்ற நிலைக்கும் வந்திருக்கிறது. அடுத்த கட்டமாக இந்த பிக்குகளுக்கு தேசியப்பட்டியல் எம்.பி. பதவி கொடுத்து அமைச்சரவைக்கு அழைத்து அழகுபார்த்தாலும் ஆச்சரியப்ப…
-
- 0 replies
- 320 views
-
-
ஆழிப் பேரலை சுனாமியில் அழிந்த ‘ஆச்சே’ தேசத்தின் சுதந்திர கனவு !– ஐங்கரன் Digital News Team பல ஆண்டுகளாக ஆச்சே தேசம் விடுதலையை மூச்சாக கொண்டு இந்தோனேசியாவிற்கு எதிராக போராடி , ஆழிப் பேரலையின் பாரிய அழிவினால் சர்வதேச மத்தியஸ்த்துடன் சமாதானத்தை 2005 ஏற்றுக் கொண்டது. விடுதலை வேண்டி போராடி அழிந்த மற்றய இனங்களுக்கும் அச்சே மக்களின் போராட்டம் சான்று பகரும் உதாராணமாக அமைகிறது. ஆச்சே மக்கள் சுயநிர்ணய உரிமைக்காகவும் சுதேச அடையாளத்திற்காகவும் சுமார் 29 வருடங்கள் தொடர்ந்து போராடினர். தற்போது இந்தோனேசியாவின் ஆதிக்கத்தில் உள்ள ஆச்சே (Aceh) மாநிலத்தின் வடக்குப் பகுதியிலே சுமத்திரா தீவும் தெற்குப் பகுதியிலே இந்து சமுத்திரமும் அமையப்பெற்றுள்ளன. கொ…
-
- 0 replies
- 320 views
-
-
வெள்ளை வேன் கடத்தல்: நீதியை தாமதப்படுத்தும் திரைமறைவு காய் நகர்த்தல்களும் மிரட்டல்களும் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் இடம்பெற்று இன்றுடன் 10 வருடங்களாகின்றன. எனினும் இத்தனை நாட்களாகியும் இந்த விவகாரத்தில் இன்னும் நீதியும் நியாயமும் மெளனம் காக்கிறது. ஏன், இவ்வளவு நாட்களாகியும் நீதி நிலைநாட்டப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது என எல்லோருக்கும் எழும் கேள்விகளுக்கு பதில் தேடும் போது தான், இந்த கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், திரைமறைவில் குற்றவாளிகளைக் காக்கும் காய் நகர்த்தல்களும் நீதியை பெற்றுக்கொடுக்க போராடுகின்றவர்களுக்கு எதிரான அ…
-
- 0 replies
- 320 views
-
-
உயிர்த்த ஞாயிறுத தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல் – நிலாந்தன்.. June 16, 2019 யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஓர் அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமாகிய ஒருவர் யாழ் மாவட்டகட்டளைத் தளபதியிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார் ‘ஒருகாலம் எந்த படைத்தரப்பிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரினோமோ அதேபடைத்தரப்பு இப்பொழுது பெண்கள் பயிலும் பாடசாலைகளின் வாயிலில் காவலுக்குநிற்கிறது’ என்று. அதற்கு கட்டளைத ;தளபதி சொன்னாராம் அவர்களைப் பாதுகாப்பதற்காகத்தான் நாங்கள் அங்கேநிற்கிறோம் என்று. யாழ். சர்வமதசங்கத்தைச் சேர்ந்த ஓர் இந்துமத தலைவருக்கும் மேற்சொன்ன தளபதி அவ்வாறுதான் கூறியிருக்கி…
-
- 0 replies
- 320 views
-
-
மட்டக்களப்பின் தேர்தல் முடிவுகளில் கற்றுக் கொண்ட பாடம் என்ன? November 20, 2024 — கலாநிதி சு.சிவரெத்தினம் — நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் என்பார்கள், பொருளாதார நெருக்கடியும், வரிசைக்(queue) காலமும் இடம்பெற்றதும் நன்மையாகத்தான் முடிந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் பாரம்பரியமாக ஆட்சி செய்து வந்த உயர்வர்க்க ஆட்சியாளர்கள் தூக்கியெறியப்பட்டு சாதாரண உழைக்கும் வர்க்கத்திலிருந்து பல கஸ்ரங்களை அனுபவித்த ஒருவர் ஜனாதிபதியானதும். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுநிதியையும் அதிகாரத்தையும் எவ்வாறு துஸ்பிரயோகம் செய்திருக்கின்றார்கள் என்பதை புதிய ஜனாதிபதியும் அவருடைய அரசும் வெளிக்காட்டியதும் மக்களை முன்னைய ஆட்சியாளர்கள் மீது…
-
- 0 replies
- 320 views
-
-
இலங்கையில் தேசியகீதமானது தமிழிலில் பாடக்கூடாது என்று பொதுபலசேனா தெரிவித்திருக்கும் கருத்தானது தமிழ்மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தை ஈர்த்திருக்கவில்லையாயினும் பொதுபலசேனாவின் இக்கருத்தானது அரசியல் மட்டத்தில் பல்வேறு கருத்துக்களாக நோக்கவேண்டியுள்ளது. தமிழ்மொழி பேசுகின்றவர்களும் இலங்கை தேசத்தின் தேசிய கீதத்தினைப் பாடவேண்டும் என்கின்ற நோக்கத்திலேயே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இலங்கைதேசம் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் பிடியில் இருந்த இறுதிக்காலத்தில் பாரததேசத்தில் பல்வேறு அரசியல் போராட்டங்களும், விடுதலை எழுச்சிகளும் ஏற்பட்டன. மக்களை விடுதலையின்பால் திசை திருப்புவதற்கு விடுதலைப்பாடல்கள் அவசியம் தேவைப்பட்டன. இலங்கை பூகோள ரீதியில் இந்திய தேசத்திற்கு அருகில் அமைந்திருப்பதனால் அங்கு…
-
- 0 replies
- 319 views
-
-
ராஜபக்ஷக்களின் 20ஆவது திருத்தத்தினூடான செய்தி புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 10 , பி.ப. 12:24 இலங்கை அரசமைப்பில் 18ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றோடு சரியாக 10 ஆண்டுகளும் இரண்டு நாள்களும் ஆகின்றன. 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷக்கள் தங்களது அதிகார எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்து அதன் அதியுச்ச எல்லையை செப்டெம்பர் 08, 2010இல் 18ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் காலாகாலத்துக்குமாக இறுதி செய்ய நினைத்தார்கள். நாடாளுமன்றம் என்ற ஒன்றோ அதற்குள் எதி…
-
- 0 replies
- 319 views
-
-
உலகத் தமிழ் இனமே எண்ணிப்பார் முள்ளிவாய்க்கால், உலகத் தமிழ் இனத்தால் என்றுமே மறக்க முடியாத, இரத்தம் தோய்ந்த நாமம். இந்தப் பிரபஞ்சத்தில் தமிழ் இனம் மூச்சுடன் உள்ளவரை, இப்பெயரும் பெரும் பேச்சுடன் உயிர் வாழும். உலக வரைபடத்தில், குட்டித் தீவான இலங்கையைத் தெரியாத பலருக்கும், நன்கு தெரிந்த ஒற்றைச்சொல் ‘முள்ளிவாய்க்கால்’. தமிழ் இனத்தினது விடுதலை வேண்டி, மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற, அகிலமே ஆச்சரியப்பட்ட வீரம் செறிந்த ஆயுதப் போராட்டம், நிசப்தமான மண் அது. ஆயிரமாயிரம் தமிழ் ஆத்மாக்கள், கணக்கற்ற கனவுகளுடன் மீளாத் துயில் கொள்ளும் பூமியது. மறைந்துபோன தமது உறவுகளின் ஆத்ம ஈடேற்றத்துக்க…
-
- 0 replies
- 319 views
-