அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
பாராளுமன்றத்தில் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்கு புனர்வாழ்வு மையங்களை நடத்தும் அதிகாரத்தை வழங்கும் புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம், புதன்கிழமை (18) இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பிற அரசியல் எதிரிகளை, இராணுவத்தால் இயக்கப்படும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கும் அதிகாரத்தை, இந்தச் சட்டம் அரசாங்கத்துக்கு வழங்கும் என, இந்தச் சட்டமூலத்தின் விமர்சகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால் அமைச்சரவையில் அங்கிகரிக்கப்பட்டு, பாராள…
-
- 0 replies
- 451 views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி ஒழிப்பும் ஈழக் கோட்பாட்டு பூச்சாண்டியும் வீ. தனபாலசிங்கம் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அதை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் மறுபுறத்தில் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனாலும், அந்த ஆட்சி முறை மூன்றரைத் தசாப்தகாலமாக நடைமுறையில் நீடித்து வருகிறது. அந்தக் கோரிக்கை நீண்ட காலமாக வெகுஜனக் கோரிக்கையாக மேலெழும்ப முடியாமல் இருந்ததற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை அடையமுடியாமல் போனவர்களினாலும், என்றைக்குமே அப்பதவியை அடையக் கூடிய அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற முடியாதவர்களினாலும் அது முன்வைக்கப்பட்டதேயாகும். 1994 பிற்பகுதியில் ஜனாதிப…
-
- 0 replies
- 453 views
-
-
தயாசிறி ஜயசேகரவின் கதைக்கு பின்னாலுள்ள கதை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேர்பெச்சுவல் டிரெஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸிடம், பத்து இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தியால் குழம்பிப் போயுள்ளார். அத்தோடு, மேலும் 118 பேர் அவ்வாறு அலோசியஸிடம் பணம் பெற்றதாகக் கூறப்படுவதால், அது கடந்த வாரம் முழுவதும் நாட்டின் பிரதான செய்தியாகி இருந்தது. இச்செய்திகளை அடுத்து, ஊழல் பேர்வழிகளிடம் அவ்வாறு பணம் பெற்ற அரசியல்வாதிகள் யார் என்பதை அறிய, மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால், தமி…
-
- 0 replies
- 889 views
-
-
இழந்து விட்ட அரசியல் ஓர்மம் தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது போல் தெரிகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஊர்களுக்குள் அடிக்கடி வந்து போகின்றமை அதற்கான கட்டியமாகும். குறிப்பாக, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ‘மடித்து’க் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, திருகோணமலை மாவட்டத்துக்கும் கடந்த வாரம் சென்று, தத்தமது கட்சிகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகளிலும், அங்குள்ள முக்கியஸ்தர்களைத் தங்களின் கட்சிகளுக்குள் ஈர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளிலும் இறங்கியிருந்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட…
-
- 0 replies
- 396 views
-
-
அபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும் சமுத்திரன் அபிவிருத்தியா அரசியல்தீர்வா எனும் கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டுக்குமிடையே ஒரு சீனப்பெரும் சுவர் எழுப்பப்படவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அபிவிருத்திக்கும் அரசியல் உண்டென்பதை மறந்துவிடலாகாது. உள்நாட்டுப் போரினை இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவந்த முன்னைய அரசாங்கம் இனப் பிரச்சனை என ஒன்றில்லை, இந்த நாட்டில் சிறுபான்மையினரும் இல்லை எனக்கூறியபடி மக்கள் வேண்டி நிற்பது அபிவிருத்தியே எனும் கொள்கையைத் தனக்கே உரிய வகையில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியது. ‘கிழக்கின் உதயம்’, ‘வடக்கின் வசந்தம்’ அரசாங்கத்தின் காட்சித் திட்டங்களாயின. அன்றைய அரசாங்கத்தின் கொள்கை ப…
-
- 0 replies
- 403 views
-
-
உலக நீதி : காசாவும் முள்ளிவாய்க்காலும் - நிலாந்தன் “அனைத்துலக நீதியின் மாண்பு தராசில் தொங்கிக்கொண்டிருக்கிறது” இவ்வாறு அனைத்துலக நீதிமன்றத்தில் வைத்துக் கூறியிருப்பவர் தென்னாபிரிக்காவின் பிரதிநிதி. காசாவில் இஸ்ரேல் புரியும் இனப்படுகொலைக்கு எதிராகத் தென்னாபிரிக்கா உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது. அந்த வழக்கின் தொடக்கத்தில் மேற்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது. உலக நீதி மட்டுமல்ல மேற்கு நாடுகளின் அரசியல் அறமும் கூட தராசில் வைக்கப்பட்டிருக்கிறது. முழு உலகத்துக்கும் ஜனநாயகம் மனித உரிமைகள் போன்றவற்றின் மாண்பைக் குறித்து வகுப்பெடுக்கும் மேற்கு நாடுகளின் அரசியல் அறத்தை மிக இளைய ஜனநாயகங்களில் ஒன்று ஆகிய தென்னாபிரிக்கா கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. காசாவில்…
-
- 0 replies
- 702 views
-
-
ஆறு கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கும் அரசியல் எதிர்காலம் எம். காசிநாதன் / 2019 ஏப்ரல் 08 திங்கட்கிழமை, மு.ப. 11:31 Comments - 0 தேர்தல் கூட்டணிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைமையில், இரு கூட்டணிகள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டாலும், நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி. தினகரன் போன்றோரும் களத்தில் தனியாக, உதிரிக்கட்சிகளின் கூட்டணியுடன், தமிழக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். “ராகுல் காந்தி பிரதமர்” என்று அறிவித்து, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு எட்டு இடங்களைக் கொடுத்து, அ.தி.மு.க - பா.ம.க கூட்டணியை முதலில்…
-
- 0 replies
- 683 views
-
-
புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஓகஸ்ட் 28 புதன்கிழமை, பி.ப. 12:31 கடந்த வாரம், நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணிக்கான பிரசாரப் பயணத்தை சி.வி. விக்னேஸ்வரன் ஆரம்பித்தார். அவரோடு, சுரேஷ் பிரேமசந்திரனும் இருந்தார். முதலாவது, ‘எழுக தமிழ்’ பேரணி, 2016 செப்டெம்பரில் நடைபெற்றது. மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணி, செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி நடைபெறவிருக்கிறது. ஆக, ‘எழுக தமிழ்’ போராட்ட வடிவத்துக்கான வரலாறு, மூன்று வருடங்கள் மட்டுமே! ஆனால், இந்த மூன்று வருடங்களுக்குள், அந்தப் போராட்ட வடிவத்தின் அடையாளமும் அதற்கான அர்ப்பணிப்பும் எவ்வளவுக்கு வலுவிழந்து இருக்கின்றது என்பதைக் கவனித்தாலே, தமிழ்த் தேசிய அரசிய…
-
- 0 replies
- 854 views
-
-
ஜெனீவா தீர்மானமும் நகரும் அரசியல் தந்திரமும் ஆக்கம்: வ.திருநாவுக்கரசு நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகளைப் பொறுத்த வரை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதையே அரசாங்க உயர் பீடத்தினரின் சொல்லும் செயலும் நன்கு புலனாக்கி வருகின்றன. அதாவது ஜனாதிபதி ராஜபக்ஷ பயங்கரவாதம் எனப்படுவதைத் தோற்கடித்த வெற்றிக்களிப்பு தீர்ந்து விடக்கூடாதென்பதற்காக உயர்ந்த வண்ணமுள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பரந்துபட்ட மக்களைத் திசை திருப்புவதற்காக நான் பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்க விடமாட்டேன். நான் அதனை அழித்துவிட்டேன். சில நாடுகள் எம்மீது அழுத்தம் கொடுப்பதற்கு முனைந்து வருகின்றனவாயினும் எமக்கு முழுமையான சர்வதேச ஆத…
-
- 0 replies
- 589 views
-
-
தெற்கின் பிரித்தாளும் தந்திரோபாயத்திற்கு பலியாகிறதா தமிழரசுக் கட்சி? - யதீந்திரா பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களிடம் கற்றுத் தேறியிருக்கும் தெற்கின் சிங்கள ஆட்சியாளர்கள் பிரித்தாளும் அரசியல் கலையை கையாளுவதில் தாங்கள் வல்லவர்கள் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். தமிழ் மக்களுக்கு தனிநாடு கோரிய தந்தை செல்வநாயகத்தின் மருமகனையே தன்னுடைய ஆலோசகராக்கிய ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் வழிவந்தவர்களின் பிரித்தாளும் தந்திரோபாய பொறிக்குள் (Strategic trap) தமிழரசுக் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து விட்டதா என்னும் கேள்வி தொடர்பில் பதில் தேடவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. அண்மைக்க…
-
- 0 replies
- 520 views
-
-
ஜனாதிபதி தேர்தல் : சுயாதீனக் குழுவும் பல்கலைக் கழக மாணவர்களும். கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களின் தலையீடு ? நிலாந்தன் October 13, 2019 பேரவையால் தொடக்கி வைக்கப்பட்ட சுயாதீனக் குழு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்த பொழுது அது தமிழ் அரசியற் சூழலையும் தென்னிலங்கையின் அரசியற் சூழலையும் சடுதியாகக் குழப்பியது. அப்படி ஒரு குழு உருவாக்கப்பட்டது பல தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏன் அப்படி அதிர்வுகள் ஏற்பட்டன? ஏனெனில் அவ்வாறு சிவில் அமைப்புக்கள் கட்சிகளின் மீது தலையீடு செய்ய வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னைய காலங்களைப் போல கண்ணை…
-
- 0 replies
- 425 views
-
-
‘ஒருமித்த குரலில் பேசட்டாம்; ஒன்னா மண்ணா போகட்டாம்’ ஒருமித்த கருத்தோடு, ஒரே பயணத்தில் இணைய எல்லோரையும் அழைக்கிறார்கள். இப்போது கொஞ்சக் காலமாய் ஓரே குரலில் பேச வேண்டியதன் அவசியம் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. போதாக்குறைக்கு தமிழர்களின் மகுடவாசகம், ‘ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்’ என்ற அலப்பறைகள் வேறு. இதில் பிரதானமாய்க் கேட்க வேண்டிய வினா, எந்தத் தமிழர்களின் மகுடவாசகம் அது என்பதுதான்; கோவிலுக்குள் நுழைய இயலாமல் வெளியே நிற்கின்ற தமிழன், தோட்டக்காட்டான் என்று புறக்கணிக்கப்படும் தமிழன், மட்டக்களப்பான் என்று ஒதுக்கப்படும் தமிழன் ஆக…
-
- 0 replies
- 406 views
-
-
அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும் September 30, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் தங்களுக்கு இனிமேலும் கூட அரசியலில் ‘மீட்சி’ இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். தனிப்பட்ட வெளிநாட்டு விஜயத்துக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை’ தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார். அதேவேளை, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கொழும்பில் பிரமாண்டமான அரசாங்க மாளிகையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்…
-
- 0 replies
- 142 views
-
-
இன்று பூமிப்பந்து ஒரு நோய்த்தொற்றினைச் சுமந்தவாறு உருண்டு கொண்டிருக்கிறது. சரியான மருத்துவக் கவனிப்புக் கிடைக்காத நிலையில் உலகின் பல பாகங்களிலும் இளையவர்களும், முதியவர்களும் இறந்து கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது தொழில்களையும், வாழ்வாதாரங்களினையும் இழந்துகொண்டிருக்கிறார்கள். பல நாடுகளிலே ஓர் உணவு நெருக்கடி ஏற்கனவே தோன்றிவிட்டது. இப்போது நாங்கள் கண்ணுற்றுக் கொண்டிருப்பது எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு மருத்துவ ரீதியிலான நெருக்கடியோ அதே அளவுக்கு அது ஒரு சமூகப் பொருளாதார ரீதியிலான நெருக்கடியாகவும் அமைகிறது. எம்மை வேறுபடுத்திப் பார்க்காது, கண்ணை மூடியபடி, பொத்தாம் பொதுவாகத் தனது பீடிப்பினை எம் எல்லோர் மீதும் மேற்கொள்ளுவதற்கு வைரஸினால் முடியாது. ஏனென…
-
- 0 replies
- 540 views
-
-
’அவசரப்பட்டு தேர்தலை நடத்தி சிக்கலில் மாட்ட தேவையில்லை’ ஏ.சி.எம் பௌசுல் அலிம் ஒத்தி வைக்கப் பட்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இன்றைய தினம் முக்கிய மாநாட்டை கூட்டி இருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்துக்கு காவல்துறை உயரதிகாரிகளும் தேர்தல்கள் செயலகம் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடன் தற்போதைய நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு தேர்தலை நடத்த முடியாத நிலை …
-
- 0 replies
- 534 views
-
-
கூட்டமைப்புக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அம்பிகாவுக்கே போய் சேரும்.! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கொழும்பை சேர்ந்த அம்பிகாவும் நளினியும் இறக்கப்படுவதாக அறிவிப்பட்ட போது கூட்டமைப்புக்குள்ளேயே கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இவர்கள் போட்டியிடக்கூடாது என்று பலரும் கடுமையாக வலியுறுத்தினார்கள். கூட்டமைப்பில் போட்டியிடுபவர்களின் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இல்லை என்று அக் கட்சியின ஆதரவாளர்கள் பெரும் குதூகலிப்பை வெளியிட்டார்கள். ஆனாலும் சுமந்திரன் அம்பிகாவை மாத்திரம் கைவிடுவதாக இல்லை. கூட்டமைப்புக்குள் தன்னைப் போன்ற சிங்கள மனநிலை கொண்ட அம்பிகாவை எப்படியாவது கொண்டுவந்து, கூட்டமைப்பின் தலைமையை கொழும்புக்குள் கீழ் கொண்டுவ…
-
- 0 replies
- 544 views
-
-
ஜனநாயகம் தொடர்பான விவாதங்கள் முடிவின்றி தொடர்கின்றன. ஜனநாயகம் தொடர்பில் பலவாறான பார்வைகள் உண்டு. இதில் எது சரி? எது தவறு? என்பதெல்லாம் அவரவரது அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்பானது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னரான உலக ஒழுங்கில் அமெரிக்காவே பிரதான சக்தியாக நிலைபெற்றது. அதன் பின்னர் உலகெங்கும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்காவே அனைவருக்கும் வகுப்பெடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அனைத்து நாடுகள் தொடர்பான மனித உரிமைகள் நிலவர அறிக்கையொன்றை வெளியிட்டு வருகின்றது. ஒரு உலக வல்லரசு என்னும் தகுதி நிலையில் இருந்தே அமெரிக்கா இதனை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இத்தகைய அமெரிக்க ஜனநாயகத்தையே குழந்தைத்தனமான ஒன்று என்கிறார் அ…
-
- 0 replies
- 371 views
-
-
அதிருப்தியாளர்களை சமாளிக்க களத்தில் இறங்கிய ஜனாதிபதி.. ரொபட்அன்டனி ஆளும் கட்சிக்குள்ளேயே வலுத்துவந்த இருபதாவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மீதான எதிர்ப்பை இறுதி நேரத்தில் களத்தில் இறங்கிய ஜனாதிபதி சாமர்த்தியமான முறையில் முறியடித்து வெற்றியீட்டியிருக்கிறார் எதிர்க்கட்சி மேலும் பலவீனமடைந்துள்ளதுடன் அதன் 8 உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குஆதரவாகவாக்களித்தனர் சர்ச்சைகள் எதிர்ப்புக்கள் விமர்சனங்களுக்கு மத்தியில் இரட்டை குடியுரிமையுடையோர் தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஏற்பாடும் நிறைவேற்றம் பல்வேறு சர்ச்சைகள் எதிர்ப்புகள், ஆதரவு, சாதக, பாதக, விமர்சனங்களுக்கு மத்தியில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்ப…
-
- 0 replies
- 466 views
-
-
மஞ்சள் ஆபத்தும் மஞ்சள் விலை கூடிய ஒரு குட்டித் தீவும் – நிலாந்தன்… November 1, 2020 யார் இந்து சமுத்திரத்தில் கடல்சார் மேலாண்மையை அடைகிறாரோ அவரே அனைத்துலக அரங்கில் முதன்மையான பாத்திரத்தை வகிப்பார்.யார் இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்துகிறாரோ அவர் ஆசியாவின் மீது ஆதிக்கத்தைக் கொண்டிருப்பார். இருபத்தியோராம் நூற்றாண்டில் எழு கடல்களுக்குமான திறப்பு இந்து சமுத்திரமே. இந்த எழு கடல்களுமே உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும். அட்மிரல் அல்பிரட் தயர் மகான்- Admiral Alfred Thayer Mahan “சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக்கிற்காக நாங்கள் ஒன்றாக வேலை செய்வோம்.” ஜனாதிபதியின் அலுவவலகத்தில் உள்ள விருந்தினர் பதிவேட்டில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் பொம்பியோ எழுத…
-
- 0 replies
- 440 views
-
-
சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பேசியிருந்தனர். மேற்படி இருவரும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளில் ஒன்றாக தோன்றியிருந்தாலும் கூட, இருவருமே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒரே மேடையில் பேசுவதை தவிர்த்தே வந்தனர், இந்த நிலைமையானது இருவருக்கும் இடையில் பாரதூரமான முரண்பாடுகள் இருப்பதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதுடன் அதனையே நம்புமாறும் நிர்பந்தித்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் இலங்கை தமிழரசு கட்சியால் தருணம் சரியல்ல, என்னும் நிலைப்பாட்டின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வில் விக்னேஸ்வரன் பங்குகொண்ட…
-
- 0 replies
- 389 views
-
-
தமிழர் அரசியல் - அமெரிக்க இந்திய காய்நகர்த்தல்களுக்கு இடையில் - யதீந்திரா கடந்த பத்தியில் ஜெனிவை முன்னிலைப்படுத்தி இடம்பெற்றுவரும் சில விடயங்களை அவதானித்திருந்தோம். இப்பத்தியில் மேலும் சில விடயங்களை உற்று நோக்குவோம். சமீபத்தில் ஒரு நண்பர் சற்று வித்தியாசமான அபிப்பிராயம் ஒன்றை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அது சற்று வித்தியாசமான பார்வையாக இருந்தது. அது எந்தளவிற்கு இன்றைய சூழலில் பொருத்தமாக அமையும் என்பதற்கு அப்பால், இன்றைய சூழலில் எந்தவொரு கருத்தையும் உடனடியாக நிராகரித்துவிட முடியாதவொரு சூழல் நிலவுகிறது என்னும் யதார்த்தத்தையும் நிராகரிக்க முடியவில்லை. அமெரிக்கா, ஜெனிவாவில் மேற்கொண்டுவரும் நகர்வுகள் உண்மையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானதல்ல, அது இந்திய அரசுக்கு எதி…
-
- 0 replies
- 622 views
-
-
அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான ஒதுக்கீட்டில் இலங்கைக்கான நிதி உதவி பொருளாதாரம் சார்ந்த விடயங்களிலானது, சர்வதேச இராணுவ உதவித் திட்டத்தின் கீழானது என்று இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நிதி உதவிகளை வழக்கம் போலக் கண்ணை மூடிக் கொண்டு இலங்கைக்கு வழங்குவதற்கு அமெரிக்கா அரசாங்கம் தயாராக இல்லை. http://cdn.virakesari.lk/uploads/medium/file/142379/ddddd.jpg 2021 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசின் செலவினங்களுக்காக, 2.3 ட்ரில்லியன் டொலர் கள் நிதியை ஒதுக்கீடு செய்யும் சட்டத்தில் கையெழுத்திட மறுத்து வந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த வாரம் அதில் கையெழுத்திட்டுள்ளார். கொரோனா நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில், இலங்கை உள்ளிட்ட ந…
-
- 0 replies
- 550 views
-
-
TNA பகிரங்க கோரிக்கை:- யாழ்.மாநகரசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் விஜயகாந்த் செய்ததாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சியான கூட்டமைப்பு கோரியுள்ளது. இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிiகாயாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் சார்பில் அதன் மாநகரசபை அங்கத்தவர்களான விந்தன் கனகரட்ணம், பரஞ்சோதி மற்றும் ராஜதேவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். கூட்டமைப்பில் அமைய ஊழியர்கள் ஆட்சேர்ப்பு மற்றும்; சுகாதாரத்துறை மேம்பாடென பல மில்லியன் மோசடிகள் இடம்பெற்றுள்ளது. இவற்றின் பின்னணியில் எல்லாம் ஆளும் கட்சி உறுப்பினர் விஜயகாந்த் இருந்ததாக நாம் சந்தேகிக்கின்றோம். ஏனெனில் அவர் தன்னை அமைச்சர் டக்ளஸினது தம்பியென கூறி கட…
-
- 0 replies
- 558 views
-
-
அதிகரிக்கும் நெருக்கடி பொதுமக்களுடைய காணிகளை உள்ளடக்கிய கேப்பாப்புலவு கிராமத்தையும், அதனைச் சூழ்ந்த பிரதேசத்தையும் அடாத்தாகக் கைப்பற்றி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறுவதற்கு கால அவகாசம், பெருந்தொகை நிதி என்பன தேவை என நிபந்தனைகள் விதிப்பது வேடிக்கையாக இருக்கின்றது. நாட்டில் யுத்த மோதல்கள் கிடையாது. தேசிய பாதுகாப்புக்கு நெருக்கடியான நிலைமைகள் இருக்கின்றன. நெருக்கடியான சூழல் நிலவுகின்றது என்றும் சொல்வதற்கில்லை. இந்த நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் வருடந்தோறும் தேசிய பாதுகாப்புக்காக அதிக அளவிலான நிதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்படுகின்றது.…
-
- 0 replies
- 242 views
-
-
வெறுப்புச் செயற்பாடுகளின் அபாயமணிச் சத்தம் ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை விடவும், வர்ணப் புகைப்படமொன்று அழகாகவும் இரசனைக்குரியதாகவும் இருப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி, நம்மில் எத்தனை பேர் யோசித்திருக்கின்றோம்? நிறங்களின் பன்மைத்துவம்தான் அந்த அழகுக்குக் காரணமாகும். உலகில் வாழும் எல்லோரும் ஒரே முகச்சாயலுடையவர்களாக இருப்பார்களாயின் வாழ்க்கை எப்போதோ, அலுத்துப் போயிருக்கும். அழகு மற்றும் இரசனையின் அடிப்படையாக பன்மைத்துவம் உள்ளது. தனித்த இனமொன்று வாழும் நாட்டை விடவும், பல இனங்கள் வாழும் நாடு இரசனைக்குரியதாகும். ஒவ்வொரு சமூகத்தினதும் மாறுபட்ட இலக்கியம், கலை, கலாசாரம், விழுமியங்கள் மற்றும் மத நம்பிக்கை…
-
- 0 replies
- 417 views
-