நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
பெய்ஜிங், (சின்ஹுவா )</strong> 100 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர், ஆஸ்திரிய -ஹங்கேரிய சாம்ராச்சியத்தின் முடிக்குரிய வாரிசான கோமகன் பிரான்ஸ் பேர்டினண்ட் சரஜீவோவில் கொலை செய்யப்பட்டதையடுத்து தோன்றிய நெருக்கடியை கையாளுவதில் அன்றைய பெரிய வல்லரசுகள் இழைத்த தொடர்ச்சியான புவிசார் அரசியல் தவறுகள் முதலாவது உலகப்போருக்கு வழிவகுத்தன. இன்று உலகம் ஏற்கெனவே உலகளாவிய ' போர் ' ஒன்றுக்குள் மூழ்கிக்கிடக்கிறது. இத்தடவை எதிரி கண்ணுக்குப்புலப்படாத -- முன்கூட்டியே அறிந்திராத ஒரு வைரஸாக இருக்கின்ற போதிலும், பயங்கரமான புவிசார் அரசியல் விளையாட்டுக்களின் பேயுரு இன்னமும் வானில் உலாவுகிறது. அது ' போரை ' மேலும் படுமோசமானதாக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது. கொரோ…
-
- 0 replies
- 378 views
-
-
'சமஷ்டித் தீர்வுக்காகவே ஆட்சியாளர்களுடன் பேசுவோம்': த.சித்தார்த்தன் செவ்வி சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காகவே தமிழ் மக்கள் ஆணை வழங்குகின்றார்கள். அத்தகைய தீர்வினைப் பெறுவதற்காக நாம் தொடர்ந்தும் ஆட்சியில் உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்று புளொட் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான த.சித்தார்த்தன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கடுமையான முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு உங்களுடைய பதில் என்ன? பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களின் ஏறக்குறைய ஏகோபித்த ஆணையை பெற்ற தரப்பாக இருக்கின்றது. …
-
- 0 replies
- 224 views
-
-
கட்டுரை: குருதியில் நனைந்த சாட்சியங்கள் ஈழப்படுகொலை ஓர் ஊடகவியலாளரின் சாட்சியம் ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் தமிழில்: என்.கே. மகாலிங்கம் அதிபயங்கரமான படுகொலைகள் நடந்த அந்தப் பொன்னிற மணல் பிரதேசத்திலிருந்து தப்பி வருகிறார் லோகீசன். ஆறு அடி உயரம். மழிக்கப்படாத தாடி. நீண்ட குழம்பிய தலைமுடி. இருபத்தேழு வயது. தன் தந்தையை ஒரு குழந்தையைப் போல் தூக்கி வருகிறார். தன் தலைக்கு மேலாகப் பறந்துகொண்டிருக்கும் துப்பாக்கிக் குண்டுகளை அவர் கவனிக்கவில்லை. காலடியில் கிடக்கும் செத்த உடல்களைக் கவனிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு இப்போது தண்ணீர்த் தாகம். பயங்கரமான தண்ணீர்த் தாகம். அது மட்டுந்தான் அவருக்கு இப்போது நினைவிலிருக்கிறது. அது 2009ஆம் ஆண்டு ஏ…
-
- 0 replies
- 1.9k views
-
-
ராஜராஜனும் வெற்றிமாறனும்: யார் இந்து? ராஜன் குறை கிருஷ்ணன் ராஜராஜ சோழன் இந்து மன்னனா அல்லது தமிழ் சைவ மன்னனா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் பலருக்கும், ‘இது என்ன புதுக்குழப்பம்?’ என்று வியப்பாக இருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். பெயரில்தான் எல்லாம் இருக்கிறது என்று ஒருவர் சொல்லலாம். ஒன்று மட்டும் நிச்சயம். பெயரில் அரசியல் இருக்கிறது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மணி விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் அதைத்தான் கூறினார். நமது இருப்பே அரசியல்தான் என்று திருமாவளவன் தெளிவுபடுத்தியதாகக் கூறினார். இதைத்தான் ‘ஆன்டு - பொலிடிக்கல்’ (onto-political) என்று கூறுவார் அரசியல் கோட்பாட்டாளர் வில்லியம் கனோலி. வெற்றிமாறன் தன்னுடைய பேச்சில், எப்…
-
- 0 replies
- 303 views
-
-
தமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன் 06/10/2018 இனியொரு... இந்துக்களைப் பொறுத்தவரையில் அங்கிங்கு எண்ணாதபடி எங்கும், எல்லாவற்றிலும், நீக்கமற நிறைந்திருக்கும் சாதியானது தமிழர்களையும் விட்டுவைக்கவில்லை. “இப்போதெல்லாம் யார்தான் சாதி பார்க்கிறார்கள்” என்று மேம்போக்காகப் பேசுபவர்களின் முகத்திலடித்தாற்போல இந்தக் கிழமை நடைபெற்ற கச்சநந்தம் சாதிய வன்முறையும் (சிவகங்கை மாவட்டம்-தமிழகம்), யாழில் வரணி அம்மன் தேரினை கனரகப் பொறி(JCB digger) மூலம் இழுத்த நிகழ்வும் காணப்படுகின்றன. இதில் முதலாவதாக கச்சநந்தம் ஊரில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படுமிருவர் தேநீர் கடையில் (தமது)காலிற்குமேல் கால் போட்டுக்கொண்டு தேநீர் குடித்தயினைக் கண்டு தமது சாதிப்பெருமை களங…
-
- 0 replies
- 533 views
-
-
22 OCT, 2023 | 10:34 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 'ஒரு பாதை ஒரு மண்டலம்' முன்முயற்சி திட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின்போது எழுத்து மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இராஜதந்திர கொந்தளிப்புகளை பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ள 'ஷி யான் 6' ஆய்வுக் கப்பலை இலங்கைக்கு அனுப்பாதிருக்க சீனா தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடவிருந்த குறித்த சீன ஆய்வுக் கப்பலின் வருகையை நவம்பர் மாதம் வரை ஒத்திவைக்குமாறு அரசாங்கம் கோரியிருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே 'ஷி யான் - 6' ஆய்வுக் கப்பலின் இலங்கைக்கான விஜயத்தை சீன தரப்பு இரத்து செய்துள்ளதாக அறிய முடிகி…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
‘இஸ்லாமிய பிரிவினைவாதச் செயற்பாடுகள் 10 வருடங்களுக்கு முன்னரும் இருந்தன’ Editorial / 2019 மே 08 புதன்கிழமை, பி.ப. 08:07 Comments - 0 இஸ்லாமியப் பிரிவினைவாதக் குழுக்களின் செயற்பாடுகள், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போதும் காணப்பட்டன. யுத்தத்துக்குப் பின்னர், இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து, அதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்து வந்ததாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு, கே: முப்பது வருட யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவில், எதிர்பாராத ஓர் அசாதாரண நிலைமைக்கு இலங்கை முகம்கொடுக்க நேரிட்டது ஏன்? இதனை 10 வருடங்களுக்குள் இடம்பெற்ற சம்பவம…
-
- 0 replies
- 313 views
-
-
அப்படிச் சொன்னவர்கள் இப்போது வாயே திறக்கவில்லை - மு.க...! திராவிட பிழைப்புவாத லாவணி அரசியலின் உச்சம் - ஈழதேசம்..! [size=3] தி.மு.க., தலைவரின் கேள்வி பதில் அறிக்கை..? அதென்ன..உலகத்தில் எங்குமே இல்லாத கேள்வி பதில் அறிக்கை..? ஒன்று பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு பேட்டி கொடுப்பார்கள். அல்லது பத்திரிக்கை செய்தி என்று சில பேப்பர்களை அந்தந்த மீடியாவிடம் கொடுப்பார்கள். இவ்வாறு யாராவது கேள்வி பதில் பத்திரிக்கை செய்தி என்று எங்கேயாவது கொடுதிருக்கிரார்களா..?அதுதான்...திராவிட இனமான மு.க.வின் தனி பாணி. வழக்கமாக கேள்விகளை மீடியாக்காரர்கள் கேட்பார்கள், பதில்களை சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள் அல்லது நபர்கள் அளிப்பார்கள். கேள்வியும் நானே பதிலும் நானே என்று ஒரு பத்திரிக்கை ச…
-
- 0 replies
- 608 views
-
-
கடந்த மாதம், 29-ம் திகதி எகிப்து நாட்டை சேர்ந்த “எகிப்து ஏர்” என்ற பயணிகள் விமானம், அதே நாட்டில் உள்ள அலெக்சாண்டிரியா என்ற நகரிலிருந்து எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு, விமானக் குழுவினர் உள்பட ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களுடன் புறப்பட்டபோது மர்ம நபர் கடத்தியது நினைவிருக்கலாம். பிறகு சைப்ரஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டு பயணிகள் விடுவிக்கப்பட்டனர். விமானத்தைக் கடத்திய சயிஃப் அல்தின் முஸ்தஃபா, சைப்ரஸ் நாட்டில் தஞ்சமடைய கடத்தியதாகவும், சைப்ரஸில் உள்ள தன் முன்னாள் மனைவியைச் சந்திக்க வேண்டி கடத்தியதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், அதே விமானத்தில் பயணம் செய்த அப்து அல்லாஹ் இ ஆஸ்மாவி என்ற 31 வயதுடைய அறுவை சிகிச்சை நிபுணர், அந்த விமானப் பயண அனுபவத்தை…
-
- 0 replies
- 452 views
-
-
முஸ்லிம் கூட்டமைப்பு உருவானால் முஸ்லிம் கட்சிகள் அழிந்திடுமா? மொஹமட் பாதுஷா முஸ்லிம் கட்சிகளும் அம்மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றாகச் சேர்ந்து இயங்க வேண்டுமென்ற குரல்கள், தற்போது அழுத்தமாக ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. சமகாலத்தில், அவ்வாறானதோர் அமைப்பாக்கம் தேவையில்லை, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உருவாகி விட்டால், முஸ்லிம்களின் தனித்துவக் கட்சி அடையாளங்கள் அப்படியே அழிவடைந்து, தூர்ந்து போய்விடும் என்று விதண்டாவாதமும் முன்வைக்கப்படுகின்றது. இலங்கையில், முஸ்லிம்களின் அரசியல், பல பரிணாமங்களைக் கடந்து வந்திருக்கின்றது. பெருந்தேசியக் கட்சிகளின் ஊடான அரசியல் …
-
- 0 replies
- 229 views
-
-
>சமுதாயத்தில் கணனியையும் இணையத்தொடர்பையும் பயன்படுத்துவதற்கான வசதியைக்கொண்ட பிரிவினருக்கும் அந்த வசதியைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாத பிரிவினருக்கும் மத்தியிலான இடைவெளியே ' டிஜிட்டல் பிளவு ' ( Digital divide ) என்று அழைக்கப்படுகிறது. இந்த பிளவு நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் பாரியளவில் அகலமானதாக இருப்பதுடன் நகர்ப்புறங்களிலும் கூட வசதிபடைத்தவர்களுக்கும் வசதியில்லாத பின்தங்கிய மக்கள் பிரிவினருக்கும் இடையில் இடைவெளி பாரியதாக இருக்கிறது. புதிய கொரோனாவைரஸ் உலகெங்கும் பரவத்தொடங்கியதும் உலக நாடுகள் தொற்றுநோயைக்கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை (Lock down) நடைமுறைப்படுத்துகின்றன. அரசாங்க சேவையில் உள்ள ஊழியர்களும் தனியார்துறை ஊழியர்களும் அலுவலகங்களு…
-
- 0 replies
- 272 views
-
-
வன்னியிலுள்ள பொது மக்களை வெளியேற அனுமதிக்காவிட்டால், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக கருதபட்டு தடைசெய்யப்படுமென மஹிந்த தெரிவித்துள்ளார். ஒரு தலைப்பட்சமாக ஒப்பந்தத்தை கிழித்து, யுத்தத்தை அரசு ஆரம்பித்த பொழுதே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகள் தடைசெய்யபட்டு விட்டன. 83லும் 98லும் தடை செய்தபோது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களளை அரசு காரணம் காட்டியது. அதேபோன்று வெளிச்சக்திகளின் அழுத்தத்தால் 87ல், 2002ல் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, விடுதலைப் புலிகள் மீதான தடையை அரை மனதோடு நீக்கியது அரசு. ஆனாலும், இம் முறை மேற்கொள்ள உத்தேசித்துள்ள 'தடை' நகர்வில் பிராந்திய அரசியல் நகர்வொன்று பின்னிப் பிணைந்துள்ளது. தமிழ்நாட்டு அழுத்தத்தால், கொழும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் முக்கிய விடயங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த சூட்டோடு, அவருடைய முதலாவது விஜயம் அமைந்திருந்தது. முள்ளிவாய்க்கால் என்ற கடலோரப் பிரதேசத்தில் ஒரு சிறிய நிலப்பகுதிக்குள் முற்றுகையிடப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் மீது மோசமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருந்தன. அவர்களும் அந்தத் தாக்குதலை எதிர்த்து மூர்க்கமாகப் போரிட்டிருந்தார்கள். இந்த மோதல்களுக்கிடையில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் சிக்கி சின்னாப…
-
- 0 replies
- 504 views
-
-
யாழ். – மானிப்பாய் – பொன்னாலை வீதிப் புனரமைப்பில் நிதி மோசடி: வலிகாம மக்கள் ஏமாளிகளா? November 12, 2021 யாழ். மாவட்டத்தில் தற்போது பல வீதிகள் காபெற் வீதியாக புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த யாழ்ப்பாணம், மானிப்பாய் – பொன்னாலை வீதியும் புனரமைக்கப்படுகின்றது. நீண்ட காலம் தாம் எதிர்கொண்ட போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கப்போகின்றது என மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும், வீதியின் புனரமைப்பு விதம் மக்களை கவலையடையச் செய்துள்ளது. யாழ்ப்பாணம் சுடுகாட்டு ஆலடிச் சந்தியில் இருந்து மானிப்பாய் ஊடாக பொன்னாலைச் சந்தி வரை இந்த வீதி புனரமைக்கப்பட உள்ளது. அதாவது இந்த வீதி யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை …
-
- 0 replies
- 426 views
-
-
ஒன்றுபடுவோம், ஒன்றுமையாய் இருப்போம், உரக்கப் பேசுவோம், தலைவர் பிறந்தநாளில் புதிய இலக்கினை அடைய நாம் எல்லோரும் உறுதி எடுப்போம். தலைவர் வழியில் பின்தொடர்வோம். எமக்கு என்று ஒரு நிலத்தை, ஆட்சியை அமைப்போம். http://www.pathivu.com/news/35561/57//d,article_full.aspx வீரமிக்க தலைவனின் பிறந்தாளில் அனைவரும் புதிய நம்பிக்கையுடனும், கொள்கையுடனும் செயற்படவேண்டும் - முனைவர் ம.நடராசன் அடுத்த கட்டப் போராட்டத்தினை நோக்கி வழி நடத்துகின்ற இடத்தில் தமிழீழத் தேசியத் தலைவரே முதல் இருப்பார். அவர் கற்றுத்தந்த பாடங்களைக் கொள்கையாகக் கொண்டு அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட்டால் என்றோ ஒருநாள் ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் மலரும்.https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Bb6…
-
- 0 replies
- 454 views
-
-
இலங்கை -- சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கையை ஏன் எதிர்க்கிறார்கள்? இலங்கை இந்திய வர்த்தக உடன்படிக்கையும் எமக்கு சாதகமாக அமையவில்லை இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தம் (SLSFTA) 2018 ஜனவரி 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே இலங்கை இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இதுபோன்ற இருபக்க தாராள ஒப்பந்தங்களை இலங்கை செய்துள்ளது. எனினும் அந்த ஒப்பந்தங்களுக்கு இல்லாத எதிர்ப்பு சிங்கப்பூர் ஒப்பந்தத்திற்கு ஏற்படக்காரணம் இலங்கையரிடையே காணப்படும் சிங்கப…
-
- 0 replies
- 832 views
-
-
தென்னிலங்கை அரசியல் தலைமைகள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே ` பௌத்த மத மறுமலர்ச்சி என்ற சுலோகத்தின் கீழ் சிங்களத் தேசியவாதப் போக்கு என்ற கருத்தியல் தென்னிலங்கையில் மேலாண்மை வடிவம் பெற்று பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்தது. அது தமிழர் மீதான காழ்ப்புணர்வைப் பலமாக (அ)கோரமாக வெளிப்படுத்தியது. இதுவே கடந்த நூற்றாண்டின் இலங்கைத் தீவின் வரலாற்றின் அடிநாதம் அடிப்படை எனலாம். இந்த பௌத்த, சிங்கள மேலாண்மைக் கருதியலோடு ஒன்றித்து அசைந்த அரசியல் கட்சிகளினால் மட்டுமே தென்னிலங்கையில் ஜனநாயகம் என்ற கேலிக்கூத்து வரையறைக்குள் நின்று பிடித்து நிமிர முடிந்தது. இதைமீறி, நியாயம் இன்னதுதான் என்பதை உரைக்க அல்லது அதன்வழி செயற்பட முயன்ற சக்திகளும் கட்சிகளும் தென்னிலங்கையில் அடிபட்டுப் போயின. கடந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மாணவர்களின் பாதுகாப்புக்காக என்ன செய்யலாம்? Editorial / 2019 மே 08 புதன்கிழமை, பி.ப. 08:30 Comments - 0 பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் எழுந்துள்ள அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் தவணைக் காலம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில், அவர்களது பெற்றோர் மாத்திரமன்றி, அனைத்துத் தரப்பினரும் எண்ணத் தொடங்கியுள்ளனர். சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலின் போது, சிறு பிள்ளைகள் அறுவரும் கொல்லப்பட்டிருந்தனர். அந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, பயங்கரவாதிகளால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களுக்கு வீடியோக்கள் சிலவும் வெளியிடப்பட்டிருந்தன. அந்த வீடியோக்களி…
-
- 0 replies
- 733 views
-
-
இனவாத தாக்குதல் அல்ல சந்தர்ப்பவாத தாக்குதல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்த நொடியிலிருந்து நாட்டில் எழுந்த பதற்றம் இன்னும் தீர்ந்தபாடில்லை... இதற்கு மேலாக ஆங்காங்கே ஆயுதங்கள் மீட்பதும் அதிரடி கைதுகளும் மக்களை அச்சத்திலேயே வைத்திருக்கின்றன... இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தளத்தில் ஒருவர் இட்ட பதிவால் ஆத்திரமுற்ற ஒரு தரப்பு கைகலப்பில் ஈடுபட்டது. இதன் நீட்சியாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.... அதில் ஒரு பிரதேசம்தான் மினுவாங்கொடை... சற்று அதிகமாக அடிவாங்கிய இடம் என்று கூட சொல்லலாம். மக்களுக்கு சேதமில்லை. ஆனால் அந்த மக்களின் வாழ்வியலுக்குத்தான் அதிக சேதம். ஆம்... வன்மு…
-
- 0 replies
- 449 views
-
-
விற்று பிழைக்கும் அரசியல் மொஹமட் பாதுஷா / 2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, மு.ப. 11:35 சில நாள்களாக மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு கூரப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இப்போது ஜனாதிபதித் தேர்தல், நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் ஆரம்பமாகும் அடுத்த இரு மாதங்களிலும் அஷ்ரப் இன்னும் அதிகமதிகம் பேசப்படுவார். சரியாகச் சொன்னால், ஒரு வர்த்தகக் குறியீடு (பிராண்ட் நேம்) போல பயன்படுத்தப்படுவார். தேர்தல் வெற்றிக்காக, அவரது புகைப்படங்களும் அவர் முன்மொழிந்த கோஷங்களும் நினைவு கூரப்படுவதோடு, அவரைப் பின்பற்றும் நடவடிக்கைகள் எல்லாம், முடிவுக்கு வந்து விடுகின்றன. பின்னர், இன்னுமொரு நினைவு தினத்தில், தேர்தல் காலத்தில் அஷ்ரப்பின…
-
- 0 replies
- 359 views
-
-
நெருக்கமான ஜனாதிபதி தேர்தல் போட்டியில் கிளப்பப்படும் புலிப்பூச்சாண்டி இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததற்கு பின்னர் தமிழர்கள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என்ற போதிலும், சிங்கள பெரும்பான்மை அரசியல் கட்சிகளினால் தேர்தல் ஒன்றுக்கு முன்னதாக எப்போதுமே புலிப்பூச்சாண்டி கிளப்பப்படுகிறது. நவம்பர் 16 நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் நிலைமை வேறுபட்டதாக இல்லை. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத்தொடங்கியிருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பையே பிரதான பிரச்சினையாக மக்கள் முன்கொண்டுசெல்லும் கடும்போக்காளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச அக்டோபர் 14 முன்னாள் விடுதலை புலி…
-
- 0 replies
- 232 views
-
-
அண்மைக் காலங்களிற் தமிழில் எழுதும் சிலபத்தியாளர்களின் பத்திகளை வாசிக்கும் போது அவர்கள் எவ்வளவு கவனமாகவும் நுட்பபமாகவும் தொழிற்படுகிறார்கள் என்பது தெரியவருகிறது. இவர்கள் எதில்கவனமாக இருக்கிறார்கள் என்பதனையும் எதனை நுட்பமாக வாசிப்பவர்களின் மனதில் பதியவைக்க விரும்புகிறார்கள் என்பதையும் நாங்கள் கவனிக்கவேண்டும் இந்தப்பத்தியாளர்கள் இரு வகையானவர்கள் ஒரு வகையினர் விடுதலைப் புலிகளை நிரந்தரமாகவே கடுமையாக எதிர்த்து இலங்கை அரசுடன் இணைந்திருந்தவர்கள். மற்றவகையினர் விடுதலைப் புலிகளின் அழிவுடன் தீடீர் என ஒடுக்குமுறை அரசின் பக்கம் சாய்ந்து விட்டவர்கள். விடுதலைப் புலிகளை மிக வீராவேசமாக ஆதரித்த பலர் இன்றைக்குள்ள சிங்களப் பேரினவாத அரசின் ஆதரவாளர்களாக மாறியுள்ளமை பலருக்கு ஆச்சரியமாக இர…
-
- 0 replies
- 433 views
-
-
அமெரிக்க நாணய மதிப்பான டாலர், "உலகளாவிய நாணயம்" என்ற அடையாளத்தை பெற்றுள்ளது. டாலர் மற்றும் யூரோ - சர்வதேச வர்த்தகத்தில் மிகவும் பிரபலமானவை மற்றும் ஏற்றுக்கொள்ளப்படுபவை. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் வைத்திருக்கும் அன்னிய செலாவணி இருப்பில் 64 சதவிகிதம், அமெரிக்க டாலர்களாகும். அத்தகைய சூழ்நிலையில், டாலரே உலகளாவிய நாணயமாக உள்ளது. இது, அதன் வலிமை மற்றும் அமெரிக்க பொருளாதார பலத்தின் அடையாளமாகும். சர்வதேச தர நிர்ணய அமைப்பின் (இண்டர்நேஷ்னல் ஸ்டாண்டர்ட் ஆர்கனைஸேஷன்) பட்டியலின்படி, உலகளவில் 185 நாணயங்கள் உள்ளன. இருப்பினும், இந்த நாணயங்களில் பெரும்பாலானவை, தனது நாட்டிற்குள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் ஒரு நாணயம் எத்தனை பிரபலமாக உள்ளது என்பது,…
-
- 0 replies
- 441 views
-
-
ஈழமக்களை நம்பவைத்து புலித்தலைவர் ஏமாற்றினாரா!! நிரூபன் பதிவுக்கு பதில் ஈழமக்களை நம்பவைத்து ஏமாற்றிய புலித்தலைவர் என்கிற ஓர் பதிவு அண்மையில் தமிழ்மணத்தில் கண்ணில் பட்டது. இலங்கைப்பதிவர் நிருபனால் எழுதப்பட்டது. சரி, இப்படி ஈழம் தொடர்பாக எத்தனையோ எழுத்துகளை, மாற்றுக்கருத்துக்களைத் தான் அடிக்கடி படிக்கிறோமே என்று விட்டுத்தள்ளிவிட்டுப் போகலாம் என்று தான் நினைத்தேன். ஏனோ மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஈழம் பற்றி பதிவுலகம் முதல் அல்ஜசீரா, அமெரிக்க சி.என்.என்., பி.பி.சி. வரை தொடங்கி உலகின் முன்னணிப் பத்திரிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் படிப்பதென்பது தமிழனின் தலையெழுத்து என்று ஆகிவிட்டது. படிப்பதோடு நிற்பதில்லை. எந்தவொரு ஊடகமானாலும் ஈழம் என்று வந்தால் ஜனநாயக கருத்து …
-
- 0 replies
- 778 views
-
-
-
- 0 replies
- 637 views
-