நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
அரசியல்வாதிகளுக்காக சிறையில் வாடும் அரசியல் கைதிகள்!! -சிறிமதன் June 21, 2019 என்றோ ஒருநாள் விடுதலையாவேன்! என்ற நம்பிக்கையுடன் நான்கு சுவருக்குள் அடைபட்டு கிடக்கும் இவர்கள் ஏமாற்றத்தின் எல்லையை எட்டிவிட்டார்கள். யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் கம்பிகளுக்கு பின்னால் இன்றும் தங்கள் விடுதலையை எதிர்பார்த்து தினம் தினம் போராடிக்கொண்டு இருப்பவர்களே நாம் வழமை போன்று அரசியல் கைதிகள் என்று ஒற்றை வார்த்தையில் கூறுபவர்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் புலிகளுக்கு அரசாங்கமே அங்கீகாரம் கொடுப்பதற்கு சமமானது. இவர்களை விடுவித்தால் மீண்டும் ஐந்தாம் ஈழப்போர் ஆரம்பமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர அரசாங்கத்தை எச்சரித்திரு…
-
- 0 replies
- 236 views
-
-
சுட்டெரிக்கும் வெயிலும் நம் உணவு தட்டும்! (சூழலியல் கேட்டையும், தனி மனித பொறுப்புணர்வையும் அலசும் மினி தொடரின் இரண்டாவது பகுதி இது) சுட்டெரிக்கும் வெயிலுக்கும், பெரும் மழைக்கும், நம் உணவு தட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா...? ஆம். மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அனைத்து சூழலியல் கேடுகளும் நம் உணவு தட்டிலிருந்தே துவங்கி விடுகிறது. ‘உணவெனப்படுவது நிலத்தோடு நீரே...’ என்கிறது சங்க இலக்கியம். ஆனால், நாம் ‘உணவெனப்படுவது நஞ்சும் அமிலமும்’ என வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உணவை தனி மனித விஷயம் என புறந்தள்ளி விட முடியாது. உணவுக்கும் சூழலியலுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. உணவு சிதைகிறது என்றால் சூழலியல் சிதைகிறது எ…
-
- 0 replies
- 608 views
-
-
இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல: நிலாந்தன்:- 08 மே 2016 மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக நினைவு நாளை அனுஷ;டித்தன. ஆனால் அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமையவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை காவல்துறை தடை செய்தது. அது பற்றி ஏனைய கட்சிகள் வாயைத் திறக்கவில்லை. இம்முறையும் அரசாங்கம் கடந்த ஆண்டைப் போலவே நிலைமைகளைக் கையாளும் என்று கருத இடமுண்டு. அண்மைக் காலங்களாக இடம்பெற்ற…
-
- 0 replies
- 293 views
-
-
கிழக்கு முனையச் சிக்கல் -ஹரிகரன் - “கிழக்கு முனைய விவகாரத்திலும் சரி, இந்தியாவின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, சீனா ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், அவற்றைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ முற்படுவதாகவும், இந்தியா கருதுகிறது” தன் வினை தன்னைச் சுடும் என்ற பழமொழி தற்போதைய, அரசாங்கத்துக்கே பொருத்தம். கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில், பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியாக இருந்தபோது, பற்ற வைத்த நெருப்பு, இப்போது, அதனையே சூழத் தொடங்கியிருக்கிறது. கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, அரசாங்கத்தின் நிலைப்பாடு கடந்தவாரம் கிட்டத்தட்ட வெளிப்படையாகி விட்டது. துறைமுகம் எந்த நாட்டுக்கும் விற்கப்படவோ, குத்தகைக்கு கொடுக்கப்படவோ மாட்டாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜ…
-
- 0 replies
- 560 views
-
-
1987 ஒக்டோபர் பத்தாம் நாள் இந்திய இராணுவத்திற்கும் - தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக்குண்டு வீச்சு மற்றும் ஏறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்திய படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் பாதுகாப்பு தேடிய மக்கள் கொக்குவில் இந்துக்கல்லூரியில் தஞ்சமடைந்தனர். அத்துடன் தங்களை இடம்பெயர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தும் நோக்குடன் பாடசாலையின் முக்கிய இடங்களில் வெள்ளைக்கொடியைப் பறக்கவிட்டிருந்தனர். 1987 ஒக்டோபர் இருபத்து நான்காம் நாள் காங்கேசன்துறை வீதி வழியாக யாழ் நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் ப…
-
- 0 replies
- 423 views
-
-
பி.பி.சி. ஆனந்தி அக்கா-சந்திரகாந்தன் மதிய உணவு உரையாடல் முழுக்க தமிழீழ விடுதலைப்போராட்டத்தையே மையமாகக் கொண்டிருந்தது. சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வன்னிக்குச் சென்று வந்திருக்கிறார் ஆனந்தி அக்கா. "தலைவரெ பார்த்து சில கேள்விகள் கேட்கணு மென்டுதான் நானும் போனேன். ஆனா அங்கு கட்டி வச்சிருக்கிற "செஞ்சோலை' குழந்தைகள் இல்லத்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம். என்ட மனக்கசடுகளெல்லாம் கழுவப்பட்டு புதுசா பிறந்த மாதிரியான உணர்வு. வன்னியிலிருந்து திரும்பி பி.பி.சி வந்து "செஞ்சோலை' பற்றி நிகழ்ச்சி தயாரித்தபோது "என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்' என்டுதான் தலைப்பிட்டேன்'' என்றார். தொடர்ந்தவர், "பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவிய…
-
- 0 replies
- 532 views
-
-
இசைப்பிரியா... சிங்கள பேரினவாதத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ்ப்பெண். அரச பயங்கரவாதத்தின் அழியாத சாட்சி. அவரைப் பற்றி அறிய வெளிநாட்டில் இருக்கும் அவரது குடும்பத்தைத் தொடர்புகொண்டோம். இசைப்பிரியாவின் அக்கா தர்மினி வாகீசன் நம்மிடம் பேசினார். சொந்த சகோதரியைக் கொடூரமாய் பலிகொடுத்த சோகமும் அது சம்பந்தமான காட்சிகள் ஊடகங்களில் காணும் வேதனையுடனும் தர்மினி பேசினார். இதோ அவரது வாக்குமூலம்.. 'அன்பான பாசமான குடும்பத்துல எல்லாப் பெண்களையும் போலதான் இசைப்பிரியாவும் வளர்ந்தாங்க. சின்ன வயசில இருந்து நல்லா படிச்சுக்கொண்டு இருந்தாங்க. இசைப்பிரியாவின் கூடப்பிறந்தவங்க நாங்க மொத்தம் ஐந்து பேர். இசைப்பிரியா நாலாவது பெண். மூன்று அக்கா ஒரு தங்கை. தங்கையும் போராளிதான். அவங்க பெயர் சங்கீதா.…
-
- 0 replies
- 581 views
-
-
-
- 0 replies
- 252 views
-
-
விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி! புதிய குதிரையா? Prem மாற்றம் ஒன்று தான் மாறாதது என்ற கருத்தியலில் சாமானியர்களுக்கு ஆழமான புரிதல் இருந்ததோ இல்லையோ அதனை முன்னாள் முதல்வராகும் சீ.வி விக்னேஸ்வரன் தனது 79 வது பிறந்தநாளுக்கு மறுநாளான இன்று சரியாக புரிந்துகொண்டுள்ளார். அவரது இந்தப்புரிதலைத்தான் அவரது வாயால் இன்று தனக்குரிய புதியகட்சியாக பகிரங்கப்படுத்திய தமிழ் மக்கள் கூட்டணியின் முன்னோட்ட அறிவிப்பு வெளிப்படுத்தியது. ஆனால் விக்னேஸ்வரனின் இந்த அறிவிப்பு முழுஆச்சரியகரமான விடயமே அல்ல. மாறாக இது ஓரளவு எதிர்பார்கப்பட்;ட விடயம்தான். ஏனெனில் வட மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவுக்குவருவதால் ஏற்கனவே தன்னுடன் கடுமையான உரசலுக்கு உள்ளாகிவிட்ட தமிழ்தேசியக் க…
-
- 0 replies
- 398 views
-
-
வளைவுகள் வளையலாம் வளை வழுக்கலாமா? காரை துர்க்கா / 2019 மார்ச் 20 புதன்கிழமை, பி.ப. 05:02 Comments - 0 உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுமே எப்போதும் மகிழ்ச்சியை விரும்புகின்றார்கள். ஆனாலும் மகிழ்ச்சியிலேயே உயர்ந்த மகிழ்ச்சி மற்றவர்களை மகிழ்வித்து, அதனூடாகத் தானும் மகிழ்தல் ஆகும். இதற்காகவே மனிதர்கள் கடவுளின் குடியிருப்புக்கு (கோவில்) செல்கின்றார்கள். ஆனால், மறுவளமாகப் பார்க்கில், கடவுள் எல்லா உயிரிலும் குடிகொண்டிருக்கின்றார். இவ்வாறாக ஆன்மிகமே நம் பண்புகளை உயர்வு நோக்கிக் கொண்டு செல்கின்றது. உலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணத்தின் பிரகாரம், ஆரோக்கியம் என்பது உடல், உளம், சமூகம், ஆன்மீகம் ஆகிய நான்கு தளங்களில் உள்ள உயர்வான நிலை என விளக்கம் பகிர்கின்ற…
-
- 0 replies
- 561 views
-
-
கிழக்குத் தமிழ் மக்களுக்கு அநீதிகள் Editorial / 2019 ஏப்ரல் 04 வியாழக்கிழமை, பி.ப. 01:05 Comments - 0 -இலட்சுமணன் அரசியல் அநாதைகளாகவே வாழ்ந்து, காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள், அநீதி இழைக்கப்படும் சமூகமாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றார்கள். இது ஒன்றும் மூடி மறைக்கப்பட வேண்டிய விடயமல்ல. அநீதி இழைக்கப்படுகிறது என்று, தமிழர் தமக்குத் தாமே உணர்ந்துகொண்டு செயற்பட்டாலே தவிர, யாரும் ‘ஐயோ பாவம்’ என்று உதவவரப் போவதில்லை. இந்நிலைமை, தமிழர்கள் மத்தியில் அரசியல் சாணக்கியம் இன்மையால் ஏற்பட்டதாகும். அதிலும் இங்கு, அதிகளவில் பாதிக்கப்படுவது கிழக்குத் தமிழர்கள் ஆகும். இப்போதைய நிலையில், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் இலங்கைத் தமிழர் …
-
- 0 replies
- 259 views
-
-
பொறுப்புக்கூறலும் புலம்பெயர் அலப்பறைகளும் Editorial / 2019 மே 02 வியாழக்கிழமை, பி.ப. 06:38 Comments - 0 அரசியல் என்பது வெறும் வாய்ச்சவடால்களுடன் முடிந்து போவதல்ல; அரசியலின் அடிப்படைகள், மக்கள் பற்றிய அக்கறையும் அடிப்படை அறமும் ஆகும். ஆனால், இலங்கை அரசியலில் இவை இரண்டையும் காண்பதரிது. இவை இரண்டையும் தன்னகத்தே கொண்ட அரசியல்வாதிகள், நாடாளுமன்ற அரசியலில் நீண்டகாலம் தாக்குப்பிடிப்பதில்லை. ஒன்றில் அகற்றப்படுவார்கள். அல்லது, அதே சாக்கடையில் விழுந்து புரள்வார்கள். இவை இரண்டுக்கும் ஏராளமான உதாரணங்கள் உண்டு. நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு, அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். பொறுப்புக்கூறல், வெறுமனே சிலரைப் பதவியில் இருந்து அகற்றுவதுடன் மு…
-
- 0 replies
- 712 views
-
-
உண்மை காலில் செருப்பு போடுவதற்குள் பொய் ஒருமுறை உலகை சுற்றி வந்துவிடும் என்பார்கள் வதந்திகளைப் பற்றி. இப்படி மனதில் பீதியை கிளப்பும் இரண்டு செய்திகள் வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிவேகமாக பரவிக்கொண்டிருகிறது. சென்னையில் பெய்து வருவது வெறும் மழை அல்ல. NASA ரிப்போர்ட் படி இதோட பெயர் 'EL Nino' சுழற்சி புயல். கிட்டதட்ட 250 Cm வரைக்கும் இந்த மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சென்னையே மூழ்கிப்போக வாய்ப்பு உண்டு. google ல Search பண்ணி பாருங்க தெரியும். எப்படியாவது நம் சென்னை மக்களுக்கு தெரியப்படுத்துங்க... PLZ... அரசாங்கம் இத பொருட்டா எடுத்துக்கல” - இது முதல் வதந்தி. டிசம்பர் 16 முதல் 22 வரை சூரிய புயலால் நாம் சூரியனை பார்ப்பது கடினம்..…
-
- 0 replies
- 440 views
-
-
இனப்படுகொலைக்கு முன்னோடி ‘இந்திய அமைதிப்படை’யே (10) (சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு, பகுதி-10) “ஒரு முறை இந்தியப் படை, தளம் 14-ஐ முற்றுகையிட்டு பிரபாகரனை சுற்றி வளைத்தது. அப்பொழுது அவருடைய மெய்க்காப்பாளர்கள் பிரபாகரனுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் இடையே வலிமையான ஒரு சுவரைப் போல நின்றார்கள். இறுதியில் அந்த முகாமை இந்தியத் துருப்புகள் கைப்பற்றின. ஆனால் தளம் 14-ன் 17 மெய்க்காப்பாளர்கள் தங்கள் உயிரைத் துறந்து, பிரபாகரன் வன்னிக் காட்டிற்குள் தப்பிச் செல்ல போதுமான நேரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அதுவே இந்திய அமைதிப்படை ம…
-
- 0 replies
- 434 views
-
-
கார்டியன் தலையங்கம் : மோடியின் தவறுகள் – கட்டுப்படுத்த முடியாத ஒரு பெருந்தொற்று டிரம்பைப் போலவே, மோடியும் தொற்றுநோய் சீற்றமடைகையில் பிரச்சாரத்தை கைவிட மாட்டார். ஏப்ரல் மாதத்தில் ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு இந்தியா தயாரானபோது, முகத்திரை அணியாத மோடி மிகப் பெரிய பேரணிகளை நடத்தினார். April 26, 2021 அவமதிப்புக்குரிய அரசியல் இறுமாப்பு இந்த வாரம் இந்தியாவில் பெருந்தொற்று நிதர்சனத்தை சந்தித்தது. மார்ச் மாத தொடக்கத்தில், நரேந்திர மோடியின் இந்து தேசியவாத அரசாங்கம், இந்தியா கோவிட் -19ன் “முடிவில்” இருப்பதாகக் கூறியது. இந்தியா இப்போது ஒரு நரகமாக மாறியுள்ளது. ஒரு புதிய “இரட்டை ம்யூடண்ட்” வகை, பி.1.617, பேரழிவு தரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் வெளிப்பட்டுள்ளது. இந்…
-
- 0 replies
- 262 views
-
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 வது வருடம்: தொடரும் உளவியல் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்! பாலஸ்தீனம் எங்கும் மறுபடி யூத சியோனிச பாசிஸ்டுக்களின் கோரத் தாக்குதலால் பிணங்கள் குவிகின்றன. அந்த மண்ணின் மக்கள் வாழ்ந்த தேசத்தை ஆக்கிரமித்து, வெறுமனே வரலாற்றுக் கதைகளை முன்வைத்து, இது தான் எங்கள் தேசம் என்று கூச்சலிடும் யூதர்களின் இஸ்ரேல் இரத்தத்தால் கட்டியெழுப்பப்படுகிறது. வரலாற்றின் கற்பனைக் கதைகளே ஒரு தேசத்தின் மக்களைக் கொசுக்களைப் போலக் கொன்று குவிப்பதற்கு ஆதாரமாக அமையுமானால் செவ்விந்தியர்களின் இரத்த்ததால் உருவான அமெரிக்காவே முதலில் அழிக்கப்பட வேண்டியிருக்கும். தேசங்கள் தோன்றிய காலத்தின் பின்னர் ஒரு தேசம் இன்னொரு தேசத்தை ஒடுக்குவதும், பல தேசங்கள் ஒரு நாட்டின் எல…
-
- 0 replies
- 559 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் உலகத்தின் பார்வையில் பெரும் விஸ்வரூபமாக நின்று பின்னர் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு மிகத் தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முப்பது வருடங்களாக உயரிய தியாகம் செய்து பல சாதனைகளை நிலைநாட்டி கட்டி வளர்க்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்று திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றது. தற்போது ஒருபடி மேலே சென்று இந்தப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மழுங்கடித்து போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்ப்பட்டு வருகின்றன. இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய தேவை இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. தமிழரின் போராட்டம் வீணானது என்றும் ஒன்று…
-
- 0 replies
- 510 views
-
-
Every single Tamil should vow to take this as our personal challenge. We can DO IT UNITEDLY around the world as diaspora to liberate our Tamil nation. "Coming together is a beginning; keeping together is progress; working together is success" Sign the World-Wide Petition to bring Sri Lankan War Criminals in the government and military to justice in the International Criminal Court. Click on link: http://www.liberatetamils.net/english/index.html PENALIZE THE WAR CRIMINALS Organisations Documenting War Crimes: 1. NESHOR On the Ground Documentation. Contains accurate death toll of killed civilians of the ongoing Tamil Genocide…
-
- 0 replies
- 599 views
-
-
காலம் என்பது ஒரு செயலின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணி. அதிகளவு நீர் விட்டு உரம் போட்டு வளர்த்தாலும் பழுக்கும் பருவம் வந்த பிறகுதான் மரத்திலிருந்து பழம் பறிக்க முடியும். எனவே, ஒரு செயல் வெற்றி பெற மூன்று முக்கிய கூறுகளில் முழுக் கவனமுடன் இருத்தல் வேண்டும். 1.விடாமுயற்சி 2.வெற்றியைத் தீர்மானிக்கும் இடவலிமை 3.வெற்றி கனிந்து வரும் காலத்தை உணர்ந்து கொள்ளும் விழிப்புணர்வு இந்த மூன்று கூறுகளில் எந்தவொன்று தவறினாலும் வெற்றி வாய்ப்பு நழுவி விடும். இந்த மூன்றிலும் கவனமாக இருப்பவன் உலகையே வெல்ல முடியும். மனவலிமையும் படைவலிமையும் இடவலிமையும் பெற்றிருந்தும், காலத்தின் வலிமையைக் கருத்தில் கொள்ளாத ஒரே காரணத்தால் நெப்போலியனும் கிட்லரும் உலகை வெல்லும…
-
- 0 replies
- 941 views
-
-
கௌதாரிமுனை காப்பாற்றப்படுமா? மு.தமிழ்ச்செல்வன்…. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமமே கௌதாரிமுனை, மண்ணித்தலை, கௌதாரிமுனை,விநாசியோடை,கல்முனை போன்ற சிறிய பிரதேசங்கள் இதற்குள் அடங்குகின்றன.115 குடும்பங்களை சேர்ந்த சுமார் 386 பேர் வாழ்கின்றனர் என மாவட்டச்செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கௌதாரிமுனையின் அழகு அல்லது சிறப்பு என்பது ஒன்று அதன் தொன்மை, இரண்டாவது இயற்கை அழகு, குறிப்பாக கௌதாரிமுனையில் காணப்படுகின்ற பளிச் என்ற வெள்ளை மணல் மேடுகள் ஆங்காங்கே வெண்ணிற ஆடைகளில் காட்சிதரும் தேவதைகள் போன்றுள்ளன. அத்தோடு அங்கே காணப்படுகின்ற கண்டல் தாவரங்களும், பனைகளும் கௌதாரிமுனையின் அழக்கினை ம…
-
- 0 replies
- 679 views
-
-
மகிந்த ஒரு கொலையாளியா? இன்றைய கொழும்பு சண்டே லீடர் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில், மீள வர விரும்பும் மகிந்தவின் அரசியல் பயணம் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. 1985 ம் ஆண்டில் முல்கிரிகல இடைதேர்தல் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாக, இன்னுமொருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பில் கைதாகி 3 மாதம் விளக்க மறியல் கைதியாக களி தின்று இருக்கின்றார், மகிந்த. பின்னர் வழக்கமான பிறள் சாட்சிகள் காரணமாக வெளியே வந்தார். இருந்தும் அண்மையில் கூட ஜனாதிபதி மைத்திரி, அந்த கொலைக்கு காரணம் மகிந்த தான் என வெளிப்படையாக கூறினார். அந்த பகுதியில் தானும் தேர்தல் கடமையில் இருந்ததால் இதனை அறிந்து இருந்ததாக கூறினார் . இதே மகிந்த தான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்தவின் படுகொ…
-
- 0 replies
- 386 views
-
-
இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. BBC இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், கள நிலவரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் பத்தாயிரம் தடவைகளுக்கும் மேலாக மீறியிருப்பதாக அவர் குற்றம் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
மூன்று வருடமாக ஒழுங்கு அமைக்கப்பட்ட வழித்தடங்களில் பிரெஞ்சு மக்களிடமும் பிரெஞ்சு அரசிடமும் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டபடி சென்றது. செம்மணிப் புதைகுழியும் இராணுவ அட்டகாசங்களும் மகிந்தவினதும் இனவாத பௌத்த பிக்குகளின் கோர முகங்களை வெளிப்படுத்தியபடியும் கலைஞர்களின் நடிப்புடன் ஊர்திகள் முன் செல்ல மக்கள் பேரணியாகத் தொடர்ந்து சென்றனர். முள்ளிவாய்க்கால் முடிவல்ல! முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தமிழர் போராட்டத்தை உலகமயப்படுத்தி புலம்பெயர் மக்களின் கையில் கொண்டு வந்து விட்டிருக்கிறது, போராட்டத்தை தம் கையில் எடுத்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை, உலகத்திற்கு நினைவுபடுத்துவது போல் இன்று பிரான்ஸ், பாரிஸ் நகரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப…
-
- 0 replies
- 647 views
-
-
சிறீலங்காவில் 2009 ஆண்டுக்கு முன்னர் எந்தொரு மூலைமுடுக்கிலும், யாரோ செய்யும் கொலைகளை இலகுவாக விடுதலைப் புலிகள்தான் செய்துள்ளார்கள் அக்கொலைக்கு அவர்களே பொறுப்பென தொடர்ந்து குற்றஞ்சாட்டிய சிங்கள அரசாங்கங்கள், இன்று வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிங்களப் படைகள் குவிக்கப்பட்டு முழுப் பாதுகாப்பையும் தனது கையில் வைத்துள்ள நிலையில், தமிழர்கள் பால்வேறுபாடின்றி மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்யப்படுகின்றார்கள். முற்றுமுழுதாக சிறீலங்கா படைகளின் கண்காணிப்பிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் கொலைகள் சாதாரண முறையில் இடம்பெறுகிறன. படைகள் மற்றும் படைத்துணைக்குழுக்கள் ஆகியவற்றைத் தவிர வேறெந்தத் தரப்பினரிடமும் ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லாத நிலையில், ஆய…
-
- 0 replies
- 504 views
-
-
மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு – டொனமூர் யாப்பு முதல் உத்தேச யாப்பு வரை என்ற நூல் பற்றிய ஆய்வரங்கம் கடந்த 01.10.2016 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் க.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ் நிகழ்த்திய ஆய்வுரை பின்வருமாறு, இலங்கையில் புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் குறித்தும் இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான தீர்வு காணப்படும் என்ற முழக்கங்கள் இலங்கை அரசியலில் பெரிதாக சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வேளையில் இலங்கையில் புதிய அரசியல் யாப்புக் குறித்து குறிப்பாக, மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய நூல் குறித்த ஆய்வரங்கில் ஒன்றுகூடியுள்ளோம். நண்பர் மு. திருந…
-
- 0 replies
- 210 views
-