Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தண்டனைக் காலத்தை விட பல வருடங்கள் கூடுதலாக சிறையில் வாடிய தமிழ்க் கைதிகள் November 11, 2022 — ஸ்பார்ட்டகஸ் — அண்மையில் தீபாவளி தினத்தன்று எட்டு தமிழ்க் கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுதலை செய்த பிறகு ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றை வெளியிட்டது. எட்டு கைதிகளில் மூவர் 1999 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கொழும்பு நகர மண்டப மைதானத்தில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் என்றும் அவர்களில் நால்வர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையையும் விட கூடுதலான காலம் சிற…

  2. ஒரு நினைவு நூல் வெளியீடும் அதன் அரசியலும்! Posted on November 9, 2022 by தென்னவள் 17 0 யாழ்ப்பாணம் – வலம்புரி நட்சத்திர விடுதியில் கடந்த 5ஆம் திகதி ஒரு நிகழ்வு இடம்பெற்றது. அது ஒரு நினைவு கூர்தலாகவும் இருந்தது. அதேசமயம் அதில் ஓர் அரசியலும் இருந்தது. கடந்த ஆண்டு கொழும்பில் உயர்நீத்த கௌரி தவராசாவை நினைவு கூர்ந்து அவருடைய நினைவு நூலை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு அது. கௌரி தவராசா நாடறிந்த ஒரு வழக்கறிஞர். அவரும் அவருடைய கணவனும் ஒன்றாகச் சேர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அகப்பட்டவர்கள் பலரை விடுவித்திருக்கிறார்கள். தமிழ் சட்டத்துறைப் பரப்பில் குறிப்பாக தலைநகரில் துருத்திக் கொண்டு மேலெழுந்த ஒரு பெண் ஆளுமையா…

    • 0 replies
    • 702 views
  3. அடையாள அழிப்பு: சிறு தெய்வ வழிபாட்டை அழிக்கும் ஐயர்கள் November 3, 2022 — கருணாகரன் — ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடைய தெருவில் இருந்த முத்துமாரி, ஒரே நாளில் ராஜராஜேஸ்வரியாகிவிட்டார். ராஜராஜேஸ்வரியாகியதோடு சினிமாவில் நடப்பதைப்போல எல்லாமே மாறிவிட்டன. புனருத்தாரணம் அமர்க்களமாகியது. இருப்பிட வசதி கூடியது. பொங்கலும் படையலும் பொலியத் தொடங்கின. காலை, மதியம், மாலையும் என முக்காலப் பூசையும் பாராயணமும் நடக்கிறது. ஆட்கள் கூடுகிறார்கள். ஆடலும் பாடலுமென ஒரே கொண்டாட்டமாகியது சூழல். போதாக்குறைக்கு அந்த நாள், இந்த நாள் என்று விசேட பூசைகளும் ஆராதனைகளும். முத்துமாரியாக இருந்தபோது, ஐம்பது ஆண்டுகளாக ஒரு சின்னஞ்சிறிய கொட்டகையில்தான் இருக்க வேண்டியிருந்…

    • 12 replies
    • 1.2k views
  4. இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் 18 பேரடங்கிய புலம்பெயர் கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழு நாட்டிற்கு வருகை By T. SARANYA 05 NOV, 2022 | 10:10 AM (நா.தனுஜா) மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் மீட்சிக்கு உதவும் வகையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளல், சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்களுக்கு அவசியமான ஆலோசனைகளை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் புலம்பெயர் கனேடியத்தமிழர்கள் உள்ளடங்கலாக கனடாவில் முன்னணியில் திகழும் 18 வர்த்தகப்பிரமுகர்கள் அடங்கிய குழு நாட்டை வந்தடைந்துள்ளது. சுமார் ஒருவாரகாலம் நாட்டில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த…

  5. ஆசிரியைகள் கலாச்சாரக் காவிகள்? நிலாந்தன். கடந்த ஏப்ரல் மாதம் அரசாங்கம் வெளியிட்ட 05/2022ஆம் இலக்க சுற்றுநிருபத்தின்படி அரச ஊழியர்கள் தமக்கு இலகுவான ஆடைகளை அணியலாம் என்று கூறப்பட்டிருந்தது.அதை மேற்கோள் காட்டி இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவராகிய ஸ்டாலின் கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதில் அவர் ஆசிரியர்களும் குறிப்பாக ஆசிரியைகளும் தமக்கு இலகுவான ஆடைகளை அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார்.ஆனால் மகா சங்கத்தைச் சேர்ந்த பிக்குமார் ஒரு தொகுதியினர் அதற்கு எதிர்ப்பு காட்டியதினையடுத்து கல்வி அமைச்சு அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. ஏனைய அரசு ஊழியர்களைப் போலன்றி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரிகள்…

  6. இன்னொரு குழப்பமா ? By DIGITAL DESK 5 06 NOV, 2022 | 04:44 PM கபில் “சம்பந்தனுக்குப் பின்னர் தலைமைத்துவத்தை யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தாலும், இப்போது அது உச்சம் பெற்றிருக்கிறது” “சுமந்திரனுக்கு எதிராக சிறிதரன் ஏன், பகிரங்கமாக போரைத் தொடங்கியிருக்கிறார்? அதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா எதற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, ஊடகச் சந்திப்பை நடத்தியிருக்கிறார்? 22ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்பட்ட முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்படும் ஜனநாய…

  7. எமது அரசியலோடு தொடர்புடைய உரையாடல் என்ற வகையிலே இணைத்துள்ளேன். நன்றி. நன்றி - யூரூப்

  8. மாதுளம்பழ தோட்டம். இந்த தோட்டம் இருக்குமிடம் எமது யாழ் உறவு ஒருவரின் வீட்டு கோடிக்குள். பராமரிப்பாளர் மிகவும் திறந்த மனதுடன் பேட்டியளிக்கிறார்.

  9. உயர் பாதுகாப்பு வலயம்: தெற்கில் உரிமை மீறல்! வடக்குக் கிழக்கில் உரிமையாக்கல்? November 3, 2022 — கருணாகரன் — உயர் பாதுகாப்பு வலயங்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் செய்யப்பட்ட பிரகடனத்தை ஒரு மாதத்தில் அவரே நீக்க வேண்டியேற்பட்டது. அதனால் அந்தப் பிரகடனம் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அழுத்தம் தென்பகுதியில் எழுந்ததே காரணமாகும். இதைச் செய்தவர்கள் சிங்கள உயர் குழாத்தினர். சட்டம் மற்றும் அறிவியல் துறைகளில் இருந்தோர். இவ்வாறே “அரகலய” போராட்டத்தில் இணைந்திருந்தோரின் கைதுகளுக்கு எதிரான குரலும் கண்டனமும் தென்னிலங்கையில் பலமாக எழுந்துள்ளது. இதன் காரணமாகவே சிறைப்பிடிக்கப்பட்ட அரகலயவினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்; விடுவிக்கப்படுகின்றனர்…

  10. திருமலையின் எழுச்சியில் தொடரும் இந்திய பங்களிப்பு இலங்கைக்கு கிடைத்த இயற்கைக் கொடைகளில் திருகோணமலை துறைமுகமும் ஒன்றாகும். இது இலங்கையின் மிகப் பெரிய சொத்தாக உள்ளது. இவ்வாறான நிலையில் திருகோணமலையையும், திருகோணமலைத் துறைமுகத்தினையும் அபிவிருத்தி செய்யும்போது இந்தியாவை புறக்கணித்து விட்டு அபிவிருத்தி செய்ய முடியாது. இந்தியாவுடன் இணைந்தே திருகோணமலை துறைமுகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திருகோணமலையின் அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படும் என அண்மையில் திருகோணமலைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையாது, சுதந்தித்தின் பின்னரான வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தற்போது காணப்படுகின்…

  11. போதை ஏற்றும் வலிநீக்கி மாத்திரைகள் குறித்த எச்சரிக்கை: வவுனியாவை உலுக்கும் ‘டீல்’கள் க. அகரன் அண்மைக்காலத்தில், இலங்கையின் வடபுலத்தில் போதைபொருட்கள் விற்பனைக்கும் நுகர்வுக்கும் எவர் துணை நின்றார்களோ, அவர்களே வெள்ளை உள்ளத்தவர்கள் போன்று இன்று சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு, போதைப்பாவனையைக் கட்டுப்படுத்தபோவதாகத் தெரிவிக்கும் நாடகங்களும் அரங்கேறுகின்றன. ஆய்வுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து, போதை வியாபாரம் நடைபெற்று வருவதாகவும் இது, எதிர்கால சந்ததியின் தனித்துவத்துக்கும் ஆளுமைக்கும் விடுக்கப்படும் சவால் எனவும் எச்சரிக்கப்படும் நிலையிலேயே, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா போன்ற பகுதிகளில் ‘உயிர்கொல்லி போதை மருந்து விற்பனை’ என்ற தலைப்பில்…

  12. அந்த சம்பவம் என்னை பாதித்தது : அன்றிரவே விலக தீர்மானித்தேன் - செவ்வியில் டலஸ் தெரிவிப்பு By DIGITAL DESK 5 30 OCT, 2022 | 04:01 PM நேர்கண்டவர் – ரொபட் அன்டனி ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்புக்கு முன்னர் 19ஆம் திகதி இரவு 11:30 சம்பந்தன் கூறிய விடயம் மிகவும் முக்கியமானது 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களினால் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன சந்திரிகாவின் காலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 8 மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன. நான் ஒன்றைக் கூட பெறவில்லை. பாராளுமன்றத்தில் அதனை பெறாத ஒரே எம்.பி. நான் தான். …

  13. ரிஷி சுனக்கின் உண்மையான பின்னணி என்ன? - சாவித்திரி கண்ணன் என்ன முட்டாள்தனம்? இங்கிலாந்தின் முதல் இந்தியா வம்சாவளிப் பிரதமராம்! இந்தியாவின் மருமகனாம்! இந்திய பாராம்பரியத்தில் வந்தவர் இங்கிலந்து பிரதமராகிவிட்டாராம்! இங்கிலாந்தில் சிறுபான்மையின இந்து ஒருவரை பிரதமராக்கி விட்டார்களாம்! எப்படியெப்படி எல்லாம் தப்பிதமான புரிதல்கள்! இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ளார்! அரசியல் தலைவர்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு அவரது தேர்வு குறித்து தங்கள் பார்வைகளை, விமர்சனங்களை வைக்கின்றனர். ‘இந்தியாவின் மருகன் பிரிட்டன் பிரதமரானார்’, ‘பிரிட்டனின் முதல் இந்து பிரதமர்’, ‘இந்திய வம்சாவளியில் வந்த முதல் பிரிட்டன் பிரதமர்’, ‘…

  14. இலங்கையின் கடன்மறுசீரமைப்பு சீனாவின் மௌனத்தால் தாமதம்? இலங்கை அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் மற்றும் ஊழல் மோசடிகள் காரணமாக ஒட்டுமொத்த நாடும் மீட்டெழமுடியாத வகையில் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது. குறிப்பாக, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு வெறுமையாகிவிட்ட நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதமாகின்றபோது 70.2 சதவீதத்தினைத் தொட்டு விட்டது. இதனால் உள்நாட்டில், அத்தியாவசியப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்துவகைப் பொருட்களின் விலைகளும் உச்சத்தினைத் தொட்டுள்ளன. இதனால் நாட்டில் 70 சதவீதமானவர்கள் உணவு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். அதிகமானவர்கள் இருவேளை உணவையே உட்கொள்வதாகவும், கர்ப்பிணித்தாய்மார்கள், பெண்கள், சிறுவர்கள் போசாக்கி…

  15. புதிய வரி எவ்வாறு அறவிடப்படும் ? - விளக்குகிறார் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேஷமூர்த்தி By DIGITAL DESK 5 24 OCT, 2022 | 11:58 AM புதிய வரி அறவிடல் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்துகிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி ஒரு இலட்சம் ரூபா மாதாந்த வருமானம் அல்லது சம்பளமாக பெற்றால் வரி அறவிடப்படமாட்டாது. ஆனால் ஒரு இலட்சத்து 41 ஆயிரம் ரூபா பெற்றால் 2500 ரூபாஅறவிடப்படும். அது படிப்படியாக அதிகரிக்கும். மாதம் 5 இலட்சம் ரூபாவை சம்பளமாக அல்லது வருமான பெற்றால் அவர் ஒரு இலட்சத்து 4 ரூபாவை வரியாக செலுத்தவேண்டும் நேர்கண்டவர் – ரொபட் அன்டனி …

  16. அழிக்கப்படும் கடல் வளங்கள். கண்டு கொள்ளாத, தமிழ்க்கட்சிகள்!

  17. வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் தமிழர்களுக்கு பக்கபலமாக இருக்கும் - அங்குரார்ப்பண நிகழ்வில் தெரிவிப்பு By VISHNU 19 OCT, 2022 | 12:17 PM வடக்கு - கிழக்கில் இன்று நடைபெறும் நினைவேந்தல்களில் நாங்கள் அரசியலை காண்கின்றோம். தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து விடயங்களுக்கு எதிராகவும் இனிமேல் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் பலமாக இருக்கும் என வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் இராசரெத்தினம் தர்சன் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்னும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குர…

  18. புதுடெல்லியில் ஈழத் தமிழர் மாநாடு - இலங்கை அரசுக்கு கடுமையான செய்தி Sri Lankan TamilsSri LankaDelhiIndia Vanan in கட்டுரை Courtesy: தி.திபாகரன், M.A. 35 வருடங்களுக்குப் பின்னர் புதுடெல்லியில் ஈழத்தமிழர் விவகாரம் பற்றி 10 ஒக்டோபர் 2022 அன்று இந்திய அரசுசார் முக்கியஸ்தர்களுடனான ஈழத்தமிழர் சந்திப்பும், நட்புறவு பேச்சுக்களும் முதற்கடவையாக இடம்பெற்றிருக்கிறது. இது இன்றைய நாளில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. 1987 ஒக்டோபர் 10 இந்திய - இலங்கை ஒப்பந்தம் முறிவும், இந்திய அமைதிப் படையுடன் விடுதலைப் புலிகள் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட 35 ஆவது ஆண்டு நிறைவு நாளில் இருதரப்பும் கைகுலுக்கி புதிய நட்புறவு ஒன்றை வளர்க்க முற்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களின் அரசிய…

  19. இந்தியாவிற்கான எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இலங்கைக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் - மிலிந்த மொராகொட By RAJEEBAN 17 OCT, 2022 | 03:09 PM - இலங்கை பல மதங்கள் சமூகங்களை கொண்ட குழப்பமான நாடு 13 வது திருத்தமும் அந்த வகைக்குள் வருகின்றது நாங்கள் ஒரு புதிய உருவாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். - இந்தியாவிற்கான எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இலங்கைக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு தெரிவித்துள்ளார். இரு தரப்பு உடன்படிக்கை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் …

  20. ‘பொருளாதார நெருக்கடி: ஒரு நல்ல வாய்ப்பு’ -வண யோசுவா October 17, 2022 — கருணாகரன் — (வண சிவஞானம் யோசுவா, நல்லதொரு நடைமுறைச் சிந்தனையாளர். “எந்தத் தீமைக்குள்ளும் பல நன்மையுண்டு” என்ற நம்பிக்கையோடு எத்தகைய நெருக்கடிச் சூழலிலும் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருப்பவர். “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது நாட்டுக்கும் மக்களுக்கும் மிக நல்லதொரு வாய்ப்பாகும். இந்தச் சூழலை நாம் சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தினால் மிகப் பெரிய வளர்ச்சியையும் மாற்றத்தையும் உருவாக்க முடியும். நெருக்கடிகளே மனித குலத்தை ஊக்குவித்து வளர்ச்சிப் பாதையில் முன்னகர்த்தியுள்ளன. இதுதான் உலக வரலாறு” என்று சொல்லும் யோசுவா நல்லதொரு விவசாயி. நாடக நடி…

  21. ரஷ்ய - உக்ரேன் யுத்தம் பயணிக்கும் திசை எது? By Digital Desk 5 16 Oct, 2022 | 06:40 PM சதீஷ் கிருஷ்ணபிள்ளை ஓர் யுத்தம் யார் சரியென்பதை அல்லாமல், எவர் எஞ்சியிருக்கப் போகிறார்கள் என்பதையே தீர்மானிக்கும் என்பார், பேர்ட்ரன்ட் ரஸல். உக்ரேனின் மீது ரஷ்யா தொடுத்த யுத்தத்திலும் அப்படித்தான். உக்ரேனைப் பயன்படுத்தி ரஷ்யாவை பழிவாங்க நினைத்த நேட்டோ நாடுகள் சரியா? ஐரோப்பிய ஒன்றியத்தை கிழக்கு நோக்கி விஸ்தரித்து, உக்ரேனிய மண்ணுக்குள் ரஷ்யாவைத் தாக்கக்கூடிய ஆயுதங்களை நிலைநாட்ட நினைத்த அமெரிக்கா சரியா? மேற்குலகை நம்பிக் கொண்டு ரஷ்யாவிற்கு சவால் விடுத்த உக்ரேன்…

  22. இலங்கை அரசியல்: உள்ளுராட்சி உறுப்பினர் எண்ணிக்கையை பாதியாக்கும் ரணில் முடிவுக்கு என்ன காரணம்? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் 341 உள்ளுராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் மொத்தமாக 8,690 உறுப்பினர்கள் உள்ளனர். 2018ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் மூலமாகவே, இவ்வாறு அதிக தொகையிலான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்…

  23. எரிக் சொல்ஹெய்ம் இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் வந்தார்? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2002, ஜனவரி 10ஆம் தேதி இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருந்தபோது அவரை தமது நாட்டுக் குழுவுடன் சந்தித்த எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான நார்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை தற்போது அநேகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைவதற்கு முன்னர், எரிக் சொல்ஹெய்ம் அடிக்கடி இலங்கைக்கான விஜயத்தை மேற…

  24. பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து புதிய பாலியல் தொழிலாளர்களின் வருகையும் பால்வினை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.- சுகாதார அதிகாரிகள் By RAJEEBAN 14 OCT, 2022 | 03:58 PM பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அனுபவமற்ற பாலியல் தொழிலாளர்களின் வருகை காரணமாக இலங்கையில் பால்வினை நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் பலருடன் பாலியல் உறவில் ஈடுபடுபவர்களே பால்வினை நோய்கள் அதிகரிப்பதற்கு காரணம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2022இன் முதல் காலாண்டு பகுதியில் 4556 எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டனர் இது 2021 இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.