Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியாவை இலக்கு வைத்து இலங்கையில் கால் பதிக்கிறதா சீனா? தமிழர்களைப் பதறவைக்கும் சீன ஆக்கிரமிப்பு தீபச்செல்வன் ஈழத் தீவு முழுவதும் ஈழத் தமிழர்கள் பரந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு ஈழத்தின் நாற்புறமும் உள்ள சிவாலயங்கள் சாட்சியாக இருக்கின்றன. ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்கள் எனப்படும் இந்தக் கோயில்கள் பல்லவர் காலத்தில் நாயன்மார்களால் பாடல் பெற்றவை. அவற்றின் வரலாறு கிறிஸ்துவுக்கு முந்தைய தொன்மைக்கும் முந்தையவை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த ராவணன் என்ற தமிழ் மன்னன், சிவபக்தனாக இருந்திருப்பதும் தொன்மையின் ஆதாரமாகும். இப்படிப்பட்ட தொன்மையைக் கொண்ட ஈழத் தமிழ் மக்கள் இன்றைக்கு தாம் எஞ்சியுள்ள வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் வாழ்வுரிமையை, ஆட்சியுரிமையைக்…

  2. புதிய அரசியல் ஒழுங்கின் தேவை June 17, 2022 — கருணாகரன் — நாட்டில் இரண்டு விடயங்கள் தொடர்பான உரையாடல்கள் தீவிரமாக நடக்கின்றன. ஒன்று மக்கள் தரப்பில் நிகழ்வது. இது முற்று முழுதாகவே பொருளாதார நெருக்கடிகளைச் சார்ந்தது. அதாவது வாழ்க்கைப் பிரச்சினையைப் பற்றியது. உயிர்வாழ்தலைப் பற்றியது. மற்றது அரசியல் தரப்பில் நிகழ்வது. இது அரசியலமைப்புத் திருத்தம் (21 ஆவது திருத்தம்) மற்றும் எந்தப் புதிதும் இல்லாத, பயன் குறைந்த – வழமையான – எதிரெதிர் மனப்பாங்குடன் விவாதங்களை நடத்துவது, சலிப்பூட்டும் வகையில் வக்கிரம் நிறைந்த ஆளை ஆள் குற்றம் சாட்டுதல் எனத் தொடர்வது. மக்கள் தினமும் – ஒவ்வொரு நொடியிலும் – பலவகையான நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களு…

  3. தமிழர்கள் தம் தேசத்தைக் காக்க விடுதலை வேட்கை தீயை அணையாமல் பாதுகாப்பது அவசியம் – மட்டு.நகரான் 48 Views வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழ் தேசியம் சார்ந்த கோசங்கள் என்பது எழுந்தமானமாகவோ அல்லது தமிழர் தாயகப் பரப்பில் அரசியல்செய்து புழைப்பு நடாத்துவதற்காக எழுந்த ஒன்று அல்ல. அது தமிழர் தாயகப் பகுதியில் பெரும்பான்மைய சிங்கள பௌத்த மேலாதிக்கம் கொண்டவர்களினால் தமிழர்கள் அடக்கி ஒடுக்க முற்பட்டபோது எழுந்த தீச்சுவாலையாகும். இந்த தீச்சுவாலையானது காலத்திற்கு காலம் மாறுபட்ட சுடராக இருக்கின்றபோதிலும், சுவாலையின் கனதியென்பது குறையாத நிலையிலேயே இருந்து வருகின்றது. அதற்கு சிங்கள பேரினவாதத்தின் தொடர்ச்ச…

  4. படத்தின் காப்புரிமை AFP Contributor இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளியோடு சமூக வலைதளத்தில் நட்பில் இருந்ததாகவும், ஐஎஸ் பயங்கரவாத கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்புவதாகவும் சில நபர்களின் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களின் மீதான விசாரணைகளும், சோதனைகளும் கோவையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்றது. புதன்கிழமை (12.06.2019) அன்று அதிகாலை உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் சில வீடுகளின் முன்பு திடீரென்று காவல்துறையினர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர். பிபிசி செய்தியாளர் களத்திற்கு சென்றபோது, கொச்சினில் இருந்து வந்துள்ள தேசிய புலனாய்வுத் துறையின…

  5. கிழக்கின் எழுச்சி: கரிக்க தொடங்கும் தூசு முகம்மது தம்பி மரைக்கார் 'கிழக்கின் எழுச்சி' என்கிறதொரு விடயம் கொஞ்ச நாட்களாக ஊடகங்களில் ஒரு காய்ச்சல் போல் பரவி வருகிறது. 'முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை கிழக்கிலுள்ள ஒருவர் வகிக்க வேண்டும்' என்கிற கோசத்தினை பிரதானப்படுத்தி, கிழக்கின் எழுச்சியாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனாலும், கிழக்கின் எழுச்சி பற்றி, தாம் அலட்டிக் கொள்ளவேயில்லை என்று முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் சிலர் கூறுகின்றனர். இன்னொருபுறம், அலட்டிக் கொள்ளாத அந்த விடயம் குறித்து, அடிக்கடி அவர்கள் பேசிக்கொள்வது முரண்நகையாக உள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் என்கிற அரசியல் கட்சியோடு ஒப்பிடுகையில் கிழக்கின் எழுச்ச…

  6. ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு அமீர் அலி உரிய காலத்துக்கு முன்கூட்டியே பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயல் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் தவறும்பட்சத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுமேயானால், இலங்கை வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது அவர்கள் முன்னால் ஒரேயொரு கேள்வியே இருக்கும். ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா? சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வரலாற்றிலே வேறு எந்தவொரு பொதுத்தேர்தலுமே இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது நெருக்கடியான தெரிவை மக்கள் முன்னிலையில் வைத்ததாகக் கூறுவதற்கில்லை.நாகரிக உலகில் ஒரு ஜனநாயக நாடு என்ற இலங்கையின் பெயரும் பொருளாதார சுபிட்சத்துட…

  7. குண்டு வைத்தாரா கோட்டா? புலிகளுக்கு எதிரான அரச படைகளின் போரில், அப்படைகள் வெற்றி பெறுவதில் முதன்மையானோர் இருவர் தான், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது பீல்ட் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டுள்ள சரத் பொன்சேகாவும். அவர்களிடையே, போர்க் காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகக் கீழ்த்தரமானதொரு சொற்போரொன்று, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்புக்குப் பதிலாக, பொலிஸ் அதிரடிப் படைப் பாதுகாப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக, மஹிந்தவின் ஆதரவாளர்கள், அண்மையில், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, அதற்குப் பதிலளிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன…

  8. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் ராணுவத் தளபதியுமான ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு கடந்த வாரம் தேச துரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டது அந்த நாட்டின் ராணுவம் மற்றும் நீதித்துறை இடையே மோதலை உருவாக்கியுள்ளது. அரசின் நிர்வாகத்தில் ராணுவத்தின் தலையீடு அதிகம் இருப்பதாக ராணுவம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த அந்த நாட்டில் நீண்ட காலமாக குற்றச்சாட்டு நிலவுகிறது. 2007ல் அரசமைப்பை மீறி அவசர நிலையை பிரகடனப்படுத்தி தேச துரோகம் செய்ததாக அவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பாகிஸ்தான் அரசியலமைப்பின் பிரிவு 6ன்படி நாட்டின் அரசியலமைப்பு அமலாவதை தடுக்கும் வகையில் செயல்படவோ, தற்காலிகமாக நீக்கவோ அல்லது நிறுத்திவைக்கவோ முற்பட்டால் அவர்கள…

    • 0 replies
    • 296 views
  9. இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல: நிலாந்தன்:- 08 மே 2016 மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக நினைவு நாளை அனுஷ;டித்தன. ஆனால் அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமையவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை காவல்துறை தடை செய்தது. அது பற்றி ஏனைய கட்சிகள் வாயைத் திறக்கவில்லை. இம்முறையும் அரசாங்கம் கடந்த ஆண்டைப் போலவே நிலைமைகளைக் கையாளும் என்று கருத இடமுண்டு. அண்மைக் காலங்களாக இடம்பெற்ற…

  10. கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அவலநிலை – மட்டு.நகரான் January 18, 2022 உறவுகளின் அவலநிலை: கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலைமைகள் குறித்து இலக்கு தொடர்ச்சியாக எழுதி வருகின்றது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், பல்வேறுபட்ட காரணிகளால் தமிழர்களின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. இதற்கான காரணிகளாக நாங்கள் பலவற்றினைக் கூறினாலும், இந்த நாட்டில் நடந்த யுத்தம் மற்றும் இனங்களுக்கிடையிலான தொடர்ச்சியான முறுகல் நிலைகள்தான் கிழக்கில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. யுத்தமானது வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் வாழ்வியலில் தாக்கத்தினைச் செலுத்தினாலும், கிழக்கில் யுத்தத்திற்கும் மேலதிகமாக தமிழர்கள் மீது மாற்று இனங்களைக் கொண்டு கட்…

  11. மாகாணசபை தேர்தல் தமிழர் ஒருங்கிணைவு அவசியம்

  12. நிக்சன் வழமை போன்று சகலரையும் சாடி நிற்கிறார். இலங்கை காலம் காலமாக இந்தியாவை ஏமாற்றுவது இந்தியா சிங்களவருடன் பேசும் போது தயவாகவும் தமிழருடன் பேசும் போது வெருட்டலுடனும் பேசுவதை போட்டுடைக்கிறார்.

  13. மணிப்பூர் வன்முறையும், மக்களாட்சி விழுமியங்களும் Jul 31, 2023 07:00AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை மணிப்பூரில் இரண்டு மாதங்களில் ஓர் உள்நாட்டுப்போரே நடந்தாற்போல சூழ்நிலை உருவாகிவிட்டது. முதலில் பொதுவாக வடகிழக்கு மாநிலங்களுடன் கணிசமான உறவு எதுவும் இல்லாத மைய இந்திய மாநிலங்கள் சாதாரணமாக கலவரச் செய்திகளை உச்சுக்கொட்டி கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை காட்சிகளடங்கிய சில காணொலிகள் பரவியதில் இந்திய சமூகம் பெருமளவில் அதிர்ச்சியுற்றது. இந்தக் காணொலிகளெல்லாம் சமூக ஊடகங்களில் பரவுவதால் நேரடியாக மக்களிடம் போய் சேர்ந்தன. அது பரவலாக மக்களிடையே அறச்சீற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தின. ஏன் மணிப்பூர் அரசும், ஒன்றி…

  14. திருத்தப்பட்ட தீர்மானத்தில் உள்ள மாற்றங்கள் என்ன? A participants during the Human Rights Day Event. 59 Views பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தின் இறுதி வரைபு இன்று (5) வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அவர்களின் பரிந்துரைகளில் எவையும் சேர்க்கப்படவில்லை என்பதுடன், தமிழ் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் சிறீலங்கா அரசு ஈடுபட்டது என்பதையும் பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் இணைந்து மறைத்துள்ளன. எனினும் சில திருத்தங்கள் தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் புதிதாக சேர்க்கப்பட்ட விடயங்கள் வருமாறு: …

  15. காலம் கனிந்துள்ளது; கதவுகள் திறந்துள்ளன காரை துர்க்கா / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:05 அனைத்துத் தரப்பினராலும், ஆவலோடு எதிர்பார்த்த நாட்டின் ஐனாதிபதித் தேர்தல் நிறைவு பெற்று உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களைப் போல் அல்லாது, மிகக் குறைந்த அளவிலான முறைப்பாடுகளோடும் வன்முறைகளோடும், அமைதியாகத் தேர்தல் முற்றுப் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளின் பிரகாரம், மீண்டும் ஒருமுறை இலங்கை நாடு, இனத்தாலும் அதனால் ஏற்படுத்தப்பட்ட பயத்தாலும் இரண்டாகப் பிளவுபட்டு போய்க் கிடக்கின்றது என்ற செய்தியும் தெளிவாக உலகத்துக்கு உரைக்கப்பட்டு உள்ளது. வளங்கள் நிறைந்த அழகிய நம்நாடு, ஆண்டாண்டு காலமாக, இனவாதத்துக்குள் ஆழமாகச் சிக்குண்டு, அதிலிருந்து மீள மு…

  16. இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! May 23, 2022 – பாகம் 1 கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, ‘நவ நாஜிக்களை ஒழிப்பதற்கான சிறப்பு இராணுவ நடவடிக்கை’ என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது இரஷ்யா. இரண்டு மாதங்கள் ஆகின்றன, போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது, இரஷ்யாவிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிடுவது-நெருக்கடி கொடுப்பது, இரஷ்யாவிற்கு எதிரான நாடுகளை ஒன்றிணைக்க முயற்சிப்பது உள்ளிட்ட பல வழிமுறைகளின் மூலம் உக்ரைனுக்கு வெளியிலிருந்து இப்போரை அமெரிக்காவே நடத்திக் கொண்டிருக்கிறது. இரஷ்யாவும் சரி, உக்ரைன் மற்றும்…

  17. சோபாவும் சுயாதிபத்தியமும் : அமெரிக்க - இலங்கை உடன்படிக்கைகள் குறித்த விசனங்கள் ஏன்? (பி.கே.பாலசந்திரன்) அமெரிக்காவுடன் படைகளின் அந்தஸ்த்து உடன்படிக்கை (Status of Forces Agreement – SOFA) கைச்சாத்திடும் தறுவாயில் இலங்கை இருக்கிறது.மிகவும் சர்ச்சைக்குரியதாக நோக்கப்படுகின்ற இந்த உடன்படிக்கை கொள்கையளவில் இலங்கையை இலட்சக்கணக்கான அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளினதும், பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கொந்தராத்துக்காரர்களின் மகிழ்ச்சியானதொரு வேட்டைக்களமாக மாறிவிடக்கூடும் என்று மூலோபாய விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகிறார்கள். தயாராகிக் கொண்டிருக்கும் இன்னுமொரு சர்ச்சைக்குரிய உடன்படிக்கை மிலேனியம் சவால் கூட்டுத்தாபனத்திடமிருந்து (…

  18. எதிர்வரும் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்து அனைத்துலக நாடுகள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள். செய்தித் தொகுப்பு – பிரபா 87 Views தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க பிரித்தானியா ஆதரவு வழங்கும் – ஜூலியன் எதிர்வரும் மாதம் இடம்பெறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையை பிரித்தானியா கருத்தில் கொள்வதுடன், அதற்கான ஆதரவையும் வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி ஜூலியன் பிரத்வெய்ட் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் மனித உரிமைகளை நிலைநாட்டவும்…

  19. இலங்கையின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு செயற்திட்டம்; 6 வருடங்களில் துரிதமாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு துறைமுகநகரம் 2014 செப்டெம்பரில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் அன்றைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை கூட்டாக ஆரம்பித்துவைத்தார்கள்.கடலில் இருந்து 269 ஹெக்டேயர் நிலத்தை மீட்டு, இலங்கையின் தலைநகர் கொழும்புக்கான நிதித்துறை, சுற்றுலாத்துறை, விநியோகங்கள் ஒழுங்கமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளை ஒருங்கிணைக்கும் புத்தம் புதிய மத்திய வர்த்தக மாவட்டமொன்றை நிர்மாணிப்பதே இந்த திட்டமாகும். ஆரம்பித்தவைக்கப்பட்டு 6 வருடங்கள் கடந்த நிலையில், இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாக இப்போது விளங்கும் கொழும்பு …

  20.  மாட்டிக்கொண்ட இரா.துரைரத்தினமும் சாட்டை சுற்றியவர்களும்! ஈழத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரும், இணையத்தளமொன்றின்; ஆசிரியருமான இரா.துரைரத்தினம், அண்மையில் 'சாதி' வசை பொழிந்து சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டார். யாழ். பல்கலைக்கழகம், மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான புதிய ஆடைக்கட்டுப்பாடு விதிகளை கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் விடுத்திருந்தது. இது தொடர்பில் பேஸ்புக்கில் இடம்பெற்ற விமர்சன உரையாடலொன்றின் போது, ஆடைக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட இரா.துரைரத்தினம், விவாதத்தின் போக்கில் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான து.ரவிக்குமாரை நோக்கி சாதி வசை பொழிந…

  21. இணை அனுசரணையுடன் பிரேரணை நிறைவேறியமை தமிழ் மக்களுக்கு வெற்றியே - சுமந்திரன் எம்.பி. பிரத்தியேக செவ்வி இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக சர்வதேச மேற்பார்வைக்கான கால எல்லையை அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்து பிரித்தானியா தலைமையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் நாடு திரும்ப…

  22. ஒரு கூர்வாளின் நிழலில் தமிழினி முன்வைக்கும் அரசியலும் படிப்பினையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) எழுதிய 'ஒரு கூர்வாளின் நிழலில்' என்கிற நூல், தமிழ்த் தரப்பின் ஒரு சில பகுதியினர் மத்தியிலும் தென்னிலங்கையிலும், இந்தியாவிலும் சற்று கவனம் பெற்றிருக்கின்றது. மூன்று தசாப்த காலம் நீண்ட தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டங்களில், முதன்மைத் தரப்பாக கோலொச்சிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த தமிழினி, அந்தப் போராட்டத்தின் சில பக்கங்கள் தொடர்பில் தன்னுடைய எண்ணப்பாடுகளை எழுதும் போது கவனம் பெறுவது இயல்பானது. விடுதலைப் புலிகள் அமைப்பு, ஆயுத ரீ…

  23. வடக்கின் கல்வித் தரம் வீழ்ச்சி அடைகிறதா? ந.லோகதயாளன். May 10, 2021 வடக்கு மாகாணக் கல்வி நிர்வாகம் பெரும் இடர்கள், குழப்பத்தின் மத்தியில் செல்வதோடு க.பொ.த உயர்தர பெறுபேறும் தொடர் பின்னடைவாகவே காணப்பட்டாளும் கிராம்ப்புறங்கள் வளர்ச்சி காண்பது மட்டுமே மகிழ்ச்சி தரும் ஒரு செய்தியாகவுள்ளது. க.பொ.த உயர்தரத்தில் கடந்த ஆண்டும் 6ஆம் இடத்தில் இருந்த வடக்கு மாகாணம் 2020ஆம் ஆண்டிலும் 6ஆம் இடத்தினையே எட்டியுள்ளனர். இவ்வாறு எட்டியவற்றில் இம் முறை பல சாதணைகளும் வேதனைகளையும் கடந்து அதிர்ச்சிகளும் கூடவே உள்ளது. இலங்கையிலேயே முதலாவது மாகாணமாக வட மேல் மாகாணமும் முதலாவது மாவட்டமாக புத்தளம் மாவட்டமும் உள்ளது. வடக்கு மாகாணத்தில் இருந்து 13 ஆயிரத்து 702 மாணவர்க…

  24. ‘தண்டனை விலக்கீட்டை முடிவுறுத்து, உண்மையை உயிர்ப்பித்திரு’-பி.மாணிக்கவாசகம் 27 Views உண்மைகள் சாவதில்லை. ஆனால் சாகா வரம் பெற்ற உண்மையை வெளிக்கொண்டு வருபவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள், கடத்தப்படுகின்றார்கள், கொல்லப்படுகின்றார்கள். நாகரிகம் வளர்ச்சி அடைந்துள்ள போதிலும் வாழ்வியலில் இது மிக மோசமான உலகளாவிய நிலைமையாகத் திகழ்கின்றது. தகவல்களை – உண்மைத் தகவல்களை அறிந்து கொள்வது மக்களின் பிறப்புரிமை. அந்த உரிமையை நிறைவேற்றுவதற்காக ஊடகவியலாளர்கள் உழைக்கின்றார்கள். அவர்கள் உண்மைகளையும் உள்ளவாறாக நிலைமைகளையும் வெளிக் கொண்டு வருவதற்குப் பாடுபடுகின்றார்கள். அதனை அவர்கள் தமது வாழ்வியலாக – தொழிலாகக் கொண்டிருக்கின்றார்கள். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.