நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
விசாரணைகளால் வெளிவரும் நிதர்சனங்கள் மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 30 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:12 Comments - 0 முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகக் கடும்போக்குச் சக்திகளும் அதிகாரத்துக்காக ஏங்கும் சில பெருந்தேசிய அரசியல்வாதிகளும் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையும் நிதர்சனங்களும் தற்போது மெல்லமெல்ல வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன. இல்லாததைச் சோடித்து, ஒன்றை ஒன்பதாக்கி, சிறிய விவகாரத்தைப் மிகப்பெரிய பரிமாணங்களாக உருப்பெருப்பித்துக் காட்டியவர்களின் முகத்திரைகள், தற்போது கிழிய ஆரம்பித்திருக்கின்றன. ‘மனிதன் தவறுக்கு மத்தியில் பிறந்தவன்’ என்ற அடிப்படையில் பார்க்கும்போது, முஸ்லிம் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்களின் தரப்பில், பிழைகளே நடக்கவ…
-
- 0 replies
- 309 views
-
-
மூன்று முனைப் போட்டியில் முன்னணியில் இருப்பது யார்?: பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் September 1, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நிய மனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது. அதிரடியான கட்சித் தாவல்களும், வாக்குறுதிகளும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் தென்னிலங்கை கள நிலைமைகள் எவ்வாறிருக்கின்றது என்பது குறித்து ஆராய்வதற்காக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்த லிங்கம் அவர்கள் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலை இலக்கின் வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம். ஜனாதிபதித் தோ்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. தோ்தல் பரப்…
-
- 0 replies
- 386 views
-
-
மே-18 ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் ஆறாத வடுவை ஏற்படுத்திய கொடூர நாள் தமிழனின் நெஞ்சில் இனப்படுகொலை என்றமுள் தைக்கப்பட்டு ஆறாத வடுவை ஏற்படுத்திய நாள். முள்ளிவாய்க்காலில் தமிழன் முடிக்கப்பட்டு விட்டானென்று அறிவிக்கப்ட்ட நாள். இதிலிருந்து ஒவ்வொரு தமிழனும் கற்றுக் கொண்ட பாடங்களை முள்ளி வாய்க்காலில் ஏற்படுத்திய ஆறாத வடுவைக் கொண்டு இன்று நாம் எதை எப்படி எதிர் கொள்வோம் என்பதுதான். இலங்கை அரசு 2007ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் வலுவில் இருக்கும்போது வலிந்து போரை தமிழ் மக்கள் மீது திணித்தது. இதற்கு அடிப்படையாக ஆரம்பத்தில் போர்ப்பகுதியில் பணியாற்றிய தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியமையே! அதாவது மனித நேயத் தொண்டர்களை வெளியேற்றியதன் காரணம் அதியுச்சப் பயங்கரவாத…
-
- 0 replies
- 613 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவரைச் சந்தித்ததை மறக்க முடியாது..? ஏன் அன்று, என்ன மறக்க முடியாத நிகழ்வுகள்! எதற்காக சந்தித்தீர்கள் இன்று வரை நடப்பது என்ன? தமிழீழ மண்ணிற்கு சென்றதை நான் மறக்க முடியாது! அதிலும் குறிப்பாக என் தலைவன் பிரபாகரனின் சந்திப்பின் நிமிடங்கள் வரலாற்றின் பதிவுகள். அப்படி என்ன தான் தமிழீழ மண்ணில் நடந்தது..? கடற் புலிகளின் தலைவர் சூசை சிலவற்றைக் கூறினார், அவை என்ன..? லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமிழ் இன உணர்வாளருமான சீமான். http://www.tamilwin.com/show-RUmuyDRUSXmr5H.html
-
- 0 replies
- 367 views
-
-
அந்த மனிதர் வெறும் மனிதர் அல்ல.தோற்போம் என்று தெரிந்தும் சாவு கண் முன்னால் நிற்பது தெரிந்தும் சாவென்று அவர் சொன்னால் செத்துவிடலாம்..வெடி என்றால் வெடித்து விடலாம்..அடி என்றால் அடிக்கலாம் என்று ஆயிரக்கணக்கில் அவர் ஒருவருக்காக தான் வீழ்ந்தார்கள்.அத்தனை பேரும் முப்பதுகளை தாண்டாத இளைஞர்கள்.அதை தாண்டியவர்கள் உலகம் வியக்கும் போர்வல்லுனர்கள்.நூறு இராணுவ வீரனுக்கு ஒப்பான ஒவ்வொரு தளபதிகள். அத்தனை பேரும் வீழ்ந்தது அந்த ஒருவருக்காக தான்.அவர் ஒரு போதும் வார்த்தை தவறியதில்லை.முடியாது என்றால் முடியாது தான்.முடியும் என்றால் முடியும்.இது தான் அவர்.அதனால் தான் அத்தனை பேர் அவருக்காக மட்டும் வீழ்ந்தார்கள்.அவர்களுக்கு தெரியும்.எஞ்சியவர்களால் எதுவும் செய்ய முடியாது.எஞ்சியவர்கள் பேசிக்கொண…
-
- 0 replies
- 589 views
-
-
ராஜீவ் படுகொலை வழக்கில் கேட்கப்படாத கேள்விகளும்,கிடைக்காத பதில்களும். சிறப்பு விருந்தினராக சி.பி.ஐ.முன்னாள் அதிகாரி மோகன்ராஜ்,சி.பி.ஐ.முன்னாள் அதிகாரி ரகோத்தமன்,காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமி,சென்னை உயர்நீதிமன்றம் மூத்த வழுக்கறிஞர் தடா சந்திரசேகர். பகுதி-1 பகுதி-2 பகுதி-3 http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10786:2013-12-26-17-39-34&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 351 views
-
-
13 வேண்டுமா? வேண்டாமா? February 6, 2022 — கருணாகரன் — 13 என்பதே பிரச்சினைக்குரிய எண் என்பார்கள். அதை நிரூபிப்பதைப்போலவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமும் உள்ளது. 1987இல் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட 13 ஐ ஏற்றுக் கொள்வதில் தொடங்கிய நெருக்கடியானது அதை நடைமுறைப்படுத்துவது வரையில் 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இப்பொழுது இந்தப் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடிக்குத் தமிழ்த்தேசிய அடையாளத்தை வலியுறுத்தும் கட்சிகள் சில கடிதம் எழுதியிருக்கின்றன. இந்தக் கடிதத்தை எழுதுவதற்குப் பட்டபாடு கொஞ்சமல்ல. முதலில் மலையகக் கட்சிகளும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் …
-
- 0 replies
- 209 views
-
-
13ஆவது திருத்த அமுலாக்கம் முடங்கியதற்கு தமிழ்க்கூட்டமைப்பை சாடுகிறார் அமைச்சர் பீரிஸ் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ், இந்தியாவும் இலங்கையும் தங்கள் உறவுகளில் உயர் நிலையை அடைந்துள்ளதாகவும், நாட்டில் சீனாவின் பிரசன்னம் பற்றிய கவலைகள் “கடந்த காலத்தவை ” என்றும் வெளிவிவகார அமைச்சர்,பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் பெப்ரவரி 6-8 வரைபுதுடி ல்லியில் இருந்த அமைச்சர் பீரிஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் மீனவர்களின் பிரச்சினை பற்றி கூறுகையில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசிக்கும்போது கைது செய்யப்படுவது,இப்போது இந்தியாவுடனான உறவுகளில் ஒரு “பாரதூரமான ” தருணம் என்று கூறியுள்ளார் அதேவேளைமுன்னைய மைத்திரிபால…
-
- 0 replies
- 249 views
-
-
அமைச்சர் டக்ளஸ் இரா.சம்பந்தருடன் பேசவேண்டும் January 16, 2023 —- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — கொழும்பிலிருந்து வெளியாகும் வார இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், இலங்கை ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் விசேட சமாதானத் தூதுவருமான எரிக்சொல்ஹெய்ம் இனப் பிரச்சனை தொடர்பான பேச்சுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவையில்லை என்று கூறியுள்ளதாக ‘ஈழநாடு’ பத்திரிகை (26.12.2022) அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி உண்மையானதா அல்லது திரிபுபடுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. உண்மையாயின் தமிழர் தரப்பிலிருந்து பின்வரும் கேள்வி எழுவது நியாயமானது. அக்கேள்வி என்னவெனில், மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையா? தேவையில்லையா? என்பது ஒருபுறமிருக்க…
-
- 0 replies
- 253 views
-
-
அகதிகளாகச் சென்று அடிமைப்பட்டு அவலப்படும் பெண்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஆருயிரை பணயம் வைத்து ஆழ்கடல் பயணம் திறந்த வெளிச்சிறையான தமிழ்நாட்டில் ஆயுள் முழுக்க ஏழை அடிமையாகக் கிடந்து சாகிறதை விட பணக்காரனாக்கும் அவுஸ்திரேலியாவை நோக்கிப்போகவே விருப்பப்படுகிறோம் என்கிறார்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் தமிழக முகாம்களில் வாழும் இலங்கை அகதிப் பெண்கள்! இலங்கையில் போர் தொடங்கிய பின் அங்கிருக்கும் தமிழர்கள் பல்லாயிரம் பேர் உயிர் பிழைப்பதற்காகத் தமிழ் நாட்டிற்குள் அகதிகளாக வந்து சேர்ந்தனர். ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் முகாம்கள் உருவாக்கப்பட்டு பல ஆண்டுகளாக தங்க வை…
-
- 0 replies
- 334 views
-
-
நரகத்தில் ஒரு இடைவேளைக்குப் பிறகு….! Veeragathy Thanabalasingham on January 18, 2024 Photo, REUTERS மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த பொருளாதார நெருக்கடியின்போது கடுமையான பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் மக்களை இரவுபகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மைல் கணக்கில் வரிசைகளில் காத்துநிற்கவைத்த எரிபொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் பிறகு கடந்த வருடம் பெரும்பாலான மக்களினால் வாங்கமுடியாத விலைகளில் இருந்தாலும் பொருட்களைப் பெறக்கூடியதாக இருந்த காலப்பகுதியை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று அதன் ஆசிரிய தலையங்கத்தில் ‘நரகத்தில் இடைவேளை’ (Interval in the Hell) என்று வர்ணித்திருந்தது. தற்போது புதுவருடம் பிறந்த நிலையில்…
-
- 0 replies
- 267 views
-
-
போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 பெப்ரவரி 19 செவ்வாய்க்கிழமை, மு.ப. 12:10Comments - 0 சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர். பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும். சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைத்துக் கூறிய விடயங்கள், அரசியலரங்கில் ‘காட்டுத் தீ’யை ஏற்படுத்தி இருக்கின்றன. இதன் காரணமாக, அவர் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுச்…
-
- 0 replies
- 533 views
-
-
-
புருஜோத்தமன் தங்கமயில் / 2019 செப்டெம்பர் 04 புதன்கிழமை, பி.ப. 07:46 தென் இலங்கை அரசியல் ஒழுங்கும் அதன் சூத்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பௌத்த பீடங்களும், தங்களுக்கான ஆட்சி முகமாக ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் கருதியதில்லை. சர்வதேச ரீதியில், தென்னிலங்கை பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து நின்ற போதெல்லாம், ஒரு ஆபத்பண்டவராக ரணில் செயற்பட்டிருக்கிறார்; காப்பாற்றியிருக்கிறார். ஆனாலும், அவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ‘ஒற்றை’ ஆட்சியாளராகக் கொள்வதற்கு, தென்னிலங்கை ஒருபோதும் தயாராக இருந்ததில்லை. அப்படிப்பட்ட நிலையில், உண்மையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ரணில் விரும்புகிறாரா என்றொரு கேள்வி, பல தரப்புகளாலும் தொடர்ச்சியாக எழுப்பப்படுகின்றது. ஐக்கிய …
-
- 0 replies
- 378 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை, கியூபா, சீனா போன்ற "கம்யூனிச நாடுகள்" எதிர்த்து வந்துள்ளன. தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப் படும் பொழுது, இந்த நாடுகள் எதிர்த்து வாக்களித்து வந்துள்ளன. கம்யூனிஸ்ட் நாடுகள் என்று அறியப்பட்டிருக்கும் சீனாவும் கியூபாவும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதற்கு என்ன காரணம்? உலகில் எங்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள், ஏன் இன்று ஆதிக்கச் சக்திகளுக்குத் துணை போகின்றன? இலங்கை அரசின் போர்க் குற்றங்களை கியூபா அறிந்திருக்கவில்லையா? குறிப்பாக, வலதுசாரித் தமிழ்தேசியவாதிகள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, "கம்யூனிச நாடுகள் தமிழ் மக்களின் விரோ…
-
- 0 replies
- 740 views
-
-
ஊடகத் தணிக்கைக்கான முதற்படியா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலக ஊடக சுதந்திர தினம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, உலகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. உலகமெங்கும், ஊடகவியலுக்கான சுதந்திரம் பாதிப்படைந்துள்ள சூழ்நிலையில், இந்தத் தினம் அனுஷ்டிக்கப்பட்டமை முக்கியமானது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும், உலக பத்திரிகைச் சுதந்திரச் சுட்டியின் 2016ஆம் ஆண்டுக்கான வெளியீடு, அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இதில், 2015ஆம் ஆண்டு வெளியான அறிக்கையுடன் ஒப்பிடும் போது, இம்முறை உலகில், செய்திகளுக்கான சுதந்திரம் மிகவும் குறைவடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதேபோல், ஊடகத் தொழிலுக்காகப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவிய…
-
- 0 replies
- 325 views
-
-
-
- 0 replies
- 316 views
-
-
பாராளுமன்றத் தேர்தல்கள் ; வடக்கும் இராணுவமும் -பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் சிரிய அரபுக்குடியரசு, இலங்கை, பெலாரஸ், மொண்டினீக்ரோ, ஈரான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் விரைவில் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), தேர்தல் முறைகளுக்கான சர்வதேச மன்றம் (International Foundation For Electoral System) போன்ற பல்வேறு முக்கியமான சர்வதேச அமைப்புகளை அங்கமாகக் கொண்ட தேர்தல் தகவல் வலையமைப்பினால் (Electoral Knowledge Network ) பெறப்பட்ட விபரங்களின்படி தேர்தல் செயன்முறைகளில் இராணுவத்தை மிகவும் சுருக்கமாகவே பயன்படுத்த வேண்டும். பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இராணுவத்தை மட்டுப்படுத்திக்கொண்டு ஏனைய தேர்தல் செயன்…
-
- 0 replies
- 329 views
-
-
அழைப்பிதழ் Next Productions நிறுவனத்தின் அறிமுக விழாவிற்கும், இந்த நிறுவனத்தின் இரண்டு புதிய திரைப்படங்களான ‘Broken Dreams’ மற்றும் ‘Kandam’ ஆகியவற்றின் Trailer வெளியீட்டு விழாவிற்கும் உங்களை அன்புடன் அழைக்கின்றோம். Date: Friday, October 14, 2016 ... Time: 5.00 p.m. Venue: York Cinemas, 115 York Blvd, Richmond Hill, ON, L4B 3B4 Broken Dreams திரைப்படம், மனித மனோநிலையின் ஆழமான பிளவுகள் தொடர்பாக ஆராயும் இந்தத் திரைப்படம், கதாநாயகனின் ஆழ்மனதில் பொதிந்துள்ள இருண்ட பக்கங்களை ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது. ஜேர்மன் - ஆங்கில மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள சர்வதேச திரைப்படமான Broken Dreams, ஜேர்மனியின் பேர்ளின் நகரில் படமாக்கப்பட்டதுடன், …
-
- 0 replies
- 393 views
-
-
புறக்கணிக்கப்பட்ட தமிழ்மொழி பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து இலங்கைக்கு வருகை தந்த முதலாவது வெளிநாட்டு அரச தலைவர் என்ற ரீதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் இலங்கைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. ஆனால், இந்த முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தின்போது தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திய விடயம் ஒன்றும் பதிவாகியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முக்கியத்துவப்படுத் தும் முகமாக சம்பிரதாயபூர்வமாக மரக்கன்று ஒன்று இந்தியப் பிரதமரால் ஜனாதிபதி மாளிகையில் நாட்டி வைக்கப்பட்டது. அந்த மரக்கன்றின் பெயர் மற்றும் அது…
-
- 0 replies
- 637 views
-
-
http://www.dailymirror.lk/print/index.php/opinion1/5639.html http://www.tamilcanadian.com/news/ Moon and Nambiar families’ allegiance to India and war crimes Wednesday, 10 March 2010 00:41 Moon’s son in law Siddharth Chatterjee was a former officer of the Indian Army! There is a view that the UN Organization General Secretary Ban Ki Moon appointed a panel of experts to investigate the human rights (HR) violations and the war crimes committed during the Sri Lanka (SL) war was in order to get an extension for his term in office as Gen. Secretary. It is evident that when his first term is about to end , he is resorting to various ploys to get it ext…
-
- 0 replies
- 601 views
-
-
பென்டகன் உயா் அதிகாரிகளின் இரகசிய விஜயத்தின் பின்னணி?-அகிலன் February 27, 2023 இரண்டு விஷேட விமானங்களில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரகசியமாக கொழும்புக்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் யாா், எதற்காக அவா்கள் வந்திருந்தாா்கள் என்பனதான் கொழும்பு அரசியலை மட்டுமன்றி இராஜதந்திர வட்டாரங்களையும் குடைந்துகொண்டிருக்கும் கேள்வி. இலங்கை அரசாங்கமும், அமெரிக்க துாதரகமும் இவ்வாறான ஒரு விஜயம் இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், அது தொடா்பாக எந்தத் தகவல்களையும் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், உணடமைகள் வெளிவருமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. இலங்கையை மையப்படுத்திய இந்துசமுத்திர வல்லாதிக்கப்போட்டி தீவிரமடைந்துசெல்லும் நிலையில் இவ்வ…
-
- 0 replies
- 227 views
-
-
இரட்டைவேட அணுகுமுறையும் இடதுகளின் இரட்டைத்தன்மையும் -சி.இதயச்சந்திரன்- தினகரன் பத்திரிகைச் செய்திகளைத் தவிர, வேறெதற்காகவும் வாசிக்கலாம் என்பது பொதுவான ஞானம் என்பதால் தமிழ் மக்களுக்கு உற்சாக ஊசி மருந்து ஏற்றும் பணி இப்போதைக்கு செவ்வனே நடைபெறுகின்றதென்று ஒரு பத்தி எழுத்தாளர் அண்மையில் எழுதியிருந்ததை படிக்கும் வாய்ப்புக்கு கிட்டியது. தமிழ் ஊடகச் செய்தித்துறையில் பல ஆரோக்கியமான சமூக வயப்பட்ட கட்டுரைகளும் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன. எனினும் ஒட்டுமொத்த ஆக்கங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அழுது புலம்புவதாகவும், படைகள் மீதான தாக்குதல் வெற்றி பெற்றால் ஆரவாரிப்பதைத் தவிர வேறு அரசியல் ஏதுமற்றதாகவும் காணப்படுவதாக மேம்போக்கான குற்றச்சாட்டை இப்பத்தி எழுத்தாளர் முன்வைக…
-
- 0 replies
- 998 views
-
-
பேச்சுவார்த்தை மேசையில் சுழலும் சொற்போர்? நிலாந்தன்! இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட காலத்தில், யாழ் பல்கலைக்கழக, கைலாசபதி கலையரங்கில் ஒரு கருத்தரங்கு இடம் பெற்றது. அதில் இந்தியாவில் இருந்து வந்த பெரியார்தாசனும் உரையாற்றினார்.அதன் போது அவர் ஓர் உதாரணத்தைச் சொன்னார். நாங்கள் கட்டை விரலில் இருந்த காயத்துக்கு மருந்து கேட்டோம். ஆனால் அவர்கள் சின்ன விரலுக்கு மருந்தைத் தந்துவிட்டு, எல்லா விரல்களுக்கும் இதுதான் மருந்து, எல்லா வியாதிகளுக்கும் இதுதான் மருந்து என்று கூறப் பார்க்கிறார்கள்….” என்று. அவர் கட்டைவிரல் என்று சொன்னது இனப்பிரச்சினையை. இனப்பிரச்சினை காரணமாகத் தமிழ் மக்கள் ஒரு தீர்வைக் கேட்டுப் போராட,அப்போராட்த்தின் விளைவாக இலங்கை -இந்திய அரசுகள் ஓர் உடன்படிக்க…
-
- 0 replies
- 247 views
-
-
ஊர்காவற்படை நியமனம்- ஆசிரியர் பணிக்கானதுவா? பதிவேற்றிய காலம்: Jan 1, 2019 உறுதியாக இல்லாத ஆரம்பக் கல்வியானது அத்திவாரம் இல்லாத கட்டடத்தைப் போன்றது. அதேபோல் ஆரம்பக் கல்வி திடமாக இல்லாத வரையில் மாகாணத்தின் கல்வியை வளர்க்க முடியாது. எனவே வடக்கில் இருந்து சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்பள்ளி கள் அகற்றப்பட்டே ஆகவேண்டும் என மூத்த கல்வியலாளர்கள் கோருகின்றனர். இலங்கையின் கல்வித் தரத்தில் வடக்கு மாகாண கல்வியே இறுதி இடத்தில் உள்ளது. அதிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியே உள்ளன. இதற்கு மாவட்டக் கல்வித் தரத்தில் உள்ள குறைபாடுகளே காரணம் என நீண்டகாலமாகவே சுட்டிக்காட் ட…
-
- 0 replies
- 502 views
-