நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
“கணவனை மீட்கவே கொலை செய்தேன்” ! June 9, 2019 மயூரப்பிரியன் – சிறையில் உள்ள கணவனை மீட்டெடுக்கவே வயோதிப பெண்ணை கொலை செய்ய திட்டம் தீட்டி , கொலை செய்து , அவருடைய நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டேன் என பிரதான சந்தேக நபரான குடும்ப பெண் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். தெல்லிப்பளை பகுதியில் கடந்த மாதம் 06ஆம் திகதி , சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது 70) எனும் பெண் கொலையுண்ட நிலையில் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரின் வீட்டில் இருந்த 12 பவுண் நகை மற்றும் ஒரு தொகை பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. விசாரணைகள் ஆரம்பம். குறித்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரே…
-
- 1 reply
- 616 views
-
-
முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் அல்லது அமைச்சர்கள் இராஜினாமா என்பதே தற்போதைய அரசியல் சூழலில் அனைத்து தரப்பினராலும் பேசப்பட்டு வரும் விடயமாக உள்ளது. நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவை நாட்டில் தற்போது காணப்படுகின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் அண்மையில் எடுத்த அரசியல் தீர்மானம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதாக அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த முடிவின் பாரதுரத்தன்மை அதன் விளைவுகள் எதிர்கால நகர்வுகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை கேசரி சார்பில் சந்தித்து கலந்துரையாடினோம். அதன…
-
- 4 replies
- 466 views
-
-
-
முஸ்லிம் ஆளுநர்கள், அமைச்சர்களின் பதவிவிலகல்கள் ; பிக்குமாரும் சட்டமும் - கலாநிதி அமீர் அலி இரு முஸ்லிம் ஆளுநர்களும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் கூண்டோடு பதவிவிலகியமை இலங்கை ஜனநாயகத்தினதும் முஸ்லிம் அரசியலினதும் வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத வகையிலான ஒரு அரசியல் நடவடிக்கையாகும்.சில செய்திகள் கூறுவதைப்போன்று, அவர்கள் இன்னமும் தங்களது சிறப்புரிமைகளையும் தனிச்சலுகைகளையும் கைவிடவில்லையானால், பதவிவிலகல் நேர்மையான ஒரு நடவடிக்கை என்பதை நிரூபிப்பதற்காக அவற்றை உடனடியாக துறந்துவிடவேண்டும்.இரு முஸ்லிம் மாகாண ஆளுநர்களும் ஒரு அமைச்சரும் பதவிநீக்கப்பவேண்டுமென்ற கோரிக்கையை முனவைத்து ஒரு பிக்கு தொடங்கிய சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டமும் இன்னொரு பிக்கு…
-
- 0 replies
- 653 views
-
-
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
வன்முறை வாழ்க்கை: அச்சத்தை விதைக்கும் அரசியலும் அடாவடித்தனங்களும் Editorial / 2019 ஜூன் 06 வியாழக்கிழமை, மு.ப. 01:44 Comments - 0 இந்தவாரம் கண்டியில், அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தின் போது, கும்பல் ஒன்றினால், சில பொதுமக்கள் மோசமாகத் தாக்கப்பட்ட நிகழ்வின் காணொளியை சமூக வலைத்தளங்களில் காணக் கிடைத்தது. அந்தக் காணொளியை முழுமையாகக் காணுமளவு மனத்தைரியம் என்னிடம் இருக்கவில்லை. இவ்வளவு வன்முறையும் வன்மமும் நிறைந்து போயுள்ள ஒரு சமூகத்திலா நாம் வாழ்ந்து வருகின்றோம் என்றதொரு கேள்வி, மீண்டுமொருமுறை எழுந்தது. ஒரு குடிமகனின், அடிப்படை உரிமையைக் கூடப் பாதுகாக்க வக்கற்ற ஓர் அரசாங்கம், எத்தகைய அபத்தமானது? ஆனால், அந்த அபத்தத்தையும் மீறி, அது தன்னுள்…
-
- 0 replies
- 392 views
-
-
பௌத்த பிக்குமாரின் அத்துமீறிய செல்வாக்கிற்கு எதிராக ஜனாதிபதி, பிரதமர் கடும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை - த இந்து நாசகாரத்தனமான ஒரு உள்நாட்டுப் போரிலிருந்து விடுபட்ட இலங்கை, இனங்களுக்கிடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலும் புதியதொரு ஒப்புரவான சமூக ஒழுங்கை உருவாக்குவதிலும் கவனத்தைக் குவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கும் இந்தியாவின் பிரபல தேசிய ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான "த இந்து", ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகு நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நிலைவரத்தின் மீது சில பௌத்த பிக்குமார், அவர்களது அளவுக்கு ஒவ்வாத முறையில் செல்வாக்குச் செலுத்துவதற்கு எதிராகக் கடுமைய…
-
- 0 replies
- 171 views
-
-
மற்றுமொரு இனநெருக்கடியை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லாதீர்கள் - தேசிய சமாதானப் பேரவை வேண்டுகோள் (செய்திப்பிரிவு) இன்னெரு இனநெருக்கடியின் பாதையில் நாட்டை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று நாட்டின் அரசியல் தலைவர்களை வலியுறுத்திக் கேட்டிருக்கும் ஸ்ரீலங்கா தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களையும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டின் சில பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும் அடுத்துத் தோன்றியிருக்கும் தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அரசியல் வேறுபாடுகளிலிருந்து வெளிக்கிளம்பி தலைமைத்துவத்தை வழங்குமாறு வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பில் தேசிய சமாதான…
-
- 0 replies
- 180 views
-
-
ஆலயத்தில் பஞ்சாமிர்தம் வழங்கிய சர்ச்சைக்குரிய நபர் - பின்னணிகள் பற்றி ஒரு ஆய்வு (எம்.கோகுலதாஸ்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் நீட்சியாக பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாடாளவிய ரீதியில் அச்சம்பவத்தின் நீட்சியாக நிகழும் விடயங்கள் இனங்களுக்கிடையிலான விரிசல்களை மேலும் மேலும் வலுப்படுத்துவதாக அமைந்து வருகின்ற நிலையில் மிகவும் உணர்வு பூர்வமான விடயமொன்று திருகோணமலை மூதூரில் நிகழ்ந்துள்ளது. மூதூர் கிளிவெட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தமிழ் பெயரில் ஆலயத்தின் பிரதான குருவுக்கு உதவியாளராக செயற்பட்டு வந்த நபர் ஒருவரை கடந்த வெள்ளிக்கிழமை 24 ஆம் திகதி பொலிஸார் சந்கேத்தின் பேரில் கைது செய்தனர். அதனையடுத்து அவர் முஸ்லிம் நபர் என்றும் அவர் …
-
- 0 replies
- 534 views
-
-
ஆளுநரின் வதை முகாம்: கடும் அதிர்ச்சியிலிருந்து மயிரிழையில் தப்பிய சிறுவர்கள் S. Ratnajeevan H. Hoole on June 3, 2019 பட மூலம், Rabwah Times பின்னணி அப்பாஸ் அகமதி (33), அவருடைய மனைவி ஹக்கிமா (30) மற்றும் 12 தொடக்கம் 6 வயது வரையிலான நான்கு பிள்ளைகள் ஆகியோர் 5 வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அகதிகளாக வந்தார்கள். அவர்களுடைய அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தினால் (UNHRC) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதுடன், அவர்களை மீளக் குடியேற்றுவதற்கான ஒரு நாட்டை UNHRC தேடிக் கண்டுபிடிக்கும் வரையில் இங்கு வாழ்வதற்கான ஆவண…
-
- 1 reply
- 535 views
-
-
June 3, 2019 பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்று இந்து பத்திரிகை குழுத்தின் தலைவர் என். ராம் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு. கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிபிசி தமிழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில், இறுதிப் போரில் கருணாநிதியால் புலிகளை காப்பாற்றியிருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் கருணாநிதி குறித்த பிபிசியின் கேள்விக்கு ராம் அளித்துள்ள பதிலை இங்க பிரசுரிக்கின்றோம். கேள்வி: இலங்கை தமிழர்கள் – விடுதலை புலிகள் மீதான கருணாநிதி…
-
- 0 replies
- 374 views
-
-
சாதிய வெறியால் நிறுத்தப்பட்டது வரணி சிமிழ் கண்ணி அம்மன் ஆலய திருவிழா -மு.தமிழ்ச்செல்வன்.. June 2, 2019 வரணி ஆலயம்- சமூக விடுதலையை அடையாது, இன விடுலையை அடைவது கடினம்… கடந்த வருடம் வைகாசி மாதம் ஒரு அதிகாலை பொழுது வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில் ஊர் கூடி தேர் இழுக்கத் தயாராகிக்கொண்டிருந்தது. புதிதாக செய்யப்பட்ட சித்திரைத் தேர் வெள்ளோட்டத்தில் வெற்றிகரமாக ஆலயத்தை சுற்றி வந்தது. எனவே கன்னித் தேர்த் திருவிழாவில் இளைஞர்கள் வேட்டியும் வேட்டிக்கு மேல் மஞ்சல்,சிவப்பு துண்டுககளை அணிந்தவாறும் பெண்கள் சாறி சல்வார், என மகிழ்வோடு வடம் பிடிக்க காத்திருந்தனர். கண்ணகியும் வெளியே வந்தால் தேர் எறினாள் வடம் பிடிக்கத் தயாரான போது வந்து நின்றது ஜேசிபி இயந்த…
-
- 0 replies
- 923 views
-
-
இலங்கையில் ஓர் அரேபியாவை கட்டியெழுப்பியிருக்கிறார் ஹிஸ்புல்லாஹ்: அத்துரலியே ரத்ன தேரர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவியிறக்க வேண்டும். ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் தோற்று, தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வந்து பின்னர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றளவில் இலங்கையில் ஒரு அரேபியாவைக் கட்டியெழுப்பியிருக்கிறார். எம்மால் இத்தகைய அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாடு குறித்து சிந்திக்கின்ற முஸ்லிம்கள் இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம். உங்களது சமூகத்திற்குள் காணப்படுகின்ற கொ…
-
- 0 replies
- 663 views
-
-
அமைச்சர்களான ராஜித, ரிஷாத் ஆகியோரே குருணாகல் வைத்தியருக்கு நியமனம் வழங்கியுள்ளனர் சுகாதார அமைச்சராக இருக்கும் ராஜித சேனாரத்னவின் நியமனங்களுக்கு எதிராக நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அவர் நியமித்துள்ள குழுவிடமிருந்து உண்மையையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. அக்குழுவின் விசாரணைகளை மக்களும் நம்பப்போவதில்லை. ஆகவே, ஜனாதிபதி உடனடியாக அமைச்சர் ராஜிதவை அப்பதவியிலிருந்து நீக்கி சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின்…
-
- 0 replies
- 495 views
-
-
-
- 1 reply
- 565 views
-
-
ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு ஆதரவு ; மேலும் பல விடயங்களை பகிர்ந்து கொள்கிறார் பஷில் ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படுமெனவும் வடக்கு மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதுடன் தீர்மானம் எடுக்கும் நிலைக்கு வரவேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது தமிழ்க் கூட்டமைப்பு நினைத்திருந்தால் அரசியல் தீர்வு தொடர்பான ஒரு ஏற்பாட்டை உள்ளடக்கியிருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் அதற்கு ஆதரவு வழங்கினர். ஆனால் அதனை செய்யும் தேவை கூட்டமைப்புக்கு இர…
-
- 0 replies
- 173 views
-
-
வடக்கில் தொடரும் வன்முறை கலாசாரத்துக்கு முடிவுகட்ட வேண்டும் வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக வன்முறைகள் அதி கரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. கிளிநொச்சி, மாங்குளம் உட்பட பல பகுதிகளிலும் வாள்வெட்டுச் சம்பவங்களும் தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் மீண்டும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மத்தியில் அச் சமான நிலைமை உருவாகியிருக்கின்றது. கிளிநொச்சியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி செல்வா நகர்ப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. வாள்வெட்டுச் சம்பவத்தி…
-
- 0 replies
- 167 views
-
-
"சீமானைப்போல எனக்கு தைரியம் இல்லையா?" வேல்முருகன் #VelMurugan #Politics #Seeman
-
- 0 replies
- 480 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் கடந்த சட்டமன்றத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த தே.மு.தி.க., 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. ஆளும்கட்சிக் கூட்டணியில் இருந்தபோதும் அக்கட்சி பெற்ற வாக்குகள் மிகப் பெரிய அளவில் சரிந்திருக்கின்றன. அக்கட்சியின் எதிர்காலம் என்ன? …
-
- 0 replies
- 495 views
-
-
குறைந்த வாக்குகள் வாங்கிய பகுதிகளில் அடுத்து கூட்டம் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார்கள். இதுதான் அவர்களின் வெற்றிக்குக் காரணம். அவர்கள் மக்களை நோக்கிச் செல்கிறார்கள். மக்களோடு மக்களாக இருக்கிறார்கள். தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலும் அவர்களுக்குக் கிளை இருக்கிறது. தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறது. இரண்டாவது முறையாக மோடி, வரும் 30-ம் தேதி பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க கூட்டணி 37 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. வாக்குசதவிகித…
-
- 0 replies
- 699 views
-
-
ATBC 24.05.2019 வெளிச்சம் நிகழ்ச்சியில் சாதி பிரச்சனையில் ஆலயத்து திருவிழா நிறுத்தம் பற்றியும் , சாதீய பிரச்சனை தீர்க்கப் படாமல் இனப்பிரச்சனை தீர்வு பற்றி பேசமுடியுமா , இதை எவ்வாறு புரிந்துணர்வுடன் அணுகலாம்
-
- 0 replies
- 637 views
-
-
காங்கிரஸ் கட்சி மீண்டுமொரு தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஆனால், இதனை மற்றொரு தோல்வி என கடந்து சென்று விட முடியாது. இந்தியாவின் நேரு - காந்தி அரசியல் வம்சத்தின் இருப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது இந்த தோல்வி. காங்கிரஸின் தோல்வி, அதற்கான காரணம், ராகுல் என்ன செய்ய வேண்டும்? - என பல விஷயங்களை ஆராய்கிறார் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே. ராகுல் காந்தி நேரு வம்சத்தின் வாரிசு ராகுல் காந்தி. அவருடைய எள்ளு தாத்தா ஜவஹர்லால் நேரு இந்தியாவை பல ஆண்டுகள் ஆட்சி செய்த முதல் பிரதமர். அவரது பாட்டி இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெ…
-
- 5 replies
- 1k views
-
-
'2015 தேர்தலில் எனக்கு எதிராக செயற்பட்ட சஹ்ரான் ஜனாதிபதியின் வெற்றிக்காக வேலை செய்தார் ' தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் என்பவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்கு எதிராக செயற்பட்டதுடன் தற்போதைய ஜனாதிபதிக்காக பாரிய பணியாற்றியவர் என்று எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள வார இறுதி பத்திரிகையான லங்காதீபவுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு, கேள்வி: நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் திருப்தியடைய முடியுமா? பதில்: கடந்த தினங்களில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாதவை. பா…
-
- 0 replies
- 249 views
-
-
புத்த பிக்குவிடம், நூல் கட்டும் இஸ்லாமிய பெண்.
-
- 3 replies
- 1.1k views
-
-
சிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் ? இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையைப் பீடித்துள்ள இரத்தப் புற்றுநோயாகும். இதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது எளிதான விடயமல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆகவே தயவுசெய்து நாட்டில் காணப்படுகின்ற இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தல் குறித்து அரசியல்வாதிகள் கருத்துக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுபலசேனா இந்த அச்சுறுத்தலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முழு மூச்சுடன் செயற்படுமென கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். தமிழ்நாடு தௌஹீத் ஜமா அத் அமைப்பிடமிருந்து இலங்கை தௌஹீத் அமைப்புகளுக்கு பெரும்பாலும் கட்டளைகள் கிடைக்கப்பபெற்றுள்ளது. கோவை ஐயூப் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இலங்கையில் மிக மோசமாக பிரசாரங்களை மேற்கொண்டிரு…
-
- 2 replies
- 483 views
-