நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
'சூழ்நிலைக் கைதியாகிவிட்டேன்': மு.க.தலைவர் ஹக்கீம் கவலை (ஆர்.ராம்) • அடுத்தவாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப்போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • தமிழ்பேசும் தரப்பு உறவுகள் குறித்து கரிசனை ஜனநாயகத்தினை தாரைவார்க்கும் 20ஆவது திருத்தச்சட்டத்தினை எமது கட்சியின் நான்கு உறுப்பினர்கள் ஆதரித்ததன் மூலம் முஸ்லிம்களின் அடையாளமாகவிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஜின் தலைவரான நான் சூழ்நிலைக் கைதியாகிவிட்டேன் என்று அக்கட்சியின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வீரகேசரிக்கு தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அரசியலில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் மாறுபட்ட நிலைப்பா…
-
- 1 reply
- 601 views
-
-
அடிப்படைவாத பிக்குமார்களின் காவியை கழற்ற தயார் நிலையில் ‘நாம் பிரஜைகள்’ என். சரவணன் படம் | Dushiyanthini “நாம் பிரஜைகள்” (அபி புறவெசியோ) எனும் சிங்கள அமைப்பு பௌத்த பயங்கரவாதத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி மருதானையில் அமைந்துள்ள CSRஇல் (சமய சமூக நடுநிலையம்) பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து காணாமல்போனவர்களின் பெற்றோர்களுக்காக நடத்தப்பட்ட கூட்டம் கோட்டபாயவின் காவி சீருடை பயங்கரவாதிகளால் குழப்பியடிக்கப்பட்ட செய்தி அறிந்ததே. தொடர்ச்சியாக சமீப காலமாக சிறுபான்மை மதங்களுக்கும், சிறுபான்மை இனங்களுக்கும் எதிராக பேரினவாத அரச தலைமையால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சீருடை பயங்கரவாதிகள் பல்வேறு…
-
- 1 reply
- 529 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பேரிலேயே நாணய மதிப்பிறக்கம் செய்யப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பில் மறுப்பறிக்கை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக இலங்கையின் நாணய மதிப்பு 3 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதனை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில் வரவேற்றுள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தையும் பொருளதாரத்தையும் மேம்படுத்த இந்த நாணய மதிப்பிறக்கம் ஏற்படுத்தும் என்று இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப்பிரதிநிதி கோசி மாத்தாய் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் வலியுறுத்தலின் பேரில் இந்த நாணய மதிப்பிறக்கம் செய்யப்பட்டதாக இலங்;க…
-
- 1 reply
- 1k views
-
-
பரந்தன் மாணவி, A/L பெறுபேறு வந்த போது, ஆடை தொழில் சாலையில் வேலை 3 சகோதரங்களுடன், கூலித்தொழில் செய்யும் பெற்றோர் உடன் மிகவும் கஸ்டமான சூழலில் படித்து, A/L சோதனை முடித்து, பரந்தனில் ஒரு ஆடை தொழில் சாலையில் வேலை செய்து வந்தார் மாணவி கல்யாணி. பெறுபேறை பார்க்க கூட அனுமதி இல்லை. வீடு வந்த பின்னர், பார்த்தால், 2A 1B உயிரியலில் எடுத்த நல்ல செய்தி இருந்தது. பல்கலைக்கழகம் போகும் வரை, வேலையில் தொடரப்போவதாக சொல்கிறார் அவர். உறவினர், நண்பர்கள், முக்கியமாக கூட வேலை செய்தவர்கள், வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர், கல்யாணிக்கு,
-
- 1 reply
- 813 views
-
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து, கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்! | க.மேனன் February 23, 2022 கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் கிழக்கு மாகாணத் தமிழர்களின் அரசியல் பொருளாதார நிலைமைகள் குறித்து நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உணரப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இது தொடர்பில் வெளிப்படுத்த வேண்டிய பல விடயங்களை எனது பத்தி ஊடாக எழுதி வருகின்றேன். இவற்றினை வெறுமனே வெறும் எழுத்துக்களாக நோக்காமல், கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உண்மை நிலையினை உணர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்தம் மௌனிக்கப்பட்டு 12வருடங…
-
- 0 replies
- 242 views
-
-
http://uyirambukal.blogspot.com/2010/06/blog-post_3171.html இலங்கை அரசாங்கமானது எவ்வகையிலும் தமிழ் மக்களது புனர்வாழ்வுக்கு உதவ முன்வரமாட்டாது என்பதை நிரூபித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களும், அவர்களது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் அரசியல் ரீதியான போராட்டங்களை நடத்தாவிடில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்தவண்ணமே இருக்கும். இலங்கை தமிழ் மக்கள் சுதந்திரத்தை பெற்றெடுக்க ஒரே வழி தான் உள்ளது............................ புலம்பெயர் தமிழர்களும் அவரது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக போராடாதுவிடின் தமிழர்களின் சகல எதிர்பார்ப்புக்களும் இழப்புக்களாகவே மாறும்! நீங்களே புதிய தலைமுறையின் வீரர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் - இலங்கை தமிழர்களின் எதிர்ப…
-
- 0 replies
- 707 views
-
-
இராசதந்திர தொடர்புகளை தமிழ் மக்கள் சீனாவுடனும் ஏற்படுத்தவேண்டும். இந்திய மத்திய அரசை நம்பி ஏமாந்தது போதும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் வந்துவிட்டார்கள் தமது உள்ளக் குமுறலை வெளிப்படையாகத் தெரிவிக்க தொடங்கி விட்டார்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பு எடுப்பீர்களானால் அவர்கள் மிக அதிகமாக வெறுக்கும் அரசு இந்திய மத்திய அரசாகத்தான் இருக்க முடியும். தமிழ் மக்களின் அழிவுக்குத் திட்டமிட்டு உதவிய நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது இந்தியாவின் கரங்கள் தமிழ் மக்களின் குருதியில் தோய்ந்திருக்கின்றன தமிழ் மக்களின் அவலக் குரலுக்கு செவிசாய்க்காமல் தமிழ் மக்களை அழிக்கும்படி சிறிலங்கா அரசுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த நாடு இந்தியா தான். சாணக்கியர் க…
-
- 0 replies
- 615 views
-
-
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு September 30, 2022 — கருணாகரன் — “வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இது மிகக் கவலையளிக்கும் நிலையாகும். பாடசாலை மாணவர்களும் பகிரங்கமாகப் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு பாடசாலைகளின் பங்களிப்புப் போதாது. தங்களுடைய மாணவர்கள் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிந்து கொண்டே பல பாடசாலைகள் அவற்றை மறைக்க முற்படுகின்றன. தங்கள் பாடசாலையின் பெயர் கெட்டு விடும் என்ற தவறான (மூடத்தனமான) கற்பிதமே இதற்குக் காரணம். தங்கள் மாணவர்கள் பாதிக்கப்படைந்து கெட்டுப்போவதைப் பற்றிச் சிந்திக்காமல், கவலைப்படாமல் தங்கள் பாடசாலைகளின் பெயர் கெட்டு விடும் …
-
- 0 replies
- 1.8k views
-
-
வளங்கள் நிறைந்த மட்டக்களப்பில் வறுமை ஏன் ? - ஒரு தேடல் By Digital Desk 2 14 Nov, 2022 | 09:37 AM வ.சக்திவேல் முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களும் நிலவளம், நீர்வளம், வனவளம், கடல்வளம், ஆகியவையும் ஒருங்கே அமையப்பெற்ற மிகவும் வளம் பொருந்தியதும் செழிப்பானதுமான மாவட்டம் மட்டக்களப்பு என்று துறைசார்ந்தோர் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இயற்கையின் கொடையாக எல்லா வளங்களும் ஒருங்கே அமையப் பெற்ற மாவட்டம் மட்டக்களப்பு என்பது நோக்கர்களின் கருத்தாகும். 2610 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 103 கிலோ மீற்றர் நீளம் கொண்…
-
- 0 replies
- 250 views
-
-
http://tamilvision.tv/tvi/clients/default.aspx http://tamilvision.tv/tvi/clients/Vote.aspx http://cmr.fm/ (press tamil)
-
- 0 replies
- 960 views
-
-
விஜயகலா கைது ஒரு அரசியல் நாடகமா? Gokulan இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் நிகழ்வொன்றின்போது விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவிவு நடத்திய பல கட்ட விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை முற்பகல் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கைப் பொலிஸ் திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சட்டத்தரணிகளுடன்…
-
- 0 replies
- 468 views
-
-
மருத்துவமனையை சவச்சாலையாக்கிய இந்தியப் படைகள்! October 21, 2018 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… 1987 ஒக்டோபர் 21, ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒருநாள். இந்தியப் படைகள் யாழ்மருத்துவமனையில் படுகொலை புரிந்த நாள். இந்திய அமைதிப் படைகள் மேற்கொண்ட படுகொலைகளில் ஒன்றான யாழ் போதனா வைத்தியசாலைப் படுகொலைகள் அல்லது யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நிகழ்ந்து 31 வருடங்கள் கடந்துவிட்டன. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியப் படைகள் அமைதிகாக்கும் படைகள் என்ற பெயரில் இலங்கைக்கு வந்தனர். அமைதியை ஏற்படுத்தவே இந்தியப் படைகள் வருகின்றன என்று ஈழத் தமிழர்களும் நம்பியிருந்தனர். தமிழ் மக்கள்மீது தமது தீர்வை திணிப்பதன் ஊடாக தமது …
-
- 0 replies
- 401 views
-
-
இன, மத சகிப்பு தன்மையும் புத்திசாலித்தனமும் மொஹமட் பாதுஷா / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:03 பல்லின சமூகங்களும் பல மதங்களைப் பின்பற்றுகின்ற மதக் குழுமங்களும் வாழ்கின்ற இலங்கை போன்ற நாடுகளில், மத சகிப்புத்தன்மை என்பது மிக முக்கியமானதாகும். இன ஒற்றுமை, மத நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றுக்கெல்லாம் முன்னதாக, மத சகிப்புத்தன்மை கட்டியெழுப்பப்படுவது அடிப்படையானது. சிறுபான்மைச் சமூகங்களின் மத நம்பிக்கைகளைப் பெரும்பான்மைச் சமூகங்கள், நெருக்குவாரங்களுக்கு உள்ளாக்குவதோ, நாசமாக்குவதோ ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. மறுபுறத்தில், பெரும்பான்மைச் சமூகத்தின் மத விடயங்களை, சிறுபான்மையினர் யாரும் கேலிக்குள்ளாக்குவதும் பெரும் சிக்கல்களைக் கொண்டு வரும். சுரு…
-
- 0 replies
- 840 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் முழுமையாக அகற்ற வேண்டும் – கலாநிதி தீபிகா உடகம March 10, 2019 பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் சர்வதேச அழுத்ததால் நிலையான பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது, இலங்கையில் சித்திரவதைகள் இன்னமும் தெடர்கின்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்தார். இதேவேளை, மனித உரிமைகளை அமுலாக்குவதற்கு அந்த விடயங்களை அரசியலாக்குவதே பிரதான தடையாக உள்ளதாகவும் கலாநிதி தீபிகா உடகம மேலும் தெரிவித்தார். பொறுப்புக்கூறல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கொழ…
-
- 0 replies
- 411 views
-
-
இந்திய - இலங்கை அரசுகள் தமிழர்கள் பக்கம் நிற்காது - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் விசேட செவ்வி இனப்பகை அரசியலை முன்னெடுக்கும் இந்திய இலங்கை அரசுகள் ஒருபோதும் தமிழர்கள் பக்கம் நிற்கப்போவதில்லை புரிந்து கொள்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்பதற்காகவே கால அவகாசம் வழங்கப்படுகின்றதென நடிகர் சங்கத்துணைத்தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா புறப்படுவதற்கு முன்னர் வீரகேசரிக்கு வழங்கிய விசேடசெவ்வி செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- இலங்கைக்கு வருகைதந்து ஈழத்தமிழர்களின் விடயங்களை நேரில் அவதானித்துச் ச…
-
- 0 replies
- 474 views
-
-
"சிங்கள பௌத்த மதவாத - இராணுவ மேலாதிக்கம்: தமிழர், முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல சிங்களவர்களுக்கும் ஒரு பிரச்சினையே" இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு பிரதான தடையாக இருப்பது தற்போதைய சிங்கள மதவாத இராணுவ மேலாதிக்கமே என்று கூறியிருக்கும் நோர்வே சமூக விஞ்ஞான அறிஞரான பேராசிரியர் ஓவின்ட் ஃபுக்லெருட் அந்த மேலாதிக்கம் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு மாத்திர மல்ல, பல சிங்களவர்களுக்கும் கூட ஒரு பிரச்சினையே என்று குறிப்பிட்டிருக்கிறார். வரலாறு நெடுகிலும் நிலைநாட்டப்பட்டு வந்திருக்கும் (குடிப்பரம்பலுடனும் மதங்களுடனும் மற்றும் சமூக -- பொருளாதாரத்துடனும் தொடர்…
-
- 0 replies
- 354 views
-
-
அனல்மின் நிலையம்: ஒன்று போய் நான்கு வந்தது Editorial / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 06:31 Comments - 0 புதிதாக நான்கு அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நீண்ட போராட்டங்களின் பின்னர் திருகோணமலை சம்பூரில் அமைக்கப்பட்டிருந்த அனல் மின் நிலையத்தை மூட முடிந்தது. இன்று ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்ற வகையில் அரசாங்கம் மீண்டும் அனல் மின் நிலையங்களை நோக்கி தனது கவனத்தைச் செலுத்துகிறது. அந்நான்கில் இரண்டு அனல் மின் நிலையங்கள் நுரைச்சோலையிலும் இரண்டு திருகோணமலையிலும் அமைக்கப்படவிருக்கின்றன. அரசாங்கத்தின் இம்முடிவு பல கேள்விகளை எழுப்புகின்றன. முதலாவது அனல் மின் நிலையங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கும் அதை அண்டியு…
-
- 0 replies
- 606 views
-
-
இலங்கையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இலங்கை பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட காலத்திலிருந்து எதிரும் புதிருமாக இயங்கிய இரண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் இன்று ஒரு தேசிய அரசாங்கத்தில் இணைந்திருக்கின்றன. இலங்கை சுதந்திரமடைந்த காலம்தொட்டே, இலங்கையின் இனத்துவ அரசியலும் முளைகொள்ளத் தொடங்கிவிட்டது. பின்னர் அது மெதுவாக வளர்ந்து, பெரும் இனவாத விருட்சமானது. இந்த இனவாத விருட்சத்தின் விசநிழலின் விளைவுகளைத்தான் கடந்த 67 வருடங்களாக இலங்கை அனுபவித்துவருகிறது. அந்த விளைவுகள் இலங்கையின் தலைமுறைகளை எவ்வாறு பாதித்தது என்பதை விபரிக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அது அனைவருக்குள்ளும் அனுபவங்களாக உறைந்துகிடக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்தான், தனிநாட…
-
- 0 replies
- 648 views
-
-
பிரித்தானியாவைச் சேர்ந்த 13 வயது சிறுமியொருவர் இறப்பதற்கான தனது உரிமையை நீதிமன்றத்தில் போராடி வென்றெடுத்துள்ளார். இருதய துவாரம் காரணமாக பாதிக்கப் பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹன்னா ஜோன்ஸ் என்ற சிறுமியின் உயிரைக் காப்பாற்ற இருதய மாற்றுச் சிகிச்சை மேற்கொள்வதை விட வேறு வழியில்லை என மருத்துவர்கள் தெரிவித்து, அச்சிகிச்சைக்கான நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கினர். ஆனால், ஹன்னா ஜோன்ஸோ அறுவைச் சிகிச்சைக்கு உட்பட மறுப்புத் தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமி இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டு ஆக வேண்டும் என கடந்த பெப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. எனினும், சிறுமியின் கோரி…
-
- 0 replies
- 924 views
-
-
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கையாளும் கொரோனாத் தொற்று தொடர்பான அணுகுமுறை – நியூசிலாந்து சிற்சபேசன் நியூசிலாந்து சிற்சபேசன் அதியுச்சமான சவால்களை கொண்டதாகவே 2020ம் ஆண்டு அமைந்துவிட்டது. அதற்குக் கொரோனாப் பேரிடர் ஆரம்பப் புள்ளியாகியது. இதோ முடிவுக்கு வருகின்றது. அதோ முடிவு தெரிகின்றது என்னும் கொரோனா குறித்த கணிப்புகள் வந்தவழியே திரும்பி ஓடிவிட்டன. தொற்று ஆரம்பமாகி ஒருவருடம் பூர்த்தியாகின்றது. கொரோனாவின் முடிவு குறித்த நம்பிக்கை, நாற்றுமேடையிலிருந்து வெளியே வரவே திணறுகின்றது. சமத்துவம் கிலோ என்ன விலை எனக் கேட்கும் காலத்தில், கொரோனாவின் சமத்துவம் வியப்பைத் தருகின்றது. நீதிமன்றங்களிலே கண்ணில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு நிற்கும் நீதிதே…
-
- 0 replies
- 512 views
-
-
அவுஸ்திரேலியா சிட்னியில் அமைந்துள்ள Seven Hills பாடசாலை மண்டபத்தில் 22.09.2013ம் நாள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் நினைவு கூரப்பட்டது. இன் நிகழ்வில் முதலாவதாக அவுஸ்திரேலிய, தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு பொதுச்சுடர், ஈகைச்சுடர் எற்றல், அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து வருகைதந்த மக்கள் அனைவரும் மலர்அஞ்சலி செலுத்தினார்கள். தமிழ் மக்களினதும், தமிழீழ மண்ணினதும் விடிவிற்காக, நீர்கூட அருந்தாமல், தன் உடலை வருத்தி 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்த லெப்டினன் கேணல் தியாக தீபம் திலிபன் அவர்களைப் பற்றிய சிறப்புக் கவி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அதைனைத் தொடர்ந்து “தற்போதைய காலகட்டத்தில் அகிம்சை வழியிலான போ…
-
- 0 replies
- 302 views
-
-
மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை எழுப்பும் ஞான சார தேரரின் நியமனம் ”2019மே 23 அன்றுபிக்குவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு, மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது , ஏனெனில் அது “சட்டத்தின் முன் சமத்துவம்” மற்றும் “ஒவ்வொரு இலங்கையருக்கும் பொதுவான சட்டம்” என்றஅனைத்து சட்ட விதிமுறைகளையும் நடைமுறைகளையும் மீறியது ம் நேரடியாக முரண்பட்டதுமாகும்.” 0000000000000000 பி.கே.பாலச்சந்திரன் 000000000 ஜனாதிபதிகோத்தாபய ராஜபக்ச , “ஒரு நாடு, ஒரே சட்டம்” என்ற கருத்தீட்டை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்கும், மதம், இனம் என்ற பேதமின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரே சட்டத்தை கொண்டு வருவதற்குமான சட்ட வரைவை தயாரிப்பதற்கு ஜனாதிபதி செயலணிபிரிவ…
-
- 0 replies
- 195 views
-
-
உலகில் பரப்பளவு ரீதியாக 121ஆவது இடத்தில் உள்ள நாடு இலங்கை. ஆனால் பாதுகாப்புக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 60 ஆவது இடம். இது 2009ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின் அடிப்படையிலான நிலைமை. அடுத்த வருடம் இலங்கை இந்தப் பட்டியலில் மேலும் முன்னேற்றம் காணப்போகிறது. 2009ஆம் ஆண்டை விடவும் 2010ஆம் ஆண்டில் இலங்கையின் பாதுகாப்புச் செலவு 2,500 கோடி ரூபாவினால் அதிகரித்திருந்தது. அடுத்த வருடம் பாதுகாப்புச்செலவு 1,300 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்போகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் பாதுகாப்புச் செலவினம் கிட்டத்தட்ட 3,800 கோடி ரூபாவினால் அதிகரிக்கின்ற நிலையில், இந்தப் பட்டியலில் இலங்கை மேலும் முன்னேறும் வாய்ப்புகள் அதிகம். உலகில் பரப்பளவு ரீதியாக 121 ஆவத…
-
- 0 replies
- 579 views
-
-
உருத்திரபுரம் என்னும் சிறு கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு 10 பிள்ளைகளில் 9வது பிள்ளையாக பிறந்து வறுமையின் கொடுமையில் வாழ்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கை.... துறைக்கு அப்பால்
-
- 0 replies
- 287 views
-
-
தமிழ் நாடு, பீஹார்: இரு மாநிலங்களின் வரலாறும், வதந்தி அரசியலும் Mar 06, 2023 07:01AM IST ராஜன் குறை கடந்த இரு தினங்களாக பரபரப்பான செய்தி என்னவென்றால் அது தமிழகத்தில் பணிபுரியும் பீஹார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக உருவான வதந்தியும், அதை நம்பிய பீஹார் மாநிலத் தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் திரும்ப முற்பட்டதும்தான். உண்மையில் எந்தத் தாக்குதலும் நிகழாதபோது எப்படி இந்த வதந்தி பரவியது, குறிப்பாக பீஹார் மாநிலத்தவர் மட்டும் தாக்கப்பட ஏதேனும் காரணம் இருக்க முடியுமா என்பதெல்லாம்தான் கேள்விகள். இதைத் தொடர்ந்து ஆராயும்போதுதான் வதந்திகளின் மூலம் பீஹார் மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஒருவர் என்பதும், அந்த மாநிலத்தின் அதிகாரபூர்வமான பாஜக கட்சி ட்விட்டர்…
-
- 0 replies
- 529 views
-