Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யாழ். திரைப்பட விழா விட்ட பெருந்தவறு புருஜோத்தமன் தங்கமயில் / 2018 ஒக்டோபர் 03 புதன்கிழமை யாழ். சர்வதேசத் திரைப்பட விழா இன்று புதன்கிழமை ஆரம்பிக்கின்றது. நான்காவது ஆண்டாக நடைபெறும், குறித்த திரைப்பட விழாவில் கவனம்பெற்ற உள்நாட்டு - வெளிநாட்டு படங்கள் திரையிடப்படுகின்றன. உள்ளூர் கலைஞர்களின் குறும்படங்களுக்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. ஆனால், இம்முறை திரைப்பட விழா ஆரம்பிப்பதற்கு முன்னரேயே, திரைப்பட விழாக்குழு கருத்துச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது, சர்ச்சைக்குரிய ‘Demons in Paradise’ என்கிற படத்தின் இயக்குநரான ஜூட் ரட்ணம். இம…

  2. தமிழரின் உணர்வுகளை உணரத் தவறினால்... காரை துர்க்கா / 2018 ஒக்டோபர் 02 செவ்வாய்க்கிழமை உலகத் தமிழ் இனத்தின் இதயத்தால் என்றும் பூஜிக்கப்படும் உயர்ந்த நாமம், ‘முள்ளிவாய்க்கால்’ ஆகும். இந்தப் பூமிப்பந்தில், தமிழ் இனத்தின் இறுதி மூச்சு உள்ள வரை, இப்பெயர் பெரும் வீச்சுடன் என்றும் உயிர் வாழும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான, ஆயுதப் போராட்டம், அமைதி கொண்ட புனித பூமி முள்ளிவாய்க்கால். அவ்வாறாக, என்றுமே விலத்தி வைக்க முடியாத, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, மனதில் இருத்தி, நினைவு கொள்ளல் நியாயமானது, நீதியானது, நிராகரிக்க முடியாதது. இவ்வாறாக, இவ்வருட நினைவேந்தலை (மே 18) தனியார் வங்கி ஒன்றின் கிளிநொச்சிக் கிளையில் நடத்தியமை, விவகாரத்தை ஏற்படுத்த…

  3. குருந்தூர் மலை விவகாரம் – பணம் இல்லாததினால் பிக்குகளை அழைத்தோம் – தொல்லியல் திணைக்களத்திற்கு நீதிமன்று எச்சரிக்கை : October 1, 2018 முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை தண்ணிமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் புத்தர் சிலைஒன்றினை நிறுவும் நோக்கில் புத்தர் சிலை வைப்பதற்காக பௌத்த மதகுருமார்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 04.09.18 அன்று புத்தர் சிலை உள்ளிட்ட கட்டுமான பொருட்களுடன் குருந்தூர் மலை பிரதேசத்துக்கு சென்றிருந்த வேளை பிரதேச இளைஞர்களினதும் கிராம மக்களினதும் எதிர்பினால் புத்தர் சிலை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பொலீசாரின் தலையீட்டுடன் ஏற்பட்ட முறுகல் நிலை சுமூகமாக்கப்பட்டது.…

  4. சிறுவர்களின் உரிமையை மறுக்கும் நாடுகளை உலகம் மயிலிறகால் தடவுகிறது – கடந்துபோகாத சிறுவர் தினம்! October 1, 2018 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழ நிலத்தில் குழந்தைகள் கைது செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு போராடுகிறார்கள். குழந்தைகள் தங்கள் வாழ் நிலத்திற்காக போராடுகிறார்கள். உரிமை மறுக்கப்பட்ட அடக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட இனத்தின் குழந்தைகள் எதையெல்லாம் சந்திக்கவேண்டுமோ அதை எங்கள் குழந்தைகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால்தான் மாபெரும் இழப்பும் மாபெரும் அபாயங்களும் நின்று மி…

  5. தனது நாட்டை மீண்டும் பேண்தகு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா தயாராகியுள்ளது. அடுத்துவரும் பத்தாண்டில் வளர்ந்து வரும் சந்தைகளில் தமக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காகத் தம்மை நன்றாகத் தயார்ப்படுத்தும் சில நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடங்குவதாக அண்மையில் மக்கின்சி பூகோள நிறுவகத்தால் – McKinsey Global Institute – மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்காவின் இந்த வளர்ச்சிக்கு சீனா தடையாக இருக்கும். சிறிலங்காவின் மனித மூலதனமே அதன் பலமாக உள்ளது. 2015ல் சிறிலங்காவின் மனித மேம்பாட்டுச் சுட்டியானது 0.766 ஆகக் காணப்பட்டது. இதனால் சிறிலங்காவானது உயர் மனித மேம்பாட்டு வகைக்குள் உள்ளடக்கப்பட்டது. உலக வங்கியால் மேற்கொள்ளப்பட்…

  6. இலங்கை போரில் காணாமல் போனோர் பற்றி அறிய ஆர்.டி.ஐ. உதவுமா? அருணா ராய் பதில் Aruna Roy ''நாட்டின் எந்தவொரு குடிமகனும் கேள்வி எழுப்பலாம். நெருக்கடி, சிக்கல்கள் நிறைந்த சூழ்நிலைகளில் கூட தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மிகவும் உதவுகிறது. ஜனநாயகம் எவ்வளவு முக்கியமோ (ஆர்டிஐ) அவ்வளவு முக்கியமானது. கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும்.'' என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து உறுதியாக பேசினார் இந்திய அரசியல் சமூக செயற்பாட்டாளர் அருணா ராய். சர்வதேச தகவல் அறியும் உரிமை தினம் அக்டோபர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அரச சேவை என்பது மக்களின் சேவையாக அறுதியிடப்படுகிறது. யார் வேண்டுமானாலும் கேள்வியை எழுப்பலாம். ஒட்டு மொத்த அரசாங்கமும் மக்களுக்கு பதில…

  7. நினை­வு­கூர்­தல் என்­பது வெறும் நிகழ்வு மட்­டுமா? தியாக தீபம் திலீ­ப­னின் 31ஆவது ஆண்டு நினை­வேந்­தல் இன்று கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது. ஏகப்­பட்ட இடர்­பா­டு­க­ளை­யும் தாண்டி தாய­கத்­தி­லும், புலத்­தி­லும் நினை­வு­கூர்­தல்­கள் இடம்­பெ­று­கின்­றன. தாயக தேசத்­தில் போருக்கு முடி­வுரை எழு­தப்­பட்ட பின்­னர் நினை­வு­கூர்­தலை நடத்­து­வது இன்­னொரு போரை நடத்­து­வ­தற்­குச் சம­மா­ன­தாக இருந்­தது. மகிந்­த­வின் ஆட்­சிக் காலத்­தில் மிக மிக இர­க­சி­ய­மாக அங்­கொன்­றும் இங்­கொன்­று­மாக நினை­வு­கூ­ரல்­கள் இடம்­பெற்­றன. ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் நினை­வு­கூர்­தல்­கள் வெளிப்­ப­டை­யா­கக் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அத்­த­கைய நினை­வு­கூ­ர்தல்கள…

  8. தமிழர்கள் ஒன்றுபடாத வரை -விமோசனம் கிடைக்காது!! தமி­ழர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டா­தி­ருந்­தால் தனி ஈழம் என்ற சிந்­தனை அவர்­கள் மத்­தி­யில் எழுந்­தி­ருக்­க­மாட்­டா­தென நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறீ­த­ரன் கூறி­யுள்­ளமை ஆட்­சி­யா­ளர்­க­ளின் கவ­னத்­துக்­கு­ரி­யது. தற்­போ­தும் தமி­ழர்­க­ளுக்­குப் பல வகை­யி­லும் அர­சி­யல் நகர்­வு­க­ளால் அநீ­தி­கள் இழைக்­கப்­பட்ட வண்­ணம்­தான் இருக்­கின்­றன. தமி­ழர்­கள் எதி­லும் முன்­னிலை வகிக்­கக்­கூ­டாது என்­பதை வேத­வாக்­கா­கக் கொண்டு பெரும்­பான்மை இன­வா­தி­கள் செயற்­பட்டு வரு­கின்­ற­னர். அரச நிர்­வாக சேவை­யில் ஆட்­களை இணைப்­ப­தற்­கான போட்­டிப் பரீட்­சை­யில் தமி­ழர்­கள் அதி­கம் சி…

  9. கருணாவை புனிதராக்கிவிட்டு பிரபாகரனை பாசிஸ்டாக்கும் லொஜிக்கை இன்னும் புரிந்துக்கொள்ள முடியவில்லை!.... கவிஞர் மாலதி மைத்ரி கவிஞர் மாலதி மைத்ரி – நேர்காணல்: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் மாபலி விருந்து அழைப்பு! ஆன்றோரே சான்றோரே பேரரறிஞர்களே மூதறிஞர்களே கவிஞர்களே கலைஞர்களே அரசு ஊழியர்களே என் உயிரினும் உயிரான தமிழர்களே நாம் சுவாசித்தது ஒரே காற்று நாம் பேசியது ஒரே மொழி நாம் நடத்தியது ஒரே பேரம் நாம் விதித்தது ஒரே விலை நாம் விற்றது ஒரே இனம் காட்டிக்கொடுக்க நீண்டதும் நம் ஒரே விரல் நாம் செய்ததும் ஒரே துரோகம் இம்மாபெரும் வரலாற்றை நாம் சாதித்த…

  10. சிங்களவர் செய்தால் சதி- தமிழர்கள் செய்தால் பயங்கரவாதமா? அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச அகி­யோ­ரைக் கொலை செய்­ய­வ­தற்­கான முயற்சி ஒன்­றினை விசா­ரணை அதி­கா­ரி­கள் கண்­ட­றிந்­தி­ருக்­கி­றார்­கள் என்று சொல்­லப்­ப­டு­கி­றது. அதில் பொலிஸ் மா அதி­ப­ருக்­குத் தொடர்­பி­ருக்­கக்­கூ­டும் என்­கிற கோணத்­தி­லும் விசா­ர­ணை­கள் நடக்­கின்­றன. பொலிஸ் திணைக்­க­ளத்­திற்­குச் சொந்­த­மான துப்­பாக்­கி­கள் இரண்டு பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரி­வுப் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் அவை அர­சி­யல் தலை­வர்­க­ளின் கொலைக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட இருந்­த­னவா என்­கிற கோணத்­தி­லும் விசா­ரணை முன்­னெ­…

  11. நம்பிக்கை இழந்துவரும் தமிழ் மக்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்தில் உரை­யாற்­ற­வுள்­ள­துடன் ஐ.நா. பொதுச் செய­லாளர் மற்றும் ஐ.நா.மனி­த­வு­ரிமை ஆணை­யாளர் ஆகி­யோரை சந்­தித்து பேச­வுள்ளார். ஜனா­தி­ப­தியின் இந்த சந்­திப்பு பெரும் எதிர்­பார்ப்பை தோற்­று­வித்­துள்­ளது. தனது உரை எந்­த­வ­கை­யான விமர்­ச­னத்­துக்­குள்­ளான போதும் அது தொடர்பில் தான் கவலை கொள்­ளப்­போ­வ­தில்லை எனவும் ஜனா­தி­பதி ஏலவே தெரி­வித்­துள்ளார். குறிப்­பாக இலங்கைப் படை­யி­ன­ருக்கு எதி­ரான போர்க் குற்­றச்­சாட்­டுக்­களை நீக்கும் யோச­னை­களை ஜனா­தி­பதி முன்­வைப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான சர்ச்­சை­க­ளுக்கு மத்­தியில் ஏலவே ஜெனீவா மனித …

  12. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI / GETY IMAGES Image captionகோப்புப்படம் இலங்கையின் மத்திய மலையகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கோரி தலவாக்கலை நகரில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. மலையக அரசியல் கட்சிகளின் கூட்டணியான …

  13. ஈழம் திரும்பும் அகதிகள்- எதிர் நோக்கும் பிரச்சினைகள்!! இந்­தி­யா­வில் இருந்து இலங்­கைக்­குத் திரும்­பு­கின்ற ஈழ அக­தி­கள் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­கள் பற்­றிய பேச்­சா­டல்­கள் எழுந்­துள்­ளன. ஈழத்­துக்­குத் திரும்­பு­கின்ற இந்த அக­தி­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு உட­ன­டி­யா­கத் தீர்வை ஏற்­ப­டுத்­து­ வ­தன் மூலமே இந்­தி­யா­வில் தஞ்­ச­ம­டைந்­தி­ருக்­கின்ற ஈழ அக­தி­கள் அனை­வர் மத்­தி­யி­லும் தாய­கத்­துக்­குத் திரும்­பும் மனோ­நி­லையை உரு­வாக்­கிக் கொள்ள முடி­யும் எனச் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. இலங்­கை­யில் இடம்­பெற்ற போரின் கார­ண­மாக வடக்­குக் கிழக்­கில் இருந்­து­வெ­ளி­யே­றிய கிட்­டத்­தட்ட 3இலட்­சம் மக்­கள் இந்­தி­யா­வில் தஞ்­ச­…

  14. நினை­வேந்­தல்­க­ளுக்கு உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­கள் உவப்­பா­ன­வை­யல்ல! தியாக தீபம் திலீ­பன் நினை­வின் இறுதி நாள் நிகழ்­வு­களை யாழ்ப்­பா­ணம் மாந­கர சபையே பொறுப்­பேற்று நடத்­தும் என்று நகர பிதா ஆர்­னோல்ட் அறி­வித்­தி­ருக்­கி­றார். இந்த நினை­வேந்­த­லின் தொடக்­கத்­தில் இரண்டு கட்­சி­க­ளுக்­கி­டை­யில் ஏற்­பட்ட முரண்­பாட்­டைத் தொடர்ந்து, நிகழ்­வு­களை மாந­கர சபையே நடத்­தும் என்­கிற அறி­விப்பு வந்­தி­ருக்­கி­றது. இது தூர நோக்­கற்ற, தற்­கா­லி­கத் தீர்­வைக் காணும் முறை­மை­யைக் கொண்ட ஒரு நகர்வு. ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யா­தது. உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­ட­வேண்­டும். தியாகி திலீ­பன் 5 முக்­கிய கோரிக்­கை­களை முன்­வைத்து நல்­லூர் …

  15. நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மிக சிறியதொரு நாடு. இந்தியாவின் பரப்பளவை ஒப்பிடுகையில் இஸ்ரேலின் பரப்பளவை விட நூறு மடங்கு பெரியது இந்தியா. இஸ்ரேல் நாட்டின் பரப்பில் பாதிக்கும் மேல் நெகவ் பாலைவனம். ஒன்றரைக் கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஒரு சிறிய நாடு. இஸ்ரேல் மீது பல்வேறுபட்ட எதிர்மறை கருத்துகள் இருந்த போதிலும் தன்னம்பிக்கைக்கு இந்த நாட்டை விட உலகில் வேறு எந்த நாட்டையும் உதாரணமாக கூற முடியாது. உண்மையில் யூதர்களுக்கு உடல் முழுக்க மூளை எனும் வார்த்தை நன்கு பொருந்தும். 1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி தான் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகள் ஹீப்ரூ மற்றும் அராபி. இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ். இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகையில்…

  16. அரசுக்குத் தொடர்ந்தும் – ஆதரவை வழங்க வேண்டுமா கூட்டமைப்பு? கூட்­ட­ர­சுக்­குத் தொடர்ந்­தும் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்க வேண் டுமா? என்ற கேள்வி தமிழ் மக் கள் மத்தியில் தற்­போது தோன்­றி­யுள்­ளது. தாம் பல வகை­களிலும் இந்த அர­சால் ஏமாற்­றப்­பட்டு, நடுத்­தெ­ரு­வில் நிற்­ப­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சேனா­தி­ராஜா வெளிப்­ப­டை­யா­கவே குற்­றம் சாட்­டி­யி­ருந்­தார். அது அர­சின் மீதான கூட்­ட­மைப்­பின் வெறுப்­பைத் துலாம்­பா­ர­மா­கவே எடுத்­துக்­காட்­டி­விட்­டது. மாவை சேனா­தி­ரா­ஜா­வின் கருத்­தில் நியா­யம் இல்­லா­ம­லில்லை. இறு­தி­யாக இடம்­பெற்ற அரச தலை­வர் தேர்­த­லில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் வெற்­றியை உறுதி செய்­த­தில் கூட்­ட­மை…

  17. மன்­னார்ப் புதை­குழி மீதான -பன்­னாட்­டுக் கவ­னம்!! மன்னார் சதோச நிறு­வ­ன வளாகத்தில் தொடர்ச்­சி­யாக மீட்­கப்­பட்­டு­ வ­ரும் மனித எலும்­புக்­கூ­டு­கள், எச்­சங்­கள் அவற்­றின் மீதான அதிக கவ­னத்­தை­யும் அக்­க­றை­யை­யும் கோரி நிற்­கின்­ற­ போ­தும் அது அர­சி­யல் அரங்­கி­லும் பன்­னாட்டு அரங்­கி­லும் ,பேசு­பொ­ரு­ளா­காது மறை­பொ­ரு­ளாக விளங்­கு­வது கவலை தரும் விட­யம். மன்­னார் நக­ரின் மத்­தி­யில் உள்ள பகு­தி­யில் சதோச வளா­கம் அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­போது தற்­செ­ய­லா­கக் கண்­ட­றி­யப்­பட்­டதே இந்த மனி­தப் புதை­குழி. கட்­ட­டம் அமைப்­ப­தற்­காக மண்ணை அகழ்ந்­தெ­டுத்த நிறு­வ­னம் அதைப் பள்­ளக் காணி­களை நிர­வு­வ­தற்­க…

  18. பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் ஜனா­தி­ப­தியின் புதிய யோசனை இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்தி நீதி வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென்று ஐ.நா. மனித உரிமை பேரவை வலி­யு­றுத்தி தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­யுள்ள நிலையில் அதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­பதில் இலங்கை அர­சாங்கம் காலம் ­தாழ்த்தி வரு­கின்­றது. சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையின் கீழ் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் இணங்­கி­யி­ருந்­த­போ­திலும் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது சர்­வ­தேச சமூகம் நம்­…

  19. இன்றைக்கும் தொடரும் கண்ணிவெடி ஆபத்து! கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரை இரைக்காக காத்துக் கிடக்கின்றன வெடிப்பொருட்கள் பெண் தலைமைத்துவக் குடும்பமாகிய எனக்கு ஒரு தொழல் வாய்ப்பும் அதற்கான சம்பபளமும் மாதாந்தம் கிடைக்கின்றது. ஆனால் இதுஒரு ஆபத்தான தொழில். நான் சுயகௌரவத்தோடு வாழவேண்டும் என்பதால்தான் இந்த கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன். எனினும் தினமும் அதிகாலையில் வேலைக்குச்செல்வதும் என்னுடைய உழைப…

  20. புலிகளின் போராட்டத்தை விடவும் பெரியதொரு போராட்டத்தை நடத்த யாரும் தயாரா? கர­வெட்டி பிர­தேச சபை பொது மண்­ட­பத்தில் நேற்று முன்தினம் நடை­பெற்ற தியாக தீபம் திலீ­பனின் 31ஆவது ஆண்­டு நினைவுநிகழ்வில் சுமந்­திரன் எம்.பி. ஆற்­றிய உரை தியாக தீபம் திலீ­பனின் 31 ஆவது நினைவு தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. எமது இன விடு­தலைப் பய­ணத்தில் பல வித­மான தியா­கங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. அதில் அதிக தியாகம் செய்­த­வர்­களில் திலீபன் முக்­கி­ய­மா­னவர். அகிம்சை வழியில் எமது கட்சி பல ஆண்­டுகள் போரா­டி­யது. இடையில் ஆயுதப் போராட்டம் நடை­பெற்­றது. அப் போராட்­டத்தில் பலர் தமது உயிர்­களை அர்ப்­ப­ணித்­தனர். பலர் பல்­வேறு தியா­கங்­களைப் புரிந்­தனர். ஆயுதப் போராட்டத்தி…

  21. மட்டக்களப்பில் மண் மாபியாக்களால் அழியும் ஒரு விவசாய பூமி! September 16, 2018 ©தமிழ்பக்கம் மண் வியாபாரிகளால் இந்த பூமி சுரண்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது போலுள்ளது. திரும்பும் திசையெல்லாம் மண் மாபியாக்களால் பூமியின் துண்டுகள் பணமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வில் பேரிடியாக விழுந்து கொண்டிருக்கும் மண் வியாபாரத்திற்கு எதிராக அவர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அது பெரும் திருவிழாவில் தொலைந்து சிறு குழந்தையின் அழுகுரலைப் போல, அதிகார அமைப்புக்களின் காதில் விழாமலேயே போய் விடுகிறது. அப்படியொரு கதைதான் இந்த கதையும். மட்டக்களப்பில் பாலமடு வடக்கு கண்ட விவசாயிகள், தமது விவசாய நிலங…

  22. யாழ்ப்பாணத்து -திருமண மண்டபங்களும்- உணவுகளும்!! இந்­தக் கட்­டு­ரையை வாசிப்­ப­தற்கு முன்­ப­தாக நீங்­கள் ‘றற் ராட்­ரூய்லி’ என்­கிற கர்ட்­டூன் திரைப்­ப­டத் தைப் பார்த்­தி­ருக்­க­வேண்டும். அந்­தப் படத்­தைப் பார்த்­தி­ருந்­தால் இந்த விட­யத்­தைப் புரிந்து கொள்­வது மிக­வும் சுல­ப­மாக இருக்­கும். ‘பிரட் பேர்ட்’ இயக்கி, 2007 ஆம் ஆண்­டில் வெளி­யான இந்­தத் திரைப் ப­டத்­துக்­குச் சிறந்த அசை­வூட்­டத் திரைப்­ப­டத்­துக்­கான ஒஸ்­கார் விருது கிடைத்­தி­ருந்­தது. குப்பை கூளங்­க­ளைக் கிள­றி­யும், களவு செய்­தும், மனி­தர்­கள் கழித்­து­விட்ட உண­வு­களை உண்­கின்ற எலி­க­ளுக்கு மத்­தி­யில் அதற்­கெல்­லாம் அப்­பாற்­பட்­டுச் ச…

  23. இனி­யும் வேண்­டாமே பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம்!! பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­ட­மா­னது இலங்­கை­யில் மோச­மான மனித உரிமை மீறல்­க­ளுக்­குத் துணை­போ­யி­ருக்­கி­றது என்று சாடி­யி­ருக்­கின்­றது, அனைத்­து­வி­த­மான அநீ­தி­கள் மற்­றும் இன­வா­தங்­க­ளுக்கு எதி­ரான பன்­னாட்டு இயக்­கம். அதி­லும் குறிப்­பாக தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக இந்­தச் சட்­டம் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது என்­ப­தை­யும் அது குறிப்­பிட்­டி­ருக்­கின்­றது. பயங்­க­ர­வா­தத் தடைச்ச ட்டத்­தின் ஊடா­கத் தன்­னிச்­சை­யான கைது­கள் மற்­றும் தடுத்து வைத்­தல்­கள் இடம்­பெற்­றுள்­ளன, சித்­தி­ர­வ­தை­கள் இடம்­பெற்­றுள்­ளன, சட்­டத்­த­ர­ணி­யின் துணை இன்­றிப் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் ஒப்­பு­தல் வாக்­கு­மூ­ல…

  24. வடக்கு மாகாண கல்வித் துறையில் கவனம் கொடுக்கவேண்டிய துறையும் கவனிப்பாரற்ற நிலையும் இலங்கையின் பாடசாலைக் கல்வி முறையில் காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்தப்படும் பல்வேறு புதிய சிந்தனைகளில் வழி அண்மைக்காலத்தில் அதிகம் கவனம் கொடுக்கப்படும் விடயமாக மாறியிருப்பது பாடசாலைகளில் அமைந்துள்ள ஆலோசனை மற்றும் வழிகாட்டல் அலகு (Counselling and Guidance Unit ) ஆகும். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா தனது கட்டுரையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாறிவரும் உலகின் இயல்புக்கும், சவாலுக்கும் ஏற்ற விதத்தில் நமது மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் அவர்கள் தினம் தினம் சந்திக்கும் பு…

  25. மிருகபலியும் பெரஹெரக்களில் யானைகளும் Gopikrishna Kanagalingam / இந்து ஆலயங்களில், சடங்குகளுக்காக மிருகங்களைப் பலிகொடுப்பதைத் தடைசெய்வதற்காக, இந்து சமய விவகார அமைச்சுச் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்ற செய்தி, நேற்று முன்தினம் (11) எம்மை எட்டியிருந்தது. இச்செய்தி வெளியானதும், இதை எப்படி ஆராய்வது என்பதில் குழப்பம் நிலவியதென்பது உண்மை தான். ஏனென்றால், இந்து ஆலயங்களில் மிருகபலிகளைத் தடைசெய்யுமாறு, இந்து அமைப்புகளும் இந்து ஆலயங்களில் சிலவும், தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்து வந்தன. ஆகவே, அவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட்ட ஒரு விடயமாக இது அமைந்திருக்கிறது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.