Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முல்லைத்தீவு எனும் போராட்ட பூமி Editorial / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 04:11 - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கையின் வடக்குப் பகுதி, பல்வேறு விடயங்களுக்காகப் பெயர்போனது. ஒரு காலத்தில், அறிவியலாளர்களைத் தோற்றுவித்த பகுதியாகவும், தமிழர் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னின்ற பகுதியாகவும், வடக்குக் காணப்பட்டது. ஆனால், 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த அவலங்கள், அதன் பின்னரான பொருளாதாரப் பிரச்சினைகள், நுண்கடன் பிரச்சினைகள், கடும் வரட்சி என, அவல பூமியாக வடக்கு மாறியிருப்பதாகவே தெரிகிறது. இந்த அவலங்களுக்கெல்லாம் முடிவில்லை என்பதைப் போலத் தான், வடக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் அமைந்திருக்கிறது. வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைப் பிரதானமாகவும்,…

  2. மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட உலகளாவிய ஆதரவாளர்களைக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை 2011 டிசம்பர் 10ம் நாள் தனது ஜம்பது வருட வாழ்வை நிறைவு செய்துள்ளது. பீற்றர் பெனன்சன் (Peter Benenson) என்ற பிறிட்டிஷ் வழக்கறிஞர் தனி மனிதனாக இந்த அமைப்பபைத் தோற்று வித்தார். போத்துக்கல் நாட்டு இரு இளம் மாணவர்கள் அடக்கு முறைக்கு எதிராகக் கோசமிட்டதற்காக 1961ம் ஆண்டு சிறை வைக்கப்பட்டார்கள். இதை அறிந்த பீற்றர் பெனன்சன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் ஒப்சேவர் பத்திரிகை வாயிலாக “மறக்கப்பட்ட கைதிகள்” (The Forgotten Prisoners) என்ற கட்டுரையைப் பிரசுரித்தார். அந்தக் கட்டுரையில் அவர் “மன்னிப்புக்கு மனு 1961” என்ற கோரிக்கையை (Appeal to amnesty 1961) விடுத்தார். அதற்கு உலகளாவிய வரவேற்ப…

  3. இன்று உலக தண்ணீர் தினம் - தண்ணீரின் அவசியம் மற்றும் பராமரிப்பு மீதான விழிப்புணர்வுக்காக உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டாலும் தின கொண்டாட்ட எல்லைகளை எல்லாம் கடந்த முக்கியத்துவமுடையது தண்ணீர் என்பதே உண்மை. வாழ்த்த வயதில்லை என்பது போல, தண்ணீரை போற்ற மனிதனுக்கு தகுதியில்லை. உயிர்கள் உட்பட, இயற்கையிலிருந்து திரிக்கப்பட்ட செயற்கையும் சேர்த்து இங்கு எல்லாம் இயற்கையின் மூலதனமே! பஞ்ச பூதங்கள் பாதிப்பு இயற்கையின் முக்கிய அங்கங்களாக விளங்குவது நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களே. அதற்குப் பிறகுதான் உயிர்கள். மனிதர்கள் பஞ்ச பூதங்களையே பாழ்படுத்துவதை இயற்கை பொறுக்கவே பொறுக்காது. வெப்பம், புயல், புகம்பம் என பேரிட…

  4. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்த பந்த்தைத் தொடர்ந்து... பிப்ரவரி 4-ந்தேதியின் காலைப்பொழுது பரபரப்பாகவே விடிந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்க... பல வீடுகளில் கருப்புக் கொடிகள் பறந்தன. தனியார் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட... ஓடிய ஒரு சில அரசுப் பேருந்துகளும் அங்கங்கே நடத்தப்பட்ட மறியலால் பிற்பகலில் நிறுத்தப்பட்டு விட்டன. பொம்மிடி ரயில் நிலைய வளாகத்தில் காலை 11 மணிக்கு பெட்ரோல் டின்னுடன் தீக்குளிக்க வந்த சிறுத்தைகள் இயக்கத் தைச் சேர்ந்த முருகனை, மடக்கிப் பிடித்து காக்கிகள் கைது செய்ய... பலத்த பரபரப்பு பற்றிக் கொண்டது. பந்த்துக்கு மத்தியில் கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த ஒரு கும்பல்…

    • 0 replies
    • 752 views
  5. முகமது நபிகளின் உருவப்பட சர்ச்சை: திருக்குர்ஆன் என்ன சொல்கிறது? சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் பட மூலாதாரம், GETTY IMAGES இஸ்லாமியர்கள் இறைத்தூதராக வணங்கும் முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் பிரான்சில் மறுபதிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும் அது குறித்த பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கருத்துகளும் தொடர்ந்து விவாதத்துக்குள்ளாகி வருகின்றன. இதன் எதிரொலியாக, பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம்கள் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்…

  6. 1984-இல் நடந்த சீக்கியப் படுகொலை தொடர்பான வழக்கொன்றில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்த காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமார், அவ்வழக்கு தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் – கொலைக்குற்றம் மற்றும் கலவரம் – விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 29 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடி வரும், நீதிக்காகக் காத்திருக்கும் சீக்கியர்களிடம் இந்த அநீதியான தீர்ப்பு எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பதை எந்தவொரு வார்த்தையாலும் விவரித்துவிட முடியாது. 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று காலையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய மதத்தைச் சேர்ந்த இரண்டு மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்துத் தொடங்கிய சீக்கியப் படுகொலை நவம்பர் 3-ஆம் தேதி வரை …

  7. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறீலங்காவுக்கான விஜயம் நிறை வடைந்திருக்கின்றது. போர் நிறைவடைந்த பின்னரும் நித்தம் கண்ணீருடன் அம்மையாரின் வருகையினையும், வார்த்தைகளையும் எதிர்பார்த்து காத்திருந்த தமிழர்களின் முகங்கள் மிதிக்கப்பட்டிருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான விஜயத்தின் நிறைவில் அம்மையார் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். குறித்த சந்திப்பும், அங்கே பேசப்பட்ட வார்த்தைகளும் எங்கள் கன்னங்களில் காய்ந்திருந்த கண்ணீர் தடங்களை அழிக்க தவறியிருக்கின்றன என்பதே யதார்த்தம். ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் என்னைச் சந்தித்த மக்கள் காவல்துறையினர் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல’ என அம்மையார் அந்த…

  8. சிங்கள அரசு போர்க்குற்றவாளியே உலக மக்கள் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு தமிழாக்கம் : பூங்குழலி (செவ்வாய், பிப்ரவரி 16, 2010 23:14 | அகரவேல். சென்னை) மக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான லெலியோ பாசோ உலகளாவிய அமைப்பினால் ஆதரித்து ஊக்கப்படுத்தப்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இத்தாலியில் உள்ள பொலோக்னாவில் ஜுன் 1979-இல், 31 நாடுகளைச் சேர்ந்த பல சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு வென்ற 5 பேர் உட்பட பிற பண்பாட்டு மற்றும் சமூகத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. வியட்நாம் (1966-67) மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சர்வாதிகாரங்கள் (1974-76) மீதான ரஸ்சல் தீர்ப்பாயத்தின் மூலம் பெற்ற வரலாற்று அனுபவங்களை தனது அடிப்படையாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கொண்டுள்ளது. …

    • 0 replies
    • 724 views
  9. மிரண்டுபோயுள்ள சிங்களதேசம்! சர்வதேசமே அதிர்ந்த தமிழரின் எழுச்சி | Nijakkan | தமிழர் எழுச்சி பேரணி செய்தி உள்ளடக்கங்களுக்கு அப்பால் தமிழ் ஊடகங்கள் வைக்கும் தலைப்புகள் நகைப்பிற்கிடமானதாக இருப்பதை ஏன் உணர மறுக்கின்றனர். ஊடகங்கள் தொடர்ந்தும் இந்தக் கருத்தியல் தவறினைச் செய்வது குறித்து சிந்திக்கமாட்டார்களா? நன்றி நன்றி - யூரூப்

    • 0 replies
    • 272 views
  10. தமிழ்க் கூட்டமைப்பின் நிபந்தனை சாத்தியமா? பதிவேற்றிய காலம்: Oct 29, 2018 நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலையில் மகிந்த, ரணில் இருவரும் தள்ளப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்மானகரமான சக்தியாக மேலெழுந்துள்ளது. பேரம் பேசல்கள் ஊடாகப் பணத்தை அள்ளி வீசி ஐக்கிய தேசியக் கட்சித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை மகிந்த, மைத்திரி தரப்பு தம் பக்கம் இழுத்துக்கொள்ளாத நிலையில் கூட்டமைப்பு மட்டுமே ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் ஒரே சக்தியாக மேலெழும் வாய்ப்பும் உள்ளது. இத்தகைய ஒரு வாய்ப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறது என்பதை அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தியிருக்கி றார். புதிய அரசமைப்ப…

  11. லத்தீப் பாரூக் தமிழில்: சப்ரி அஹமட் கடந்த 14 மாதங்­க­ளுக்கு மேலாக தண்ணீர், உணவு, மருந்து, மின்­சாரம் உள்­ளிட்ட உயிர் வாழ்­வ­தற்­குத் ­தேவை­யான அனைத்தும் பறிக்­கப்­பட்ட நிலையில் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்­மனி போன்ற நாடு­களால் விநியோ­கிக்­கப்­பட்டு வீசப்­படும் 85,000 தொன் இற்கும் அதி­க­மான குண்­டு­க­ளாலும் இஸ்­ரேலின் அதி நவீன அழிவு தரும் ஆயு­தங்­க­ளி­னாலும் இன்­று­வரை காசா, பலஸ்தீன் மக்­களின் மீதான படு­கொலை தாக்­கு­தல்கள் தினம் தினம் அரங்­கே­றிக்­கொண்­டி­ருக்­கின்­றன. இந்த அப்­பட்­ட­மான இனப்­ப­டு­கொ­லைக்கு அமெ­ரிக்­காவின் அடி­வ­ரு­டி­க­ளாக செயற்­படும் சில முஸ்லிம் அரபு நாடு­களும் உடந்­தை­யாக உள்ளன. இரண்டாம் உல­கப்­போ­ருக்­குப்­பின்னர் மனி­…

    • 0 replies
    • 212 views
  12. ‘இலங்கைத் தீவில் தனிநாடு அமைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களான வடக்கு, கிழக்குக்கு சுயாட்சித் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதில், இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரங்களை ஒத்ததான அரசியல்த் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பதில் அனைத்துலக மட்டத்தில் பெருமளவு ஆதரவு நிலவுகின்றது. அதே கருத்தினையே நானும் கொண்டிருக்கின்றேன்’ என நோர்வேயின் முன்னாள் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கின்றார். போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு எனும் தலைப்பில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கிலேயே எரிக் சொல்ஹெய்ம் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார்…

  13. ஸ்ரீலங்கா சுதந்திரதினம் தமிழின அழிப்பு துவங்கிய நாள் - கவிஞர் தீபச்செல்வன். 1948 ஆம் ஆண்டு சிலோன் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீலங்காவுக்கு பிரித்தானியர்கள் சுதந்திரம் வழங்கினர். ஆனால் அன்றைய நாள் ஈழத் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசால் இன்னொரு காலனித்துவ அரசாக அடிமை கொண்ட நாளாகும். அத்துடன் அந்த நாளில் இருந்தே தமிழின அழிப்பும் துவங்கப்பட்டது. ஈழத் தமிழ் மக்களாகிய எம்மைப் பொறுத்தவரை எம்மை புறக்கணித்த, எம்மை ஒடுக்கிய, எம்மை இன அழிப்பு செய்கின்ற திட்டமிட்ட செயல்களால் இந்த நாள் கரி நாளாகிறது. சிங்கள இனத்திற்கு சுதந்திர தினமாகவும் இன்னொரு இனமாகிய ஈழத் தமிழர்களுக்கு இந்த தினம் துக்க தினமாகவும் அமைகிறது. இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச செயலகங்களில் மாத்திரம் அநாதர…

  14. ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் எங்கள் விடயம் பேசப்பட தளம் இல்லாமல் போய் விடுமா? 7 Views ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் எங்கள் விடயம் பேசப்பட தளம் இல்லாமல் போய் விடும் என்று கூறுவதில் உள்ள நியாயத்தை நான் தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றாலும் அதனை கவனிக்க வேண்டிய கரிசனையாக ஏற்றுக் கொள்ளலாம். எமது முடிவெடுக்கும் செயன்முறையில் இவ்விடயம் ஒற்றைக் காரணியாக தாக்கம் செலுத்தக் கூடாது என்பது தான் எனது நிலைப்பாடு. அந்த அடிப்படையில் கருத்தாழமான விவாதத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பின்வரும் கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்: —————— …

  15. “குறைப்பாடுகளை நீக்கும் வகையில் PTA திருத்தங்கள் இல்லை” – சிவில் சமூகத்தினர் அறிக்கை February 11, 2022 Photo: Ishara S. Kodikara/Getty Images, HRW கடந்த ஜனவரி 27, 2022 அன்று இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) மீதான திருத்தச் சட்ட மூலத்தினை வர்த்தமானியில் வெளியிட்டது. பாரிய மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) எந்தவொரு குறைபாடுகளையும் அகற்றும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் காணப்படாததையிட்டு இதன் கீழ்க் கையொப்பமிடும் நாம் எமது ஆழ்ந்த அதிருப்தியை வெளியிடுகின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டம் வரலாற்று ரீதியாக தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருவதையும் உயிர்த்த ஞாயிறு தாக…

  16. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சரியான விசாரணைகளை நடத்த முடியாது என ஐக்கிய நாடுகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. விசாரணைகளை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோருவதன் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும் என கருத முடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சில வேளைகளில் இந்த விசாரணை முடிவுகள் நீதியின் மறுபக்கத்தையே பிரதிபலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஆங்கில ஊடகமான பொஸ்டன் க்ளோப் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை மேற்கோள் காட்டி, ஐக்கிய நாடுகள் கண்காணிப்பகம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. விசாரணைகளை நடத்தும் பொறுப்பை கண் மூடித்தனமாக ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் ஒப்படைக்கக் கூடாது என தெரிவித்துள்ளது. …

    • 0 replies
    • 506 views
  17. இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி [ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 11:36.39 PM GMT ] லங்காசிறி இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட 15 புலி ஆதரவு அமைப்புக்களின் உறுப்பினர்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் நவனீதம்பிள்ளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 1373ம் பிரகடனத்தின் அடிப்படையில் குறித்த அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது. எனவே குறித்த அமைப்புக்களைச் சேர்ந்த எவரையும் நவனீதம்பிள்ளையினால் விசாரணைகளில் இணைத்துக்கொள்ள முடியாது…

    • 0 replies
    • 402 views
  18. ஈழத்தான் கிருபா லைக்கா சுபாஸ்கரனை அடுத்து 10 டாலருக்கு இணையம் நடத்தும் இணைய போராளிகளின் அடுத்த இலக்கு தமிழ் தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மேல் பாய்கிறது. ஆனந்த கிருஷ்ணன் ஈழத்தின் யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவரும் மலேசியாவில் குடியேறியவரும் ஆவார். இவர் உலகின் 82 வது செல்வந்தரும் மலேசியா நாட்டின் 2 வது செல்வந்தராகவும் உள்ளார். உலகின் முதல் 100 செல்வந்தர்களுள் உள்ள ஒரே தமிழர் என்ற பெருமையும் இவரையே சாரும். இவர் மலேசிய நாட்டின் Maxis மற்றும் இந்திய Aircel நிறுவனங்களின் முதன்மை பங்குதாரர் என்பதுடன் மேலும் இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கும் தமிழீழ போராட்டத்திற்கும் என்ன தொடர்பு? எதற்காக…

  19. கைதிகளைச் சிறையிலடக்கத் துணை போன டக்ளஸ் இன்று விடுதலை செய்யக் கோருகிறார் பத்துவருடங்களாக இனக்கொலையாளிகளான ராஜபக்ச குடும்பத்தின் அடியாளாகவிருந்து செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென சிறைக் கைதிகள் மீது அக்கறை பிறந்துள்ளது. மகிந்த அரசில் செல்வாக்கு மிக்க அரசியல் வாதியாகத் திகழ்ந்த டக்ளஸ் கைதிகள் தொடர்பாக மூச்சுக்கூட விட்டதில்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொள்ள நேரிட்டதும் சிறைகளில் வாடும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பfடவேண்டும் எனக் பாராளுமன்றத்தில் கோரியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பதாக மகிந்த ராஜபக்சவே தமிழ் மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்படுகிறார் என்று கூறிய டக்ளஸ் நேற்றுப் பாராளுமன்றத்தில் மகி…

  20. அரசியல் யாப்பு சதிப்புரட்சியிலிருந்து தற்காலிகமாக இலங்கை மீண்டதன் பின்.. 11/14/2018 இனியொரு... இந்திய அதிகாரவர்க்கத்தின் பின் தங்கிய கோட்பாட்டு பின்புலம் இந்துத்துவ பாசிசம் என்றால், இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாதம் செயற்படுகிறது. இந்தியாவில் இந்துத்துவத்தின் பாசிச வடிவம் மோடி அரசு என்றால் அதன் இலங்கைக்கான பாசிச முன்முகம் ராஜபக்ச குடும்பம். மகிந்தவின் மீட்சிக்கு எதிரான தற்காலிகப் பின்னடைவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இலங்கையிலுள்ள ஜனநாயக முற்போக்கு அணிகளாலும், சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சார்ந்த மக்கள் பிரிவுகளாளும் இத்தீர்ப்பு வரவேற்பைப் பெற்றது. மகிந்த மீட்ட்சி பெற்றதும், பேரினவாதம் மற்றும் அடிப்படைவாதம் கலந்த பேச்சுக்க…

  21. பட மூலாதாரம்,TAMILOLI.NET கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், தமிழர் தாயகத்தின் சுதந்திரத்திற்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்படும் யுவதி, நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என கூறப்படும் யுவதியின் உரை, இலங்கை நேரப்படி நேற்று மாலை ஒளிபர…

  22. நாட்டை ஆள்வதற்கு தகுதியுடையவர் என்பதால் கோத்தாபயவிற்கு ஆதரவளிக்கிறேன் - ஆளுநர் பதவி வதந்தி-- முரளீதரன் பேட்டி எங்கள் நாட்டை ஆட்சி புரிவதற்கு தகுதியானவர் என்பதால் நான் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கின்றேன் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் டைம்சின் பத்மா ராவோ சுந்தர்ஜிக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் பேட்டி தமிழில் - வீரகேசரி இணையம் கேள்வி இலங்கையின் வடமாகாணத்தின் ஆளுநராக பதவியேற்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உங்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் நீங்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன இதனை உறுதி செய்ய முடியுமா? பதில் இல்லை இ…

  23. [size=3][size=4][/size] [size=4]“உயிர்கள் மிக உன்னதமானது ஆனால் தமிழர்களின் உயிர்களுக்கு அல்ல”..என்ற கோட்பாட்டை ஐ.நாவும், இந்தியாவும் அமைதியாகவும், வெளிப்படையாகவும் எப்போதோ சொல்லியாச்சு![/size] [size=4]தமிழனாக பிறந்ததே தப்பா என்று இன்று நாம் ஒவ்வொருவரும் நம்மைநாமே கேட்டுக்கொள்ளும் கட்டங்கள் தாண்டி இன்று மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.[/size] [size=4]என் சகோதரன் இறப்பு கண்டு இன்னுமொரு சகோதரன் குரல் கொடுப்பதும், ரௌத்திரம் கொள்வதும்கூட சிலருக்கு இங்கே கேலியாகவும், விளையாட்டாகவும் தெரிகின்றது. என்ன! பேயனுக்கு பெயர்தான் தமிழன் என்று நண்பன் சமுத்திரன் அடிக்கடி எழுதிக்கொள்ளும் வசனங்கள்தான் சாட்டையாக இப்போது எங்களை அடிக்கின்றது.[/size] [size=4]என் சகோதரன் குருதியில…

  24. ஒரு மனித உரிமைக் குழுவினர் "The Social Architects" என்ற பெயரில் ஈழத் தமிழரின் அவலங்களை ஆதாரங்களுடன் சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்தவர்கள். தற்போது அவர்கள் வன்னிப் போர் முனையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து ஒரு ஆவணப் படத்தை தயாரித்துள்ளனர். அதன் முதலாவது முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். தமிழ் ஆங்கிலம் மூலம்: மின்னஞ்சல் யாழ் இணையத்திலிருந்து ஒதுங்கி விட்ட ஆனால் மின்னஞ்சலில் என்னுடன் தொடர்பில் உள்ள ஒரு யாழ்கள உறவு கடந்த மாதம் (செப்டெம்பர்) இதை அனுப்பியிருந்தார். நீண்ட நாட்களின் பின் இன்று மின்னஞ்சலை திறந்த போது கண்டேன். யாழிலும் இணைத்துள்ளேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.