Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''ராஜபக்ஷேவை விட மோசமானவர் கருணாநிதி!'' சாட்டை வீசும் நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாட்டை வீசும் நெடுமாறன்

''ராஜபக்ஷேவை விட மோசமானவர் கருணாநிதி!''

அப்பாவி தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வதைக் கண்டித்து கடந்த 12-ம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன், வல்லநாடு சாது சிவா சுவாமிகள் உள்ளிட்ட முக்கியஸ் தர்களின் தலைமையில் காலை 11:30 மணிக்கு ஆர்ப் பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கடைசி நிமிடம்வரை ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி தராததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தார் நெடுமாறன்.

ஆர்ப்பாட்டக் களத்தில் வந்து இறங்கிய உடனே கைது செய்யப்படுவோம் என்பதைத் தெரிந்துகொண்ட அவர், அதற்கு முன்பாகவே தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பத்திரிகையாளர்களை அழைத்து சந்தித்தார்.

பிரஸ் மீட்டில் சவுக்கெடுக்காத குறையாக ஆட்சி யாளர்களை விமர்சித்துத்

தள்ளினார் நெடுமாறன். அவர் பேச்சிலிருந்து...

''உணவும் மருந்தும் கிடைக்காமல் கஷ்டப்படும் அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்ப, பல வகையில் கஷ்டப்பட்டு ஒரு கோடி ரூபாய்க்கான பொருட்களைச் சேகரித்தோம். அவற்றை செஞ் சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப முயன்றபோது, அதற்கு இந்திய அரசு தடைவிதித்தது. அதைக் கண்டித்து நான் சாகும்வரை உண்ணா விரதம் இருந்தேன். அப்போது, 'கண்டிப்பாக அந்தப் பொருட்களை அனுப்ப உதவுகிறேன்' என்று முதல்வர் கருணாநிதி எழுத்துப்பூர்வமாக என்னிடம் உறுதியளித்தது ஊரறிந்த விஷயம். இது நடந்து ஆறு மாதம் கடந்து விட்ட நிலையில், இன்றுவரை அந்தப் பொருட்கள் அங்கே அனுப்பப்படவில்லை என்பதும் அதற்கு முதல்வர் சிறு முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் ஊரறிய வேண்டிய விஷயம்.

இது தொடர்பாக, நான் பலமுறை முதல்வருக்கு எழுதிய கடிதங்களுக்கும் பதில் இல்லை. அவரை சந்திக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது. தற்போது, அந்த பொருட்கள் எல்லாம் மக்கி வீணாகி விட்டன. இலங்கை அதிபர் ராஜபக்ஷே என்னைப் பொறுத்த வரை ஒரு கொடூரமான நபர். ஆனால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய முதல்வர் கருணாநிதி எனக்கு ராஜபக்ஷேவைவிட மோசமான நபராகத் தெரிகிறார்.

இந்தியாவுடன் எப்போதும் அக்கப்போர் நடத்திக்கொண்டிருக்கும் பாகிஸ்தான்கூட, அவர்களின் கடல் எல்லைப் பகுதியில் தவறுதலாக நுழைந்துவிடும் இந்திய மீனவர்களைப் பிடித்துச் சென்ற பிறகு விசாரித்து அனுப்பிவிடுகிறது. வங்காளதேசம், பர்மா அரசுகூட யாரையும் சுட்டுக் கொல்வதில்லை. ஆனால், இலங்கை அரசு நம் எல்லையில் வந்து நின்றுகொண்டு, 'தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவிட்டார்கள்' என்று பொய் சொல்லி அப்பாவிகளை சுட்டுக் கொல்கிறது. இதை மத்திய, மாநில அரசுகள் கைகட்டி வேடிக்கைப் பார்க்கின்றன. மீனவர்களின் உரிமையை மீட்கக் கோரி நாங்கள் அறவழியில் நடத்த இருந்த போராட்டத்துக்கும் காவல்துறை சர்வாதிகாரப் போக்கில் தடை விதித்திருக்கிறது. எங்களின் ஜனநாயக உரிமையை பறித்த இந்த செயலுக்கெல்லாம் பதில் சொல்லியே தீரவேண்டும்'' என்று முழங்கிவிட்டு ஆர்ப்பாட்டக் களத்துக்கு சென்றார்.

அடுத்த நிமிடமே நெடுமாறனையும் சேர்த்து சுமார் 350 பேரை, 'தடையை மீறியதாக' சொல்லி கைது செய்தது போலீஸ்.

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் தனியாக ஒரு பிரசார பயணம் மேற்கொண்டு, தி.மு.க. அரசுக்கு எதிராகக் கனல் கக்கும் ஏற்பாடுகளை நெடுமாறன் செய்யப்போவதாக அவரது ஆதரவாளர்கள் தற்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்

http://www.vikatan.com

தமிழன் எண்றால் மற்றவனுக்கு மட்டும் என்ன, தமிழன் எண்று தன்னை சொல்லி கொள்பவனுக்கே இளக்காரம்....

பொறுப்பற்ற ஆட்ச்சியாளர்கள் வாக்குகள் வாங்குவத்துக்காக மட்டும்தான் இலவச TV வழங்குவார்கள்... மக்களின் மீது இருக்கும் அக்கறையில் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் எண்றால் மற்றவனுக்கு மட்டும் என்ன, தமிழன் எண்று தன்னை சொல்லி கொள்பவனுக்கே இளக்காரம்....

பொறுப்பற்ற ஆட்ச்சியாளர்கள் வாக்குகள் வாங்குவத்துக்காக மட்டும்தான் இலவச TV வழங்குவார்கள்... மக்களின் மீது இருக்கும் அக்கறையில் அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.