Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மு.கருணாநிதியின் சிறை நிரப்பிய போராட்டமும் - அதன் பின்னே உள்ள உள்குத்து அரசியலும் - ஈழதேசம் பார்வையில்..!

Featured Replies

மு.கருணாநிதியின் சிறை நிரப்பிய போராட்டமும் - அதன் பின்னே உள்ள உள்குத்து அரசியலும் - ஈழதேசம் பார்வையில்..!

[size=3]

eeladhesam%20seythi%20aaivu.jpgஜூலை 4 -ல் சிறை நிரப்பும் அறப் போராட்டம் நடைபெறும் என்று ஒரு வாரத்திற்கு முன்னர் அறிவித்தார் தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதி, இந்த சிறை நிரப்பும் போராட்டத்திற்கு எந்த பங்கமும் வந்து விடக் கூடாது என்று வழக்குகள் போட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ஜூலை 4 க்கு முன்னரே கைது செய்யப் படக் கூடாது என்றும், காவல் துறை உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின் படியே கைது செய்ய வேண்டும் என்றும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் வழக்கு போட்டு, அந்த வழக்கிற்கு ஆஜரான தமிழக அரசின் வழக்குரைஞர் தி.மு.க.வுக்கு ஆதரவாக சாட்சிகளை ஆதாரங்களை சேர்க்காமல் செயல்பட்டும், மெட்ராஸ் உயர்நீதி மன்ற நீதிபதிகள் இக்பாலும், சிவஞானமும் அறப் போராட்டாம் நடைபெறலாம் ஆனால் பொதுச் சொத்துக்கு எந்த பங்கமும் ஏற்படக் கூடாது என்ற உறுதி மொழியை வழங்க வேண்டும் என்றும், போராட்டம் மற்றும் கைது சம்பவங்களை கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

தி.மு.க.வினர் பெருமளவில் இந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பும் வெளியிட்டார் மு.க., பிறகு இந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சியினர் யாரும் நான் கூறும் வரை பிணை கேட்கக் கூடாது என்றார்.அதாவது ஜாமீன் மனு போடக் கூடாது என்றார். நாட்கள் நெருங்க நெருங்க எங்கே யாரும் சிறை நிரப்ப வராமல் மிகச்சொற்ப அளவில் சிறையை நிரப்பினால், இதையே சாக்காக வைத்து ஜெ அம்மையார் தி.மு.க.வின் குடும்ப உறுப்பினர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவாரோ என்ற அச்சத்தின் காரணமாக, இவ்வாறு நேற்றைய முன்தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஜூலை 4 ன் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு கலந்து கொள்ளாதவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டு, அவர்களுக்கு கட்சியிலும் அரசிலும் பதவிகள் வழங்க முடியாது என்றார். மேலும் சிறைக்கு செல்பவர்களுக்கே பதவிகளும் செல்வாக்கும் வழங்க முடியும் என்று கூறினார்.

சுமார் 50 ஆயிரம் பேராவது சிறையை நிரப்ப வேண்டும் என்றார். ஒருவழியாக இன்று மாவட்ட கிரமமாக கழக உடன்பிறப்புகள் சிறையையும் திருமண மண்டபத்தையும் நிரப்பி விட்டார்கள். தி.மு.க.வின் ஊடகங்கள் சுமார் ஒரு லட்சம் பேர் சிறைக்கு சென்று உள்ளார்கள் என்றனர். எனவே போராட்டம் மாபெரும் வெற்றி என்று சொன்னார்கள். மு.க.வும் எதிர்பாராத இந்த போராட்ட வெற்றி மூலமாவது ஜெ அம்மையார் திருந்தி விடுவார் என்று நம்ப முடியாது என்றார். மு.க.வின் புதல்வன் ஸ்டாலின் அவர்களோ, போராட்டம் மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ளது தி.மு.க.கட்சிக்கு என்றார். தொடர் அடக்கு முறைகள் தொடருமாயின் இதைவிட போராட்டம் கடுமை ஆக்கப்படும் என்றார். மு.க.வின் புதல்வி கனிமொழி அம்மையாரோ, ஜெ அரசின் அராஜகத்திற்கு தமிழக மக்கள் வரும்

2014 ம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பதில் அளிப்பார்கள் என்றார். மறுபுறம் தமிழக அரசின் காவல் துறை சுமார் 50,000 பேர் வரை கைதாவார்கள் என்று நினைத்திருக்க, சுமார் 70,௦௦௦

ஆயிரம் என்று தொடங்கி ஒரு லட்சம் வரை கைது செய்யப்பட்டதாகவும் அதனால் என்ன செய்வது ஏது செய்வது என்று திணறியதாக ஒரு செய்தியும் உண்டு. என்றாலும் இவ்வளவு கட்சித் தொண்டர்கள் எவ்வாறு குவிந்தனர் என்று தமிழகத்தின் சக அரசியல் கட்சிகள் வியப்பையும் ஆச்சரியத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

இரண்டாம் கட்ட தி.மு.க.தலைவர்கள் தி.மு.க.விற்கு போராட்டங்கள் ஒன்றும் புதிதல்ல. பல போராட்ட வரலாறுகளை கொண்ட கட்சி என்றார்கள். எதற்கு இந்த சிறை நிரப்பும் போராட்டம்..? கடந்த தி.மு.க.ஆட்சியில் தி.மு.க.தலைமைகள் வாரிசுகள் நாட்டின் வளங்களை கொள்ளை அடித்தார்கள். கழக உடன்பிறப்புகளோ நாட்டின் நிலங்களை வாரி சுருட்டினார்கள் பல ஏழை பாழைகளிடம் என்று அல்ல, எந்த அரசியல் கட்சியிலும் செல்வாக்கு இல்லாமல், எந்தக் கட்சியிலும் சேராமல் பிசினஸ் செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. அவர்களின் நிலங்கள் வீடுகள் அடிமாட்டு விலைக்கு விற்க நிர்பந்திக்கப்பட்டார்கள். இவையெல்லாம் மாவட்ட நகர பஞ்சாயத்து கழக உடன்பிறப்புகள் செய்த திருப்பணிகள்.

உதாரணத்திற்கு திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி என்ற நிதி நிறுவனம், லோக்கல் கழக உடன்பிறப்புகளும் போலீஸ் உயர் அதிகாரிகளும் சேர்ந்து அந்தப் பெண்மணியை படாதபாடு படுத்தி விட்டார்கள். ஒரு கட்டத்தில் கழக உடன்பிறப்புகள் எதற்கு என்று ஒரு ஐ.ஜி.யே வெவ்வேறு ஊர்களில் அந்தப் பெண்மணியை அடைத்து வைத்து விபசாரத்தில் தள்ளாத குறையைத் தவிர மற்ற அணைத்து செயல்களையும் செய்து விட்டார். இவ்வளவு ஏன்..? புதிய தலைமுறை என்ற ஒரு டி.வி.யும் அந்த கட்சியும் எப்படி வந்தது..? இவர்களின் கல்லூரியை வளைத்து போடப் பார்த்து உள்ளது கழக தலைமைகள். பார்த்தார் பெரும் கல்வி நிறுவனத்தை இவர்களுக்கு ஓசியில் கொடுப்பதா என்று, இன்று டி.வி.உலகில் தாங்கள் தான் எல்லாம் என்று இருந்த சன் டி.வி.கும்பலை ஓரம் கட்ட வைத்து விட்டது புதிய தலைமுறை டி.வி..

இவ்வாறாக, கழக ஆட்சியில் ஒரு புரட்சிகர திட்டத்தை முன் வைத்தது தி.மு.க.வின் மு.க.குடும்பங்களின் வாரிசுகள். தமிழகத்தில் யாராவது ஒரு நூறு கோடி ரூபாய் முதலீட்டில் அல்லது நூறு கோடி ரூபாய் வருமானம் வருகிற மாதிரி எந்த தொழில் செய்தாலும் அதில் பங்கு வேண்டும் என்று. இவர்களுக்கு பயந்தே மேற்கண்ட ரூபாய்களில் தொழில் அல்லது வருமானம் செய்பவர்கள் இன்றைக்கு ஏதாவது ஒரு தேசிய அல்லது பிராந்திய கட்சிகளின் நன்கொடையாளர்களாக, கட்சி உறுப்பினர்களாக மாற்றிய புரட்சிகர திட்டத்தையே தி.மு.க.வின் கடந்த கால ஆட்சியில் தான் மு.க.வின் குடும்ப உறுப்பினர்களும் இரண்டாம் கட்ட தலைகளும் கொண்டு வந்தார்கள். மு.க.வின் ஆசியோடும் ஆசிர்வாதத்தாலும் என்றால் யாராவது மறுக்க முடியுமா..?

இவ்வாறான தொழில்களை கழக உடன்பிறப்புகள் செய்ததாலும், பல நில மோசடிகளை செய்ததாலும் பெரும் பெரும் கொள்ளைக் கூட்ட தலைவர்களை விஞ்சும் வண்ணம் பணங்களை, ரூபாய் நோட்டுக் கட்டுக்களை மூட்டை மூட்டையாக கட்டி கப்பலில் கொண்டு சென்று பல தீவுகளில் புதைத்து வைத்துள்ளார்கள். உதாரணத்திற்கு ராமஜெயம் வழக்கு. இன்று தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் குறைந்தது 500 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு குறைவானவர்கள் கிடையாது. மத்தியிலும் ஆட்சியில் பங்கு, மாநிலத்தில் தனி ஆட்சி, பிறகென்ன கேட்கவா வேண்டும்..? அ.தி.மு.க. தவிர அனைவருடனும் கூட்டு. இவர்களின் கொள்ளைக் கூட்ட அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஜெ அம்மையார் வீடு தோட்டம் என்று இருந்தவரை சொத்துக் குவிப்பு வழக்கில் எப்படியாவது உள்ளே தள்ளி, கட்சியை காணமால் போகச் செய்து விட்டு, நிரந்தரமாக மத்தியிலும் மாநிலத்திலும் குடும்ப ஆட்சி முறையை கொண்டு வந்து விடலாம் என்ற கணக்குப் போட்டுக் கொண்டிருக்கையில், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வந்து விட்டது.

பார்த்தார் ஜெ அம்மையார் தி.மு.க.கழக உடன்பிறப்புகள் கொடுத்த தொல்லையை, அராஜகத்தை நினைத்தார். வெகு வேகமாக நில ஆக்கிரமிப்பு, நில மோசடி கேசுகளை மட்டும் கையில் எடுத்தார். சிக்குகிறார்கள், சிக்கி சிறைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளவர்கள் பட்டியலில் மு.க.வின் துணைவியும் மனைவியும் இடப் பெற்றிருப்பார்கள் போல தெரிகிறது. கிடக்கட்டும் இந்த விசயங்கள் யாவும்.

தி.மு.க.என்ற கட்சி, தங்களது கட்சி உறுப்பினர்கள் செய்த மோசடி காரியங்களை, அதன் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று ஒரு போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் மக்கள் சார்ந்து எந்த போராட்டமும் நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை, தங்களது கட்சியினர் மீதான அடக்குமுறைக்கு என்று கூறி போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று பிற மாநிலக் கட்சிகளுக்கு பாடம் நடத்தி விட்டார் மு.க. அவர்கள். ஜெ அம்மையாரோ நீங்கள் சிறையையா நிரப்ப திட்டம் போட்டு உள்ளீர்கள்..? இன்று மாலையே அனைவரையும் திறந்து விட்டு விடுவேன் என்று கூற மாட்டாரா.. என்ன ? ஒருவேளை சிறையில் தள்ளினாலும்,

சிறைக்கு சென்றவர்களுக்கு தலைக்கு ஒரு லட்சம் வரை செலவு செய்து விடுவார்கள். வழக்குகளுக்கு கழக வக்கீல் சங்கம் பார்த்துக் கொள்ளும். ஆக, ஆட்சியில் அமர்ந்த ஒரு கட்சி தனது கட்சி தொண்டர்களை கூலிப்படைகளாக மாற்றி, அவர்களையும் தன் நலன் சார்ந்து மட்டுமே சிந்திக்க சொல்லி இருக்கிறது தி.மு.க.என்ற அண்ணாவின் கட்சி. இப்படி இருக்கின்ற திராவிடக் கட்சிகளிடம் நியாயம் கேட்டுக் கொண்டே இன்று வரை தனது உயிரை விட்டுக் கொண்டிருக்கிறது தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் கட்சிகள்..? என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மாயாண்டிக்கருப்பு

[/size]

சிங்களக் காட்டுமிராண்டிகள் வங்காளத்தில் இருந்து வந்த தமது சந்ததியினர் எனக் கருதி, மேற்கு வங்கத்தின் விதிவிலக்காக உள்ள கடைந்தெடுத்த கயவன் பிரணாப் முகர்ஜி ஈழத் தமிழின அழிப்புக்கு பெருந்துணை போனான்.

இந்தக் காட்டுமிராண்டிக் கயவனுக்கு கொலைஞன் கருணாநிதி ஆதரவு கொடுப்பதன் மூலம் - தனது தமிழின விரோத நிலையை கொலைஞன் கருணாநிதி மீண்டும் நிரூபித்துள்ளான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.