Jump to content

ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சி வெற்றியை நோக்கிச் செல்கிறது


Recommended Posts

ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சி வெற்றியை நோக்கிச் செல்கிறது

 

DSCF5296.jpg

வறுமையாலும் கல்வி நிலமையாலும் பின்தங்கி யாராலும் கவனிக்கப்படாதிருந்த மட்டக்களப்பு கரடியன்குளம் (குசேலன்மலை) கிராமம் இவ்வருடம் வெள்ள அனர்த்தத்தின் போது எமது அமைப்பால் இனங்காணப்பட்டது. அவசர உதவியாக இக்கிராமத்து மக்களுக்கான வெள்ள நிவாரணத்தை இவ்வருடம் தைமாதம் வழங்கியிருந்தோம்.

 

இக்கிராமத்தின் புவியியல் அமைவு வாழ்வாதார உயர்வுக்கான வழிமுறைகள் கல்வித் தகைமை போன்றவற்றை ஆராய்ந்து அவர்களை உயர்த்தும் நோக்கில் நேசக்கரம் களக்குழுவினர் நீண்ட நாட்கள் இந்தக் கிராமத்தின் குழந்தைகளோடும் குடும்பங்களோடும் கூடியிருந்து அவர்களது தேவைகள் பிரச்சனைகள் போன்றவற்றை ஆராய்ந்து அறிக்கையினை சமர்ப்பித்திருந்தனர்.

 

இக்கிராமத்தின் தேவைகள் பெரிதாக இருந்தாலும் முதலில் இக்கிராமத்தில் வாழும் 27குடும்பங்களின் குழந்தைகளுக்கான கல்வியை வழங்க முடிவு செய்து கல்விவழங்கலுக்கான உதவியினைக் கோரியிருந்தோம். உதவுவதாக வாக்களித்தவர்களின் வார்த்தைகள் பொய்யாகி உதவி கிடைக்காது தாமதமானது.

 

எங்களால் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கிடைக்குமென்ற நம்பிக்கையிலிருந்த மக்களையும் அவர்களது குழந்தைகளையும் கைவிடாமல் காக்கவும் கல்வியை ஊட்டுவதன் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியுமென்ற எமது எமது நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து உதவிக்காக முயற்சித்தோம்.

 

மெரிக்காவிலிருந்து திரு.தவேந்திரராசா ஐயா அவர்கள் தானாகவே முன்வந்து கரடியன்குளம் (குசேலன்மலை) கிராமத்தின் குழந்தைகளுக்கான கல்வியறிவை மேம்படுத்த இவ்வருடம் ஆனிமாதம் முதல் உதவி வருகிறார்.

தவேந்திரராசா ஐயா அவர்கள் தன்னை அடையாளப்படுத்தாமல் நேசக்கரத்தின் பணிகளோடு இணைந்திருக்கும் ஒருவர். இவர் நாடுகடந்த தமிழீழ அரசில் அங்கம் வகிக்கிறார். தனது பணிகளோடு எங்களது மனிதாபிமானப் பணிகளுக்கு ஆதரவை வழங்கி தான் பிறந்த மண்ணுக்கான சேவையை சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார்.

 

ஏற்கனவே இலவச கணணிக் கற்பித்தலுக்காக கணணிகளைப் பெற்றுத் தந்து தனது ஆதரவை தந்ததோடு நின்று விடாமல் நேசம் இலவச கல்வித்திட்டத்தின் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் கையேடு பயிற்சி வகுப்புகளுக்கும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

 

தற்போது எமது உப அமைப்பான அரவணைப்பு அமைப்பின் கவனிப்போடும் ஒருங்கிணைப்போடும் நடைபெற்று வரும் கல்விப் பயிற்சியில் தனது ஆதரவைத் தந்து எங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒளியேற்றிய பெருமைக்குரியவராக எங்கள் நன்றிக்கும் அன்புக்கும் உரிய தவேந்திரராசா ஐயா எங்கள் அமைப்பிற்கு தனது ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்.

 

சித்திரம் வரைதல் , விளையாட்டு , கைவேலைகள் என ஆரம்பமான எமது முயற்சியானது மாணவர்களின் ஆர்வம் விருப்பை உள்வாங்கி தற்போது எழுத்துப் பயிற்சியை ஆரம்பித்துள்ளோம்.

 

இங்கு வரும் போது பேசவே அச்சப்பட்ட குழந்தைகள் தற்போது எல்லோருடனும் தயக்கமின்றிப் பேசவும் எழுதவும் ஆரம்பித்துள்ளார்கள். இந்தக் குழந்தைகளின் முன்னேற்றம் யாவுக்குமான நன்றிக்குரிய திரு.தவேந்திரராசா ஐயா அவர்களுக்கு மீளவும் எங்கள் நன்றிகள்.

 

இதுவரை காலமும் இக்கிராமத்தில் பிள்ளைகளை வைத்து கற்பிக்க இடவசதியின்றி மரங்களின் கீழேயே கற்பித்தல் வகுப்புகளை எங்கள் குழுவினர் நடாத்தி வந்தனர். தற்போது எமது சேவையின் தேவையைப் புரிந்த கிராமிய சங்கம் கட்டடம் ஒன்றினை வழங்க முன்வந்துள்ளது.

 

இனிவரும் காலங்களில் இக்கிராமத்தின் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தை உணர்ந்துள்ளோம். விவசாய நிலங்களையும் நீர் வளத்தையும் கொண்டுள்ள இக்கிராமத்தின் அடுத்த கட்ட மாற்றத்துக்கான ஆதரவினை கருணையாளர்களிடம் வேண்டி நிற்கிறோம்.

ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியின் அடுத்த படி வெற்றியை நோக்கியே செல்வதை பிள்ளைகளின் கல்வியறிவூட்டல் மூலம் அச்சமூகம் பெற்று வருவதை அவதானிக்கத் தொடங்கியுள்ளீர்கள். இனி உங்கள் உதவிகள் இக்கிராமத்தை மேம்படுத்தும் என நம்புகிறோம்.

 

08.06.2013 தொடக்கம் நடைபெற்று வரும் கல்வி ஊக்குவிப்பு அறிக்கையின் தொகுப்பினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

5-150x150.jpg 6-150x150.jpg

7-150x150.jpg AC1-150x150.jpg

தொடர்புபட்ட செய்தியிணைப்பு :-

குசேலன்மலை குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்யுங்கள்.

http://nesakkaram.org/ta/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/

ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம்.

http://nesakkaram.org/ta/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/

 

உதவி வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :-

 

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany.

 

Skype ID – Shanthyramesh

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

 

Bank information

 

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

 

Other countrys:

 

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com

 

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

http://nesakkaram.org/ta/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இதுவரை காலமும் பிள்ளைகள் மர நிழலில் தான் படித்து வருகிறார்கள். எமது அமைப்பின் சேவைக்கு கிடைத்த வெற்றியாக அடுத்த மாதம் மேற்படி குழந்தைகளை படிப்பிக்க கட்டடம் ஒன்று எமக்கு கிடைக்கவுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.