Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவு உற்பத்தியைப் பெருக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள்

Featured Replies

  • farmer.jpg

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள் மூலம் இயற்கை வளத்தை பாதுகாத்து, உணவு உற்பத்தியைப் பெருக்க விவசாயிகள் முயற்சிக்க வேண்டும் என உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமானது மண்ணில் இருக்கும் இயற்கை ஊட்டங்களை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது. பயிரின் ஊட்டச்சத்து தேவையையும், இயற்கை மற்றும் ரசாயன ஆதாரங்களின் மூலம் ஊட்டச்சத்துக்களையும் ஒருங்கிணைத்து பயிர்களுக்கு சமச்சீர் ஊட்டத்தை அளிக்கிறது. இயற்கையோடு ஒன்றிய, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடிய உன்னத உர உபயோக வழிமுறை தான் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமாகும்.

மண் வளத்தைப் பேணிக் காக்க மட்குத் தன்மையை அதிகரிப்பதாகும். அதிக மட்கும் தன்மையுள்ள மண் மிகுந்த வளமான மண்ணாகவும், ஈரம் காக்கும் தன்மையுடையதாகவும், பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிரிகளை பெருக்கும் தன்மையுடையதாகவும் இருக்கும். இத்தகைய மண்ணில் பயிரிடப்படும் பயிர்கள் முழு உற்பத்தித் திறனை வெளிக்கொணர்வதாக இருக்கும்.

மண்ணின் மட்குத் தன்மையை பசுந்தாள் உரப் பயிர்களை நிலத்தில் விதைத்து பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் மூலம், பசுந்தழைகள், தொழு உரம், மண் புழு உரம், பயிர்க் கழிவுகள் மற்றும் கால்நடைக் கழிவுகள் பயிர் உற்பத்திக்கு பயன்படுத்துவதன் மூலமும் அதிகரிக்கலாம்.

பசுந்தாள் உரங்களை இடும்பொழுது பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை அளிப்பது மட்டுமன்றி மண் வளம், கட்டமைப்பை மேம்படுத்தி மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் பெருக்கத்துக்கும் வழிவகுக்கிறது.

சணப்பை, தக்கைப் பூண்டு, பில்லிபெசரா, சீமை அகத்தி, கொளிஞ்சி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை மண்ணில் விதைத்து, பூக்கும் பருவத்தில் மடக்கி உழ வேண்டும். இதனால், மண்ணில் தழைச்சத்து சேர்க்கப்படும் அளவு குறைவாக இருந்தாலும் தொடர் பயன்பாட்டின்போது மண்வளம் பெரிதும் மேம்படுத்தப்படுகிறது.

விவசாயிகளால் பெருமளவில் பயன்படுத்தப்படும் இயற்கை இடுபொருள் தொழு உரம் கால்நடைகளின் சாணம், தீவன மிச்சங்கள், வைக்கோல் மற்றும் இதர பயிர்க் கழிவுகளுடன் நன்கு மட்க வைக்கப்பட்டு மண்ணில் இடுவதால் பயிர் விளைச்சல் மற்றும் மண்ணின் தன்மை மேம்படுத்தப்படுகிறது.

நன்கு மட்கிய தொழு உரத்தை பயிர் விதைப்பிற்கு மூன்று வாரங்களுக்கு முன் மண்ணில் இட்டு நன்கு உழவு செய்வது உள்ளிட்டவைகள் மூலம் மண் வளம் பாதிக்காமல் பயிர்களுக்கு கிடைக்கும்.

பயிருக்குத் தேவையான 16 வகையான பயிரூட்டச் சத்துக்களில் இயற்கையில் கிடைக்கும் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் தவிர பயிருக்கு அதிகளவில் தேவைப்படும் பேரூட்டச் சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவைகளை ரசாயன உரங்கள் மூலம் அளிக்கப்படுகிறது.

சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம் ஆகிய இரண்டாம் நிலை சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, தாமிரம் உள்ளிட்டவைகளை சரிவிகித அளவில் கடைப்பிடிப்பதன் மூலம் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.

அறுவடை முடிந்து அடுத்து சாகுபடி செய்வதற்கு முன் வயலில் மண் மாதிரி எடுத்து பரிசோதனை செய்து ஆய்வுக்கு ஏற்ப உரமிடுவதன் மூலம் அதிகமான ரசாயன உரமிடுதல் தவிர்க்கப்பட்டு பயிருக்கு தேவையான அளவு உரங்களை மட்டும் இடுவது சாத்தியமாகிறது.

உயிர் உரங்கள்: உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், அசட்டோபாக்டர், நீலப்பச்சைப்பாசி மற்றும் அசோலா ஆகியவை மண்ணில் தழைச்சத்தினை நிலை நிறுத்தக் கூடியவைகளாகும்.

அதேபோல, நிலத்தில் இடும் மணிச்சத்தில் 20 முதல் 25 சதம் மட்டுமே பயிர்களுக்கு கிடைக்கிறது. மண்ணில் கரையாத தன்மையிலுள்ள மணிச்சத்தை பயிர்களுக்கு கிடைக்கும் நிலைக்கு மாற்றுவதற்கு பாஸ்போபாக்டீரியா உயிர் உரமும், பயிர்களின் வேர்களுக்கு எட்டாத தொலைவிலிருக்கும் மணிச்சத்தை பயிர்களுக்கு கொணர்ந்து சேர்ப்பதில் வாம் எனப்படும் வேர் உள்பூசணம் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே, விவசாயிகள் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகளை பின்பற்றி இயற்கை வளத்தைப் பாதுகாத்து, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றார் பெ.பாஸ்கர்.

http://www.dinamani.com/agriculture/2014/06/04/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92/article2263281.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.