Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

~இது அல்ல போர் தர்மம், ஆமாம் ஊடக தர்மமும் இதுவல்ல|

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

~இது அல்ல போர் தர்மம், ஆமாம் ஊடக தர்மமும் இதுவல்ல|

-பரணி கிருஸ்ணரஜனி-

கன்னியாகுமரி மீனவர்கள் கடத்தப்பட்ட விவகாரமும் பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்ட சம்பவமும் தமிழகத்தையே ஆட்டிப்படைக்கும் தமிழ்த்திரைப்படங்களில் வரும் திரைக்கதையை விஞ்சும் அளவிற்கு திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கின்றன. ஏற்கனவே ஐந்து மீனவர்கள் படுகொலை, 'மரியா" என்ற படகில் வைத்து ஐந்து புலிகள் கைது செய்யப்பட்டமை, கடத்தப்பட்ட ஒரு மீனவர் மாலைதீவிற்கு அருகில் ஒரு மர்மக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டமை என்று பல உதிரிக்கதைகளாலும் கிளைக்கதைகளாலும் பல திருப்புக் காட்சிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் இத்திரைக்கதையின் சிருஸ்டிகர்த்தாக்களான சிங்கள அரச புலனாய்வுத்துறையினருக்கும் இந்திய மத்திய புலனாய்வுத்துறையினருக்கும் சந்தேகமே தேவையில்லை இது வெள்ளிவிழாப் படம்தான்.

மேற்படி திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அற்புதமான திரைக்கதையினூடாக தமிழகத்தில் தோன்றியுள்ள ஈழ அதரவு நிலைப்பாட்டை குறிப்பிடத் தகுந்தளவு கேள்விக்குள்ளாக்கியுள்ளது மேற்படி கூட்டணி. அவர்கள் நோக்கமும் அதுதானே....

ஏனெனில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் புலிகளுக்கும் இந்திய மத்திய அரசிற்கும் இடையில் ஏற்பட்ட சில முரண்பாடுகளினால் சிக்கலடைந்து போயிருந்த ஈழ - தமிழக உறவை 2001 புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின் படிப்படியாக புதுப்பித்து வளர்த்தெடுத்ததே தமிழக ஊடகங்கள்தான். சாதி, மத, கட்சி பேதமின்றி அனைவரையும் ஓரே குடைக்குள் கொண்டுவந்தது மேற்படி ஊடக நகர்வுகள்.

இது நாம் நீண்டநாள் எதிர்பார்த்த ஒரு நிகழ்வு. அதன் எத்தனங்களை சாத்தியப்படுத்திக் காட்டியது தமிழக ஊடகச் சூழல். ஆனால் அண்மைய நிகழ்வுகளையொட்டி அவை மீண்டும் ஈழம் தொடர்பான எதிர் நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனவோ என்ற ஐயம் பேரச்சமாகமாறி பெருங்கவலையாக ஈழத்தமிழர்களைப் பீடித்திருக்கிறது. இது குறி;த்துத்தான் இங்கு கொஞ்சம் பேசலாம் என நினைக்கிறேன்.

ஈழப் போராட்டம் மீதான இந்தியத் தலையீடு காலத்திற்குக் காலம் உருமாறி பல பரிமாணங்களாக விரிவடைவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அதன் மைய விசையாய் வெளிவிவகாரக் கொள்கை என்ற கருத்தமைவு ஒழுங்கமைக்கப்படுகிறது. இதை தமிழக ஊடக உலகம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை தேசிய நலன் தொடர்பானதாக உள்ளபோதும் அது வேறு சில புறக்காரணிகளால் உருமாறும் வாய்ப்புக்களும் உள்ளது. இந்திய தேசிய நலனின் சில தோற்றுவாய்களையும் வரலாற்றின் போக்கில் அதை மாற்றியமைக்கும் சில புறக்காரணிகளையும் ஆராய்வதன் ஊடாக ஈழப்போராட்டம் மீதான இந்தியத் தலையீட்டையும் தமிழக ஊடகத்துறையினர் சேர்த்துப் புரிந்து கொள்ளவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

தெற்காசியச்சூழலில் பிராந்திய வல்லரசாக விளங்கும் இந்தியாவிற்கு பாகிஸ்தான், சீனா போன்றவற்றுடன் போட்டி போட்டுக்கொண்டு சில காய்களை நகர்த்த வேண்டிய தேவையுள்ளது எமக்குத் தெரியும். அதன் வழி இலங்கை அரசை அரவணைத்துக்கொண்டு போக வேண்டியுள்ளதையும் அறிவோம். அதற்காக சிஙகள அரசின் ஒரே எதிரியான புலிகளை பலவீனப்படுத்தி நல்ல பெயர் வாங்கும் இராஜதந்திரத்தையும் அறிவோம்.

ஒரு அரசு இன்னொரு அரசுடன் நடத்தும் இத்தகைய தொடர்பாடலை 'வெளியுறவுக்கொள்கை" என்ற நவீன இராஜதந்திர சொல்லாடலால் விளங்கப்படுத்திவிடவும் முடியும். இந்தப் பெருங்கதையாடல்களில் விடுதலைக்காகப் போராடும் சிறுபான்மையினங்கள் 'பயங்கரவாதச்" சாயம் பூசப்படுவதும் சேறடிக்கப்படுவதும் புதிதல்ல. இது வரலாறு. இதை தமிழக ஊடகங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கை. இதற்காக புலிகள் மீனவர்களைக் கடத்தவில்லை என்று வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யுமாறு நாம் கேட்கவில்லை.

உண்மை நிலையை ஆராய்ந்து திரை மறைவில் நடக்கும் ஈழ விடுதலைக்கெதிரான மேற்படி இராஜதந்திர நகர்வுகளை கவனத்தில் கொண்டு பொறுமை காக்குமாறு வேண்டுகிறோம். நீங்களும் சேர்ந்து சேறடிப்பது வேதனையைத் தருகிறது. உண்மையான ஊடக தர்மம் என்றால் நீங்கள் புலனாய்வு இதழியல் (inஎநளவiஉயவழைn தழரசயெடளைஅ) அடிப்படையில் தர்க்க ரீதியாக ஆய்வு செய்து உண்மைகளை முன்வைக்க வேண்டும்.

விடுவிக்கப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்யும் சட்டரீதியான அனுமதியை குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக ஊடகங்களைப் பார்வையிடும்( விகடன், சன் தொலைக்காட்சி) எம்மவர்களில் சிலருமிந்தப் பொய்யான பரப்புரைகளை உண்மை என்று நம்பி இருக்கிறார்கள். இப்படியான ஊடகங்கள் எமக்குத் தேவையா?. காசு கொடுத்து பார்க்க வேணுமா?. எம்மிடம் இருந்து பணத்தைப்பெற்று எமக்கு எதிரான செய்திகளைத் தரும் இவ்வூடகங்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் தேவையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.