Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிட்னி கோசிப் 34

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு முறை உங்களுடன் கோசிப்பில் சந்திபதில் மிக்க மகிழ்ச்சி இந்த கோசிப்பும் கள உறவு சிவகுமார் சொன்ன மாதிரி புத்தன் கோசிப் எழுத வேண்டும் என்று எழுதுகிறார் போல இருகிறது என்று கவலைபட்டார்,கவலைபடவேண்டாம் நண்பரே எழுத வேண்டும் என்று தான் இதையும் எழுதுகிறேன்.

எழுதுறவர்கள் எல்லாம் எழுத வேண்டும் என்று தான் எழுதுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.உலகத்தில் உண்மையான எழுத்தாளன் உங்களை போன்றோர் மட்டும் தான் நிதானித்து சிந்தித்து அழகாக கலையுணர்வுடன் படைப்பார்கள் அவர்கள் தான் படைப்பாளிகள்,மேதைகள்.ஆனால் நான் படைப்பாளி அல்ல "கோசிப்பாளி" அது தான் கோசிப் பண்ணுகிறேன்.சரி விசயதிற்கு வருவோம்.

அவுஸ்ரெலியாவில் பொது தேர்தல் வருகிறது அதற்காக இங்குள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் கொஞ்சம் உசாராக வேலை செய்கிறார்கள் எமது தமிழ் மக்களும் தங்களுடைய பங்கிற்கு நல்லாக வேலை செய்கிறார்கள்.தொழில் கட்சிக்கு ஆதரவாக வேலை செய்கிறார்கள் தாயகத்தில் நடைபெறும் அவலதிற்காக குரல் கொடுத்தவர்கள் ஆகவே அவர்களிற்காக வாக்குபோடுவதில் தப்பில்லை தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் தொழில்கட்சி நம்பிகொண்டு இருக்க போவதில்லை.சிங்கள் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் அந்த வாக்குகள் தொழில் கட்சிக்கு கிடைக்கும் போது அவர்கள் சிங்கள் மக்களிற்கு சார்பாக அதாவது எமது போராட்டதிற்கு எதிராக குரல் கொடுக்கவும் தயங்கமாட்டார்கள்.தொழில்கட்ச

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நிலையில் "லிபரல்" கட்சி ஆட்சிக்கு வந்தா எப்படி சென்று எமது தாயக தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்து கொள்வது.அதாவது விடுதலை புலிகளை பயங்கராவத பட்டியலில் இருந்து நீக்கல் போன்ற செயற்பாடுகளை செய்வதிற்கு.

அவுஸ்திரெலியாவில் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் விடுதலைப்புலிகளைத் தடை செய்தால் தற்போதைய பிரதமர் ஜோன் காவாட்டின் தொகுதியில் ஜோன் கவாட் வெற்றி பெறும் சந்தர்ப்பத்துக்கு பாதகமாக அமையலாம் என்று அவுஸ்திரெலியன் பத்திரிகை ஆகஸ்ட் 04ம் திகதி செய்தி பிரசுரித்துள்ளது. சிட்னியில் உள்ள பினலோங், பரமற்றா தொகுதிகளில் லிபரல், தொழிற்கட்சி ஆகிய இரு கட்சிகளில் இரண்டுக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. பரமற்றா தொகுதியில் தான் அதிக தமிழர்கள் வாழ்கிறார்கள். இங்கு கடந்த தேர்தலில் தொழிற்கட்சி உறுப்பினர் மிக சொற்ப வாக்குகளினால் வெற்றி பெற்றார். பினலோங் தொகுதியில் ஜோன் காவாட் அவர்கள் போட்டியிடுகிறார். அவுஸ்திரெலியன் பத்திரிகையில் வந்த ஆக்கத்தை பார்வையிட http://www.yarl.com/forum3/index.php?showtopic=26918

அவுஸ்திரெலியாத் தமிழர்களின் கூட்டமைப்புக்கள் ஒவ்வொரு கட்சியினரையும் சந்தித்து ஈழத்தமிழர்களின் பிரச்சனை, விடுதலைப்புலிகளின் தடை பற்றி அக்கட்சியின் நிலைப்பாடுகள் பற்றி கேட்டறிந்துள்ளார்கள். சென்ற மாதம் பரமற்றா நகரசபை மண்டபத்தில் மண்டபம் நிறைந்த ஈழத்தமிழர்களின் கூட்டத்தில் பரமற்றா தொகுதியின் தொழிற்கட்சி உறுப்பினருடன் (தற்பொதைய பரமற்றா பாராளுமன்ற உறுப்பினர்) கலந்துரையாடல் நடைபெற்றது. ஈழத்தமிழர்களின் பிரச்சனைபற்றியும் இங்கு விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களே ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள். ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும். அவர்கள் வாழும் தொகுதியில் உள்ள தமிழர்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவு கொடுக்கும் பாரளுமன்ற உறுப்பினருக்கு வாக்கு போட வேண்டும் ஆனாலும் தமிழ் சமூகம் ஒரு கட்சிக்கு தான் ஆதரவு கொடுக்கும் என்ற கொள்கையை பரப்பகூடாது.

உதாரணத்திற்கு அண்மையில் சிவாஜிபடம் தொழில்கட்சி சார்பில் திரையிடபட்டது அதை எனது நண்பர் சொன்னார் எங்களின்ட ஆட்கள் தொழில்கட்சிக்காக தமிழ் படம் போடீனம் என்று அப்படியான விளக்கங்கள் இல்லாமல் எல்லோரும் புரிந்துணர்வுடன் அரசியல் கதைக்க வேண்டும்.சிட்னி தமிழர்கள் சார்பில் என்ற ரீதியில் தான் இந்த படம் திரையிடபட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி திரைப்படத்தை தொழிற்க்கட்சி சார்பாக சிட்னி வாழ் இந்தியாத் தமிழர்கள் தான் திரையிட்டார்கள். அவர்களின் விளம்பரத்தில் சிட்னி தமிழர்கள் சார்பில் வெளியிடுவதாகக் குறிப்பிடப்பட்டுருந்தது. இதனைப் பார்த்து நானும் ஈழத்தமிழர்கள் தான் இப்படத்தை வெளியிடுகிறார்கள் என முதலில் பிழையாக நினைத்துவிட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.