Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களை மீட்க நடுவணரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாம் தமிழர் கூட்டத்தில் இயக்குநர் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்களை மீட்க நடுவணரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாம் தமிழர் கூட்டத்தில் இயக்குநர் சீமான்

இலங்கையில் முகாம்களில் சிறைபட்டுள்ள ஈழத் தமிழர்களை மீட்க மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் சீமான் வலியுறுத்தி பேசினார்.

“நாம் தமிழர்” அமைப்பு சார்பில் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

இந்த “நாம் தமிழர்’ இயக்கமானது கட்சி, மதம் சார்பற்றது. ஈழத் தமிழர்களுக்காக ஒருமித்த குரல் கொடுக்க தமிழர்களை ஒன்று திரட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட சுயநலமற்ற ஓர் அமைப்பாகும்.

இலங்கையில் 3.50 லட்சம் தமிழர்கள் போரினால் பாதிக்கப்பட்டு சொந்தமண்ணிலேயே முகாம்களில் இலங்கை அரசால் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசு போதிய கழிப்பறை, குடிநீர், சுகாதார வசதிகள் செய்து தராததால் அவதிப் படுகின்றனர்.

முகாம்களில் உள்ள அவர்களை மீட்டு சொந்த மண்ணில் குடியமர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை, அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று ராஜபட்ச அரசு இந்திய அரசையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுகிறது. இவ்விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பங்குத் தந்தை ஜெகத் கஸ்பர் பேசுகையில், “இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளி உலகுக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும். முகாமில் அடைபட்டுள்ள 3.50 லட்சம் தமிழர்களை அவர்களது வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் சிபிசந்திரன், சாகுல்ஹமீது, உள்பட பலர் பேசினர்.

ஈழத் தமிழர் நிலை குறித்த “கறுப்புக் குரல்’ நாடகம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில், அகதி முகாம்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள சிங்களர்கள் அடங்கிய 18 பேர் கொண்ட குழுவை கலைத்துவிட்டு சர்வதேச நிறுவனங்களிடம் நிர்வாக பொறுப்பை அளிக்க இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

இலங்கை அரசுக்கு, மத்திய அரசும், தமிழக அரசும் அளித்துள்ள ரூ.500 கோடி நிதி உதவியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, நாம் தமிழர் அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. ஜான்ஸிராணி பூங்காவில் தொடங்கிய பேரணி, வடக்கு மாசி வீதி- மேலமாசி வீதி சந்திப்பில் முடிவுற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

http://www.meenagam.org/?p=5950

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.