Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருப்பு பணம்

Featured Replies

கருப்புப் பணம் இப்போது தலைப்புச் செய்திகளை ஆக்ரமித்திருக்கும் ஒரு புது விவகாரம். பழசுதான்; ஆனால் இப்பப் புதுசு.

கருப்புப் பணத்தைக் கைப்பற்றினால் அதைக்கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பலரும் பல லிஸ்டுகளைப் போட்டாயிற்று. அது, தெருவெங்கும் மலசலகூடம் கட்டுவதில் ஆரம்பித்து, இந்தியாவின் அந்நியக் கடன்களை அடைப்பதற்குச் சென்று, நாட்டின் 45 கோடி ஏழை மக்களுக்கு ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் அளிப்பதுவரையில் நீள்கிறது.

இந்தக் கருப்புப் பணம் ஏதோ அந்நிய நாட்டில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது அல்லவா? அந்தப் பணம், ஒரு பேச்சுக்கு அமெரிக்க டாலராக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனை முதலில் இந்திய ரூபாய்களாக மாற்றினால்தான் இந்தியாவில் மலசலகூடம் கட்டமுடியும்; ஒவ்வோர் ஏழைக்கும் ஒரு லட்ச ரூபாய் கொடுக்கமுடியும். (அந்நியக் கடன் மேட்டரை மட்டும் இப்போதைக்கு கன்வீனியண்டாக விட்டுவிட்வோம். பின்னர் ஒரு சமயம் அதனை எடுத்துக்கொள்வோம்.)

கேள்வி 1: திடீரென இத்தனை அமெரிக்க டாலர்களை டாலர்-ரூபாய் சந்தையில் இறக்கினால் என்ன ஆகும்.

பதில்: அமெரிக்க டாலர் சல்லிசாகப் போய், டாலருக்கு 45 ரூபாய் என்ற நிலைமை மாறி, டாலருக்கு 15 ரூபாய் அல்லது அதற்கும் கீழ் என்று சடாரென ஆகிவிடும். இந்த அதகளத்தில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற பெரும்பாலும் டாலரில் சம்பாதிக்கும் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் கூண்டோடு கைலாசம் போவார்கள். சாஃப்ட்வேர் கனவான்கள் எல்லாம் நடுத்தெருவில் பிச்சை எடுப்பார்கள். ஏன் என்று புரியவில்லை என்றால், பொருளாதாரம் தெரிந்த ஒருவரிடம் சாவகாசமாக உட்கார்ந்து கேளுங்கள்.

இது நடக்கக்கூடாது என்றால், இந்தியா வேறு ஒரு காரியத்தைச் செய்யவேண்டும். இந்த டாலர் சுமார் 1 டிரில்லியன் என்கிறார்கள். அதாவது 45 லட்சம் கோடி ரூபாயாம். அதற்கு இணையான ரூபாய்களை ரிசர்வ் வங்குமூலம் உருவாக்கி, ஒரு ஸ்பெஷல் பர்பஸ் வெஹிகிள் மூலம் உள்ளே வரும் டாலருக்கு பதில் இந்த ரூபாய்களை அளித்து, அரசே அவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். அப்போது மட்டும்தான் டாலர்-ரூபாய் சந்தையில் மாற்றங்கள் இருக்காது. நம் டாலர் கையிருப்பு சடாரென உயரும். அதே நேரம், 45 லட்சம் கோடி ரூபாய் புதுப் பணம் இந்தியச் சந்தையில் பாயும். இந்தப் பணத்தை ஒரு ஆண்டிலோ இரண்டு ஆண்டுகளிலோ இந்திய அரசு செலவழிக்க முனைந்தால் நாட்டின் பணவீக்கம் நாம் இதுவரை கண்டிராத அளவு மிகக் கடுமையாக உயரும். (இந்தியாவின் ஜிடிபியும் இந்தப் பணமும் கிட்டத்தட்ட ஒரே அளவு என்பதைக் கருத்தில் வையுங்கள்.) அப்போதும் அழிவுதான். இதுவும் ஏன் என்று புரியாவிட்டால் மீண்டும், பொருளாதாரம் படித்துள்ள உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேளுங்கள்.

கேள்வி 2: பணத்தை எங்கிருந்தோ எடுத்து வருவதற்கு மாற்றாக, அதற்கு இணையான 45 லட்சம் கோடி ரூபாய்களைப் புதிதாக அச்சடித்து, ஏழைகள் ஒவ்வொருவருக்கும் ஏன் ஒரு லட்ச ரூபாய் கொடுக்கக்கூடாது?

பதில்: மேலே சொன்னதற்கும் இதற்கும் உள்ள ஒரே வித்தியாசம், அந்நியச் செலாவணிக் கையிருப்பில் ஏற்படும் மாற்றம் மட்டுமே. அதனால்தான் பிரச்னை மிகப் பெரிது என்கிறேன்.

கேள்வி 3: அப்படியானால் வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை எடுத்துக்கொண்டு வரவேண்டாமா?

பதில்: இல்லை. எப்படி இராசா ஊழலில் என்னென்னவோ சம்பந்தமில்லாமல் பேசப்பட்டதோ, அதேபோலத்தான், கருப்புப் பணம் மேட்டரிலும் எகனாமிக்ஸ் புரியாமல் ஆளாளுக்குக் கொதித்துக் கொந்தளிக்கிறார்கள்.

கருப்புப் பணத்தால் (அது இந்தியாவில் இருக்கும் பணமோ, வெளிநாட்டுக்குப் போன பணமோ), அரசுக்கு வரவேண்டிய ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் வராமல் போகிறது. அந்தப் பணத்தை மட்டும்தான் அரசு திரும்பப் பெற முனையவேண்டும். ஒரு நாட்டின் அடிப்படைப் பொருளாதாரம், அதாவது உற்பத்தி சார்ந்த பொருளாதாரம் விரிவடையாமல் அரசின் கைகளுக்குப் பெருமளவு பணம் போய்ச் சேரக்கூடாது. அப்படிப் போய்ச் சேர்ந்தால், பொருளாதாரத்துக்கு ஏற்படும் விளைவுகள் விபரீதமானவை. அரபு நாடுகளில் எண்ணெய் மூலம் வரும் ராயல்டி வருமானம் இந்த வகையைச் சார்ந்தது. அதன் காரணமாகவே அது ஒரு ‘மாயப் பொருளாதாரத்தை’ அங்கே உருவாக்கியது. இன்று துபாய் தத்தளிக்கிறது. அதேபோலத்தான் இந்தக் கருப்புப் பணம் ஏற்படுத்தும் ‘மாயப் பொருளாதாரமும்’.

அடிப்படை உற்பத்தியை அதிகப்படுத்த கருப்புப் பணத்தை ஏதோ விதத்தில் கைப்பற்றினாலும், அதனை இந்தியாவுக்குக் கொண்டுவரக்கூடாது. மாறாக, முற்றிலுமாக வெளிநாடுகளில் செலவுசெய்து, மின் உற்பத்தி நிலையங்களை முழுதாக வாங்கவேண்டும். அவற்றைக் கொண்டு இந்தியாவில் மின் உற்பத்தியை வெகுவாக அதிகரித்து, சந்தையில் இறக்கவேண்டும். இதன் காரணமாக இரண்டு விஷயங்கள் ஏற்படும். மின்சாரக் கட்டணம் வெகுவாகக் குறையும். மக்கள் அனைவருக்கும் மின்சாரம் மட்டின்றிக் கிடைக்கும். உற்பத்தி வெகுவாக அதிகரிக்கும். அதன் விளைவாக, கடுமையான பணவீக்கத்துக்கு பதிலாக, நல்ல உற்பத்திப் பெருக்கமும் அதன் விளைவாக நியாயமான பணவீக்கமும் ஏற்படும். (ஆனால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடும்... எல்லாம் வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின்படி எண்ட்ரோபி படுத்தும் பாடு!)

இப்படி புத்திசாலித்தனமாகச் செய்யாவிட்டால், இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

Edited by akootha

  • தொடங்கியவர்

கருப்பு பண பிரச்சனை: மத்திய அமைச்சரவை ஆலோசனை

புதுடெல்லி , வியாழன், 20 ஜனவரி 2011( 17:39 IST )

கருப்பு பண பிரச்சனை தொடர்பாக இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. .

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்கும் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக நடந்துகொள்வதாக உச்ச நீதிமன்றம் நேற்று கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்ட சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், புதிய அமைச்சரவை இன்று டெல்லியில் கூடியது.

இதில் கருப்பு பண விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்ததால், அப்பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இந்த பிரச்சனை பொதுமக்களிடையே பரவலாக விவாதிக்கப்படுவது குறித்தும், எதிர்கட்சிகள் இப்பிரச்சனையை வைத்துக்கொண்டு அரசை கடுமையாக தாக்கி வருவது குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவை கூட்டத்தில் கவலை தெரிவித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1101/20/1110120041_1.htm

  • தொடங்கியவர்

திரும்பி வருமா கருப்புப் பணம்?

இந்தியாவில் அரசியல் உறுதிப்பாடு இருந்தால் நாட்டிலிருந்து வெளியே சென்ற கருப்புப் பணத்தை மீண்டும் கொண்டுவர முடியும் என வருமானவரித்துறை வல்லுநர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டிலிருந்து பல லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டிருப்பது தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றம் புதன்கிழமை கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

கணக்கில் வராத பணம், கருப்புப் பணமாக நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுவது நாட்டை கொள்ளையடிப்பதற்கு சமம் என்று இந்திய உச்சநீதிமன்றம் கருத்து கூறியிருந்தது.

சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வர முடியும் என இந்தியாவின் வருமானவரித்துறையின் முன்னாள் தலைமை ஆணையர் டி சி ஏ ராமானுஜம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

பன்னாட்டு வர்த்தகம், ஹவாலா, போதைப் பொருட்கள் கடத்தல் என்று பல வழிகளில் கருப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளுக்கு செல்கிறது எனவும் அவர் கூறுகிறார்.

இதுவரை இந்தியாவிலிருந்து எவ்வளவு கருப்புப் பணம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பது குறித்து யாரிடமும் எந்த கணக்கும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

முறைகேடான வகையில் பண பரிவர்த்தனைகள் இடம் பெற்றுள்ளதாக என்று அரசு நிரூபிக்குமானால் கருப்புப் பணம் தொடர்பான சர்வதேச விதிமுறைகளின்படி அக்குறிப்பிட்ட பணம் குறித்த தகவல்களை வெளியிட வேண்டிய கடப்பாடு சர்வதேச வங்கிகளுக்கு உள்ளது என்றும் ராமானுஜம் தெரிவிக்கிறார்.

வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமான வகையிலேயே பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று ஆதாரங்கள் மூலம் இந்தியா நிரூபிக்குமானால் அந்த நாடுகள் அப்பணத்தை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

சட்ட விரோதமான வகையில் வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை முதலீடு செய்த விடயத்தில் இதுவரை இந்தியாவில் யாரும் பெரிய அளவில் தண்டிக்கப்படவில்லை என்று கூறும் அவர் அதற்கு அரசின் உறுதிப்பாடு இன்மையே காரணம் எனவும் கருத்து வெளிகிடுகிறார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/01/110120_blackmoney_india.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.