Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கவிதை

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    7
    Points
    1454
    Posts
  2. போக்குவரத்து

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    6
    Points
    533
    Posts
  3. கோமகன்

    வரையறுக்கப்பட்ட அனுமதி
    5
    Points
    7395
    Posts
  4. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    53011
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/30/12 in Posts

  1. ஆங்கில மொழியின் வரலாறு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்தஆங்கிலோ-சக்சன் ( Anglo-Saxon) என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஒர் உலக மொழியாக இருக்கிறது. 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது. அறிவியல், வணிகம், ஊடகவியல், அரசியல் என எல்லாத்துறைகளும் இம்மொழியில் நடைபெறுகின்றன. உலகின் சனத்தொகையில் ஆறில் ஒரு பகுதி மக்களால் பேசப்படும் ஆங்கிலம் அமெரிக்கா , பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸ்லாந்து , கனடா (பகுதி) முதன்மை மொழியாகவும் அயர்லாந்து , தெனாபிரிக்கா நாடுகளின் பெருமளவில் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. இதுவரை ஆக்ஸ்போஃட் அகராதி (Oxford English Dictionary) 500,000சொற்களை உள்ளடக்கியுள்ள போதிலும் பல புதிய சொற்கள் தினமும் உருவாகின்றன. உலக தபால் தொலைத் தொடர்பு மூன்றில் ஒருபகுதியிலும் மற்றய தகவல்கள் 80%கணனியிலும் (பலவடிவில்) உள்ளடக்குகின்றது. உலகில் தமது தாய்மொழி தவிர்ந்த 2 ம் மொழியாக 700 மில்லியன் மேலான மக்கள் ஆங்கிலத்தை உபயோகிக்கின்றனர். தினம் வெளியாகும் சஞ்சிகைகள் மற்றும் ஊடகங்கள் (CBS, NBC, ABC, BBC and CBC) ஆங்கிலமொழியில் வெளியிடும் தகவல்கள் உலகின் அரைவாசிக்கும் மேலான மக்களை சென்றடைகின்றது. ஐ.நா வில் அங்கம்வகிக்கும் 163 நாடுகளில் ஆங்கிலம் (45), பிரஞ் (26 ), ஸ்பனிஷ் (21), ஆரபிக் (17) இவற்றுடன் மீதமாகவுள்ளவை தமது தாய் மொழியையும் அரச கருமத்தில் உபயோகிக்கின்றன. ஆங்கிலம் உலகத்தை ஆட்டிப்படைக்கும் இனையத்தின் தாய்மொழியாகவும் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப விடையத்தில் வல்லமையுள்ள மொழியாகவும் இருந்துவருகின்றது. ஆங்கில மொழியில் 540,000 சொற்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இது ஷ்க்ஸ்பியர் காலத்தில் இருந்ததை விடவும் 5 மடங்கு அதிகமாகும். ஆங்கில அகர எழுத்துக்களில் மிகவும் அதிகமாக பாவிக்கப் படுவது - E , மிகவும் குறைவாக பாவிக்கப்படுவது - Q ஆகும். ஆங்கில மொழியில் மிகவும் சிறியதும் முழுமையானதுமான வசனம் " I am." என்பதே. இரு முறை " i " எனும் எழுத்து அடுத்துவரும் ஒரே ஒரு சொல் " skiing " மட்டுமே. " mt " எனும் சொல் மட்டுமே " dreamt " இல் முடிவடையும் சொல் என்பதும் குறிப்பிடக் கூடிய அம்சங்களாகும். ஆங்கிலமொழியில Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis (Silicosis) எனும் சொல் மிக நீளமானது. அதிகார பூர்வமாக ஏற்க்கப்பட்ட இந்த சொல்லில் 45 எழுத்துக்கள் உண்டு. இதை விடவும் பலநூறு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஆனால் அகராதிகளில் சேர்க்கப்படாத சொல்கள் உள்ளன http://aruvam.com/2009-06-03-10-55-29/2009-06-03-10-52-15.html
  2. அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர். ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் மிஸ் கமலா; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி. இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் ஈடன் கார்டன்ஸ். புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் அமேலியா ஏர்ஃகாட் காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை. இந்தியக் கடலோரக் காவல்படை 1978ல் உருவாக்கப்பட்டது. முன்னாள் இசுரேலியப் பிரதமர் கோல்டா மேயர் அந்நாட்டு அரசியலின் “இரும்புப் பெண்மணி” என்று அழைக்கப்பட்டார். மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ டபிள்யூ. டி. அமரதேவ. தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை சிறப்பு வான்சேவை என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் பனிக்குட நீர். சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி. கடம்பினி கங்கூலி பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில்மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார். பயிற்சிபெற்ற முதல் பெண் கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல்அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர். கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் ஏற்றப்பாட்டு எனப்படுகிறது. சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு கன்பூசியசு அமைதிப் பரிசு என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது. தன்னியக்க வங்கி இயந்திரம் எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார். சின்த்தோ (அல்லது ஷிண்டோ) என்பது சப்பானில் பின்பற்றப்படும் ஒரு மதம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் வரை இதுவே சப்பானின் முதன்மையான மதமாக விளங்கியது. சபையில் அல்லது மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும். இலங்கையில் 1972 இல் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்கு திரைப்படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியில் ஒலிபரப்பத் தடை செய்யப்பட்டது. வெள்ளை ரோசா என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன. எகிப்தில் உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. மகடூஉ முன்னிலை என்பது, எதிரில் உள்ள பெண்ணொருத்திக்குச் சொல்வதுபோல் பாடல்களை எழுதும் ஒரு முறையைக் குறிக்கும். இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் கலவரம் கருதப்படுகிறது. திருவிதாங்கூர் சமத்தானத்தால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டம் தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. ஆலோவீன் பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் . கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இரகுவம்சத்தைத் தமிழில் முதன் முதலில் பாடியவர் கிபி 16 - 17 ஆம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் வாழ்ந்த அரசகேசரி என்னும் அரச குடும்பத்துப் புலவர். இது 1887 இல் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டது. கற்காலம் என்பது, கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதியைக் குறிக்கிறது. இந்தியாவில் முதல் தொடருந்துப் போக்குவரத்து 22 டிசம்பர் 1851-ல் ரூர்க்கிக்கு கட்டுமானப்பொருட்களைக் கொண்டு செல்ல துவங்கப்பட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.