Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. ஊர் ஒன்று கூடியிருக்கிறது. அடுத்தது என்ன தேரை ஓன்று கூடி இழுப்பதுதானே. குமாரசாமி, நீங்கள் குறிப்பிட்ட நூறு பேர்களோடு நூற்றியொன்றாக என்னையும் சேர்ததுக் கொள்ளுங்கள். “நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்”🙏
  2. சர்வதேசம் எப்போதும் தனது நலன்களை முன்னிலைப்படுத்தியே செயற்படும் என்று கூறும் வேலன் அவர்கள், அதே சர்வதேச சமூகத்திடம் தங்களது போராட்டத்தை எடுத்துச் சென்று, அதன் மூலம் தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்துவது எனக்குப் புரியவில்லை. சர்வதேசம் நலன் மட்டுமே பார்க்கும் என்றால், அதிலிருந்து நமக்கான நியாயம் எவ்வாறு கிடைக்கும் என்ற கேள்வி என்னிடம் எழுகிறது. தான் “காவி உடுத்திய துறவி” என வேலன் அவர்கள் கூறுகின்றார். துறவி என்பவர், உலகியல் ஆசைகளைத் துறந்தவராக இருக்க வேண்டும். அப்படி என்றால் அரசியல் ஆசையும் அதிலிருந்து விலகியிருக்க வேண்டாமா? இங்கே பட்டினத்தார் கதையொன்று நினைவுக்கு வருகிறது. ஒருமுறை வயல் வரப்பில், தலைக்கு கை வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த பட்டினத்தாரைக் கண்ட இரண்டு பெண்களில் ஒருவர், “பார், துறவி எவ்வளவு சுகமாக படுத்திருக்கிறார்” என்று கூறினாராம். அந்த வார்த்தை பட்டினத்தாரின் காதில் விழுந்ததும், “இன்னும் நான் துறக்க வேண்டியது நிறைய இருக்கிறது” என்று உணர்ந்தாராம். அந்தக் கதையின் தொடர்ச்சியை இங்கே விரிவாக எழுதத் தேவையில்லை. அதன் பொருளைப் புரிந்துகொள்ளலாம். வேலன் அவர்கள் ஆன்மீகப் பாதையிலேயே நிலைத்து நிற்பது அவருக்கும் சமூகத்திற்கும் உகந்ததாக இருக்கும் என்பதே என் கருத்து. அரசியல் அவருக்கு அவசியமான துறை அல்ல. ஏற்கனவே எங்கள் மதகுருக்களுக்கு சமூகத்தில் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் கிடையாது. அந்தச் சூழலில், போராட்டம், அறம், வீரம் என மக்களின் உணர்வுகளைத் தூண்டி உசுப்பேற்றிக்கொண்டே இருந்தால், இருக்கிற மதிப்பும் மெல்ல மெல்லக் குறைந்து போகும். அதையும் மீறி அரசியலில் ஈடுபடுவேன் என்று வேலன் அவர்கள் அடம் பிடித்தால், இன்னொரு “அர்ச்சுனா” அவதாரம் எடுத்து வருவதற்கான வாய்ப்பை நாம் அடுத்த தேர்தலில் பார்க்கலாம். “பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்களில் …”தலைப்பு வேறு ….
  3. கோட்டு ஓவியங்கள் வரைபவர்களில் என்னை அதிகமாகக் கவர்ந்தவர், தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர் ராமு அவர்கள். அவரது ஓவியங்கள் அநேகமாக குமுதம் இதழில் வெளியாகியிருந்தன. இதே நேரத்தில், கல்கி இதழில் சிறுவர் கதைகளுக்கான ஓவியங்களை ஓவியர் ரமணி என்பவர் வரைந்துவந்தார்.ரமணியின் ஓவியங்கள், ராமு அவர்களின் ஓவியங்களைப் போலவே நிறைந்த கறுப்பு நிறங்களால் இல்லாமல், தனி கோடுகளில் எளிமையாக, நேர்த்தியாக அமைந்திருந்தன. ரமணி அவர்களின் ஓவியங்களில், அவரது ஒற்றைக் கோடு மூலம் அழகிய படங்களை வரைந்து மக்களை கவரும் திறமை, ஈழத்து ஓவியர் சுப்பிரமணியம் அவர்களிடமும் இருந்தது. எழுபதுகளில், (சுப்பி)ரமணி(யம்) ஓவியங்களை சிறுவர் பாடப் புத்தகங்களில் பார்த்தேன். அந்த ஓவியங்களை கண்டு வியந்து, “இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமணி என்ற ஓவியரா?” என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. அதே சமயம், அவரது ஓவியத்தில் ஒன்றான, மகிழ்ச்சியுடன் ஓடிவரும் சிறுமியின் படத்தை பார்த்தபோது, அதை பின்பற்றி பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பியின் முகப்பிற்காக நான் வரைந்திருந்தேன். அந்த படத்தை பார்த்ததும், மார்க் மாஸ்ரர் அவர்கள் “இது ரமணியின் ஓவியமாக இருக்கிறது” என்று கூறினார். அப்பொழுதுதான் ரமணி அவர்களும் மார்க் மாஸ்ரரின் ஒரு மாணவன் என்பதை, நான் அறிந்து கொண்டேன். ஓவியர் ரமணியை நான் நேரடியாக சந்தித்ததில்லை. ஆனால் அவரது படைப்புகளின் மேல் என் ரசனை எப்போதும் இருக்கின்றது. ஈழத்து தமிழர்களின் கலை மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தில் அவர் மிக முக்கியமான இடம் வகிக்கிறார். இவரது ஓவியங்களில் எப்போதும் நிறைவான அழகு, நுணுக்கம் செறிந்திருக்கும். ஓவியர் ரமணி அவர்களுக்கு எனது இதயபூர்வ அஞ்சலிகள்.
  4. ஈழத்து கலைஞர்களும், சமூக சேவையாளர்களது படங்கள்
  5. கிறிஸ்துமஸ் தினம் என்பது யேர்மனியில் மகிழ்ச்சியோடு, குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றாக கொண்டாடும் ஒரு முக்கியமான நாள். கிறிஸ்துமஸ் விடுமுறை பொதுவாக அமைதியானதாகத்தன் இருக்கும், ஆனால், இந்த அமைதியான நேரத்தில் Gelsenkirchen நகரத்தில் அசாதாரணமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. Gelsenkirchen நகரத்தில் உள்ள Sparkasse வங்கியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்கள், வங்கியின் அடித்தளத்தில் உள்ள பார்க்கிங் கேரேஜ் வழியாக அங்குள்ள ஒரு அறையில் நுழைந்து, வங்கியின் சுவரில் ஒரு துளையை ஏற்படுத்தி, அதன் மூலம் காப்பக அறைக்கு சென்றிருக்கின்றனர். அந்த துளையை உருவாக்குவதற்காக சிறப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவோ, அதனுடைய சத்தம் வெளியே யாருக்கும் கேட்காமல் துளையிட்டிருக்கின்றார்கள் என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காப்பக அறையின் தரையில் உள்ள கோப்புகள் சிதறிக் கிடப்பதோடு, அந்த அறையில் இருந்த பெட்டிகளும் உடைக்கப்பட்டிருந்தன. பொதுவாக, காப்பகப் பெட்டிகளில் பணத்தை வைக்க அனுமதியில்லை, மேலும் அங்கு வைக்கப்பட்ட பணத்திற்கு காப்புரிமையும் இல்லை. இக் கொள்ளை சம்பவத்தை கேள்விப்பட்ட 200க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள், வங்கியின் முன்னால் கூடியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. மறு அறிவித்தல் வரை, வங்கி பொதுமக்களுக்கு திறக்கப்படாது என அறிவிப்புகள் பலகையில் போடப்பட்டிருக்கின்றது. புது வருடம் வரும் நேரத்தில் இது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்றில்லை, சிலருக்கு சோகத்தையும் ஏற்படுத்தும் blue NewsGermany: Hole in vault triggers rush of bank customersUnknown persons have broken into a bank building in the German city of Gelsenkirchen and ransacked several safe deposit boxes. According to police, the perpetrators used a large drill to get into the
  6. பரவாயில்லையே AIயும் என்னைப் போலவே சிந்தனையை கொண்டிருக்கிறதே.😇 நீண்ட கதையானாலும் முடிவுவரை கட்டிப்போட்டிருந்தது உண்மை. ஆனாலும் AIயின் முடிவுரை உண்மைதான். இப்படியான நிகழ்வுகளின் வலிகள் வாழ்நாள் முழுதும் தொடரும் என்பது உண்மையே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.