நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
-
தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்
ஒரு கருத்து: "காத்தடிக்குது, புயலடிக்குது காரைநகரில ஈ.பி. அடிக்குது"🤣 என்ற சிறுவர் பாடலிற்கு பொருத்தமாக 19/07/86 அன்று யாழ் கடலில் (விதப்பாக எவ்விடத்தில் என்று கூறவில்லை🥱, பெரும்பாலும் காரைநகரென ஊகிக்கின்றேன்) வைத்து சிங்களவரின் இரு சுற்றுக்காவல் படகுகளை அழித்தாகவும் அத்தாக்குதலில் 17 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் EPRLFன் சென்னையிலுள்ள அலுவலகத்திலிருந்து பி.பிசிக்கு செய்தி அறிக்கை அனுப்பப்பட்டது, 21/07/1986 அன்று. செய்தி வெளியானதும் இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. என்றாலும் வழமையாக தம்தரப்பிற்கு இழப்புகள் ஏற்படும் போது மக்கள் மீது நடத்தும் தாக்குதல் போன்றவையெதுவும் அப்பரப்பில் 19/07 அன்று நடைபெறவில்லை. மேலும் ஈ.பியும் விளக்கமாக தாக்குதல் தொடர்பான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. இத்தாக்குதல் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னர் (18/07 அன்று) இதே போன்றே காரைநகர் கடற்பரப்பில் சுற்றுக்காவலில் வந்த சிங்களப் படையினர் மீது தாம் மேற்கொண்ட கணையெக்கி (Mortar) எறிகணைவீச்சில் "ஒரு படகு சேதமானதாகவும், பல கடற்படையினர் கொல்லப்பட்டிருக்கலாம்" என்றும் ஊகமான கருத்தில் உதயன் நாளேட்டிற்கு செய்தி அறிக்கையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு பம்பலான தகவல் யாதெனில், இவ்வாறான அடுத்தடுத்த அறிக்கைகள் யாவும் காரைநகர் கடற்படைத்தளத்தின் இறங்குதுறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெறுவேயம் (Cannon) பொருத்தப்பட்ட சிறிலங்கா கடற்படையின் அதிநவீன விசைப்படகொன்று அப்போதைய கடற்புலிகளின் கடற்கண்ணிவெடி தாக்குதலில் சிதறியது. இது நடந்தது சூலை 15ம் திகதி விடிசாமம் 3 மணி. தாக்குதலைத் தொடர்ந்து கடற்படையினர் சுற்றுப்புறமெங்கும் கணையெக்கி கொண்டு எறிகணைவீச்சு மேற்கொண்டனர். புலிகளின் இத்தாக்குதலின் பின்னர் தான் ஈ.பி. அடுத்தடுத்து (சூலை 18 மற்றும் 21இல்) இதுபோன்ற காத்தடித்த செய்திகளை காற்றில் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இது போன்ற EPRLF இன் செய்தி அறிக்கைகள் காத்தடிப்பது போன்று உள்ளதால் - நம்ப கடினமாக இருப்பதால் - நான் இணைக்கவில்லை! இருப்பினும் எதிர்கால தலைமுறைகள் பிழையான வரலாற்றை அறியக்கூடாதென்பதால் இதனையும் பதிந்து உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளக்கிச் செல்கிறேன்.
-
தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்
முற்றும் நன்றி
-
தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்
கடற்படை படகு மீது கண்ணிவெடி! தமிழ் ஈழ ராணுவம் தாக்குதல் ஆதாரம்: உதயன் - 24/12/1986 யாழ்ப்பாணம், டிச. 24 காரைநகர் முகாமைச் சேர்ந்த ஆறு கடற்படைச் சிப்பாய்களுடன் வந்த கடற்படைப் படகு ஒன்று தமிழ் ஈழ இராணுவத்தின் பாரிய கண்ணிவெடிக்கு இலக்காகியது. ஊர்காவற்றுறை மேற்கு பருத்தி அடைப்பை நோக்கி வந்த கடற்படைப் படகே இத்தாக்குதலுக்கு இலக்கானது. இதனால் படகு முற்றாகச் சேதம் அடைந்ததாகவும் கடற்படையினர் மரணம் அடைந்தனர் என்றும் தமிழ் ஈழ இராணுவம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரச படையினர் ஷெல், துப்பாக்கித் தாக்குதல்களை நடத்தினர். தமது பதில் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் தான் கடற்படையினர் முகாமிற்குத் திரும்பினர் என்று தமிழ் ஈழ இராணுவத்தின் அறிக்கை மேலும் தெரிவித்தது. (உ-எ)
-
தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்
கடற்படைப் படகு மீது கடற்கண்ணி தாக்குதல் தமிழ் ஈழ இராணுவம் நடத்தியது ஆதாரம்: உதயன் - 09/12/1986 யாழ்ப்பாணம், டிச. 9 காரைநகர் கடற்படையினர் மீது நேற்று தமிழ் ஈழ இராணுவம் கடற்கண்ணி வெடித்தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் கடற்படையினர் ரோந்து சென்ற கடற்படைப் படகு முற்றாக சேதம் அடைந்ததாகவும் சில கடற்படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவருகிறது. நேற்று அதிகாலை நான்கு மணி அளவில் இச்சம்பவம் நடந்தது. காரைநகர் கடற்படை முகாமில் இருந்து மூன்று அல்லது நான்கு கூலிப்படையினரோடு ஊறுகண்டி கடற்கரையை அண்டிய பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீதே தமிழீழ இராணுவம் கடற்கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து காரைநகர் முகாமிலிருந்தும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டன. இரண்டு ஹெலிகாப்டர்களும் இப்பகுதிக்கு விரைந்து வந்து கடும் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதல்களை எதிர்த்து தமிழ் ஈழ இராணுவத்தினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சம்பவத்தில் பொதுமக்களது வீடுகள் சில சேதமடைந்ததாகவும் சிலர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது. (இ-10)
-
தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்
இத்திரியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடை செய்யப்படுமுன்னர் TEA என்ற ஆங்கில சுருக்கத்தால் அறியப்படும் தமிழ் ஈழ இராணுவம் எனப்படும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆயுத அமைப்பினரால் சிறிலங்காக் கடற்படையின் கடற்கலங்கள் மீது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகவும் அதனால் மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள் தொடர்பிலும் தகவல் சேகரிக்கப்பட்டு பதிவிடப்படும். ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
-
தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
"காத்தடிக்குது, புயலடிக்குது, காரைநகரில ஈ .பி . யடிக்குது போற வழியில புலியடிக்குது வாற வழியில டெலோ அடிக்குது கொழும்பு நகரில ஈரோஸ் அடிக்குது சோத்துப் பார்சலை புளொட் அடிக்குது!"
- 383 replies
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
வலிய ஓடம் இலட்சதீவு
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
வலிய ஓடம் இலட்சதீவு பண்டகர் (Dr.) GC Pookoya வரைந்த வலிய ஓடத்தின் ஓவியம்:
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
இலட்சதீவுலிருந்து வாணிபத்திற்காக இலங்கை வந்த தோணி 1940/10/07
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சிறியது (இது தான் வகை பெயரே) இலட்சதீவு
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கொந்தளம் இலட்சதீவு
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
ஓமோம். நீங்கள் சொல்வது போன்று கண்டிப்பாக குழப்பம் உண்டாகும் தான். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நீங்கள் சொல்வது போன்றே விளிக்கலாம்.
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
நன்று .... வீரவேங்கை என்பது புலிகளின் அடிப்படை தரநிலை. பயிற்சி பாசறையினுள் போனவுடன் கிடைக்கும் முதல் தரநிலை. என்றாலும் நான் இங்கு கூறிய வீரவேங்கை தரநிலையன்று அ ஒரு அடைமொழி(!?). அது ஒவ்வொரு நினைவுக்கல் & கல்லறையின் தலைப்பகுதியில் உள்ள தரநிலைகளுக்கு மேலே எழுதப்பட்டுள்ள பொதுச்சொல் ஆகும். எனினும் தரநிலை வீரவேங்கை என்றால் அதற்கு மேல் "வீரவேங்கை" என்று பெரிதாக எழுதப்பட்டிருக்காது. கீழ்க்காணும் நினைவுக்கற்களை எடுத்துக்காட்டாகக் காண்க: (கல்லறைகளின் தலைக்கற்களிலும் இதே கதை தான்) கேணல், லெப். கேணல் ஆகியன "வாழ்நிலை" என்று அழைக்கப்படும் தரநிலைகளாக புலிகளால் சில பொறுப்பாளர்மார் மற்றும் கட்டளையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. கட்டளையாளர்கள் பொதுவில் விளிக்கப்படும் போது இவ்வாழ்நிலையோடு சேர்த்தே விளிக்கப்பட்டனர், பொறுப்பாளர்மார் பெரும்பாலும் பெயரால் விளிக்கப்பட்டனர். வீரச்சாவின் பின் இவ்வாழ்நிலை தரநிலைகள் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டன. எனினும் படைத்துறைச் செயலர் தமிழேந்தியப்பா இன் வீ. போது கேணல் என்றே வழங்கப்பட்டது. ஆயினும் இவரின் இத் தரநிலையை புலம்பெயர் தமிழர்கள் 2009 இன் பின்னர் "பிரிகேடியராக" மாத்தி வரலாற்றுத் திரிபு செய்து வழங்குகின்றனர்.
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
அது போராளிகளுக்கு தான் ஐயனே தெரியும். எனக்கு (பொதுமகன்) உந்த காகம் பொறுக்கின மாதிரி எங்கேனும் கிடைக்கும் கொசுறு தகவல்தான் தெரியும். ஆனால் ஒன்று. வட்டுவாகல் பாலம் விழுந்த பின்னர் அதை மீளக் கைப்பற்ற 13 கடற்கரும்புலிகள் மே 12 ம் திகதி முயன்றனர்; முடிவில் தோற்றுப் போயினர். அவர்களில் ஒருவன் கடற்கரும்புலி கப்டன் ஈகன் (அன்னாரின் உறவினர் முன்னொரு காலத்தில் ஊடகத்திற்கு வழங்கிய தகவல்). இதிலிருந்து அறிவது இவருக்கு தரநிலை வழங்கப்பட்டுள்ளது - என்றாலும் ஒருவரின் தரநிலையை வைத்து ஒக்கத்திற்குமே முடிவெடுக்கேலாது. முன்னாள் விடுதலைப் போராட்ட வீரர்களால் தான் முற்றாக நிறுத்தப்பட்ட திகதி தொடர்பான இத்தகவல் வழங்க முடியும். மற்றொன்று, மே மாதம் இரண்டாம் கிழமையோடு - ஏறத்தாழ 10 ம் திகதியோடு - தலைமைச்செயலகத்தின் சிறப்பு ஆளணி அறிக்கை பகுதி செயலற்றுவிட்டது/ நிறுத்தப்பட்டது. எனினும் மற்ற தனியான ஆளணி அறிக்கை பகுதிகள் தொடர்ந்து செயலுறுவாய் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. -- ஓம் அது உண்மை. என்றாலும் எல்லோருக்கும் வழங்கும் பொதுவான தரநிலையே அவர்களுக்கும் வழங்கலாம் என்பது எனது எண்ணம். மாவீரர்களில் புலிகள் வேறுபாடு காட்டியதில்லை. ஒவ்வொரு து. கல்லறைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் (லெப். சங்கர் எ சுரேஸ் தவிர்த்து)
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
அது தெரியாது ஐயனே ... இல்லை.... அது சொந்த முடிவுகளை எடுக்குமாறு அறிவிக்கப்பட்ட திகதி ... இதன் திகதி எனக்கு தெரியாது ... ஆனால் 13 ம் திகதி எனக்கு தெரிந்த ஒருவர் வீரச்சாவடைந்தார்... ஒரு பொறுப்பாளர்.அவருக்கு கூட தரநிலை புலிகள் வழங்கவில்லை.