Everything posted by நன்னிச் சோழன்
-
das.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
afas.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு 17.01.2007
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
தலைநகர் திருமலையில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு மூதூர், 10/1/2006
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
கடந்த சூலை 27, 2005 அன்று வவுனியாவில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாட்டில் சாற்றாணையிடப்பட்ட கொள்கைகளை மீள்வலியுறுத்தி வவுனியாவில் நடந்த மற்றொரு பொங்கு தமிழ் மாநாடு 27/10/2005
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
cd2 (1).jpg
From the album: Tiger Era Tamil Eelam Album Covers
-
cd1.jpg
From the album: Tiger Era Tamil Eelam Album Covers
-
தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளங்களின் படிமங்கள் | Images of official websites of de-facto Tamil Eelam government
தமிழீழத்தின் TTN தமிழ் ஒளி தொலைக்காட்சியின் அலுவல்சார் வலைத்தளமான www.tvttn.com இன் முகப்பின் தோற்றம்
-
Vanni Tech - வன்னியில் தமிழர்களின் சிலிக்கன் பள்ளத்தாக்கு
Tamil Naatham March 6, 2005 தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் (Information And Communication Technology) ஒரு தேசத்தின் எழுச்சியையும், இருப்பையும் தீர்மானிக்க வல்லது. இந்த வகையில் எங்கள் தமிழ்த் தேசமும் உலகின் தகவல் தொடர்பாடல் வளர்ச்சி வேகதிற்கு ஈடுகொடுத்து தனது தேவைகளை தனது சொந்தக் காலில் நின்று பூர்த்தி செய்யக் கூடிய வகையில் வல்லுநர்களை உருவாக்கும் முயற்சியின் ஒருபடியாக "வன்னிரெக்" 2003 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் ITTPO எனப்படும் சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமெரிக்க சிலிக்கன் பள்ளத்தாக்கில் புகழ் பூத்த தகவல் தொழில் நுட்பவல்லுநரும், வன்னி ரெக்கின் முகாமை நிறுவனமான ITTPO வின் தலைவருமான இரத்தினம் சூரியகுமாரன் இதன் செயற்பாடுகள் பற்றி தெரிவிக்கையில், "இலங்கையிலும் அதற்கு அப்பாலும் மிக மதிப்புடையதும், மிகவும் அறியப் பெற்றதுமான ஒரு கல்வி நிறுவனமாக வன்னிரெக் கடந்த இரண்டரை ஆண்டுகளில் வளர்ச்சியடைந்திருப்பதைக் காண முடிகிறது. இதன் முதலாவது தொகுதி மாணவர்கள் தங்கள் கல்வியை இங்கு நிறைவு செய்து கொண்டு, பட்டமளிப்பு விழாவை ஆகஸ்ட் 2004இல் கொண்டாடினார்கள். இப்பட்டதாரிகள் அநேகமானோர் இப்பிரதேசத்திலேயே தங்கள் தங்கள் துறையில் தொழில் புரிந்து வருகிறார்கள். ஏப்ரல் 2005இல் இராண்டாவது தொகுதி மாணவர்கள் தங்கள் கல்வியை நிறைவு செய்து கொள்ளவிருக்கின்றார்கள். வெகுவிரைவில் அடுத்த கல்வியாண்டுக்கான தேர்வுச் செயற்பாடுகளைத் தொடங்குவோம். உலகின் பல பாகங்களையும் சேர்ந்த தொண்டர்கள் வன்னி ரெக்குக்கு தொடர்ந்து வருகை தந்து பாடநெறிகளுக்கும் தொடர்புபட்ட திட்டச் செயற்பாடுகளுக்கும் பங்களிப்பு செய்து வருகின்றார்கள். வன்னி ரெக்குக்கு வருகை தருபவர்கள் இச்சிறிய குறுகிய காலப்பகுதியில் இங்கு ஏற்பட்ட பாரிய முன்னேற்றம் கண்டு வியப்புற்று நிற்கிறார்கள். இத்தகைய சிறப்பு ஆற்றல் கொண்ட வேறு எந்த நிறுவனத்தையும் இந்த நாட்டில் தாங்கள் காணவில்லையென அவர்கள் கூறுகின்றார்கள். "வன்னிரெக்" எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையின் சின்னமாக விளங்குகிறது. பல வழிகளிலும் பங்களிப்புச் செய்த உலகளாவிய புரவலர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோருக்கே நாங்கள் இதற்குக் கடமைப்பட்டிருக்கிறோம். அடுத்த இருபது ஆண்டுகளில் இந்த நிறுவனத்தை ஒரு மதிப்புமிகு பல்கலைக்கழகமாக வளர்த்தெடுப்பதே "எங்கள் இலக்கு" என்றார் சூரியகுமார். வன்னி ரெக்கின் முதலாவது அதிபரும் ITTPO வின் பிரதான தகவல் தொழில் நுட்ப அதிகாரியுமான ஜெய் குமாரசூரியரிடம் வன்னி ரெக்கின் வளர்ச்சி மற்றும் செயற்பாடு பற்றி கேட்ட போது: "திட்டமிட்ட பாதையில் திசைமாறாமல் "வன்னிரெக்" சென்று கொண்டிருக்கிறது. சில வழிகளில் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அதிகமான வளர்ச்சியை, வெற்றியைக் கண்டிருக்கிறது. இப்படியான இதனது வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதில் பல நிபுணர்களையும் வல்லுனர்களையும் பிரபல்யமானவர்களையும் கொண்டிருந்ததில் வன்னிரெக் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டமான நிறுவனம் தான். புலம்பெயர்ந்த மற்றும் சர்வதேசத் தொண்டர்கள் தொடர்ந்தும் வன்னி ரெக்கக்கு வருகை தந்து தங்களது திறமைகளையும் புலமைகளையும் இங்குள்ள பணியாளர்களுடனும் மாணவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஜக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் ஆகியவற்றில் உள்ள சிறந்த நிறுவனங்களின் சிறந்த நிர்வாக நடைமுறைகள் வன்னி ரெக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பிரதேசத்திற்கும் நாட்டிற்குமான ஒரு மாதிரி நிறுவனமாக இது நிர்வகிக்கப்பட்டு முகாமைப்படுத்தப்பட்டு வருகிறது. வட, கிழக்கு மக்களுக்கு தொழில் நுட்ப அடிப்படையிலான ஒரு பொருளாதாரத் தளத்தை வழங்கி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம். ஒரு காலத்தில் இதுவே வடகிழக்கு மக்களின் முடிக்குரிய அணிகலனாயும், அமையக் கூடும்!" என்று நம்பிக்கையும் கூறினார். வன்னி ரெக்கின் ஆரம்பக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு தன்னார்வத் தொண்டர் தனது அனுபவத்தை விபரிக்கையில், "தேசியத் தலைவர் இவ்வாறானதொரு உயர்தொழில் நுட்பநிறுவனத்தை அமைப்பதையிட்டு மகிழ்ச்சியடைந்திருந்தார். சகல வழிகளிலும் ஆலோசனை வழங்கி ஊக்குவித்தார். தேசிய தலைவர் JAVA தொழில் நுட்பம் பற்றியும் அது எவ்வாறு இயங்கு தளங்களில் தங்கியிராது தொழிற்படுகிறது என்பது பற்றியும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அசைவியக்கத்தைப் பற்றியும் ஒரு தேசத்தின் சுய பொருளாதார அபிவிருத்தியில் அதன் தேவை இன்றியமையாத தன்மை பற்றியும் மிகக் கருத்தாழமிக்க உரையாடலினூடே விளக்கிய போது மகிழ்ச்சியாக இருந்தது. பன்முகப்பட்ட ஆளுமை உள்ள தலைவனின் "தலைமையில்" தமிழ்த் தேசம் தகவல் தொழில் நுட்ப உலகிலும் வீறுநடைபோடும் என்பதை உணர முடிந்தது" என்றார். வன்னி “ரெக்"கின் தாய் நிறுவனமான ITTPO வின் பணிப்பாளர் சபை: சபையின் தலைவர் ரத்தினம் சூரியகுமாரன் சபையின் செயலாளர் ஜென் சுசீந்திரன் சபையின் நிதிப் பொறுப்பாளர் ரவி வீரசிங்கம் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் அலுவலர் ஜெய்குமார சூரியர் பணிப்பாளர் பேராசிரியர் ஜே சந்திரா பணிப்பாளர் சசி பாலசிங்கம் பணிப்பாளர் ரூபன் கணபதிப்பிள்ளை பணிப்பாளர் ரூபன் நவரூபராஜா பணிப்பாளர் Dr.என்.ஏ.ரஞ்சிதன் பணிப்பாளர் சுரேன் சிவா பணிப்பாளர் Dr.எம்.சிறீதரன் கணக்காய்வாளர் தேவ் வாமதேவன் கற்கை முறைமை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் காணப்படும் முறைமைகள் இங்கு பின் பற்றப்படுகின்றது. அவற்றின் முக்கிய அம்சங்கள் வருமாறு. QUARTER SYSTEM WITH CREDITS (1 QUARTER = 10 , 4 QUARTERS G.P.A Based Grading GRADE POINT AVERAGE முறைமை செயற்றிறனை அளவிடப் பிரயோகப்படுகிறது. CONTINUOUS ASESSMENT (தொடர் மதிப்பீடு) MINIMUM GPA MAINTENANCE REQUIREMENT HANDS ON: விரிவுரைகளில் போதிப்பவை உடனடியாகவே செய்முறைப் பயிற்சியாக்கப்படுகிறது. VISITING INSTRUCTORS FROM OTHER COUNTRIES வசதிகள்: LECTURE HALLS, SOFTWARE LAB, HARDWARE LAB, NET WORKING LAB, WIRELESS LAN-WiFi (802.11b) LIBRARY, CAFETERIA, HOSTEL FACILITIES EMPLOYMENT INCUBATION CENTRE ஆகிய வசதிகள் வன்னி "ரெக்"கில் உண்டு. வன்னி ரெக்கில் இலத்திரனியல் விரிவுரையாளராக கடமையாற்றும் பொறியியலாளர் வசந்தராஜா வரோதயன் இங்கு போதிக்கப்படும் கற்கைநெறிகள் பற்றி விபரிக்கையில் "தேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய உயர் தொழில்நுட்ப கற்கை நெறிகள் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது. இவை Computer Communication and Networking, Database Application Development, Electronics, Webbased Application Development என நான்கு பிரதான கூறுகளைக் கொண்டுள்ளன. இக்கற்கை நெறிகள் யாவும் பல்வேறு சர்வதேச வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டன. மாணவர்கள் அனைவரும் FIELD DEPLOYABLE PROJECT எனப்படும் உடனடியாகப் பிரயோகிக்கக் கூடிய வேலைத்திட்டத்தைச் செய்து தாம் கற்றவற்றை உடன் பிரயோகிக்கும் சந்தர்ப்பத்தைப் பெறுகின்றனர். இது அவர்களின் வேலைவாய்ப்பிற்கு பெரிதும் உதவும் என்று கூறினார். சுருக்கமாகச் சொல்வதானால் எம் முன்னாலேயே எமது காலத்திலேயே -எமது தேசத்திலேயே ஒரு MIT (Massachuset Institute of Technology) ஈழத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது. எவ்வாறு இங்கு கல்வி கற்கலாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இம் மாத இறுதியில் 2 ஆவது அணி தனது கற்கை நெறியை பூர்த்தி செய்கிறது. அடுத்த வாரம் புதிய அணிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட இருப்பதாக அறிய முடிகிறது. www.ittpo.org உ. ஜெயதீபன்
-
தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளங்களின் படிமங்கள் | Images of official websites of de-facto Tamil Eelam government
தமிழீழத்தின் சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகத்தின் (ITTPO) அலுவல்சார் வலைத்தளமான www.ittpo.org இன் முகப்பின் தோற்றம்
-
eelam_scene_5.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
eelam_scene_3.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
eelam_scene_16.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளங்களின் படிமங்கள் | Images of official websites of de-facto Tamil Eelam government
தமிழீழத்தின் தமிழ் நாதம் செய்தி வலைத்தளத்தின் அலுவல்சார் வலைத்தளமான www.tamilnatham.com இன் முகப்பின் தோற்றம் கீழுள்ள படிமத்தில் (20 ஏப்ரல், 2009) காணப்படும் செய்திகள் தான் இவர்களின் வலைத்தளத்தில் இறுதியாக வந்த செய்திகளாகும். குறிப்பாக இவர்கள் கடைசியாக பாவித்துள்ள பொன்மொழியை நோக்குக. அதன் பின் ஒக்டோபர் மாதம் தொடக்கம் கீழ்கண்ட வசனம் மட்டும் வெளியானது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம். This is to advise due to personal reasons this website will not be functioning anymore.
-
www.tamilnaatham.com_.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
www.tamilnaatham.com_ (2).png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
தமிழீழ நடைமுறையரசின் அலுவல்சார் வலைத்தளங்களின் படிமங்கள் | Images of official websites of de-facto Tamil Eelam government
தமிழீழத்தின் அரச சார்பற்ற அமைப்பான வெண்புறா அமைப்பின் அலுவல்சார் வலைத்தளமான www.whitepigeon.uk.org இன் முகப்பின் தோற்றம்
-
www.tvttn.com_.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
www.whitepigeonuk.org_.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
_www.ittpo.org_.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
தலைநகர் திருக்கோணமலையில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடும் பேரணியும் 22/10/2005 பெரிய விளாங்குளம் ரஜமகா விகாரையின் அதிபதியான நந்தரெத்ன தேரர் (இந்நிகழ்வில் பங்கேற்ற காரணத்த்தில் அன்னார் சிலநாள் கழித்துச் சிங்களப் புலனாய்வுத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்), பிரம்மசிறி எஸ்.ரவிச்சந்திரகுருக்கள், வண பிதா .சி. வி. அன்னதாஸ் மற்றும் திரு.ஏ.எச்.சாகுல் ஹமீத் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்.
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
தமிழீழத்திற்குள் எவ்வாறு நுழைவது | நடைமுறையரசு கால எழுத்துசார் வழிகாட்டும் வரைபடம்
www.puthinam.com ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திலிருந்து சோதனைகளை முடித்துக்கொண்டு புறப்பட்டால் 250 மீற்றர் தூரமளவில் நடந்தோ அல்லது வாகனத்திலோ எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரமுடியும். ~வன்னி நிலம் வரவேற்கிறது| எனும் பெயர்ப் பலகை வீதியின் இடது பக்கம் காணப்படும் அந்த இடம் எமது கட்டுப்பாட்டுப்பகுதி ஆரம்பிக்கும் இடமாகும். இந்த பெயர்ப்பலகைக்கு பக்கமாகவே உங்களை அழைத்துச் செல்வதற்கு வாகனங்கள் காத்து நிற்கின்றன. சோதனை நிலையத்திற்கு செல்லும் வாகனத்தில் கேட்டு ஏறுங்கள். நீங்கள் உங்களுடைய வாகனத்தில் வந்தால் நேராக சோதனை நிலையத்திற்கு செல்ல முடியும். இங்கிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் து}ரத்தில் எமது சோதனை நிலையம் அமைந்துள்ளது. வன்னிப்பகுதிக்குள் செல்வோருக்கான இடத்தில் பொது வாகனத்தில் வந்தவர்களை இறக்கி விடப்படும். தனி வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை வாகனப்பகுதிக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும். வெளிநாட்டவர்களை பதிவு செய்யும் இடம் எனப் போடப்பட்டுள்ள பெயர்ப்பலகை உள்ள இடத்திற்கு செல்லுங்கள். அங்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்களை பதிவு செய்யும் பதிவாளர்கள் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்பார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம். நீங்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றீர்கள் என்பதற்குரிய கடவுச்சீட்டு அல்லது வெளிநாட்டில் வசித்ததற்குரிய ஆவணங்களைக்காட்டி 10 அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபா 1000.00) கொடுத்து பதிவுகளை மேற்கொள்ளுங்கள். நீங்கள் வன்னியில் தங்கும் முகவரியை மிகவும் தெளிவாகக் கொடுக்க வேண்டும். உங்கள் விபரங்கள் பதிந்த பின்பு ~தமிழீழம் உங்களை வரவேற்கின்றது| என்ற பயண அனுமதி அட்டையினையும் பணம் கொடுத்ததிற்கான பற்றுச்சீட்டையும் தருவார்கள். இதனை திரும்ப வெளிநாடு செல்லும் வரை கவனமாக வைத்திருத்தல் வேண்டும். அடுத்து> கொண்டு வரும் பொருட்கள் வெளிப்படுத்தல் படிவத்தில் பதியப்படும். எம்மால் 52 வகையான பொருட்களுக்கு தீர்வை விலக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதாவது 15 பொருட்கள் தீர்வை இல்லாமல் கொண்டுவர முடியும். நிதித்துறை ஆயப்பகுதியினரின் பொருட்கள் சோதனை செய்யும் இடத்திற்கு சென்றால் பொருட்கள் சோதனையிடப்படும். சோதனை முடிந்த பின் சோதனை முடிவடைந்ததற்குரிய பற்றுச்சீட்டு தரப்படும். அதனைக் கொண்டு சென்று சோதனை நிலையத்தில் இருந்து வெளியேறும் இடத்தில் காட்டி விட்டுச் செல்லுங்கள். அடுத்து சோதனை நிலையத்தை அடுத்துள்ள தமிழீழ போக்குவரவுக் கழக பேரூந்து தரிப்பிடத்தில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான பேரூந்தில் ஏறிச் செல்லலாம். வன்னி கிழக்கு பகுதியில் (விசுவமடு> புதுக்குடியிருப்பு> முள்ளியவளை) தங்குபவர்கள் திரும்பி செல்வதற்குரிய அனுமதியினை பெறுவதற்கு புதுக்குடியிருப்பில் உள்ள எமது ~நந்தவனம்| செயலகத்துக்கு சென்று பெறலாம். அத்துடன் உங்களுடைய குறை நிறைகளை கேட்டு அவர்கள் அதற்குரிய ஆலோசனைகளை தந்து உதவுவார்கள். அத்துடன் எம்முடைய வேலைத் திட்டங்களை பார்வையிட விரும்பியவர்களுக்கு (செஞ்சோலை> காந்தரூபன் அறிவுச்சோலை உட்பட ஏனையவை) அதற்குரிய ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்படும். வன்னி மேற்கு> மத்திய பகுதியில் (வட்டக்கச்சி> கிளிநொச்சி> அக்கராயன்> மல்லாவி) தங்குபவர்கள் கிளிநொச்சியில் உள்ள நந்தவனத்தில் தொடர்பு கொண்டு மேற்படி விடயங்களை கதைத்து ஒழுங்கு செய்யலாம். மன்னார் பகுதியில் தங்குபவர்கள் மன்னாரில் உள்ள தடைமுகாமில் தொடர்பு கொள்ளவும். வன்னி கிழக்குப் பகுதிக்கு வெளி வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வெளிநாட்டிலிருந்து இருந்து கண்டி-யாழ் (ஏ-9) பாதை ஊடாக யாழ் செல்வோர் கவனத்திற்கு: ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திலிருந்து சோதனைகளை முடித்துக்கொண்டு புறப்பட்டால் 250 மீற்றர் து}ரமளவில் நடந்தோ அல்லது வாகனத்திலோ வன்னிப் பகுதிக்குள் வரமுடியும். இங்கு ~வன்னி நிலம் வரவேற்கிறது| என்னும் பெயர்ப்பலகை வீதியின் இடது பக்கம் காணப்படும் அந்த இடம் எமது கட்டுப்பாட்டுப்பகுதி ஆரம்பிக்கும் இடமாகும். இந்த பெயர்ப்பலகைக்குப் பக்கமாகவே உங்களை அழைத்துச் செல்வதற்கு வாகனங்கள் நிற்கின்றன. இங்கு சோதனை நிலையத்திற்கு செல்லும் வாகனத்தில் கேட்டு ஏறுங்கள். நீங்கள் உங்களது வாகனத்தில் வந்தால் நேராக சோதனை நிலையத்திற்கு வரமுடியும். இங்கிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் து}ரமளவில் எமது சோதனை நிலையம் அமைந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் செல்வோருக்கான பதிவுகளை செய்யும் இடத்தில் வாகனம் உங்களை இறக்கிவிடும். வெளிநாட்டவர்களைப் பதிவு செய்யும் இடம் எனப் போடப்பட்டுள்ள பெயர்ப்பலகை உள்ள இடத்திற்கு செல்லுங்கள் அங்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்களை பதிவு செய்யும் பதிவாளர்கள் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்பார்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம். நீங்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றீர்கள் என்பதற்குரிய கடவுச்சீட்டு அல்லது வெளிநாட்டில் வசிப்பதற்குரிய ஆவணங்களை காட்டி 10 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா 1000.00) கொடுத்து பதிவுகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் விபரங்கள் அனைத்தும் பதிந்த பின் ~தமிழீழம் உங்களை வரவேற்கிறது| என்ற பயண அனுமதி அட்டையினையும் பணம் கொடுத்ததற்கான பற்றுச்சீட்டையும் தருவார்கள். இதனை திரும்பி வெளிநாடு செல்லும் வரை கவனமாக வைத்திருத்தல் வேண்டும். அடுத்து கொண்டு வரும் பொருட்கள் வெளிப்படுத்தல் படிவத்தில் பதியப்படும் எம்மால் 52 வகையான பொருட்களுக்கு தீர்வை விலக்கப்பட்டுள்ளன. அவற்றில் 15 பொருட்கள் தீர்வை இல்லாமல் கொண்டுவர முடியும். நிதித்துறை ஆயப்பகுதியினரின் பொருட்கள் சோதனை செய்யும் இடத்திற்கு சென்றால் பெருட்கள் சோதனையிடப்படும். சோதனை முடிந்த பின் சோதனை முடிவடைந்ததற்குரிய பற்றுச்சீட்டு தரப்படும். அதனைக்கொண்டு சென்று சோதனை நிலையத்தில் இருந்து வெளியேறும் இடத்தில் காட்டி விட்டுச் செல்லுங்கள். அதன் பின் நீங்கள் வந்த வாகனத்தில் வந்தவர்கள் எல்லோரும் நடைமுறைக்கு ஏற்றவாறு (சாரதி உட்பட) எல்லா வேலைகளையும் முடித்தால் பயணத்தை தொடரலாம். அல்லது தமிழீழ போக்குவரத்துக் கழக பேரூந்தில் ஏறி பயணத்தை தொடரலாம். யாழ் தடை முகாமிலிருந்து 1500 மீற்றர் து}ரத்தில் காவல் துறையினர் பயணிகள் அனைவரும் பயண அனுமதி அட்டை பெற்றுள்ளார்களா என்பதனைப் பரிசோதனை செய்வார்கள். அதிலிருந்து முகமாலைத் தடை முகாம் நோக்கிப் பயணத்தை தொடரலாம். முகமாலை தடை முகாமில் புளியங்குளத்திலிருந்து பயணித்த அனைவரும் யாழ் செல்கினறனரா என்பதனை உறுதிப்படுத்திய பின் யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை மேற்கொள்ள முடியும். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஏ-9 சாலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள ~நந்தவனம்| செயலகத்திலோ அல்லது யாழ் கொக்குவிலில் அமைந்துள்ள அரசியல் துறை செயலகத்திலுள்ள அனைத்துலகத் தொடர்பகப் போராளியான இளங்கோவிடமோ பொதுவான தொடர்புகளை ஏற்படுத்தக் கூடியவாறு இருக்கும். கவனிக்க வேண்டியவை: (1) யாழ்ப்பாணம் செல்லும் பயணிகள் திரும்பி வன்னிக்கோ அல்லது வவுனியாவுக்கோ செல்ல விரும்பினால்> எமது தடை முகாமில் (பளை> புளியங்குளம்) வெளிநாட்டவர் பதிவு செய்யும் இடத்தில் பதிந்த பின்னரே அவர்களால் தரப்படும் அனுமதிப் பத்திரத்துடன் மட்டும் பயணத்தை தொடர முடியும். (2) வவுனியா சென்று வரவிரும்பும் பயணிகள் பயண அனுமதி அட்டை பரிசோதனை செய்யும் இடத்தில் நாம் திரும்பி வரப்போகின்றோம் என்று கூறி முகமாலையில் தரப்பட்ட அனுமதித் துண்டுடன் நீங்கள் பயணத்தை தொடர முடியும். (3) குடும்பமாக வருபவர்கள் சில வேளைகளில் தனித்தனியே செல்ல விரும்பினால் பயண அட்டை பெறும் இடத்தில் முன்கூட்டியே தெரியப்படுத்தி ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள். (4) வன்னியில் உள்ள வாகனங்களை பயன்படுத்தாது வேறு இடங்களிலிருந்து வரும் வாடகை வாகனங்கள் கண்டி வீதியை பயன்படுத்துவதற்கு வாகனம் ஒன்றிற்கு தலா ரூபா 3000 போக்குவரத்து கழகத்துக்கு கட்டவேண்டும். வாகன உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. (தீர்வை கட்டாத வாகனங்களுக்கு 4000 ரூபா) (5) வெளிநாட்டிலிருந்து வரும் எமது மக்கள் அரச வாகனங்களிலோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் வாகனங்களிலோ வரும் போதும் தவறாது பயண அனுமதி ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும். (6) யாழ் செல்லும் வெளிநாட்டுப்பயணிகள் கண்டி வீதியை விட்டு வன்னியின் ஏனைய பகுதிகளுக்குள் பயணம் செய்வதை தவிர்த்தல் வேண்டும். (செல்வதாயின் அனுமதி பெறுதல் வேண்டும்) (7) யாழ் செல்லும் பயணிகள் வாகனத்தில் வன்னி செல்வோரை ஏற்றிச் செல்ல முடியாது. பயணம் தாமதமாகும் சந்தர்ப்பங்கள் (1) வர்த்தகர்களுடன் சேர்ந்து வரும்போது. (2) நீங்கள் வரும் வாகனத்தில் வந்த வேறு பயணிகள் எமது சோதனைக்கு உட்படுத்தாது மறைத்து பொருட்களை கொண்டு வந்திருந்தால். (3) எமது பண்பாட்டுக்கு பொருந்தாத சீரழிக்கக்கூடிய திரைப்படங்கள் (னுஏனுஇ ஏஊனுஇ ஏஐனுநுழு) கொண்டு வரும் போது. (4) எமது விடுதலைப் போராட்டத்திற்கு பொருந்தாத நபர்கள் தங்களது வாகனத்தில் வந்திருந்தால்;. (தீர்வை கட்டாத வாகனங்களுக்கு 4000 ரூபா) (5) வெளிப்படுத்தல் படிவத்தில் சரியான முறையில் தகவல்களை கொடுக்காமல் இருக்கும் போது. (6) வேறு பயணிகள் தமது பொருட்களை வெளிநாட்டவர்களிடம் கொடுத்து வரும் சந்தர்ப்பத்தில் (தீர்வை மோசடி செய்ய முற்படும் போது) வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், கொழும்பிலிருந்து விமானம் ஊடாக யாழ் சென்று கண்டி வீதி ஊடாக வன்னி> வவுனியா செல்வோர் கவனத்திற்கு: முகமாலை இராணுவ சோதனை நிலையத்திலிருந்து சோதனைகளை முடித்துக் கொண்டு புறப்பட்டால் 500 மீற்றர் து}ரம் அளவில் வாகனத்தில் எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரமுடியும். வீதிக்கு இடது பக்கம் வாகனம் உங்களை அழைத்துச் செல்வதற்கு நிற்கும் அதில் ஏறுங்கள். வன்னி செல்பவர்கள் நேராக சோதனை நிலையத்துக்கு செல்ல முடியும். வவுனியா செல்பவர்கள் அவ்விடத்திலேயே பதிவினை மேற்கொண்டு நேராக புளியங்குளத்திற்கு பயணிக்க முடியும். வன்னி செல்பவர்கள் 1500 மீற்றர் து}ர அளவில் வீதியின் வலது பக்கம் உங்களை இறக்கி விடப்படும் அங்கு வெளிநாட்டவர் பதியும் இடமென போடப்பட்டுள்ள இடத்திற்கு செல்லுங்கள். அங்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்களை பதிவு செய்யும் பதிவாளர்கள் இருப்பார்கள். அவர்கள் உங்களை வணக்கம் தெரிவித்து வரவேற்பார்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள். நீங்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றீர்கள் என்பதற்குரிய கடவுச்சீட்டு அல்லது வெளிநாட்டில் வசிப்பதற்குரிய ஆவணங்களைக் காட்டி 10 அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபா 1000.00) கொடுத்து பதிவுகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் விபரங்கள் பதிந்த பின்பு ~தமிழீழம் உங்களை வரவேற்கிறது| என்ற பயண அனுமதி அட்டையினையும் பணம் கொடுத்ததற்கான பற்றச்சீட்டினையும் தருவார்கள். அதனை அடுத்து பொதிகள் சோதனை செய்யும் இடத்திற்கு சென்று சோதனைகள் முடித்தபின் அடுத்துள்ள வழியினால் வெளியேறி தமிழீழ போக்குவரத்துக் கழக பேரூந்தில் ஏறி உங்கள் பயணத்தை தொடர முடியும். வாடகை வாகனத்திலோ அல்லது சொந்த வாகனத்திலோ வந்திருந்தால் வாகனத்திற்குரிய பதிவுகள் முடிந்த பின் பயணத்தை தொடரலாம். யாழ் நிலைய பணிப்பீட இலக்க நடைமுறைகள் பணிப்பீடம்: 1 ஊர்திகளில் வரும் பயணிகளுக்கு நடைமுறையைப் பற்றி விளக்கமளிப்பவர்> மொழிபெயர்ப்பாளர்> பயணிகள் படிவம் விற்பனைப் பகுதி (வழிகாட்டுபவர்). பணிப்பீடம்: 2 வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கான பதிவிடம் (அனைத்துலகத் தொடர்பகம்). பணிப்பீடம் 3 ஊர்திகளில் வரும் பயணிகள் அனுமதி பெறும் இடம். வாகனத்திற்கான அனுமதி பெறும் இடம் (போ.க.பிரிவு). பணிப்பீடம் 4 வாகனங்களில் வரும் பயணிகளையும்> வாகனங்களையும் சோதனை செய்யும் பகுதி (ஆயப் பகுதி). பணிப்பீடம் 5 தீர்வை செலுத்த வேண்டியோர் தீர்வை கணிப்பீடு செய்யும் இடம் (ஆயப்பகுதி). பணிப்பீடம் 6 ஊர்தி ஆவணங்களை கையேற்கும் இடம் (ஆயப்பகுதி). பணிப்பீடம் 7 வாடகை ஊர்திகள் நுழைவுக் கட்டணம் செலுத்தும் இடம் (த.போ.க). பணிப்பீடம் 8 ஒலி ஒளி நாடாக்கள் ஆய்வு செய்யும் இடம்.(திரைப்பட வெளியீட்டுப் பிரிவு). பணிப்பீடம் 9 முறையீடுகள் செய்யப்படும் இடம் (ஆயப் பகுதி). பணிப்பீடம் 10 சாதாரண பயணிகள் படிவம் விற்பனை செய்யும் இடமும்> இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பதிவிடமும் (போ.க.பிரிவு). பணிப்பீடம் 11 சாதாரண பயணிகளின் படிவம் பரிசீலனை செய்து இறப்பர் முத்திரை இடப்படும் இடம் (போ.க.பிரிவு). பணிப்பீடம் 12 சாதாரண பயணிகள் பொதி பரிசோதனை செய்யும் இடம். பணிப்பீடம் 13 தீர்வைக் கணிப்பீடுகள்> தமிழீழ வைப்பகப் பதிவு (சிலிப்). பணம் அறவீடு என்பன இருக்கும் இடம் (ஆயப் பகுதி). வன்னி நிலைய பணிப்பீட இலக்க நடைமுறைகள் பணிப்பீடம் 01 நடைமுறை பற்றி விளக்கமளிப்பவர்> மொழிபெயர்ப்பவர் (வழிகாட்டுபவர் ஆயப் பகுதி). பணிப்பீடம் 02 அரச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான பதிவுகள். பயண அனுமதிகள் என்பன வழங்கப்படும் இடம் (போ.க.பி). பணிப்பீடம் 03 வாடகை ஊர்திகள் நுழைவுக் கட்டணம் செலுத்தும் இடம். பணிப்பீடம் 04 ஊர்திகளில் பயணம் செய்யும் பயணிகளின் பொதிகளையும்> வாகனங்களையும் சோதனை செய்யும் இடம். (ஆயப் பகுதி) பணிப்பீடம் 05 வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கான பதிவிடம். (அனைத்துலகத் தொடர்பகம்) பணிப்பீடம் 06 ஊர்திகளில் பயணம் பயணிகளுக்கும்> வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும் இடம். (போ.க.பிரிவு) பணிப்பீடம் 07 தீர்வைக் கணிப்பீடு செய்யப்படும் இடம். (ஆயப்பகுதி) பணிப்பீடம் 08 ஊர்தி ஆவணங்கள் கேயேற்கும் இடம். (ஆயப்பகுதி) பணிப்பீடம் 09 நிலையப் பொறுப்பாளர் சந்திப்பிடம். (ஆயப்பகுதி) பணிப்பீடம் 10 சிறு வியாபாரிகள் கொண்டுவரும் பொதிகள் சோதனை செய்யும் இடம். (ஆயப்பகுதி) பணிப்பீடம் 11 சாதாரண பயணிகளுக்கான படிவங்கள் விற்கப்படும் இடமும்> படிவங்கள் பரிசீலனை செய்யும் இடமும். (போ.க.பிரிவு) பணிப்பீடம் 12 சாதாரண பயணிகள் அனுமதிபத்திரத்திற்கு (பாஸ்) இறப்பர் முத்திரை இடப்படும் இடம். (போ.க.பிரிவு) பணிப்பீடம் 13 சாதாரண பயணிகள் கொண்டுவரும் பொதிகள் ஆய்வு செய்யும் இடம்.(ஆயப்பகுதி) பணிப்பீடம் 14 திரைப்பட வெளியீட்டுப் பிரிவு ஒலி> ஒளி நாடாக்கள் ஆய்வு செய்யும் இடம். (திரைப்பட வெளியீட்டுப் பிரிவு) பணிப்பீடம் 15 முறையீடுகள் செய்யும் இடம். (ஆயப்பகுதி) பணிப்பீடம் 16 தீர்வைக் கணிப்பீடு செய்யும் இடமும்> தமிழீழ வைப்பகக் கிளையும் இருக்கும் இடம். பணிப்பீடம் 17 ஊர்தி ஆவணங்கள் மீளக் கையேற்கும் இடம். (3.4 கி.மீ) (ஆயப்பகுதி) njhlHGfSf;F: vanniborder@yahoo.com
-
pongu canada2.jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
pongu canada.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
pongu canada fer3.jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images