Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. தமிழீழ போக்குவரவுக் கழகத்தால் இயக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகள் இவற்றில் ஆகக்குறைந்தது ஒன்று முல்லை-முகமாலை ஓடியது. வன்னி 2002< 1) 2)
  2. இன்று காலை நல்ல செய்தியோடு விடிந்தது... பாலஸ்தீன அரக்க தலைவனின் உயிரை இஸ்ரேலிய மறவர்கள் எடுத்தனராம்..... ஒரே புழகாங்கிதமாகவுள்ளது!!!🤩🤩🤩😘
  3. படுகொலை விரிப்புகள் புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008 Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் பக்கம்: - மொழிபெயர்ப்பு (சாட்சிகள் மட்டும்) நன்னிச் சோழன் நூல் வெளியீட்டு ஆண்டு: 2005 2007 சத்துருக்கொண்டான் படுகொலை, 09 செப்ரெம்பர் 1990 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I மட்டக்களப்பு நகரிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் வடக்குத் திசையில் சத்துருக்கொண்டான் கிராமம் அமைந்துள்ளது. சத்துருக்கொண்டான் எல்லைக் கிராமங்களாக திராய்மடு, அரசையடி போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. சிறிய குளத்தின் கீழ் வயல் நிலங்களை உள்ளடக்கி இக்கிராமம் அமைந்துள்ளது. 1990களின் ஆரம்பத்தில் உள்நாட்டு யுத்தம் மீண்டும் தீவிரமடைந்ததனைத் தொடர்ந்து சத்துருக்கொண்டானில் பாரிய இராணுவ முகாமினை சிறீலங்கா இராணுவத்தினர் அமைத்தார்கள். இடம்பெயர்ந்து கோயில்களிலும் இதனால் மக்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் தஞ்சமடைந்தார்கள். இவ்வாறு தஞ்சமடைந்த மக்களை மீண்டும் அவர்களின் வீடுகளில் சென்று குடியமருமாறு இராணுவத்தினர் கூறியதனைத் தொடர்ந்து, மக்கள் தங்களின் வீடுகளில் குடியமர்ந்தார்கள். இராணுவத்தின் கூற்றை நம்பிய தத்தமது வீடுகளில் வசிக்க வந்த மக்களனைவரும் கைதுசெய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களில் எண்பத்தைந்து பேர் பெண்கள். இவர்களை முகாமிலிருந்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் பாலியல் வல்லுறவிற்குற்படுத்திபின், அவர்களின் மார்பகங்கள், கை, கால் போன்றவற்றினை வெட்டி மிக மோசமான முறையிற் சித்திரவதை செய்து படுகொலை செய்தார்கள். கைது செய்யப்பட்ட ஐந்து குழந்தைகள் உட்பட அறுபத்தெட்டுச் சிறுவர்களையும் மோசமான சித்திரவதைகளின் பின் சுட்டுக்கொலை செய்ததுடன், பதினேழு பேரளவிலான ஆண்களின் அங்கங்களை வெட்டிச் சித்திரவதை செய்து படுகொலை செய்தார்கள். மொத்தமாக இருநூற்றைந்து பேர் இச்சத்துருக்கொண்டான் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களில் இருபத்தொரு வயதான கந்தசாமி கிருஸ்ணகுமார் மட்டுமே காயங்களுடன் தப்பி வந்து சம்பவத்தினை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மக்கள் அமைப்பு சம்பவத்தினை வெளிப்படுத்தியது. இந்த படுகொலை தொடர்பான உசாவலில், முகாமின் பொறுப்பதிகாரி கப்டன் காமினி வர்ணகுல சூரிய, “அன்றைய நாள் எங்களால் தேடுதலோ கைதோ மேற்கொள்ளப்படவில்லை” என்றார். படுகொலைகள் நடந்த அன்று தம்முடைய ஆட்கள் யாரும் முகாமை விட்டு வெளியே வரவில்லை என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன் மக்கள் அமைப்பின் தலைவரான அருணகிரிநாதன் அவர்களை மிரட்டி இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெறவில்லை என எழுத்து மூலம் பொய் அறிக்கையினைத் தருமாறு ராணுவத்தினர் வற்புறுத்தினர். இதனையடுத்து மக்கள் அமைப்பின் தலைவர் தனது பதவியினைத் துறந்தார். திருமதி எஸ்.எஸ். அவர்கள் 35 அரத்த உறவுகளை, கிட்டத்தட்ட அவரது முழு குடும்பத்தையும், இழந்தார். படுகொலை பற்றிய அவரது வாக்குமூலம் பின்வருமாறு: "ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, தரைப்படையினரும் முஸ்லீம் குண்டர்களும் எங்கள் ஊரை சுற்றி வளைத்து, மூன்று ஊனமுற்ற இளைஞர்கள் உட்பட முப்பத்தைந்து பேரை அழைத்துச் சென்றனர். முஸ்லிம் குண்டர்கள் மக்களைத் தாக்கத் தொடங்கினர். "பன்னிச்சையாட்டியையும் பிள்ளையாரட்டியையும் தரைப்படையினர் சுற்றி வளைக்கப் போவதாக முந்தின நாள் எம்மவர்களில் சிலர் அறிந்திருந்தனர். இந்த சுற்றி வளைப்பில் இருந்து தப்பிக்க பலர் 'குடியிருப்பு'க்கு சென்றனர். அப்போது குடியிருப்பில் இருந்து 10 பேரை படைவீரர்கள் அழைத்துச் சென்றனர். "பிள்ளையாரட்டி அருகே அனைவரையும் அழைத்து வந்தனர். அங்கு சுமார் 185 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரையும் வின்சென்ட் டிப்போவில் மூடப்பட்ட பரப்புக்கு அழைத்துச் சென்றனர். பிறகு எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால் இடையில் வேட்டொலியுடன் மக்கள் கூச்சலிடுவதையும் அலறுவதையும் நாங்கள் செவிமடுத்தோம். சில நிமிடங்களுக்குப் பிறகு, தீ கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டோம். காலை வரை உடல்கள் எரிந்து கொண்டிருந்தன. அவர்கள் 184 பேரை சுட்டுக் கொன்றனர். உசாவலுக்குப் பிறகு விடுவிப்பதாகக் கூறி அழைத்துச் சென்றவர்கள் தீயிலிடப்படனர். "சில நாட்களாக டிப்போ அருகே யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு படைமுகாமுக்குச் சென்று எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே என்று உசாவினோம். அவர்கள் எங்கள் ஊரிற்கு வரவில்லை என்றும் யாரையும் அழைத்துச் சென்றதில்லை என்றும் கூறினர். தரைப்படையினரிடம் கேட்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? இனி இப்படி நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே எனது ஓம்பத்திற்காக கரடியனாற்றிற்கு செல்ல முடிவு செய்தேன். "உயிர் பிழைத்தவர் ஒருவரே - கந்தசாமி கிருஷ்ணகுமார். எல்லோரும் பெரிய கத்திகளால் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படுவதைக் கண்டார். படைவீரர் ஒருவரால் கத்தியால் வெட்டப்பட்டபோது, கீழே விழுந்து செத்தவர் போல நடித்தார். ஆனால் நெருப்பில் வீசப்படுவதற்கு முன்பே, அவர் எழுந்து ஓடிவிட்டார். அவர்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை." இச்சம்பவத்தில் கொல்லப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம்: (பெயர்-தொழில்-வயது) இ.நாகம்மா- வீட்டுப்பணி 26 இ.தீபா - 10 இ.ஜெகதீசன் -10 ஜி.குமுதினி 12 ஜி.நேசம்மா 25 ஜி.தேவராசி 27 ஜி.சந்திரியா - 19 ஜி.சீனித்தம்பி -70 ஜி.வனிதா - 12 ஈ.ஜீவநாதன் 30 யு.மரியமுத்து- வீட்டுப்பணி 33 யு.கோபிக்கண்ணன் 12 J.சீனித்தம்பி உ.காளிமுத்து சுயதொழில் 55 உமைத்தம்பி 70 நல்லையா ரமச்சந்திரன் சுயதொழில் 44 க.நல்லையா சுயதொழில் 72 க.சுரேஸ்கரன் 11 கந்தன் இளையதம்பி - 55 கமலா 09 கணபதிப்பிள்ளை தங்கமுத்து சுயதொழில் 46 பி.கந்தசாமி 29 பி.கமலநாதன் - 09 பி.கவிதா 12 பி.தமேந்தினி 04 பி.ஆச்சிமுத்து 76 பி.பொன்னம்மா - 70 பி.சந்தனம் 37 பி.சிறிலட்சுமி - 18 பி.வினோதினி 12 பி.வசந்தி 23 பிரபா 02 ரி.டிலானி - 05 ரி.நந்தினி - 16 ரி.நாதன் 12 ரி.நாகேஸ்வரி 37 ரி.நிதர்சினி -12 ரி.குகன் - 10 கே.கிருபாகரன் -03 ரி.கண்மணி 32 ரி.கண்ணன் 25 ரி.பூபாலப்பிள்ளை 65 ரி.பரம்சோதி -37 ரி.பிரதீபன் -05 ரி.தில்லையம்மா 63 ரி.மகாலட்சுமி 31 ரி.மலை - 55 கே.ஜெயக்காந்தன் 10 ரி.ஜெகன் 09 ரி.மோகனச்சந்திரன் 27 ரி.செல்வா -07 கே.சிறி -28 ரி.விஜயகுமார் (குமரன்) 08 ரி.விஜயலட்சுமி 29 ரி.வசந்தி -01 ரி.ராசேந்திரன் -04 ஐ.முருகன் 65 வை.தங்கம்மா 38 வைரமுத்து அற்புதவடிவேல் சுயதொழில் 46 த.கணபதிப்பிள்ளை -50 தம்பிப்பிள்ளை 72 தம்பிஐயா கிருபைரத்தினம் சுயதொழில் 50 ம.செல்வநாயகம் 55 மு.ராமையா 70 ஆர்.கமலராஜ் -11 ஆர்.நேசம்மா -62 ஆர்.சுதாகரன் 10 ஆர்.விஜி -08 ஆர்.வசந்தி 15 அழகையா நாகரெட்ணம் வீட்டுப்பணி 16 அழகையா மஞ்சுளா வீட்டுப்பணி 14 அழகையா சௌந்திரராஜன் மாணவர் 12 ஜெ.விஜயலட்சுமி 10 ஜெரமணி - 02 கே.மூத்ததம்பி - 79 கே.இளையதம்பி 55 கே.ஈழன் 15 கே.நாகரட்ணம் 40 கே.நல்லையா -72 கே.நல்லம்மா 66 கே.கரிகரன் 08 கே.கதிர்காமத்தம்பி 75 கே.கதிர்காமத்தம்பி - 68 கே.குமுதா -23 கே.கமலன் - 06 கே.கீதா 12 கே.கிருஸ்ணபிள்ளை - 14 கே.கண்ணன் 10 கே.பாக்கியம் 46 கே.தாரணி 04 கே.தம்பையா 65 கே.தங்கம்மா வீட்டுப்பணி 75 கே.தங்கவேல் 26 கே.அரசம்மா -60 கே.நேசம்மா 48 கே.சதீஸ் 04 கே.சியாமளா 13 கே.சின்னமுத்து 66 கே.சிவதர்சன் 05 கே.சவுந்தரம் 38 கே.விமலா 02 கே.வசிகலா - 13 கே.ராசாத்தி - 12 கே.ரமேஸ்கரன் - 07 பெரியதம்பி சுயதொழில் 75 தேவி 32 செபஸ்லின் செல்வநாயகம் கூலித்தொழில் 45 வேணுராஜ் - 25 லெட்சுமி சுயதொழில் 48 ஞா.சௌந்தரராயன் 26 சாந்திமதி தனியார்தொழில் 20 சாமித்தம்பி அழகையா கூலித்தொழில் 34 சின்னத்தம்பி வேலுப்பிள்ளை சுயதொழில் 68 சீனி கோபால் 57 சித்திராதேவி 29 சிவதர்சினி 04 வி.நல்லையா 27 வி.பூமணி 45 வி.யோதிவடிவேல் மாணவர் 06 வி.சர்மிளா மாணவர் 08 வி.சாந்திமதி -20 வி.லட்சுமி 48 இரட்ணராஜா ருக்தி 06 ஏ.ஜீவா 15 எ.உமைத்தம்பி 70 ஏ.நவரட்ணம் 45 ஏ.மஞ்சுளா - 18 ஏ.ஆத்தப்பிள்ளை 72 ஏ.அழகையா 10 ஏ.அருள் 09 ஏ.பொன்னுத்துரை 62 ஏ.சுதா 09 ஏ.சீத்தா 18 எஸ்.இந்திராணி 10 எஸ்.ஜீவமலர் -25 எஸ்.நாகதேசி 12 எஸ்.நிர்மலா - 13 எஸ்.நல்லையா 45 எஸ்.கந்தசாமி 29 எஸ்.காசிபதியர் - 60 எஸ்.கஜேந்தினி -02 எஸ்.கவிதா 09 எஸ்.குணரட்ணம் -33 எஸ்.பாலிப்போடி 62 எஸ்.பிரியா - 03 மாதம் எஸ்.புண்ணியமூர்த்தி - 13 எஸ்.தங்கம்மா -57 எஸ்.தங்கேஸ்வரி - 24 எஸ்.தவகுணேஸ்வரன் 25 எஸ்.மகேஸ்வரி 28 எஸ்.மலர் 09 எஸ்.அழகையா 50 எஸ்.யோகராசா 14 எஸ்.நேசம் 52 எஸ்.பொன்னம்பலம் 55 எஸ்.பொன்னம்மா - 24 எஸ்.தெய்வானை 45 எஸ்.செல்வராசா 31 எஸ்.ஞானேஸ்வரி - 38 எஸ்.சபாபதிப்பிள்ளை -70 எஸ்.சுரேஸ் - 02 எஸ்.சறோசாதேவி 28 எஸ்.சின்னப்பிள்ளை -35 எஸ்.சின்னத்தம்பி 27 எஸ்.சீவரத்தினம் -12 எஸ்.வடிவேல் 65 எஸ்.விஜயன் 01 எஸ்.வினோதரன் 05 எஸ்.வள்ளிப்பிள்ளை 75 எஸ்.ராசலிங்கம் 58 எஸ்.ரவீந்திரன் 21 எய்.நாகரெட்ணம் சுயதொழில் 45 எய்.சுதா மாணவர் 09 என்.இராசம்மா -70 என்.குமுதினி - 18 என்.பாக்கியம் 66 என்.பாலாத்தை 70 என்.பிரேமா -18 என்.பிரதீபன் - 05 என்.தர்சினி 06 என்.தீபன் 09 என்.ஜெகன் 12 என்.சொர்ணம்மா - 44 என்.வேணுதாஸ் 03 மாதம் என்.வேணுராஜ் 04 மாதம் என்.ஞானரத்தினம் 32 என்.சித்திராதேவி 22 என்.சிவதர்சன் 25 எம்.பாக்கியம் வீட்டுப்பணி 53 எம்.பரமேஸ்வரி 32 எம்.சைலயா 07 எம்.வைரமுத்து 55 எம்.துளசி 04 எம்.பெரியதம்பி 75 எம்.தேவகி 25 எம்.சுபோசினி 12 எம்.சிவஞானம் 35 எம்.விஜயன் - 19 எம்.ராசா 24 *****
  4. கரும்புலிகள் வாழும் எரிமலையின் தேசம் இசையமைத்தவர்: இசைத்தென்றல் பாடல் வரிகள் கு. வீரா பாடகர்: திருமலைச் சந்திரன் மற்றும் இளங்கீரன் இறுவெட்டு: அறியில்லை/ தனிப்பாடல் கேட்க: https://eelam.tv/watch/கர-ம-ப-ல-கள-வ-ழ-ம-எர-மல-ய-ன-த-சம-karumpulikal-vaazhum-erimalaiyin-theesam-original-version_53JtPtQqjAwM5Xr.html கரும்புலிகள் வாழும் எரிமலையின் தேசம் - அந்தக் காலனையே கலக்கிடும் கந்தக வாசம்! (இது கரும்புலிகள்) தமிழீழ மண்ணில் உயிராய் வைத்தோம் பாசம் - அந்தப் பாச உணர்வில் தேசப்புயலாய் நாங்கள் உருவானோம்! (இது கரும்புலிகள்) தலைவனின் விழிகளில் தீப்பிழம்பினால், தடைகளை உடைத்துமே தூள் கிளப்புவோம்! (தலைவனின்) (கரும்புலிகள்) வெடிமருந்தில் உடையணிந்து விரைவோம் - எந்த வேளையிலும் காற்றுக்குள் நுழைவோம்! (வெடிமருந்தில்) கொடிகொண்டு ஆளும் தமிழீழ மண்ணில் - நாங்கள் கொலுவிருந்து பார்ப்போம் தலைவனது கண்ணில்! (கொடிகொண்டு) (தலைவனின்) (தலைவனின்) தீயாக எரியுமே பகைவீடு - அந்தக் கனலோடு தெரியும் எங்கள் வரலாறு! (தீயாக) இரும்பிலும் இறுகிய மனமென்பார் - எங்கள் இதயத்தின் மென்மையை எவர் அறிவார்?! (இரும்பிலும்) (தலைவனின்) நெய் விளக்கை ஏற்றிவைத்து நெஞ்சம் அழும் - அந்த நினைவினிலே விடுதலைத்தீ விஞ்சி எழும்! (நெய் விளக்கை) மெய்யுணர்வு விழித்துவிட களம் வந்தோம் - நாங்கள் மீண்டும் தமிழ் ஆளவென்று பலம்கொண்டோம்! (தலைவனின்) (தலைவனின்) (கரும்புலிகள்) (இது கரும்புலிகள்) (தமிழீழ) (இது கரும்புலிகள்) (தலைவனின்) (தலைவனின்)
  5. https://vayavan.com/?p=12702 “போர்க்காலம் ஆயினும் அதுவே பொற்காலம்” என இன்று போற்றப்படும் காலத்தில் வன்னியிலிருந்து மேலதிக மருத்துவ சிகிச்சைக்காகவும் மற்றும் அத்தியவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் எம் மக்கள் வவுனியா செல்வது வழமை. அவ்வாறு பொது மக்கள் தங்களது அவசியமானதும் மற்றும் அத்தியவசியமானதுமான அலுவல்களை முடித்துக் கொண்டு மீளவும் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களுக்குத் திரும்புவார்கள். அக்காலகட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் கறுக்காய்குளம் ஊடாக அல்லது மடு ஊடாக என மாறி மாறி அந்த இடர்மிகு பயணங்கள் இடம்பெற்றது. ஒரு முறை புதிய பாதை திறந்து உங்களை அனுப்பப் போவதாக ஶ்ரீலங்காப் படையினர் பயணிகளை மூன்றுமுறிப்பு பகுதிக்கு அழைத்துவந்து அவர்களை முன்னே விட்டு விட்டு தாங்கள் சத்தமின்றி பின்னே நடந்து வந்தார்கள். அப்போதுதான் பயணிகளுக்கு தங்களை இராணுவம் புதிய பாதைதிறப்பு என்று கூறி இங்கே கூட்டிவந்த நோக்கம் புரிந்தது. ஆம், சண்டை இன்றித் தந்திரமாக இடங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையின் ஓர் உத்திதான் இது ஆகும். இந்த “ஜெயசிக்குறு” நடவடிக்கையும் இதன் தொடர் அல்லது கிளை நடவடிக்கையுமான “ரணகோச” நடவடிக்கையையும் தமிழர்படை ஓயாத அலைகள் – 03 நடவடிக்கை மூலம் முறியடித்துவிட்டே ஆனையிறவைத் துவசம் செய்து துடைத்தழிக்கத் ஓரிடத்தில் திரண்டிருந்தனர். வீரியம் மிக்க அந்த நாள் குடாரப்புத் தரையிறக்கத்துக்கு முன்னைய நாட்கள் ஆகும். வழங்கல் , மருத்துவ , மோட்டார் அணிகள் உட்பட அனைத்து அணிகளையும் பொதுவாகச் சந்தித்துவிட்டு அணித் தலைவர்களை தலைவர் சந்தித்து அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார். ஈற்றில் கேள்வி கேட்கும் நேரத்தையும் தலைவர் ஒதுக்கியிருந்தார். தலைவர் முன்னே எழுந்து நின்று கேள்வி கேட்கத் தயக்கங்கள் இருந்தாலும் ஒவ்வொருவராய் அணித் தலைவர்கள் எழுந்து கேள்விகேட்டுத் தமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டிருந்தனர். வன்னிக்கள முனையில் நீண்டகாலம் அணிகளை வழிப்படுத்திய மகளிர் அணியின் ஒரு தலைவிக்கு எமது மக்களை சிங்கள இராணுவம் கேடயமாகப் பாவித்த முன்னைய “ரணகோச” நடவடிக்கையின் கசப்பான அனுபவங்கள் நினைவில் திரும்பிக்கொண்டிருந்தது. “மக்கள் வாழும் பகுதியில் திடீரென ஊடுருவிச் சண்டை செய்யப்போகின்றோம். ஆம், போரியல் பட்டறிவுடனும் எதிரியின் நயவஞ்சகத்தை நன்கு புரிந்த மகளிர் அணியின் தலைவி ஒருத்திதான் எங்கள் தலைவரிடம் இந்தக் கேள்வியைத் தொடுத்தாள். உங்களது துமுக்கி (துப்பாக்கி)களை தலைக்கு மேலே நன்றாக உயர்த்திச் சுடுங்கள். அவை மக்களை பாதிக்காது. அதேநேரம் நீண்டகாலம் யுத்தத்தின் பட்டறிவுகளுடன் வாழ்ந்து வரும் எம்மக்கள் நிலத்தில் வீழ்ந்து படுத்துக்கொள்வார்கள். அதன் பிற்பாடு உங்களைச் சமநிலைப் படுத்த உங்களுக்கும் மக்களுக்கும் ஓர் அவகாசம் ஏற்படும். எந்தக்கட்டத்திலும் மக்களுக்கு ஓர் சிறு கீறல் கூட ஏற்படக்கூடாது என்று கண்டிப்புடன் கூறினார். அதே நேரம் தலைவர் இன்னொரு கதையையும் சொன்னார். அதையும் தருகிறேன். “ஒரு முறை ஓர் போராளி மாட்டைச் சுட்டுவிட்டான் என்று என்னிடம் முறைப்பாடு செய்தார்கள். பொதுமக்களின் பிரச்சனைகளை விசாரித்துக் கொண்டிருந்த போது மாட்டை ஏன் தம்பி சுட்டீர்கள் என்று கேட்டேன். அந்தப் புதிய போராளியோ, “நான் மாட்டுக்குச் சுடவில்லை மாட்டின் மேல் நின்றிருந்த காகத்துக்குத் தான் சுட்டேன்,மாடு செத்துப் போச்சு”… எனச் சொன்னதாக கவலையுடனும் கோபக் கனலுடனும் சொன்னார். தலைவர் தான் தனது உயிரிலும் மேலாக நேசித்த மக்கள் மீதானதும் மக்களின் வாழ்வாதரங்கள் மீதான தனது குன்றாத வாஞ்சையினையும் எடுத்துக் காட்டி எமைச் சென்று வாருங்கள் வென்று வாருங்கள் என வழியனுப்பி வைத்தார். தொடரும்! நன்றி -வயவையூர் அறத்தலைவன்-
  6. புலிகளின் தோற்றக் காலத்திற்கு முன்பான இயக்கப்பாடல் புலிகளின் தோற்றக் காலத்திற்கு முன்பு பாடப்பட்டு பின்னாளில் புலிகளால் இயக்கப்பாடலாக பாவிக்கப்பட்டு வந்த பாடல்: "மறவர் படை தான் தமிழ்ப்படை" இப்பாடலானது 1960 களில் "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் அவர்களால் எழுதப்பட்டு "பாசறைப்பாணர்" தேனிசை செல்லப்பா அவர்களால் தமிழ்நாட்டில் பாடப்பட்ட பாடலாகும். அக்காலத்திலேயே தமிழ்நாட்டில் பரவலறியாக இருந்தது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன் பாடகரான தேனிசை செல்லப்பாவின் குரல் தான். பின்னர், 1970களில் இப்பாடல் தமிழீழத்திலும் மெள்ள நுழைந்து பரவலறியானது. தொடர்ந்து தமிழீழத்தின் விடுதலைப் பாடல்களில் ஒன்றாக திகழ்ந்து இன்றுவரை அவ்வாறே உள்ளது. 1972ம் ஆண்டு சிறிலங்காவின் அரசியல் யாப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து காசி ஆனந்தன் அவர்கள் தனது பதவியைத் துறந்தார். அதனைத் தொடர்ந்து அரசியல் மேடைகளிலும் மேடைப் பேச்சுகளிற்கான முன்னோடி ஒலிபெருக்கி அறிவித்தல்களிலும் இப்பாடல் இடம்பிடித்துக்கொண்டது. இப்பாடல் பின்னாளில் இடம்பெற்ற இசை இறுவட்டு எதுவென்பது எனக்குத் தெரியவில்லை. ---> ஆதாரம்: ஈழநாதம் 22.04.1990 மற்றொரு வரலாற்றுத் தகவல் என்னவெனில், 1961ம் ஆண்டில் தான் தமிழீழ விடுதலைக்கான முதல் இயக்கம் தோற்றம்பெற்றது. அதன் பெயரும் "புலிப்படை" என்பதாகும். ---> ஆதாரம்: புலிப்படை (1961) முதல் விடுதலைப்புலிகள் வரை புலிகளின் (1976) வரலாறு! | வர்ணகுலத்தான் பாடல்வரி: "மறவர் படைதான் தமிழ்ப்படை - குல மானமொன்று தான் அடிப்படை வெறிகொள் தமிழர் புலிப்படை - அவர் வெல்வார் என்பது வெளிப்படை "புதிதோ அன்று போர்க்களம் - வரும் புல்லர் போவார் சாக்களம் பதறிப்போகும் சிங்களம் - கவி பாடி முடிப்பார் மங்களம் "சிரிக்கும் உள்ளம் போர் கண்டு - தமிழ் சேய்க்கும் சண்டை கற்கண்டு உரத்து தமிழை போய்முண்டு - என துள்ளும் நாக்கும் இருதுண்டு "தமிழன் பண்பில் உருப்படி - அவன் தலையும் சாய்ப்பான் அறப்படி அமையம் தன்னை முதற்படி - பிறர் அடக்க வந்தால் செருப்படி "வீரம் வீரம் என்றாடு - நீ வேங்கை மாற்றான் வெள்ளாடு சீறும் பாம்பை வென்றாடு - கண் சிவந்து நின்று போராடு"
  7. இயக்கமல்லாதோரால் இசையுடன் பாடலாகப் பாடப்பட்ட முதல் பாடல் தமிழீழ விடுதலைப் போரிற்கு இயக்கமல்லாத குடிமையாளர்களால் (civilians) இசையுடன் பாடலாகப் பாடப்பட்ட முதற் பாடல்: "ஓ! மரணித்த வீரனே" இப்பாடலானது வியட்னாமியக் கவிதை ஒன்றின் தமிழ் வடிவமாகும். இதற்கு அமரர் யாழ். ரமணன் அவர்கள் தலைமையிலான குழுவினர் இசையமைக்க, அக்குழுவைச் சேர்ந்த எஸ். திவாகர் அவர்கள் பாடினார். இதனை மொழிபெயர்த்ததும் யாழ். ரமணன் அவர்களே ஆவார். இது கொண்டு முதன் முதலில் வெளியான இறுவட்டு உதயம் ஆகும். இவ்விறுவட்டிற்கு சேர்ப்பதற்காக இதன் மூல இசையான வேகமான இசையிலிருந்து அதன் வேகம் குறைக்கப்பட்டு மாவீரருகென்று மெள்ளமான இசை சேர்க்கப்பட்டு பாடப்பட்டு அதன் பின்னரே இறுவட்டில் சேர்க்கப்பட்டது. இதை தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப செய்தனர், மூலப் பாடல் பாடியோர். அத்துடன் "மாவீரர் புகழ் பாடுவோம்" என்ற மாவீரர் பாடல் தொகுப்பு இறுவட்டில் இப்பாடல் வெளியாகி உள்ளதென்பது நானறிந்த தகவலாகும். பாடல் வரி: "ஓ மரணித்த வீரனே! உன் சீருடைகளை எனக்குத் தா! உன் பாதணிகளை எனக்குத் தா! உன் ஆயுதங்களை எனக்குத் தா! "உன் இறுதிப் பார்வையை, பகையை வெல்லும் உன் துணிவை, எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை, "தப்பியோடும் உன்விருப்பை, தனித்து நிற்கும் தீர்மானத்தை, உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்.. "உன் துன்பம் என்னவென்று நான் அறிந்து கொள்வதற்கு... "உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா! எஞ்சிய வீடுகளின் பிழைத்தவர்கள் மத்தியிலே! "உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றி சொல்வதற்கு இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு "வார்த்தைகள் போதவில்லை, வரலாறு பாடுமுன்னே!" மூல இசை வடிவமும் நிகழ்படமும்: இந் நிகழ்படமானது 1984ம் ஆண்டு தமிழீழத்தில் படம்பிடிக்கப்பட்டு பதிவாக்கப்பட்டது. இதுவே தமிழீழ விடுதலைப் போரிற்கு இரண்டாவதாக இசையுடன் பாடப்பட்ட பாடலாக இருக்குமென்பது அறுதியிடப்படா மெய்யுண்மையான தகவலாகும். ஆதாரம்: இரு கண்களையும் இழந்த ஈழத்தின் எழுச்சி பாடகர் திவாகர் ஐயாவுடன் ஓர் சிறப்பு நேர்காணல் *****
  8. புலிகளின் இசையுடன் கூடிய முதல் பாடல் புலிகளால் இசையும் சேர்த்து முதன் முதலில் முழுமையான பாடலாகப் பாடப்பட்ட பாடல்: நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன், மாத்தையா (பின்னாளில் இந்தியாவுடன் சேர்ந்து தமிழருக்கு வஞ்சகம் செய்தான்), மற்றும் இளங்குமரன் (பேபி சுப்பிரமணியம்) ஆகியோரை "பாசறைப்பாணர்" தேனிசை செல்லப்பா அவர்கள் சென்னையில் சந்தித்து நெருங்கிய நண்பரானார். அதன் பின்னர் 1981ம் ஆண்டு சென்னையில் தங்கியிருந்த தவிபு மக்கள் முன்னணியின் அப்போதைய தலைவரான அஜித் மாத்தையாவின் அயராத முயற்சியில் திரு செல்லப்பா அவர்களது தமிழீழ விடுதலை பற்றிய பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிநாடாவில் வெளியிடப்படலாயிற்று. இவ்வாறு இவரால் அப்போது வெளியிடப்பட்டவற்றில், இப்போது அறியப்படும் பாடல்களில், எஞ்சியிருப்பது 1983ம் ஆண்டு வெளியிடப்பட்ட "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" என்ற பாடல்தான் தமிழீழத்தின் இசையுடன் கூடிப் பாடப்பட்ட முதல் பாடலாக அறியப்படுகிறது. இது தலைவருக்கு மிகவும் பிடித்த பாடலாகும். இதனை எழுதியவர் "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் ஆவார். இதற்கு முன்னர் - 1981,1982 ஆண்டுகளில் - ஏதேனும் வெளியிடப்பட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆதாரம்: ஈழநாதம் 22.04.1990 பாடல் வரி: "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும் "பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும் பகைவன் ஓடும் சேதி கிடைக்கும் போரில் வெற்றி முரசு முழங்கும் புலிகள் கழுத்தில் மாலை துலங்கும் "கூண்டுபறவை சிறகு விரி்க்கும் குனிந்த முகங்கள் நிமிர்ந்து சிரிக்கும் மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும் "வானம் நமது கொடியை அழைக்கும் மாற்றார் முகத்தில் நாணம் முளைக்கும் மானம் நமக்கோர் மகுடம் வழங்கும் மண்ணில் நமது பெயரும் விளங்கும்" *****
  9. புலிகளின் முதல் பாடல் புலிகளால் முதன் முதலில் கவிதை வடிவில் எழுதி எடுக்கப்பட்டு வாய்வழி மெட்டுடன் பாடலாகப் பாடப்பட்டது: "வாருங்கள் புலிகளே தமிழீழம் காப்போம்" இக்கவிதையானது புலிகளின் ஆரம்பகாலப் பயிற்சி முகாமான அம்பகாமம் பயிற்சி முகாமில் பாடப்பட்டது ஆகும். இது "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் அவர்களிடமிருந்து எழுதிப் பெறப்பட்டதாகும். இதனை பெரும்பாலும் லெப். செல்லக்கிளி அம்மானே பாடுவாராம். பின்னாளில் இதற்கு இசையமைத்துப் பாடியவர் யாரென்பது தெரியவில்லை. ஆதாரம்: 'விடுதலைத் தீப்பொறி ' நிகழ்படம் பாடல் வரி: "வாருங்கள் புலிகளே, தமிழீழம் காப்போம்! வாழ்வா? சாவா? ஒரு கை பார்ப்போம்! "முந்தை எங்கள் தந்தை வாழ்ந்த முற்றம் அல்லவா? முடிசுமந்து நாங்கள் ஆண்ட கொற்றமல்லவா? இந்த மண்ணின் மக்கள் எங்கள் சுற்றமல்லவா? - தமிழ் ஈழமண்ணை மறந்து வாழ்தல் குற்றமல்லவா? "ஞாலம் போற்ற வாழ்ந்தோம், இந்தக் கோலம் நல்லதா? நாலுதிக்கும் நம்மை அடிமை என்று சொல்வதா? ஈழமண்ணில் எங்கள் கண்ணீர் நாளும் வீழ்வதா? - அட இன்னும் இன்னும் அந்நியர்கள் எம்மை ஆள்வதா? "தமிழர் பிள்ளை உடல் தளர்ந்த கூனல் பிள்ளையா? தடிமரத்தின் பிள்ளையா? உணர்ச்சி இல்லையா? தமிழா! என்னடா, உனக்குப் போர் ஓர் தொல்லையா? - உன் தாய் முலைப்பால் வீரம் நெஞ்சில் பாயவில்லையா? வேல் பிடித்து வாழ்ந்த கூட்டம் கால் பிடிக்குமா? வீழ்ந்த வாழ்வு மீள இன்னும் நாள் பிடிக்குமா? தோள் நிமிர்த்தித் தமிழர் தானை போர் தொடுக்குமா? - எங்கள் சோழர், சேரர், பாண்டியர் போல் பேர் எடுக்குமா?" கீழே உள்ளதுவே உண்மையாக புலிகளால் வெளியிடப்பட்ட மூல இசை கொண்ட பாடல் ஆகும். 2009இற்குப் பின்னர் இதே போன்று இன்னொரு பாடலை புலி வணிகர்கள் வெளியிட்டுள்ளனர். அது மூலப் பாடல் அன்று. *****
  10. சமர்க்கள விரிப்புகள் 4 நாட்கள் இனி, அந்த தரையிறக்கம் நடந்த நாளில் இருந்து தரையிறங்கிய அணிகளுக்கு தரைவழி பாதை திறக்கும் வரை அங்கு என்ன நடந்தது என்பதை 'படைய மருத்துவர் தணிகை' தெரிவித்ததை வாசிப்போம். இவையாவும் 2021 ஆம் ஆண்டு அம்மருத்துவரால் எழுதப்பட்டவையாகும். ஆகையால் அனைத்தும் போருக்குப் பின்னான சூழ்நிலையில் எழுதப்பட்டவை என்பதை மனதில் நிறுத்துக. குடாரப்புத் தரையிறக்கம்: இரண்டாம் நாள் காலை மூலம்: vayavan.com, மார்ச் 28, 2021 இரத்தப் பெருக்கினை கட்டுப்படுத்துவத்தும் வேலைகளை மருத்துவப் போராளிகளைப் போலவே பெரும்பாலும் எமது எல்லா போராளிகளும் கச்சிதமாகச் செய்வார்கள். களத்தில் நிற்கும் எல்லா போராளிகளிடமும் எப்போதுமே இரண்டு அல்லது மூன்று குருதிதடுப்பு பஞ்சணைகள் (Field compressor) வைத்திருப்பார்கள். ஒரு காயத்திற்கு எப்படி கட்டுப்போட வேண்டும் எந்தெந்த காயங்களை எப்படியெல்லாம் நகர்த்த வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்கும் தெரியும். எங்களிடம் காயமடைந்தவர்கள் கொண்டு வரப்ப்பட்ட போது அந்தக் கட்டுக்களை அவிழ்த்து மணலும் சேறும் சகதியுமாய் இருந்த காயங்களை சேலைன் மூலம் கழுவித் துப்பரவு செய்தோம். இப்போது காயங்களில் கிருமித் தொற்றுக்கள் (Infection) ஏற்படாது தடுப்பதற்காக நோயுயிர் முறிகள் (Antibiotics) போடப்பட வேண்டும். நோயுயிர்முறிகளில் பொதுவாக பென்சிலின் (Penicillin) வகை மருந்துகள் சிறந்தவை. இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்து இன்று வரை பக்ரீரியாக்களுடன் அல்லது நுண்ணுயிர்களுடன் போரிட்டு மாந்தரின் உயிர்காக்கும் அந்த மருந்துகளை ஊசி மூலம் நாளத்தினூடக (Intravenous) ஏற்றவேண்டும். இரவு முழுவதும் அதிகரித்த தாக்குதல் காரணமாகவும் மின்சூழ் வெளிச்சம் கூட பாவிக்க முடியாத காரணத்தால் பென்சிலின் போடுவதற்கான சோதனை ஊசி (Penicillin sensitive test) போடுவது சாத்தியமற்று இருந்ததது. எதிரியின் சண்டை உலங்கு வானூர்தி வட்டமிட்டு வட்டமிட்டு தாக்கிய வண்ணம் இருக்க அநேகமான பெரிய காயக்காரருக்கு அம்பிசிலின் ஊசி மருந்துகளையே (Ampicillin Injection) ஏறினோம். இன்று காலையும் காயமடைந்தவர்களை வன்னிப் பெருநிலப்பரப்புக்கு அனுப்ப முடியாதிருப்பதை புரிந்திருந்தாலும் நாங்கள் மீண்டும் மீண்டும் கட்டளையாளர்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தோம். யாழ் மாவட்ட முன்னாள் கட்டளையாளர் திருமிகு செல்வராசா அவர்கள் தளமிட்டிருந்ததால் அவரின் மூலம் கடலில் எங்கள் படகுகள் வரக்கூடியதாக உள்ளதா என்பதை அறிந்து கொண்டோம். பெனிசிலினிற்கான சோதனை ஊசிகளை பெண் மருத்துவர் வித்தகி ஏற்றி பரிசோதித்துக் கொண்டிருந்தார். செறிவான குண்டுத் தாக்குதல்கள் நடைபெறும் ஒரு கொலைவலயத்தில் காயமடைந்தவர்களை ஒரே இடத்தில் வைத்திருந்தால் ஒரு எறிகணையிலேயே நிறைய பேரை இழக்க வேண்டிவரும் என்ற போரியல் பட்டறிவு எம்மிடம் இருந்தது. ஜெயசிக்குறுய் எதிர்ச்சமரின் போது தமிழீழத்தின் பரவலறி பாடகர் சிட்டு விழுப்புண் அடைந்து பண்டுவம் அளிக்கப்பட்ட பின்னர் தற்காலிக மருத்துவநிலையின் மீது வீழ்ந்த குண்டினால் மீளவும் பாரிய காயமடைந்தே வீரச்சாவு அடைந்தார். அந்தச் சம்பவம் போல இங்கேயும் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதால் அதிக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டோம். வெவ்வேறு மரங்களின் கீழும் வெவ்வேறு இடங்களிலும் உள்ள பதுங்ககழிகளில் பாதுகாத்தோம். வெம்மை கூடிய அந்த மணல் பிரதேசத்தில் பென்னம்பெரிய மரம் ஒன்று கூட இருக்கவில்லை. பரட்டையான மரங்களும் நாவல் மரங்களும் அதிகம் இருந்தன. சிறுபராயத்தில் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்குப் போனால் கடற்கரைக்கும் செல்வோம். எழில் மிகு மணல் திட்டிகள் தாண்டிச் செல்வது கனி பறிக்கஇ ஆம் நாவல் கனி பறித்துச் சுவைத்து உண்பதற்கு! இன்றும் அதே கடற்கரையின் சற்றுத் தெற்கே வெற்றிக்கனி பறிப்பதற்காய் தரையிறங்கி நிற்கின்றோம் என்பதை மனம் எண்ணிக் கொண்டது! அந்த அருங்கனிக்காக நண்பர்களின் இன்னுயிர்களையும் அங்கங்களையும் கொடுக்கவேண்டி இருக்கின்றதே என நினைத்த போது நெஞ்சு கனத்தது. குண்டுகளால் நிலம் அதிர்ந்து கொண்டிருந்தாலும்இ நம்பிக்கைகளுடன் காலை விடிந்தது. தங்கை அருள்நங்கை ஈரத்துணியால் காயமடைந்த பொதுமக்கள் போராளிகளின் முகங்களை தாயன்புடன் துடைத்துக் கொண்டிருந்தாள். “உண்ண எதாவது கொடுக்கலாமா?” என்று அருள்நங்கை கேட்டாள். ஆம் எனச் சொல்லிவிட்டு சாப்பிடு வதற்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டார் பொறுப்பு வைத்தியர். அப்போதுதான் எங்களின் உலர் உணவுப் பொதிகளும் தீர்ந்துவிட்டமை அவளிற்கு நினைவில் வந்தது. மூன்று நாட்களுக்குத் தேவையான உலர் உணவு தந்து அனுப்பப்படிருந்தாலும் சண்டையில் நின்ற போராளிகளும் தங்களது ஆயுதங்களையே அதிகம் கவனம் கொண்டிருந்ததால்இ மீதமிருந்த கொஞ்ச உணவுகளையும் தவறவிட்டுவிட்டார்கள். நாங்களும் உயிர் காக்கும் உன்னத பணியினை மிகச்சரியாக செய்ய வேண்டும் எனும் உந்துதலே மேலிட்டு நின்றதால் மருந்துப் பொருட்களையும் மருத்துவ தளபாடங்களையும் காவி வந்தோமே ஒழிய உலர் உணவுகளை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. இப்போது நோயாளருக்கு உணவு இல்லையே என்ற போது அனைத்து களமருத்துவ போராளிகளின் முகமும் வாடிவிட்டது. குடாரப்புத் தரையிறக்கம்: இரண்டாம் நாள் மாலை மூலம்: vayavan.com, ஏப்ரல் 3, 2021 குடாரப்பு தரையிறக்கத்தில் பல நூறு போராளிகளை சில மணி நேரத்தில் தரையிறக்கிய பணியில் பங்கு கொண்டு சிறப்பான பணிதனை ஆற்றியவர்களை கடந்து ஆனையிறவு வெற்றியை பற்றி கதைக்க முடியாது. அந்த வகையில் அலைகடலை தாண்டி தரைப்புலிகளை பக்குவமாய் தரையிறக்கிவிட்ட கடற்புலி லெப்.கேணல் எழில்கண்ணன் முதன்மை பங்கினை வகித்தார். பல்வேறு படையணிகளை வெற்றிகரமாக தரையிறக்கம் செய்துவிட்டு தொடர்ச்சியாக வந்த நடைகளில் ஆயுத உணவு வழங்கல் செய்திட தன்னால் இயன்றளவு முயற்சிகளை எடுத்தவர். வெற்றிகரமாக தரையிறக்கம் நடைபெற்ற இரண்டாவது நாள் எதிரி எமது நடவடிக்கையினால் அதியுச்ச விழிப்பு நிலையினை அடைந்துவிட்டதால் சிறீலங்கா கடற்படையினர் முழுமையான தமது பலத்தையும் மாங்கனித்தீவின் வடகிழக்கு திசையில் திருப்பிவிட்டிருந்தார்கள். நூறு கடல்மைல்களை துல்லியமாக அவதானிக்க கூடிய அதிநவீன இசுரேல் தயாரிப்பான “மிதக்கும் கோட்டை”கள் போன்ற கப்பல்கள் உட்பட பல சுப்ப டோரா படகுகள் வடமராட்சி கிழக்கின் கடல் முழுவதையும் ஆக்கிரமித்தன. காங்கேயன்துறை, திருகோணமலை கடற்படை தளங்களில் இருந்து விரைந்து வந்த எதிரியின் சுப்பர் டோறாக்கள் ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் பயங்கரத்தையும் விஞ்சியே நின்றன. அத்தனை கடல் படைவகுப்புகளையும் உடைத்துக் கொண்டு லெப்.கேணல் எழில்கண்ணன் தலைமையிலான கலத்தொகுதி சுண்டிக்குளம் கடலோரம் இருந்து தன் பயணத்தை தொடர்ந்தது. தாழையடியை அண்டிய கடலோரம் வரை வெற்றிகரமாக பெருமளவு உடன் சமைத்த உணவு, உலர் உணவு மற்றும் தகரி எதிர்ப்பு ஆயுதமான எஸ்.பி.ஜி-9(ஸ்PG – 9) உட்பட சில கனவகை ஆயுதம் உட்பட நடைபேசி(வோக்கி)களுக்கான மின்கலம் உட்பட அந்த களத்துக்கான இன்றியமையா பொருள்களுடன் அந்த கலத்தொகுதி வந்து கொண்டிருந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளின் உயர் கடற்படை பயிற்சி மற்றும் அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கடலில் நின்று கொண்டிருந்த எதிரியின் தாக்குதல் படைவகுப்பினுள் ஈற்றில் அந்தப் படகு அகப்பட்டுக்கொண்டது. 'கடற்சூரியன்' என புகழப்படும் இந்த வீரன் அந்த நிலையிலும் தன்னையும் கலத்தொகுதியையும் சம நிலைப்படுத்தி தனது படகினை விடுதலைப் புலிகளினால் தரையிறக்கத்தின் மூலம் புதிதாக தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்த செம்பியன்பற்று கடற்கரையினை நோக்கி செலுத்திவிட்டிருந்தார். படகு தரைதட்டிய சில விநாடிகளில் மயக்க நிலையினை அடைந்தார். தலையில் ஏற்பட்ட பலமான காயமே இந்த வீரனை கோமா நிலைக்கு இட்டுச் சென்றது. கலத்தொகுதிக் கட்டளையாளரான லெப்.கேணல் எழில்கண்ணன் விழுப்புண் அடைந்த நிலையில் செம்பியன்பற்றில் அன்றிருந்த களமுனை வைத்தியசாலையில் எங்களால் சிகிச்சை அளிக்கப்பட்டார். அங்கேயே பராமரிக்கப்பட்ட எழிற்கண்ணன் தரைப்பாதை பிடிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து கட்டைக்காட்டில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவர் தூயவன் அவர்களின் கடமையிலிருந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். உடல் தேறிய பின்னரும் பல களங்களை கண்ட இந்த வீரன் ஒரு ஊர்தி நேர்ச்சியில் சிக்கி 2006 ஆண்டு புரட்டாதி மாதம் சாவடைந்தார். ******
  11. எங்கள் இனத்திற்கு தாங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி... சென்று வாருங்கள்.
  12. படுகொலை விரிப்புகள் புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008 பக்கம்: - மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன் நூல் வெளியீட்டு ஆண்டு: 2005 ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, 12 ஆகஸ்ட் 1990 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I 11.08.1990 அன்று இராணுவத்தினர் செங்கலடி, கிரான் போன்ற கிராமங்களைச் சுற்றிவளைத்து மக்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் காயமடைந்தவர்களில் பத்துப் பேரிற்கும் மேற்பட்டவர்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்கள். 12.08.1990 அன்று இரவு 11.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடையில் இராணுவத்தினரும் முசுலிம் குழுக்களும் இணைந்து வைத்தியசாலையிற் சிகிச்சைபெற்று பொதுமக்கள் பத்துப் வைத்தியசாலையினுள் வைத்தே வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தார்கள். ஏறாவூர் வந்த பேரையும் *****

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.