Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 04/4/2006 பக்கம்: 1, 14 இராணுவத்தில் முஸ்லிம் படையணி தேவையற்ற ஏற்பாட்டு நடவடிக்கை: அகில இலங்கை முஸ்லிம் சபை தெரிவிப்பு "இலங்கை இராணுவத்தில் தனி முஸ்லிம் படையணி ஒன்றை தோற்றுவிக்க முனைவது தேவையற்ற ஒரு நடவடிக்கையாகும்." -இவ்வாறு அகில இலங்கை முஸ்லிம் சபை தெரிவித்துள்ளது என இணையத்தளம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. மேற்படி அமைப்பின் செயலர் எம்.எப். மொகைதீன் இந்தக் கருத்தை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்தவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது:- எமது அகில இலங்கை முஸ்லிம் சபையானது மறைந்த சேர். ராசிக் பரீத்தினால், 1921ஆம் ஆண்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த அமைப்பில் முஸ்லிம் சமூகத்தின் பல்கலைக்கழக கல்விச் சமூகம், அரச மற்றும் தனியார்துறை தொழில் வல்லுநர்கள், வர்த்தகர்கள் அனைவரும் இணைந்து செயற்படுகின்றனர். எம்மைப் பொறுத்தவரை தனி முஸ்லிம் படையணி அமைக்கப்படுவது அவசியமற்ற ஒன்றெனவே கருதுகிறோம். கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காக இந்தப் படையணி அமைக்கப்படும் என்று அரசு கூறுகிறது. இது எதிர்காலத்தில் சாத்தியமான ஒருவிடயமல்ல. முஸ்லிம்கள் அனைத்து மாகாணங்களிலும் அனைத்து மதத்தவர்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர். எங்களுக்குத் தெரிந்தவரையில் எந்தவொரு நாட்டின் இராணுவத்திலும் தனி ஒரு இனத்துக்காக அல்லது சமூகத்துக்காக ஒரு படையணி உருவாக்கப்பட்டதாக வரலாறு இல்லை. இந்நிலையில் பல்லின கலாசாரம், பல்லின மதங்கள் உள்ள எமது நாட்டில் இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பானது இனங்களின் அடிப்படையில் இருக்கத்தேவையில்லை என்பதே எமது கருத்தாகும். எனவே, இவ்விடயத்தில் தாங்கள் கூடிய கவனம் செலுத்தி இந்த நடவடிக்கையை உடன் நிறுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் - எனத் தெரிவித்துள்ளார். (எ-க) ***** தொகுப்பாளர் குறிப்பு: இக்கடிதத்தின் ஆங்கில வடிவத்தை தமிழ்நெட்டில் வாசிக்குக (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=17661)
  2. இஸ்லாமிய கமாஸ் பயங்கரவாதிகளின் வெறிச்செயல் To watch the full video, click here https://x.com/IDF/status/1809144566362058938
  3. செய்திகள் வலைத்தளம்: புதினம் திகதி: 28/03/2006 கொழுவி: https://www.puthinam.com/ கிழக்கில் உதயமாகிறது சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ "ஜிகாத்" குழு! சிறிலங்கா இராணுவத்தில் தனி முஸ்லிம் படையணியை உருவாக்க உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இது தொடர்பில் கூறியதாவது: இராணுவ முஸ்லிம் படையணியின் தேர்வுக்கான நேர்காணல் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. அம்பாறையில் எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் நாள் வரை இந்த நேர்காணல் நடைபெறும். இப்படையணியில் மொத்தம் 500 பேர் இணைக்கப்பட உள்ளனர் என்றார் சமரசிங்க. இது தொடர்பிலான விளம்பரம், சிறிலங்கா அரச ஊடகமான கடந்த ஞாயிறன்று சண்டே ஓப்சர்வரில் வெளியாகி இருந்தது. புதிதாகச் சேர்க்கப்பட உள்ளவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிமாகவும் 8 ஆம் வகுப்பு வரை படித்தவராகவும் இருக்க வேண்டும். ஒரு நபருக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாய். இதில் போக்குவரத்து, மருத்துவ சலுகைகள், தங்குமிடம் அனைத்தும் அடங்கும். கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்களின் துணை இராணுவக் குழுவான ஜிகாத் குழு இயங்கி வருகிறது என்றும் இது பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வுத்துறை உதவியுடன் இயங்குவதாகவும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பிலான ஆதாரங்கள் உள்ளன என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் தற்போது குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் "இராணுவத்தில் முஸ்லிம் படையணி" என்பதும் இந்தப் படையணி கிழக்குப் பிரதேசத்தில் மட்டுமே இயங்கும் என்பதும் ஒரு உத்தியோகபூர்வமான ஜிகாத் குழுவை உருவாக்கும் நடவடிக்கையாகவே சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். சிறிலங்காவின் கிழக்குப் பிரதேசத்தில் இயங்கும் இந்த முஸ்லிம்கள் குழுக்களின் நீண்டகால செயற்பாடுகள் பற்றிய ஒரு தொகுப்பு: தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை தொடக்கத்தில் இணைத்துக் கொண்டு தமிழர்கள் மீதான பாரிய படுகொலைகளை சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டது. இதற்கு வீரமுனை கிராமப் படுகொலையை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீரமுனை என்கிற தமிழ்க் கிரமாமமானது பல முஸ்லிம் கிராமங்களைச் சூழ்ந்து அமைந்தது. மட்டக்களப்பு நகரிலிருந்து 38 கிலோ மீற்றர் தென்மேற்கில் இக்கிராமம் உள்ளது. 1990 ஜூன் மாதம் 11 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையேயான யுத்தம் தொடங்கிய போது வீரமுனை கிராமம் 3 பாரிய படுகொலைகளைச் சந்திக்க நேர்ந்தது. ஜிகாத் அமைப்பு, சிறிலங்காவின் "ஊர்காவல்" படையினர், சிறிலங்கா அரசாங்கத்தினது இராணுவம், சிறப்பு அதிரடிப்படை ஆகியவை இந்தப் படுகொலைகளை நடத்தின. தமிழ்க் கிராமங்களில் யுத்த காலத்தில் படுகொலைகளையும் மனித உரிமைகளையும் மீறியதில் பாரிய பங்களிப்புச் செய்தது சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை. 1990 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாளன்று மேலே குறிப்பிட்டுள்ள குழுவினருடன் இணைந்து கொண்ட சிறிலங்கா இராணுவம் நூற்றுக்கணக்கான தமிழ் ஆண்களை வயது வேறுபாடின்றி சுற்றி வளைத்து கொண்டுவெட்டுவான் முகாமுக்குக் கொண்டு சென்றது. பின்னர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அனைவரையுமே படுகொலை செய்தனர். தொடர்ந்து இறந்தவர்களின் உடைமைகளையும் வீடுகளையும் எரித்து நாசப்படுத்தினர். அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் சிறப்பு அதிரடிப்படையினர், ஜிகாத் அமைப்பில் உள்ள முஸ்லிம்கள், ஊர்க்காவல் படையினர் வீரமுனை கிராமத்தைச் சுற்றிவளைத்தனர். முன்னைய பாரிய படுகொலைச் சம்பவங்களால் அச்சமடைந்த அம்மக்கள் சிந்தையாதிரை பிள்ளையார் ஆலயத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். ஆனால் ஆலயத்துக்குள் உள்நுழைந்த முஸ்லிம் தீவிரவாத இளைஞர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், ஊர்காவல் படையினர் ஆலயத்திலேயே குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 56 பேரை படுகொலை செய்து வெறியாட்டம் நடத்தினர். இந்தப் படுகொலைகளால் வீரமுனை கிராமமே ஒட்டுமொத்தமாக வெளியேறி காரைதீவு அகதி முகாமுக்கு இடம்பெயர்ந்தது. 1993 ஆம் ஆண்டு இக்கிராமத்தினர் சிலர் வீரமுனை கிராமத்துக்குத் திரும்பினர். பெருமளவானோர் இன்னமும் அகதி முகாம்களிலே வசித்து வருகின்றனர். 1998 ஆம் ஆண்டு அம்பாறை அக்கரைப்பற்றில் பி.எல்.ஓ.என்ற முஸ்லிம் ஆயுதக் குழு உருவானது. இக்குழுவானது முஸ்லிம் பிரதேசங்களுக்குள் தமிழர்கள் உள்நுழவதைத் தடை செய்வதாக அறிவித்தது. இத்தகைய பெயரில் 1985, 1990 ஆண்டுகளில் தமிழர் விரோத சக்திகள் ஒரு குழுவை உருவாக்க முனைந்துள்ளனர். அக்குழுவினர் 1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 5 ஆம் நாள் வெளியிட்ட துண்டறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது நடவடிக்கைகளை முஸ்லிம் பகுதிகளில் கைவிட வேண்டும் என்று எச்சரித்தது. இருப்பினும் இக்குழுவின் பின்னணியில் சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவான சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை இருப்பதாக செய்திகள் வெளியாகின. 1999 ஆம் ஆண்டு அபுசாலி ஜூலியா (வயது 34) என்ற ஏறாவூர் தாமரைக்கேணியைச் சேர்ந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். திருமணமான வேறு ஒரு ஆணை விரும்பியதால் இஸ்லாமிய மதச் சட்டத்தை அப்பெண் மீறியதாகக் கூறி முஸ்லிம் ஆயுதக் குழுவினர் படுகொலை செய்தனர். அதன் பின்னர் சமாதானப் பேச்சுக்கள் நடைபெறத் தொடங்கிய 2002 ஆம் ஆண்டு சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார். சிறிலங்கா இராணுவத்தினரால் பாரிய படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிற ஊர்காவல் படையில் உள்ள 23 ஆயிரம் பேரினது எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்த விரிவாக்கம் நடைபெறும் என்றும் அறிவித்தார். கற்பிட்டியில் ஜூன் மாதம் 21 ஆம் நாள் ஊர்காவல்படையினர் முகாமில் ஜோன் அமரதுங்க பேசியதாவது: சிறிலங்கா காவல்துறையினரது கடமைகளை ஊர்காவல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் காவல்துறையினரை விட குறைவான ஊதியம் பெறுகின்றனர். நாளாந்த ஊதியமே ஊர்காவல் படையினருக்கு வழங்கப்படுகிறது. அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஊர்காவல் படை கலைக்கப்படமாட்டாது. மாறாக அது வலுப்படுத்தப்படும் என்றார். இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஜூன் 23 ஆம் நாள் (2002) விடுதலைப் புலிகளின் மூதூர் அரசியல்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட அறிக்கையில், முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் செயற்பாட்டை ஒப்புக் கொண்டார். அவர் வெளியிட்ட அறிக்கை: கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான நல்லிணக்கச் சூழலைச் சீர்குலைக்கும் வகையில் சில சக்திகள் செயற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அமைதியை விரும்புகிற அனைத்து முஸ்லிம்களும் இத்தீவிரவாதக் குழுக்களின் செயற்திட்டங்களுக்குப் பலியாகாமல் அமைதிக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளின் அரசியல் அலுவலகம் மீதான இத்தாக்குதலையடுத்து தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய பதற்றம், மோதல் ஏற்பட்டது. அப்போது மக்கள் நடத்திய பாரிய அளவிலான பேரணியில் "ஒசாமா" குழு எனப்படுகிற முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரே இத்தாக்குதலுக்குக் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஒசாமா குழு என்றும் ஜிகாத் குழு என்றும் இயங்கி வந்த இக்குழுவை சிறிலங்கா இராணுவம் இயக்கியது. அதன் தலைவராக ஹக்கீம் என்பவர் செயற்பட்டு வந்தார். ஜூன் மாதம் 26ஆம் நாள் (2002) இல் பி.பி.சி. தமிழோசை நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த தமிழ் ஊடகவியலாளர் பி. சதாசிவானந்தத்தின் மூதூர் இல்லம் மீது மீண்டும் ஒசாமா அணி என்று தன்னை அழைத்துக் கொண்ட இந்த ஜிகாத் குழு தாக்குதல் நடத்தியது. சதாசிவானந்தம் நடத்திய ஆதரவற்ற சிறார் விடுதியையும் இந்த ஜிகாத் குழு தாக்கியது. மூதூரில் தொடர்ந்து நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில் 6 பேர் பலியாயினர். வன்முறைப் பகுதிகளை பார்வையிடச் சென்ற சிறிலங்கா உள்விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிய கதையாக ஒரு உண்மையையும் அவர் ஒப்புக் கொண்டார். அமைச்சராக இருந்த ஜோன் அமரதுங்க, கடந்த வாரம் (2002 ஜூன் 23 ஆம் நாள் தொடக்கம் 26ஆம் நாள் வரை) நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பின்னால் மறைமுகமாக ஒரு சக்தி இயங்குவதாக அரசாங்கம் நம்புகிறது என்று கூறினார். இந்தக் காலகட்டத்தில்தான் இத்தகைய தீவிரவாதக் குழுவினரைக் கொண்டு சிறிலங்காவின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக முஸ்லிம் ஊர்க்காவல் படை வலுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் படுகொலைகளையும் இந்த ஊர்காவல்படையினர் மேற்கொண்டனர். தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபக்கம் தனது துணைப் படைகளில் இணைத்துக் கொண்டிருந்த நிலையில் - சர்வதேச அளவில் பயங்கரவாதச் செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கிற லஸ்கர் இ தொய்பா, சிறிலங்காவின் ஆசீர்வாதத்துடன் கிழக்கில் கால் பதித்தது. சிறிலங்காவின் கிழக்கில் ஜிகாத் குழுவாக அறியப்படுகிற இந்தக் குழு பாகிஸ்தானின் உதவியுடன்தான் இயங்கி வருவதாக கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்தியாவும் எச்சரித்திருந்தது. இந்தியாவின் "அவுட்லுக்" வார ஏட்டில் இது தொடர்பான கட்டுரையும் வெளியாகி இருந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பி.ராமன், முஸ்லிம் ஜிகாத் குழு தொடர்பிலான தகவல்களை வெளியிட்டிருந்தார். அப்போது சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதுவராக ஓய்வு பெற்ற இராணுவ கேணல் பசீர் வாலி நியமிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அவரது நியமனத்தை நிராகரிக்குமாறு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் அதில் எழுதியிருந்தார். அவர் எழுதிய கட்டுரையின் விவரம்: இந்தியாவுக்கு எதிராக கொழும்பை பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நேரடியாக பயன்படுத்துவது தொடர்பில் எதுவித ஆதாரமும் இல்லை. இருந்தபோதும் சிறிலங்காவின் கிழக்கில் உள்ள முஸ்லிம்களை ஜிகாத் குழுவில் சேர்ப்பது தொடர்பாக லஸ்கர் இ தொய்பா அமைப்பு ஆர்வம் காட்டுகிறது. கிழக்கு மாகாண தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே தீவிரவாத உணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது. 2002 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நடந்த இன வன்முறைகளுக்கு மத்தியில் "ஒசாமா படையணி" என்பது தீவிரமாகச் செயற்பட்டது. பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. யுடன் லஸ்கர் இ தொய்பா நெருங்கிய தொடர்புகொண்டது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இராஜதந்திர நிலையில் தனது இரு அதிகாரிகளை நியமனம் செய்திருந்தது. இது போன்ற செயற்பாடுகள் மூலம் கொழும்பை தளமாக பயன்படுத்த பாகிஸ்தான் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டமிடுவதாக தெரிகிறது. ஏனெனில் இந்தியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் செயற்பாடுகள் பல தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. இவை தொடர்பிலான தரவுகளைச் சேகரிக்க கிழக்கில் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ. பயன்படுத்தலாம். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இந்திய உளவாளிகள் இரகசியமாக கராச்சி செல்வதற்காக கொழும்பு வழியை பயன்படுத்துகின்றனர். கொழும்பில் அத்தகைய நபர்களது கடவுச் சீட்டுகளில் சிறிலங்காவில் நுழைந்தமைக்கான பதிவுகளை சிறிலங்கா செய்வதில்லை என்றும் இராமன் தெரிவித்திருந்தார். "அவுட்லுக்" இதழ் வெளியிட்டிருந்த இக்கட்டுரையை 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17 ஆம் நாளன்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு மறுத்திருந்தது. பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட மறுப்பறிக்கை: இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களை வெளிவிவகார அமைச்சு நிராகரிக்கிறது. இந்திய உளவு அமைப்பான றோவின் முன்னாள் செயற்பாட்டாளரால் தவறான தகவலை பரப்பும் உள்நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எதுவித ஆபத்தான சூழ்நிலை உணரப்பட்டாலும் பாகிஸ்தான் மீது பகைமையைத் தூண்டு வகையில் ஐ.எஸ்.ஐ. மீதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்று அந்த மறுப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானிலிருந்து இயங்குகிற காஸ்மீர் ஆயுதக் குழு லஸ்கர் இ தொய்பா. மர்கஸ் தாவா- வல்- இர்ஸாத் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் ஆயுதக் குழுதான் லஸ்கர் இ தொய்பா. இச்சூழலில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரலில் பொத்துவில் முஸ்லிம் பகுதியில் புத்தர் ஆலயம் அமைக்க பேரினவாத சக்திகள் முயற்சித்தன. இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இதைக் கண்டித்து ஏப்ரல் 12ஆம் நாள் (2005) கொழும்பில் சிங்கள பௌத்த தேசியவாதிகள், பௌத்த பிக்குகள் கண்டனப் பேரணி நடத்தினர். அந்தப் பேரணி முடிவில் புத்த சாசன அமைச்சுவிடம் சிங்களப் பேரினவாதிகள் கையளித்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாவது: பொத்துவில் பிரதேசத்தில் சட்டபூர்வமான பௌத்த மத செயற்பாடுகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், ஆயுதமேந்திய முஸ்லிம் தீவிரவாதிகளும் எதிர்க்கின்றனர். இந்த முஸ்லிம் ஆயுதக் குழுவினர் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டிய போதும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் கல்முனையில் இரு சிறிலங்கா காவல்துறையினர் தாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேரணியை ஜாதிக ஹெல உறுமய நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜிகாத் குழுவின் தலைவராக குற்றம்சாட்டு வந்த அப்துல் சமது அப்துல் ஹக்கீம் என்ற மதுகர ஹக்கீம் (வயது 42) அடையாளம் தெரியாத நபர்களால் மூதூர் பளை நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவ நாளன்று மோட்டார் சைக்கிளில் தனது ஹலால் கடைக்குச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்தது. எப்போதும் அவருடன் இருக்கும் 6 பாதுகாப்புப் படையினர் சம்பவம் நடந்த போது உடனிருக்கவில்லை. கட்டைப்பறிச்சான் சிறிலங்கா இராணுவ முகாமிலிந்து 500 மீற்றர் தொலைவில் மூதூர் பிரதான வீதியில் ஹக்கீம் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜிகாத் குழுவினரிடையிலான உள்மோதல் அல்லது வர்த்தக மோதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் அப்போது தெரிவித்திருந்தனர். 1985, 1990, 1995 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் பாரிய அளவில் நடைபெற்ற தமிழ், முஸ்லிம் வன்முறைகளில் தொடர்புபட்டவர் இந்த ஹக்கீம் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்களின் மீது ஜிகாத் குழு இயங்குகிறது என்று விடுதலைப் புலிகள் தரப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டு அதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டன. இந்த அறிக்கையின் விவரங்களை கொழும்பு ஆங்கில நாளேடான "சண்டே லீடர்" பகிரங்கப்படுத்தியிருந்தது. ஜிகாத் குழுவின் செயற்பாடுகளுக்கு உதவியாக இருந்த திருகோணமலையில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் 22 ஆம் படையணியில் மேஜர் தரத்திலான அதிகாரி, புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன. சிறிலங்காவின் கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஊடாக ஜிகாத் குழுவினருக்கான ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டன என்பதையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்பதையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருந்தது. இருப்பினும் அமைச்சர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பாகிய பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்க்ஸ்லி றொட்ரிக்கோ, கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதற்கான காரணத்தை வெளியிட்ட போது கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுதக் குழு இயங்குகிறது என்ற உண்மையை வெளிப்படுத்தியிருந்தார். அவருக்கு எதிராக முஸ்லிம் குழுக்கள் போராட்டம் நடத்திய போதும் தான் ஜிகாத் குழு என்று சொல்லவில்லை சில ஆயுதக் குழுக்கள் இயங்குகிறது என்று மீண்டும் விளக்கமளித்தார். அண்மையில் முஸ்லிம் துணை இராணுவக் குழுவில் இணைய மறுத்த பல முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு தாக்கி அச்சுறுத்தியிருந்தது. முஸ்லிம் பிரதேசங்களில் ஆயுதக் குழுக்கள் இயங்குவது தொடர்பான செய்திகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத் தலைவர்களுடன் விடுதலைப் புலிகள் நேரடியாக பேச்சுக்களையும் நடத்தியிருந்தனர். இருப்பினும் முஸ்லிம் தலைவர்கள் பகிரங்கமாக முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக்குழுவில் இணைவதற்கான சூழல் இருப்பதாக எச்சரித்து வந்தனர். அண்மையில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் முஜிபுர் ரகுமான் வெளியிட்ட அறிக்கையில், முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதமேந்துகிற உரிமை இருக்கிறது என்று அறிவித்திருந்தார். கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுத நடமாட்டத்தை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவும் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தார். "அப்பிரதேசத்தில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் நடமாடலாம் ஆனால் அவர்கள் ஆயுதக் குழுவினரா? ஜிகாத் குழுவினரா என்பது எமக்குத் தெரியாது என்று பிரசாத் சமரசிங்க கூறியிருந்தார். சிறிலங்கா இராணுவமானது முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரை முதலில் ஊர்காவல் படையில் இணைத்து உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக செயற்படுத்தியது. சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் துணையுடன் ஜிகாத் குழுவை உருவாக்க அனுமதித்து தெற்காசிய பிராந்திய அமைதிச் சீர்குலைவுக்கு உடந்தையாக சிறிலங்கா செயற்பட்டு வருகிறது. இதனிடையே ஜெனீவா பேச்சுக்களில் இந்தக் குழுவினரை விடுதலைப் புலிகள் பகிரங்கப்படுத்தி சர்வதேச சமூகத்தின் முன்னர் ஆதாரங்களோடு அம்பலப்படுத்திவிட்டனர். இதனால் சர்வதேச சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற நடுக்கத்தில்- உத்தியோகப்பூர்வமான ஜிகாத் குழுவாக- "கிழக்குப் பிரதேச சிறிலங்கா இராணுவ முஸ்லிம் படையணி"யை உருவாக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகவே சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். *****
  4. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 24/3/2006 பக்கம்: 1, 14 விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் ஊர்காவலரும் விடுதலை : மூதூர், சம்பூரில் வைத்து ஒப்படைப்பு மூதூர்,மார்ச் 24 மூதூரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்பட்ட இரு முஸ்லிம் ஊர்காவலர்கள் நேற்று முஸ்லிம் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மூதூர் கிழக்கு, சம்பூரிலுள்ள திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகத்தில் தோப்பூர் மற்றும் மூதூர் பள்ளிவாசல் சபைகளின் தலைவர்களிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் இருவரையும் திருமலை கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஒப்படைத்தார். கடந்த மார்ச் 14ஆம் திகதியன்று மது போதையில் இவர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஈச்சிலம்பற்று பகுதிக்குள் உள்நுழைந்ததையடுத்து கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம்களின் ஜிகாத் குழு, கருணா குழு ஆகியன பற்றி பல உண்மைத் தகவல்களை இந்த இரு ஊர்காவலர்கள் வெளியிட்டனர். இந்த நிலையில் முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையேயான நல்லுறவை வளர்த்தெடுக்கும் வகையிலும், புரிந்துணர்வை உருவாக்கும் வகையிலும் இரண்டு ஊர்காவலர்களையும் புலிகள் விடுவித்து அவர்களை முஸ்லிம் பிரதிநிதிகளிடம் கையளித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. (க- 3) ***** தொகுப்பாளர் குறிப்பு: இச்செய்தியின் ஆங்கில வடிவத்தை தமிழ்நெட்டில் வாசிக்குக (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=17549) ஒப்படைக்கப்பட்ட போது நிழற்படத்திற்கு அனைவரும் ஒன்றாக பொதிக்கின்றனர். இவர்களுடன் இ.போ.க.ச. திருமலை பொறுப்பாளர் திரு. ஓவ் ஜான்செனும் நிற்பதைக் காண்க. படிமப்புரவு: தமிழ்நெற்
  5. செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் திகதி: 22/03/2006 கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=17528 தமிழாக்கம்: நன்னிச் சோழன் விடுதலைப் புலிகள் கைதுசெய்த ஊர்காவல் படையினரை தமிழீழ காவல்துறையிடம் ஒப்படைத்தனர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உந்துருளியில் சென்ற போது மார்ச் 14ஆம் திகதி பிடிபட்ட இரண்டு ஊர்காவல் படையினரையும் தமிழீழக் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சம்பூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர். வாழைச்சேனையைச் சேர்ந்த திரு.சித்திக் ரெசீன் (23) மற்றும் தோப்பூரைச் சேர்ந்த திரு.ஹனிபா அன்சார் (30) ஆகிய இரு ஊர்காவலர்களை வழமையான நடைமுறையின்படி தமிழீழ நீதிமன்றம் விடுதலை செய்ய முடியும் என விடுதலைப் புலிகளின் திருகோணமலைப் பொறுப்பளர்கள் மேலும் சந்திப்பில் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட முஸ்லிம் ஊர்க்காவல் படையினர் சம்பூரில் விடுதலைப் புலிகள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் காட்டப்பட்டனர். படிமப்புரவு: தமிழ்நெற் உசாவலின் போது ஊர்க்காவல் படையினர் முக்கிய தகவல்களை வெளியிட்டதாக புலிகளின் அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். “மது போதையில் இருந்ததால் மஹிந்தபுர படை முகாமைத் தவிர்க்க விரும்பியதால், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஈச்சிலம்பற்றுப் பிரிவில் அமைந்துள்ள வீதியின் ஊடாக மட்டக்களப்பு நோக்கி உந்துருளியில் சென்றபோது மார்ச் 14ஆம் திகதி புலிகளால் கைது செய்யப்பட்டோம். மேலும் எங்களிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை" என்று இரண்டு ஊர்க்காவல் படையினரும் செய்தியாளர் சந்திப்பில் ஒரு வினாவிற்கு மறுமொழியளித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆயுதக் குழுக்கள் குறித்து ஊர்க்காவல் படையினரிடம் கேள்வி தொடுத்தபோது, "மூதூர், தோப்பூர் பகுதிகளில் ஜிகாத் குழு தொழிற்படுகிறது. நாசர், மஃபரிங், தௌபீக், கந்தப்போடி ராசிக், நந்து, வண்டிக்குட்டன் ஆகியோர் மூதூரில் ஜிகாத் குழுவை வழிநடத்துகின்றனர். ஹாஜா மொஹிதீன், உபைபுலா, நிஜாம்தீன், சலீம்தீன் ஆகியோர் தோப்பூரில் ஜிகாத் குழுவை வழிநடத்துகின்றனர். எவ்வாறெயினும் ஜிகாத் குழுவுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஜிகாத் குழு உறுப்பினர்களுக்கு அதிகாரிகளுடன் தொடர்புள்ளது." படிமப்புரவு: தமிழ்நெற் வாழைச்சேனை காவல்துறையில் பணிபுரிவதால் கருணா குழுவுடன் தொடர்பு உள்ளதா என ஊர்காவல் படையினர் இருவரிடமும் வினவிய போது, “தீவுச்சேனைக்கு உறவினரை பார்க்க சென்ற போது படைமுகாமிற்கு அருகாமையில் கருணா முகாம் அமைந்துள்ளதாக அறிந்தோம். கருணா முகாமின் உறுப்பினர்கள் படைமுகாமின் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கருணா குழு உறுப்பினர்களை அப்பகுதியில் உள்ள ஈபிடிபி முகாமில் சந்தித்து வருவதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது". விடுதலைப் புலிகள் தம்மை மிகவும் சிறப்பாக நடத்துவதாகவும், விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து அறிந்துள்ளதால் மகிழ்ச்சி அடைவதாகவும் ஊர்க்காவல் படையினர் இருவரும் தெரிவித்தனர். *****
  6. மிக்க மகிழ்ச்சி... வரலாறுகளை மறந்தால் நாம் தான் பலிகடா ஆக்கப்படுவோம்!
  7. செய்திகள் வலைத்தளம்: தினக்குரல் திகதி: 19/03/2006 கொழுவி: https://www.thinakural.com/New web site/web/2006/March/19/Article-3.htm மீளெடுக்கப்பட்டது: யாழ் கருத்துக்களம் - 2 வழியாக முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் 'பவ்ரல்' அமைப்பு வெளியிட்ட அறிக்கை - அஜாதசத்ரு - கிழக்கில் அண்மைய காலங்களில் மிக மோசமாக அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களும் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பிரதான நோக்காகக் கொண்டுள்ள முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளும் மிகவும் மோசமானதோர் நிலைமைக்கு வழிவகுத்து வருவதையே காணக்கூடியதாகவுள்ளது. கடந்தமுறை ஜெனீவாவில் இடம்பெற்ற அரசு - விடுதலைப்புலிகள் சந்திப்பின் போது விடுதலைப்புலிகள் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி- வரதர் அணி மற்றும் கருணா குழு என்பவற்றின் மாவட்டப் பொறுப்பாளர்கள் அவர்களுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகள் அவர்கள் செயற்படும் மறைவிடங்கள் என்பனவும் எழுத்துமூலம் வழங்கப்பட்டது. இதெல்லாவற்றிற்குமப்பால் அரசுக்கு வழங்கப்பட்ட மேற்குறிப்பிட்ட விபரத்தில் மிகவும் கவனிக்க வேண்டியதொரு விடயம் 'கிழக்கில் ஜிகாத்' என்ற பெயரில் இயங்கும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பானதாகும். குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் நூர்தீன் நிஜாம், நூர்தீன் ஷரோம், பஷீன் ஷரோம், குனேஸ் நஜீம் ஆகியோர் தலைமையில் இயங்கும் ஜிகாத் குழு- ஆயுதக்குழுவின் முழு விபரமும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இவ்வாறான சிறுசிறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் பல்வேறு மோதல்களுக்கும் விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கும் வழிவகுத்துள்ளது கவனிக்கத்தக்கதொரு விடயமாகும். இவற்றின் பிரதான தளங்களாக கிழக்கில் மூதூர், கிண்ணியா, தோப்பூர், ஓட்டமாவடி ஏறாவூர், காத்தான்குடி, அக்கரைப்பற்று போன்ற இடங்களில் இயங்குவதும் கவனிக்கத்தக்கது. கடந்த வருடம் காத்தான்குடியில் இடம்பெற்ற மார்க்கப் பிரச்சினை சம்பந்தமான இரு தரப்பினருக்குமிடையிலான மோதல்களின் போதும் கூட கைக்குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கி பிரயோகம் என்பனவும் இடம்பெற்றது கவனிக்கத்தக்கது. இவை நன்கு பயிற்சியளிக்கப்பட்ட நபர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாகும் என்று பொலிஸ் விசாரணைகள் மூலம் பின்னர் அறியவந்தது. இதனைவிட ஓட்டமாவடி, ஏறாவூர் போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் ஜிகாத் என்ற பெயரில் செயற்பட்ட ஒரு முஸ்லிம் ஆயுதக் குழு அப்பகுதியில் உள்ள வீடியோக் கடைகளை மூடுமாறும் சூதாட்டம் மதுபாவனையில் ஈடுபட வேண்டாமென்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் அச்சுறுத்தல் விடுத்திருந்தது. கடந்த வருடம் ஆரம்பத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளிலுள்ள வீடியோக்கடைகளை மூடுமாறும் அச்சுறுத்தியது கவனிக்கத்தக்கதொரு விடயமாகும். இதெல்லாவற்றிற்குமப்பால் கடந்த வருடம் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையேயான மோதல்களுக்கும் முஸ்லிம் ஆயுதக் குழுவொன்றே பின்னணியிலிருந்து செயற்பட்டதாகவும் அறியவருகிறது. இதெல்லாவற்றிற்குமப்பால் அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரின் பின்னணியிலேயே இந்த ஆயுதக் குழு செயற்படுவதாகவும் பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. மேலும், கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் காலங்களில் முக்கிய அரசியல்வாதிகளுக்கிடையேயான மோதல் சம்பவங்களின் போது கூட இவ்வாறான ஆயுதக் குழுக்களின் பின்னணியும் தொடர்புபட்டிருப்பதாக பாதுகாப்பு தரப்பினராலேயே குற்றஞ்சாட்டப்பட்டதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் தமிழ் இளைஞர்களைப் போன்று முஸ்லிம் இளைஞர்களும் தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழப்புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஆகிய தமிழ்ப் போராட்ட அமைப்புகளில் இணைந்து ஆயுதப்பயிற்சி பெற்று தியாகம் செய்த வரலாறும் ஒன்று உள்ளது. இதனைவிட தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதறடிக்க அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவினரின் வருகை உள்வாங்கப்பட்ட போது அதற்கெதிராக கிழக்கில் வீதிகளில் இறங்கி முஸ்லிம் சமூகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் மறக்க முடியாது. இந்த நிலைமையை மாற்றியமைக்கவே சிங்களப் பேரினவாதம் அப்போதிருந்த கிழக்கின் முஸ்லிம் தலைமைகளுடன் பேரம்பேசி முஸ்லிம் ஊர்காவல்படை என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை தமிழர்களுக்கு எதிரான மோதலுக்குள் தள்ளி வீழ்த்தியது. இந்த நடவடிக்கைகளுக்கு அப்போதிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவமே பிரதான பங்காளியாக இருந்ததை எவரும் மறுத்துவிடமுடியாது. கிழக்கில் இரண்டாவது ஈழ யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற தமிழர் அழிப்பு நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் ஊர்காவல் படையினரையேஇ அரச படையினர் பயன்படுத்தினர் என்பதை எவரும் மறுக்கமுடியாது. சிங்களப் பேரினவாதத்தால் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான அழித்தொழிப்பு நடவடிக்கைகளும் அதன் எதிரொலியாக முஸ்லிம் கிராமங்களில் இடம்பெற்ற சம்பவங்களும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையே மறக்கமுடியாத கசப்பான வரலாற்றை தோற்றுவித்தது. இவ்வாறானதோர் நிலைமைகளுக்கு மத்தியில் தான் மீண்டும் கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களை உருவாக்கும் முயற்சிகளில் அரச படையினர் மட்டுமன்றி வேறு பல அந்நிய சக்திகளும் ஈடுபட்டு வருகின்றதாகவே அங்கிருந்து கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே கிழக்கில் ஜிகாத் என்ற பெயரிலோ அல்லது வேறு எந்தவொரு பெயரிலும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் எதுவுமில்லையென்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ள நிலையில் கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான விபரங்கள் தம்மிடமுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையேயான நல்லுறவை சீர்குலைப்பதற்கான பேரினவாத சக்திகளின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமையும் அதிக கரிசனை எடுப்பது இன்றைய தருணத்தில் அவசியமானதொன்றாகும். *****
  8. யாழ்ப்பாண வைத்தியர்களின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன். (03.07.2024) வைத்தியர்கள் சிலரால் சீரழிக்கப்படும் மருத்துவத்துறை
  9. செய்திகள் வலைத்தளம்: வீரகேசரி திகதி: 12/03/2006 கொழுவி: https://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=585 மீளெடுக்கப்பட்டது: யாழ் கருத்துக்களம் - 2 வழியாக புலனாய்வு பிரிவின் நெறிப்படுத்தலில் திருகோணமலையில் ஜிகாத்குழு திருமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீலங்கா படைப்பிரிவின் புலனாய்வு கட்டளை அதிகாரிகளின் நேரடிகண்காணிப்பின் கீழ் தனித்துவமான அணியாக ஜிகாத் குழு இயங்கி வருகின்றது என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஐ.பி.ஸி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனிவா பேச்சுவார்த்தைகளின்போது ஜிகாத் ஆயுதக்குழு உட்பட ஐந்து பிரதான ஸ்ரீலங்கா துணைப்படைக்குழுக்கள் குறித்த முக்கிய தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையொன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து முக்கிய தகவல்கள் கசிந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிகாத் குழுவில் அங்கம் பெறும் குறிப்பிடத்தக்க ஆயுததாரிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்று ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவினர் ஆதரவுடன் இஸ்லாமிய சமயக் கல்வி என்ற போர்வையில் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்ட ஜிகாத் குழு அங்கத்தவர்கள் பாகிஸ்தானின் மலையோரங்களில் உள்ள லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகளின் பாசறைகளில் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ராஜதந்திரியாக தற்போது கடமையாற்றும் பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியொருவர் ஜிகாத் ஆயுத் குழுவினருக்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான இந்த ராஜதந்திரி அண்மையில் யாழ். குடாநாட்டிற்கு பாகிஸ்தான் உளவாளிகள் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னணியில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாத இறுதியில் பாகிஸ்தான் செல்வதன் பின்னணியில் இந்த ராஜதந்திரி செயற்படுவதாகவும் கூறப்படுகின்றது. லண்டனில் முன்னர் பணியாற்றிய இந்த ராஜதந்திரி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் மகிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு காரணமாக ஸ்ரீலங்காவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அவ் இணையத்தள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது. *****
  10. செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=10142 திகதி: 16/10/2003 தமிழாக்கம்: நன்னிச் சோழன் திராய்க்கேணி குமுகாய தலைவரிடம் காவல்துறையினர் உசாவினர் பெரியதம்பிரான் கோவிலுக்கு அருகில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக திராய்க்கேணியில் இருந்து வந்த செய்திகளைத் தொடர்ந்து, கிராம அபிவிருத்தி சபையின் தலைவரான 46 வயதுடைய சின்னத்தம்பி கார்த்திகேசுவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அக்கரைப்பற்று காவல் நிலையத்தின் காவல்துறை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் எச்சங்கள் நாடியறியப்பட்ட இடத்திற்குச் சென்றதோடு திரு. கார்த்திகேசுவை செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் திராய்க்கேணி வாசிகள் தெரிவித்தனர். புதன்கிழமையன்று மேலும் காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தை மீண்டும் பார்வையிட்டதோடு கூடுதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த மேலும் இரு திராய்க்கேணி குடியிருப்பாளர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திர நேரு, ஊர் மக்கள் மற்றும் தலைவர்களை காவல் நிலையத்திற்கு அழைப்பாணை விடுத்து வாக்குமூலம் வழங்குமாறு வற்புறுத்தி துன்புறுத்திய காவல்துறை திணைக்களத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. *****
  11. இது இயக்கச்சி ஆட்டிலறிப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் தொடர்பான ஈரத்தீ திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நானும் முதன் முதலில் இங்கு தான் இப்பாடலை செவிமடுத்தேன். அன்றிலிருந்து எல்லா இசைத்தட்டுக்களிலும் தேடிய போதிலும் எங்கினும் கிடைக்கவில்லை. பின்னர் நேற்று தற்செயலாக ஒரு ஒளிவீச்சை கேட்க நேர்ந்த போதுதான் கண்டுபிடித்தேன். அதில் பாடும் ஆணின் குரல் பாடல் வரிக்கு கொஞ்சம் கூட நன்றாக இல்லை; நித்திரை வாற மாதிரி இருக்குது. ஆனால் பாடல் வரிகள் அந்த மாதிரி இருக்கு. எழுச்சியாக பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
  12. கரும்புலிகள் - அடி முடி அறியமுடியா அதிசயங்கள் இசை: இசைப்பிரியன் இறுவட்டு: அறியில்லை/ தனிப்பாடல் மூலம்: ஒளிவீச்சு கதிர் 81 ஜூலை - 2000 (பாகம்1) கரும்புலிகள் நாங்கள் இங்கு கானம் இசைக்கிறோம் பெருமொலியாய் வெடித்து உயிரைத் தானம் செய்கிறோம் தலைவன் வழியில் நின்றுகொண்டு தணலை மூட்டுறோம் தமிழர் வாழ்வை வசந்தமாக்க வெடிகள் ஆகிறோம் உங்களின் வாழ்வுக்காய் நாங்கள் வெடிப்போம் வென்றுமே அண்ணனின் ஆணை முடிப்போம் வேகம் கொண்டு வேங்கை நாங்கள் பகையில் மோதி வெடிப்போம் தாகம் தமிழீழமென்று சாவை வாழ்வாய்ப் படைப்போம் அண்ணனின் அணியிலே பொங்கும் கரும்புலிகள் நாம் எண்ணமெல்லாம் எங்களுக்கு தமிழர் வாழ்வு ஒன்றுதான் விடிவின் வழியை கொடிய பகைவன் அடைத்தால் தகர்த்தெறிவோம் இனத்தை எவனும் அழிக்க நினைத்தால் இடித்தே கதை முடிப்போம் இறந்த பிறகும் உறங்க எமக்கு ஆறடி நிலம் கேளோம் பிறந்த மண்ணில் தமிழர் மூச்சில் கலந்து நின்று வாழ்வோம்
  13. எழுச்சிப் பாடல் புத்தகங்கள் "ஒரு தலைவனின் வரவு" எழுச்சிப் பாடல்கள் தமிழீழ தேசிய பாடல்கள் (1990) தமிழீழ எழுச்சி கானங்கள் - இப்புத்தகத்தில் உள்ள "முல்லைப்போர்" பாடல்கள் சிலவற்றில் இசையமைப்பாளர்களைப் பற்றிய விபரங்கள் பிழையாக உள்ளன. உதாரணமாக, "முல்லை மண்" பாடலுக்கு இசையமைத்தவர் யாழ் ரமணன் தான். அதேபோல, "நந்திக்கடலோரம்" பாடலுக்கு இசையமைத்தவர் தமிழீழ இசைக்குழு. அத்துடன், "ஊரில் புகுந்து" பாடலுக்கு இசையமைத்தவர் இசைவாணர் கண்ணன் அவர்கள். தமிழீழ எழுச்சிப் பாடல்கள் – பாகம் 1 - இப்புத்தகத்தில் இடம்பெற்ற "குயிலே பாடு" பாடல்வரிகளில் வரும் "கழுத்தில் ஆடுது நஞ்சு" என்று தொடங்கும் வரியை "கழுத்தில் ஆடுது நெஞ்சு" என்று பிழையாக எழுதியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், இதேபாடலில் "பகை விரட்டி எடுப்பரே பலிகள்" என்பதற்குப் பதிலாக "பகை விரட்டி எடுப்பரே புலிகள்" என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. தமிழீழ எழுச்சிப் பாடல்கள் – பாகம் 4 வெற்றிமுரசு பாடல்கள் (தமிழீழ எழுச்சிப் பாடல்கள்) போர்ப்பறைப் பாடல்கள் (தமிழீழ எழுச்சிப் பாடல்கள்) எழுச்சிப் பாடல் புத்தகங்கள் அ பாட்டுப் புத்தகங்கள் ஏராளம்.... இறுவட்டுகள் வெளிவந்தவுடன் பாட்டுப் புத்தகங்களும் வெளியாகும். இவ்வாறு வெளிவந்தவற்றுள் மேற்கண்ட 7 மட்டுமே இப்போது வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. பல ஊழியால் அழிந்துவிட்டன.
  14. தமிழீழ இசைக்குழுவினரின் படிமங்கள் (இவர்கள் தவிர வேறு யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களின் பெயரை மட்டும் (முதற் பெயர் மட்டும்) தெரிவித்துதவுக, ஆவணப்படுத்துவதற்கு.) தகவல் வழங்குநர்: இனந்தெரியாத ஒருவர் இடது: எஸ். ஜி. சாந்தன் | வலது: எஸ்.பி. ஈஸ்வரநாதன். இவர் தமிழீழ இசைக்குழுவின் பொறுப்பாளராக இருந்தவர் ஆவார். இவர் கருணாவுடன் பிரிந்து சென்ற போது கொல்லப்பட்டார. அவரது குடும்பத்தினரில் சிலர் வஞ்சகன் கருணாவின் ஆதரவாளர்கள் என்பது நானறிந்தது. அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களின் ஆனையிறவின் மேனி தடவி என்ற பாடலுக்கு இசையமைத்தவர்களில் இவரும் ஒருவராவார். அது மட்டுமன்றி, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் மீது பாடப்பெற்ற "பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார்" என்ற பாடலின் இசைக்குச் சொந்தக்காரருமாவார். தவிபு ஆல் வெளியிடப்பட்ட ஆனையிறவின் மேனி தடவி பாடல் காட்சியில் இவர் சீருடையில் தோன்றுகிறார்: https://eelam.tv/watch/ஆன-ய-றவ-ல-ம-ன-தடவ-aanaiyiravil-meeni-thadavi-original-version-elephantpass-victory-song_9A1oTREri6Mn2NC.html குட்டிக்கண்ணன் = கப்டன் சிலம்பரசன் பெயர்: சிவா பெயர்: பாப்பா ============================== எஸ். பி. ஈஸ்வரநாதனின் இறப்பிற்குப் பிறகு தென் தமிழீழத்தில் மேஜர் கருவேந்தனின் தலைமையில் தமிழீழ இசைக்குழு உருவாக்கப்பட்டு செயற்பட்டது (ஆதாரம்: மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – 10).
  15. இறுவட்டு அட்டைகள் ஜீவ ராகங்கள் மூல அட்டை: இரண்டாவது அட்டை: "ஜீவ ராகங்கள்" - ஒரு கலாவதானியின் விமர்சனப் பார்வை திறனாய்வு: மூலம்: எரிமலை ஜனவரி 1991 பக்கம்: 21-23 தமிழீழ விடுதலைப் புலிகளின் கலாச்சாரப் பிரிவின் பிரெஞ்சுக் கிளையினரால் வெளியிடப்பட்ட ஜீவராகங்கள் பாடல் ஒலியிழை நாடா பற்றிய விமர்சனம். ஜீவராகங்கள் ஜீவனுடைய ராகமேதான்! பொழுது சாயும் நேரம், கடற்கரையில் போராளிகள் எதிரியை முறியடிக்க அவனின் வரவு நோக்கிக் காத்திருக்கின்றார்கள். பாதுகாப்பு உறையில் தோன்றுகின்ற காட்சியே முதலில் எம் கண்களில் ஒரு கவிதை எழுதுகின்றது. துயர்படவும், துடித்து மாளவும், அடிபடவும், குண்டு துளைத்தோர் கோரம் காணவும், அழுது துயர் தோய்ந்து சாகவுமோ மனிதன் பிறந்தான்! எம்மை ஒத்த ஜீவன்கள், எம் வாழ்வுக்காய் போராடுவதையும், மண்ணை மீட்கப் போரில் சாவதையும், அந்நிய தேசத்தில் நாம் அகதிகளாய் துயருறுவதையும், மண்ணுக்காய் ஆற்ற எமக்கு கடமை ஒன்றிருப்பதையும் நினைவூட்டுவதாய் பாடல்கள் அமைந்துள்ளன. ஏக்கங்களையும், நம்பிக்கைகளையும் சுமந்துகொண்டு புதியதொரு உலகத்திற்குச் செல்லும் உணர்வு, பாடல்களைக் கேட்கும் போது ஏற்படுகின்றது. அம் மனயாத்திரை எம்மையறியாமல் இயல்பாகவே நடைபெறுகின்றது. இதிலுள்ள பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம். "கண்ணோடு ஒரு கனவு" என்று தொடங்குகின்ற பாடலில் "செம்புழுதித் தரைகளெல்லாம் செந்நீர் குளிக்கிறதே" என்று ஒலிக்கின்ற பாடல்வரி புழுதி அளைந்து ஓடி ஆடிய தரைகளில் இன்று ஒரு விடுதலைப் போர் நடக்கின்றது என்பதைக் காட்டி நிற்கின்றது. அதே பாடலில் "செந்தமிழ் மண் நிலை எண்ண கண்ணோரம் கரைகிறதே!" என்று வருகின்றது. தாய்மண் பிரிவின் வலியை நொந்து அனுபவிக்கின்றார் அக் கவிஞர். கேட்கிற எம் கண்களை குளமாக்குகிறது அக் கவிதை. "எங்கள் தேசம் எங்களுக்கே உரிமை" என்ற பாடல் எமது தேச விடுதலைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்; அதற்காகப் பாடுபட வேண்டும் என கவிஞர் வலியுறுத்துகிறார். விடுதலை என்பது பெற்றுத் தருவதல்ல; போராடி இரத்தம் சிந்திப் பெறுவது என்பதை வலியுறுத்தும் வகையில் இப்பாடல் அமைகிறது. "மனிதன் என்றொருவன் அடிமையாகலாமா?" என்ற பாடலில் வரும் "அடிமை நிலை இதுவேண்டாம்; என்றும் சுதந்திரம் சுதந்திரம்" என்ற வரிகள் ஒரு தந்தையார் தன் குழந்தைக்கு சொல்வது போல் ஒலிக்கின்றன. "புதிய சரிதம் எழுதவே" என்று தொடங்குகிற பாடலைப் பார்ப்போம். இந்திய இராணுவம் 1987 ல் எமது தேசியத் தலைவரை நயமாக அழைத்துச் சென்று பின்னர் அசோகா ஹொட்டலில் சிறைவைத்திருந்த போது மக்கள் நாட்டில் திரண்டெழுந்தார்கள். இந்திய இராணுவத்தை மறியல் செய்தார்கள். தலைவரை விடும்படி போராடினார்கள். இந்த நிதர்சனத்தைக் கவிஞன் தன் பார்வையில் மிக நேர்த்தியாக எளிமையாகப் பாடுகிறான். "காவலனைக் காக்கும் மக்கள் மலைகளல்லவோ! மாமனிதன் பிரபா ஈழத்தலைவனல்லவோ! பெரும் புயலை சிறையில் பூட்டி அடைக்க முடியுமா?" தெம்மாங்கு இசைத் தன்மையில் பாடப்படும் "உலகமெங்கும் வாழும் தமிழர்களே" என்ற பாடல் உலகத் தமிழர்களின் கடமை எது என்று வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது. மேலும் அந்தப் பாடலில் "எங்கள் பலம் நம்பித்தானே எம் இளைஞர் களம் போனார்" என்று கவிஞர் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். நாங்கள் எமது போராட்டத்தை உலக நாடுகளை நம்பித் தொடங்கவில்லை. எம் உரிமையை வென்றெடுக்க நாம் தான் போராட வேண்டும். தூங்கிக் கிடக்கும் எம் சகோதரர்களுக்கு உரிமையோடு கவிஞர் உரைக்கிறார். "கொள்கைகள் சமத்துவம் அத்தனையும் செயற்படுமே". அந்தக் கவிஞனின் எதிர்பார்ப்பின் சிறப்பம்சமாகவும், உறுதியோடும், நம்பிக்கையோடும் உச்சாடனமாகிறது அப்பாடல் வரி. "ஏன் இந்த மௌனமோ?" என்று தொடங்குகிற பாடலில் "அன்பே" எனப் போராளியை விளித்து, "நீ மகிழ்வான தூக்கம் கொள்கிறாயா?" எனக் கேட்டு நிற்கிற போது அத்துணை நெருக்கம், ஐக்கியமான உறவு விடுதலைப் புலிகளுக்கும் மக்களுக்கும் இடையே நிலவுவதைக் காட்டி நிற்கிறது. "நாம் பிறந்த நமது மண் எங்களதே" என்ற பாடலில் எமது மண்ணில் எம்மை யார் அடிமைப்படுத்துவது? காற்று, வானம், பூமி யாவும் மக்களுக்கே என்று மார்புதட்டி வீரமாய் முழக்கமிடுகிறார். மனித நேயம், விடுதலை, வீரம், தாய்மண் என்ற பொருள்களில் எழுதப்பட்ட பாடல்கள் என்றும் சிறப்பானவையே. அடுத்து இசை தொடர்பாகப் பார்ப்போமாகில் நல்ல இசையொன்றை கேட்கின்ற திருப்தியிருக்கிறது. ஈழத்து இசைத்துறையில் முன்னேற்றகரமான ஒரு பாய்ச்சலை இசை அமைப்பாளர் செய்திருக்கிறார். "தொலைந்த வாழ்க்கையை எண்ணித் தங்கை கண்ணீர் வடிக்கிறாள்" இங்கே பாடகர் அத்துணை துயரோடு பாடுகிறார். அத்தனை வாத்திய கலைஞர்களின் விரல்களும் சோக நெருடல் கொள்கின்றன. மேற்கத்தைய இசைக் கருவிகளை மிக நுட்பமாக கீழத்தேய இசை வாத்தியங்களின் இசைக்கு இணையாக வாசிக்கச் செய்திருக்கிறார்கள். இதனால் இயல்பான மண்ணில் உறவுகளில் இருந்து விலகி சற்று ஆடம்பரமாக அமைந்திருக்கிறது. ஜீவராகங்கள் ஒலி இழை நாடாவில் உள்ள பாடல்களை நாம் இசைத் தன்மையில் தரம்பிரித்துப் பார்க்கையில், கர்நாடக இசைத்தன்மையோடு "ஏன் இந்த மௌனமோ" என்ற பாடலும், தெம்மாங்குப் பாடல் இசைத்தன்மையோடு "உலகமெங்கும் வாழும் தமிழர்களே" என்ற பாடலும், போர்ப்பாடல் இசைத்தன்மையோடு "நாம் பிறந்த நமது மண் எங்களதே", "எங்கள் தேசம் எங்களுக்கே உரிமை" என்ற இரு பாடல்களும், மெல்லிசைப் பாடல்களாக ஏனையவையும் விளங்குகின்றன. பாடல்களின் இடையே அமையும் இசை (INTERLUDE) பாடலின் கருத்தை வலியுறுத்துவதைப் போல் அமைந்திருக்கின்றது. பாடல்களின் வரியை ஆமோதிப்பது போலவும், அடுத்து என்னவென்று வினாவுவது போலவும், தேவையான இடங்களில் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. இடை இசையை திறம்பட உய்த்து அனுபவித்து இசையமைப்பாளர் இசை அமைத்துள்ளார். பாடல்கள் சோகமாகப் பாடும் போதும் சரி, வீரமாகப் பாடும் போதும் சரி பாடல்கள் வெளிப்படுத்துகின்ற உணர்ச்சியோடு இடை இசை ஒத்துழைத்து நிற்கிறது. கேட்போர் உள்ளங்களில் பாடல் தாங்கியிருக்கின்ற கருத்தை அல்லது செய்தியை பதிய வைப்பதற்கு இசை உதவி உள்ளது. "கள்ளுக் கொட்டில் பக்கம் போகாதே காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன்" என்ற ஈழத்துப் பாடல் நல்ல கருத்தைக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு இசையமைப்பாளர் இசை அமைத்திருக்கின்ற தன்மை அப்பாடலை கள்ளுக் குடித்தவன் ஆட்டம் போட உவப்பாய் அமைத்துவிட்டிருக்கிறது. எனவே பாடல்கள் நல்ல பொருத்தமான இசையோடு இழைந்து வரும்போதே அது தாங்கி வருகின்ற விடயத்தை நேர்த்தியாக கேட்போர் மனதில் உறைய வைக்கும். "நாம் பிறந்த நமது மண் எங்களதே" எனத் தொடங்குகிற பாடல் மண்மணத்தை உணர்த்துவதாய் இசையில் வர்ணங்களைச் சேர்த்துள்ளார் இசையமைப்பாளர். எனினும் அப்பாடல் முழுநிறைவோடு போர் ஆக்ரோஷ வெளிப்பாட்டைத் தந்துவிடவில்லை. திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதைப் படம்பிடிப்பது போல் எழுதப்பட்ட பாடலுக்கு உயிர்ப்பூட்டல் போல் இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். "ஏன் இந்த மௌனமோ அன்பே ஆனந்த சயனமோ" என்ற பாடலில் "திலீபனே!" என்கிற போது மக்களுக்காக வாழ்ந்து எரிந்து கொண்டிருக்கின்ற தீபத்தின் அசைவு தெரிகின்றது. அந்த இதயத்தின் ஒலிப்பும் கேட்கிறது. "ஒரு தோழன் வயற்காட்டில் பிணமாகலாம்" என்ற பாடல் வரியைப் பாடுபவர்களும் சரி, இசைக்கலைஞர்களும் சரி அப்படியே ஒரு கணம் மௌனித்துப் போனார்கள். பிரபஞ்சம் கூட ஒரு கணம் நின்று போனதாக இசையமைப்பாளர் உணர வைத்து விடுகிறார். இப்படி சில பாடல்களில் இசையமைப்பின் சிறப்பையும், விசேட தன்மைகளையும் நாம் காணலாம். நன்றாக பயின்ற குரல்வளம் மிக்கவர்கள் பாடல்களை உணர்ச்சியோடு பாடியிருக்கிறார்கள். சொற்கள் விளங்க உச்சரிக்கப்பட்டுள்ளன. பாடல்களை மெல்லிதாக ஒலிக்கவிட்டுக் கேட்கும் போது இசையில் சில இடங்களில் சமனிலையின்மை காணப்படுகின்றது. இப்படி சில குறைகளைக் கொண்டிருந்தாலும் ஜீவராகங்கள் காயம் பட்டுப் போன ஏராளமான ஜீவன்களின் இதய நரம்புகளை மீட்ட வல்லது. தாய் மண்ணின் பிரிவின் வலியை சதா தனித்து உணர்ந்தவர்கள் கூடியிருந்து உள்ளம் குமுறவும், உறுதி பெற்றெழுந்து வாழ்வை மீட்கவும் வழிகாட்டும். இதே போன்று மண்ணின் விடுதலை வேண்டி ஏராளமான பாடல்கள் எழ வேண்டும். விடுதலையை வென்றெடுக்க கலையும் இலக்கியமும் கூட ஒரு ஆயுதமாக திகழ்கின்றது என்பதை மனதில் கொண்டு அழுத்தம் கொடுத்து செயற்பட முன்வாருங்கள். *****
  16. இறுவட்டு அட்டைகள் ஜீவ கானங்கள் கீழுள்ளதே மூல அட்டையாகும். இதைத் தவிர வணிக நோக்கிலான அட்டைகளும் இதற்குண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.