Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. இறுவட்டு அட்டைகள் இந்த மண் எங்களின் சொந்த மண் இது தான் தமிழீழத்திலிருந்து வெளியான முதலாவது இறுவட்டாகும். கீழுள்ளது தான் இவ்விறுவட்டின் மூல அட்டையாகும். மூலம்: ஈழநாதம் திகதி: 1990.10.23 திறனாய்வு: பாபு பக்கம்: 2 இன்பத்தேன் செவிகளில் பாயச் செய்யும் "இந்த மண் எங்களின் சொந்த மண்" - மதிப்பீடு - ஈழத்துக் கலைஞர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒலிநாடா "இந்த மண் எங்களின் சொந்த மண்" என்ற முத்திரையுடன் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் கலை, கலாசாரப் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒலிநாடா நேயர்களின் மனத்தில் எழுப்பும் உணர்வலைகளின் ஒரு பிரதிபலிப்பு இங்கே தரப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை கலாசாரப் பிரிவினால் வெளியிடப்பட்ட "இந்த மண் எங்களின் சொந்த மண்" எனும் தமிழ் ஈழ எழுச்சிப் பாடல்கள் கொண்ட ஒலிப்பதிவு நாடாத்தொகுப்பு கேட்டேன். இன்றைய ஈழ மண்ணின் நிகழ்வுகளையும் அதன் கோலங்களையும் உள்ளடக்கி, வீர உணர்வுகளை வெளிக்கொணர்ந்தும், ஈழத்தின் துயரங்களை எடுத்து இயம்புகின்றதுமான முத்தான பத்துப் பாடல்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பாடலும் ஈழ மண்ணின் அவலங்களையும், விடுதலைப்புலிகளின் வீர தத்துவங்களையும் வெளிக்காட்டுகின்றது. பாடல்களை ஆக்கிய புரட்சிக் கவிஞர்கள் மிக இலகுவான சொற்பதங்களை உபயோகித்து, தத்ரூபமாக பாடல்களை இயற்றியுள்ளார்கள். கேட்கும்போது எம்மையறியாமலே ஈழ மக்களின் உணர்வுகள் மனதில் கோலம் போடுகின்றன. "உயிரிலும் மேலான தாய் நாடு - இன்று உடலங்கள் எரிகின்ற பேய்வீடு" என்று தொடங்கும் உணர்ச்சிப் பாடல் ஒன்றில் தொடர்ந்து வரும் வரிகளான, "பயமின்றி நாம் வாழ்ந்த சிறு கூடு - இன்று பாதகரால் சிதைந்த மண்மேடு" என்று ஈழ நிலையை உணர்த்தியும் அதற்கேற்றாற் போல அதற்குரிய பரிகார வழியாக, தொடர்ந்துவரும் வரிகளான, "துணிவோடு நீவந்து படைசேரு - புலி துளியேனும் நிலை மாறிப் போகாது! அணியாகிப் புலியாகிப் போராடு!! நீ அழிவாகிப் போனாலும் வரலாறு!!!" என்று மிக அழகாக அழுத்திக் கூறும் கவிஞரின் வரிகள் மிகவும் முக்கியமானவையாகத் தெரிகின்றன. அதேபோல, "இந்த மண் எங்களின் சொந்த மண் - இதன் எல்லையை மீறியார் வந்தவன்" என்று தொடங்கும் இனிமையான பாடலில் தொடரிந்து வரும் வரிகளான, "நீர்வளம் உண்டு! நிலவளம் உண்டு! நிம்மதி ஒன்று தானில்லை" என்ற வரியும், "பூமலர்ந்தது கொடியினில் - ஒரு புலி பிறந்தது மடியினில்" என்ற ஜோடிப்பாடலில் தொடர்ந்து வரும் வரிகளான, "அடிபணிந்திடலாகுமோ - தமிழ் அரசிழந்திடக் கூடுமோ! புலி இருந்திடும் குகையினில் - இனிப் புயலெழுந்திடக் கூடுமோ" என்ற வரிகளும் மிகவும் ஆழமாக உணர்ந்து கொள்ள வேண்டிய வரிகளாகும். இது போல ஒவ்வொரு பாடலிலும் கவிஞர்கள் தமதும், விடுதலைப் புலிகளினதும் எழுச்சியையும் வேகத்தினையும் எடுத்துக் காட்டியுள்ளார்கள். இசையமைப்பைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு பாடலின் இசையமைப்பும் மிகவும் பிரமாதமாக இருக்கிறது. ஈழத்து இசைக்கலைஞர்களின் அதிவேக வளர்ச்சி பாராட்டப்பட வேண்டியதே! மேலும் பாடல்களைப் பாடிய பாடகர்கள் மிக இனிமையாக, உணர்வோடு பாடியிருக்கின்றார்கள். "இந்த மண் எங்களின் சொந்த மண்" பாடலைப் பாடியவர் மிக அழகாக ஏற்ற இறக்கத்துடன் தனது இனிமையான குரலில் பாடியிருக்கின்றார். அவரது குரலில் இன்னும் பாடல்கள் கேட்க வேண்டும் போலத் தோன்றுகிறது. மிக உறுதியோடும் வீரத்துடனும் ஆரம்பிக்கும் இப்பாடலில் சட்டென்று ஈழத்தின் நிலையை உணர்த்தி அடுத்த வரிகளான, "நீர் வளம் உண்டு! நில வளம் உண்டு! நிம்மதி ஒன்றுதானில்லை!" என்று அவர் பாடும் போது அவரது குரலில் கவலையும் ஏக்கங்களும் தெரிகின்றன. அப்படியாக உணர்வோடு ஒன்றிப்போய் பாடியிருக்கின்றார். அதே குரலுக்குரியவர்தான் அடுத்த பாடலான, "எதிரிகளின் பாசறையைத் தேடிப்போகின்றோம் - தமிழ் ஈழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப் போகின்றோம்" என்ற பாடலையும் பாடியிருக்கின்றார் போலத் தெரிகின்றது. அந்தப் பாடலுக்கு இன்னுமொருபடி மேலான பாராட்டுகளைத் தெரிவிக்கவேண்டும். மிக இனிமை. இதேபோல தொட்டிலில் தூங்கும் ஈழத்தின் முத்து ஒன்றை தட்டியெழுப்பும் ஒரு தாயின் கீதமாக வரும், "தூக்கமா கண்மணி பள்ளியெழு - இந்த தொட்டிலை விட்டு நீ துள்ளியெழு" என்ற பாடலுக்குரிய பெண்குரலும், "பூபாளம் பாடும் நேரம் - தமிழன் புலியாகிப் போராடும் காலமோ" என்ற பாடலுக்குரிய ஆண்குரலும் இனிமையாக புரட்சிகர இசை பாடுகின்றன. அவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். "பாதைகள் வளையாது - எங்கள் பயணங்கள் முடியாது போகுமிடத்தில் சேரும் வரைக்கும்" என்ற பாடலுக்குரிய குரலும் மிகவும் ஆணித்தரமான கொள்கையினை வெளிக்காட்டியது. அதே போல, "செவ்வானம் சிவந்தது ஏன் – அது செங்கொடியை நினைப்பதற்கே" என்ற பாடல் மிக இனிமையாக இருந்தது. அந்தப் பாடலுக்குரிய குரல் ஒரு சிறுவனின் குரல் போலத் தெரிகிறது. உண்மையில் சிறுவனின் குரலா அல்லது சிறுவனின் குரல் போலப் பாடப்பட்டதா என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும் பாராட்டப்பட வேண்டிய குரல் அந்தக்குரல். அது வளர வேண்டும் என வாழ்த்துகின்றேன். மொத்தத்தில் "இந்த மண் எங்களின் சொந்த மண்" தொகுப்பிலுள்ள பத்துப் பாடல்களும் முத்தானவை. ஈழ மக்கள் எல்லோருடைய மனதிலும் பதிந்திருக்க வேண்டிய பாடல்கள். நிச்சயமாக விரைவில் எல்லோருடைய வாய்களிலிருந்து இப்பாடல்கள் வெளிவரும் என்பதில் ஐயமில்லை. இந்தப் பாடல் தொகுப்பில் பங்குபற்றிய ஈழத்துக் கலைஞர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களை பாராட்டுவதுடன் தொடர்ந்தும் பல எழுச்சி கீதங்களையும், விடுதலைக் கீதங்களையும் வெளியிட வேண்டும், வளர வேண்டும் என வாழ்த்துகின்றேன். மலர்க தமிழீழம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.