Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 4/05/1992 பக்கம்: 1 கடத்தப்பட்ட 12 தமிழரை மீட்க பேச்சு நடக்கிறதாம் கொழும்பு. மே 4 பொலன்னறுவ மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்செயல்களைத் தொடர்ந்து கடத்திச் செல்லப்பட்ட பன்னிரண்டு தமிழ்ப் பொதுமக்களையும் விடுவிப்பது குறித்து பேச்சுகள் நடைபெற்றுவருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. தியன்வட்டவானில் உள்ள மியன்கரச்சி கிராமத்தில் இருக்கும் காட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட இவர்களில் 8 பேர் ஆண்கள் என்றும் நான்கு பேர் பெண்கள் என்றும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'சண்டே ரைம்ஸ்' செய்தி வெளியிட்டிருக்கிறது. தமிழர்களை விடுவிக் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் நாம் பேசினோம். ஆனால் அம்முஸ்லிம் பிரதிநிதிகளனால் கடத்தப்பட்டவர்களுடன் தொடர்புகொள்ள முடியாதிருந்தது. தமிழரைக் கடத்தியவர்கள் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் என்று நம்பப்படுகின்றது" இப்படி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். [ஒ-எ] *****
  2. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 2/05/1992 பக்கம்: 1 முஸ்லிம் கிராமத்திலிருந்து 57 இராணுவத்தினரை காணவில்லையாம்! கொழும்பு,மே 3 பொலனறுவ மாவட்டத்தில் தாக்குதல்கள் இடம்பெற்ற கிராமங்களில் மேலும் பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. தாக்குதல் இடம்பெற்ற முஸ்லிம் கிராமமான அலும்புப் பொத்தான என்னும் இடத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த 57 'பரா' இராணுவத்தினரைக் காணவில்லை என்றும் - தாக்குதல் நடந்த சமயம் அவர்கள் பயந்து காடுகளுக்குள் ஓடி ஒளிந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. இதேவேளை - முஸ்லிம்களினால் கொல்லப்பட்ட தமிழரின் எண்ணிக்கை குறைந்தது 61 ஆக இருக்கும் என்று உறுதி செய்யப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்கள் மீண்டும் தம் மீது இன்னொரு தாக்குதலை நடத்தலாம் என்று அஞ்சி காடுகளுக்குத் தப்பிச்சென்ற தமிழ் மக்கள் இன்னும் காடுகளுக்குள்ளேயே ஒளிந்திருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. [ஒ-எ] ***** தொகுப்பாளர் குறிப்பு: 30/04/1992 அன்று வெளியான உதயன் நாளேட்டின் படி, இனந்தெரியாத நபர்கள் சிலரால் அழிஞ்சிப்பொத்தானை என்ற முஸ்லிம் ஊர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே நேரம் இக்கிராமத்தின் சுற்றுவட்டாரத்திலிருந்த சிறுமுகாமொன்றின் மீதான புலிகளின் அதிரடித்தாக்குதலில் முகாம் அழிக்கப்பட்டதோடு 10இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். மேற்கொண்டு ஏராளமான படைக்கலன்களைக் கைப்பற்றியுமிருந்தனர். இத்தாக்குதல் வெறும் ஏழு நிமிடங்கள் மட்டுமே நீடித்திருந்தது. இச்சிறுமுகாமினுள் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் நிலைகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அழிஞ்சிப்பொத்தானை மீது தாக்குதல் நடத்தியவர்கள் தவிபுவினர் என்றும் அத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இத்தாக்குதல் குறித்து பாரிஸிலிருந்து பி.பி.ஸிக்கு லோரன்ஸ் திலகர் அவர்கள் வழங்கிய செவ்வியின் போது "அண்மையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற படுகொலைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அரசினால் திட்டமிடுமேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே அது.'' என்று தெரிவித்து மறுப்புச்செவ்வி வழங்கியிருந்தார். இச்செவ்வி 5/5/1992 அன்று உதயன் நாளேட்டில் வெளியாகியுள்ளது.
  3. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 1/05/1992 பக்கம்: 1 முஸ்லிம் பொலீஸாரே தமிழரைக் கொலைசெய்தனர்; படை அதிகாரிகள் ஆராய்கின்றனர் கொழும்பு,மே 1 பொலன்னறுவ மாவட்டத்தில் இரு கிராமங்களில் தமிழர்களை படுகொலை செய்தவர்கள் உள்ளூர் முஸ்லிம் பொலிஸாரும், ஊர்காவல் படையினரும் என்று தற்பொழுது தெரியவந்துள்ளதாக பி.பி.ஸி நேற்று அறிவித்தது. இவ்விடயம் குறித்து உயர் படை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர் என்றும் - இந்த மாவட்டத்தில் இடம் பெற்ற உயிர்க்கொலைகள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த அமைச்சர்கள் சிலரும் இராணுவ உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்துள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டது. (ஒ- 10) பக்கம்: 3 உயிரிழந்த தமிழர்கள் எண்ணிக்கை 56ஆக உயர்வு பொலன்னறுவ மாவட்டத்தில் முஸ்லிம்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழ்ந்த தமி ழர்களின் எண்ணிக்கை குறைத்தது 56 ஆக அதிகரித்துள்ளது என்றும் - இந்த எண்ணிக்கை 70 அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் லெரித்தாஸ் வானொலி அறிவித்துள்ளது. இன்னொரு தமிழ் கிராமத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 13 தமிழர்களின் கதி தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. (இ-எ) *****
  4. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 30/04/1992 பக்கம்: 1,6 பொலன்னறுவ பகுதியில் தமிழர்கள் மீது தாக்குதல்; 30 பேர் பலி! பலர் படுகாயம்!! கொழும்பு.ஏப்.30 பொலன்னறுவ மாவட்டம், வெலிக்கந்தவுக்கு அருகேயுள்ள கரபோல என்னும் இடத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று ஏஜென்ஸிச் செய்திகள் தெரிவித்தன. இத் தாக்குதலில் தமிழர்கள் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர் என்றும், மேலும் பல தமிழர்கள் படுகாயமடைந்தனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டது. கொழும்பில் பாதுகாப்பு வட்டாரங்கள் இதனை ஊர்ஜிதம் செய்ததாக இந்திய வானொலி நேற்றிரவு அறிவித்தது. *****
  5. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 29/04/1992 பக்கம்: 1,3 ஊர்காவலர் முகாம் அருகே 2 தமிழரின் சடலங்கள் மீட்பு மீராவோடையில் சம்பவம் மட்டக்களப்பு, ஏப். 29 வாழைச்சேனை தமிழ்க கிராம சேவகர் பிரிவில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட இரு தமிழ் இளைஞர்கள், பின்னர் மீராவோடை ஊர்காவல்படை முகாம் அருகில் இருந்து சடலங்களாக தோண்டி எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீராவோடை தமிழ் அரச அதிபர் பிரிவைச் சேர்ந்த திகம்பரராஜா சிவகுமார் [ 23 வயது ), இராசலிங்கம் மகேஸ்வரன் [25 வயது] ஆகிய இரு இளைஞர்களும் கடந்த 19 ஆம் திகதி சாரமணிந்த இனந்தெரியாத நபர்களினால் கூட்டிச் செல்லப்பட்டனர் என்றும் - அந்த இருவரும் திரும்பி வராததை அடுத்து அவர்களது பெற்றோர் கடந்த 22 ஆம் திகதி இது குறித்து பொலீஸில் முறையீடு செய்தனர் என்றும் அதை அடுத்து பொலீஸார் நடத்திய தேடுதலில் சம்பந்தப்பட்ட இருவரது சடலங்களும் மீராவோடை ஊர் காவல்படை முகாமுக்கு அருகில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது என்றும் - தெரிவிக்கப்பட்டது. வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்களை பரிசோதனை செய்த வைத்திய அதிகாரி, ஒருவர் அடித்து கொல்லப்பட்டிருப்பதாகவும் மற்றவர் உயிருடன் புதைக்கப்பட்டு இறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். *****
  6. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 7/04/1992 பக்கம்: 1,4 அம்பாறையில் தமிழர் மீது தொடரும் ராணுவ வன்முறை; புலிகள் பிரமுகர் தமிழன்பன் தகவல் யாழ்ப்பாணம். ஏப். 7 * 1990 ஜூன் மாதத்தில் போர் தொடங்கிய பின்னர் பொத்துவில் பகுதியிலிருந்து மட்டும், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். * இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் பல பழந்தமிழ்க் கிராமங்கள் சிங்களக் குடியேற்றங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளன. *அம்பாறை - மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ்க் கிராமங்களைப் படையினர் சுற்றிவளைத்துத் தொடர்ந்து அழித்து வருகிறார்கள். அங்கு இராணுவ வன்முறைகளும் தொடர்கின்றன. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு -அம்பாறைப் பிராத்திய மக்களுறவுக் கொள்கை முன்னெடுப்புப் பிரிவின் பொறுப்பாளர் தமிழன்பன். "விழிப்பு'' பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் நிலை குறித்து விவரிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- இந்த இரு மாவட்டங்களிலும் பெண்கள், சிறார்கள், மாணவர்கள், முதியோர்கள் ஆகிய அனைத்து மக்களும் படையினரின் வன்முறைகளுக்கும், படுகொலைகளுக்கும் ஆளாகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் கரடியன்குளம், கணையான்குழி, மதுரையடிவெட்டை, பொன்னன்வெளி. சாளம்பையடி, சாயன்கேணி போன்ற தமிழ்க் கிராமங்கள் சிங்களக் குடியேற்றங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளன. பொத்துவில் பிரதேச தமிழ்க் கிராமங்களை முஸ்லிம் ஊர்காவல் படையும், அரசாங்கப் படைகளும் சேர்ந்து அழித்தன. இந்த மக்கள் அனைவரும் இன்று கோமாரிக் கிராமத்தில் குடிசை அமைத்து வாழ்கிறார்கள். அவர்களும் அதிரடிப் படையினரின் இராணுவ நடவடிக்கைகளினால் இன்னற் படுகின்றனர். இவர்கள் 'நாய்'கள் வளர்ப்பது கூடப் படையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. கோமாரியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு உதவிகளோ நிவாரணமோ ஒழுங்காகக் கிடைப்பதில்லை. அம்பாறை மாவட்டத்தில் விசேட அதிரடிப்படை முகாம்கள், இராணுவ முகாம்கள் விமானப்படை முகாம், பொலிஸ் நிலையம், முஸ்லிம் ஊர்காவல் படைநிலையங்கள் என்று மொத்தம் 76 முகாம்கள் உள்ளன. - என்றார். (அ) *****
  7. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 19/03/1992 பக்கம்: 1 முஸ்லிம் ஊர்காவலர் அட்டகாசம்; தமிழ்ப் பயணிகள் மீது கிரனேட் வீச்சு! 4 பேர் பலி!! காத்தான்குடியில் சம்பவம் மட்டக்களப்பு காத்தான் குடிப்பகுதியில் நேற்று தமிழர்கள் பயணம் செய்த பஸ் ஒன்றை முஸ்லிம் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் என்று கருதப்படும் இளைஞர் ஒருவர் வழி மறித்து அதன் மீது கிரனேட் வீசினர். பஸ்ஸுக்குள் கிரனேட் வெடித்ததில் பஸ்ஸில் பயணம் செய்த நால்வர் உயிரிழந்தனர். 18 பேர் காயமுற்றனர். பஸ்ஸில் பயணம் செய்த இரு பெண்கள் கடத்திச்செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. [உ-த-10] *****
  8. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 13/12/1991 பக்கம்: 1 தமிழர்களின் உடைமைகள் பிற இனத்தவர்கள் வசம்! மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள தமிழாகளின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றை ஏனைய இனத்தவர்கள் தமது உடைமைகளாக்கி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழர்களின் வயல்களில் சிங்களப் பொலீஸாரும், முஸ்லிம் மக்களும் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகிகின்றனர் என்றும், கைவிடப்பட்ட தமிழர்களின் வீடுகளிலுள்ள விதை நெல்லையே அவர்கள் விதைப்பதற்கு பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழர்களின் டிராக்டர்கள் சூறையாடப்பட்டு, அவற்றையும் அவர்கள் பாவித்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. [ஒ] *****
  9. அல்ஜெசீராவின் இந்த ஒற்றைப் பதிவில் (Like Sri Lanka once did, Israel has turned ‘safe zones’ into killing fields) எத்தனை இலங்கைச் சோனிகள் தமிழினப் படுகொலை என்பதற்கு எதிராக நிற்கிறார்கள் என்று பாருங்கள்.... சிங்களவருக்கு அப்படி வக்காலத்து வாங்குகிறார்கள் இந்த சோனிகள். https://www.instagram.com/aljazeeraenglish/p/C8TlPV6N85w/
  10. அருமையான புத்தம் புதிய தகவல்... அப்ப எம்முடைய முன்னோர்களும் கொஞ்சம் முன்னேறிய ஆட்களாகவே இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன.
  11. சாரம் கட்டிய பொடியள் யாழில், 1987
  12. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 11/09/1991 பக்கம்: 1 தமிழின அழிப்பில் முஸ்லிம்களே மும்முரம்! திருமலை ரூபன் பேட்டி யாழ்ப்பாணம், செப். 11 கடந்த காலங்களில் முஸ்லிம்களையும் சேர்த்தே நாம் போராடி வந்தோம். ஆனால் அவர்கள் எமக்குத் துரோகம் இழைத்துவிட்டனர். கிழக்கில் சிங்கள இராணுவத்தை விட முஸ்லிம்களே இப்போது தீவிரமாக தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியற் பொறுப்பாளr திரு. ரூபன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இப்படித் தெரிவித்தார். போராட்டத்தில் முஸ்லிம்களுக்கு அதிக பங்களிப்பை நாம் கடந்த காலங்களில் வழங்கினோம். ஆனால் அவர்கள் அதனை உதறிவிட்டு சிறீலங்கா இராணுவத்துடன் சேர்த்து செயற்பட்டுவருகின்றார்கள். சிங்கள அரசானது தமிழீழப் போராட்டத்தை நசுக்குவதற்கு முஸ்லிம்களைப் பயன்படுத்துகிறது. அதனை முஸ்லிம்களோ அதன் தலைவர்களோ உணர்ந்ததாக தெரியவில்லை. நாளை எமது போராட்டம் வெற்றியடையும், அதன்பின் சிங்கள இராணுவத்தின் பார்வை முஸ்லிம்கள் பக்கம் திரும்பும். அப்போது அவர்கள் திரிசங்கு நிலையில் நிற்கப்போகிறார்கள். தொடர்த்தும் முஸ்லிம்களை எம்மோடு வைத்திருப்பது புத்திசாலித்தனமல்ல என்று அவர் மேலும் கூறினார். (உ-3-5) பக்கம்: 3 திருமலையில் பலவந்தமாக தமிழர் முஸ்லிம்களாக மதம் மாற்றப்படுகின்றனர் யாழ்ப்பாணம், செப்.11 திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமங்களுக்கு இடையே இருக்கும் கிராமங்களில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்களின் நெருக்குதல்களினால் முஸ்லிம்களாக மதம் மாற்றப்படுகிறார்கள். திருகோணமலை மாவட்ட அரசியற் பொறுப்பாளர் திரு. ரூபன் இத்தகவலைத் தெரிவித்தார். கிண்ணியாவுக்கு அருகே கிளப்பன் பேர்க் அகதி முகாமில் தங்கியிருப்பவர்களில் இருநூறுக்கும் அதிகமானோர் முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டிருக்கின்றனர். இதேபோல தோப்பூரிலும் பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் மதம் மாற்றப்பட்டிருக்கிறார்கள். - இப்படி அவர் சொன்னார். [உ-3-5] பக்கம்: 3 நெருக்கமாக முகாம்கள் யாழ்ப்பாணம், செப். 11 இந்தியப்படை இங்கு அமைத்தது போல் நெருக்கமாக பல முகாம்களை அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஸ்ரீலங்காப் படையினர் அமைத்திருப்பதாக திரு. கரிகாலன் கூறினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 பொலீஸ் நிலையங் கள், 48 இராணுவ முகாம்கள், இரண்டு கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விமானப்படை முகாம் ஒன்றும் ஊர்காவல் படை முகாம்கள் ஐந்தும் அங்கு இயங்குகின்றன. அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் 7 இராணுவ முகாம்களும், 29 விசேட அதிரடிப்படை முகாம்களும், 9 பொலீஸ் நிலையங்களும். ஒரு கடற்படை முகாமும், 26 முஸ்லிம் ஊர்காவல்படை முகாம்களும், 6 சிங்கள ஊர்காவல்படை முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. கேள்வி: இவ்வளவு முகாம்கள் அமைக்ப்பட்டிருப்பதால் சிங்கள அரசு கிழக்கு மாகாணம் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளலாமா? கரிகாலன்: முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது உண்மை. ஆனால் பெரும்பாலும் நகரப் பகுதிகளையும், பிரதான வீதிகளையும்தான் அவர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கிராமப்புறங்களில் எமது நடமாட்டமே இன்னமும் இருக்கிறது. நகரப்பகுதிகளிலும் முழுமையான அளஅவில் நிர்வாகச் செயற்பாட்டை அரசினால் செய்யமுடியாதுள்ளது. எமது போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கிற மக்களை வைத்துக்கொண்டு சிவில் நிர்வாகத்தை அரசினால் செயற்படுத்த முடியவில்லை. கேள்வி- கிரானில் நடத்த மோதலில் இரசாயன ஆயுதங்களைப் புலிகள் பாவித்தனர் என்று அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. அதில் உண்மை உண்டா? கரிகாலன்:- அவ்வாறன எந்த ஆயுதங்களையும் நாம் பயன்படுத்தியதில்லை. ஆனால் வாகனங்களைக் கொண்டு எதிரிகளைத் தாக்குவது பேன்ற சில நவீன யுத்திகளைக் கையாண்டிருக்கிறோம். தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத நிலையிலேவே அரசு இவ்வாறான குற்றச்சாட்டுகளை எம்மீது சுமத்துகின்றனர். பக்கம்: 3 முஸ்லிம்களை எமக்கு எதிராக திருப்பியது அரசின் சதியே! தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் செயற்படும் நிலையை உருவாக்கியது ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட ஒரு வேலையாகும். ஸ்ரீலங்கா அரசும்-புலிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த காலத்திலேயே இதற்கான 'சதி' நடக்கத் தொடங்கிவிட்டது. திரு. கரிகாலன் நேற்று பத்திரிகையாளர் மாநாட்டில் இப்படித் தெரிவித்தார். பொத்துவிலில் எப்போதுமே தமிழ் - முஸ்லிம் கலவரம் நடந்ததில்லை; இந்தப் போரின்போதுதான் முஸ்லிம்கள் எமக்கு எதிராகச் செயற்பட்டிருக்கின்றனர். முஸ்லிம் மக்களை சகோதரர்களாகவே நாம் கருதி வந்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீலங்க இராணுவம் கிழக்கில் நுழைந்தபோது முஸ்லிம்கள் அவர்களை வரவேற்றனர். அத்துடன் அவர்களுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டனர். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்களாலேயே தமிழ் மக்கள் பெருமளவில் கொலை செய்யப்பட்டுள்ளனர் - என்றார். பக்கம்: 3 கடந்த 15 மாத காலத்தில் அம்பாறை, மட்டக்களப்பில் 8,ooo தமிழர் படுகொலை! 1990 ஜூனில் விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்காப் படையினருக்கும் இடையிலான மோதல் ஆரம்பித்த பின்னர் - கடந்த 15 மாத காலத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மட்டும் படையினராலும், முஸ்லிம் காடையர்களினாலும் சுமார் 8 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் திரு. கரிகாலன் இத்தகவலை வெளியிட்டார். அம்பாறை மாவட்டத்தில் 5 ஆயிரம் பொதுமக்கள் கொலையுண்டுள்ளனர். உத்தியோகஸ்தர்கள், படித்தவர்கள், ஆண்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் கொலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் மட்டும் ஐநூறுக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் தெரியாதபடி டயர் போட்டு எரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் 300, 400 ஆண்கள் என்ற ரீதியில் உயிரிழந்துள்ளனர். இதனால் பல குடும்பங்கள் குடும்பத் தலைவர்களை இழந்துள்ளன. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்- என்று அவர் கூறினார். (உ-3-5) ***** தொகுப்பாளர் குறிப்பு: 1990 மற்றும் 1991 ம் ஆண்டுகளில் திருமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காணாமல்போனோர், கொல்லப்பட்டோர், மற்றும் வன்புணர்வானோர் (ஆதாரம்: www.tchr.net/50_year_arrest_kill.htm )
  13. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 10/04/1991 பக்கம்: 1 3 தமிழரின் சடலங்கள் லண்டன், ஏப். 10 மட்டக்களப்பு மாவட்டம் மண்டூரில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டு அவர்களது சடலங்கள் வீதியோரங்களில் துண்டு துண்டாக வெட்டப்பட்டுப் போடப்பட்டிருந்ததாக பி. பி. ஸி.நேற்றிரவு தெரிவித்தது. இராணுவத்தினர், அல்லது முஸ்லிம் ஊர்காவல் படையினர் இவர்களைப் படுகொலை செய்திருக்கலாம் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது. [ஒ-5] *****
  14. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 29/03/1991 பக்கம்: 1 30 தமிழ் விவசாயிகளும் 4 மாணவரும் வெட்டிகொலை கிழக்கில் ஊர்காவலர் அட்டூழியம் யாழ்ப்பாணம், மார்ச் 29 கிழக்கில் முஸ்லிம் ஊர்காவற் படையினர் தொடர்ந்தும் தமிழர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை [25ஆம் திகதி] காரைதீவில் இருந்து அட்டைப் பாலத்துக்கு அறுவடைக்காகச் சென்றுகொண்டிருந்த முப்பது தமிழ் விவசாயிகளை முஸ்லிம் ஊர்காவற்படையினர் வெட்டிக் கொலை செய்துள்ளனர். அதே தினத்தில் தம்பிலுவிவில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தமிழ் மாணவிகள் அறுவரை ஊர்காவற் படையினர் கடத்திச் சென்றனர். மேலும் நான்கு தமிழ் மாணவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். (அ) *****
  15. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 27/03/1991 பக்கம்: 1 அக்கரைப்பற்றில் முஸ்லிம் ஊர்காவலரால் தமிழர் கடத்தப்படுகின்றனர் கொழும்பு, மார்ச் 27 அக்கரைப்பற்றுப் பகுதியில் இருபதுக்கும் அதிகமான தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை முஸ்லிம் ஊர்காவற் படையினரே கடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கடத்திச் செல்லப்பட்டவர்களில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கரைப்பற்றில் கடந்த ஞாயிறு நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தின் எதிரொலியாகவே இந்தக் கடத்தல்கள் இடம்பெறுவதாகக் கருதப்படுகிறது. குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டில் இருந்து பதினெட்டாக உயர்ந்துள்ளது. (உ-5) *****
  16. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 14/3/1991 பக்கம்: 1, 4 கும்புறுப்பிட்டியில் 5 தமிழர் வெட்டிக் கொலை யாழ்ப்பாணம். மார்ச் 14 திருகோணமலை மாவட் டம் கும்புறுப்பிட்டியில் கடந்த 3 ஆம் திகதி இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து தமிழ் மக்களின் வீடுகளில் புகுந்து ஐவரை வெட்டிக் கொலை செய்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கொலையுண்டவர்களில் மூவர் ஆண்கள். இருவர் பெண்கள். ரி. கார்த்திகேசுப்பிள்ளை (5 வயது), வி. கதிரவேலுப் பிள்ளை [58 வயது), எஸ். முனியாண்டி [56 வயது). கே.உதயராணி [15வயது], யோகராணி ஆகியோரே கொலையுண்ட ஐவரும் ஆவர். கொலையுண்ட இரு பெண்களும் படையினரால் மானபங்கப்படுத்தப்பட்டனர் என்றும் - சம்பவம் நடந்த பகுதியிலுள்ள வீடுகளில் படையினர் கொள்ளைகளில் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. (ஓ) ******

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.