Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. விதவைப் பெண்ணை வதைத்துக்கொலை செய்த கருணா கும்பல் அது கருணா விதைத்துவிட்டிருந்த கிழக்கு பிரதேசவாதம் தலைவரித்தாடிக் கொண்டிருந்த காலகலட்டம். மட்டக்களப்பு நகருக்குள் விடுதலைப் புலிகள் நடமாடித் திரிந்து கொண்டிருந்தார்கள். கருணா குழுவினரோ வெலிகந்தைப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா இராணுவத்தினருரின் முகாம்மகளிலும் முகாம்களை அணடிய பிரதேசங்களிலும் களம் அமைத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு ஜனநாயக அரிதாரம் பூசிக்கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற பிள்ளையான், சித்தா, யோகன், இந்துஜன், மார்க்கன், மங்களன், சின்னத்தம்பி, இனிய பாரதி, சீலன் போன்ற பிரமுகர்கள் அந்தக் காலகட்டத்தில் கடத்தல்கள், கப்பம் பெறும் நடவடிக்கைகள், பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், படுகொலைகள் என்று ஒரு கூலிப்படையை விட கேவலமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில்தால் யாழ்பாணத்தைச் சேர்ந்த அந்த விதவைப் பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை என்ற கிராமத்தில் இரண்டு சிறு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த சுதா என்ற இளம் விதவை இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. கருணா குழு என்றும் பிள்ளையான் குழு என்றும், ரீ.எம்.வி.பி. என்றும் அழைக்கப்பட்ட குழுவே அந்தப் படுகொலையைச் செய்ததாக அந்த நேரத்தில் மக்கள் மத்தியில் பேச்சடிபட்டது. அந்தப் பெண் பிள்ளையானின் சகாவான மங்களன் மாஸ்டர் என்பவரால் கடத்திச் செல்லப்பட்டு தீவுச்சேனையில் இருந்த ரீ.எம்.வி.பி. முகாமில் வைத்து 5 காடையர்களால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டாதாக இணையத்தளங்களில் செய்தியும் வெளியாகியிருந்தன. அந்தப் பெண்ணை கடத்திச் செய்யமுற்பட்டபோது அந்த கடத்தலைத் தடுக்கச் சென்ற ரவீந்திரன் என்பவரும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilnews.com/2023/05/26/eastern-region-plaintiffs-who-killed-a-jaffa-widow/
  2. இனவெறி பிடித்த முல்லாக்களிடம் சிக்கித்தவிக்கும் அப்பாவி இஸ்ரேலியர்கள்....
  3. போற போக்கைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஆனால், எந்தவொரு நாடும் பெரும் போரை விரும்பாது என்றே நம்புகிறேன்.
  4. "IDF units penetrated 3 kilometers into the Gaza Strip and took control of approximately 6 square kilometers of territory." "The flag was raised by soldiers of the 52nd Battalion from the 401st Brigade. " https://www.israelnationalnews.com/news/379332 கமாஸ் வேறு யாரோவின் நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் வேலை செய்வது போன்ற தோற்றப்பாடு வலுக்கிறது!
  5. ஜெயசிக்குறு எதிர்ச்சமர் ஒன்றின் போது காலம்: 1997
  6. எச்சமர்க்களம் எனத் தெரியவில்லை காலம்: ?????
  7. அது என்ன எப்படி என்று தெரியவில்லை. மெய்ய பொய்யா என்று. எது எப்படி ஆயினும் இஸ்ரேல் உள்ளே சென்றாப் பிறகு எல்லாம் தெளிஞ்சிடும். அப்போது பார்ப்போம், உண்மையா பொய்யா என்று.
  8. பாலஸ்தீனப் பயங்கரவாதத்தின் முகம் HOW DOES THE MINISTRY ARRIVE AT A DEATH TOLL? https://apnews.com/article/israel-hamas-war-gaza-health-ministry-health-death-toll-59470820308b31f1faf73c703400b033
  9. ஈழத்தில் எடுக்கப்பட்ட படங்களிலும் உதே மாதிரித்தான் போஸ் கொடுத்திருக்கிறாங்கள்... அப்ப அங்க போஸ் குடுக்கத்தான் பயிற்சி போல!
  10. உண்மையிலேயே ஆரேனும் செத்தவங்களோ அடிபாட்டிலை? கேட்கவே சோகமாக உள்ளது... தகவலுக்கு நன்றி... அப்படிச் சண்டையிட்டு நிராஜ் டேவிட் அவர்கள் சொல்வது போன்று ஆரேனும் செத்தவங்களோ? நல்லது செய்யாவிடிலும் தூர நோக்கில் நாசம் செய்யாமல் இருந்திருக்கலாம்.
  11. 16.09.2001 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் இரு டோறாப்படகு மூழ்கடிப்புச் சமர் பற்றிய விபரம் http://irruppu.com/2021/09/16/16-09-2001-அன்று-யாழ்ப்பாணம்-பருத-2/ இலங்கை அரசபடைகளின் தொலைத்தொடர்பாளரை இடைமறித்து ஒட்டுக்கேட்கும் கடற்புலிகளின் மகளீரணியினரால் பல மாதங்களாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு தாக்குதற்திட்டம் தலைவர் அவர்களிடம் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் கொடுக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்க்கு படையினரை ஏற்றிச்செல்லும் கடற்படைக் கப்பலை தாக்கி அழிப்பதுவாகும். இதில் இன்னுமொரு பாரிய சிக்கலுமிருந்தது. அது என்னவெனில் சில வேளைகளில் கடற்படையினர் படையினரை ஏற்றிச்செல்லும் கப்பல்களில் பொதுமக்களையும் தங்களது பாதுகாப்பிற்காக அதாவது மனிதக்கேடயமாக பயன்படுத்துவார்கள். இதனை முதலாவதாக முக்கியமாகாக் கவனத்தில் எடுக்கவேண்டும். படையினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் ஒரு பொதுமகனுக்கும் எந்தவித சேதமும் ஏற்படக்கூடாது என்பதில் தலைவர் அவர்கள் உறுதியாக இருப்பார். பொதுமக்களுக்கு சேதமேற்படும் என்பதற்காக எத்தனையோ வெற்றிச்சமர்களையே நிறுத்தியவர் எங்கள் தலைவர் அவர்கள். அப்படியிருக்கையில் இச்சமருக்கு அனுமதி கொடுப்பாரா? அப்படியிருந்தும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுத்தார். அதாவது கப்பல் மீது பிரதான கட்டளைமையத்திலிருந்து அனுமதி வரும்வரை தாக்குதல் மேற்கொள்ளக்கூடாது. சமரிற்காக மேஜர் சிவா, லெப். கேணல் சுடர்ணன், லெப். கேணல் அமுதசுரபி, லெப். கேணல் பகலவன், ஆகியோர் தலைமையிலான சண்டைப்படகுகள் காங்கேசன்துறையிலிருந்து வரும் கடற்படைப் படகுகளை வழிமறிப்பதற்காகவும் அதேசமயம் திருகோணமலையிலிருந்து வரும் கடற்படைப் படகுகளை வழிமறிப்பதற்காக லெப். கேணல் சிறிராம், லெப். கேணல் தியாகன், லெப். கேணல் கண்ணியத்தம்பி, மற்றும் குமுதினி ஆகியோர் தலைமையிலான சண்டைப் படகுகளும் அதேசமயம் கடற்புலிகளின் துணைத்தளபதி லெப். கேணல் இரும்பொறை மாஸ்ரர் தலைமையிலான லெப். கேணல் குமுதன், தளபதி விடுதலை, லெப். கேணல் ஜெரோமினி, லெப். கேணல் திருவருள், லெப். கேணல் வைகுந்தன், மேஐர் அப்பாஸ் தலைமையிலான அணிகள் மற்றும் இவர்களுடன் கடற்கரும்புலிப் படகணிகள் - இவர்கள் படையினரை ஏற்றிவரும் கப்பலை வழிமறித்து கப்பலை தாக்கி மூழ்கடிப்பார்கள் - இதுவே திட்டமாகும். திட்டத்தின் படி, 15.06.2001 அன்றிரவு 11.00 மணியளவில் படகணிகள் தத்தமக்குரிய இடங்களுக்கு நகர்ந்து 16.09.2001 அதிகாலை குடாரப்பிற்கு உயர 45 கடல்மைல் தூரத்தில் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு படையினரை ஏற்றிக்கொண்டு சென்ற கப்பலை இரும்பொறை மாஸ்ரரின் அணிகள் கப்பலுக்குப் பாதுகாப்புக்கு வந்த டோறாப் படகுகள் மீது தாக்குதல் நடாத்தி கப்பலை வழிமறித்து அக்கப்பலை கடற்கரும்புலிகளின் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்தார்கள். அதேசமயம் திருகோணமலையிலிருந்து கப்பலைப் பாதுகாக்க வந்த டோறாப் படகுகளை லெப்.கேணல் தியாகன் தலைமையிலான அணிகள் வழிமறித்துத் தாக்குதல் நடாத்திக்கொண்டிருந்த சமயம் கடற்கரும்புலி லெப்.கேணல் அனோஐன் தலைமையிலான கரும்புலிப்படகு ஒரு டோறாப் படகை மோதி மூழ்கடித்தார்கள். அன்றைய நாள் இரண்டு கப்பல்கள் வந்ததால் எது படையினரை ஏற்றிவந்த கப்பல் எது பொதுமக்களை ஏற்றிவந்த கப்பல் எனபதை இனங்காண்பது கடினமாக இருந்தது. எனெனில் வழமையாக திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை போகும் கப்பல்கள் தங்கள் கப்பலது பெயர், தாங்கள் எதுக்கு நேரே போகிறம் என்பதை அறிவிப்பார்கள். ஆனால் அன்றைய தினம் கப்பலது பெயரைச் சொல்லாமல் அறிவித்தால் இப்பிரச்சனை ஏற்பட்டது. தலைவர் அவர்களிடம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைவர் அவர்கள் கப்பல்மீது தாக்குதல் நடாத்தவேண்டாமென அறிவிக்கப்பட்டதால் கடற்கரும்புலிகளினதும் கடற்புலிகளது கட்டுப்பாடிலிருந்த கப்பல்கள் விடப்பட்டது. (தலைவர் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தலைவர் அவர்களிடமிருந்து பதில் வரும்வரை கப்பல்கள் பருத்தித்துறைக்கரையிலிருந்து 18 கடல்மைல் உயர கடற்புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் நின்றது குறிப்பிடத்தக்கது.) இரும்பொறை மாஸ்ரர் தலைமையிலான சண்டைப்படகுகள் கப்பலை மீட்கவந்த டோறாப் படகுகள் மீது தாக்குதல் நடாத்த அதில் ஒரு டோறாப் படகு செயலிழந்து நின்றது. அவ்டோறாப் படகு மீது கடற்கரும்புலிப் படகு மோத கடற்கரும்புலிப் படகின் வெடிமருந்துப் பொறியமைப்பு வெடிக்கவில்லை. இருந்தாலும் கரும்புலிப் படகையும் அதிலுள்ளவர்களையும் லெப். கேணல் இரும்பொறைமாஸ்ரர் தலைமையிலான படகிலுள்ளவர்கள் டோறாப் படகிற்கு மிக அருகில் சென்று கடற்கரும்புலிப் படகையும் அதிலுள்ளவர்களையும் மீட்டனர். உண்மையில் போராளிகள் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கையில் தளபதி இரும்பொறை மாஸ்ரர் தனது படகை டோறாப் படகிற்கு மிக அண்மையாகச் சென்று அதுவும் டோறாப் படகுகளின் தாக்குதலுக்கும் அத்தாக்குதல்களுக்கு எதிராக தாக்குதல் நடாத்தியும் அவர்களை மீட்டெடுத்து தலைவர் அவர்களின் சொல்லுக்கு செயல்வடிவம் கொடுத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இதுதான் தலைவர் அவர்களின் வளர்ப்பு எனபதை பெருமையோடு கூறலாம். அன்று அக்கப்பலில் ஆயிரத்தியிருநூறு படையினர் இருந்தனர். பொதுமக்களும் இருந்ததால் தலைவர் அவர்களின் கண்டிப்பான உத்தரவினால் அன்றைய படையினரின் பேரழிவு தடுக்கப்பட்டது. இதேசமயம் மேஜர் சிவா தலைமையிலான படகுத்தொகுதியினர் மற்றுமொரு டோறாவை தங்களது கனர ஆயுதங்களால் தாக்கி மூழ்கடித்தார்கள். இப்படியான பல்வேறு அர்ப்பணிப்புக்கள் நிறைந்த இக்கடற்சமரில் பன்னிரன்டு கடற்புலிகளின் சண்டைப்படகுகளும் எட்டுக் கடற்கரும்புலிப் படகுகளும் இருபத்திநான்கு கடற்கரும்புலிகளும் நூற்றியெழுபது கடற்புலிகளும் பங்கேற்ற இவ்வெற்றிகரத் தாக்குதலை கடலில் கடற்புலிகளின் துணைத் தளபதி இரும்பொறை மாஸ்ரர் செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். அனைத்து கடல்நடவடிக்கைகளையும் குடாரப்பிலிருந்து சிறப்புத்தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தியிருந்தார். இக்கடற்சமருக்குத் தேவையான எரிபொருட்களையும் தாக்குதலுக்குத் தேவையான வெடிபொருட்களையும் இச்சமரில் பங்கேற்ற பெரும்பாலான ஆண் பெண் போராளிகள் கடும் தென்மேற்க்குப் பருவக்காற்றின் மத்தியிலும் கடற்படையின் கடும்கண்காணிப்புக்களுக்கு மத்தியிலும் விமானப்படையின் அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் முல்லைத்தீவுக்கு உயர நூற்றியிருபது கடல்மைல் தூரம்சென்று அங்கு நின்ற கப்பலிலிருந்து பொருட்களைச் சிறுசிறுகச் மிகுந்த அர்பணிப்புடன் கொண்டுவந்து சேர்த்தார்கள். அவர்களிடம் இருந்த ஒரேநம்பிக்கை ஒரு பாரிய வெற்றித்தாக்குதலைக் கொடுப்பதேயாகும். பெற்ற பாரிய வெற்றியை, அதுவும் ஆயிரத்திருநூறு படையினரை ஏற்றிக் கொண்டுவந்த கப்பலை கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலயமாக கடற்புலிகளின் சண்டைப்படகுகளின் துணையுடன் பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த கடற்கரும்புலிகள் ஒருபொதுமக்களுக்கும் எந்தச்சேதமும் வரக்கூடாது என்ற தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக பெரும் சங்கடத்துடன் கப்பலை தொடர்ந்து பயணிக்க அனுமதித்து விட்டுதளம் திரும்பினார்கள். மக்களைக் மனித்கேடயமாக பாவித்து பயணித்த இலங்கை அரசபடைகளையும் பொதுமக்களுக்கு எந்தச் சேதமும் வரக்கூடாது என்பதற்காக கைக்கெட்டிய பாரியவெற்றியையும் மக்களுக்காக விட்டுவிட்டு வந்த விடுதலைப்புலிகளையும் நினைத்துப் பார்க்கின்றோம். இவ்வெற்றிகரத் தாக்குதலில் கடற்புலிகளின் பல்வேறு வெற்றிகரத்தாக்குதல்களை கடலில் செவ்வனவே வழிநடாத்தியவரும் கடற்புலிகளின் கனரக ஆயுதப் பயிற்சி பிரதான ஆசிரியரும் கடற்புலிகளின் துணைத் தளபதியுமான லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர் லெப்.கேணல் குமுதன் கடற்கரும்புலி லெப்.கேணல் அனோஐன் கடற்கரும்புலி மேஐர் அருணா கடற்கரும்புலி மேஐர் நித்தியா கடற்கரும்புலி மேஐர் காந்தி மேஐர் சிவகாந்தன்/ காந் மேஐர் நளன். கப்டன் எழிலரசன் லெப். திருவாணன் ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
  12. நேரடிச் சமரிலா?.... அதுவும் இஸ்ரேலோடா?🤡 பயிற்சிக்குப் போனால் பயிற்சியை மட்டும் முடித்துவிட்டு திரும்புங்களேன்டா... ஏன் இந்தத் தேவையில்லா வேலை என்று கேட்கத் தோன்றுகிறது. தகவலுக்கு நன்றி ஐயனே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.