“என்னுடைய கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படும் வரைக்கும் எனக்கு என்ன நடந்தாலும் பச்சை தண்ணி கூட குடிக்க சொல்லி வற்புறுத்தகூடாது”
***********************************************
“அம்மா நான் வந்ததை யாரோ காட்டி குடுத்துட்டாங்க போல, ஆமி ரவுண்டப் பண்ணுது, உண்ட கையாள ஒரு வாய் சோறு சாப்புட எனக்கு குடுத்து வைக்கல அம்மா, என்னை மன்னிச்சுடு , நான் குப்பி கடிக்குரன் ”
***********************************************
“இதுக்கு மேல என்னால ஓட ஏலாது , நீங்க உயிரோட இருந்தா தான் போராட்டத்தை கொண்டு செல்ல முடியும் . என்னை சுட்டு போட்டு நீங்க பத்திரமா போயிடுங்க”
***********************************************
“இலக்குக்கு கிட்ட வந்துடன் , கொஞ்சத்தில கப்பல் வெடிச்சுடும், புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”
***********************************************
“எங்கட பாயின்ட் ல நான் மட்டும் தான் மிஞ்சி இருக்குறன், என்னை சுத்தி நூறுக்கு மேல ஆமி நிக்குது, கிட்டத்தட்ட 30 பேரை சுட்டுடன், ரைபிளில கடைசி ரவை இருக்குற வரைக்கும் ஒருத்தனையும் கிட்ட விடமாட்டன் , அதுக்கு பிறகு குப்பி கடிச்சுடுவன் ”
***********************************************
“மச்சான் திடிரெண்டு நோக் கழண்டுட்டு, எல்லாரும் ஓடுங்கடா , சண்டைல போகாத உயிர் சோதனைல தான் போகுது எண்டுறது தான் எனக்கு ஒரே ஒரு கவலை, நான் வெடிக்க வைக்கிறன்”
***********************************************
“எங்களை ஆமி சுத்தி வந்துட்டான் , என்னால அவங்கள பார்க்க முடியுது, இனி ஒண்டும் செய்ய ஏலாது , எங்களை பற்றி யோசிக்க வேண்டாம். இந்த வாசிப்புக்கு மோட்டரை போடுங்கோ ”
***********************************************
இவை எல்லாம் வாழ்வின் அடுத்த நொடி மரணம் தான் என்று அறிந்த பின்பும், மாவீரர்களின் வாயால் ஒரு வார்த்தை புரளாமல் வெளி வந்து கேட்பவர் மனதை ரணமாய் சுட்ட பொழுதுகள்.
மாவீரர்களின் மகோன்னதமான வீரமும் அவர்களின் விலை போகாத குணமும் ஒருங்கே அமைந்த அவர்களின் மரணம் கூட புனிதமானது. அந்த புனிதத்தின் மேலான அவர்களின் இலட்சிய நெருப்பு எம் இனத்தின் என்றைக்கும் மறக்க கூடாத பொறுப்பு.
சாவின் விளிம்பிலும் சத்தியம் தவறாத வீர புதல்வர்களே! விழி மூடி தூங்கும் வேங்கைகளே! உம் ஆற்றல் தாரும். வானம் வீழ்த்திய உம் வல்லமை கொடும். செங்களம் தன்னில் வெஞ்சமர் ஆடிய வீரம் கொடும்.
#மீள்_2018