Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ampanai

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by ampanai

  1. "Jude கேட்டுக் கொண்டபடி கற்பகதரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. " புதிய பெயருடன் புதிய பொலிவுடன் புதுமைகளை எதிர்பார்க்கிறேன் 🙏
  2. “என்னுடைய கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படும் வரைக்கும் எனக்கு என்ன நடந்தாலும் பச்சை தண்ணி கூட குடிக்க சொல்லி வற்புறுத்தகூடாது” *********************************************** “அம்மா நான் வந்ததை யாரோ காட்டி குடுத்துட்டாங்க போல, ஆமி ரவுண்டப் பண்ணுது, உண்ட கையாள ஒரு வாய் சோறு சாப்புட எனக்கு குடுத்து வைக்கல அம்மா, என்னை மன்னிச்சுடு , நான் குப்பி கடிக்குரன் ” *********************************************** “இதுக்கு மேல என்னால ஓட ஏலாது , நீங்க உயிரோட இருந்தா தான் போராட்டத்தை கொண்டு செல்ல முடியும் . என்னை சுட்டு போட்டு நீங்க பத்திரமா போயிடுங்க” *********************************************** “இலக்குக்கு கிட்ட வந்துடன் , கொஞ்சத்தில கப்பல் வெடிச்சுடும், புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” *********************************************** “எங்கட பாயின்ட் ல நான் மட்டும் தான் மிஞ்சி இருக்குறன், என்னை சுத்தி நூறுக்கு மேல ஆமி நிக்குது, கிட்டத்தட்ட 30 பேரை சுட்டுடன், ரைபிளில கடைசி ரவை இருக்குற வரைக்கும் ஒருத்தனையும் கிட்ட விடமாட்டன் , அதுக்கு பிறகு குப்பி கடிச்சுடுவன் ” *********************************************** “மச்சான் திடிரெண்டு நோக் கழண்டுட்டு, எல்லாரும் ஓடுங்கடா , சண்டைல போகாத உயிர் சோதனைல தான் போகுது எண்டுறது தான் எனக்கு ஒரே ஒரு கவலை, நான் வெடிக்க வைக்கிறன்” *********************************************** “எங்களை ஆமி சுத்தி வந்துட்டான் , என்னால அவங்கள பார்க்க முடியுது, இனி ஒண்டும் செய்ய ஏலாது , எங்களை பற்றி யோசிக்க வேண்டாம். இந்த வாசிப்புக்கு மோட்டரை போடுங்கோ ” *********************************************** இவை எல்லாம் வாழ்வின் அடுத்த நொடி மரணம் தான் என்று அறிந்த பின்பும், மாவீரர்களின் வாயால் ஒரு வார்த்தை புரளாமல் வெளி வந்து கேட்பவர் மனதை ரணமாய் சுட்ட பொழுதுகள். மாவீரர்களின் மகோன்னதமான வீரமும் அவர்களின் விலை போகாத குணமும் ஒருங்கே அமைந்த அவர்களின் மரணம் கூட புனிதமானது. அந்த புனிதத்தின் மேலான அவர்களின் இலட்சிய நெருப்பு எம் இனத்தின் என்றைக்கும் மறக்க கூடாத பொறுப்பு. சாவின் விளிம்பிலும் சத்தியம் தவறாத வீர புதல்வர்களே! விழி மூடி தூங்கும் வேங்கைகளே! உம் ஆற்றல் தாரும். வானம் வீழ்த்திய உம் வல்லமை கொடும். செங்களம் தன்னில் வெஞ்சமர் ஆடிய வீரம் கொடும். #மீள்_2018
  3. தாயக விடுதலை கனவை சுமந்து விடுதலை என்ற இலட்சியத்திற்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !
  4. முடிந்தது நல்லாட்சி
  5. கீழடி அகழாய்வில் கிடைத்த எலும்புகள்! - ஆய்வுசெய்ய வரும் தனி அதிகாரிகள் கீழடியில் தற்போது கிடைத்த விலங்குகளின் எலும்புகளை ஆய்வு செய்ய, அதற்கெனத் தனி ஆய்வாளர்களை நியமித்து ஆய்வு செய்ய உள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில், கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, ஆய்வைத் தொடங்கியது. ஆய்வு மாதிரிகளைக் கரிமவேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில், கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டன. அதற்குப்பின், அடுத்தடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து, தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இது, கடந்த ஜூன் 13 -ம் தேதி முதல் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த ஜூன் 25 -ம் தேதி, மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புகளில் உள்ள இரட்டைச் சுவர்கள் மற்றும் நேர் சுவர் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் ஒரு சுற்றுசுவர், 5 அடி உயரம் கொண்ட உறைகிணறு மற்றும் நேர் சுவர் ஆகிய தொன்மையான சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், மிகவும் தொன்மையான சுடுமண்னாலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள், பானைகள், பாசிமணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருள்கள் கிடைத்தன. தற்போது, விலங்குகள் இருந்ததற்கான சான்றாக, சிறிய எலும்புத் துண்டுகள் கிடைத்துள்ளன. இதனைத் தனி ஆய்வாளர்கள் சேகரித்து ஆய்வு செய்ய உள்ளனர். இந்த எலும்புகள், மனிதன் வளர்த்த செல்லப் பிராணியாகவோ அல்லது மனிதன் வேட்டையாடிய விலங்குகளாகவோ இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். எனினும் முழு ஆய்வுக்குப் பிறகுதான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். விலங்குகளின் எலும்புகளை ஆய்வுசெய்ய, சென்னையிலிருந்து சிறப்பு ஆய்வாளர்கள் திங்கள் அன்று வர உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. https://www.vikatan.com/news/tamilnadu/in-keezhadi-bones-of-animals-found
  6. கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைச் சுவர் சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை 4 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது. அப்போது, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொன்மையான மனிதர்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்களை கொண்ட அரிய வகை பொருட்களும் அவர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், மனித உடல், சுடுமண் உருவம், சுடுமண் மனித முகம், தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி உள்ளிட்ட 13,638 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை கடந்த ஜூன் 13-ம் தேதி தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. 57 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 5 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் இந்த அகழ்வாராய்ச்சியின் போது தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புக்கான இரட்டை சுவர்களும், நெல்மணிகள் சேமித்து வைக்கும் மண் பானைகள், உணவு சமைக்க பயன்படுத்தும் மண்பாண்ட பொருட்கள், மண் ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. கண்டறியப்பட்ட இரட்டை சுவர்களில் மூன்று அடி நீளம், ஒரு அடி அகலம் 10 செ.மீ உயரம் கொண்ட செங்கற்கள் இருந்தன. இருப்பினும் இந்த சுவர், கட்டிடத்தின் மேற்பகுதியா அல்லது என்பதை தற்போது கண்டறிய முயவில்லை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெளியூர்களிலிருந்து வந்த பொதுமக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66205-keeladi-excavation-continue-for-the-5th-phase.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.